Posted tagged ‘ஏர்வாடி’

2001 தீவிபத்து, 2019  கற்ப்பழிப்பு,  ஏர்வாடியில் நடப்பதுஎன்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

நவம்பர் 9, 2019

2001 தீவிபத்து, 2019  கற்ப்பழிப்பு,  ஏர்வாடியில் நடப்பது என்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

Erwadi 2001 fire accident

தீ விபத்திற்குப் பிறகு, கூட்டு கற்பழிப்பு: உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்குப் பின் போதை முக்கியகாரணமாக இருக்கிறது[1]. சிறுவயதிலேயே போதைக்கு அடிமையானதன் விளைவாக ஏர்வாடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது[2]. 2001ம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்து நாட்டையே உலுக்கியது. அது தான் ஏர்வாடியைப் பொறுத்தமட்டில் பெரிய விஷயமாக இருந்தது. அதன் பிறகு இந்த விவகாரம். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ளது சுல்தான் சையது இப்ராஹிம் சையது ஒலியுல்லா தர்கா. இந்த தர்காவிற்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவதுண்டு. அதிலும், இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாகமே மாறிவிட்டது ஏர்வாடி தர்கா. இந்த தர்ஹாவிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது காட்டுப் பள்ளிவாசல்.

Erwadi mental asylum - chained patients.4

2001ல் நடந்த தீ விபத்தில் பலர் மாண்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் உள்ளன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு இந்தக் காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 06-08-2001 அன்று, தீ குபுகுபுவென காப்பகம் முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் தப்பி வரவும் வழியில்லை. மேலும், மன நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்பதால் 25-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கருகி இறந்தனர். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகின. இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

Erwadi mental asylum-786

2001ல் நடந்த தீ விபத்திற்கு, 2007ல் தண்டனை அளிக்கப் பட்டது: இங்கு செயல்பட்டுவந்த மனநலக் காப்பகங்களை அனைத்தும் 2001 ஆகத்து 13 அன்று மூடப்பட்டு, அங்கு இருந்த 500 மன நோயாளிகள் அரசாங்க பராமரிப்பில் கொண்டுவரப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, என். ராமதாஸ் தலைமையிலான ஒரு ஆணையம் இந்த மரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. ஆணையமானது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கவனிப்பானது மேம்படுத்தப்பட வேண்டும், மனநலக் காப்பகத்தை அமைக்க விரும்புபவர்கள் அனைத்து கைதிகளும் கொண்டதாக காப்பகத்தை அமைக்க வேண்டும், அதற்கு உரிய உரிமத்தைக் கட்டாயம் பெறவேண்டும் என்று பரிந்துரைத்தது. 2007 ஆம் ஆண்டு, தீவிபத்து நேர்ந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பக உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு உறவினர்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

Erwadi mental asylum - NAKKEERAN

19 வயது பெண் ஏழு பேரால் கற்பழிக்கப் பட்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் முகமதிய மதத்தின் படி, நம்பிக்கையின் ஆதாரமாக நடைப் பெற்று வருகிறது. இருப்பினும், இங்கு வருகிறவர்களுக்கு மனநலம் சரியாகுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்குவது வழக்கம். இருப்பினும் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[3]. கேரளாவைச் சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், ஏர்வாடி தர்காவையொட்டியுள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்[4].  இங்கு பல மனகாப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று மேலே எடுத்துக் காட்டப் பட்டது. கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

Erwadi mental asylum - chained patients.dinakaran

வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை வெளியிடுவது: இதனிடையே சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் வெளியே பானு வந்திருக்கிறார்[5].  அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர்[6]. அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர்[7]. இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்[8]. ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நக்கீரன்[9], “அதிகாலை வேளையில் மகளின் இயற்கை உபாதைக்காக அங்கிருக்கும் கழிவறைக்கு அழைத்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 16 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தந்தை பேகத்தை தாக்கி தள்ளிவிட்டு, அவரின் கண் எதிரிலேயே வாயை பொத்தி தூக்கிச் சென்று அருகில் இருந்த கருவேலங்காட்டுக்குள் வைத்து ஒன்றுமறியாத ஷானிதாவினை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்,” என்கிறது[10].

Erwadi mental asylum - chained patients

இதைப் பற்றி இன்னொரு செய்தி: இந்த நிலையில் அங்கிருந்து கடந்த 4 ஆம் தேதி இரவு மாயமான இளம்பெண், தர்காவுக்கு அருகில் மயங்கிய நிலையில் அதிகாலை அவ்வழியே சென்றவர்களால் மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[11]. இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர்[12]. இதை தொடர்ந்து இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர்[13]. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 முதல் 18 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள், கஞ்சா போதையில் இளம்பெண்ணை காப்பகத்தில் இருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[14]. இந்த நிலையில் அந்த சிறுவர்களை பிடித்து, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ML plea about the issue

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் அறிக்கை: ‘ஏர்வாடியில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட, ஏழு பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை, மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்’ என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்[15]. அவரது அறிக்கை: “ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் தங்கி, மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, 17 வயதிற்கு உட்பட்ட, ஏழு சிறுவர்கள், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாமல், மீண்டும் இரும்பு சங்கிலியால், மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.தர்காவில், 2001ல் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, யாரையும் இரும்பு சங்கிலி போட்டு கட்டக்கூடாது என, அரசு அறிவித்தது. அரசு உத்தரவு, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.ஏர்வாடி தர்காவில், மீண்டும் தலைதுாக்கியுள்ள இந்த செயலை, உடனடியாக, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பெண்ணை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்,”  இவ்வாறு, அவர் கூறியுள்ளார்[16].

Erwadi டdargah-mental asylum-786

உண்மை நிலை என்ன?: விகடன் எடுத்துக் காட்டுவது, “மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள், தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸார் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்[17]. மேலும், ஏர்வாடி தர்ஹாவில் உள்ள மனநல மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன[18]. இதைத் தடுப்பதிலும் போலீஸார் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது”. தமிழ் திரைப்படங்கள், டெலி சீரியல்கள், இத்தகைய தர்கா / மசூதி பேயோட்டுக் காட்சிகளை “பாசிடிவாகக்” காட்டி வருகின்றனர். வெறும் நீர், மயில்தோகை வைத்து, பேயோட்டுவது போன்ற காட்சிகளைக் காட்டுகிறார்கள். அடக்க முடியாத, மனநோயாளிகள் கட்டிப் போட்டு வைப்பது தெரிகிறது. அனுமதி பெறாத மனகாப்பகங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது[19].

© வேதபிரகாஷ்

08-11-2019

Erwadi டdargah-mental asylum-666

[1] தமிழ்.சமயம், ஏர்வாடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள்!, Samayam Tamil | Updated:Nov 6, 2019, 04:03PM IST

[2] https://tamil.samayam.com/latest-news/crime/mentally-challenged-girl-raped-by-7-boys-in-ervadi-ramanathapuram-district/articleshow/71938227.cms

[3] பாலிமர் செய்தி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களிடம் விசாரணை, Nov 06, 2019.

[4] https://www.polimernews.com/amp/news-article.php?id=87682&cid=10

[5] நியூஸ்.7.டிவி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஏர்வாடியில் 7 சிறுவர்கள் கைது…!, November 08, 20191 viewPosted By : Nandhakumar

[6] https://ns7.tv/ta/bst3fy

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..! மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்…, By Manikandan S R SRamanathapuram, First Published 8, Nov 2019, 12:09 PM IST…

[8] https://tamil.asianetnews.com/crime/women-was-raped-by-7-boys-q0n15b

[9] நக்கீரன், அவளுக்கு ஒன்னும் தெரியாதுடா… விட்டுடுடா..! அப்பாவின் கண்முன்னே சிதைக்கப்பட்ட மன நோயாளி பெண்..!!!, Published on 06/11/2019 (17:08) | Edited on 06/11/2019 (17:39)

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/she-knows-nothing-deformed-mentally-ill-woman

[11] தமிழ்.வெப்.துனியா, ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் – பலாத்கார வழக்கில் 7 பேர் கைது !, Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (10:14 IST)

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mentally-disabled-woman-raped-by-7-youths-119110700017_1.html

[13] News18 Tamil,  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!, November 7, 2019, 12:55 PM IST

[14] https://tamil.news18.com/photogallery/tamil-nadu/police-arrested-7-boys-for-sexually-abused-mentally-ill-woman-vin-223575.html

[15] தினமலர், ஏர்வாடி விவகாரம் முஸ்லிம் லீக் கோரிக்கை, Added : நவ 07, 2019 23:19

[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2406395

[17] விகடன், `மகளை குணமாக்க வந்தவருக்கு இப்படியொரு துயரம்!’-அத்துமீறியவர்களை விரட்டிப்பிடித்த ஏர்வாடி மக்கள், இரா.மோகன், உ.பாண்டி, Published:06 Nov 2019 5 PM; Updated:06 Nov 2019 5 PM

[18] https://www.vikatan.com/news/crime/7-booked-for-sexual-harassment-complaint-in-ervadi

[19] Ranganathan, Shubha. Does Community Mental Health Really Engage the Community?.” Power to Label: The Social Construction of Madness (2015): 17.

முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்று மரியாதை செய்யும் முஸ்லிம்கள் ஏன் மாற வேண்டும் – சேலத்து முஸ்லிம் பெண்கள் ஏன் இந்து பெண்கள் வழிபாட்டை எதிர்க்க வேண்டும் (3)

ஓகஸ்ட் 8, 2017

முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்று மரியாதை செய்யும் முஸ்லிம்கள் ஏன் மாற வேண்டும் – சேலத்து முஸ்லிம் பெண்கள் ஏன் இந்து பெண்கள் வழிபாட்டை எதிர்க்க வேண்டும் (3)

Muslims receive mulaippari procession in Ramanathapuram - 03-08-2017

முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட் 2017): ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் விசேஷ விழாக்கள் நடப்பது வழக்கம். இவற்றில், தென் மாவட்டங்களில் நடைபெறும் முளைப்பாரி திருவிழாக்கள் முக்கிய இடம்பிடிக்கின்றன. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முளைப்பாரி திருவிழாக்கள் நடந்துவருகின்றன. ராமநாதபுரம் புளிக்காரத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. ஒரு வார காலம் நடந்த இந்தத் திருவிழாவின் இறுதி நாளான புதன்கிழமை [02-08-2017] அன்று, பெண்கள் மாரியம்மன் கோயில் முன்பாக பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாரியம்மனுக்காக நேர்ந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை நீர்நிலையில் கரைப்பதற்காக அம்மன் கரகத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த முளைப்பாரி ஊர்வலம், சின்னக்கடைத்தெரு வழியாக வந்தது. இது காலங்காலமாக நடந்து வருகின்றது.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017.The Hindu photo

முஸ்லிம்கள் ஊர்வலத்தை வரவெற்றது – பரஸ்பர மரியாதை செய்து கொண்டது: அங்குள்ள முஸ்லிம் பள்ளிவாசல் அருகே முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது[1]. அம்மன் கரகம் எடுத்து வந்தவருக்கு முஸ்லிம் சங்க நிர்வாகி முகமது நிஷார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார்[2]. இந்த நிகழ்ச்சியில் சைரோஸ், நைனார் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவில் பூசாரிகளுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்[3]. அப்போது புளிக்காரத்தெருவின் சார்பில் தலைவர் அங்குச்சாமி முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்[4]. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த இந்த வரவேற்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ செய்தது. அவ்வப்போது, மதப் பிரச்னைகளைச் சந்தித்துவரும் ராமநாதபுரத்தில், அவற்றுக்கு மாற்றாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் மக்கள் ஒற்றுமை, இரு தரப்பினைச் சேர்ந்தவர்களிடையே சகோதரத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டாண்டு காலமாக இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முறையை ஏன் மற்ற பகுதிகளில் கடைப் பிடிக்க முடியாது?

Muslims receive mulaippari procession in Ervadi -2015

2015ல் கீழக்கரையில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள்[5]: ஏர்வாடி, யாதவர் தெருவில் உள்ள வாழவந்த மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. 02-08-2015 அன்று மாலை 5 மணியளவில் ஏர்வாடி தர்காவிற்குள் அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் மூன்று முறை வலம் வந்தது[6]. பின்னர் உலக நன்மைக்காக இஸ்மாயில் ஆலிம்சா மவுலீது ஓதினார்[7]. பாதுஷா நாயகத்திற்கான இரண்டு முளைப்பாரியை தர்கா வாசல் முன் வைத்து கும்மி கொட்டி அம்மன் வாழ்த்துப் பாடல்களை பாடினர். சிறிதளவு முளைப்பாரியினை வழங்கினர். ஏர்வாடி தர்கா ஹக்தார் சபை மூத்த உறுப்பினர் துல்கருணை பாட்ஷா லெப்பை கோயில் விழா தலைவர் முத்துமணிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் ஏர்வாடி கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந் நிகழ்ச்சி நடந்தது[8]. 2014லிலும் இவ்வாறே நடந்தது[9].

2016- mUSLIMS CONDUCT FIRE WALK CEREMONY FOR THREE GENERATIONS

தும்பைப்பட்டி வீரகாளியம்மன் கோவில் சமத்துவம் [ஜனவரி 2017] ஏன் மற்ற இடங்களில் இல்லை?: மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுத்தோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகை அன்று அதே பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பம் ஒன்று காலம் காலமாக வீரகாளியம்மனுக்கு அணிவிக்க பட்டாடை கொடுத்து வருகிறது[10]. இந்த ஆண்டு -2017 அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாகூர் அனீபா என்பவர் தனது தலையில் பட்டாடையும், பூமாலைகளும் சுமந்து, தாரை தப்பட்டைகள் முழங்க வீரகாளியம்மன் கோயில் மந்தைக்கு வந்தார்[11]. அவரை வரவேற்று பதினெட்டுப்பட்டியைச் சேர்ந்த ஏழு அம்பலக்காரர்களும் பட்டாடையை பெற்றுக் கொண்டனர். கோவில் பூஜாரியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பட்டாடையை அம்மனுக்கு சாத்தி அபிஷேம் செய்தார். அதன்பிறகு வழக்கம் போல பூஜாரி கோவில் மாட்டை அவிழ்த்து விட்டு, மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார். மேலூரில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் இரு மதங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். மேலூரில் நடந்து ஏழுமாதங்கள் கூட ஆகவில்லை, ஆனால், ஆகஸ்ட் 2017ல், சேலத்து முஸ்லிம்கள் மட்டும் எப்படி மாறாக நடந்து கொண்டிருக்க வேண்டும்?

2014- MUSLIMS CONDUCT FIRE WALK CEREMONY -Viluppuram

சிராவன மாதமும், ஆடிமாதமும், முகமதியரும்: சூரியன் கர்க்கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்[12].   சிராவான மாதம் ஜூலை 24, 2017 முதல் ஆகஸ்ட் 23, 2017 வரை உள்ளது. இதில் ஒவ்வொரு நாளுமே விஷேசமான நாள்தான் –

  1. ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார விரதம்,
  2. செவ்வாய்கிழமை மங்கள கௌரி விரதம்,
  3. வெள்ளிக்கிழமை லக்ஷ்மிக்கு உதந்ததான விரதம்

சிராவன பௌர்ணமி 07-08-2017 அன்று வந்தது. அன்று சந்திரகிரகணமாகவும் இருந்தது. அன்று நாகபஞ்சமி, ரக்ஷாபந்தன், ஆவனி ஆவிட்டம், நாரளி பௌர்ணிமா [தேங்காய்] என்று பலவாறு இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. ஆகஸ்ட் 14 ஜன்மாஸ்டமி, கிருஷ்ணாஸ்டமி, கோகுலாஸ்டமி என்று வருகிறது. ஆனால், முகமதியர்களுக்கு, இம்மாதத்தில் ஒன்றும் இல்லை. ரம்ஜான் முடிந்ததும், ஹஜ் [30-08-2017] வரை சும்மாதான் இருக்க வேண்டும். ஆனால், இம்மாதத்தில் தான் கந்தூரி விழா என்றெல்லாம் கொண்டாடுகின்றனர். அதாவது, பழைய பண்டிகைகளை மாற்றி கொண்டாடுகிறார்கள். இப்பொழுது தான் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லி கலாட்டா செய்து வருகின்றனர். ஆனால், இந்த உர்ஸ், கந்தூரி, தீமிதி விழாக்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் தான் அடிப்படைவாத-வெறிபிடித்த ஜிஹாதி முஸ்லிம்கள், இவற்றை எதிர்க்கின்றனர். அந்த போகில் தான், இப்பொழுது 2017ல் அம்மன் விழாக்களை எதிர்க்கின்றனர். இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-08-2017

Muslims walk on fire in Villupuram mosque

[1] விகடன், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்!, இரா.மோகன், Posted Date : 12:08 (03/08/2017), Last updated : 12:08 (03/08/2017)

[2] http://www.vikatan.com/news/tamilnadu/97804-people-from-all-religion-joined-mulaipaari-rally.html

[3] தினத்தந்தி, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வரவேற்பு, ஆகஸ்ட் 03, 2017, 03:30 AM

[4] http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03003215/An-example-of-religious-harmony–Mulberry-marchMuslims.vpf

[5] தினமலர், மதநல்லிணக்கமுளைப்பாரி ஊர்வலம், பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.2, 2015, 03:26.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1355010&Print=1

[7] தினத்தந்தி, மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனை, அக்டோபர் 01, 2015, 04:15 AM.

[8] http://www.dailythanthi.com/News/Districts/2015/10/01031227/Mariamman-Temple-Dargah-mulaippari-Yervadi-prayer.vpf

[9] http://temple.dinamalar.com/news_detail.php?id=35380

[10] தமிழ்.ஒன்.இந்தியா, மேலூரில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல், Posted By: Jijo, Published: Tuesday, January 17, 2012, 13:54 [IST]

[11] http://tamil.oneindia.com/news/2012/01/17/tamilnadu-hindu-muslims-celebrate-pongal-madurai-aid0180.html

[12] சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர்.  இவை ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி, கார்த்திகை , மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது. இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!

ஜூலை 25, 2010

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!

சமிபத்தில் கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் நரபலி அதிகமாகி வருவதைக் காணலாம். இதில் காணப்படும் முறை, குழந்தைகள் காணாமல் போவது, பெற்றோர் புகார் கொடுப்பது, ஆளில்லாத இடத்தில் குழந்தைகள் உடல், உடற்பாகங்கள் காணப்படுவது, சில ஆட்கள் / மந்திரவாதிகள் கைது செய்யப்படுவது, அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது…………..பிறகு என்னவாயிற்று என்று தெரியாமல் வழக்குகள் முடிக்கப்படுவது…………..என்ற போக்குத்தான் தெரிய வருகிறது. இப்பொழுது செய்திகள் இப்படி வருகின்றன:

மதுரையில் காணாமல் போன குழந்தை ஏர்வாடியில் கொலை[1]: மதுரை தர்ஹாவில் காணாமல் போன குழந்தையின் உடல் ஏர்வாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கவுஸ் பாஷா, அவர் மனைவி ஷிரின் பாத்திமா. அவர்களுக்கு ஒன்றரை வயது மகன் காதர் யூசுப். திடீரென்று கவுஸ் பாஷா விபத்தில் இறந்தததால், ஷிரின் பாத்திமா துக்கத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் ஆழ்ந்த கவலையில் இருந்த ஷிரின் பாத்திமா, தனது ஒன்றரை வயது குழந்தை காதருடன், கடந்த இரண்டாம் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்காவுக்கு சென்றுள்ளார். அங்கு பிராத்தனையில் ஈடுபட்ட பாத்திமா அன்று இரவு தனது குழந்தையுடன் அந்த தர்காவில் உறங்கியுள்ளார்.

தர்காவில் குழந்தை காணவில்லை: காலையில் எழுந்ததும் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு பாத்திமா அதிர்ச்சி அடைந்தார். தல்லாகுளம் போலீசில் செரீன் பாத்திமா புகார் செய்தார்[2]. இன்ஸ் பெக்டர் சிதம்பரம் முருகேசன், கோரிப் பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி நடமாடிய திருச்செந்தூர் காயல் பட்டினத்தை சேர்ந்த அப்துல் கபூர் (30) என்பவரை பிடித்து விசாரித்தார்.

மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : தூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப்பு[3]: அப்துல் கபூர் என்பவனை போலீஸார் விசாரித்தலில், அவன் சொல்லிய விவரங்கள் பயங்கரமாக இருந்தான. மேலும் தமிழ் ஊடகங்கள் – பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் சில முரண்பாடான விஷயங்களை கொடுக்கின்றன. அதாவது, அவன் மந்திரவாதி, அவனை நரபலி கொடுக்கத்தூண்டியது அசரீரி, இல்லை காளி, அவன் ரத்தத்தைக் குடித்தான், மனைவியும் சேந்து குடித்தான், பூஜை செய்தான், பரிகாரம் செய்தான்…………முதலியவை எதையோ மறைக்க முயல்கின்றன என்று தெரிகின்றது. டிவி-செய்தியின்படி, அந்த கிராம மக்கள், இவனின் நடவடிக்கைகளை சந்தேகித்துள்ளனர் என்று தெரிகிறது. ஆனால், ஏன் புகார் கொடுக்கவில்லை என்பது மர்மமாக உள்ளது.

தர்காவில் வந்தது அசரீரியா, காளி தேவியா – அப்துல் கபூர் கூறியதாவது: இதில்தான் நாளிதழ்கள் வேறுபடுகின்றன. தினத்தந்தியில் உள்ளது[4]: “கோரிபாளையம் தர்காவில் நான் தங்கி இருந்தபோது கனவில் தலைப்பிள்ளையாக பிறக்கும் ஆண்குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தைக் குடித்தால் மாந்திரிக சக்தி அதிகரிக்கும் என்று அசரீரி கூறியது”. ஆனல் தினமலரில், “கனவில் வந்த காளிதேவி, தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன்”, என்றுள்ளது!  தர்காவில் புதைக்கப்பட்ட முஸ்லீம் மதத்தலைவர்கள், குருக்கள், சூஃபிக்கள்…………..முதலியோர் பேசுவார்கள், குறைத்தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. முன்பு 15 வருடங்களுக்கு முன்பு “அமீர் குஸ்ரூ” என்ற டிவி-தொடர் ஒலிபரப்பப்பட்டது. அதில் எப்படி ஒரு சூஃபி, அமீர் குஸ்ரூவிடம் பேசுகிறார் என்று காண்பிக்கப்பட்டுள்ளது[5].

குழந்தையை எப்படி பலி கொடுக்கப்பட்டது என்று விளக்கப்படுகிறது: அப்துல் கபூர் தொடர்கிறான், “இதனால் நானும், என் மனைவியும் குழந்தை காதர் யூசுப்பை கடத்திக்கொண்டு காயல்பட்டினம் அருகே உள்ள ஏரல் கிராமத்திற்கு சென்றோம். அங்கு கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, ஒரு வாளியில் ரத்தத்தை பிடித்து, இன்னொரு வாளியில் தலை மற்ற பாகங்களை வைத்தோம். தலையை குலசேகரன்பட்டினம் செல்லும் வழியிலுள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றோம். அங்கு ரத்தத்தை குடித்து பரிககரம் செய்தபின் தலையை அங்கேயே புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்காவை அடுத்த கடற்கரை பகுதியிலுள்ள காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து தன்கினோம். அங்கு குழந்தையின் உடல் பாகங்களை புதைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டோம்”, என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, நேற்று அப்துல்கபூரை மதுரை தல்லாகுளம் போலீசார் ஏர்வாடி அழைத்து வந்தனர்.

உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டப்படுவது: கீழக்கரை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில், குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின் திருச்செந்தூர் அருகே தலையை புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க போலீசார் அங்கு அழைத்து சென்றனர். “ஏர்வாடி காட்டுப்பள்ளி வாசல் சேர்மன் தெருவில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல், இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்,’ என, போலீசார் தெரிவித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொலை செய்து தலையை தூத்துக்குடியிலும், உடலை ஏர்வாடி தர்ஹா அருகிலும் புதைத்திருப்பதாக தெரிவித்தார்[6]. அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தையை நரபலி கொடுத்தால் மனநோய் சரியாகும் என்பதால் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையில் உடலை மீட்க குற்றவாளி அப்துல் கபுருடன் தாசில்தார், உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தை நரபலி: இங்கு திடீரென்று, இப்படியொரு வரி காணப்படுகிறது[7], “அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தையை நரபலி கொடுத்தால் மனநோய் சரியாகும் என்பதால் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது”! தினகரனும் மற்ற இணைதளங்களும் குறிப்பிட்வது, “தலைச்சன் பிள்ளையை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்கும் என்று சிலர் சொன்னதால், இந்த குழந்தையை நரபலியை கொடுத்ததாக அப்துல் கபூர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்”, என்றுதான் உள்ளது[8]. நரபலி விஷயத்தில் ஊடகநிபுனர்கள் குழம்பியுள்ளார்களா, குழப்பப்பார்க்கிறார்களா, பயந்து போயிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

நரபலி முஸ்லீம்களுக்கோ, தமிழகத்திற்கோ புதியதல்ல; இங்கு குறிப்பாக முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகள், தர்காக்கள், முஸ்லிம் மாந்திரீகர்கள் முதலியோர் சம்பந்தப் படுவதால், இக்கொணத்தில் பார்க்க வேந்தியுள்ளது. இதை முஸ்லீம் பிரச்சினை என்று பார்க்கவில்லை, ஏனெனில் மற்ற இடங்களில் இந்துக்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இங்கு, முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன என்று ஆராயும் நோக்கில் அல்சப்படுகிறது. முன்பு 2007ல் இக்பால் மற்றும் ஜாபர் என்ற இரண்டு மந்திரவாதிகள் இதே மாதிரி எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். விவரம் இதோ:

உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை[9] (ஏப்ரல் 2007): பெற்ற மகனையே நரபலி கொடுப்பதற்காக அமராவதி ஆற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். உடுமலை அருகே சோழமாதேவியை சேர்ந்த முகம்மது அலி மகன் முகம்மது இக்பால் (32). மாந்திரீகம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இதே பகுதியில் வசிக்கும் மாந்திரீகர் ஜாபருடன் சேர்ந்து மாந்திரீகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதனால், இக்பால் மனைவி ஜமீலா தனது சொந்த ஊரான கேரளா மாநிலம் சோலக்கரைக்கு சென்றுவிட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து திண்டுக்கல்லில் அமைதியாக குடும்பம் நடத்தினார். இந்நிலையில், இவரின் மகன் ஆரீப்கான் (3) பிணமாக அமராவதி ஆற்றில் மிதந்தார். இச்சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, குழந்தையின் தந்தை முகம்மது இக்பால் மற்றும் மாந்திரீகவாதி ஜாபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதில், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.

மந்திரசக்தி பெற குழந்தை நரபலி: கொலை நடந்த அமராவதி ஆற்றுக்கு முகம்மது இக்பாலை போலீசார் அழைத்து சென்று, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து கேட்டனர். அப்போது, ஜாபர் முதலில் குழந்தையை ஆற்றுக்கு அழைத்து வந்ததை மட்டும் கூறியுள்ளார். பின்னர், குழந்தையை பாறை மீது அமரவைத்து தண்ணீருக்குள் தள்ளியதாகக் கூறியுள்ளார். போலீசார் கூறும் போது, “அதிக மாந்திரீக ஈடுபாடு காரணமாக கொலை நடந்துள்ளது. முகம்மது இக்பால் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. பிரேத பரிசோதனையிலும், குழந்தை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கொலைக்கான காரணம், கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விரைவில் தெரியவரும்’ என்றனர்.

முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகள் மாயமாகும் மர்மங்கள் (ஆகஸ்ட் 2009): குறிப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காணோம் என்றுதான், இந்த நரபலி செய்திகளில் தெரிய வருகின்றன. ஆகையால், அத்தகைய நரபலி கூட்டம் அல்லது, அத்தகைய எண்ணம் உள்ளவர்கள் தமகேற்ற முறையில்தான், “பலி ஆடுகளைத்” தேடிப் பிடிக்கின்றனர், என்று தெரிகின்றது.

கீழக்கரையில் குழந்தை மாயம்

First Published : 02 Aug 2009 01:21:23 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid…………… %8D

Last Updated :

கீழக்கரை, ஆக. 1, 2009: கீழக்கரையில் இரண்டு வயதுக் குழந்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த அஹமது முர்சலீன் மகன் முஹம்மது நபில் (2). சம்பவத்தன்று, இந்தக் குழந்தை வீட்டுமுன்பு மதியம் 1.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்ததாம்.

பின்னர், சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து, பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல், கீழக்கரை காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து கொண்ட போலீஸôர், குழந்தையை தேடி வருகின்றனர்.

நீதிமன்றங்கள் இவ்வழக்ககுகளை அலட்சியமாகவே தீர்ப்பளித்து முடிக்கின்றன[10] (ஜூன் 2010): மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன் மூன்று மாத குழந்தை மாயமான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, பைசல் செய்தது. குழந்தையை அடையாளம் தெரிந்து கண்டுபிடிக்க இயலாது எனவும் கருத்து தெரிவித்தது. நாகபட்டினத்தை சேர்ந்த விஜயா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: “எனக்கு ஒரு பெண், மூன்று மாத ஆண் குழந்தை இருந்தது. என் தாயாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஒரு மனநல காப்பகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக நான், குழந்தைகளுடன் அங்கு தங்கியிருந்தேன். 1996 செப்., 20ம் தேதி அங்கு படுத்திருந்த போது, என் ஆண் குழந்தையை காணவில்லை. அங்கு பணிபுரிந்த ஜஹாங்கீர் உட்பட சிலர் கடத்தியிருக்கலாம். ஏர்வாடி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. என் குழந்தையை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்”, என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், ஏ.ஆறுமுகச்சாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அழகுமணி, அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் டேனியல் மனோகரன் ஆஜராயினர். நீதிபதிகள், மூன்று மாத குழந்தை காணாமல் போயுள்ளது. அப்போது, அக்குழந்தையின் ஒரு போட்டோவை கூட மனுதாரர் போலீசாரிடம் வழங்கவில்லை. தற்போது 14 ஆண்டுகள் ஆகி விட்டன. குழந்தையை அடையாளம் காண்பது இயலாத காரியம். மனுவை நிலுவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. மனு பைசல் செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

குவாரி கும்பல் அட்டூழியம்மூன்றரை வயது குழந்தை நரபலி[11] (நவம்பர் 2008)?மதுரை நவம்பர் 20, 2008: மதுரையில் குவாரி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக மூன்றரை வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரையை அடுத்தள்ள புது தமரைப்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் ரவி. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது மூனறரை வயது மகள் கோபிகா எல்.கே.ஜி. படித்து வந்தாள். அவள் எனது வீட்டு முன்பு கடந்த செப்டம்பர் 6 ம் தேதி அன்று விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் திடீரென காணாமல் போனாள். அவளை பல இடங்களில் தேடியும் காணவில்லை. மறு நாள் நாட்டாமங்கலம் கால்வாயில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாள். கோபிகா காணாமல் போன நாட்கள் முதல் எனது வீட்டு அருகில் வசிக்கும் ரவி என்பவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. தொடர் விசாரணை செய்தபோது, எனது குழந்தையை ரவி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதும், குவாரி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக எனது மகள் கோபிகாவை சிலருடன் இணைந்து நரபலி கொடுத்ததும் தெரியவந்தது. எனது மகள் இறந்த இடத்தில் 30 வது நாளில் சிலர் அந்த இடத்தில் பூஜைகள் நடத்தியுள்ளனர்”, என்று புகார் கொடுத்தார்.

நீதிபதி கே.என். பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது (2008): ஆனால், இந்த சம்பவத்தில் கோபிகா மாருதி வேனில் அடிபட்டு இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்துள்ளனர். இதன்மூலம் உண்மையை மறைக்க போலீசார் முயல்கின்றனர். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி கே.என். பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரம் தள்ளி வைத்தார் (அதற்குப் பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை). மதுரை அருகே கீழவளவு பகுதியில் இருந்த பல குன்றுகளையும் மலைகளையும் குவாரி கும்பல் சுரண்டி சுரண்டி தரைமட்டமாக்கிவிட்டனர். இப்போது மலைகள் இருந்த இடத்தில் பெரிய பள்ளம் தான் உள்ளது. தரைக்கு அடியிலும் இப்போது சுரங்கம் தோண்டி கிரானைட்டையும் மார்பி்ள் கற்களையும் எடுத்து வருகின்றனர். இதனால் எல்லா கட்சி கரை வேட்டிகளுக்கும் கொழுத்த லாபம்.

கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு[12] (அக்டோபர் 2009): சேலம், அக். 7, 2009:   சேலம் அருகே கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது காரிப்பட்டி. இங்குள்ள ஒரு ஓடையின் அருகில் தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதை அப்பகுதி வழியாகச் சென்ற சிலர் கண்டனர். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி கணேசமூர்த்திக்கு அவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். பிணமாகக் கிடந்த குழந்தைக்கு சுமார் 2 வயது இருக்கும். உடலில் இடது கை முழுமையாகவும், வலது கையில் மணிக்கட்டு வரையும் காணவில்லை. இதேபோல் இடுப்புக்கு கீழே கால்கள் எதுவும் இல்லை. குழந்தை இறந்து 3 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது ஆணா பெண்ணா என்பதையும் கண்டுபிடிக்க இயலாத நிலையில் இருந்தது.

போலீசாரிடம் புகார்: குழந்தையின் உடல் கிடப்பது குறித்த தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சேலத்தில் இருந்து மோப்ப நாய் அர்ஜூனும் கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இப்பகுதியில் காலைக்கடன் கழிக்க வந்த பொதுமக்கள் சிலர், துர்நாற்றம் வீசியதை வைத்து குழந்தையின் உடல் கிடப்பதைக் கண்டுள்ளனர். குழந்தை இறந்து அநேகமாக 36 மணி நேரம் ஆகியிருக்கலாம். குழந்தைக்கு 2 வயதுக்குள் இருக்கும். உடல் அழுகத் தொடங்கியதால் கை, கால்கள் சிதிலமடைந்திருக்கலாம். இருப்பினும் நரபலி கொடுப்பதற்காக கை, கால்கள் வெட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வெட்டப்பட்டதாக கூறப்படும் கை, கால்களையும் தேடி வருகிறோம். இந்த குழந்தையின் உடலை வேறு பகுதியிலிருந்து இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம்”, என்றார் மயில்வாகனன்.

மக்கள் சொல்வது நரபலி, போலீஸார் சொல்வது வேறு: சம்பவம் நடைபெற்ற காரிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது. மேலும் சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஓடைக்கு சற்று தொலைவில் மயானம் உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட உடலை நாய்கள் கடித்து வெளியே கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த மயானத்தில் சமீபத்தில் உடல்கள் எதுவும் அடக்கம் செய்யப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். முனியப்பன் கோயிலின் மிக அருகில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்ததால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல் கிடப்பது குறித்து காலை 9.30 மணிக்கே காரிப்பட்டி போலீஸôருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் 11.45 மணியளவில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து மாலை 4 மணி வரையிலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. குழந்தையின் உடலுக்கு ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டுமே காவலுக்கு இருந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு மேல் தான் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.


[1] தினமலர், மதுரையில் காணாமல் போன குழந்தை ஏர்வாடியில் கொலை, ஜூலை 24,2010, மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைத்தளத்தைப் பார்க்கவும்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46417

[2] தினமலர் மற்றொரு பதிப்பில் இவ்வாறு உள்ளது: “இது குறித்து கோரிப்பாளையம் போலீசில் ஜூலை 2ம் தேதியன்று புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த கோரிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபுர் (30) என்பவரை கைது செய்தார்”.

[3] தினமலர், மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : தூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப்பு, ஜூலை 24,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46480

[4] தினத்தந்தி, திருடிச்சென்று நரபலி கொடுத்தார் ஒன்றரை வயது குழந்தையின் தலையை துண்டித்து குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது, http://www.dailythanthi.com/article.asp?NewsID=582561&disdate=7/25/2010

[5] முஸ்லீம் உலகத்தில் இது எல்லொருக்கும் உள்ள நம்பிக்கையாகும். சமாதிகளுக்கு / தர்காக்களுக்கு செல்வதே அதற்காகத்தான்.

[6] தினகரன், தம்பதியர் வெறிச்செயல் மதுரை தர்காவில் இருந்து குழந்தையை கடத்தி நரபலி, http://www.dinakaran.com/crimedetail.aspx?id=11252&id1=11

[7] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46417

[8] http://www.inneram.com/201007249491/child-murder-at-madurai

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=5432

[9] தினமலர், உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை, 24.04.2007

[10] தினமலர், ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை மாயமான வழக்கு பைசல்; ஐகோர்ட் கிளை உத்தரவு, ஜூன் 12,2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17785

[11] குவாரி கும்பல் அட்டூழியம்-மூன்றரை வயது குழந்தை நரபலி?

http://thatstamil.oneindia.in/news/2008/11/20/tn-child-sacrified-near-madurai-by-quary-miners.html

[12] தினமணி, கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு , First Published : 08 Oct 2009 04:07:07 AM IST; Last Updated : 08 Oct 2009 08:52:52 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid………………. %81