Posted tagged ‘ஆ.எஸ்.எஸ்’

“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018, 05-05-2018], மற்றும் 07-08-2018 விசாரணை – செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன? (2)

மே 8, 2018

தலித்முஸ்லிம்மோதல்களிலிருந்து [24-04-2018, 05-05-2018], மற்றும் 07-08-2018 விசாரணை – செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன? (2)

L. Murugan visited and enquired 07-05-2018-1

கலவரத்திற்குப் பிறகு அமைதி நிலவும் நிலை: கலவரத்தை அடுத்து அசாதாரணமான அமைதி நிலவுகிறது, என்று தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது[1]. வேறென்ன நிலவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. 05-05-2018, சனிக்கிழமை இரவு 11 முஸ்லிம்கள் மற்றும் ஒரு எஸ்சி கைது செய்யப்பட்டனர். 500 போலீஸ்காரர்கள் பாதுகாப்பாக நிறுத்தப் பட்டது. போடி, கம்பம், ஆண்டிபட்டி, சின்னமன்னூர் மற்றும் பெரியபாளையம் முதலிய இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஜயமங்கலம் போலீஸ் ஷ்டேசனில் முன்னர் வேலை பார்த்த போலீஸார் இங்கு குவிக்கப்பட்ட்டுள்ளனர். ஒவ்வொரு நுழைவு பாதையிலும் கண்காணிக்க, ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளார்[2]. வெளியாட்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை. சித்தாந்த மோதலும் நடந்து வருவதால், செய்திகளும் பாரபட்சமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு இந்துத்துவ பத்திரிக்கை வன்னியம்மாள் “தலித்” ஆக இருக்கலாம் என்று “மார்க்சீய ஆதரவு இந்து” சொல்வதாக செய்தி வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது[3]. “இந்து, தலித், முஸ்லிம்” போன்ற வார்த்தைகளையும் குழப்பத்துடன் உபயோகப் படுத்தியுள்ளது[4]. இதை எடுத்துக் காட்டி, அதற்கு, என்னுடைய பதிலை அனுப்பியுள்ளேன்[5]. இன்னொரு இந்துத்துவ பத்திரிக்கையும் புதியதாக எதையும் எடுத்துக் காட்டவில்லை[6]. மற்ற ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டதை தொகுத்து வெளியிட்டுள்ளது[7].

L. Murugan visited and enquired 07-05-2018-5 DD.jpg

07-05-2018 அன்று தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் விசாரணை நடத்தியது: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் 07-05-2018, திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த ஏப்ரல் 24 -ஆம் உயிரிழந்த மூதாட்டி சடலத்தை பள்ளிவாசல் தெருவில் எடுத்துச்செல்லும்போது இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மே 5-ஆம் தேதி காலை இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள், கார் மற்றும் இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்டன[8]. இதில் இரு தரப்பினரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இருதரப்பையும் சேர்ந்த 30- க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்[9]. இந்தநிலையில் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் விசாரணை நடத்தினார்.

L. Murugan visited and enquired 07-05-2018-3

இந்திரா காலனி மக்கள் கூறியது: பின்னர் இந்திரா காலனியை சேர்ந்த மக்களிடம் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள், போலீசார் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர். வன்னியம்மாள் உடலை எடுத்து சென்றபோது ஏற்பட்ட மோதலில் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், போலீசாரின் அலட்சியம் தான் கலவரம் ஏற்பட்டதற்கு காரணம் என்றும், அவர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்[10]. தங்களது பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்[11]. இது திகைப்படைய செய்கிறது. மின்சாரம், குடிநீர் ஏன் துண்டிக்கப்பட வேண்டும் என்று தெரியவில்லை. இதே போல முஸ்லிம்களும் பரஸ்பர கோரிக்கைக்களை வைக்கலாம்.

L. Murugan visited and enquired 07-05-2018-2

எல். முருகன், பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “கடந்த மே 5-ஆம் தேதி வன்னியம்மாள் என்ற (70 வயதான) பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டோர் வீடுகள், ஸ்டூடியோ ஆகியவை பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் கலைச்செல்வன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் , வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தில் வெளியூரில் இருந்து ஆள்கள் வந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் சுமூகநிலை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

L. Murugan visited and enquired 07-05-2018-4

விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் எம்.பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் மற்றும் மாவட்ட வன்கொடுமை விழிப்புணர்வு தடுப்புக்குழு உறுப்பினர் ப.பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணி, பொம்மிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனி மக்களை தேவதானப்பட்டியில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி பா.ஜ. அமைப்பாளர் ராஜபாண்டி உடனிருந்தார்[12].  விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பெரியகுளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தங்கபாண்டி,செயலாளர் ஆண்டவர் ஆகியோர் பொம்மிநாயக்கன்பட்டிக்கு செல்ல முயன்ற போது சிந்துவம்பட்டி முனியாண்டி கோயில் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர்[13].

Bomminayakanpet-woman-crying as she lost- 05-05-2018-3

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?: தமிழக முஸ்லிம்கள் 99.99% மதம் மாறிய இந்துக்கள் தாம், ஆகவே, அவர்கள் தங்களது மூலங்களை மாற்றி விட முடியாது. “செக்யூலரிஸ” நாட்டில், “முஸ்லிம் தெரு” என்று பெயர் வைத்துக் கொண்டு, “எங்கள் தெரு வழியாக செல்லக் கூடாது” போன்றதெல்லாம், சட்டத்திற்கு புறம்பானதாகும். அத்தகைய அடவடித்தனமான போக்கினால் தான் 24-04-2018 கலவரம் ஏற்பட்டது என்பது முன்னெரே சுட்டிக் காட்டப் பட்டது. அவர்களது நம்பிக்கைக்களை தெருக்களில் கொண்டு வரக்கூடாது, ஏனெனில், அது பொது சொத்து, எல்லோருக்கும் உரிமை உண்டு. பொருளாதார ரீதியில், இந்துக்களை நம்பித் தான் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதையும் நினைத்துக் கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்கள் முதலில், அந்த அடிப்படை உண்மையினை அறிந்து கொண்டு, பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். குரானில் சொல்லியபடி, “உன் வழி உனக்கு, என் வழி எனக்கு,” என்றுதான் இருக்க வேண்டும், குறிக்கிட வேண்டிய தேவையில்லை.

© வேதபிரகாஷ்

08-05-2018

Bomminayakanpet-riot photos- 05-05-2018-1

[1] The Hindu, Uneasy calm prevails at Theni village, STAFF REPORTER MAY 06, 2018 19:32 IST; UPDATED: MAY 06, 2018 19:32 IST.

[2] http://www.thehindu.com/news/national/tamil-nadu/uneasy-calm-prevails-at-theni-village/article23794345.ece

[3] Organizer, Jihadi Attack on Funeral Procession of Hindu Woman: Riots Break out in Tamil Nadu, Date: 07-May-2018.

[4] As many as 30 people were injured in riots erupted in Theni district of Tamil Nadu, between Hindus and Muslims following a funeral procession of a Dalit woman was attacked in a Muslim-majority area. Fifty houses, two shops and several vehicles were reportedly damaged in the riots. Quoting the police the pro-CPM daily, The Hindu, reported that when Vanniammal, an aged Dalit woman, died on April 24, her relatives and friends decided to take out the funeral procession through Muslim Street in Bomminaickanpatti village near Periyakulam. The procession was attacked by the procession as soon as it entered the Muslim Street. After the Dalits were ostracised by Muslims, the Hindus allegedly intercepted an outsider, a Muslim man, in their village on Saturday. This led to a scuffle between the two communities. Following the incident, the security has been beefed up and more than 200 police personnel were deployed in the area. Jayamangalam police have registered a case.

http://www.organiser.org/Encyc/2018/5/7/Jihadi-Attack-on-Funeral-Procession-of-Hindu-Woman.html

[5] Really, it is intriguing to note that “Organizer” is reporting the event in that fashion using the expression “dalit” instead of “SCs,” as it is banned by the National SC commission. You say, “Quoting the police the pro-CPM daily, The Hindu, reported that when Vanniammal, an aged Dalit woman,” she is SC only, there is no doubt about it. You reported, “After the Dalits were ostracised by Muslims, the Hindus allegedly intercepted an outsider, a Muslim man……”, thus, you are confused with such used expressions “Dalits,” “Hindus,” “Muslim”……..Your reporter should  have some basics about the issue, people etc., before putting out the “news” publicly.

[6] Swarajya, In Tamil Nadu, Muslims And Dalits Clash Following Row Over Route For Funeral Procession , by Swarajya Staff, May 07 2018, 11:09 am,

[7] https://swarajyamag.com/insta/in-tamil-nadu-muslims-and-dalits-clash-following-row-over-route-for-funeral-procession

[8] தினமணி, பொம்மிநாயக்கன்பட்டி கலவரம்: ஆதி திராவிட ஆணைய துணைத் தலைவர் விசாரணை, By DIN | Published on : 08th May 2018 02:20 AM

[9] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/may/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2915424.html

[10] தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார், மே 08, 2018, 04:15 AM

[11] https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/08033255/The-Vice-President-of-the-Commission-for-National.vpf

[12] தினமலர், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு, Added : மே 08, 2018 00:59.

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=2016103

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

திப்பு ஜெயந்தி - சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

தீபாவளி 10-11-2015 அன்று இந்தியா முழுவதும் பண்டிகை கொண்டாடும் வேளையில், கர்நாடகாவில் 18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் 266வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்து[1], நடத்தியதில் கலவரத்தில் முடிந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தமது எதிப்பைத் தெரிவித்திருந்தும் பிடிவாதமாகக் கொண்டாடுவேன் என்று விழாவை ஏற்பாடு செய்து சித்தராமைய்யா நடத்தினார். பசுமாமிசம் சாப்பிடுவேன் என்றேல்லாம் பேசிய இவர் கர்நாடகாவின் முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எனும் போது, எல்லா மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற பண்புக்கு எதிராக செயல் பட்டுவரும், அவர் இதற்கும் சளைக்கவில்லை. நிச்சயமாக சோனியா அம்மையாரின் சம்மதி இல்லாமல், இவர் இவ்வளவு ஆட்டம் போடமாட்டார். ஆக காங்கிரசின் உள்நோக்கம், கலவரத்தை உண்டாக்குவது என்பது தான் போலும். இருக்கவே இருக்கிறது, பிறகு இதெல்லாம் அந்த இந்துத்துவ சக்திகளின் வேலைதான் என்று பழி போட்டு திசைத்திருப்பி விடலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

பலவித எதிர்ர்புகளை மீறி சித்தராமையா திப்பு ஜெயந்தி கொண்டாடியது: ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் மே 1799ல், ஹைதர் அலியின் மகனான திப்பு கொல்லப்பட்டான்[2]. அதன்படி, 10-11-2015 (செவ்வாய்க்கிழமை) அன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது[3]. ஹைதர் மற்றும் திப்பு இருவரின் கொடுமைகளை தென்னிந்தியாவில், குறிப்பாக மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் (கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா) மக்கள் அறிவர். இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன[4]. இந்நிலையில், இன்று நடைபெறும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதாக பா.ஜனதா அறிவித்தது. மாநில பிஜேபி தலைவர் பிரஹலாத் ஜோஷி, “எங்களுடைய 44 எம்.எல்.ஏக்கள், மற்ற அரசு பதவி வகிக்கும் எவரும் இந்த விழாவில் பங்கு கொள்ள மாட்டார்கள்”, என்று அறிவித்தார்[5]. கர்நாடக கௌரவ சம்ரக்ஷண சமிதி [Karnataka Gaurava Samrakshana Samiti] போன்ற இயக்கங்களும் எதிப்புத் தெரிவித்தன. குர்பூர் வஜ்ரதேஹி மடத்தின் ஸ்வாமிஜி ஶ்ரீ ராஜசேகரானந்தா அரசு அந்நிகழ்ச்சியை நடத்தினால், அதே நாளில், “அரசின் தற்கொலை தினம்” என்று எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப் படும் என்றார்[6]. இதனிடையே, கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சில மதஅமைப்புகள் அறிவித்தன. மத அமைப்புகளின் இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாரதிய ஜனதா ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடகு மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

United Christian Association எதிப்பு-06-11-2015

United Christian Association எதிப்பு-06-11-2015

கிறிஸ்தவர்களின் எதிர்ப்பு: மங்களூரின் அனைத்து கிறிஸ்தவ சங்கமும், “கடற்கரை பகுதிகளில் இருந்த பல சர்ர்சுகளை திப்பு தனது ஆட்சியில் இடித்தான் மற்றும் கிறிஸ்துவர்களை துன்புறுத்தினான்”, என்று இந்த ஜெயந்தியை எதிர்த்துள்ளது[7]. நவம்பர் 6ம் தேதி எதிர்ப்பு தெர்வித்து கமிஷனரிடம் மனுவையும் கொடுத்தனர்[8]. திப்புவினால் கிறிஸ்தவர்கள் நடத்தப் பட்ட விதம் குறித்து, அவர்களே ஆவணப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறியலாம், ஒருவேளை அதனால் தான், கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர், அவன் மீது படையெடுத்து, அப்பகுதியை, தமதாட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று போரை நடத்தியிருக்கலாம். எப்படியாகிலும், கிறிஸ்தவர்களால் கூட, திப்புவின் கொடுமைகளை, இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு, அவர்களது மனங்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

மடிக்கேரியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டது எப்படி?: அரசு விழாவை ஆதரித்து முஸ்லிம் அமைப்பு ஒன்று ஊர்வலம் மடிக்கரையில் நடத்தியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது[9]. இதனால், ஒரு இடத்தில் இரு அமைப்பு தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது[10]. இந்த பேரணியின் போது, திடீரென வெடித்த மோதல் விபரீதத்தில் முடிந்தது. விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அமைப்புக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது[11] என்கிறது தினத்தந்தி. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருடன் மோதினார்கள் என்றால், அது முஸ்லிமஸமைப்புதான் என்று பதிவு செய்யாமல் இருந்தது செக்யூலரிஸ பத்திரிகா தர்மத்தைக் காட்டுகிறது போலும். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். குட்டப்பா இறந்த பிறகு, கலவரமாக மாறியது. இதையடுத்து, அங்கு நிலவிவரும் பதற்றத்தை தணிக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோடகு மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

குட்டப்பா இறந்தது அல்லது கொல்லப்பட்டது எப்படி?: கல்வீச்சில் முன்னாள் அரசு ஊழியரும் உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான குட்டப்பா (50) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்[12] என்று சில ஊடகங்கள் கூறுகின்றன.  புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின என்கின்றன மற்ற ஊடகங்கள்.. ஆனால் தடியடியிளிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டி குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது[13] என்றும் கூறப்படுகின்றன. ஆகவே, குட்டப்பா இறப்பில், எதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. கல்லடி கலாட்டாவில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்றால், வீசியவர்கள் காரணமாகிறார்கள். ஆனால், கல்லடி கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட செக்யூலரிஸ ஊடகங்கள் தயங்குகின்றன போலும்.  மேலும் தீபாவளியன்று, இப்படி இந்து-விரோத போக்கில் நடத்தப் பட்ட ஜெயந்தியில், ஒரு இந்து அமைப்பின் தலைவர் இறந்தது ஒரு பிரச்சினை ஆகக்கூடாது என்று அமுக்கி வாசித்திருக்கலாம்.

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

காங்கிரஸ் எம்.எல்,ஏ குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கிறார்: குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஜி. போபைய்யா [Congress MLA K.G. Bopaiah] கேட்டுள்ளார். ஆமாம், பாவம் அவருக்கு இந்துக்களின் ஓட்டுகள் தேவைப்படுகிறது. மைசூரின் எம்.பியான, பிரதாப் சிம்ஹா, “மாவட்ட நிர்வாகம் நிலைமையை கையாளத் தவறிவிட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து, நிறையபேர் இங்கு வந்து, திப்பு ஜெயந்தியை ஆதரிக்க வந்துள்ளனர். அதே மாதிரி விழாவை எதிர்ப்பவர்களையும், அவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது”, என்றார். மூர்நாடு, ஹக்கதரு, விராஜ்பேட், கொட்டமுடி போன்ற ஊர்களிலிருந்து சுமார் 4,000 பேர் மடிகேரியுள் நுழையப் பார்த்தார்கள், ஆனால், போலீஸார் தடுத்ததால், அவர்கள் மடிகேரி எல்லைகளிலேயே தங்க நேர்ந்தது. சுமார் காலை பத்து மணிக்கு மோதல்கள் ஆரம்பித்தன, மதியம் குட்டப்பா இறந்தவுடன், கலவரமாக மாறிவிட்டது[14]. மேலும், “அரசு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றோருக்கு விழா எடுக்கலாம், ஆனால், திப்புவைப் போன்றவர்களுக்கு அல்ல”, என்றும் கூறினார்[15].

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மாலைமலர், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு: வன்முறையில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் பலி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10.2015, 3:05 PM IST.

[2] http://www.greaterkashmir.com/news/national/story/201214.html

[3] http://www.maalaimalar.com/2015/11/10150553/Tipu-birth-anniv-celebrations.html

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[4]  தினகரன், பாஜக., வி.எச்.பி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி கலவரத்தில் வி.எச்.பி பிரமுகர் உயிரிழந்ததால் பதட்டம், நவம்பர். 10.2015,16.00.21 PM IST.

[5] On Monday (09-11-2015), BJP announced its plans to boycott the celebrations across the state. State BJP president Prahlad Joshi told media persons on Monday that none of its 44 legislators and office-bearers will attend the Tipu Jayanti celebrations being organized by the state government.

http://www.business-standard.com/article/news-ians/one-dead-in-clash-over-tipu-sultan-anniversary-115111000719_1.html

[6] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367470

[7] Mangaluru United Christian Association has protested against the celebrations, alleging that Tipu was responsible for the destruction of many churches in the coastal region and harassing Christians.

http://atimes.com/2015/11/hindu-leader-dies-in-violence-during-protest-over-tipu-anniversary/

[8] The members of the United Christian Association staged a protest against the state government’s decision to celebrate “Tipu Jayanti”, in front of the DC’s Office here, on November 6.2015.

http://www.mangalorean.com/mangaluru-uca-stages-protest-against-state-governments-decision-to-celebrate-tipu-jayanti/

[9] தினத்தந்தி, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் வன்முறை வி.எச்.பி தலைவர் ஒருவர் பலி, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST; பதிவு செய்த நாள்:செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST.

[10] The clashes erupted after a Muslim group that was taking out a procession to mark the Karnataka government’s Tipu Sultan Jayanti celebration through Madikeri town came face to face with Hindutva activists protesting against the celebration of the birth anniversary in the middle of the town.

http://indianexpress.com/article/india/politics/tipu-sultan-jayanti-protest-vhp-activist-succumbs-to-injuries-in-karnataka/

[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/10141620/Tipu-birth-anniv-celebrations-VHP-leader-dies-in-violence.vpf

[12] New Indian express, Tipu Sultan jayanti protest: VHP activist killed in violence in Karnataka, Written by Express News Service | Updated: November 10, 2015 4:09 pm.

[13]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[14] Some 4,000 people, who had come from nearby towns such as Moornadu, Hakkaturu, Virajpet and Kottamudi, were stranded on the outskirts of Madikeri after police barricaded the town. According to police, clashes erupted in different parts of Madikeri by 10am. By noon, when Kuttappa died, police had a full blown riot on their hands.

http://www.hindustantimes.com/india/vhp-leader-dies-in-clashes-over-tipu-sultan-s-birth-anniversary-celebrations/story-25FViLDz9rageQiTW9rtwK.html

[15] Congress MLA K.G. Bopaiah called for immediate arrest of those responsible for Kuttappa’s death. Mysuru MP Pratap Simha, who spoke to The Hindu, flayed the district administration and the police for their failure to handle the situation. He alleged that people from other districts had arrived in large numbers ostensibly in support of the Jayanti celebrations and the police failed to crack down armed protesters. “Such events should be held to commemorate icons, who have rendered yeoman service to society. Let the government hold a jayanti celebration in honour of late President A.P.J. Abdul Kalam but not Tipu Sultan,” said Mr. Simha. Inspector-General of Police (South) B.K. Singh and other officers are camping in the district and monitoring the situation.

http://www.thehindu.com/news/national/karnataka/one-dead-in-stone-pelting-in-kodagu/article7864756.ece