Posted tagged ‘எரிப்பு’

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

ஏப்ரல் 25, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

Aligarh கில்லிங் 2

அலிகர் பல்கலைக்கழகத்தின் சித்தாந்த நிலைப்பாடும், மாணவர்கள் பிளவுப்பட்டிருக்கும் நிலையும்: உபியின் அலிகர் நகரில் அமைந்துள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம், முஸ்லிம்கள் கல்வி நிறுவனம் ஆகும். சமீபத்தில் இது “சிறுபான்மையினர்” பல்கலைக்கழமாகக் கருத முடியாது போன்ற செய்திகள் வெளி வந்தன. பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் சிந்தனைகள் கொண்ட கல்வி நிறுவனமாக உள்ளது. இர்பான் ஹபீப் (Hirfan Habib) போன்ற இடதுசாரி, “மார்க்சீய சரித்திவியல் சிந்த்தாந்தம்” (Marxist ideology) கொண்ட சரித்திராசிரியர்களின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. “இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ்” (Indian History Congress) நடக்கும் பொழுது, “அலிகர் ஹிஸ்டாரியன்ஸ் போரம்” (Aligarh Historians Forum) என்ற பெயரில் அம்மாநாடு நடந்து கொண்டிருக்கும் போதே, இணையாக கருத்தரங்களம் நடத்தி தங்களது “மார்க்சீய” சரித்திர-வரைவியல் முறையை (Marxist historiography) திணித்து வருகின்றனர். இவ்வாறு, இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் மார்க்சீயம் இரண்டும் சேர்வதால், படிக்கும் மாணவர்களில் சித்தாந்த ரீதியில் பிளவு ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் அடிக்கடி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது, ஆர்பாட்டம் நடத்துவது, முஸ்லிம்களின் உரிமைகள் என்று கூட்டங்கள் போடுவது முதலியவை நடந்து வருகின்றன. மத்திய பல்கலைக்கழகமான இங்கு சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

amu-story-vehicles burnt முஸ்லிம் மாணவர்களுக்கு இடையே கோஷ்டி பூசல், சண்டை, தகராறு: உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், வன்முறை வெடித்தது[1]. இதில், முன்னாள் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்[2]. உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக, மாணவர் விடுதியில், முன்னாள் மாணவர்கள் பலர் விதிமுறைகளை மீறி தங்கியுள்ளனர்[3]. இதுதவிர, இரு மாணவர் கோஷ்டிகளுக்கு இடையில் பல்வேறு காரணங்களால் விரோதம் நிலவி வந்தது[4].  அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்கள் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவு மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. இது தவிர இந்நிலையில் சனிக்கிழமை  இரவு (22-04-2016), இரு பிரிவு மாணவர்களும் பயங்கரமாக மோதினர்[6]. அப்போது, வளாகத்துக்குள் உள்ள”மும்தாஜ்’ என்ற பெயரிலான மாணவர் விடுதியில்  மோசீன் இக்பால் என்ற மாணவர் ஒருவரின் அறையை (எண்.12), மற்றொரு பிரிவினர் தீ வைத்து எரித்தனர்;  தாளாளர் அறை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மாணவர்கள் தீ வைத்து எரித்தனர்[7]. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் எரிக்கப்பட்டன[8]. தாளாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 28,000 மாணவர்களின் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கும் விவரங்களிலிருந்து, அவற்றை மீட்டு விடலாம் என்று நம்புகின்றனர்[9]. இதையடுத்து, இங்கிருந்து உயிர் தப்பிய பல்கலைக்கழகத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரியிடம் மோசீன் 9.30 அளவில் புகார் அளிக்கச் சென்றார். அப்பொழுது பைக்குகளில் சுமார் 30-40 மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர்[10]. அப்போது, அந்தச் செய்தி வெளியே பரவியது. இதையடுத்து, ஆஸம்கர் நகரைச் சேர்ந்த மாணவர்களும், சம்பல் நகரைச் சேர்ந்த மற்றொரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். காஜிப்பூர் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்[11]. 30 முறை துப்பாக்கிகள் சுடப்பட்டன என்று குறிப்பிடப்படுகிறது[12].

amuviolence தீவைப்பு

A burnt building of Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கி சுடும் வேலையை மாணவர்கள் எப்படி செய்தார்கள்?: இப்படித்தான் – அதாவது, மேலே குறிப்பிட்டப்படி, ஊடகங்கள் பொதுவாக செய்திகளில் சொல்லி வருகின்றன. மற்ற விசயங்களுக்கு “புலன்-விசாரணை ஜார்னலிஸம்” என்று எல்லா விசயங்களும் எங்களுக்குதான் தெரியும் என்பது போல புட்டு-புட்டு வைக்கும் ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிடுவது தமாஷாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிகளை வைத்து சுட்டுக் கொண்டனர் என்றால், படிக்கும் மாணவர்களிடம் எப்படி துப்பாக்கிகள் வந்தன? போலீஸார் அதைப் பற்றி ஏன் விவரங்களைக் கொடுக்காமல் இருக்கின்றனர்? ஹைதராபாத் மத்திய பல்கலை, ஜே.என்.யூ, புனே பிளிம் இன்ஸ்டிடுயூட் என்றேல்லாம் வரும் போது, நேரிடையாக சென்று, மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் பேட்டிக் கண்டு விவரங்களை அள்ளி வீசினவே? இப்பொழுது அவ்வாறு ஏன் செய்யவில்லை? யார் தடுக்குகிறார்கள்? மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள் என்றால், எண்களை வைத்து யார் என்று கண்டுபிடிக்கலாமே? உள்ளே நுழையும் போது, செக்யூரிடியில் அவ்விவரங்கள் பதிவாகி இருக்குமே? சரி, உள்ளே நடக்கும் நிகழ்சிகளை கண்காணிக்க வைத்துள்ள கேமராக்கள் என்ன விவரங்களைக் கொடுக்கின்றன?

rk24amuviolence1

Policemen stand next to the blood stains at Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கிப் பிரயோகம் மாணவர்களல் நடத்தப் பட்டது: இந்நிலையில் சில மாணவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் துப்பாக்கியால், ஒருவருக்கு ஒருவர் சுட்டதில், முன்னாள் மாணவர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் காயம் அடைந்தனர். தமிழ்.இந்து, “அப்போது அங்கும் வந்த அந்த மாணவர் கோஷ்டி புகார் செய்ய வந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் குண்டுபட்டு படுகாயம் அடைந்தனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸும் இதனை “கேம்பஸ் கன்பைட்”, அதாவது வளகத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டை என்றெ குறிப்பிட்டுள்ளது[13]. ஆனால், தினத்தந்தி, “அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.” செய்தி வெளியிட்டுள்ளது[14]. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களின் வன்முறையை கட்டுப்படுத்த முதலில் கண்ணீர் புகை வீசினர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்[15]. இதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த கலவர சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பலியானவர் பெயர் மெஹ்தாப் / மக்தாப்[16]. இவர், பல்கலைக்கழகத்தில் இருந்து, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட மாணவர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

© வேதபிரகாஷ்

25-04-2016

[1] மாலைமலர், உத்தரப்பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் கலவரம்துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி, பதிவு: ஏப்ரல் 24, 2016 11:19

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/24111926/1008139/Clash-between-two-student-groups-in-AMU-one-killed.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, By: Jayachitra, Updated: Sunday, April 24, 2016, 10:43 [IST]

[4] தமிழ்.இந்து, அலிகர் பல்கலை. மாணவர் கோஷ்டி மோதலில் இருவர் பலி; பதற்றம்: மத்திய பாதுகாப்பு படை குவிப்பு, ஆர்.ஷபிமுன்னா, Published: April 24, 2016 14:16 ISTUpdated: April 24, 2016 18:13 IST.

[5] http://tamil.oneindia.com/news/india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-252013.html

[6] தினமலர், அலிகார் பல்கலையில் வன்முறை:முன்னாள் மாணவர் படுகொலை, ஏப்ரல்.24. 2016.20.02.

[7] நியூஸ்7.தமிழ், பல்கலைகழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் பலி, Updated on April 24, 2016; http://ns7.tv/ta/fight-among-students-university-and-student-died.html

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508546

[9] http://indiatoday.intoday.in/story/violence-in-amu-campus-2-students-killed-in-gun-battle-28000-student-records-gutted-in-fire/1/650495.html

[10] http://indianexpress.com/article/india/india-news-india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-2767734/

[11] Sources in the university told The Hindu at the clash was between students from Ghazipur, Sambhal and Azamgarh. “The tension between students and former students belonging to Sambhal, Azamgarh and Ghazipur has been simmering for quite some time now. And the violence which we saw on Saturday was result of an ongoing war of ego between these warring groups of regional students,” said a university official.

http://www.thehindu.com/news/national/other-states/exstudent-killed-in-amu-campus-clash/article8515953.ece

[12] At about 9.30 pm Saturday, Mohsin along with others reached the proctor’s office to lodge a complaint. “Meantime, a group of students belonging to a rival gang arrived on motorcycles. They were around 30 to 40 in number and were carrying weapons. After heated arguments, firing started from both the sides and went on for 15 minutes. At least 30 rounds were fired…we were helpless as the students were armed,” a member of the security staff, who was present at the spot, said.

[13] Indian express, Two killed in AMU campus gunfight, vehicles torched, Updated: April 25, 2016 1:53 am

[14] தினத்தந்தி, அலிகார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே மோதல்:போலீஸ் துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி , மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST

[15] http://www.dailythanthi.com/News/India/2016/04/24123829/1-killed-in-clashes-at-Aligarh-Muslim-University-proctors.vpf

[16] தினமணி, அலிகர் பல்கலை.யில் துப்பாக்கிச் சண்டை: 2 இளைஞர்கள் பலி, By அலிகர், First Published : 25 April 2016 12:31 AM IST

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

ஜூலை.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டது: ஜூன்.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று ஆம்பூர் முஸ்லிம்கள் பிடிவாதமாக இருந்தனர், புகாரும் கொடுத்தனர். அவர் கைது செய்யப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதால் தான் கலவரம் ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின[1]. ஷமீல் அகமது மரணம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் காணாமல் இருந்து, பிறகு கைது செய்யப்பட்டவுடன், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த பவித்ரா காணாமல் போனது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமத்திடம் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஜூன் 15 முதல் 18 வரை போலீஸ் கஸ்டடியில் ஷமீல் அகமத் இருந்தார்[2]. பிறகு அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர்

ஷமீல்அகமது இறப்பு, தௌவீத் ஜமாத் ஆர்பாட்டம், மார்ட்டின் பிரேம்ராஜ் மருத்துவவிடுப்பு: ஜூன்.19 அன்று ஆம்பூரில் உள்ள பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். ஜூன்.23ம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஜூன்.26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஷமீல்அகமது, சிகிச்சை பலனின்றி ஜூன் 26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் இறந்தார்[3].  தௌவீத் ஜமாத் [Thoweed Jamath] ஆட்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு கடந்த ஜூன் 27ம் தேதி ஆர்பாட்டம் செய்தனர் இதனால் ஆம்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது[4]. அன்றிலிருந்தே, மார்டின் உடல்நலம் சரியில்லை என்று மருத்துவ-விடுப்பில் சென்று விட்டார்[5]. இதையடுத்து டிஜிபி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு[6] சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது[7]. ஒருபுறம் போலீஸார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். பெண் போலீஸார் தாங்கள் எப்படி துரத்தப் பட்டனர், மானபங்கத்திற்கு உள்ளாகினர் என்றெல்லாம் கதறியபடி தங்களது அனுபவங்களை சொல்லி வந்தனர். ஆனால், மறுபுறம் இந்நடவடிக்கையும் தொடர்ந்தது.

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

ஜூன்.19 முதல் 26 வரை சிகிச்சை அளித்தது: ஷமீல் அகமது எட்டு நாட்களில், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்.

சிகிச்சை தேதிகள் மருத்துவமனை, இடம் சிகிச்சை பெற்ற நாட்கள்
ஜூன்.19 முதல் 23. 2015 வரை ஆம்பூரில் உள்ள பொது மருத்துவமனை ஐந்து நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.23  முதல் 25. 2015 வரை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவமனை இரண்டு / மூன்று நாள் நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.26. 2015 சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை அன்று மாலை உயிரிழந்தார்.

அதனால், அங்கு இவருக்கு என்ன சிக்கிச்சை அளிக்கப்பட்டது, எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான, ஆவணங்கள் இருக்கும். எதனால், இறப்பு ஏற்பட்டது என்பதையும் மருத்துவரீதியில் இவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். போலீஸ் விச்சரணையின் போது மாமனார் என்.கே. முகமது கௌஸ் [N. K. Mohammed Ghouse, father-in-law of Shamim Ahmad] தான் ஷமீம் அகமதுவைப் பார்க்க தினமும் அங்கு சென்றுள்ளதாகவும், மார்டின் ஒரு விருந்தினர் மாளிகைக்கு, ஷமீம் அகமதுவை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.  ஆனால் ஒரு பேட்டியில், ஜவஹருல்லா, மார்டின் தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினார் என்கிறார்[8].

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர் கைது - மாலைமலர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர் கைது – மாலைமலர்

ஜூலை 31ம் தேதி மான் வேட்டையாடியதாக மார்டின் பிரேம்ராஜ் கைது: ஷமீல் அகமது இறந்த விசயம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது [the summons issued by the CB CID in the case under section 176 (inquiry by a magistrate into the cause of death)[9]]. ஆனால் அவர் ஆஜராகவில்லை, நண்பர்களுடன் தலைமறைவாக இருந்தார்[10]. மருத்துவவிடுப்பில் சென்றார் என்று முன்னரே குறிப்பிடப்பட்டது. போலீஸார் அவரைத் தேடி வந்தனர்[11]. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  அழகிய பாண்டியபுரம் வனச்சரக காடுகளில் மிளா / மான் வேட்டையாடியதாக [under Section 4 of the Wildlife Act ] மார்ட்டின் பிரேம்ராஜ் (50), பணி நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டெபில் சி. கிறிஸ்டோபர்(51), டி. ஐயப்பன் (46), என். கோபாலகிருஷ்ணன் (22), முதலியோர்[12] வனத்துறையினர் உரிய வனச்சட்டதின் கீழ் ஜூலை 31ம் தேதி கைது செய்யப்பட்டனர்[13]. 40 கி இறைச்சி, மான் தோல், கொம்புகள் முதலியவற்றுடன் இரண்டு வண்டிகள், துப்பாக்கி முதலியன கைப்பற்றப்பட்டன[14]. பிறகு நாகர்கோவில் / பாளையகோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்[15]. அதில் மார்டின் பிரேம்ராஜ் தேடப்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் ஆவர்[16]. இதைதொடர்ந்து நேற்று காலை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் ஜே.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்[17]. அவருக்கு 5 நாள் காவல் அனுமதிக்கும்படி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 நாள் அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[18]. இதையடுத்து மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[19].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Delay-in-Booking-Inspector-led-to-Ambur-Clash/2015/07/08/article2908517.ece

[2] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1311782

[4]  தினமலர், ஆம்பூர் கலவர வழக்கு விவகாரம் இன்ஸ்பெக்டரிடம் 3 நாள் விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[6] http://www.deccanchronicle.com/150708/nation-crime/article/suspended-inspector-named-ambur-custody-death-absconding

[7] தினகரன், ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் குறித்து சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[8]  ராஜ்-டிவி, கோப்பியம் நிகழ்ச்சி, https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-takes-custody-of-pallikonda-inspector/article7505510.ece

[10]  தி இந்து, ஆம்பூர் கலவரத்தில் சஸ்பெண்ட் ஆன காவல் ஆய்வாளரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: வேலூர் நீதிமன்றம் உத்தரவு, Published: August 6, 2015 08:02 ISTUpdated: August 6, 2015 08:04 IST.

[11] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[12]  The Hindu, Inspector suspended over Ambur clash held for hunting deer, Updated: August 1, 2015 05:53 IST.

[13] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-to-Grill-Premraj-for-3-days/2015/08/06/article2960000.ece

[14] http://www.thehindu.com/news/national/tamil-nadu/inspector-suspended-over-ambur-clash-held-for-hunting-deer/article7487594.ece

[15] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/08/05184106/Ambur-murder-case-of-a-young-man3-days-inspectorCipiciaiti.vpf

[16] During the questioning that followed it was found that they were C Christopher (51) of Kottricode, T Iyyappan (46) of Puthukadai, N Gopala Krishnan (22) of Puthukadai all from Kanyakumari district and C Martin Prem Raj (50) of Thirukoviloor in Villupuram district, said forest officials. All the four were booked under section 9 of Wild Life Protection Act on charges of trespassing into a reserve forest and poaching a sambar deer. They were arrested and were produced at the forest court, officials added. Of the arrested four Martin Prem Raj was an inspector of police who was on the look out list of Vellore police in connection with the Ambur riots in Vellore district recently.

http://m.newindianexpress.com/tamil-nadu/511278

[17] தினத்தந்தி, ஆம்பூர் வாலிபர் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டரை 3 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி..டி. போலீசார் விசாரணை வேலூர் கோர்ட்டு அனுமதி, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 06,2015, 2:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 05,2015, 6:41 PM IST.

[18]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7506466.ece

[19] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=160119