Posted tagged ‘இஸ்தான்புல்’

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (3)?

ஒக்ரோபர் 26, 2016

 

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (3)?

muhammad-ghani-usman-and-adel-haddadi

சுபஹனி மொஹிதீன் மற்றும் மொஹம்மது கனி உஸ்மான் மிகவும் நெருங்கிய நண்பர்களாம்: சுபஹனியில் மிக்க நெருங்கிய நண்பன், லஸ்கர்-இ-தொய்பாவின் சிறந்த வெடிகுண்டு தயாரிப்பாளனான மொஹம்மது கனி உஸ்மான் [Mohammad Ghani Usman] ஆவான்[1]. இவன் பாரிஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சால்ஸ்பர்க் அருக்கில் ஆஸ்திரிய போலீஸாரால் டிசம்பர் 2015ல் கைதானான். மும்பை 26/11ல் தொடர்புள்ள உஸ்மான், அடெல் ஹட்டாட் [Adel Haddad] என்கின்ற ஐசிஸ் கூட்டாளியோடு பிரான்ஸில் நுழையும் போது பிடிபட்டான். இவர்கள் இருவரும் ஒரே படகில் கிரேக்கத் தீவான லெரோஸுக்குச் சென்றனர். அப்பொழுது, அவர்களுடன் அஹமது அல்-மொஹம்மது [Ahmed Al-Mohammed] மற்றும் மொஹம்மது அல்-மொஹம்மது [M al Mahmod] என்ற இருவரும் இருந்தனர். போலி பாஸ்போர்ட் மூலம் இவர்கள் பாரிஸில் நுழைந்தனர்[2]. அஹமது அல்-மொஹம்மது மற்றும் மொஹம்மது அல்-மொஹம்மது இருவரும் நவம்பர் 13, 2015 அன்று தங்களை ஸ்டேட் டி பிரான்ஸ் [Stade De France] என்ற இடத்தில் வெடித்துக் கொண்டனர். இப்படி தமிழக கடையநல்லூர்வாசி, இவர்கள் எல்லோருடனும் உல்லாசப் பயணம் செய்யவில்லை. ஆக, இவர்கள் எல்லோருமே ஒன்றாக பிரான்ஸில் ஜிஹாதி-குண்டுவெடிப்பு திட்டத்துடன் நுழைந்துள்ளனர்[3].

tatp-explosives-used-in-brusselsஹைதராபாதில் TATP-குண்டு-தயாரிப்பு-வெடிப்பிற்கு தொடர்புள்ள ரசாயனங்கள் பிடிபடல்: ஜூன் 29, 2016 அன்று ஹைதராபாதில் அப்துல்லா பின் அஹமது [Abdullah bin Ahmed] என்ற ஐசிஸ் ஆளின் வீட்டில் சோதனையிட்டபோது, வீட்டின் கீழறையில், மிக்க நச்சுத்தன்மை வாய்ந்த டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் [triacetone triperoxide (TATP)] என்ற வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது[4]. இதே TATP தான் பாரிஸ் குண்டுவெடிப்பிலும் உபயோகப்படுத்தப் பட்டது. 200 லிட்டர் அசிடோன், ஹைரஜன் பெராக்ஸை மட்டும் பாட்டிகளில் கந்தக அமிலம் முதலியவற்றை ஹபீப் மொஹம்மது என்கின்ற “சார்” [Habeeb Mohammad alias Sir] என்பவனிடமிருந்து வாங்கியிருந்தான்[5].  இவனுக்கு இவை எவ்வாறு கிடைத்தன, அவற்றை அப்துல்லா பின் அஹமதுக்கு ஏன் விற்றான் போன்ற கேள்விகளும் எழுகின்றன. இவையெல்லாம் நிச்சயமாக தமாஷுக்கு வாங்கி வைக்கவில்லை, ஏனெனில், இவற்றை வைத்துக் கொண்டு 40-50 IED என்கின்ற வெடிகுண்டுகள் தயாரிக்க முடியும். பிறகு, அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றனர்?

isis-linked-july-2016-arrested-26-11-link-etcமொஹம்மது இப்ராஹிம் யஜ்தானி கீழே வேலை செய்பவர்கள், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள்: இவர்கள் எல்லோருமே மொஹம்மது இப்ராஹிம் யஜ்தானி [Mohammad Ibrahim Yazdani] என்பவனின் கீழ் வேலை செய்து வருகிறார்கள்[6]. சந்தேகம் வராமல் பொதுவாக வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் ரசாயனங்களை வைத்துக் கொண்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி என்ற அத்தொழிற்நுட்பத்தை அவனிடமிருந்து தான் பெற்றனர்[7]. யஜ்தானி இந்த கலையை சிரியாவில் உள்ள ஷபி ஆர்மர் என்பவனிடமிருந்து கற்றுக் கொண்டான். இவன் தான் அர்மார் அல்லது யூசூப் அல்-ஹிந்த் [Syria-based Shafi Armar alias Yusuf Al Hindi] என்பவன். பட்கல்லில் இருந்த இவன் இப்பொழுது சைசிஸுக்காக வேலை செய்கிறான். ஜுனூத்  உல் முஜாஹித்தீன் மற்றும் அன்சுர்-உல் தௌஹீத் இல் பிலாத் அல்-ஹிந்த் போன்ற இயக்கங்களை நடத்தி, ஐசிஸுக்காகா ஆட்களை சேர்ப்பவன்[8]. பட்கல் என்பது கநாடகாவில் கடற்கரை நகரமாக இருக்கிறது. இங்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர், அவர்களில் உள்ளவர்கள் தான் தீவிரவாத செயல்களில் அதிகமாக சம்பந்தப்பட்டுள்ளனர். குறிப்பாக யாசின் பட்கல், உள்ளூரில் எளிதாக கிடைக்கும் ரசாயனப் பொருட்களை வைத்து வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் வல்லவன். எனவே அங்கிருந்த அர்மார் இத்தகைய யுக்தியை கையாண்டு வெடிகுண்டுகளை தயாரிக்கிறான் என்பதில் வியப்பில்லை. பர்பனி குழுமம் [Parbhani module] என்று நடத்தி தனது நாசவேலைகளை செய்து வருபவன். சுபஹனியும் வெடிப்பொருட்கள் வாங்கியதிலும், கேரள நண்பவர்களுக்கு கொடுத்த விவகாரங்களிலும் தான் பிடிபட்டான். கேரளாவில் உள்ள முக்கிய அரசாங்க அதிகாரிகளைக் கொல்வதற்குதான், வெடிகுண்டுகள் தயாரிக்க அவற்றை மொஹித்தீன் வாங்கினான் என்று சொல்லப்பட்டது. ஆகையால், இவர்களுக்கு இந்த ரசாயனப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன, அவற்றை வைத்துக் கொண்டு, இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் ஆராயும் போது, அவர்களது குரூரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

subahani-haja-moideenகடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள்: பட்கல்-வெடிகுண்டு தயாரிப்பு முறை இவர்கள் எல்லோரிடத்திலும் வெளிப்படுகிறது. எப்படி முன்னர் இந்தியன் முஜாஹித்தீன் முறைகள் இவர்களிடம் வெளிப்பட்டனவோ, ஐசிஸ் உருவாகியப் பிறகு, அவர்களிடம் வெளிப்படுகிறது. ஐசிஸுக்கு பணம் அதிகமாக இருப்பதால், இவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, அத்தகைய வெடிகுண்டு தயாரிப்பை செய்து வருகிறது. அவ்வகையில் உருவானது தான் “சாத்தானின் தாய்” எனப்படுகின்ற இந்த TATP-வெடிகுண்டு. இது பாரிஸில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது, ஹைதராபாத், கடையநல்லூர் தீவிரவாதிகளிடமும் வெளிப்படுகிறது. இந்த TATP-குண்டு தயாருக்கும் முறை, இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சந்திப்புகள், நாடுகள் கடந்த பயணிப்புகள், சகவாசங்கள் முதலியன அவர்களது தீவிரவாத இணைப்புகளைக் காட்டுகின்றன. இதெல்லாம் தற்கெயலாக நடந்தவை என்று சொல்ல முடியாது. முஸ்லிம் இளைஞர்களாக இருந்து கொண்டு, நாட்டுப் பற்று இல்லாமல், இந்தியாவிற்கு எதிராக சதிதிட்டம் போடுதல், வெடிமருந்து பொருட்களை சேகரித்தல், வெடிகுண்டுகள் தயாரித்தல், மலை-காடுகள் பிரதேசங்களில் வெடித்து சோதனை செய்தல், பயிற்சிபெறுதல், குண்டுவெடிப்புகள் நிகழ்த்துதல் போன்றவை தீவிரவாத-பயங்கரவாத நாசவேலைகள் செய்வதையே எடுத்துக் காட்டுகின்றன. இப்பொழுது அனைத்துல ரீதியில் செயல்படுவதால், இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-10-2016

abdelhamid-abaaoud-paris-bomb-blast-plotter

[1] The Times of India, Tamil Nadu IS jihadi’s best pal was Pakistani bombmaker, Neeraj Chauhan| TNN | Updated: Oct 25, 2016, 02:10 IST.

[2] Usman, who Indian investigators feel also needs to be investigated for the 26/11Mumbai attacks conspiracy, was caught along with another ISIS operative — an Algerian national — Adel Haddadi while they were trying to enter France for “second wave of attacks in Europe”, as claimed by authorities there. It had turned out that Usman and Haddadi had travelled on the same boat to Greek Island of Leros on October 3, 2015 on which two Paris suicide bombers – Ahmed Al-Mohammed and M al Mahmod, who blew themselves up at Stade De France on November 13, 2015, were also there. Initially Usman and Haddadi were detained by Greek authorities as they were in possession of fake Syria passports in the name of Faycal Alaifan and Fozi Brahi respectively and were taking shelter as “refugees”.

[3] http://timesofindia.indiatimes.com/india/LeTs-bomb-expert-was-the-best-friend-of-IS-jihadi-from-India/articleshow/55039440.cms

[4]  A lethal explosive triacetone triperoxide (TATP) that was used by Islamic State (IS) bombers in the Paris and Brussels attacks was found in the basement of a Hyderabad house of a member – Abdullah bin Ahmed Al Amoodi alias Fahad of the IS module that was busted by the NIA on Wednesday.29-06-2016 –  the module led by Mohammad Ibrahim Yazdani – When Fahad’s residence was raided early on Wednesday morning, the NIA team found around 200 litres of acetone, hydrogen peroxide and bottles of sulphuric acid. Interrogation of the suspects revealed that the chemicals were enough to make 40-50 IEDs and were purchased by arrested member Habeeb Mohammad alias Sir from Anantapur and Hyderabad.

http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[5]The Times of India, Explosives links Hyderabad to Paris & Brussels, Neeraj Chauhan & Bharti Jain| TNN | Jul 1, 2016, 12.40 AM IST.

[6] http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[7] Investigators said Yazdani was guided by Syria-based Shafi Armar and had procured huge quantities of acetone, hydrogen peroxide and sulphuric acid, the primary ingredients of TATP. Often termed the ‘Mother of Satan’, the explosive is easy to make in a basement lab under controlled conditions with chemicals easily available at pharmacies, hardware shops and cosmetics stores, making it a popular choice of terror groups like al-Qaida and IS.

http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[8] Armar, a resident of Bhatkal in Karnataka and former Indian Mujahideen (IM) operative, headed and recruited Indians for the IS and its regional franchisee Junood ul Khalifa-e-Hind. He had also headed Ansar-ul Tawhid fil Bilad al-Hind, which too has links with IS.

http://www.dnaindia.com/mumbai/report-cops-suspect-syria-based-parbhani-handler-could-be-im-man-2250499

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

ஒக்ரோபர் 26, 2016

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

paris-bombers-subahani-link-dec-2015

பாரிஸ் தொடர்புகளை ஒப்புக் கொண்ட சுபஹனி மொஹிதீன்: இஸ்லாமிய அரசு போராளி, தமிழகத்தைச் சேர்ந்தவன்[1], அவனுக்கு பாரிஸ் குண்டுவெடிப்பாளர்களுடன் தொடர்புகள் இருக்கின்றன என்று இப்பொழுது (அக்டோபர் 23 2016) வாக்கில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[2]. 2015 நவம்பரில் அவர்களை சந்தித்தப் பிறகு, இந்தியாவுக்கு வந்ததாகவும், அப்பொழுது ஊடகங்கள் மூலம், பாரிஸ் தாக்குதல் பற்றி அறிந்தபோது, அவர்களுடைய சந்திப்புகளை நினைவு கூர்ந்ததாகவும் சொன்னான்[3]. பாரிஸ் குண்டுவெடிப்பில் மூன்று குழுக்கள், ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் என்று ஈடுபட்டு குண்டுகளை வெடித்தும், ஏ.கே.47 துப்பாக்கிகளால் சுட்டும் 130 பேரைக் கொன்றுள்ளனர். இவர்களுக்கு – இந்த தீவிரவாதிகளுக்கு புனைப்பெயர்கள் தான் கொடுக்கப் பட்டன. மொஹம்மது அல்-பிரான்ஸிசி, அப்சலாம் அல்-பிரான்ஸிசி, என்று தான் அழைக்கப்பட்டனர்[4]. இதெல்லாம் “ஸ்லீப்பர் செல்” சித்தாந்தத்தின் படி, ஒருவரையொருவர் அறிந்து கொள்ளக் கூடாது என்ற முறையில் உருவாக்கப் பட்டதா அல்லது போலீஸாரிடம், தீவிரவாத தடுப்பு-கண்காணிப்பு குழுக்களிடம் மாட்டிக் கொண்டாலும் தப்பித்துக் கொள்ள யுக்தியாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கீழ்கண்ட பெயர்கள் வெளியிடப்பட்டன:

  1. Abdelhamid Abaaoud [main plotter] – அபதல்ஹமீது அபௌத்
  2. Brahim Abdeslam [brother of Abdelhamid Abaaoud] – இப்ராஹிம் அப்சலம் [1ன் சகோதரன்]
  3. Salah Abdeslam [brother of Abdelhamid Abaaoud]  – சலஹ் அப்துல் ரஸாக் [1ன் சகோதரன்]
  4. Aleed Abdel-Razzak [killed in bomb blast, but not a terrorist] – அலீத் அப்தல் ரஸாக் [பாரீஸ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவன், ஆனால், தீவிரவாதி கிடையாது]
  5. Omar Ismail Mostefei – ஒமர் இஸ்மயில் மொஸ்தபி.

abdelhamad-abaaooud-and-ahmad-al-mohammadபாரிஸ் குண்டுவெடிப்பு தலைவன் தான் சுபஹனி மொஹிதீனின் தலைவன் ஆவான்: NIA மற்றும் பிரெஞ்சு தீவிரவாத கண்காணிப்புக் குழு, இவ்வழக்கை ஆராய்ந்து வரும் நிலையில், NIA அவர்களை தொடர்பு கொண்டபோது, பிரான்ஸில் தாக்குதல் நடந்த போது, அப்பகுதிகளில் சுபஹனி மொஹிதீன் இருந்ததாக சொல்கிறார்கள்[5]. மேலும் பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டவன் தான் தன்னுடைய தலைவன் என்றும் கூறிக் கொண்டான்[6].  “தி ஹிந்து” “குண்டுவெடிப்பாளர்கள்” என்று பன்மையில் குறிப்பிடுகின்றது[7]. அதாவது மேற்குறிப்பிடப் பட்ட மூவரில் ஒருவன் தலைவனா அல்லது மூவருமே தலைவனா என்பதை அவன் தான் சொல்ல வேண்டும்[8]. மேலும் குண்டுவெடிப்பிலும் இவனுக்கு பங்கு உள்ளாதா இல்லையா போன்றா கேள்விகளும் எழுகின்றன. அப்படியென்றால், அவன் ஆணையின் படி அவன் இந்தியாவுக்குத் திரும்பினானா, அவனுக்கு என்ன திட்டம் கொடுக்கப்பட்டது, போன்ற கேள்விகள் எழுகின்றன. பாரிஸ் குண்டுவெடிப்பு நடந்தபோதே, தமிழகத்தைச் சேர்ந்தவனுக்கும் அந்த நிகழ்சிக்கும் தொடர்புகள் இருந்தன, தமிழகத்தைச் செர்ர்ந்த ஒருவன் அதில் இறந்து விட்டான், என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.

bilar-hadfi-and-samy-amimour-paris-bombers-deadசுபஹனி மொஹிதீன் பாரிஸில் இருந்தானா, இல்லையா என்ற சந்தேகமும் எழுகின்றது: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்பதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் நவம்பர் 2015ல் பாரிஸில் குண்டு வைத்தவர்களை இவனுக்குத் தெரிந்தது, அல்லது இவனே அப்பகுதிகளில் இருந்தது போன்றவையும் வியப்பாக இருக்கின்றன. ஆகவே, இவன் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததே ஒரு நாடகம் போன்றுள்ளது. போரில் தான் கண்ட கொடூரத்தைக் கண்டு பயந்து திரும்பி வந்தான் என்றால், அவன் தொடர்ந்தி, ஐசிஸ் உடன் தொடர்புகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. போலி பெயர், போலி பாஸ்போர்ட், தமிழக போலீஸாருக்கே, அவன் சிரியாவுக்குச் சென்றுத் திரும்பியது தெரியாது போன்ற விசயங்கள், ஒருவேளை ஆள்-மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பி வைக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது. எப்படியிருந்தாலும், இந்தியர்களை முட்டாள்கள் ஆக்கி, எமாற்றி வருகின்றனர். ஆனால், அவன் தொடர்புகள் வைத்துக் கொண்டு ஆள்சேர்த்தல், சதிதிட்டம் போடுதல் முதலியவற்றை செய்துள்ளான் என்பதிலிருந்தே அவனது பயங்காவாத-தீவிரவாத-குரூர மனத்தை வெளிக்காட்டுகிறது.

imael-omar-mostefai-salah-abdeslam-and-abrahim-abdeslamசுபஹனி மொஹிதீனை பாரிஸ் போலீஸார் விசாரிப்பார்கள்: 2015 நவம்பரில் இந்தியா திரும்பியுள்ளதாக சொல்லப்படும், மொய்தீன், பாரிஸ் தாக்குதல் தொடர்பான தகவலை செய்தியின் மூலம் தெரிந்ததாக கூறியுள்ள நிலையில், சிரியா மற்றும் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு இருந்த பகுதியில் பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிகள் உடனான சந்திப்பைப்பற்றியும் ஒப்புக் கொண்டுள்ளாதால், இதுதொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு பிரிவு பிரான்ஸ் போலீசிடம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திடமும் தெரிவிக்கப்பட்டு, விசாரணைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பெற்றபின்னர் பிரான்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பாரீஸ் தாக்குதல் தொடர்பாக பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் உள்ளடங்கிய விசாரணை நடைபெற்று வருகிறது, ஐ.எஸ். கைவசம் உள்ள பகுதியில் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்ட நேரத்தில் மொகதீனும் அங்குதான் இருந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த நவம்பரில் 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 135-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

© வேதபிரகாஷ்

26-10-2016

muhammad-ghani-usman-and-adel-haddadi

[1] Indian Express, ‘Islamic State recruit’ from Tamil Nadu knew Paris attackers tells sleuths, By: Express News Service | New Delhi | Updated: October 24, 2016 6:22 am

[2] http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/

[3] http://www.dnaindia.com/india/report-indian-isis-operative-subahani-haja-moideen-knew-paris-bombing-accused-2266706

[4] “In Mosul, he was put in a group which also had these two individuals. He knew them only by their pseudonyms which carried the suffix al-Francisi. However, when he was shown the photographs of the attackers, he recognised them,” an NIA officer said.

http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/

[5] The NIA has informed the French security officials and contacted its Embassy here, the sources said, adding this was done in case it would help in their investigation. They said that French officials could question him as well after getting the requisite court order. According to the multi-country investigation into the French terror strikes, the accused involved in the gruesome killings were in IS-controlled areas at the same time Moideen was there.

The Hindu, ‘Indian ISIS operative knew Paris bombers, NEW DELHI, October 24, 2016 Updated: October 24, 2016 01:36 IST

[6] The Times of India, Paris attacker was my leader: IS recruit from India, Neeraj Chauhan| TNN | Updated: Oct 24, 2016, 01:38 IST

[7] http://www.thehindu.com/news/national/indian-is-operative-knew-paris-bombers/article9258867.ece

[8] http://timesofindia.indiatimes.com/india/Paris-attacker-was-my-leader-IS-recruit-from-India/articleshow/55020602.cms

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது  – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

கோயம்புத்தூர் தமிழ்நாடுகேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது: இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். 03-10-2016 அன்று கேரளாவைச் சேர்ந்த ஹாஜா மொஹித்தீன் திருநெல்வேலியில் பிடிபட்டான்[1]. இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. கோயம்புத்தூரில், குண்டுவெடிப்பு நடந்து, கலவரம் ஏற்பட்ட பிறகு கூட, அங்கு, இவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பது, கவலையாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் தமிழ்நாடு-கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது என்பது போன்று தெரிகிறது.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting

சென்னை தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர்‌ என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், ‘லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது[3].

gone-for-hajj-returned-as-isis-terrorist

05-10-2016 அன்று கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜா மொஹிதீன்: இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி [K. Subuhan Abdullah (35)] அவரது மாமனார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்[4]. கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. NIA குழு திருநெல்வேலியில் தங்கியிருந்த சுபாஹினியை கைது செய்து விசாரித்தனர். அவன் சிவகாசியில் வெடி தயாரிப்பாளர்களிடமிருந்து ரசாயனப் பொருட்களை வாங்கியுள்ளான்[5]. கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 06-10-2016 அன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்[6].

mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஐசிஸ் போராளி[7]: கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றார். அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டான். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தான்[8].

%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

கடையநல்லூரிலிருந்து ஐசிஸுடன் தொடர்பு வைத்திருந்த போராளி: சபஹனி ஹாஜா மொஹ்தீன் பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தான். ஆனால், சில நாட்களில், மறுபடியும், இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டான். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளான். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து 05-10-2016 அன்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

கடையநல்லூரில் விசாரணை: அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு, காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர். கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

is-jihadi-from-tirunelveli-indian-express

வீடு, நகைக்கடை முதலிய இடங்களில் விசாரணை / சோதனை[9]: தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.  அங்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள சுபஹானி வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. சுபஹனி மனைவியின் தாய் வீடு கடையநல்லூர் புதுமனை தென்வடல் தெருவில் உள்ளது. அங்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபஹனியின் மனைவியிடம் சுபஹனி வசித்து வந்த வீட்டின் சாவியை பெற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்[10]. பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது[11]. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே [27-09-2016] அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்[12].

© வேதபிரகாஷ்

13-10-2016

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதி

[1] Indian Express, Tamil Nadu: One more person linked to ISIS arrested by NIA in Kerala, By: Express Web Desk | New Delhi | Updated: October 4, 2016 5:56 pm.

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2575458.html?pm=home

[3]  விகடன், தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்… கேரளாவில் 6 பேர் கைது, Posted Date : 18:10 (03/10/2016); Last updated : 18:10 (03/10/2016).

[4] The Hindu, NIA picks up IS suspect from Kadayanallur, Tirunelveli October.4, 2016; Updated: October 4, 2016 02:21 IST.

[5] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.

[6] http://www.vikatan.com/news/india/69109-isis-terrorists-targeted-tamil-nadu-6-arrested-in-kerala.art

[7] மாலைமலர், .எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை, பதிவு: அக்டோபர் 07, 2016 14:09

[8] http://www.maalaimalar.com/News/State/2016/10/07140918/1043769/kadayanallur-IS-extremist-investigation.vpf

[9] தினமணி, .எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை, By கடையநல்லூர் Last Updated on : 08th October 2016 08:21 AM

[10] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/oct/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2578126.html?pm=478

[11] தினத்தந்தி, கேரளாவில் இருந்து .எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 12:45 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 4:15 AM IST

[12] http://www.dailythanthi.com/News/State/2016/10/08004534/And-brought-to-trial-cupahaniyai-Kadayanallur.vpf

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக-சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – இஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழகசென்னை தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறதுஇஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

khilafat-e-rashida-is-the-only-solution

ஐசிஸ் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்ட சென்னைவாசி:  இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவிற்குள் உள்நாட்டுக் குழப்பங்களை உண்டுபண்ணும் நோக்கில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முயற்சியை முறியடித்து, தீவிரவாதிகள் ஆறு பேரை கேரளாவில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவனுக்கு தமிழகத்துடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பிறகு, சென்னையில் தங்கியிருந்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதி கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது[1].

six-arrested-02-10-201601-10-2016 அன்று பிடிபட்ட தீவிரவாதிகள்[2]: கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் கனகமலைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்[3].  முதலில் மலைமீது ஐவர் கூடியிருந்தபோது பிடிபட்டனர், பிறகு இன்னொருவன் பிடிபட்டான்.

எண் பிடிபட்டவன் பெயர், வயது தந்தை முகவரி
1 மன்சித் / உமர் அல் ஹிந்தி / முத்துக (Manseed alias Omar al Hindi 30) மஹ்மூத் மதீனா மஹால், அனியரம், கன்னூர் மாவட்டம், கேரளா.
2 அபு பஷீர் / ரஸீத் / பச்சா / தளபதி / அமீர்  (Abu Basheer 29) கோட்டைகுடிர், மஸ்ஜித் தெரு, ஜி.எம். நகர், தெற்கு உக்கடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
3 ஸ்வாலிஹ் மொஹமத் டி / யூசுப் / அபு ஹஸ்னா (26) தாஹா மொஹமது அம்பலத், வெங்கநல்லூர், செலக்கர பஞ்சாயத்து, திரிசூர், கேரளா. இப்பொழுது சென்னையில் வசித்து வருகிறான்.
4 பி. சப்வான் (30) ஹம்ஜா பூக்கட்டில்இல்லம், பொன்முன்டம் பி.ஓ, திரூர், மலப்பப்புரம் மாவட்டம், கேரளா.
5 என். கே. ஜாஸிம் (25) அப்துல்லா நங்கீலம் கன்டி, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.
6 ராம்ஷெத் நகீலன் கண்டியல் / அம்மு (Ramshad Nageelan Kandiyil 24) அஸ்ரப் நங்கீலன் கன்டியல் இல்லம், குட்டியாடி பி.ஓ, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.

 ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) போலீஸ் அதிகாரிகள் கடந்த 2ம் தேதி கைது செய்தனர்[4].  இவர்கள் 24-30 வயதுடையவர்கள். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக செய்யும் வேலைகளைத் தடுக்கும் சட்டம் முதலியவற்றின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. மூன்று மாதங்களுக்கு முன்பு, கேரளாவிலிருந்து 21 பேர் காணவில்லை என்றும், அவர்கள் ஆப்கானிஸ்தான் வழியாக சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்ஸில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது[6]. இவர்களால் அல்லது இவர்களின் கூட்டாளிகளின் மூலம் இரண்டு கேரள நீதிபதிகளுக்கு ஆபத்து என்று கேரள முதலமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது[7]. தென்னிந்தியா முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இவ்விவகாரங்கள் வெளிவந்துள்ளன[8].

Russian plane crash - ISIS claiming responsibility blowing with IED in softdrink canஅன்ஸர்உல்காலிபா கேரளா” – “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்: இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்கு சென்று, ஆனால், இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லாமல், அயல்நாடுகளுடன் விசுவாசம் கொண்டு, ஜிஹாதி மனப்பாங்குடன், தீவிரவாதத்தை மேற்கொள்வது எப்படி என்பது புதிராகத்தான் உள்ளது. உமர் அல் ஹிந்தி என்பவன் இக்கூட்டத்தின் தலைவன். இவன் “அன்ஸர்-உல்-காலிபா கேரளா” என்ற இயக்கத்தை உருவாக்கினான். “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்” [”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS)] என்று பொருளாகும். இவ்வாறு மனப்பாங்கை ஏற்படுத்துவது விஞ்ஞானம், தொழிற்நுட்பம் படிப்பதால் அல்ல, மாறாக, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிப்பதால் தான் உண்டாகிறது. என்.கே. ஜாஸிம் என்பவன் இஞ்சினியர், இவன் சிரிய அரசு ஐஎஸ்ஸுக்கு எதிராக நடத்தும் நடவடிக்கைக்களை எதிர்த்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் போட்டு வந்தான்[9]. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில், முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கவர்ந்து, தீவிரவாதத்தில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளான். முஸ்லிம் அல்லாத இளைஞர்களைக் கூட “எல்லாம் கிடைக்கும்” என்ற ரீதியில் தூண்டில் போடப்பட்டுள்ளது. இளம்பெண்கள் போன்று நண்பர்களாகி, திசைத்திருப்பும் யுக்தியும் கையாளப்பட்டது. இவையெல்லாமே, பெற்றோர், உற்றோர், மற்றோர் அறியாமல் செய்யும் காரியங்கள் அல்ல. அவரவர் வீடுகளில் சோதனையிட்டபோது, ஆவணங்கள், மிண்ணனு கருவிகள் முதலியன கைப்பற்றப்பட்டன.

tamilnadu-jihad-hi-tech-jihad-with-isisபி., பி.டெக் என்று படித்த இளைஞர்கள் தாம் இந்த தீவிரவாத அமைப்புகளில் சேருகிறார்கள்: எம். கே. ஜாசிம் (24) ஒரு எஞ்சினியராக இருந்தாலும், ஜாகிர் நாயக்கின் போதனையால் கவரப்பட்டு, பாலஸ்டைன், சிரியா போன்ற இடங்களில் முஸ்லிம்கள் கொலையுண்ட காட்சிகளை பேஸ்புக்கில் தொடர்ந்து போட்டு, பழிவாங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தான். தவிர தான் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றில் விருப்பம் உள்ளவன் என்றும் காட்டிக் கொண்டான். கன்னூரில், ஒரு மலையுச்சியில், வெடிகுண்டுகளை தயாரித்து, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டான். இருப்பினும் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. செப்டம்பர் கடைசி வாரத்தில் மன்ஸீத் கட்டாரிலிருந்து கன்னூருக்கு வந்தான். அபு பஸீர் அல்லது ரஸீத் (29) ஒரு மெக்கானிக் ஆவான். டி. ஸ்வாலி மொஹம்மது (26) சென்னையில், கிளப் மஹிந்தராவில் வேலை செய்து வந்தான். பி. சப்வான் (30), ஒரு நாளிதழில், வடிவமைப்பாளனாக வேலை செய்தான். என். கே. ஜாஸிம் (25) மற்றும் ரம்ஸீத் (24) மைத்துனர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, யாருடைய உத்தரவின் மீது வேலை செய்து வந்தார்கள். அவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்கள், சமூக ஊடக விவரங்கள் மற்ற மின்னணு சாதனங்கள் மூலம், இவ்விவரங்களை என்.ஐ.ஏ பெற்றுள்ளது.

© வேதபிரகாஷ்

13-10-2016

subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

[1] தினமணி, சென்னையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற .எஸ். பயங்கரவாதி: என்... விசாரணையில் கிடைத்த தகவல், By DIN  |   Last Updated on : 04th October 2016 10:34 AM.

[2] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/104_1_PressRelease_02.10.2016.pdf

[3] NDTV, 6 Persons With Suspected ISIS links Arrested In Kerala, Updated: October 03, 2016 07:55 IST.

[4] தினகரன், .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? கோவையில் பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை, Date: 2016-10-05@ 01:19:28

[5] http://indiatoday.intoday.in/story/kerala-nia-is-terrorism/1/778722.html

[6] http://www.ndtv.com/kerala-news/6-persons-with-suspected-isis-links-arrested-in-kerala-1469311

[7]  Intelligence agencies in Kerala have alerted the State government of a threat from an Islamic State-linked module to two High Court judges and some politicians, close on the heels of the National Investigation Agency (NIA) arresting six persons of the terror module from the State.

The Hindu, Kerala warned of IS threat to 2 HC judges, Thiruvananthapuram, October.5, 2016; Updated: October 5, 2016 01:20 IST.

[8] NIA teams along with the Kerala Police, the Delhi police and the Telangana police had launched surveillance on the movement of the accused involved in the conspiracy and, during searches, the six were arrested from Kozhikode and Kannur districts.

http://www.thehindu.com/news/national/kerala/kerala-warned-of-is-threat-to-2-hc-judges/article9185038.ece

[9] The accused, who were radicalised online, had formed a group called ”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS) on Telegram — a web-based application platform, a senior Home Ministry official told The Hindu. One of the accused, Jasim N.K. (24) — an engineer and the only one with an active Facebook account — was following Islamic preacher Zakir Naik and posted several messages against killings in Syria by the Assad regime and also about children and women killed in Palestine. His social media account also said that he was a keen follower of football and cricket and he last posted a message on May 3.

http://www.thehindu.com/news/national/isinspired-group-was-on-radar-for-4-months/article9181053.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews