Posted tagged ‘இந்துக்களைக் கொல்வது’

இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!

மார்ச் 15, 2013

இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!

இஸ்லாமிய அடிப்படைவாதி கைது: இஸ்லாமிய வெறியர்களின் குரூரக்கொலைகளைக் கண்டும் இனி காணாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதும், இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, பங்களாதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. வியாழக்கிழமை 14-03-2013 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)] என்ற அந்த அடிப்படைவாத இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவனான, சிட்டகாங்கில் இந்துக்கள் மற்றும் கோவில்களைத் தாக்கியதற்குத் தூண்டுதலாக இருந்த ஆலம்கீர் கபீர் சௌத்ரி என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

தொடரும் குற்றங்கள்: ஜமாத்தின் இளைஞர் இயக்கமான இஸ்லாமி சத்ரா ஷிபிர் முன்னரே குறிப்பிட்டபடி பல இடங்களில் இந்துக்களைத் தாக்கி, அவர்களது, உடமைகள், வீடுகள், கோவில்கள் என்று அனைத்தையும் சூரையாடினர்[1]. போலீஸ் மற்றும் குற்றத்தடுப்பு விரைவு நடவடிக்கை படையினர் சேர்ந்து அவனை கைது செய்தனராம்[2]ளதாவது அந்த அளவிற்கு முஸ்லீம் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்று தெரிகிறது. பங்சாலி என்ற இடத்தில் நடந்த தாக்குதல்களில் 70ற்கும் மேற்பட்ட கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்துக்கள் ஆவர்[3]. 1971 குற்றங்களுக்கு ஒரு வெறியன் தண்டிக்கப்படுகிறான் என்றால், அதை வைத்துக் கொண்டு, அதே மாதிரியான குற்றங்களை முஸ்லீம்கள் செய்துள்ளனர்[4]. இந்துக்களால் அழத்தான் முடியும் போலிருக்கிறது[5]. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்[6].

இன்னும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: காஜல் தேவ்நாத், பங்களா பூஜா உட்ஜாபன் பரிஷத்தின் தலைவர், “அப்பகுதியில் இருக்கும் இந்துக்கள் இன்னும் பீதியில் தான் வாழ்ந்து வருகின்றனர். உள்ளூர் எம்.பி மற்றும் இதர முஸ்லீம்கள் அத்தகைய குரூரத் தாக்குதல்கள் நடத்த ஆதரவாக இருந்தனர். அவாமி லீக் மற்றும் முக்கிய எதிர் கட்சியான பி.என்.பி Bangladesh Nationalist Party (BNP) கட்சியினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர்”, என்று கூறியுள்ளார்[7].

இந்துக்களைப் பற்றிப் பேச யாரும் இல்லை: இந்தியாவில் ராஜ்யசபாவில் பி.ஜே.பி மட்டும் தான் இந்துக்களைக் காக்கும் படி, கோரிக்கையை வைத்தது, தாக்குதல்கள் பற்றியும் பேசியுள்ளது[8]. கோவில்கள் தாக்கப்படுவது, இன்னும் தொடர்ந்து வரவதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன[9]. இவ்வளவு நடந்தும், நடந்து கொண்டிருந்தாலும், போர்க்குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் நம்பகமாக இல்லை என்று குற்றவாளிகள் சார்பில் வாதம் புரிகின்றனர்[10].

வேதபிரகாஷ்

15-03-2013


[1] Chowdhury’s arrest came two weeks after suspected activists of Jamaat and its student affiliate Islami Chatra Shibir went on rampage at their southeastern stronghold attacking and vandalizing several houses and temples of Hindu community alongside the local government establishments.

http://timesofindia.indiatimes.com/world/south-asia/Jamaat-leader-held-for-inciting-anti-Hindus-attacks-in-Bangladesh/articleshow/18975225.cms

[2] “Police and (elite anti-crime Rapid Action Battalion) RAB teams jointly arrested Banshkhali upazila chairman Alamgir Kabir Chowdhury on charges of inciting violence against Hindu community and attack on their temples and property,” a police official in the port city of Chittagong told PTI by phone.

[3] Banskhali was one of the areas where the followers of the Hindu faith came under attacks during the recent violence which saw deaths of over 70 people, including six policemen, while several dozen Hindu temples were vandalized.

[7] “A sense of fear is still there among the Hindu community although no fresh violence was reported in the past two days … we are disappointed that the lawmakers of the (ruling) Awami League and main opposition BNP and peoples representatives at local levels are not taking initiatives for social and political resistance,” Bangladesh Puja Udjapon Parishad vice-president Kazal Debnath told PTI.

“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்

மார்ச் 3, 2013

இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்

Atrocities on Hindus - 2013

அப்பாவி இந்துக்கள் மீது தாக்குதல்கள்: 1971ல் நடந்த போர்க்குற்றங்களுக்காக, .டெலேவார் ஹொஸைன் சையிதீ என்ற தீவிரவாத ஜமாத்-இ-இஸ்லாமித் தலைவருக்குத் தூக்குத்தண்டனையளித்தப் பிறகு கலவரம் ஏற்பட்டதில் ஏற்படுத்தப்பட்டதில் நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் 28-03-2013 (வியாழக்கிழமை) அன்றுலிருந்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களாக இந்த கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

Atrocities on Hindus -2- 2013

2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள்: 1971 குரூர-போர்க்குற்றங்களைப் போலவே, இப்பொழுதும் நடந்தேறியுள்ள திட்டமிட்டத் தாக்குதலிகளில்,  ஆயிரக்கணக்கான சிறுபான்மையினரின் வீடுகள், 150 வழிபாட்டு ஸ்தலங்கள் கடந்த இரு தினங்களில் தாக்கப்பட்டிருக்கின்றன, என்று பங்களாதேசத்தின் இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் பொது செயலாளர் மற்றும் வழக்கறிஞருமான ராணா தாஸ் குப்தா என்பவர் கூறியுள்ளார். இப்பொழுது, எந்த குற்றங்களுக்காக, டெலேவார் ஹொஸைன் சையிதீ குற்றஞ்சாட்டப் பட்டு, தண்டனைப் பெற்றுள்ளாரோ, அதே மாதிரியான குற்றங்கள், இன்றும் நடக்கின்றன, அதாவது 2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள் என்று அவர் எடுத்துக் காட்டுகிறார்.

Atrocities on Hindus -3- 2013

இந்துக்கள் தாக்கப்பட்டுள்ள ஊர்கள் / இடங்கள்: சிட்டகாங், குல்னா, படிசால், நோவகாலி, கலிபந்தா, ரங்கப்பூர், சைல்ஹெட், தாகுர்காவ், பகேரெத் மற்றும்  சபைனவாப்கஞ்ச் முதலிய இடங்களிலுள்ள சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டிருப்பதாக, சிட்டகாங் பிரஸ் கிளப்பில் நடந்த கூட்டத்தில் நிருபர்களுக்கு கூறினார். ஆனால், இந்திய ஊடகங்கள் மௌனியாக இருக்கின்றன.

Atrocities on Hindus -4- 2013

ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் – தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள்: ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் முதலிய இயக்கங்களின் குரூரக்கொடுமைகளுக்காகக் குற்றஞ்சாட்டினார். சத்கானியவில் நடந்த தாக்குதல்களுக்கு சோரோடி யூனியன் பரிஷத்தின் சேர்மேன் ரெஜைவுல் கரீம் மற்றும் பன்ஸ்காளியில் நடந்த தாக்குதல்களுக்கு முனிசிபல் கவுன்சிலர்களான அபு மற்றும் சலீம் முதலியோர் மீது குற்றஞ்சாட்டினார்.

Atrocities on Hindus -5- 2013

உள்ளூர் முஸ்லீம் தலைவர்களே காரணம்: 2003ல் பன்ஸ்காளியில் சில்பாரா என்ற இடத்தில் 11 பேர் அடங்கிய ஒரு இந்து குடும்பத்தை உயிரோடு எரித்ததற்கும், மற்றும் பன்ஸ்காளியில் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தியதற்கும், அமினுர் ரஹ்மான் சௌத்ரி என்பவர் மீது குற்றஞ்சாட்டினார். அதாவது பத்தாண்டு காலமாகியும் அக்கொலையாளிகள் அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Atrocities on Hindus -6- 2013

அரசுக்கு வேண்டுகோள்: இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருக்கவும், குற்றம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்கள் மீது உரிய முறையில்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பலிகடா ஆனவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், இடித்தழிக்கப்பட்ட வீடுகள்-கோவில்களைத் திரும்பக் கட்டிக் கொடுக்கவும் அரசாங்கத்தை இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் சார்பில் கேட்டுக் கொண்டார்.

Atrocities on Hindus -7- 2013

சாம்பலாகிப் போன வீடுகள்: குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் மூன்று இரவுகளாக தூக்கம் இல்லாமல், என்ன நடக்குமோ என்று திறந்த வெளியில் ஆகாயத்தின் கீழ் உயிருக்குப் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”, என்று மினோதி ராணீ தாஸ் என்ற பெண்மணி கூக்குரலிட்டுக் கதறினார், “சந்தோஷமான குடும்பம் எங்களுக்கு இருந்தது, ஆனால் இப்பொழுது எங்களுக்கு எதுவுமே இல்லை, கூரையில்லை, உணவில்லை, சமைக்க இடமில்லை, பாத்திரம் இல்லை, எதுவும் இல்லை. இங்கிருப்பதெல்லாம் கொஞ்சம் சாம்பல் தான்”.

Atrocities on Hindus -8- 2013

பல இந்து குடும்பங்களின் கதி: மினோதி ராணீ தாஸ் மட்டுமல்ல, அவரைப்போல, சுற்றி வாழும் 76 இந்து குடும்பங்களின் கதிட்யும், இதே கதிதான். தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களோ செத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வீடுகள் சூரையாடப் பட்டு, எரியூட்டப்பட்டன. பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். எல்லாம் முடிந்த பிறகு தான் போலீஸார் வந்து பார்வையிட்டனர்.

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்துக்கள் சாட்சி சொன்னதற்காக தாக்குதல் நடத்தப் பட்டனவாம்: சையதீ குற்றாஞ்சாட்டப்பட்டதற்கே, பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், அதனால் தான், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிரரியக்கங்களைச் சேர்ந்த 250-300 பேர் அப்பகுதிகளில் வந்து அத்தகைய கொடிய செயல்களைச் செய்துள்ளனர். முகமூடிகளை அணிந்து கொண்டு, “சையதீக்கு ஏதாவது நேர்ந்தால், ஒவ்வொரு வீட்டையும் கொளுத்துவோம்”, என்று கத்திக் கொண்டே அடித்து நொறுக்கினர்.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புத் தரப்படவில்லை?: . தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் செய்திகளை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். பிறகு கலவரத்தில் 42-45 மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றார்கள். ஆனால், பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், சையதீக்கு தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அவர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு மற்றும் இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி எக்ஷழுகின்றது. மேலும் போலீஸார், எல்லாம் நடந்த பிறகு வந்தனர் என்பது, போலீஸாரும் முஸ்லீம்கள், அதனால், முஸ்லீம்கள் செய்ததை ஆதரித்தது போலாகிறது.

Bangladesh protesters against Capital punishment

இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”: இதன் அர்த்தம் என்ன? 1947ல் இந்தியா மதரீதியில் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, பலகோடி இந்துக்கள் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டனர். ஏனெனில் அவர்களில் பலருக்கு அந்த விஷயமே தெரியாது. அதுபோல பங்களாதேசத்தில் தங்கி விட்ட இந்த பெண்மணி கூறுகிறார். மேலும், 1971ல் பங்களாதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு, நிலைமை சரியாகி விடும் என்று தொடர்ந்துத் தங்கியிருக்கலாம். ஆனால், பங்களாதேசமும் இஸ்லாமிய நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு, இஸ்லாம் மயமாக்கல் தொடர்ந்தபோது, இத்தகைய குரூரங்கள் தொடர்ந்தன. இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். கற்பழித்து மதமாற்றம் செய்தனர். தடுத்த, எதிர்த்த பெற்றோர்களையும் மதமாறும்படி வற்புறுத்தினர் அல்லது மறுத்தவர்களைக் கொன்றனர்.

 

© வேதபிரகாஷ்

03-03-2013

 

 

அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!

ஜூலை 10, 2010

அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!

அமர்நாத் யாத்திரைத் தொடங்கியது: ஸ்ரீநகர், ஜூலை.1, 2010: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் இன்று தொடங்கியது. 7000த்துக்கும் மேற்பட்டோர் பல்தால் பகுதியிலிருந்து தங்களின் யாத்திரையைத் தொடங்கியதாகவும், 1,100 பேர் பல்தால் செல்வதற்காக மணிகாம் முகாமிலிருந்து புறப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்து யாத்ரீகர்களும் பத்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல்தால், மணிகாம் மற்றும் யாத்திரைப் பாதையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

உரடங்கு மற்றும் தெரு கலாட்டா-கலவரம் சாக்கு வைத்துக் கொண்டு தாக்க திட்டம்: ஜூலை 10, 2010: தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்க திட்டமிட்டிருப்பதாக, அவர்களின் ரகசிய உரையாடல்களினின்று அறியப்படுகிறது[1]. காஷ்மீரத்தில் மற்ற இடங்களில் கலாட்டா செய்து, திசைத் திருப்பி, அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்கவிருப்பதாக, அதே மாதிரியான, தீவிரவாதிகளின் பேச்சுகளை இடைமறித்து, ரகசியமாகக் கேட்டபோது தெரியவந்துள்ளது[2]. இதனால், யாத்திரிகர்களுக்கு பாதுபாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது[3].

தீவிரவாதிகள் தாக்குவது, பக்தர்களைக் கொல்வது என்பது அவர்களைப் பொறுத்த வரைக்கும் வாடிக்கையான விஷயம்: ஜிஹாதி, இஸ்லாமிய, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு இந்துக்களைக் கொல்வது என்பது புண்ணிய காரியமாகக் கருதுகின்றனர். ஏனெனில், அவஎகளைப் பொறுத்த வரைக்கும் காஃபிர்களைக் கொல்வது, குரானின் படி அவ்வாறு கருதப்படுகிறது என்பர். உதாரணத்திற்கு, 2002ல் நடந்த நிகழ்சி கீழே கொடுக்கப் படுகிறது.

kashmir-siva-temple-2010

kashmir-siva-temple-2010

ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது: ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது என்ற செய்தி வந்ததும், பக்தர்கள் கவலைப்பட்டனர். அமர்நாத் சங்கர்ஸ சமிதி பந்திற்காக 03-07-2010 அன்று அழைப்பு விடுத்தது[4]. பிரச்சினை வேண்டாம் என்று போலீஸார் அந்த பக்தர்கள் மற்றும் பிஜேபி.காரர்களை கைது செய்தது. முழுவிவரங்கள் வெளியிடாமல், சென்ஸார்ஷிப் அமூலில் உள்ளதை இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. காஷ்மீரத்தில் கோவில்கள் தாக்கப் படுவது, இடிக்கப்படுவது, இஸ்லாமிய தீவிரவாதிகள்-ஜிஹாதிகளுக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது[6].

Siva-temple-NO-ADMISSION-2010

Siva-temple-NO-ADMISSION-2010

கோவிலின் மீது “அனுமதி இல்லை” என்று எழுதி மிரட்டுவது தான் காஷ்மீர் முஸ்லிம்கள், இந்துக்களின் உரிமைகளைக் காக்கும் லட்சணம்! மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லீம்கள், தங்களது அருமை-பெருமைகளை மட்டும் இணைதளங்களில் போட்டு, பாராட்டிக் கொள்கிறார்களே, இத்தகைய கொடுமைகளுக்கு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்? குறிப்பாக தமிழ்-முஸ்லீம்கள் கூட கண்டு கொள்ளாமல் இருப்பது, அவர்களது ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கைத்தான் காட்டுகிறது

இதே போக்குதான், அமர்நாத் யாத்திரை விஷயத்திலும் உள்ளது. அமர்நாத் யாத்திரையினால், கோடிகளில் பலனடைவது முஸ்லீம்கள்தான். கடைகள் வைத்திருப்பது, யாத்திரிகர்களை குதிரை மீது ஏற்றி அழைத்துச் செல்வது, தங்க இடம் கொடுப்பது………………….என்று எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.


[1] http://www.hindustantimes.com/Terror-attack-feared-during-Amarnath-Yatra/Article1-563611.aspx

[2] http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails100710k.php

[3] The Hindu, Government sounds alert for Amarnath Yatra, dated 10-07-2010, http://www.thehindu.com/news/national/article509523.ece

[4] http://www.telegraphindia.com/1100704/jsp/nation/story_12644189.jsp

[5] http://www.groundreport.com/Business/Hindu-organisations-condemned-the-action-of-the-go_2/2925456

[6] http://www.kashmir-information.com/Atrocities/Temples/temples3.html