Posted tagged ‘இந்திய முஜாஹத்தீன்’

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

மார்ச் 22, 2013

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

Hijbul Mujahiddeen - Paki-terrorist group

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

Paki-terrorist arrested - militant of Al-barq

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா  (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

Haji Arafat Guest house - room No.301 arms stored

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

Kashmir terror

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

Indian flag burned

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8].  இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார்.  அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

Indian-flag-burned2

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2013


[7] NDTV has learnt that Liyakat Shah and his family, including his 18-year-old daughter flew from Karachi to Kathmandu and reached Sanauli post on the Indo-Nepal border on March 20. There, they informed the border police. However, instead of allowing them to proceed to Jammu and Kashmir as planned and promised, the Delhi Police arrested them.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[8]  Delhi Police seized an AK-56 assault rifle, two magazines with 30 cartridges each, and a hand grenade from a room of a guest house near the famous Jama Masjid mosque.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.

[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.

[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.

[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.

வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!

ஜூன் 9, 2012

வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!

இஸ்லாத்தில் வெள்ளிக் கிழமை புனித நாளாகக் கருதப் படுகிறது. ஜிஹாதிகள் அன்றுதான் தொழுகைக்குப் பிறகு முக்கியமான வேலைகளை செய்ய தீர்மானம் எடுப்பர், அதன்படியே செயல்படுவர். முஹம்மது கதீல் சித்திக் (27 வயது) என்ற இந்திய முஜாஹத்தீன் மற்றும் பல வழக்குகளில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளி / குற்ரஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நபர், புனேயில் உள்ள மத்திய எரவாடா சிறையில் அவனது கூட்டாளிகளால் 08-06-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தான்[1]. இது வெறும் “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது” மாதிரியா அல்லது வேறுவகையா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயில் பாதுகாப்பில் தோய்வா, இந்திய முஜாஹத்தீனின் ஊடுருவலா-ஆதிக்கமா? பாதுகாப்பு மிக்க அச்சிறையில் அவன் கொல்லப்பட்டது, ஜெயில் பாதுகாப்பு முறையின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நிச்சயமாக அவன் மூலம் வரும் உண்மைகளை மறைக்கவே அவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளான் என்று தெரிகிறது. தினமும் பாத்திமா என்ற கர்ப்பவதியான அவனது மனைவி தினமும் போன் செய்து பிரார்த்தனை செய்யச் சொல்வாளாம். ஆனால், இன்று போன் எதுவும் வரவில்லை. ஏனெனில், அவள் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய கணவன் கொலை செய்யப் பட்ட செய்தியை அறிந்தாளாம்[2]. அவனது பெற்றோர்களும் அவ்வாறே அறிந்துள்ளனர். இதனால், இதன் பின்னணியில் சதியுள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது[3]. அதிகமாக ஜாக்கிரதையாக தனியாக வைக்கப்பட வேண்டிய இவன் எப்படி மற்ற இரு குற்றவாளிகளுடன் சேர்த்து வைக்கப் பட்டான் என்று தெரியவில்லை[4]. அக்பர் முனிர் செயுக் மற்றும் பலு வெகைர், மஹோல் மற்றும் பலேராவ் என்ற உள்ளூர் / மாமூல் கொலையாளிகளால் அவன் கொல்லப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் கூறுகின்றனர் (Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui).

பல வழக்குகளில் சிக்கியுள்ளவன் கொல்லப்பட்டதால், வழக்குகள் பலவீனமாகின்றன: கோவிலில் குண்டு வைத்த வழக்கு விசாரணை இப்பொழுதுதான் முடிந்துள்ளது[5]. பட்கல் எப்படி சித்திக்கிற்கு பணம் கொடுத்து அத்தகைய குற்றங்களை செய்ய வைத்தான் என்ற விவரங்களை போலீஸார் விசாரணையில் அறிந்துள்ளனர்[6].

  • The IM had allegedly promised Siddiqui Rs 50,000 for planting the bomb at Halwai.
  • According to ATS officers, Bhatkal gained Siddiqui’s loyalty by offering him money during times of need. In the later part of 2009, when Siddiqui’s daughter was suffering from a rare illness, Bhatkal first offered Rs 1 lakh. The daughter eventually died, but Bhatkal had succeeded in gaining a loyal supporter.
  • An amount of Rs 25,000 was allegedly exchanged between him and Siddiqui before the Chinnaswamy Stadium blasts of 2010.

இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வைத்த வழக்கில், கர்நாடக போலீஸாருக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிகிறது[7]. யாசின் பட்கல் (தென்னிந்திய இந்திய முஜாஹத்தீனின் தளபதி) மற்றும் ரியாஸ் பட்கல் (Yasin Bhatkal and Riyaz Bhatkal) முதலியோர்க்குண்டான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் உள்ள நிலையில், இவ்வாறு அவன் கொலை செய்யப்பட்டது பல கேள்விகளை எழுப்புகிறது[8]. சித்திகின் பங்கு பல கொடிய வழக்குகளில் தெரிகிறது[9]. என்ன காரணத்திற்கோ, இவன் தில்லியில் கைது செய்யப் பட்டு, கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, நேராக கடற்கரை ஊரான பட்கல்லிற்கு அழௌஇத்துச் செல்லப் பட்டான், ஆனால், பெங்களூருக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்படவில்லை. காங்கிரஸ் ஒருவேளை மறைமுகமாக இவர்களுக்கு, இவ்வாறு சட்டரீதில்யில் உதவுகிறதா என்ற சந்தேகமும் நீதிமன்ற வளாகங்களில் எழுந்துள்ளது. அதற்கேற்றபடியே, சித்திக்கின் வழக்கறிஞர்கள் – ரெஹ்மான் மற்றும் கைனத் செயிக் இக்கொலையில் துப்புத்துலக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுயுள்ளனர்[10]. எதிர்பார்த்தப் படியே, பலிக்கடாவாக எஸ்.வி.கடவகா[11] என்ற ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!


[1]  Indian Mujahideen operative Mohammad Qateel Siddiqui, accused of executing terror attacks in Bangalore and Delhi and involvement in the attempt to blow up Pune’s famed Dagadusheth Ganapati temple, was strangled to death by two other prisoners in a high-security cell of Pune’s Yerawada central jail on Friday morning.

http://timesofindia.indiatimes.com/india/Top-terror-suspect-killed-in-high-security-Pune-jail/articleshow/13942693.cms

[4] Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui.

[9]  Siddiqui allegedly visited Bhatkal with Yasin to organize logistics for their terror missions.  “He was working with his uncle in his native Darbhanga, Bihar and was involved in gun running. He also supplied explosives to Indian Mujahiddeen and helped them in making bombs. Though he was not involved directly in the stadium twin blasts, he had always been a pillar of support for Yasin who allegedly planted the bombs in this instance,” said a source. Siddiqui was arrested from Delhi in November last year, but was never brought to Bangalore. But earlier this year, he was brought to Bhatkal to track down an explosives dump hidden in the coastal town.

[10] Meanwhile, Siddiqui’s lawyers A Rehman and Kainat Shaikh have demanded a CBI probe into the murder.

[11] The Maharashtra government on Friday ordered a CID probe into the case as home minister R R Patil has ordered the suspension of Yerawada jail superintendent S V Khatavka.