Posted tagged ‘இறைதூதர்’

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் “நான்தான் கடவுள்”…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்தது – இதெல்லாம் என்ன?

ஜூலை 1, 2020

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்ததுஇதெல்லாம் என்ன?

Allowing Friend to rape his wife, 29-06-2020-NewsTM

கொரோனா காலத்தில் பெண்கள் படும் பாடு: கொரோனா காலத்தில், ஆண்களை விட அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது, தொடர்ந்து பாதிக்கப் படுவது பெண்கள் தாம்.ஆண்கள் வேலைக்குப் போகாமல், வீட்டிலேயே அடைபட்ட நிலையில், சாப்பிட்டு-சாப்பிட்டு, டிவி-பேப்பெர் பார்த்து, மொபைல் இருந்தால் வம்பு பேசிக் கொண்டு, தூங்கி விழிப்பது தான் அவர்கள் வேலை என்றாகி விட்ட நிலையில், பெண்களுக்கு பாரம் இன்னும் அதிகமாகி விட்டது. காஷ்மீர் முதல் குமரி வரை, குஜராத் முதல் மேகாலயா வரை, எல்லா இடங்களிலும் பெண்கள் கஷ்டப் பட்டு உழைத்து வருகிறாற்கள். மற்ற மாநிலங்களிலிருந்து, அத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில், அதிகமாக, பாலியல் குற்றங்கள், கற்பழிப்புகள், அவற்றைச் சார்ந்த கொலைகள் என்றுதான், அதிகமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை, ஒரு சாதாரணமான நோக்கர் கூட கண்டு கொள்ளலாம். ஆகவே, இப்பிரச்சினை ஆய்வுக்குரியது. அதிலும், மதசார்ந்த விசயங்கள் எனும்போது, ஊடகங்கள், சொதப்பி, குழப்பி, பிறகு அப்படியே அமுக்கி விடுகிறது. இப்பொழுதைய திருச்சி-பாலியல் விவகாரமும் அப்படியே 2005லிருந்து 2020 வரை தொடர்ந்துள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD

2005ல் தினேஷ் பர்வீனை காதலித்து மணந்தது: திருச்சி கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம் (41). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் முகமது பாரூக் (41) கல்லூரி காலத்தில் இருந்து நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்[1]. இதில் தினேஷ் கடந்த 2005ம் ஆண்டு பர்வீன் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷை அவரது நண்பர் ஃபாரூக் இஸ்லாமியராக மாதம் மாற்றி, அவருக்கு முகமது அஸ்லாம் என பெயர் வைத்துள்ளார்[2]. இந்த நிலையில் பர்வீனை கடந்த 2008ம் ஆண்டு முகமது அஸ்லாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முகமது அஸ்லாமின் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது நண்பரான ஃபாரூக்கை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு உன் மனைவியிடம் தான் பிரச்சனை இருக்கிறது, அதனால் அவருக்கு நான் புனித நீர் கொடுக்கிறேன் என தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நீரில் மயக்க மருந்து கொடுத்து பர்வீனை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Allowing Friend to rape his wife, 29-06-2020

நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்ததுதினமலர் கொடுக்கும் செய்தி: திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்வீன், 32. இவர், ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய அஸ்லாம், 39, என்ற எம்.பி.ஏ., பட்டதாரியை, 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார். அஸ்லாமுக்கு மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்[3]. இதை நம்பிய அஸ்லாம், மனைவியிடமும், பாரூக்கை வணங்கும்படி கூறி வந்தார்[4]. இதை பயன்படுத்தி, புனித நீர் கொடுப்பதாக, மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து, பர்வீனை, பாரூக் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ‘சிரியா போருக்கு உதவ வேண்டும்; ஜிகாத்துக்கு உதவ வேண்டும்’ எனக் கூறி, பர்வீனிடம் இருந்து, 25 சவரன் நகையையும் பாரூக் வாங்கி, ஏமாற்றி விட்டார். பிறகு இது “லவ் ஜிஹாத்” போலிருக்கிறதே? பெண்களைத் தான் குறிவைத்தார்கள் என்றால், ஆண்களையும் குறிவைப்பது போலத் தெரிகிறது. அதாவது, இப்படி திருமணம் செய்து வைத்து, போதை ஏற்றி, மூளை சலவை செய்து, பிறகு சிரியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் போலும்!

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint

2008ல் போலீஸாரிடம் புகார் கொடுத்தது, நகைகளைத் திருப்பில் கொடுத்தது: மயக்கம் தெளிந்து தனக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்ட பர்வீன் இதுகுறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார்[5]. ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது[6]. உடனே மதபோதகர் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும், கணவரின் தங்கை எவரமிடமும் கூறி கதறி அழுதுள்ளார்[7]. ஆனால் இருவரும் ஃபாரூக் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் செய்ய வேண்டும் என பர்வீனிடம் கூறியுள்ளனர்[8]. மேலும் தனிமையில் இருந்தபோது மற்றும் நிர்வாணமாகவும் பர்வீனை மதபோதகர் ஃபாரூக் புகைப்படங்களை எடுத்துள்ளார்[9]. இந்த புகைப்படங்களை காட்டி பர்வீனிடம் 25 பவுன் தங்க நகைகளை ஃபாரூக் பறித்ததாக கூறப்படுகிறது[10]. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு பர்வீன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி மதபோதகர் ஃபாரூக்கை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஃபாரூக் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint-2

படங்களைக் காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்தது: இதனை அடுத்து அந்த புகைப்படங்களை காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்[11]. இந்த நிலையில் கடந்த வாரம் நண்பன் முகமது அஸ்லாமின் மூத்த மகளிடம் மதபோதகர் ஃபாரூக் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது[12]. இதனால் ஆத்திரமடைந்த பர்வீன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் ஃபாரூக், பர்வீனின் கணவர் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது அஸ்லாமின் சகோதரி எரம், மற்றும் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவை போலீசார் தேடி வருகின்றனர். நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they located

இஸ்லாமில் ஒருவன், தன்னை இறைதுாதர், கடவுள் என்று சொல்லிக் கொண்டது: செய்திகள் இப்படி இருக்கின்றன:

  1. அஸ்லாமுக்கு (தினேஷுக்கு) மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்.
  2. பர்வீனிடம் சென்று, “நான் தான் கடவுள்” என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 30-06-2020-News DM

இங்கு தான் ஏதோ பிரச்சினை, விவகாரம் மற்றும் மர்மம் உள்ளது. தினேஷை மதம் மாற்றி கல்யாணம் செய்து வைத்தான் எனும் போது, பாரூக் மசூதி, ஜமாத் முதலியவற்றுடன் நெருக்கமாக இருக்கிறான் என்று தெரிகிறது. அதனால், தான் 2008ல் புகார் கொடுத்தபோது, போலீஸார் கண்டுகொள்ளாமல், சமரசம் செய்து அனுப்பி விட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும், அதே பாணியில் நகைபரிப்பு என்று ஈடுபடுவது, நம்புகின்றதாக இல்லை. மேலும், பர்வீன் தனது மூத்த மகளையும் பாரூக் கற்பழிக்க முயல்கிறான் என்பது, விவகாரம் வேறு மாதிரி போகிறது. இஸ்லாத்தில், அவர்களுக்கு சாதகமாக, நிறைய விலக்குகள் இருக்கலாம். ஆனால், இந்திய சமூகத்தில், எல்லோரும் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. திராவிடத்துவத்தால், ஏற்கெனவே சமூகம் சீரழிந்துள்ளது. அது சினிமாவுடன் சேர்ந்து அதிகமாகியுள்ளது, இஸ்லாமும் சேரும் போது, பயமாக, பயங்கரமாக இருக்கிறது. மாற-மாற்ற-மாற்றப்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

30-06-2020

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they lived

[1] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், ‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால்பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..!, By Selvakumar | Jun 30, 2020 11:19 AM

[2] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/trichy-woman-sexually-abused-by-husbands-friend-9-years-arrested.html

[3] தினமலர், இளம்பெண் பலாத்காரம் மதபோதகர் கைது, Added : ஜூன் 29, 2020 22:49.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2567171

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நான்தான் கடவுள்“.. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்! By Hemavandhana | Published: Tuesday, June 30, 2020, 9:59 [IST].

[6] https://tamil.oneindia.com/news/trichirappalli/woman-raped-and-two-arrested-near-trichy-389856.html

[7] தினத்தந்தி, கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவர்மதுவுக்கு அடிமையானதால் விபரீதம், பதிவு : ஜூன் 29, 2020, 09:11 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/29211115/1471683/Trichy-Husband-Wife-Issue.vpf

[9] நியூஸ்.டி.எம்.தமிழ், நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்…, By Newstm Desk | Tue, 30 Jun 2020.

[10] https://newstm.in/tamilnadu/a-clergyman-who-sexually-abused-a-friends-wife-for-several/c77058-w2931-cid747710-s11189.htm

[11] விகடன், `புனித நீர் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்!’ மதபோதகரால் நண்பரின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை, எம்.திலீபன், தே.தீட்ஷித், Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM.

[12] https://www.vikatan.com/news/crime/trichy-police-arrested-man-in-sexual-harassment-case

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

ஏப்ரல் 10, 2016

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

இறைதூதர் கருணநிதி

எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்: மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொரி ஆறுமுகம், நாகை நாகராஜன் முதலியோர் பேசினர். தீப்பொரி ஆறுமுகம் 1960களில் பேசும் அலாதியே தனிதான். மெட்ராஸ் பாஷை, கெட்ட வார்த்தை முதலியவை சரளமாக வரும். நாகை நாகராஜன் பேசும் போது, முஸ்லிம் கட்சிகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கலைஞரிடம் கூட்டு சேர்ந்துள்ளன, என்று விவரிக்க ஆரம்பித்தார். ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன், “இந்தத் தேர்தலில் தான் சிறுபான்மை இனத்திலே மிகப்பெரிய இனமான இஸ்லாமிய இனத்தின் அத்தனை அமைப்புகளும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியைப் பார்த்துநீங்கள் தான் நபிகள் நாயகத்திற்குப் பிறகு எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்,” என்று பேசியுள்ளார்[1]. இந்த வீடியோவிலும் அப்பேச்சைக் கேட்கலாம்[2]. திமுகவிடம் கூட்டு வைத்துக் கொண்டு, கெஞ்சி-கூத்தாடி அதிகமான சீட்டுகளை வாங்கிக் கொண்டுள்ளன முஸ்லிம்களின் பிளவுபட்ட கட்சிகள். ஒருவேளை வெளியில் சண்டைப் போட்டுக் கொள்வது போன்று நாடகம் ஆடி, இவ்வாறு அரசியல் செய்கின்றனரா என்று “செக்யூலரிஸ்டுகளுக்கு” தோன்றுகிறது.

நாகை நாகராஜன், கருணாநிதி, முஸ்லிம் கட்சிகள் கூட்டுமனித நேயக்கட்சி அறிவித்த கண்டனம்: கடந்த மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் பேசும் போது நபிகள் நாயகத்திற்கு பிறகு முஸ்லிம் இனத்தை பாதுகாக்க வந்த இறைதூதர் தலைவர் கருணாநிதி என்று கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது[3]. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைதூதர் வரமுடியாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்கள் முஸ்லிம்கள் . எனவே நாகை நாகராஜனின் பேச்சை பற்றி செவியுற்ற அனைத்து முஸ்லிம்களுமே வேதனை அடைந்துள்ளனர். எனவே இது தவிர்க்க பட வேண்டும், கண்டிக்க பட வேண்டும். தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேர, ஜவாஹிருல்லாஹ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக திமுக தலைமைக்கு செய்தியை புகராக கொண்டு சென்றார். மேலும் வாழும் மனிதர்களை புகழ வேண்டும் என்பதற்காக மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்காக எந்த நிலையிலும் அடிப்படை கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம். திமுக தலைமையையும் நேரில் சந்தித்து இது பற்றி புகார் அளிக்க உள்ளோம். எனவே யாரும் பதட்டம் அடையவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். என்று மனித நேயக்கட்சி தலைமையகம் அறிவித்தது[4].

கருணாநிதி இறைதூதர் - தமிழ்நாடு இமாம் கவுன்சில் எதிர்ப்பு - -7-04-2016எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு.![5]: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது.  இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது.  திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும். தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” இப்படிக்கு மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி, மாநில செய்தி தொடர்பாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு[6].

இறைதூதர் கருணாநிதி - நாகை நாகராஜன்- முஸ்லிம்கள் எதிர்ப்பு 07-04-2016போலீஸ் புகார் கொடுக்காமல் மிரட்டும் முஸ்லிம் கட்சிகள்: கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது நல்ல தமாஷாகத் தெரிகிறது. ஏனெனில், இப்படியெல்லாம் மிரட்டும் இவர்கள் போலீஸாரிடம் உரிய புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அவ்வாறு புகார் கொடுத்திருக்கலாம். வழக்குப் பதிவு செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் இப்பிரச்சினை வரும் போது, விவரங்கள் அலசப்படும் போது, பேசியது உண்மையிலேயே இந்தி சட்டங்களின் பிரிவுகளை மீறியவையா, குற்றமாகுமா, எந்த தண்டனை கொடுக்கலாம் என்று வாத-விவாதங்கள் உண்டாகும். ஆனால், அவற்றைத் தடுக்கவே முஸ்லிம் கட்சிகள் இவ்வாறி மிரட்டி அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது. மேலும், இதை பிரச்சினையாக்கினால், முஸ்லிம் கட்சிகளின் ஒதுக்கீடு காலியாகி விடும், ஒரு சீட்டுக் கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் அறிவிப்பு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டை முற்றுகை இடப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது[7]. இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீமை தொடர்பு கொண்டு கேட்டபோது,   “சமீபத்தில் தி.மு.க. பேச்சாளர் நாகராஜ் என்பவர், கருணாநிதியை இறைதூதர் என்று குறிப்பிட்டு பேசினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டுமே இசுலாமியர்கள் இறைதூ தராக நினைக்கிறார்கள்.  ஆகவே நாகராஜை கண்டிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தோம். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, இன்று (08-04-2016) மாலை நான்கு மணி அளவில் அவரது கோபாலபுர இல்லத்தை முற்றுகையிடப்போகிறோம்” என்றார்[8].

Fight among the mohammedan parties in Tamilnadu

முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்பு[9]: காலைமலர் என்ற இணைதளம், “முஹம்மது நபி அவர்களை திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் என்பவர் கலைஞருடன், இணைத்து இழிவு படுத்திய போது பொங்காத பேராசிரியர்! தன்னுடை மமக கட்சியை தீவிரவாத இயக்கம் என்று சொன்ன ஹைச்.ராஜாவை நோக்கி பொங்காத பேராசிரியர்! கலைஞரை ஜாதியை சொல்லி இழிவு படுத்திய விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட வைகோவை நோக்கி மட்டும் டிவி சேனலில் பொங்க காரணம் என்ன? நாயவான்களே! நீங்களே சொல்லுங்கே! சீட்டு, பதவிக்காக தன்னையே மறந்து செயல்படும் ஜவாஹிருல்லாஹ்வின் செயல்பாடுகள் அவரின் மோசமான அரசியலை பிரதிபலிக்கின்றது. அரசியலுக்காக கலைஞரை இவர் மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டாரோ? என்று முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்படைந்து உள்ளனர்”, என்று சாடியுள்ளது[10]. இது ஜவாஹிருல்லாஹுக்கு எதிராக செயல்படும் முஸ்லிம் கூட்டம் போலிருக்கிறது.

Karus warning to Nagai Nagarajan for comparing Mohammed and himself 08-04-2016

தி.மு.. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: “சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை[11]. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும். ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட, மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்[12]. ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் “யாகாவாராயினும் நா காக்க” என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும். நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

10-04-2016

 

[1] http://www.seythigal.com/?p=9486; https://youtu.be/Rdj8_gblPD8

[2] https://www.facebook.com/1416474845231879/videos/1695088387370522/

[3] முக்கண்ணாமலைப்பட்டி அறிவிப்பு, இறைதூதர் தலைவர் கருணாநிதி, Muckanamalaipatti, 00:38, ஏப்ரல்.2016.

[4] http://muckanamalaipatti.blogspot.in/2016/04/blog-post_88.html

[5] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[6] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[7] பத்திரிக்கை.காம், இன்று மாலை கருணாநிதி வீடு முற்றுகை: இந்திய தேசிய லீக் அறிவிப்பு, Posted by : டி.வி.எஸ். சோமு, on Friday, April 8, 2016 @ 11:03 am.

[8] https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/

[9] காலைமலர்.நெட், கலைஞரை இறைதூதர் என்று சொன்னதை ஜவாஹிருல்லா ஏற்றுக்கொண்டாரா? By Mathiyalagau, Apr 7, 2016.

[10] http://kaalaimalar.net/kalingar-javahi-is-no-comment/

[11] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am

By : Sam Kumar.

[12] http://www.tamilnewsbbc.com/2016/04/07/532916.html