Posted tagged ‘ஐ.எஸ். தீவிரவாதிகள்’

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.

பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.

மத்திய உளவுத்துறையும், தமிழக போலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமயமாக்கப் படும் தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.


தமிழகத்தில் முதன்முதலாக என்... செய்துள்ள வழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தினமலர், எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி, Added : அக் 28, 2022 04:31..

https://www.dinamalar.com/news_detail.asp?id=3156201 – :~:text=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1% E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு விவகாரம்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/dgp-praises-the-policemens-for-their-excellent-work-in-covai-car-blast-case-rkew2t

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[5] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

[6] நியூஸ்.4.தமிழ், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!, Sakthi by SAKTHI October 28, 2022

[7] https://www.news4tamil.com/coimbatore-car-bombing-incident-tamil-nadu-police-ignored-the-central-intelligence-agencys-warning/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

24-10-2022 (திங்கட் கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –

  1. முகமது தல்கா (25),
  2. முகமது அசாருதீன் (23),
  3. முகமது ரியாஸ் (27),
  4. ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
  5. முகமது நவாஸ் இஸ்மாயில் (26)

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.

ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1].  இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம். இதனால் பலரும் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், ஒருவரது உடலை அடக்கம் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஒரு ஜமாத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும், அவர் உறுப்பினராக இல்லை என்பதால், அவரை அடக்கம் செய்ய அனுமதி கடிதம் கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில்  ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].

அமைதியை விரும்பினால், இளஞர்கள் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம்.  கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.

முகமது தல்கா (25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார்.  நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.

முகமது அசாருதீன் (23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

முகமது ரியாஸ் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

ஃபிரோஸ் இஸ்மாயில் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

முகமது நவாஸ் இஸ்மாயில் (26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

25-10-2022 (செவ்வாய் கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10]

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தமிழ்.இந்து, ஜமேஷா முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத், செய்திப்பிரிவு Published : 26 Oct 2022 06:11 AM; Last Updated : 26 Oct 2022 06:11 AM.

[2]  https://www.hindutamil.in/news/tamilnadu/887654-jamesha-mubins-body.html

[3] News.18.Tamil, ஜமோஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வராத ஜமாத் நிர்வாகங்கள்.. கோவையில் பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.

[4] https://tamil.news18.com/news/coimbatore/jamaat-authorities-did-not-come-forward-to-bury-jamoza-mubeens-body-in-coimbatore-824997.html

[5] தினத்தந்தி, 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவரின் மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது, By தந்தி டிவி 27 அக்டோபர் 2022 12:27 PM.

[6] https://www.thanthitv.com/latest-news/1998-coimbatore-blast-case-inmates-son-arrested-in-car-blast-incident-144934

[7] காமதேனு, வெடிபொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கிய ஜமேஷா முபின்: காவல் துறை அதிர்ச்சி தகவல்!, Updated on : 27 Oct, 2022, 11:24 am.

[8] https://kamadenu.hindutamil.in/national/jamesha-mubin-bought-the-explosives-by-ordering-them-from-amazon-and-flipkart-police-department-shocked

[9] மக்கள் குரல், வெடிப்பொருள் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ப்ளிப்கார்ட் மூலம் வாங்கிய ஜமேஷா முபின், Posted on October 27, 2022

[10]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

ஐசிஸ் தொடர்பு – அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பிப்ரவரி 16, 2018

ஐசிஸ் தொடர்புஅன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது என்று சுருக்கி விடமுடியுமா?

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

அன்சார் மீரான் கைது செய்யப்பட்டது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது: கன்னியாகுமரியை சேர்ந்த அன்சார் மீரான் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, என சில ஊடகங்களும். ஐ.எஸ்.ஐ.எஸ்.- அமைப்புக்கு ஆதரவான கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியதாக, என்று மற்ற சில ஊடகங்களும், தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரால் சென்னையில் 12-08-2018 திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டான்[1], என்று செய்திகள் வெளியிட்டன. 13-02-2018 அன்று கைது செய்யப்பட்ட அன்சார் மீரான், முறைப்படி, தேசிய புலனாய்வு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்[2]. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[3]. இந்நிலையில் அவனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு போலீசார் மனு தாக்கல் செய்தனர்[4]. மனு தாக்கல் செய்தனர் என்ற செய்தியையே, ஏதோ, பெரிய விசயமாக வெளியிட்டுள்ளன[5]. என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விசயங்களைக் கூட வெளியிடவில்லை. மேலும், “கைது செய்யப்பட்டார்,” என்று மரியாதையோடு குறிப்பிட்டன[6]. மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், மனுவின் மீதான உத்தரவை 14—02-2018 புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்[7]. இதையே எல்லா நாளிதழ்களும் / ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[8]. சென்னையில் நடக்கும் விசயங்களே இவர்களுக்கு தெரியாதா என்ன?

Indian Muslim youth become ISIS supporters, warriors

14-02-2018 அன்று நீதிமன்றம் மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி[9]: தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மூன்று நாள்கள் அனுமதி அளித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்த அன்சார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் அன்சாரிடம் உடனடியாக விசாரணையை ரகசியமாக தொடங்கினர். இவ்வளவு வெளிப்படையான விசாரணை, முதலியவை இருந்தும், தமிழகத்தில் ஏன் தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்பது பற்றி யோசிப்பதில் தயக்கம், மறைத்தல் மற்றும் பயமும் இருக்கிறது போலும். தவிர குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பெற்றோர், உற்றோர், மற்றோர் பேசுவது, செயல்படுவது முதலியனவும், தீவிரவாதத்திற்கு உடன் போவதை காட்டுகிறது.

Isis, Tamilnadu links, arrests 2017-18

தினமலர் கூடுதலாக கொடுக்கும் விசயம்: – அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறியதாவது[10]: “.எஸ்..எஸ்., அமைப்புடன் தொடர்புடைய அன்சார் மீரானை, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில், ஒன்பது பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். அன்சார் மீரானுடன், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியாக கருதப்படும், ஹாஜா பக்ருதீன், சிரியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..எஸ்..எஸ்., அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆட்களை சேர்ப்பது போன்ற சதி வேலைகளில், அன்சார் மீரான் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மனு மீது, இன்று உத்தரவு வரும்”, இவ்வாறு அவர் கூறினார்[11]. ஓரளவிற்கு, அதிலும், அரசு வழக்கறிஞர், பிள்ளை கூறினார் என்று இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதெல்லாம் மற்ற ஊடகத்தினருக்கு தெரியாதா என்ன?

shahul-hameed-chennai-arrested-by-nia-and-khaja-moideen

முழு விவரங்களைக் கொடுக்கும் தினத்தந்தி[12]: தினத்தந்தி கூறுவதாவது, “.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்த இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்தப்படி இருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்தது. அந்த 9 இளைஞர்கள் மீதும் 9 பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன் பயனாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்துல்லா முத்தலீப் பிடிபட்டார். அவரை தொடர்ந்து 18-ந்தேதி சாகுல் அமீது என்பவர் சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த 6 பேரும் தலை மறைவாக இருந்தபடி .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி வருவது தெரியவந்தது[13].

nasser-who-designed-isis-flag-is-from-chennai

.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும்[14]: தினத்தந்தி தொடர்கிறது, “.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கை வரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த .எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நாட்டில் .எஸ். தீவிரவாதிகளில் 4-வது இடத்தில் இருப்பதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு உத்தமன் பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவனை கைது செய்ய டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படை சென்னை வந்தது. சென்னையில் நேற்று அவனை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அன்சார் மீரான் சென்னையில் ரகசியமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தபடியே .எஸ். தீவிரவாத  அமைப்புக்கு நிதி  திரட்டி கொடுத்துள்ளான்மேலும் .எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளான். குறிப்பாக காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது இவன்தான்  என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கைதான அன்சார் மீரானிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு எத்தனை பேரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள .எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[15]. சாகுல் அமீது மற்றும் காஜா மொஹித்தீன் பற்றிய விவரங்களை இங்கு படித்து அறியலாம்[16].

swalih-was-settled-in-chennai-for-some-time-now-with-wife-and-2-year-old-son

இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாதிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஏன்?: ஆக தினத்தந்தி மற்றும் தினமலர் தவிர, பின்னணி தெரிந்தும், மற்ற ஊடகங்கள் இவ்வாறு செய்திகள் வெளிட்டுள்ளது, அவற்றின் பாரபட்சம் மற்றும் உண்மைகளை மறைக்கும் போக்கு வெளிப்படுகிறது. NIA தனது இணைதளத்தில் உடனுக்குடன் கைது செய்யப் பட்டவர்களின் விவரங்கள், பின்னணி, வழக்கு எண் என்ற எல்லா விவரங்களையும் “ஊடகங்களுக்காக” [Press release] என்று வெளியிட்டு வருகின்றது. அதனை தமிழில் மொழிபெயர்த்துப் போட்டாலே போதும், எல்லா விவரங்களும் பொது மக்களுக்குத் தெரிய வரும். அதனால், ஒருவேளை அவர்கள் விழிப்புடன் இருக்கலாம். ஆனால், அதையே கண்டுகொள்ளாமல், மறைத்து இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது அவர்களுக்கு சாதகாமாக இருப்பது அல்லது அவர்கள், ஊடகக்காரர்களுக்கு ஏதோ “சென்ஸார்” போன்ற ஆணையிட்டது அல்லது மிரட்டியுள்ளது போன்றது உள்ளதா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

16-02-2018

Isis, Tamilnadu links, Haja Fakrudeen

[1] நியூஸ்7, கைதான .எஸ் ஆதரவாளரை 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரிய புலனாய்வு அமைப்பு!, February 14, 2018

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/2/2018/person-arrested-chennai-national-intelligence-agency

[3] பாலிமர் செய்தி, ISIS ஆதரவாளர் அன்சார் மீரானை போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை, 13-பிப்-2018 18:30

[4] https://www.polimernews.com/isis-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/

[5] தி.இந்து, சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு, Published :  14 Feb 2018  07:51 IST; Updated :  14 Feb 2018  11:00 IS

[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22748394.ece

தினமணி, [7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னையில் இளைஞர் அதிரடி கைது!, Posted By: Mathi, Published: Tuesday, February 13, 2018, 11:47 [IST].

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-arrests-pakistan-spy-311239.html

[9] தினமணி, .எஸ். ஆதரவாளரிடம் என்ஐஏ விசாரணை தொடக்கம், Published on : 15th February 2018 02:28 AM.

http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863616.html

[10] தினமலர், .எஸ்..எஸ்., ஆதரவாளரை போலீஸ் காவலில் விசாரிக்க மனு, Added : பிப் 14, 2018  02:18.

 

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1958705

[12] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[13] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[14] தினத்தந்தி, .எஸ். தீவிரவாதி சென்னையில் கைதுதமிழகத்தில் நாசவேலைக்கு சதி, பிப்ரவரி 13, 2018, 01:07 PM.

[15] https://www.dailythanthi.com/News/State/2018/02/13130746/ISIS-terroristArrested-in-Chennai-In-TamilNadu-The.vpf

[16] வேதபிரகாஷ், மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!, செப்டம்பர் 23, 2017.

https://islamindia.wordpress.com/2017/09/23/isis-funder-from-chennai-arrested-by-nia-more-jihadis-in-south/

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (3)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (3)

PFI leader Ahmed Sheriff accepts receipt of money

PFI ஆட்கள் கைது மற்றும் சியரியாவில் இறப்பு: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. “சத்திய சரனி” என்ற நிறுவனம்[2], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[3]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[4].

ISIS tape to attack Pooram fest-DM-16_11_2017_010_024

ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[5]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[6]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய  ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[7]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில்  இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –

  1. ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
  2. ரிஷல் (30) வலாபட்டனம்,
  3. ஷமீர் (45)
  4. அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
  5. ஷாஜீர் (25) எச்சூர்

ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[8]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

ISIS tape- probe demanded- IE

தீவிரவாத நட்பு, தீவிரவாதத்தில் தான் முடியும்; சென்ற வாரம், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள் நிரூபணம் ஆகும் முறையில், கைதுகள், கொலைகள் நடந்த செய்திகள் வெளியாகின. இப்பொழுது இத்தகைய குரூர செயல்திட்ட விலக்கம் மூலம் ஜிஹாதித்துவத்தின் ஒடிய முகம் வெட்ட வெளிச்சமாகிறது! இதுவா மனிதத்தன்மை? எந்த மனிதன் இதனை தெய்வீகம் என்பான்? ஆனால், துலுக்க வெறியர்கள், இவற்றை கடவுள் பெயரில் தான் செய்து வருகின்றனர். இவற்றையெல்லாம் அறிந்தும், தமிழகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளாகத் துடிக்கும் நடிகர்களும் அமைதியாக இருப்பது, மாறாக இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுவது, அவர்களது ஆதரவு மற்றும் தொடர்புகளைக் காட்டுகிறது எனலாம். திரையுகத்தைப் பொறுத்த வரையில், தாவூத் இப்ராஹிம் உதவியில்லாமல், எவனும் படத்தை வெற்றியாக வெளியிட முடியாது. அவனுக்குண்டான கப்பம், வசூலிக்கப் பட்டு சென்று விடுகிறது என்று தெரிகிறது. அந்நிலையில், இவர்களும், அவர்களால் சந்தோசமாக வைக்கப்படுகின்றனர் என்றாகிறது, இல்லையெனில், எல்லாவற்றையும் அறிந்தும், அறியாதது போல மேடைகளில் சமமாக உட்கார்ந்து கொள்ளுதலும், சந்தோசமாக பொழுது கழிப்பதும், பல கதைகளை சொல்கின்றன என்றாகிறது. பொது மக்களுக்கு விரோதமான, அத்தகைய உறவு நிச்சயமாக ஒரு நாள் பேரிழப்பில் தான் சென்று முடிவடையும் என்பது திண்ணம்.

PFI leader accepts receipt of money-PFI Sainaba

கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்?  இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[9]. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவர்களுடனே இருந்து விடுகிறது. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது. இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[10].

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI-ISIS link visibly naked- Vedaprakash

[1] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS.

https://www.indiatimes.com/news/india/isis-fever-grows-stronger-in-kerala-as-six-more-men-from-the-state-join-isis-in-syria-332902.html

[2] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com,  http://www.sathyasarani.org/

[3] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[4] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html

[5] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

[6] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST

[7] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html

[8] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf

[9] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:

Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.

[10] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (2)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (2)

Popular Front meeting, Chennai 08-11- 2017-2

ஐசிஸ் தொடர்புள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாபுகழ் பாடும் விகடன்: PFI மற்றும் ISIS தொடர்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், விகடன், சென்னையில் நடந்த அவர்களது மாநாட்டைப் பற்றி அதிகமாகவே விளம்பரம் கொடுத்துள்ளது[1].  ஜே. அன்பரசன்,  பா.காளிமுத்து, ப. பிரியங்கா என்ற மூவர் இதனை செய்துள்ளனர்[2]. அவர்களின் செய்தி, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்பது இந்திய அளவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்த அமைப்பு செய்துவரும் தன்னார்வ சேவைகள் அனைவரும் அறிந்த ஒன்று. ‘லவ் ஜிகாத் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு  ஆதரவு அளித்தல்’ போன்ற பொய்யானக் காரணங்களைச் சொல்லி மத்திய அரசு, ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைத் தடை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவ்வமைப்பினர் கூறுகின்றனர். அதனால், பி.ஜே.பி அரசை எதிர்த்தும், இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா முழுவதும் ‘உரிமை முழக்க மாநாடு’ நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பினர். கடந்த 8 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கூட ‘உரிமை முழக்க மாநாடு’ நடைபெற்றது. இதற்கு முதல் நாள் அதாவது கடந்த 7 ஆம் தேதி மதுரையிலும், திருவனந்தபுரத்திலும் மாநாடு நடத்தினார்கள்.

Popular Front meeting, Chennai 08-11- 2017

திருமாவளவன், முதலியோர் கலந்து கொண்டது திகைப்படையச் செய்வதாக உள்ளது: சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்,

  1. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
  2. மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
  3. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,
  4. ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மற்றும்
  5. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, “சமீப காலமாக அவதூறு அறிக்கை கொடுத்ததாகச் சொல்லி, எங்கள் அமைப்பைத் தடை செய்ய தேசிய புலனாய்வு முகமை  (N.I.A) தீவிர பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்து, மக்களைச் சந்தித்து உண்மையைச் சொல்லும் பணியில், ‘பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாஇறங்கியுள்ளது. இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.”  இவ்வாறு முழுக்க-முழுக்க உண்மைகளை மறைத்து, பிரச்சார ரீதியில் நடத்தப் பட்ட மாநாட்டில், மேலே குறிபிட்டவர்கள், எப்படி, ஏன் கலந்து கொண்டனர் என்பது, திகைப்பாக இருக்கிறது. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் என்ற ரீதியில், நாட்டு நடப்புகள் இவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

Cine secularism acts differently in TN-2017

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் [08-10-2017][3]: இகடன் குழு தொடர்ந்து, இவற்றையும் வெளியிட்டுள்ளது. உரிமை முழக்க மாநாட்டில் முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:

  1. பாசிசத்துக்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு களப்பணி ஆற்றிட வேண்டும்.
  2. தேசிய புலனாய்வு முகமை (N.I.A) கலைக்கப்பட வேண்டும்.
  3. மதுரை, போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.
  4. பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும்.
  5. பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
  6. மியான்மரில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
  7. நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  8. தீவிரவாத எதிர்ப்பு சட்டமான யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட சட்டங்கள் மனித உரிமை மீறலுக்கும், நீதி மறுப்பதற்கான ஒரு கருவியாகவுமே இருக்கிறது. எனவே இந்தக் கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும்.
  9. கெளரி லங்கேஷின் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
  10. மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்.
  11. மக்கள் நலப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிக்கும் வக்ஃப் வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.
  12. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.
  13. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
  14. லவ் ஜிகாத் பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும்.
  15. கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[4].

ISIS plan to kill Hindus - Dinamani- 15-11-2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்:  பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும்.  தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[5]. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[6], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[7], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[8]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன. இப்பொழுது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஐசிஸ்குள்ள தொடர்புகள் வெளியாகி வருகின்றன.

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI conversion factory- Nov.2017

[1] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[3] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[4] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[5]  According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.

[6] http://news.outlookindia.com/items.aspx?artid=769976

[7]  http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html

[8] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (1)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (1)

Abdul Rashid Abdulla Isis -terror tape

கேரளாவில் தொடரும் ஐசிஸ் ஆதரவு பிரச்சாரம், தீவிரவாத ஊக்குதல் ஆதரவு முதலியன: ஐஎஸ் அமைப்பின் பிராந்திய பிரிவான “தவுலதுல் இஸ்லாம்”, தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் ஒரு குரல் பதிவை (ஆடியோ) வெளியிட்டுள்ளது. “கேரளாவின் ஒளி” என்ற வாட்ஸ்-அப் குழுவில் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது[1]. இது அத்தகைய 50வது பதிவேற்றம் என்று சொல்லப்படுகிறது. முன்னர் என்.ஐ.ஏ அப்துல் ரஷீத் என்பவன் அத்தகைய இரண்டு வாட்ஸ்-அப் குழுக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது[2]. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அதில் ஒருவர் மலையாள மொழியில் பேசுகிறார். “நமது மக்கள் அனைவரும் .எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையவேண்டும். அப்படி இணைய விருப்பமில்லை என்றால் தீவிரவாத இயக்கத்தினருக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்திடவேண்டும். ஐஎஸ் முஜாஹிதீன் அமைப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை திருவிழாவின்போது, நமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார்[3]. அதில் பலர் உயிரிழந்தனர். இதுபோல, திருச்சூர் (கேரளா) பூரம் அல்லது கும்பமேளா உள்ளிட்ட திருவிழாக்களின்போது உங்கள் புத்திசாலிதனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துங்கள்[4]. முதலில் இந்த விழா நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று உணவில் விஷம் வையுங்கள்[5]. அதை அங்கே வருபவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்[6].

Abdul Rashid Abdulla Isis -terror tape-drive car into mela

ஐசிஸ் தீவிரவாதி தொடர்ந்து சொல்வது:இந்த தாக்குதலில் தன்னந்தனியாக ஈடுபடுங்கள். லாரியை பயன்படுத்துங்கள். அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று அவர்கள் மீது ஏற்றி பெரும் எண்ணிக்கையில் கொன்று குவியுங்கள்[7]. இத்தகைய தாக்குதல் முறைகளைத்தான் உலகம் முழுவதும் இன்று நமது தீவிரவாத இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்[8]. அண்மையில் நமது போராளி ஒருவர் இசை நிகழ்ச்சியின்போது இப்படி தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார். உணவில் விஷம் கலந்து விடுங்கள். அல்லது கத்தியைப் பயன்படுத்துங்கள். குறைந்தது ரயிலை தடம்புரளச் செய்யுங்கள். உங்களால் இதெல்லாம் முடியவில்லை என்றால் ரெயில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுங்கள். அதுவும் முடியாவிட்டால் கத்தி முனையில் தாக்குதல் நடத்துங்கள். அவர்கள்(ராணுவத்தினர்) நமது கதையை முடிக்க முயன்றாலும் அது நடக்காது. நமக்கு இதில் உயிர் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் நமது இயக்கம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். உயிர் இருக்கும் வரை நாம் போராடுவோம்,” என அவர் பேசி உள்ளார்[9].

ISIS want to kill Hindus in India-tape-3

கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரசீத் பேசியது: கேரளாவைச் சேர்ந்த 100 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக கேரள போலீஸார் கூறியிருந்த நிலையில் இந்த ஆடியோவெளியாகி உள்ளது. இந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஆப்கன் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ரஷித் அப்துல்லாவின் குரலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[10]. திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் விஷம் வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த ஆடியோ மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளதாக கேரள போலீஸ் கூறுகிறது. இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் ராணுவத்துக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு மரணத்தையும் தழுவியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்று குவிக்கும்படி ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோடு நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்த ஒருவர் 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் ஆடியோ உரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[11]. இதையடுத்து கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன[12].

ISIS want to kill Hindus in India-tape-1

கேரளாகாரன் என்பதால், கேரளாவில் இக்கட்டான நிலை: இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேசியிருப்பவர், ஐஎஸ் அமைப்பில் அண்மையில் சேர்ந்த கேரளம் மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ரஷித் அப்துல்லாவாக இருக்கலாம் என்று நம்புகிறோம். ரஷித் அப்துல்லாவுக்கு எதிராக என்ஐஏ அமைப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிரப்பித்துள்ளது’ என்றன. இந்த குரல் பதிவு தொடர்பாக கேரள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்[13]. இதுதொடர்பாக வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 குரல் பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் இயக்குநர் வி. பாலசந்திரன் கூறும்போது, இது மிகவும் கவலைதரும் விஷயமாகும். அந்த அமைப்பினர் தங்களது சண்டையை ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர்’ என்றனர்[14].

© வேதபிரகாஷ்

17-11-2017

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

[1] he voice in the audio clip, posted on a WhatsApp group called ‘Light of Kerala’, is suspected to be that of Abdul Rashid, an engineering graduate. Abdul Rashid is believed to be the man behind the exodus of 21 Keralites to Afghanistan .This is reportedly the 50th such clip that has emerged on the WhatsApp group ‘Light of Kerala’.

http://www.thenewsminute.com/article/horrifying-audio-clip-kerala-isis-recruiter-urging-war-hindus-democracy-surfaces-71651

[2] In an earlier case investigated by National Investigation Agency, it was revealed that Abdul Rashid created at least two WhatsApp groups, in which he added about 200 people in Kerala, and began transmitting messages, urging them to join the Syria-based terror group.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/151117/kerala-probe-on-to-trace-islamic-state-audio-clips.html

[3] மாலைமலர், திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள்: .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, பதிவு: நவம்பர் 16, 2017 07:03

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/16070309/1129089/Put-poison-in-the-food-at-the-Thrissur-Pooram-festival.vpf

[5] தினத்தந்தி, திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள் .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, நவம்பர் 16, 2017, 04:45 AM

[6] http://www.dailythanthi.com/News/TopNews/2017/11/16035820/Thrissur-Pooram-festival-put-poison-in-the-food-of.vpf

[7] பாலிமர்.டிவி, அதிக மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும்கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற தீவிரவாதி எச்சரிக்கை, 15-நவ்-2017 13:40

[8]https://www.polimernews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

[9] தி.இந்து, திருச்சூர் பூரம் விழாவில் தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை, Published :  16 Nov 2017  09:15 IST; Updated :  16 Nov 2017  09:22 IST

[10] http://tamil.thehindu.com/india/article20464351.ece

[11] தமிழ்.ஒன்.இந்தியா, திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் பகீர் சதித் திட்டம்ஷாக் தகவல்கள், Posted By:  Mathi, Published: Wednesday, November 15, 2017, 9:19 [IST]

[12] https://tamil.oneindia.com/news/india/isis-advise-kerala-muslims-poison-food-at-thrissur-pooram-kkumbh-mela-301836.html

[13] தினமணி, கும்ப மேளா, திருச்சூர் பூரம் விழாக்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல், Published on : 16th November 2017 12:53 AM.

[14]http://www.dinamani.com/india/2017/nov/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-2808510.html

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு,  மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (1)!

நவம்பர் 5, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள்ஆள்சேர்ப்புமதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (1)!

PFI-ISIS link visibly naked- Vedaprakash

எஸ்.எப்..யின் தடைக்குப் பிறகு உருவாகிய பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா: பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும்.  ஜூலை 2010ல் டி. ஜோசப் என்ற ஒரு விரிவுரையாளரின் கையை  இந்த PFI  இயக்கத்தைச் சேர்ந்த ஆள் வெட்டியபோது[1] இவ்வியக்கத்தின் பெயர் இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம். எர்ணாகுளத்தில், நியூமேன் கல்கூரியின் விரிவுரையாளர், பரீட்சை கேள்விதாளில், மொஹம்மதுவைப் பற்றிய ஒரு வினாகுறித்து, அவரின் கை வெட்டப்பட்டது. ஒரு முஸ்லிம், கிருத்துவனின் கையை வெட்டினான் என்ற நிலையில், அது செக்யூலரிஸ போதையில் அமுக்கி வாசிக்கப் பட்டு, அக்குரூர செயல் மறந்து விட்டது எனலாம். தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[2]. தடை செய்யப்படும் போது, வங்கிக் கணக்குகளும் முடக்கப்படுவதால், இவ்வாறு வேறு பெயர்களில் இயக்கங்களை ஆரம்பித்து, பதிவு செய்து கொண்டு, வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து வேலைகளை ஆரம்பித்து விடுகின்றனர். இவ்வியக்கத்தினரின் இடங்களை சோதனையிடும் போது, தலிபான் போன்ற இயக்கத்தினரின் தீவிரவாத இயக்கத்தினரின் நூல்கள், செயல்முறை கையேடுகள், பயிற்சிப் புத்தகங்கள், முதலியவை சிக்குவதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன[3]. அதற்கேற்றபடி, அவர்களின் வன்முறை காரியங்களும் இருந்து வருகின்றன. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது.

PFI disowns stung conversions kingpins- India today

தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடும் பி.எப்.காரர்கள்: ஆளும் கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றுவருவதால், அரசியல் ஆதரவும் அதிகமாகவே இருந்து வருகிறது. கேரளாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாக உள்ளதாலும், அவர்கள் பல அரசு துறைகளில் அதிகாரத்தில் உள்ளதாலும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் வன்முறையாளர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. அத்தகைய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுதான், தமிழகத்திலும் காணப்படுகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[4], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[5], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[6]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன.

Mithilaj KC, Abdul Razak KV and Rasheed MV - PFI members,from Kannur on 25-10-2017

பி.எப்.. உறுப்பினர்கள், ஆறு பேர் கைது: கேரளாவில், லவ் ஜிஹாத் பிரச்சினையே, முஸ்லிம்கள், கிருத்துவ பெண்களை வலைவீசி மதம் மாற்றி, ஐசிஸ் வேலை நிமித்தமாக சிரியாவிற்கு கடத்தி சென்றபோது தான், முற்றியது. இன்று, நீதிமன்றத்திலேயே, விசாரிக்கப் பட்டு வரும் வழக்காகி விட்டது. கேரளாவிலிருந்து, தொடர்ந்து ஐசிஸ்க்கு ஆள் சேர்க்கப் படுவது, சிரியாவிற்குச் சென்று போராடுவது, இறந்தபோது, வாட்ஸ்-அப்பில் செய்தி வருவது என்பது வழக்காமாகி விட்டது. அந்நிலையில் தான், இப்பொழுதைய கைது செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. ஐசிஸ் தொடர்புள்ளாதாக, மிதிலாஷ் முன்டேரி, ரஸாக் மற்றும் ரஷீத் முன்டேரி என்ற மூவரும் பல வாரங்களாகக் [மூன்று மாதங்களாக] கண்காணிக்கப் பட்டு, புதன் கிழமை, 25-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[7]. சிரியா எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது, துருக்கி போலீஸாரல் பிடிபட்டு, இந்தியாவிற்கு நாடு கடத்தப் பட்டனர்[8]. கண்ணூர் டி.எஸ்.பி, பி.பி.சதானந்தம் இதனை உறுதி செய்துள்ளார். இருப்பினும், வழக்கம் போல, கண்ணூர் பி.எப்.ஐ தலைவர், நௌபா அவர்கள் தங்களது இயக்கத்தில் இல்லை என்று மறுத்தார். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டார். ஆனால், அவர்கள் மூன்று மாதங்கள், இஸ்தான்புல்லில் பயிற்சி பெற்றுள்ளதை எடுத்துக் காட்டுகின்றனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸஜீர் மங்கலசேரி அப்துல்லா ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவனும் பி.எப்.ஐ ஆள் தான். தவிர பி.எப்.ஐ. உறுப்பினர்களான ஸஜில், ரிஸால் மற்றும் ஷமீர் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். மன்ஸித் மற்றும் சஃபான், கண்ணூரில் ஒளிந்திருந்த போது, என்.ஐ.ஏவால் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல் மற்றும் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் துருக்கி முதலிய அரசு விவரங்கள் மூலம், இவை உறுதி செய்யப்படுகின்றன. மேலும், இறந்தவுடன், வாட்ஸ்-அப்பில், பெற்றோர்களுக்கு தங்கள் மகன் கொல்லப் பட்ட செய்தி வருகிறது என்பதும் அறிந்த விசயமாகி விட்டது.

PFI members arrested for ISIS link

ஐசிஸிக்கு ஆள் சேர்க்கும் தலிபான் ஹம்ஸா: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[9]. உள்ளூரில் அத்தகைய பெயர்களில் பிரபலமாகியுள்ளான். உள்ளூர் முகமதியர்களுக்கு அவன், ஐசிஸிக்கு ஆள்-சேர்ப்பு செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிந்து தான் இருக்கிறது. அல் அன்ஸார் என்ற இடத்தில், பஹ்ரைனில் வேலை பார்த்த இவனுக்கு வளைகுடா நாடுகளில் தொடர்புகள் இருக்கின்றன. அல் அன்ஸார் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் இடமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த அல் அன்ஸார் வழியையும் கேரள ஜிஹாதிகள் ஐசிஸில் சேர உபயோகப் படுத்தி வந்துள்ளனர். மகன்கள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும், பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது அவ்வாறு வற்புருத்தப் படுகிறார்கள் அல்லது அத்தகைய நிர்பந்தம் எப்படி, எவ்வாறு, ஏன், எவர்களால் ஏற்படுகிறது என்று ஆராய வேண்டியுள்ளது.

PFI disowns stung conversions kingpins- India today-KM Sheriff

மேலும் கைதுகள், பி.எப்.ஐயின் தொடர்புகள் ஊர்ஜிதம் ஆதல்: பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. ஐசிஸ் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியை, ராஜ்ஜியத்தை முகமதியர் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிரியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அழித்து மண்ணோடு மண்ணாக்கிய நிலையைத் தான் உண்டாக்கியிருக்கிறார்கள். பெரிய-பெரிய கட்டிடங்கள்:, குடியிருப்புகள் அனைத்தையும், உடைத்து நாசமாக்கி தூள்-தூளாக்கியுள்ளார்கள். இனி அந்நகரங்களை, ஊர்களை உயிர்ப்பிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. இதனை, அவர்கள் சாதனை என்றா சொல்லிக் கொள்ள முடியும்?

© வேதபிரகாஷ்

04-11-2017

PFI Maharastra conference 27-10-2017 - invitation

[1] The PFI had come on the national radar after its activists chopped off the palm of a lecturer in Ernakulum district’s Newman College on July 4,2010, for alleged blasphemy in preparation of examination papers.

https://islamindia.wordpress.com/2014/02/19/popular-front-of-india-cadre-clash-with-police-leading-to-riot-like-condition/

[2]  According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.

[3] போலீசார், நேற்று முன்தினம் (11-07-2010), இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும்,  தமிழக – கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், “ரெய்டு’ நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார்.   முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது  நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, “சிடி’க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், “ரெய்டின்’ போது சிக்கியது.”இக்குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’ என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, “ரெய்டு’ மற்றும்  கைப்பற்றிய சில குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, “சிடி’க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38159

[4] http://news.outlookindia.com/items.aspx?artid=769976

[5]  http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html

[6] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/

[7] TheNewsMinute, 3 PFI members booked for alleged ISIS links: Govt case against group grows stronger, Thursday, October, 2017. 12:54.IST

[8] http://www.thenewsminute.com/article/3-pfi-members-booked-alleged-isis-links-govt-case-against-group-grows-stronger-70586

[9] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS.

https://www.indiatimes.com/news/india/isis-fever-grows-stronger-in-kerala-as-six-more-men-from-the-state-join-isis-in-syria-332902.html

மறுபடியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

செப்ரெம்பர் 23, 2017

மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

தென்னகத்தில் .எஸ் ஆதரவு அதிகம் ஏன்?: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலகம் முழுவதையும் தனது தீவிரவாதத்தினால் அச்சுறுத்தி வருகிறது[1]. தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, பின் உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்களை சேர்த்து, படர்ந்து, விடரிந்து தாக்குதல் நடத்தி வருகிறது[2].  ஐ.எஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, அதன்படியே, இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அந்த தீவிரவாதையக்கத்தில் சேர்ந்து, போராடி, இறந்து கொண்டிருக்கும் செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதுவாடிக்கையான விசயம் ஆகிவிட்டது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ தானாக விசாரணையில் விவரங்கள் வெளிவந்தன. கேரளா மற்றும் தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பலர் கைது செய்யப்பட்டனர். ஆகவே தன்னகத்தில், ஐ.எஸ் ஆதரவு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

Shahul Hameed, Chennai arrested by NIA -and Khaja Moideen

சாகுல் ஹமீது, ஓட்டேரியில் கைது (18-09-2017): இந்நிலையில், 18-09-2017 அன்று ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, சென்னை ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது [Shakul Hameed (A-3), son of Mohammed Zackariya,resident of House No. 59, S. S. Puram, A-Block, 10th Street, Ottery, Chennai- 600 012] என்பவவர் முதல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹாஜா பக்ருதீனுடன் [Haja Fakkurudeen (A)] தொடர்பு கொண்டவன். சக- குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காஜ மொஹித்தீன் [co-accused Khaja Moideen (A-2)] மற்றும் இவன் ஹாஜா பக்ருதீனுடன் தமிழகம் வந்தபோது, கடலூரில் சந்தித்துள்ளான். பிறகு தமிழக,ம் மற்றும் கந்நாட மாநிலங்களில் பல இடங்களுக்கு சென்று ஐசிஸுக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கதுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்[3]. அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[4]. பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 15-09-2017 அன்று காஜா மொஹித்தீன் இவ்வழக்கில் ரீமான்டில் வைக்கப்பட்டான். தவிர பல குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டிருக்கிறான்[5].

Swalih was settled in Chennai for some time now with wife and 2-year-old son.

சென்னையில் கடந்த மாதங்களில் கைதானவர்கள்: ஹரூன் ரஷீத் [முகமதி அலி ஜின்னாவின் மகன்] என்பவன் 04-07-2017 அன்று கைது செய்யப்பட்டான். இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மண்ணடியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது[6].  18-09-2017 அன்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் நாளை பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது[7]. சென்னையில் தொடர்ந்து ஐ.எஸ் விவகாரத்தில் பலர் கைது செய்து பட்டு வருவது, திட்டமிட்டி ஆட்கள் வேலை செய்து வருவது தெரிகிறது. தேவையில்ல்லாத விசயங்களை வைத்துக் கொண்டு, தினமும் அலசும் ஊடகங்கள். இத்தகைய அபாயகரமான விசயத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது” என்றதற்கு மேலாக ஊடகத்தினருக்கு, வேறெந்த விவரமும் கிடைக்காதது போலமூன்ரு-நான்கு வரிகளில் செய்தி வெளியிட்டுள்ளன[8]. என்.ஐ.ஏ. ஊடகத்தினருக்கான அறிக்கை என்பதிலிருந்தே மேலும் விவரங்களை வெளியிடலாம்[9]. ஆனால் அவர்களுக்கு பயமா அல்லது வெளியிடக் கூடாது என்று யாராவது ஆணையிட்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

Nasser who designed ISIS flag is from Chennai

தினகரன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்[10]: டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் ஆர்.சி. 3/2017 என்ற  வழக்கு எண்ணில் பிரிவுகள் 15, 16, 17, 20, 29 கீழ் சாகுல் ஹமீதை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக காஜா பஹ்ரூதின் என்பவர் காட்டப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளை சிறையில் உள்ள காஜா மொய்தீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் ஆகிய இருவரையும்  தேசிய புலனாய்வு முகமை போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை 19-09-2017 அன்று வந்தது.

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Dinakaran-2

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறிய தகவல்கள்[11]: இந்நிலையில் இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, நிதி திரட்டியதாக, ஆதரவாக செயல்பட்டதாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இது தொடர்பாக சிரியா நாட்டிற்கு சென்று அங்கு ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி  பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில்  காஜா மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கொச்சின் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிப்பார்கள்சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவுக்குப்பின் சாகுல் ஹமீது, காஜா மொய்தீன் இருவரையும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் டெல்லி அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இவர்களை முழுமையாக விசாரித்த பிறகுதான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பதுங்கி இருக்குமிடம்இவர்களது தலைவர் யார்? இவர்களை இயக்குபவர் யார் இவர்களுக்கு நிதி உதவி எப்படி வருகிறது? உள்ளிட்ட  பல்வேறு தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

© வேதபிரகாஷ்

23-09-2017

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Deccan Herald-modified

[1] விகடன், .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!, Posted Date : 19:19 (18/09/2017); Last updated : 21:09 (18/09/2017), இரா.குருபிரசாத்.

[2] http://www.vikatan.com/news/tamilnadu/102625-nia-arrested-an-accused-shakul-hameed-from-chennai-in-a-case-related-to-isis.html

[3] தினமணி, சென்னையில் .எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர் கைது!, Published on : 18th September 2017 05:37 PM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/sep/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2775335.html

[5] On 15th September, 2017, accused Khaja Moideen @ Abdullah Muthalif (A-2), son ofChinna Thambi Ambalam, resident of Salapathputhu Nagar, Kollumedu, Taluk Kattumanarkovil, Cuddalore district, Tamil Nadu who has already been in judicial custody in Crime No. 746/2014 of Ambattur Police Station, Chennai has been remanded in this case by the Hon’ble NIA Special Court (Sessions Court for Bomb Blast cases), Poonamalle, Chennai. The custody of Khaja Moideen @ Abdullah Muthalif (A-2) has been sought by the Chief Investigation Officer in RC-03/2017/NIA/DLI.

 

[6] மாலைமலர், .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் சென்னையில் கைது, பதிவு: செப்டம்பர் 18, 2017 19:10.

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/18191008/1108657/NIA-arrests-ISIS-supporter-in-Chennai.vpf

[8] தமிழ்.ஒன்.இந்தியா, .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது. லக்ஷ்மி பிரியா, திங்கர்கிழமை.செப்டம்பர் 18, 2017  16:53 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/nia-makes-one-arrest-chennai-isis-case-296179.html

[10] தினகரன், சென்னையில் .எஸ். இயக்க ஆதரவாளர் கைது, 2017-09-19@ 00:43:12

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=336681

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியதுஇங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

CRPF jawan insulted

காஷ்மீர் கல்லடிகலாட்டா பொறுக்கிகள் ராணுவத்தினரை அவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல! அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்!

Stone pelting Jihad - Gautam Ganbhir

கிரிக்கெட் வீரர்கள் பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.

Stone pelting Jihad - Sehwag -unacceptable
ரத்தவெள்ளம் ஏற்படுவதை சமயோஜிதமாக தடுத்ததை விஷமத்தனமாகத் திரித்துக் கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.

Omar Abdulla against CRPF

உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா?. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.

Omar Abdulla against CRPF-not worried about stonepelting

தாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உமர் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.

US official report of bombing Afganistan on 13-04-2017

இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.

© வேதபிரகாஷ்

15-04-2017

CRPF-attacked -stonepelting- budgam

[1] மாலைமலர், காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை, பதிவு: ஏப்ரல் 14, 2017 09:21.

[2] http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14092128/1079897/Gambhir-Sehwag-tweet-in-support-of-attacked-CRPF-Jawans.vpf

[3] தினதத்தந்தி, காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா? ஏப்ரல் 15, 05:00 AM

[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/15025043/In-Kashmir-the-military-jeep-YouthHuman-shield-use.vpf