Posted tagged ‘ஐ.எஸ்.ஐ’

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (3)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (3)

PFI leader Ahmed Sheriff accepts receipt of money

PFI ஆட்கள் கைது மற்றும் சியரியாவில் இறப்பு: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. “சத்திய சரனி” என்ற நிறுவனம்[2], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[3]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[4].

ISIS tape to attack Pooram fest-DM-16_11_2017_010_024

ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[5]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[6]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய  ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[7]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில்  இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –

  1. ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
  2. ரிஷல் (30) வலாபட்டனம்,
  3. ஷமீர் (45)
  4. அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
  5. ஷாஜீர் (25) எச்சூர்

ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[8]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

ISIS tape- probe demanded- IE

தீவிரவாத நட்பு, தீவிரவாதத்தில் தான் முடியும்; சென்ற வாரம், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள் நிரூபணம் ஆகும் முறையில், கைதுகள், கொலைகள் நடந்த செய்திகள் வெளியாகின. இப்பொழுது இத்தகைய குரூர செயல்திட்ட விலக்கம் மூலம் ஜிஹாதித்துவத்தின் ஒடிய முகம் வெட்ட வெளிச்சமாகிறது! இதுவா மனிதத்தன்மை? எந்த மனிதன் இதனை தெய்வீகம் என்பான்? ஆனால், துலுக்க வெறியர்கள், இவற்றை கடவுள் பெயரில் தான் செய்து வருகின்றனர். இவற்றையெல்லாம் அறிந்தும், தமிழகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளாகத் துடிக்கும் நடிகர்களும் அமைதியாக இருப்பது, மாறாக இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுவது, அவர்களது ஆதரவு மற்றும் தொடர்புகளைக் காட்டுகிறது எனலாம். திரையுகத்தைப் பொறுத்த வரையில், தாவூத் இப்ராஹிம் உதவியில்லாமல், எவனும் படத்தை வெற்றியாக வெளியிட முடியாது. அவனுக்குண்டான கப்பம், வசூலிக்கப் பட்டு சென்று விடுகிறது என்று தெரிகிறது. அந்நிலையில், இவர்களும், அவர்களால் சந்தோசமாக வைக்கப்படுகின்றனர் என்றாகிறது, இல்லையெனில், எல்லாவற்றையும் அறிந்தும், அறியாதது போல மேடைகளில் சமமாக உட்கார்ந்து கொள்ளுதலும், சந்தோசமாக பொழுது கழிப்பதும், பல கதைகளை சொல்கின்றன என்றாகிறது. பொது மக்களுக்கு விரோதமான, அத்தகைய உறவு நிச்சயமாக ஒரு நாள் பேரிழப்பில் தான் சென்று முடிவடையும் என்பது திண்ணம்.

PFI leader accepts receipt of money-PFI Sainaba

கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்?  இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[9]. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவர்களுடனே இருந்து விடுகிறது. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது. இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[10].

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI-ISIS link visibly naked- Vedaprakash

[1] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS.

https://www.indiatimes.com/news/india/isis-fever-grows-stronger-in-kerala-as-six-more-men-from-the-state-join-isis-in-syria-332902.html

[2] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com,  http://www.sathyasarani.org/

[3] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[4] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html

[5] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

[6] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST

[7] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html

[8] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf

[9] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:

Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.

[10] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (2)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (2)

Popular Front meeting, Chennai 08-11- 2017-2

ஐசிஸ் தொடர்புள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாபுகழ் பாடும் விகடன்: PFI மற்றும் ISIS தொடர்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், விகடன், சென்னையில் நடந்த அவர்களது மாநாட்டைப் பற்றி அதிகமாகவே விளம்பரம் கொடுத்துள்ளது[1].  ஜே. அன்பரசன்,  பா.காளிமுத்து, ப. பிரியங்கா என்ற மூவர் இதனை செய்துள்ளனர்[2]. அவர்களின் செய்தி, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்பது இந்திய அளவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்த அமைப்பு செய்துவரும் தன்னார்வ சேவைகள் அனைவரும் அறிந்த ஒன்று. ‘லவ் ஜிகாத் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு  ஆதரவு அளித்தல்’ போன்ற பொய்யானக் காரணங்களைச் சொல்லி மத்திய அரசு, ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைத் தடை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவ்வமைப்பினர் கூறுகின்றனர். அதனால், பி.ஜே.பி அரசை எதிர்த்தும், இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா முழுவதும் ‘உரிமை முழக்க மாநாடு’ நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பினர். கடந்த 8 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கூட ‘உரிமை முழக்க மாநாடு’ நடைபெற்றது. இதற்கு முதல் நாள் அதாவது கடந்த 7 ஆம் தேதி மதுரையிலும், திருவனந்தபுரத்திலும் மாநாடு நடத்தினார்கள்.

Popular Front meeting, Chennai 08-11- 2017

திருமாவளவன், முதலியோர் கலந்து கொண்டது திகைப்படையச் செய்வதாக உள்ளது: சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்,

  1. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
  2. மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
  3. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,
  4. ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மற்றும்
  5. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, “சமீப காலமாக அவதூறு அறிக்கை கொடுத்ததாகச் சொல்லி, எங்கள் அமைப்பைத் தடை செய்ய தேசிய புலனாய்வு முகமை  (N.I.A) தீவிர பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்து, மக்களைச் சந்தித்து உண்மையைச் சொல்லும் பணியில், ‘பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாஇறங்கியுள்ளது. இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.”  இவ்வாறு முழுக்க-முழுக்க உண்மைகளை மறைத்து, பிரச்சார ரீதியில் நடத்தப் பட்ட மாநாட்டில், மேலே குறிபிட்டவர்கள், எப்படி, ஏன் கலந்து கொண்டனர் என்பது, திகைப்பாக இருக்கிறது. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் என்ற ரீதியில், நாட்டு நடப்புகள் இவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

Cine secularism acts differently in TN-2017

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் [08-10-2017][3]: இகடன் குழு தொடர்ந்து, இவற்றையும் வெளியிட்டுள்ளது. உரிமை முழக்க மாநாட்டில் முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:

  1. பாசிசத்துக்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு களப்பணி ஆற்றிட வேண்டும்.
  2. தேசிய புலனாய்வு முகமை (N.I.A) கலைக்கப்பட வேண்டும்.
  3. மதுரை, போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.
  4. பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும்.
  5. பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
  6. மியான்மரில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
  7. நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  8. தீவிரவாத எதிர்ப்பு சட்டமான யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட சட்டங்கள் மனித உரிமை மீறலுக்கும், நீதி மறுப்பதற்கான ஒரு கருவியாகவுமே இருக்கிறது. எனவே இந்தக் கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும்.
  9. கெளரி லங்கேஷின் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
  10. மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்.
  11. மக்கள் நலப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிக்கும் வக்ஃப் வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.
  12. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.
  13. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
  14. லவ் ஜிகாத் பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும்.
  15. கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[4].

ISIS plan to kill Hindus - Dinamani- 15-11-2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்:  பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும்.  தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[5]. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[6], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[7], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[8]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன. இப்பொழுது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஐசிஸ்குள்ள தொடர்புகள் வெளியாகி வருகின்றன.

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI conversion factory- Nov.2017

[1] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[3] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[4] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[5]  According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.

[6] http://news.outlookindia.com/items.aspx?artid=769976

[7]  http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html

[8] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (1)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (1)

Abdul Rashid Abdulla Isis -terror tape

கேரளாவில் தொடரும் ஐசிஸ் ஆதரவு பிரச்சாரம், தீவிரவாத ஊக்குதல் ஆதரவு முதலியன: ஐஎஸ் அமைப்பின் பிராந்திய பிரிவான “தவுலதுல் இஸ்லாம்”, தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் ஒரு குரல் பதிவை (ஆடியோ) வெளியிட்டுள்ளது. “கேரளாவின் ஒளி” என்ற வாட்ஸ்-அப் குழுவில் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது[1]. இது அத்தகைய 50வது பதிவேற்றம் என்று சொல்லப்படுகிறது. முன்னர் என்.ஐ.ஏ அப்துல் ரஷீத் என்பவன் அத்தகைய இரண்டு வாட்ஸ்-அப் குழுக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது[2]. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அதில் ஒருவர் மலையாள மொழியில் பேசுகிறார். “நமது மக்கள் அனைவரும் .எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையவேண்டும். அப்படி இணைய விருப்பமில்லை என்றால் தீவிரவாத இயக்கத்தினருக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்திடவேண்டும். ஐஎஸ் முஜாஹிதீன் அமைப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை திருவிழாவின்போது, நமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார்[3]. அதில் பலர் உயிரிழந்தனர். இதுபோல, திருச்சூர் (கேரளா) பூரம் அல்லது கும்பமேளா உள்ளிட்ட திருவிழாக்களின்போது உங்கள் புத்திசாலிதனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துங்கள்[4]. முதலில் இந்த விழா நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று உணவில் விஷம் வையுங்கள்[5]. அதை அங்கே வருபவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்[6].

Abdul Rashid Abdulla Isis -terror tape-drive car into mela

ஐசிஸ் தீவிரவாதி தொடர்ந்து சொல்வது:இந்த தாக்குதலில் தன்னந்தனியாக ஈடுபடுங்கள். லாரியை பயன்படுத்துங்கள். அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று அவர்கள் மீது ஏற்றி பெரும் எண்ணிக்கையில் கொன்று குவியுங்கள்[7]. இத்தகைய தாக்குதல் முறைகளைத்தான் உலகம் முழுவதும் இன்று நமது தீவிரவாத இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்[8]. அண்மையில் நமது போராளி ஒருவர் இசை நிகழ்ச்சியின்போது இப்படி தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார். உணவில் விஷம் கலந்து விடுங்கள். அல்லது கத்தியைப் பயன்படுத்துங்கள். குறைந்தது ரயிலை தடம்புரளச் செய்யுங்கள். உங்களால் இதெல்லாம் முடியவில்லை என்றால் ரெயில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுங்கள். அதுவும் முடியாவிட்டால் கத்தி முனையில் தாக்குதல் நடத்துங்கள். அவர்கள்(ராணுவத்தினர்) நமது கதையை முடிக்க முயன்றாலும் அது நடக்காது. நமக்கு இதில் உயிர் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் நமது இயக்கம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். உயிர் இருக்கும் வரை நாம் போராடுவோம்,” என அவர் பேசி உள்ளார்[9].

ISIS want to kill Hindus in India-tape-3

கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரசீத் பேசியது: கேரளாவைச் சேர்ந்த 100 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக கேரள போலீஸார் கூறியிருந்த நிலையில் இந்த ஆடியோவெளியாகி உள்ளது. இந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஆப்கன் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ரஷித் அப்துல்லாவின் குரலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[10]. திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் விஷம் வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த ஆடியோ மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளதாக கேரள போலீஸ் கூறுகிறது. இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் ராணுவத்துக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு மரணத்தையும் தழுவியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்று குவிக்கும்படி ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோடு நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்த ஒருவர் 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் ஆடியோ உரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[11]. இதையடுத்து கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன[12].

ISIS want to kill Hindus in India-tape-1

கேரளாகாரன் என்பதால், கேரளாவில் இக்கட்டான நிலை: இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேசியிருப்பவர், ஐஎஸ் அமைப்பில் அண்மையில் சேர்ந்த கேரளம் மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ரஷித் அப்துல்லாவாக இருக்கலாம் என்று நம்புகிறோம். ரஷித் அப்துல்லாவுக்கு எதிராக என்ஐஏ அமைப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிரப்பித்துள்ளது’ என்றன. இந்த குரல் பதிவு தொடர்பாக கேரள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்[13]. இதுதொடர்பாக வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 குரல் பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் இயக்குநர் வி. பாலசந்திரன் கூறும்போது, இது மிகவும் கவலைதரும் விஷயமாகும். அந்த அமைப்பினர் தங்களது சண்டையை ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர்’ என்றனர்[14].

© வேதபிரகாஷ்

17-11-2017

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

[1] he voice in the audio clip, posted on a WhatsApp group called ‘Light of Kerala’, is suspected to be that of Abdul Rashid, an engineering graduate. Abdul Rashid is believed to be the man behind the exodus of 21 Keralites to Afghanistan .This is reportedly the 50th such clip that has emerged on the WhatsApp group ‘Light of Kerala’.

http://www.thenewsminute.com/article/horrifying-audio-clip-kerala-isis-recruiter-urging-war-hindus-democracy-surfaces-71651

[2] In an earlier case investigated by National Investigation Agency, it was revealed that Abdul Rashid created at least two WhatsApp groups, in which he added about 200 people in Kerala, and began transmitting messages, urging them to join the Syria-based terror group.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/151117/kerala-probe-on-to-trace-islamic-state-audio-clips.html

[3] மாலைமலர், திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள்: .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, பதிவு: நவம்பர் 16, 2017 07:03

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/16070309/1129089/Put-poison-in-the-food-at-the-Thrissur-Pooram-festival.vpf

[5] தினத்தந்தி, திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள் .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, நவம்பர் 16, 2017, 04:45 AM

[6] http://www.dailythanthi.com/News/TopNews/2017/11/16035820/Thrissur-Pooram-festival-put-poison-in-the-food-of.vpf

[7] பாலிமர்.டிவி, அதிக மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும்கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற தீவிரவாதி எச்சரிக்கை, 15-நவ்-2017 13:40

[8]https://www.polimernews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

[9] தி.இந்து, திருச்சூர் பூரம் விழாவில் தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை, Published :  16 Nov 2017  09:15 IST; Updated :  16 Nov 2017  09:22 IST

[10] http://tamil.thehindu.com/india/article20464351.ece

[11] தமிழ்.ஒன்.இந்தியா, திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் பகீர் சதித் திட்டம்ஷாக் தகவல்கள், Posted By:  Mathi, Published: Wednesday, November 15, 2017, 9:19 [IST]

[12] https://tamil.oneindia.com/news/india/isis-advise-kerala-muslims-poison-food-at-thrissur-pooram-kkumbh-mela-301836.html

[13] தினமணி, கும்ப மேளா, திருச்சூர் பூரம் விழாக்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல், Published on : 16th November 2017 12:53 AM.

[14]http://www.dinamani.com/india/2017/nov/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-2808510.html

மறுபடியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

செப்ரெம்பர் 23, 2017

மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

தென்னகத்தில் .எஸ் ஆதரவு அதிகம் ஏன்?: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலகம் முழுவதையும் தனது தீவிரவாதத்தினால் அச்சுறுத்தி வருகிறது[1]. தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, பின் உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்களை சேர்த்து, படர்ந்து, விடரிந்து தாக்குதல் நடத்தி வருகிறது[2].  ஐ.எஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, அதன்படியே, இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அந்த தீவிரவாதையக்கத்தில் சேர்ந்து, போராடி, இறந்து கொண்டிருக்கும் செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதுவாடிக்கையான விசயம் ஆகிவிட்டது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ தானாக விசாரணையில் விவரங்கள் வெளிவந்தன. கேரளா மற்றும் தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பலர் கைது செய்யப்பட்டனர். ஆகவே தன்னகத்தில், ஐ.எஸ் ஆதரவு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

Shahul Hameed, Chennai arrested by NIA -and Khaja Moideen

சாகுல் ஹமீது, ஓட்டேரியில் கைது (18-09-2017): இந்நிலையில், 18-09-2017 அன்று ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, சென்னை ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது [Shakul Hameed (A-3), son of Mohammed Zackariya,resident of House No. 59, S. S. Puram, A-Block, 10th Street, Ottery, Chennai- 600 012] என்பவவர் முதல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹாஜா பக்ருதீனுடன் [Haja Fakkurudeen (A)] தொடர்பு கொண்டவன். சக- குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காஜ மொஹித்தீன் [co-accused Khaja Moideen (A-2)] மற்றும் இவன் ஹாஜா பக்ருதீனுடன் தமிழகம் வந்தபோது, கடலூரில் சந்தித்துள்ளான். பிறகு தமிழக,ம் மற்றும் கந்நாட மாநிலங்களில் பல இடங்களுக்கு சென்று ஐசிஸுக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கதுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்[3]. அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[4]. பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 15-09-2017 அன்று காஜா மொஹித்தீன் இவ்வழக்கில் ரீமான்டில் வைக்கப்பட்டான். தவிர பல குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டிருக்கிறான்[5].

Swalih was settled in Chennai for some time now with wife and 2-year-old son.

சென்னையில் கடந்த மாதங்களில் கைதானவர்கள்: ஹரூன் ரஷீத் [முகமதி அலி ஜின்னாவின் மகன்] என்பவன் 04-07-2017 அன்று கைது செய்யப்பட்டான். இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மண்ணடியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது[6].  18-09-2017 அன்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் நாளை பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது[7]. சென்னையில் தொடர்ந்து ஐ.எஸ் விவகாரத்தில் பலர் கைது செய்து பட்டு வருவது, திட்டமிட்டி ஆட்கள் வேலை செய்து வருவது தெரிகிறது. தேவையில்ல்லாத விசயங்களை வைத்துக் கொண்டு, தினமும் அலசும் ஊடகங்கள். இத்தகைய அபாயகரமான விசயத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது” என்றதற்கு மேலாக ஊடகத்தினருக்கு, வேறெந்த விவரமும் கிடைக்காதது போலமூன்ரு-நான்கு வரிகளில் செய்தி வெளியிட்டுள்ளன[8]. என்.ஐ.ஏ. ஊடகத்தினருக்கான அறிக்கை என்பதிலிருந்தே மேலும் விவரங்களை வெளியிடலாம்[9]. ஆனால் அவர்களுக்கு பயமா அல்லது வெளியிடக் கூடாது என்று யாராவது ஆணையிட்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

Nasser who designed ISIS flag is from Chennai

தினகரன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்[10]: டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் ஆர்.சி. 3/2017 என்ற  வழக்கு எண்ணில் பிரிவுகள் 15, 16, 17, 20, 29 கீழ் சாகுல் ஹமீதை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக காஜா பஹ்ரூதின் என்பவர் காட்டப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளை சிறையில் உள்ள காஜா மொய்தீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் ஆகிய இருவரையும்  தேசிய புலனாய்வு முகமை போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை 19-09-2017 அன்று வந்தது.

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Dinakaran-2

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறிய தகவல்கள்[11]: இந்நிலையில் இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, நிதி திரட்டியதாக, ஆதரவாக செயல்பட்டதாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இது தொடர்பாக சிரியா நாட்டிற்கு சென்று அங்கு ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி  பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில்  காஜா மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கொச்சின் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிப்பார்கள்சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவுக்குப்பின் சாகுல் ஹமீது, காஜா மொய்தீன் இருவரையும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் டெல்லி அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இவர்களை முழுமையாக விசாரித்த பிறகுதான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பதுங்கி இருக்குமிடம்இவர்களது தலைவர் யார்? இவர்களை இயக்குபவர் யார் இவர்களுக்கு நிதி உதவி எப்படி வருகிறது? உள்ளிட்ட  பல்வேறு தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

© வேதபிரகாஷ்

23-09-2017

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Deccan Herald-modified

[1] விகடன், .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!, Posted Date : 19:19 (18/09/2017); Last updated : 21:09 (18/09/2017), இரா.குருபிரசாத்.

[2] http://www.vikatan.com/news/tamilnadu/102625-nia-arrested-an-accused-shakul-hameed-from-chennai-in-a-case-related-to-isis.html

[3] தினமணி, சென்னையில் .எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர் கைது!, Published on : 18th September 2017 05:37 PM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/sep/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2775335.html

[5] On 15th September, 2017, accused Khaja Moideen @ Abdullah Muthalif (A-2), son ofChinna Thambi Ambalam, resident of Salapathputhu Nagar, Kollumedu, Taluk Kattumanarkovil, Cuddalore district, Tamil Nadu who has already been in judicial custody in Crime No. 746/2014 of Ambattur Police Station, Chennai has been remanded in this case by the Hon’ble NIA Special Court (Sessions Court for Bomb Blast cases), Poonamalle, Chennai. The custody of Khaja Moideen @ Abdullah Muthalif (A-2) has been sought by the Chief Investigation Officer in RC-03/2017/NIA/DLI.

 

[6] மாலைமலர், .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் சென்னையில் கைது, பதிவு: செப்டம்பர் 18, 2017 19:10.

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/18191008/1108657/NIA-arrests-ISIS-supporter-in-Chennai.vpf

[8] தமிழ்.ஒன்.இந்தியா, .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது. லக்ஷ்மி பிரியா, திங்கர்கிழமை.செப்டம்பர் 18, 2017  16:53 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/nia-makes-one-arrest-chennai-isis-case-296179.html

[10] தினகரன், சென்னையில் .எஸ். இயக்க ஆதரவாளர் கைது, 2017-09-19@ 00:43:12

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=336681

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில் “வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்” செத்தது! (2)

ஏப்ரல் 15, 2017

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில்வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்செத்தது! (2)

ISIS-K suffered huge loss

வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாய்என்ற குண்டை அமெரிக்கா ஐசிஸ் தீவிரவாத்களின் மீது போட்டது (13-04-2017): ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன[1].  இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய குண்டாக கருதப்படும் MOAB [Mother of all bombs] GBU-43 என்ற குண்டை, 13-04-2017 அன்று இரவு 7 மணிக்கு ஐ.எஸ் அமைப்பினரின் இருப்பிடத்தில் அமெரிக்கப் படைகள் வீசின. அணுகுண்டுகள் இல்லாத ரகத்தில் இதுதான் மிகப் பெரிய வெடிகுண்டு. சுமார் 9,797 கிலோ எடை கொண்ட இந்த பிரமாண்ட வெடிகுண்டில், 9 ஆயிரம் டன் வெடிபொருள்கள் அடங்கியிருக்கும்[2]. இத்தாக்குதலில் குறைந்தபட்சம் 36 தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது[3]. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து செயல்பட்ட 21 பேரில்,  2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது[4]. இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள், இப்படியெல்லாம் விளக்கி விட்டு, ஒரு / இருவர் சாவு? என்று கேள்விக்குறியைத்தான் போட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன[5]. இந்தியர்கள், கேரளாகாரர்கள், மலையாளிகள், ஜிஹாதிகள் என்றெல்லாம் சொன்னாலும், அவர்கள் உருவானதை விளக்க வேண்டும்.

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

ஐசிஸுக்கு கேரள ஜிஹாதிகள் சென்றது எப்படி?: சரி, குடும்பத்தோடு, இந்த ஜிஹாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எப்படி சென்றனர்? இந்த நபர்கள் அனைவருமே ஒரு இடைத் தரகர் மூலம் ஆப்கனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆப்கனில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இந்தியாவிலிருந்தே அதிகம் பேரை ஈர்க்க ஐஸ்ஐஎஸ் திட்டமிட்டிருந்தது. 13-04-2017 அன்று இரவு அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதலில் கேரளாவிலிருந்து சென்று ஆப்கனில் தங்கியிருந்த 21 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ‘ஒன்இந்தியாவிடம்’ பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர்[6], “இந்த தாக்குதல் இப்போது நடைபெறும் என்று முன்கூட்டியே நாங்கள் கணிக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் இப்படி செய்வார் என எதிர்பார்த்ததுதான். அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து நாச வேலை செய்ய நினைப்போரின் சிந்தனையை மாற்றக் கூடியது. ட்ரம்ப் ஏற்கனவே தனது பிரசாரத்தின்போது கூறியதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிகக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்,” என்றார்.  ஆனால், அசாசுதீன் ஒவைசி மற்றும் தமிழக-கேரள முஸ்லிம் தலைவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். என்னடா, இந்திய முஸ்லிம்கள் ஜிஹாதிகளாக மாறி கொல்லப்பட்டனரே என்று சதோசப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை போலும்!

ISIS-K kERALA NEXUS

கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருவது எப்படி?:. கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருகிறது என்கிறது “ஒன்.இந்தியா” வளைதளம். அங்குள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தால் வலை வீசப்படுகிறார்கள் என்றும் சேர்த்து சொல்கிறது. இந்த ஆபத்தை உணர்ந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் பலவும் தங்கள் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி அவர்களை நன் மார்க்கத்தில் திருப்ப முயன்று வருகின்றன, என்று “இன்.இந்தியா” கூறியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மலப்புரம் என்ற தனி மாவட்டம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து ஆரம்பத்திலுருந்து வளர்த்த இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகி, தீவிரவாதம் ஆகி, இப்பொழுது, வெளிப்ப்டையான ஜிஹாத் ஆகியுள்ளது. ஆப்கனில் 13-04-2017 அன்று நடந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அறிவிப்பை வெள்ளைமாளிகை வெளியிடவில்லை. அதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த 21 பேர் இறந்திருக்க கூடும் என்றபோதிலும், இதை “மினி கேரளா” என்ற கோட்வேர்ட் வைத்தே அழைக்கிறது இந்திய உளவுத்துறை[7].

kerala-isis-nexus-confirmed-youth-after-conversion-Afgan

ஊடகங்கள் உண்மைகளை மறைக்கும் விதம்: கடந்த அக்டோபர் [2016] மாதத்திலேயே, படித்த முஸ்லிம் இளைஞர்கள் அங்கு செல்வது ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ஆனால், ஒரு நிலையில், அதனை “கிருத்துவ-இஸ்லாமிய லவ்-ஜிஜாத்” போல கேரள ஊடகங்கள் சித்தரித்தன. எப்படியிருந்தாலும் ஐசிஸ்.ஸில் சேருவது ஏன் என்று விவாதிக்கப்படவில்லை. அதிலும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று பயிற்சி பெறுகின்றனர் என்று செய்திகள் வந்தபோதிலும் அமைதியாக இருந்தனர்[8]. தங்களது மகன் / மகள் திரும்ப வரவேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஏஜென்டுகளோ ஆட்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர்[9]. அதாவது ஏஜென்டுகளும் முஸ்லிம்கள் என்பதால், குடும்பத்திற்கு பணம் கிடைக்கிறது என்று அமைதியாக இருந்து விட்டனர் போலும். வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்த கேரளா, இப்பொழுதும் ஆட்களை அனுப்பி வைக்கிறது, செய்யும் வேலை என்ன என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. கக்கூஸ் கழுவினாலும் சரி, இந்திய துரோகிகளாக இருந்தாலும் சரி, பணம் வருகிறது. குழந்தை வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு கிருத்துவப் பாதிரியை பிடித்து வைத்தார்கள் எனும்போது, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, பணம் கொடுத்து விடிவிக்க செய்தனர். ஆக, இதன் பின்னணி என்ன என்பதும் மர்மமாக இருக்கிறது.

kerala-isis-nexus-confirmed-youth-after-conversion

ராணுவத்தில் சேர்ந்தால் மகிழும் தாயும், ஜிஹாதில் சேர்ந்தால் மகிழும் தாயும்: தன் மகன் ராணுவத்தில் சேர்ந்து இந்திய நாட்டிற்கு சேவைசெய்ய வேண்டும் என்று எத்தையோ தாய்மார்கள், பெற்றோர்கள் இருக்கும் நம் நாட்டில், இவ்வாறு தமது மகன் / மகள் ஹிஹாதியாகவேண்டும், தீவிரவாதியாக வேண்டும், மனித வெடிகுண்டாக வேண்டும் என்று ஆசைப்படும் தாய்மார்கள், பெற்றோர்கள் கண்டு திடுக்கிடுவதாக இருக்கிறது. அதாவது அவர்களது மனங்களே, தீவிரவாதத்தால் ஊறிப்போனதால், ஜிஹாதித்துவம் அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது, குண்டுவெடித்து மக்களைக் கொன்றால், ஆனந்தமாக இருக்கிறது, மனிதவெடிகுண்டாக வெடித்து மற்றவர்களைக் கொன்றால், அம்மகிழ்ச்சி இன்னும் பெரும்மடங்காகிறது போலும். இல்லையென்றால், பெற்ற தாய் எவளும் அதற்கு உடன்பட மாட்டாள். இருப்பினும், இவையெல்லாம் நிதர்சனமாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான், தங்களைக் காக்கும் ராணுவவீரர்களையே அவமதிக்கிறார்கள் கேடுகெட்ட காஷ்மீர் முகமதிய இளைஞர்கள். அவர்கள் பெற்றோர் அவர்களை அவ்விதமாக வளர்த்துள்ளனர் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-04-2017

six-arrested-02-10-2016 - KeralA NEXUS

[1] http://www.dailythanthi.com/News/World/2017/04/14121527/Missing-Kerala-youth-who-joined-IS-killed-in-Afghanistan.vpf

[2] விகடன், ஆப்கன் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் பலி?!,  Posted Date : 02:27 (15/04/2017); Last updated : 02:43 (15/04/2017)

[3] http://www.vikatan.com/news/world/86485-isis-kerala-recruits-feared-dead-in-afghanistan-attack.html

[4] நியூஸ்7.செனல், அமெரிக்கா வீசிய வெடிகுண்டில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!, April 15, 2017.

[5] http://ns7.tv/ta/tamil-news/india-world/15/4/2017/least-2-20-isis-kerala-recruits-feared-dead-afghanistan-moab

[6] தமிழ்.ஒன்.இந்தியா, அமெரிக்க குண்டு வீச்சில் சிக்கி ஆப்கனில் ஒரு மினி கேரளாவே காலி!, ByVeera Kumar, Published: Friday, April 14, 2017, 10:06 [IST]

[7] http://tamil.oneindia.com/news/international/a-mini-kerala-is-recruits-was-wiped-in-trump-s-big-afghan-bombing/slider-pf232606-279763.html

[8] dailymail.co.uk, Deep links between young Keralans and ISIS as probe reveals THIRTY youths attended training camps in Afghanistan before returning to start sleeper cells, By INDIA TODAY; PUBLISHED: 23:28 BST, 25 October 2016 | UPDATED: 12:47 BST, 27 October 2016

The arrest of 31-year-old Subahani, who is a native of Thodupuzha in Idukki district, was a major breakthrough as he had identified key persons in the network…….NIA identified Sajeer Abdulla Mangalaseri as the chief of the IS network in Kerala. 35-year-old Sajeer, a Civil Engineer from National Institute of Technology, Kozhikode and a Salafist who hails from Moozhikal in Kozhikode has been recruiting people from Kerala in IS fold.

[9] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3872224/Deep-links-young-Keralans-ISIS-probe-reveals-THIRTY-youths-attended-training-camps-Afghanistan-returning-start-sleeper-cells.html

 

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக-சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – கணினி வேலை பார்த்தாலும், ஜிஹாதியில் குறியாக இருந்த தீவிரவாதி (3)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழகசென்னை தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறதுகணினி வேலை பார்த்தாலும், ஜிஹாதியில் குறியாக இருந்த தீவிரவாதி (3)

t-swalih-mohammed-an-isis-sympathiser-lived-in-this-house-sathya-street-kottivakkam-chennai

கொட்டிவாக்கத்தில் வசித்த தா. சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26): பிடிபட்ட ஐந்து பேரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து, என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.  நேற்று 3வது நாளாக 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். 5 பேரில் இரண்டு பேர், கோழிக்கோட்டில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பேஸ்புக் பக்கத்தின் சாட் (தகவல் பரிமாறும் தனிப்பட்ட பிரிவு) மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.  மேலும், பரிமாறிக்கொண்ட தகவல்களை உடனுக்குடன் அழித்துள்ளனர்[1]. இவர்களில் ஒருவர் கேரள மாநிலம் திருச்சூர் வெங்கநல்லூரைச் சேர்ந்த தா. சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது அவரது மனைவி ஜிம்சின்னா (24), இரண்டரை வயது மகன் ஜின்னா ஆகியோர் இருந்தனர். இதில் ஜிம்சின்னாவிடம் சுமார் 3 மணி நேரமும், வீட்டின் உரிமையாளர் குணசேகர் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சில முக்கிய ஆவணங்களையும், ஜிம்சின்னா பயன்படுத்திய செல்லிடப்பேசி, சுவாலிக் முகம்மது பயன்படுத்திய மடிக்கணினி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

swalih-mohammed-working-in-club-mahindra-isis-link-arrested

சென்னைகொட்டிவாக்கத்தைச் சேர்ந்த முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனாவிடம் விசாரணை: விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:- 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[2]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

swalih-mohammed-isis-link-arrested

முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா கத்தார் செல்ல திட்டம்: வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

Logo_of_Boko_Haram.svg

Logo_of_Boko_Haram.svg

முகநூலில் வளர்ந்த தொடர்பு தீவிரவாதத்திற்கு தான் சென்றுள்ளது: முகநூல் (ஃபேஸ்புக்) மூலம் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரிடம் சுவாலிக் முகமது தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதன்வாயிலாகவே அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரின் குறிப்பிட்ட பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். அப்போது, சுவாலிக் முகம்மதுவை தொடர்பு கொண்டு பேசிய அந்த இயக்கத்தினர் பேச்சில், மூளை சலவை செய்யப்பட்ட சுவாலிக் முகம்மது காலப்போக்கில் இணைந்து தீவிரமாக செயல்பட்டிருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது முகநூல் நண்பர்கள், சந்தேகம்படும்படியான தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

My jihad is bomb your country

நம்ப முடியவில்லைஎன்று நண்பர்கள் கூறியது: சுவாலிக் முகம்மது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்ததாக கைது செய்யப்பட்டிருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என அவரது நீண்ட கால நண்பரும், மென்பொறியாளருமான மிர்ஷாத் தெரிவித்தார். 01-10-2016  (வெள்ளி) – ஆறு பேர் கைது, 02-10-2016 (சனி) – கோயம்புத்தூரில் ஐந்து பேர் வீட்டில் சோதனை, 03-10-2016 (ஞாயிறு) – கடையநல்லூரில் சோதனை, 04-10-2016 (திங்கள்), 05-10-2016 (செவ்வாய்), 06-10-2016 (புதன்) 07-10-2016 (வியாழன்), 08-10-2016 (வெள்ளி) நாட்களில் விசாரணை, 09-10-2016 (சனிக்கிழமை) – 16 இளைஞர்களிடம் விசாரணை நடந்தது, 10-10-2016 (ஞாயிற்றுக்கிழமை) எர்ணாகுளத்தில் – சுபானி ஹாஜி மொஹித்தீன் மார்கெட் ரோட், தொடுபுழாவில் உள்ள அவனது வீட்டிற்கு கூட்டிச் சென்றனர்[3]., இப்படி எல்லாமே நம்ப முடியாத அளவுக்கு தான் உள்ளன. ஆனால், குண்டுகள் வெடிக்கின்றன, அப்பாவி மக்கள் இறக்கின்றானர் என்பது உண்மைதானே? விசாரணையில் அவனது உறவினர்களுக்கு, இவனது ஐ.எஸ் தொடர்புகள் இருந்தது தெரிய வந்தது. அவனது வீட்டிலிருந்து அவன் மீது குற்றஞ்சாட்டுவதற்கு உபயோகமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. அவன் இராக்கில் உள்ள மோசூலுக்கு அழைத்துச் செல்லப் பட்டு, பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லா வசதிகளுடன் மாதம் $100 (சுமார்ரூ.8,000) கொடுக்கப்பட்டது[4], முதலிய விவரங்கள் தெரிய வந்தன[5].

Zakir supporting Osama bin laden

07-10-2016 அன்று கோயம்புத்தூரில் விசாரணை[6]: கோயம்புத்தூரில் 11  அபு பஸீரின் தொடர்பு கொண்ட இளைஞர்கள் விசாரிக்கப்பட்டனர். அவன் மூலம் ஒருவேளை ஐசிஸ் தொடர்புகள் இருக்கக்கூடுமோ என்று, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், செல்போன் எண்கள் போன்றவற்றில் தொடர்புடையவர்களிடம் தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பஸீர் உக்கடத்தில், ஜீ.எம். நகரில் தங்கியிருந்தபோது இந்த இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை ஆங்கிக் கொடுக்கிறேன் என்று வாக்குக் கொடுத்ததாகத் தெரிகிறது. அதை வைத்துதான், அவர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், தீவிரவாதத்திற்கும், அவர்களது வேலைதேடுதலுக்கும் சம்பந்தம் இல்லை என்றதால், அவர்கள் அனுப்பப்பட்டனர்[7].

© வேதபிரகாஷ்

13-10-2016

 triacetone triperoxide bomb making

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=250291

[2] Club Mahindra, Westcott Rd, Express Estate, Royapettah, Chennai, Tamil Nadu 600002.

Mahindra Holidays & Resorts India Limited, Mahindra Towers, 2nd Floor, 17/18, Patullos Road, Mount Road, Chennai – 600 002. Tamilnadu, India.Tel : +91 (044) 3988- 1000; Fax : +91 (044) 3027- 7778.

[3] New Indian Express, NIA grills 16 youth over suspected terror links in Kovai, By Express News Service,  Published: 10th October 2016 04:10 AM; Last Updated: 10th October 2016 04:10 AM

[4] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.

[5] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/104_1_PressRelease_02.10.2016.pdf

[6] The Hindu, NIA team searches for evidence against Subahani at Kadayanallur, Tirunelveli, October 8, 2016, Updated: October 8, 2016 07:31 IST

[7]  http://www.thehindu.com/news/national/tamil-nadu/nia-team-searches-for-evidence-against-subahani-at-kadayanallur/article9199882.ece

 

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது  – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

கோயம்புத்தூர் தமிழ்நாடுகேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது: இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். 03-10-2016 அன்று கேரளாவைச் சேர்ந்த ஹாஜா மொஹித்தீன் திருநெல்வேலியில் பிடிபட்டான்[1]. இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. கோயம்புத்தூரில், குண்டுவெடிப்பு நடந்து, கலவரம் ஏற்பட்ட பிறகு கூட, அங்கு, இவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பது, கவலையாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் தமிழ்நாடு-கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது என்பது போன்று தெரிகிறது.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting

சென்னை தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர்‌ என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், ‘லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது[3].

gone-for-hajj-returned-as-isis-terrorist

05-10-2016 அன்று கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜா மொஹிதீன்: இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி [K. Subuhan Abdullah (35)] அவரது மாமனார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்[4]. கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. NIA குழு திருநெல்வேலியில் தங்கியிருந்த சுபாஹினியை கைது செய்து விசாரித்தனர். அவன் சிவகாசியில் வெடி தயாரிப்பாளர்களிடமிருந்து ரசாயனப் பொருட்களை வாங்கியுள்ளான்[5]. கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 06-10-2016 அன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்[6].

mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஐசிஸ் போராளி[7]: கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றார். அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டான். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தான்[8].

%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

கடையநல்லூரிலிருந்து ஐசிஸுடன் தொடர்பு வைத்திருந்த போராளி: சபஹனி ஹாஜா மொஹ்தீன் பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தான். ஆனால், சில நாட்களில், மறுபடியும், இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டான். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளான். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து 05-10-2016 அன்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

கடையநல்லூரில் விசாரணை: அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு, காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர். கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

is-jihadi-from-tirunelveli-indian-express

வீடு, நகைக்கடை முதலிய இடங்களில் விசாரணை / சோதனை[9]: தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.  அங்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள சுபஹானி வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. சுபஹனி மனைவியின் தாய் வீடு கடையநல்லூர் புதுமனை தென்வடல் தெருவில் உள்ளது. அங்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபஹனியின் மனைவியிடம் சுபஹனி வசித்து வந்த வீட்டின் சாவியை பெற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்[10]. பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது[11]. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே [27-09-2016] அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்[12].

© வேதபிரகாஷ்

13-10-2016

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதி

[1] Indian Express, Tamil Nadu: One more person linked to ISIS arrested by NIA in Kerala, By: Express Web Desk | New Delhi | Updated: October 4, 2016 5:56 pm.

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2575458.html?pm=home

[3]  விகடன், தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்… கேரளாவில் 6 பேர் கைது, Posted Date : 18:10 (03/10/2016); Last updated : 18:10 (03/10/2016).

[4] The Hindu, NIA picks up IS suspect from Kadayanallur, Tirunelveli October.4, 2016; Updated: October 4, 2016 02:21 IST.

[5] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.

[6] http://www.vikatan.com/news/india/69109-isis-terrorists-targeted-tamil-nadu-6-arrested-in-kerala.art

[7] மாலைமலர், .எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை, பதிவு: அக்டோபர் 07, 2016 14:09

[8] http://www.maalaimalar.com/News/State/2016/10/07140918/1043769/kadayanallur-IS-extremist-investigation.vpf

[9] தினமணி, .எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை, By கடையநல்லூர் Last Updated on : 08th October 2016 08:21 AM

[10] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/oct/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2578126.html?pm=478

[11] தினத்தந்தி, கேரளாவில் இருந்து .எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 12:45 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 4:15 AM IST

[12] http://www.dailythanthi.com/News/State/2016/10/08004534/And-brought-to-trial-cupahaniyai-Kadayanallur.vpf

ஐ.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

நவம்பர் 23, 2015

.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

காரைக்காலில் மத்திய உளவுப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்துல் சிராஜ் தவுலத்-இடமிருந்து 2-வது.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது (அக்டோபர்.2015): ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினருடன் தொடர்பில் இருந்த காரைக்கால் இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்கால் வள்ளலார் நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் (35) என்பவரை சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத் துறையினர் செவ்வாய்க்கிழமை 27-10-2015 அன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இவ்வழக்கு விவரம்: கடந்த 2000-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற சிராஜ் தவ்லத் மரைக்காயர் பின்னர் ஊர் திரும்பினார். தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தமிழகத்தில் ஏ.வி.எஸ். [Anti Vice Squad, AVS] என்கிற விபசார தடுப்புப் பிரிவினருக்கு, வழக்குத் தொடர்பாக செல்லிடப்பேசி உரையாடலை பதிவு செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இதையடுத்து, விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். இந்த அனுபவத்தைக் கொண்டு, பல முக்கியப் பிரமுகர்களின் தொலை பேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதும், பலரை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிந் துள்ளது. மேலும், சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது[1].

அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் கைதுபுழல் சிறையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் ஏற்பட்ட தொடர்பு: பல்வேறு வழக்குகளில் தமிழக போலீஸார் இவரைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கு சிலருடன் ஏற்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது[2].  மத்திய உளவுத் துறையினர் இஸ்மா சாதிக்கை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அவருடன் தவ்லத் மரைக்காயருக்கு இருந்த தொடர்பு தெரியவந்து காரைக்காலில் இவர் பிடிபட்டார்[3]. நெடுங்காடு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த போது உளவுத் துறையினர், போலீஸாரிடம் இந்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.  இவரிடமிருந்து 3 செல்லிடப்பேசி, 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் காவல்நிலைய போலீஸார், இவரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணையை தொடர போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்[4]. அதாவது, ஒரே ஆள் பலகுற்றங்களை செய்வது என்பது, இவர்களில் பொதுவான அம்சமாக இருக்கிறது. இந்த போக்கு அல்-உம்மாவிலிருந்தே காணப்படுகிறது.

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதிஐசிஸ் ட்சர்ட் புகைப்பட விவகாரம் (ஜூலைஆகஸ்ட்.2014): ஜுலை 29, 2014 தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்[5]. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஈராக்கில் பணியாற்றி வந்த இந்தியச் செவிலியர்கள் ஐசிஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்[6]. ஆனால், ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண்களையே கற்பழிக்கின்றனர், முதலிய காரியங்களை அவர்கள் அறியாமல் போனது விந்தையே! இந்த நிலையில், ஆகஸ்ட்.4, 2015 அன்று மாலையில் அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞரும் முகமது ரில்வான் என்ற இளைஞரும் ராமநாதபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்[7]. அப்துல் ரஹ்மான்தான் திருப்பூரில் இந்த டி ஷர்ட்களை வாங்கியவர் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால், அத்தகைய ட்-சர்ட்டுகளை அச்சடித்து தயாரித்தது, விற்றது யார் என்ற கேள்விகளும் எழுகின்றன. இதெல்லாம் தெரியாமல் செய்தது என்று சொல்ல முடியாது. திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மொத்தம் 100 டி சர்ட்களுக்கு ரில்வான் மூலம் அப்துல் ரஹ்மான்தான் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார்[8]. இந்த டி சர்ட்டை தலா ரூ. 250க்கு விற்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் உள்ள 26 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்து விட்டனர். அதன் இறுதியில் 24 பேரை விடுவித்து விட்டு இந்த 2 பேர் மீது மட்டும் தற்போது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

J K youth showing off ISIS Flags during demonstration againat Indiaசிறையிலடைக்கப்பட்டது[9]: இந்தக் கைது குறித்து, ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் கேட்டபோது, ” ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்றபோதிலும், இது பல்வேறு அரசுகளுக்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாக உள்ளது. எனவே இந்த அமைப்புக்கு இத்தகைய டி சர்ட்கள் மூலம் ஆதரவு திரட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர்[10]. இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர். வெளிநாட்டில் ஒரு அரசை எதிர்த்துப் போராடும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் இங்கிருக்கும் இளைஞர்களைத் தூண்டியதற்காகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக”த் தெரிவித்தார். இது தொடர்பில் பேசிய, தொண்டி ஜமாத்தின் செயலாளரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான சாதிக் பாட்சா, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளைப் போலச் சித்தரிப்பது வருத்தம் தருவதாகத் கூறினார். இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார். ஆகஸ்ட்.4, 2014 அன்று மாலை கைதுசெய்யப்பட்ட அவர்கள், திருவாடனை மாஜிஸ்ட்ரேட் இளவரசி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்[11].

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7821818.ece

[2] தினமணி, .எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது, By  காரைக்கால், First Published : 29 October 2015 12:31 AM IST

[3] தமிழ்.இந்து, .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு?மத்திய உளவுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட காரைக்கால் இளைஞர் சிறையில் அடைப்பு, Published: October 30, 2015 09:10 ISTUpdated: October 30, 2015 09:10 IST.

[4]http://www.dinamani.com/tamilnadu/2015/10/29/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article3102332.ece

[5]  தமிழ்.வெப்துனியா, ஐஎஸ்ஐஎஸ் டிஷர்ட்: தமிழகத்தில் இரண்டு இளைஞர்கள் கைது, புதன், 6 ஆகஸ்ட் 2014 (11:17 IST).

[6] http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/ramanathapuram-iraq-isis-t-shirt-two-young-men-arrested-114080600007_1.html

[7] பிபிசி.தமிழ், ஐசிஸ் டிஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள் கைது, ஆகஸ்ட்.5, 2015.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ்ஐஎஸ் டி சர்ட் விவகாரம்: போட்டோவுக்கு போஸ் கொடுத்த 2 பேர் கைது– 24 பேர் விடுவிப்பு, Posted by: Sutha, Published: Tuesday, August 5, 2014, 17:24 [IST].

[9] https://www.youtube.com/watch?v=k8PUdCqY-XE

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-arrested-tamil-nadu-over-group-photo-isis-t-shirts-207779.html

[11]  http://www.bbc.com/tamil/india/2014/08/140805_isis_tshirt_tnarrests

ஐசிஸ்-தமிழக தொடர்புகள் கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)!

நவம்பர் 23, 2015

ஐசிஸ்-தமிழக தொடர்புகள் கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)!

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்-2

கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து): இது வெறும் கதையல்ல இந்தக் கதை பல்வேறு உலக நாடுகளையும் ஐ,எஸ். கோட்பாட்டின் ஆதிக்கம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து கவலை கொள்ளச் செய்துள்ளது. முகமது மரகாச்சி மரைக்காயர், கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். மரைக்காயர் சவுதி அரேபியாவில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்துள்ளார். அதன் பின்னர் 2007-ல் சிங்கப்பூர் சென்றுள்ளார். எக்ஸான் மொபைல், ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். மரைக்காயர் சிங்கப்பூர் வர முக்கிய காரணமே அவரது நண்பர் ஃபக்ருதீனை பார்க்க வேண்டும் என்பதே. மரைக்காயரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்களும் கிடைத்தன. கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதியாக இருந்துள்ளார். தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகம் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. உள்ளூர் தேர்தல்களை அவர் எதிர்த்துள்ளார்.

 பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்

திசையை மாற்றிய பிரச்சாரம் – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[1]: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாத பிரச்சாரகர் பெய்ஸ் முகமதின் பேச்சுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார் மரைக்காயர். அதேபோல் ஏமன் நாட்டின் அன்வர் அல் அவ்லாகியின் பேச்சுகளும் அவரை வெகுவாக ஈர்த்தது. 2011-ல் அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். சிங்கப்பூரில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் தேசிய தினத்தை ஒட்டி மசூதி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த அந்நாட்டு தேசியக் கொடியை அப்புறப்படுத்தியுள்ளார். இதற்காக அவரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்தனர். பின்னாளில் சிங்கப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ஃபக்ருதீனை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய வைத்ததை மரைக்காயர் ஒப்புக் கொண்டார். சிரியா போன்ற நாடுகளில் தவிக்கும் முஸ்லிம்களுக்கு உதவுவது நமது கடமை என ஃபக்ருதீனை நம்ப வைத்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். மரைக்காயரால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஃபக்ருதீன் சிரியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அநத நபர் கூறியது போல் 1,500 டாலர் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு சிரியா பயணப்பட தயாரானார் ஃபக்ருதீன். இனி ஐ.எஸ். கலிஃபேட்டில்தான் தனது வாழ்க்கை என்பதை அவர் உறுதி செய்துள்ளார். மீண்டும் ஐ.எஸ். ஆதரவாளரை தொடர்பு கொண்டார். அவர், குடும்பத்துடன் வருமாறு ஃபக்ருதீனுக்கு ஆலோசனை அளித்துள்ளார்.

The detention of Adnan Hassan Damudi in Dubai

நவம்பர் 18, 2013-ல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஃபக்ருதீனையும் அவரது குடும்பத்தினரையும் கடைசியாக சந்தித்து வழி அனுப்பிவைத்த மரைக்காயர்: அப்போதுதான் சிரியாவுக்குள் நுழைய எளிதாக இருக்கும் எனவும் ஃபக்ருதீனுக்கு அவர் கூறியுள்ளார். அதன்படி குடும்பத்துடன் சிரியா புறப்பட்டார் ஃபக்ருதீன். நவம்பர் 18, 2013-ல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஃபக்ருதீனையும் அவரது குடும்பத்தினரையும் கடைசியாக சந்தித்து வழி அனுப்பியிருக்கிறார் மரைக்காயர். 12 நாட்கள் கழித்து ஃபக்ருதீனின் குடும்பத்தினர் துபாய் திரும்பினர். செச்சன்யாவில் இருந்து வந்த சில போராளிகளுடன் ஃபக்ருதீன் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இருப்பினும் ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. அங்கு வாழ்வதற்கான சூழல் இல்லாததால் 12 நாட்களிலேயே ஃபக்ருதீன் குடும்பத்தினர் அனைவரும் துபாய் திரும்பியுள்ளனர்.

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

சென்னையில் இருந்து மேலும் இருவரை சிரியாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[2]: இந்திய உளவு நிறுவனங்கள் வசம் இருக்கும் தகவலின்படி, ஃபக்ருதீன் இரண்டாவது முறையாக சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டபோது சென்னையில் இருந்து மேலும் இருவரை அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார். அந்த இருவரது அடையாளமும் தெரியவந்துள்ளது. இருவரில் ஒருவருக்கு துருக்கி விசா மறுக்கப்பட்டுவிட்டது. மற்றொருவருக்கு பாஸ்போர்ட்டே இல்லை. இதனால், அவர்களை விட்டுவிட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சிரியா புறப்பட்டுச் சென்றார் ஃபக்ருதீன். ஜனவரி 22, 2014-ல் இச்சம்பவம் நடந்தது. தற்போதைய தகவலின்படி, ஃபக்ருதீன் சிரியா – துருக்கி எல்லையில் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றன உளவு நிறுவனங்கள். ஃபக்ருதீன் குடும்பத்துடன் சிரியா செல்ல விமான டிக்கெட்டை கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு சென்னையில் டிராவல் ஏஜென்சி இருக்கிறது. மேலும், தான் குடும்பத்தினருடன் பத்திரமாக சிரியா அடைந்துவிட்டதாக ஃபக்ருதீன் கன்னியாகுமரி இளைஞருக்கு தகவலும் அனுப்பியுள்ளார். சிரியாவுக்கான முதல் பயணம் தோல்வியடைந்த பின்னர் டிசம்பர் 2013-ல் இருந்து ஜனவரி 2014 வரை ஃபக்ருதீன் சென்னையில் தங்கியுள்ளார். அப்போது அவர் தான் படித்த புதுக்கல்லூரி மாணவர்கள் சிலரையும் மூளைச்சலவை செய்ய முயன்றுள்ளார்.

New college students become ISIS warriors

தமிழகத்தைச் சேர்ந்த சிறிய குழு சிரியா சென்று .எஸ்ஸில் தங்களை இணைத்துக் கொள்ள ஒன்று தயாராக இருந்தது- இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[3]: ஐ.எஸ். மீது ஈர்ப்பு கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்களும் ஃபக்ருதீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கடலூரில் குரான் மனனம் செய்ய பயிற்றுவிக்கும் பள்ளியை நடத்துபவர். இவரைத் தவிர சென்னையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவரும், புதுக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவர். உளவுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிரியா சென்று ஐ.எஸ்-ஸில் தங்களை இணைத்துக் கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறிய குழு ஒன்று தயாராக இருந்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இருக்கிறது. சிரியா செல்வதற்கு முன்னர் மூன்று மாதங்களுக்கு உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர். சிரியா செல்பவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.20,000 பணமும், ஒருவேளை அவர்கள் உயிரிழந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் பணமும் அளிக்கப்படும் என அந்த இளைஞர்களிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணத்தை யார் அளிப்பார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை” என்றார். ஆக, “தி இந்துவை”ப் பொறுத்த வரையிலும், இது வெறும் இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதையாகத்தான் இருக்கிறது போலும்! இனி பரங்கிப்பேட்டை விவகாரத்தைப் பார்ப்போம், அதாவது, அங்கு எப்படி தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளார்கள் என்ற “கதைகளையும்” பார்ப்போம்!

Nine Muslims deported to Bangalore from Turkey - Muhammed Abdul Ahad

ஐசிஸ் பைல்கள் – தி இந்துவின் கதை: உண்மையில் முஸ்லிம் இளைஞர்கள் எப்படி, ஏன், எவ்வாறு மதவாதத்தினால், அடிப்படைவாதத்தினால், சிறுவயது முதலே, நம்பிக்கைகளை மனங்களில் ஏற்றிக் கொண்டு, பள்ளிப்பருவங்களில் சித்தாந்தமாக மாற்றிக் கொண்டு, கல்லூரி காலங்களில் ஜிஹாதாக்கிக் கொண்டு, வேலைக்குச் சேர்ந்த பிறகு ஐசிஸ் போராளிகளாகியுள்ளனர் என்பதனை “A tale of two friends: ne makes it to Syria, the other cools his heels in jail” என்று ஆங்கிலத்திலும், “இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை” என்று தமிலும் ஏதோ சாதாரணக் கதை போல வெளியிட்டிருப்பதால், அதனைப் படிப்பவர்கள், எப்படி அத்தகைய தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டார்கள் என்று கவலைப் பட மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய கொள்கைகளினால், அவர்களை பாராட்டவும் செய்வார்கள். இன்னும் இளைஞர்கள் அவர்களை மாதிரிகளாகக் கொண்டு செயல்படலாம். ராமநாதபுரத்தில் டி-சர்ட் போட்டவர்கள், சென்னையில் ஐசிஸ்சில் சேர தயாரிகிறார்கள். ஆகவே, பொறுப்புள்ள பேற்றோர்கள் மற்றவர்களை ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும். பல்லாயிர அப்பாவி உயிர்களைப் போக்குவதால், பூமியின் மீது சாந்தமோ, அமைதியோ வந்து விடாது. இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளே அதற்கு சாட்சி.

© வேதபிரகாஷ்

23-11-2015


[1] தமிழ்.இந்து, பரங்கிப்பேட்டையிலிருந்து .எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை, Published: November 21, 2015 11:54 ISTUpdated: November 21, 2015 15:19 IST

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7903456.ece

[3] தமிழில்: பாரதி ஆனந்த், என்று ஆங்கிலத்தில் வந்ததை மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. தி இந்து, ஞாயிறு, நவம்பர் 22, 2015.

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

நவம்பர் 23, 2015

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

Muslim youth become ISIS supporters, warriors

தமிழக ஜிஹாதிகள் துருக்கிக்குச் சென்றது எப்படி?: இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவு துறை அதிகாரிகள் அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்[1]. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், தமிழக வாலிபர்கள் சேர முயன்ற விவகாரம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடுகளான இதுகுறித்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது[2]: “சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த பி.காம்., பட்டதாரியும், சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த, கரூரைச் சேர்ந்த அவனது நண்பனும் .எஸ்., அமைப்பில் சேர முயன்று, துருக்கியில் பிடிபட்டு, நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாலிபர்களின் குடும்ப பின்னணி, நண்பர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம். மேலும், .எஸ்., அமைப்புக்கு, தமிழகத்தில் ஆள் பிடிக்கும் ஏஜன்ட்கள் உள்ளனரா; வாலிபர்கள் துருக்கி வரை செல்ல பண உதவி செய்தது யார்; விசா பெற்றுத் தந்தோருக்கு, .எஸ்., பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக விசாரணை நடக்கிறது”, இவ்வாறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறினர்[3]. முதலில் அவர்கள் போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பிறகு, அவர்களது குடும்பத்தாரை வரவழைத்தபோது, அழுது கொண்டே விசயங்களை வெளியிட்டனர். தாங்கள் வேலைதேடித்தான் சென்றோம் என்று கூறினர்.

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

தமிழ்நாடும், .எஸ் தொடர்புகளும்: தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஐ.எஸ் பற்றிய வழக்குகள் பல நிலுவையில் உள்ளன[4]. ஆகஸ்ட்.2014ல், ராமநாதபுரம் மசூதி முன்பாக 26 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு, சமூகவலைதளத்தில் பரப்பினர். விசாரித்து எச்சரித்து அவர்கள் அனுப்பப்பட்டனர். செப்டம்பர் 2014ல், சென்னையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞன் தற்கொலை குண்டுவெடிப்பில் கொலையுண்டது தெரியவந்தது. ஆகஸ்ட் 2014ல், வேலூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இஞ்சினியர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஐ.எஸ்.சில் சேர்ந்ததாக தெரிந்தது. தென்னிந்தியாவில் 150 ஐசிஸ் ஆதரவாளர்கள் உள்ளனராம்[5]. அப்படியென்றால், தமிழகத்தில் சுமார் 50 பேராவது இருக்க வேண்டும். “தி இந்து”, “இரு நண்பர்களின் கதை” என்று ஒரு கதையை “ஐ.எஸ் பைல்” என்ற படத்துடன் வெளியிட்டுள்ளது. இருவரும் ஜிஹாதித்துவத்தில் ஊறியவகளாக, தீவிரவாதிகளாக இருந்தாலும், ஏதோ “இரு நண்பர்களின் கதை” என்ற ரீதியில், தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் சென்னையில் நியூ காலேஜில் படித்தவர்கள் தாம். அக்கதை சுருக்கம் பின்வருமாறு:

ISIL Chennai terror nexus - The Hindu graphics

இரு .எஸ் தீவிரவாதிகளின் கதை: ஹாஜா பக்ருத்தீன் உஸ்மான் அலி [Haja Fakkrudeen  Usman Ali] மற்றும் குல் மொஹம்மது மராச்சி மரக்காயர் [Gul Mohamed Maracachi Maraicar] இருவரும் பறங்கிப்பேட்டை அரசு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பிறகு ராயப்பேட்டை நியூ காலேஜில் சேர்ந்தனர். மரைக்காயர் ஐந்து வருடங்கள் சவுதி அரேபியாவில் இருந்து 2007ல் சிங்கப்பூருக்கு வந்தான். அதாவது 2002-07 வருடங்களில் அங்கிருந்திருக்கிறான். சிங்கப்பூரில் சாப்ட்வேர் வேலையில் இருந்தான். பிறகு, சில வருடங்கள் கழித்து இருவரும் சிங்கப்பூரில் சந்தித்தனர். 2008ல் அலி சிங்கப்பூர் குடிமகனானான்[6]. ஆனால், நவம்பர் 2013ல் சிரியாவுக்குச் சென்றதாக தெரிகிறது. இருவரும் முஸ்லிம்களின் நிலைப்பற்றி விவாதித்தனர். பிப்ரவரி 27, 2014 அன்று பக்ருத்தீனை தீவிரவாதத்திற்குட்படும் வகையில் முயன்றதாகவும், வன்முறையில் ஈடுபட தூண்டியதாகவும் மரைக்காயர், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்[7]. பக்ருத்தீன் அலியின் மனைவி, குழந்தைகளுடன் ஜனவரி.22, 2014 அன்று அபுதாபி வழியாக துருக்கிற்கு சென்றான். அலி இப்பொழுது சிரியா-துருக்கி எல்லையில் இருக்கிறான்[8]. அலி சிரியாவில் இருந்தாலும், அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளான். சென்னையில் டிசம்பர் 2013 மற்றும் ஜனவரி 2014 காலத்தில் இருந்தபோது, சில நியூ காலேஜ் மற்றும் இதர மாணவர்களை தீவிரவாதத்திற்கு இழுத்துள்ளான். கடலூரில் ஒரு குரான் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறான். இவன் ஜிஹாதிகளை சேர்க்க ஒரு குழுவை நடத்தி வருகிறான். மாத சம்பளம் ரூ.20,000/- மற்றும் ஜிஹாதில் இறக்க நேர்ந்தால் ரூ.20 லட்சம் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்ற விவரங்களும் அறியப்பட்டன[9]. இப்பொழுது பக்ருத்தீன் ஐசிஸ்.சிக்காக போராடுகிறான், மரக்காயர் சிறையில் இருக்கிறான்[10].  நான் இப்படி எழுதி முடிக்கும் வேலையில், “தி ஹிந்து” தமிழிலும் அக்கதையை விவரமாக வெளியிட்டுள்ளது.

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

பரங்கிப்பேட்டையிலிருந்து .எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)[11]: தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர். பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. மரைக்காயர் சவுதியிலும், ஃபக்ருதீன் சிங்கப்பூரிலும் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இருவரும் சிங்கப்பூரில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பில் அவர்கள் உணர்ச்சிகரமாக விவாதித்தனர். உலகளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் இன்னல்கள் என்னவென்பதே அந்த விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது. அந்த விவாதம் இருவரின் வாழ்க்கை திசையையும் மாற்றியது. நண்பர்கள் இருவரில் ஒருவர் இப்போது இந்தியச் சிறையில் இருக்கிறார். மற்றொருவர் சிரியாவில் ஐ.எஸ். படையில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். அவர் எந்த களத்தில் போரில் இருக்கிறாரோ?! சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஹாஜா ஃபக்ருதீன் இப்போது சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் முகமது மரகாச்சி மரைக்காயர் சிறையில் இருக்கிறார். இவர்கள் இருவரின் கதையும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஐ.எஸ். கொள்கை உலகளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://www.maalaimalar.com/2015/11/21120740/intelligence-investigation-2-t.html

[2] தினமலர், .எஸ்., அமைப்பில் தமிழக வாலிபர்கள், நவம்பர் 22, 2015.02:57.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1392623

[4] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[5] http://www.thehindu.com/news/national/150-is-supporters-in-south-india/article7904410.ece?ref=relatedNews

[6] https://www.youtube.com/watch?v=4lxEp4D8FTs

[7] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Singapore-Indians-involvement-in-Syrian-conflict-being-probed/articleshow/32542736.cms

[8] Singapore has deported an Indian-origin man for radicalising and helping a compatriot go to strife-torn Syria and have launched a probe into his journey “with the intention to undertake violence”. The Singapore Ministry of Home Affairs deported Gul Mohamed Maracachi Maraicar, 37, for radicalising Haja Fakkurudeen Usman Ali, 37, and helping him to go to Syria. Gul is a permanent resident of Singapore and had worked there as a system analyst. Ali, who worked as a supermarket manager and became a citizen of Singapore in 2008, allegedly left the country last November to fight against forces loyal to Syrian President Bashar al-Assad, the Ministry said Saturday. Officials were informed of his trip only once he left Singapore. The ministry, however, refused to comment on the investigation and deportation of Gul, a report in The Sunday Times said.

http://indianexpress.com/article/india/india-others/singapore-deports-indian-man-for-syrian-links/

[9] http://www.thehindu.com/news/national/is-files-a-tale-of-two-friends-one-makes-it-to-syria-the-other-cools-his-heels-in-jail/article7900874.ece?ref=relatedNews

[10]  The Hindu, A tale of two friends: ne makes it to Syria, the other cools his heels in jail, reported by Josy Joseph, New Delhi, November 21, 2015.11:14 IST.

[11]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7903456.ece