Posted tagged ‘ஏதிர்ப்பு’

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனர் என்றால், ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும், போலீசில் கூட பாதிக்கப் பட்ட மனைவிதான் புகார் கொடுத்தார் என்றால், கணவன் என்ன செய்து கொண்டிருந்தார்?

மே 1, 2014

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனர் என்றால்,  ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும், போலீசில் கூட பாதிக்கப்பட்ட மனைவி தான் புகார் கொடுத்தார் என்றால்,  கணவன் என்ன செய்து கொண்டிருந்தார்?

Sonia Imam secularism 2014

Sonia Imam secularism 2014

பிஜேபி சிறுபான்மை பிரிவினரைச் சேர்ந்த முஸ்லிம் மனைவி: ஜார்க்கண்ட் மாநிலத்தில்,  மஸ்மனோ கிராமத்தில்  [Masmano village under Chanho police station]  பாரதிய ஜனதாக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சோனிதப்பாசும் [Soni Tabbasum] முஸ்லீம் பெண்ணை  12  பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[1] என்று செய்தி வெளிவந்தாலும்,  உடனே இதனை அமுக்கத்தான் ஊடகக்காரர்கள் மற்றவர்கள் முயல்கிறார்கள் என்று தெரிகிறது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30 வயதான முஸ்லீம் பெண் ஒருவர் பா.ஜ.க.வின் சிறுபான்மை / முஸ்லிம் பிரிவில் முக்கிய பொறுப்பில், துணைத் தலைவராக உள்ளார்[2]. இவர் பிஜேபியை ஆதரித்துப் பேசிவந்து,  அக்கட்சிக்காக ஓட்டுசேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்[3].  இப்பொழுதைய தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் பொதுவாக பிஜேபியை,  குறிப்பாக மோடியை எதிர்த்து வருகின்றனர். சோனியா முஸ்லிம் தலைவர்களை சந்தித்தப் பிறகு, தில்லி இமாம் போன்றவர்கள் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க கோரிக்கை விடுத்துள்ளார்[4].  இருப்பினும்,  பிஜேப்பிக்கும் சில முஸ்லிம்கள் ஓட்டளிக்க உள்ளதாகத் தெரிகிறது.

 

ராஞ்சி கற்பழிப்பு முஸ்லிம் பெண்

ராஞ்சி கற்பழிப்பு முஸ்லிம் பெண்

முஸ்லிம் கணவனக்கு முன்னே, முஸ்லிம் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனனர் என்ற குற்றச்சாட்டு: இந்நிலையில் தான் இத்தகைய கொடுமையான நிகழ்ச்சி 27-28 ஏப்ரல் நடுஇரவில் நடந்தேறியுள்ளது.  சம்பவத்தன்று தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென்று உள்ளே புகுந்த 12 க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் அவரது கணவரை அடித்து கட்டிப்போட்டதுடன், 13 வயதான மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர், அதாவது பலாத்காரம் செய்ய முனைந்துள்ளனர்.  பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் அந்த பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்[5]. இச்சம்பவம் குறித்து அப்பெண் சான்ஹோ போலீஸ் ஷ்டேசனில் (ராஞ்சியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது) புகார் அளித்துள்ளார்[6]. அதுமட்டுமல்லாது ரூ. 30,000/- ரொக்கம் மற்றும் ரூ. இரண்டு லட்சம் மதிப்புள்ள நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்று புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது[7].  அந்த 12 பேரும் முஸ்லிம்கள் தாம்! ஆனால், ஜார்கென்டிலிருந்து வெளிவரும் நாளிதழ், 20-22 ஆட்கள்ஆயுதங்களுடன்வீட்டினுள்நுழைந்து, அட்டகாசம்செய்தனர். என்று மேலும் விவரங்களைக் கொடுக்கிறது[8]. அங்கு நிறுத்தப்பட்டிருந்த புதிய காரையும் கொளுத்தியுள்ளனர்[9].  இன்னொரு நாளிதழ் 20 பேர்  என்கிறது[10].

 

ரேப்பிற்கு தூக்கு என்பதை எதிர்ப்பவர்கள்

ரேப்பிற்கு தூக்கு என்பதை எதிர்ப்பவர்கள்

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனனர் என்றால்,  ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும்?: 12 முஸ்லிம்கள், ஒரு முஸ்லிம் பெண்ணை இவ்வாறு கற்பழித்துள்ள போதிலும், எந்த முஸ்லிம் தலைவரும் இதனைக் கண்டிக்காதது வேடிக்கையாக உள்ளது.  அதை விட விசித்திரம் என்னவென்றால், அந்த பெண்ணின் கணவன் தனக்கு முன்னாலேயே, தனது கைகளைக் கட்டிப்போட்டு 12 முஸ்லிம்கள் கற்பழித்துள்ளனர் எனும்போது, அவருக்கு ஏன் கோபமே வரவில்லை,  எதிர்க்கவில்லை, அல்லது கொதித்தெழ வில்லை, போலீசாரில் புகார் கொடுக்கவில்லை. மேலும், தனது மகளையும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.  அவர்களைக் கண்டு பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்றேல்லாம் நினைக்கும் போது புதிராக, மர்மமாக இருக்கின்றன.

 

உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் அப்பெண்ணிற்கு எதிராக செயல்பட்டது: “ஐந்து வருடங்களுக்கு முன்பு முந்தைய காங்கிரஸ் எம்பி ராமேஸ்வர் ஓரான் மற்றும் மந்தர் எம்.எல்.ஏ பந்து திர்கி என்னை காங்கிரஸ் கட்சியில் சேரச் சொன்னார்கள். ஆனால், நான் அவ்வாறு சேராதலால் அவர்கள் எப்பொழுதுமே எனக்கு எதிராக இருந்து வருகிறர்கள். இருவர்க்கும் இப்பகுதியில் அதிகமான செல்வாக்கு உள்ளது. ஆனால், நான் பிஜேபியில் இருந்து கொண்டு, அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து வருகிறேன். நான் இந்த சான்ஹோ பகுதியில், பெருமளவு முஸ்லிம்களை பிஜேபிக்கு ஓட்டளிக்குமாறு ஊக்குவித்து வருகிறேன்.  குறிப்பாக நரேந்திர மோடிக்கு ஓட்டளிக்குமாறு ஆதரித்து பேசி வருகிறேன். ஒருவேளை, இதுவும் காரணமாக இருக்கலாம்”, என்று பாதிக்கப்பட்ட அப்பெண் கூறுகிறார்[11].

 

பிஜேபி தலைவர்கள் வந்து ஆறுதல் கூறியது: உள்ளூர் பிஜேபி தலைவரும், அப்பெண் முஸ்லிமாக இருந்த போதிலும் மற்ற முஸ்லிம்களை பிஜேபிக்கு ஓட்டளிக்குமாறு ஊக்குவித்து குறிப்பாக நரேந்திர மோடிக்கு ஓட்டளிக்குமாறு ஆதரித்துள்ளர். அங்குள்ள பெண்களும் பிஜேபிக்கு ஓட்டளித்ததாக கூறிகின்றனர். இருப்பினும் அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து வருவதும் காரணமாக இருக்கலாம் என்று அப்பெண் கூறுகின்றார். பிரதீப் சின்ஹா என்ற பிஜேபி தொடர்பாளர், “இப்பெண் சிறந்த பேச்சாளி.  அவர் எப்பொழுதுமே அவர்கள் செய்யும் தவறுகளை வெளிப்படுத்திக் காட்டி வருகிறார்”.  சம்பவம் நடந்த இடத்திற்கு முந்தைய முதல்வர் அர்ஜுன் முண்டா மற்றும் இதர பிஜேபி தலைவர்கள் வந்து ஆறுதல் கூறியுள்ளனர். 24  மணி நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளர்.  போலீசார் காங்கிரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்[12]. 

 

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது:  இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.  இது குறித்து விசாரித்து வரும் போலீஸார் இதற்கு பின்னணியில் உள்ளவர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.  அரசியல் உள்நோக்கம் காரணமாக என்ற கேள்விக்கு,  இப்போது உடனடியாக எதுவும் கூற முடியாது என்று அனுராக் குப்தா போன்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்[13]. ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.என். சிங்,  “கிராமத்தவர்கள் மசூதியில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையெடுத்து அவர்கள் ஓடிவிட்டனர்”.  கற்பழிப்புக்குட்பட்ட பெண்ணின் வீடு, போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில் உள்ளது[14]. டிசம்பர்  2012ல் நடந்த நிர்பயா கற்பழிப்புக்குப் பிறகு,  இத்தகைய குற்றங்கள் கடுமையாக உணரப்பட்டு வருகின்றன.

 

மெத்தனமாக இருக்கும் உள்ளூர் போலீசார்:  ராஞ்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் 12 பேர்களையும் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால்,  அவர்கள் நாங்கள் அப்பாவிகள் என்று சொல்லியதால், போலீசார் விடுவித்துள்ளனர்[15]. போலீசார் தகுந்த ஆதாரம் இல்லாமல்,  யாரையும் கைது செய்ய முடியாது என்கின்றனர். இருப்பினும் அந்த 12  நபர்களும் எங்கும் செல்லக் கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்[16]. இதெல்லாம் முரண்பாடாக உள்ளதால்,  ஒருவேளை சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், மெத்தனமாக இருக்கிறார்கள் போலும்!

  

 

Arjun Munda visits Chanho

Arjun Munda visits Chanho

“கிராமத்தவர்கள் மசூதியில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதையெடுத்து அவர்கள் ஓடிவிட்டனர்”:  இதுதான் ஒருவேளை மதசம்பந்தம் அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுவது போலவுள்ளது. 12 முஸ்லிம்கள், ஒரு முஸ்லிம் பெண்ணை இவ்வாறு கற்பழித்துள்ள போதிலும்,  எந்த முஸ்லிம் தலைவரும் இதனைக் கண்டிக்காதது வேடிக்கையாக உள்ளது.  அந்த முஸ்லிம் கணவனும் அமைதியாக இருப்பது போல தெரிகிறது, ஏனெனில், செய்திகளில் கூட அவரது நிலையென்ன என்று தெரியவில்லை.  ஜாகென்டில்  இத்தகைய விசயங்கள் எல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. எப்படியாகிலும் அரசியல் கலந்துவிட்டபடியால், இந்நிகழ்ச்சி வேறுவிதமாகத் திரித்துக் கூறவும் முடியும். போதாகுறைக்கு தேர்தல் வேறு சேர்ந்து விட்டது.

 

© வேதபிரகாஷ்

30-04-2014

[1]http://www.dinamani.com/latest_news/2014/04/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-/article2196209.ece

[2] http://www.jharkhandstatenews.com/arjun-munda-visits-chanho/#.U2H74_QW1AI

[3] http://daily.bhaskar.com/article/ELEC-NEW-jharkhand-woman-gang-raped-for-working-with-bjp-4597175-NOR.html

[4] http://indiatoday.intoday.in/story/sonia-gandhi-meets-shahi-imam-bukhari-says-secular-votes-should-not-split/1/352562.html

[5] http://www.ndtv.com/elections/article/election-2014/jharkhand-woman-claims-she-was-gang-raped-for-working-with-bjp-515684

[6] http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[7]The victim in Monday’s assault also alleged the attackers fled with 30,000 rupees (R5,265.84) in cash and jewellery worth over 200,000 rupees.

http://www.timeslive.co.za/world/2014/04/29/muslim-claims-she-was-gang-raped-for-supporting-hindu-nationalists

[8] http://www.avenuemail.in/miscellaneous/dacoits-rob-property-worth-lakhs-bjp-leaders-house/40963/

[9]ources said the husband of Soni Tabassum opened the window on hearing knocking on the door. One of the culprits pulled a rifle on him and forced the family members to open the main door. Soon the culprits entered the house and ran riot for hours. They vandalized many household goods and also assaulted the family members. They also beat up Tabassum on being shown resistance.

http://www.avenuemail.in/miscellaneous/dacoits-rob-property-worth-lakhs-bjp-leaders-house/40963/

[10] http://www.in.com/news/current-affairs/ranchi-local-leader-of-bjps-minority-cell-gangraped-by-at-least-20-men-52704743-in-1.html

[11] “Five years ago, I was offered by Congress former MP Rameshwar Oraon to join the party and Mandar MLA Bandhu Tirkey also offered me to join. Because I did not join the Congress or Tirkey’s party they are always against me. The two hold influence in the area. But I continued to work for the BJP and oppose the wrongdoings of local leaders. I have motivated a large number of Muslims in Chanho to vote for the BJP and BJP prime ministerial candidate Narendra Modi. I think the incident might be linked to it,” the victim claimed.

http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[12] BJP spokesman Sinha said that the administration and police are supportive of the Congress which is running the government in Jharkhand.

http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[13]தினமணி, பாஜகவிற்குஆதரவாகபிரசாரம்மேற்கொண்டமுஸ்லீம்பெண்ணைபலாத்காரம்செய்தகொடூரகும்பல், By Web Dinamani, ராஞ்சி, First Published : 29 April 2014 04:45 PM IST

[14] An investigation from all angles is on and it is very difficult at present to say the exact reason behind the incident,” Mr Gupta told news agency AFP. Police inspector TN Singh in the police station closest to woman’s home said villagers had used the loudspeaker of the mosque to alert others to the assault, after which the attackers fled.

[15] he police had interrogated all accused who appeared at the police station on Monday and let them go as they all pleaded innocence. There is no fresh lead available with the police in connection with the case.

http://www.dailypioneer.com/nation/bjp-firm-on-action-in-ranchi-gang-rape-case.html

[16] We cannot arrest anyone unless concrete evidence is available,” said SP (Rural) SK Jha. Notably, 12 named accused, who appeared before the police on Monday had been released with some restrictions. The investigation circles around various angles, sources said. The victim had also accused assailants of beating her husband and misbehaving with her 13-year-old daughter besides setting a vehicle on fire and fleeing with cash and jewellery.

http://www.dailypioneer.com/nation/bjp-firm-on-action-in-ranchi-gang-rape-case.html