இந்துக்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் இறுதி எச்சரிக்கை – இல்லையென்றால் செத்து மடிய வேண்டும் – கொலைவெறியன் ஜெயித் ஹமீத்!
இந்துக்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் இறுதி எச்சரிக்கை[1]: “இந்த செய்தி உலகத்தில் உள்ள எல்லா இந்துக்களுக்கும், பண்டிட்டுகள், சூத்திரர்கள், தலித்துகள் அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக பண்டிட்டுகள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு மொஹம்மது தான் கடைசி நபி என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்துக்கள் தங்களது புனித நூல்களை விட்டுவிட்டு இஸ்லாத்துக்கு வரும்படி அழைக்கிறோம். இந்தியாவில் உள்ள முஜாஹித்தீன் மற்றும் முஜ்ஜின்கள் இதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதுதான் அவர்களுக்கு இறுதியான செய்தியாகும்”, என்று இணைதளத்தில் வெளியிட்டுள்ளான். அதாவது, இந்துக்கள் குரானை ஏற்றுக் கொள்ள வேண்டும், முஜாஹித்தின்களுக்கு பணிய வேண்டும், இல்லையென்றால் செத்து மடிய வேண்டும் என்று அறிவித்தான்[2]. இத்தகைய வார்த்தைப்பிரயோகமே, இவன் உள்நோக்கத்துடன் பேசுகிறான் என்று தெரிகிறது. ஏனெனில், இந்தியாவில், இவனைப்பற்றி யாருக்கும் தெரியாது எனலாம், ஆனால், பிராமணர், சுத்திரர், தலித்துகள் என்றெல்லாம் பேசுவது, மக்களைப் பிரிக்க செய்யும் சதி என்றாகிறது.
ஜெயித் ஹமீதால் பாகிஸ்தானில் ஏகப்பட்டப் பிரச்சினை: உள்நாட்டிலேயே, இவன் மீது பல குற்றச்சாட்டுகள், வழக்குகள் முதலியன போடப்பட்டுள்ளன. இவன் ஐ.எஸ்.ஐயின் ஏஜென்ட், மாதம் ரூ. 6,06,500/- பெற்றுவருகிறான், பல பத்திரிக்கையாளர்கள், இஸ்லாமிய பண்டிதர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான் என்றெல்லாம் செய்திகள் உள்ளன[3]. இமாத் காலித் என்ற அவரது ஆள், பாகிஸ்தானிய ராணுவ தளபதி அஸ்பக் பர்வேஸ் கயானியை [army chief Gen Ashfaq Parvez Kayan] ஒலைசெய்ய திட்டமிட்டான் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[4]. ஜெயித் ஹமீத் மற்றும் யூசுப் கஸாப் குறிப்பிட்ட ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். தங்களை எதிர்ப்பவர்கள் எல்லோருமே மொஹம்மது நபிக்கு எதிரானவர்கள், அதனால், அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று போதித்து வருகின்றனர். ஜலால்புரி கொலைவழக்கில் எப்.ஐ.ஆரில் இவன் பெயர் உள்ளது[5]. TTP தன்னை குர்ஸான் ராணுவம் என்று கூறிக்கொள்கிறது, ஜெயித் ஹமீதோ தன்னை “கஜ்வா-இ-ஹிந்த்”தின் தலைவன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளான். மேலும், இவன் தன்னை “மஹதி” மற்றும் “நபி” என்றெல்லாம் அழைத்துக் கொண்டது, ஆசார முஸ்லிம்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜாமியா உலூம் உல் இஸ்லாமியா பினோரி டவுன் மற்றும் பினோரியா இன்டெர்நேஷனல், இவன் மற்றும் இவனைப் பின்பற்றுபவர்கள் “காபிர்கள்” என்று அறிவிக்கப்பட்டு, பத்வா 06-12-2011 அன்று கொடுக்கப்பட்டுள்ளது. இவன், மற்றவர்களைக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இவனே ரா மற்றும் யூதர்களின் ஏஜென்ட், பாகிஸ்தானிய ராணுவம் இவனை வெளிப்படுத்தி காட்டியுள்ளது என்றெல்லாம் விவகாரங்கள் உள்ளன.
பாகிஸ்தானின், “தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்” இவனது இரட்டை வேடத்தை, போலித்தனத்தை வெளிக்காட்டியுள்ளது[6].
- பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் உண்மையில் முஸ்லிம்கள் தான், அவர்கள் பாகிஸ்தானுக்குத் தான் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.
- தங்கத்தை வைத்து பணத்தை மதிப்பீடு செய்யும் முறை, யூதர்களின் சதியாகும்.
- பாகிஸ்தானில் தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்த்தியவகள் எல்லோருமே இந்துக்கள் தாம். ஏனெனில், அவர்கள் சுன்னத் செய்து கொண்டிருக்கவில்லை.
- தில்லி கோட்டையின் உச்சியில் பாகிஸ்தான் கொடி விரைவில் பறக்கும்.
- முஸ்லிம் அல்லாத நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் எல்லாம் ஒன்று வெடிக்கமுடியாமல் உபயோகமற்று விடும் அல்லது அவர்களுடைய நாடுகளிலேயே வெடித்து விடும்.
- 9/11 எப்படி மேற்கத்தைய ஜையோனிஸ திட்டத்தினால் ஏற்படுத்தப் பட்டதோ, அதேபோல, 2008 குண்டுவெடிப்பும் “ஹிந்து-ஜையோனிஸ”க் கூட்டு சதியால் ஏற்படுத்தப்பட்டது.
- ஆப்கானிஸ்தானத்தில், நஜிபுல்லாவின் உடல் எப்படி தொங்கவிடப்பட்டதோ, ந்தே போல, பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் செத்த உடல்கள், இஸ்லாமாபாதில், கொம்புகளில் தொங்கவிடப்படும்.
ஜெயித் ஹமீத் காபிர் என்றால், இந்துக்களைக் கொல் என்று எப்படி சொல்கிறான்?: ஆக, 06-12-2011 அன்று முதல், இவனே காபிர் நிலையை அடைந்த பிறகு, இவன் மற்றவர்களை “காபிர்” என்று குறிப்பிட அதிகாரம் உள்ளதா? இல்லை என்றால், யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் பத்வா கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், அதை அமூல் படுத்துவதோ, அமூல் படுத்தாததோ, அவரவர் சௌகரியம், சந்தர்ப்பவாதம் மற்றும் ஆதிக்கத்தின் தன்மையைப் பொறுத்தது என்ற நிலையில் உள்ளது என்றாகிறது. இருப்பினும், இவன் இந்துக்கள் கொல்லப்பட வேண்டும் என்ற கொலைவெறியோடு பேசிக் கொண்டிருக்கிறான். சல்மான் ருஷ்டிக்கு பத்வா போட்ட போது, பிரபலப்படுத்தி கலாட்டா செய்தார்கள். ஆனால், இவன் தன்னையே நபி, மஹதி என்றெல்லாம் கூறிக்கொண்டாலும், பத்வா போட்டு கண்டுகொள்ளமல் இருக்கிறார்கள். இருப்பினும், பாகிஸ்தான் ஒரு “இஸ்லாமிய நாடு” என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இவையெல்லாம் இஸ்லாத்தின் முரண்பாடா, முகமதியர்களின் முரண்பாடா, பத்வாக்களின் செய்ல்பாடடற்றத் தன்மையா?
சவுதி அரேபியாவில் கைது, சிறை, விடுவிப்பு முதலியன (ஜீன்–அக்டோபர் 2015): கடந்த ஜூன் மாதம் 2015ல் சவுதி அரேபியாவில் இவன் கைது செய்யப்பட்டான்[7]. ஜெயித் ஹமீத் தனிப்பட்ட முறையில் அங்கு சென்ற போது, சவுதி அரேபிய அரசாட்சிக்கு எதிராக பேசிய குற்றத்திற்காக அங்கு கைது செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டது[8]. எட்டாண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1000-1200 கசையடி தண்டனை விதிக்கப்பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது[9]. செய்திகளும் தாராளமாக வெளிவந்தன. சிலர் அவன் கொலையுண்டான் என்று கூட டுவிட்டரில் செய்தியை வெளியிட்டனர். பிறகு, அக்டோபரில் விடுவிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன[10]. பாகிஸ்தானிய பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவு அதிகாரிகள் அவனது விடுதலைக்குப் பாடுபட்டதாகத் தெரிகிறது[11]. அந்த அளவுக்கு அதிகாரிகள் அவனுக்கு ஏன் உதவ வேண்டும் மற்றும் வக்காலத்து வாங்க வேண்டும் என்று தெரியவில்லை. இருப்பினும் அவர்களது தொடர்புகள் நிரூபணம் ஆகின்றன. பதிலுக்கு அவனும் தான் நன்றாக உள்ளேன், பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து விட்டேன், என்று டுவிட்டரில் பதிலளித்தான். இதற்குக் கூட, ரா தான் காரணம் என்று டுவிட்டரில் பதிவு செய்தான்[12]. ஆனால், தான் “2×3” அறையில் வைக்கப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்டான்.
© வேதபிரகாஷ்
06-01-2016
[1] http://albakistan.com/2011/09/07/hindus-convert-to-islam-or-get-killed-zaid-hamid/
[2] http://isi-intersevicesintelligence.blogspot.in/2011/01/pakistan-army-and-isi-links-with-zaid.html
[3] Emaad Khalid who was Zaid Hamid’s Staff Officer, Media Coordinator and Personal Assistant/Accountant from 2009 to 2013, has finally decided to leave Zaid Hamid and Brasstacks. He has written a 111 page document that exposes all the dirty works of Zaid Hamid. It includes his financial & moral corruption and more importantly his anti-state agenda. Some important points from the document are: 1) Zaid Hamid receives Rs. 6,06,500 from ISI per month. 2) Zaid Hamid has a hitlist that includes prominent journalists like Hamid Mir, Najam Sethi, Nusrat Javed and scholars like Hafiz Tahir Mahmood Ashrafi. Emaad Khalid has also written about Zaid Hamid’s role in the murder of Maulana Saeed Ahmad Jalalpuri in March, 2010. 3) Zaid Hamid is instigating junior officers of Pakistan Army to stage a coup against COAS General Ashfaq Parvez Kiyani and the Federal Goverment. https://zheupdates.wordpress.com/category/exposition/page/3/
[4] http://www.dawn.com/news/1057478
[5] http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/national/zaid-hamid-named-in-jalalpuri-murder-fir-330
[6] http://tribune.com.pk/story/11701/will-the-real-zaid-hamid-please-stand-up/
[7] http://arynews.tv/en/fo-confirms-zaid-hamids-arrest-in-saudi-arabia/
[8] http://dunyanews.tv/en/Pakistan/286239-Zaid-Hamid-arrested-in-Saudi-Arabia-for-speaking-
[9] Prominent hardline commentator and self-styled ‘Defense Analyst’ Zaid Hamid has been sentenced for eight years and 1,200 lashes for criticizing Saudi government, according to circles close to Mr. Hamid and in touch with recent developments in his case.
[10] http://en.dailypakistan.com.pk/headline/zaid-hamid-released-by-saudi-arabia-back-in-pakistan/
[11] Sources close to Hamid claimed that Pakistani security agencies and foreign office officials played key in his release. Pakistan’s strong stance pushed Saudi authorities to change their mind about convicting him for the charges of hate speech. Earlier there were rumours circulating online that Zaid Hamid was possibly killed during his detention Saudi Arabia. However the family of the renowned analyst has dismissed the claims saying that “he is in good health and people should not listen to any propaganda news of his death.”
[12] http://en.dailypakistan.com.pk/headline/revealed-why-zaid-hamid-was-detained-in-saudi-arabia/
அண்மைய பின்னூட்டங்கள்