Posted tagged ‘ஆர்பாட்டம்’

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

ஆகஸ்ட்.5 வேலூர் கோர்ட்டில் ஆஜர்: ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆகஸ்ட்.7 வரை விசாரணை: விசாரணையின் போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ’நான் ஷமில் அகமதுவை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரிக்கவில்லை. ஷமில் அகமதுவை அடிக்கவும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘‘அப்படியானால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது? எழுதி கொடுக்க வேண்டிய தகவல் என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கூறிவிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடுத்த பேப்பரை திருப்பி கொடுத்துவிட்டார்[1]. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் வருகிற 7–ந் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்[2].

போலீசார் காயம்

போலீசார் காயம்

போலீஸே போலீஸ் மீது நடவடிக்கைஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை? எல்லாவற்றிற்கும் முன்பாக முஸ்லிம் இணைதளங்களோ மார்டின் தான் கொலையாளி என்று தீர்மானித்துள்ளன[3]. “டெக்கான் குரோனிகள்” என்ற நாளிதழ் அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது[4]. வழக்கம் போல “மனித உரிமைகள் இயக்கம்” போன்றவையும் ஆம்பூரில் உண்மையில் நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களிடம் பேட்டி கண்டு எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்களும், நோயின் மூலகாரணத்தை ஆராயாமல் இருக்கிறார்கள்.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

ஷமீல் அகமதுவை பவித்ராவுடன் பழகுவதை ஏன் அவரது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லை?: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான்? அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே? டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே?  மே-ஜூன் விவகாரங்களைப் பார்த்தால், நடு-நடுவே பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றன:

  • கடந்த மே மாதம் 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலிடம் சென்றுவிட்டார். அப்படியென்றால், அவர்கள் திட்டமிட்டபடிதான் செய்திருக்கின்றனர்.
  • நடுவில் பழனி பவித்ராவை தேடி அலைகிறார். ஷமீல், சரவணன், புகழேந்தி முதலியோருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அதாவது, பவித்ராவின் நண்பர்கள் என்று பழனிக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது.
  • மே.24-ம் தேதி பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.
  • ஒரு வாரம் (?) ஈரோட்டில் தங்கியிருந்த பவித்ராவும், ஷமீல் அகமதுவும் என்ன செய்து கொண்டிருந்தனர்?
  • ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், “பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம்”. என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், ஆம்பூருக்கு வரவேண்டிய பவித்ரா சென்னைக்கு ஏன் சென்றாள்? ஷமீல் மட்டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும்? ஷமீல் என்றைக்கு ஆம்பூருக்கு வந்தார் என்று தெரியவில்லை.
  • பழனி ஷமீல் வீட்டிற்குச் சென்று சண்டை போடுகிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று விரட்டி விடுகின்றனர். இதனால், ஷமீலின் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் பழனி சென்று சொல்லியிருக்கலாம்.
  • 15-06-2015 அன்று போலீஸார் விசாரணைக்கு ஷமீலைக் கூட்டிச் செல்கின்றனர்.
  • ஜூல.4 அன்று சென்னையில் பவித்ரா, சரவணன்-புகழேந்தி முதலியோருடன் போலீஸில் சிக்குகிறார்.
  • 02-06-2015 முதல் 04-07-2015 வரை சென்னையில் பவித்ரா எப்படி இருந்தாள்?
  • ஆக, பவித்ரா-ஷமீல் இருவரையும் எல்லாவற்றையும் மீறி ஊக்குவித்தது யார்?
  • சந்தேகிக்கப்படுவது போல, இதில் “லவ்-ஜிஹாத்” போன்ற விவகாரம் உள்ளதா அல்லது வேறு விவகாரங்கள் உள்ளனவா? அவ்வுண்மைகளை மறைக்க இப்பிரச்சினை திசைத்திருப்பப்படுகிறதா?
  • பெண்ணிய வீராங்கனைகள் ஒரு பெண்ணின் பிரச்சினை மற்றும் பெண் போலீஸாரே பாலியல் தொல்லைகளில் உட்படுத்தப்பட்டார்கள் எனும் போது, ஏன் மௌனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்?
  • தேசிய ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.
  • இதற்கு மதசாயம் பூசப்படுவதாக “ராஜ் டிவி” கூறுகிறது[5].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.maalaimalar.com/2015/08/06110912/ambur-violence-case-shameel-ah.html

[2] மாலைமலர், ஆம்பூர் கலவர வழக்கு: ஷமில் அகமதுவை தனி அறையில் விசாரிக்கவில்லைஇன்ஸ்பெக்டர் மார்ட்டின் தகவல், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 06, 11:09 AM IST.

[3] http://www.vkalathur.in/2015/06/7_28.html

[4] http://www.deccanchronicle.com/150704/nation-crime/article/cb-cid-yet-question-custody-killer-inspector

[5] https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

ஜூலை.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டது: ஜூன்.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று ஆம்பூர் முஸ்லிம்கள் பிடிவாதமாக இருந்தனர், புகாரும் கொடுத்தனர். அவர் கைது செய்யப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதால் தான் கலவரம் ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின[1]. ஷமீல் அகமது மரணம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் காணாமல் இருந்து, பிறகு கைது செய்யப்பட்டவுடன், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த பவித்ரா காணாமல் போனது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமத்திடம் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஜூன் 15 முதல் 18 வரை போலீஸ் கஸ்டடியில் ஷமீல் அகமத் இருந்தார்[2]. பிறகு அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர்

ஷமீல்அகமது இறப்பு, தௌவீத் ஜமாத் ஆர்பாட்டம், மார்ட்டின் பிரேம்ராஜ் மருத்துவவிடுப்பு: ஜூன்.19 அன்று ஆம்பூரில் உள்ள பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். ஜூன்.23ம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஜூன்.26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஷமீல்அகமது, சிகிச்சை பலனின்றி ஜூன் 26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் இறந்தார்[3].  தௌவீத் ஜமாத் [Thoweed Jamath] ஆட்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு கடந்த ஜூன் 27ம் தேதி ஆர்பாட்டம் செய்தனர் இதனால் ஆம்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது[4]. அன்றிலிருந்தே, மார்டின் உடல்நலம் சரியில்லை என்று மருத்துவ-விடுப்பில் சென்று விட்டார்[5]. இதையடுத்து டிஜிபி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு[6] சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது[7]. ஒருபுறம் போலீஸார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். பெண் போலீஸார் தாங்கள் எப்படி துரத்தப் பட்டனர், மானபங்கத்திற்கு உள்ளாகினர் என்றெல்லாம் கதறியபடி தங்களது அனுபவங்களை சொல்லி வந்தனர். ஆனால், மறுபுறம் இந்நடவடிக்கையும் தொடர்ந்தது.

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

ஜூன்.19 முதல் 26 வரை சிகிச்சை அளித்தது: ஷமீல் அகமது எட்டு நாட்களில், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்.

சிகிச்சை தேதிகள் மருத்துவமனை, இடம் சிகிச்சை பெற்ற நாட்கள்
ஜூன்.19 முதல் 23. 2015 வரை ஆம்பூரில் உள்ள பொது மருத்துவமனை ஐந்து நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.23  முதல் 25. 2015 வரை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவமனை இரண்டு / மூன்று நாள் நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.26. 2015 சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை அன்று மாலை உயிரிழந்தார்.

அதனால், அங்கு இவருக்கு என்ன சிக்கிச்சை அளிக்கப்பட்டது, எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான, ஆவணங்கள் இருக்கும். எதனால், இறப்பு ஏற்பட்டது என்பதையும் மருத்துவரீதியில் இவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். போலீஸ் விச்சரணையின் போது மாமனார் என்.கே. முகமது கௌஸ் [N. K. Mohammed Ghouse, father-in-law of Shamim Ahmad] தான் ஷமீம் அகமதுவைப் பார்க்க தினமும் அங்கு சென்றுள்ளதாகவும், மார்டின் ஒரு விருந்தினர் மாளிகைக்கு, ஷமீம் அகமதுவை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.  ஆனால் ஒரு பேட்டியில், ஜவஹருல்லா, மார்டின் தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினார் என்கிறார்[8].

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர் கைது - மாலைமலர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர் கைது – மாலைமலர்

ஜூலை 31ம் தேதி மான் வேட்டையாடியதாக மார்டின் பிரேம்ராஜ் கைது: ஷமீல் அகமது இறந்த விசயம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது [the summons issued by the CB CID in the case under section 176 (inquiry by a magistrate into the cause of death)[9]]. ஆனால் அவர் ஆஜராகவில்லை, நண்பர்களுடன் தலைமறைவாக இருந்தார்[10]. மருத்துவவிடுப்பில் சென்றார் என்று முன்னரே குறிப்பிடப்பட்டது. போலீஸார் அவரைத் தேடி வந்தனர்[11]. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  அழகிய பாண்டியபுரம் வனச்சரக காடுகளில் மிளா / மான் வேட்டையாடியதாக [under Section 4 of the Wildlife Act ] மார்ட்டின் பிரேம்ராஜ் (50), பணி நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டெபில் சி. கிறிஸ்டோபர்(51), டி. ஐயப்பன் (46), என். கோபாலகிருஷ்ணன் (22), முதலியோர்[12] வனத்துறையினர் உரிய வனச்சட்டதின் கீழ் ஜூலை 31ம் தேதி கைது செய்யப்பட்டனர்[13]. 40 கி இறைச்சி, மான் தோல், கொம்புகள் முதலியவற்றுடன் இரண்டு வண்டிகள், துப்பாக்கி முதலியன கைப்பற்றப்பட்டன[14]. பிறகு நாகர்கோவில் / பாளையகோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்[15]. அதில் மார்டின் பிரேம்ராஜ் தேடப்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் ஆவர்[16]. இதைதொடர்ந்து நேற்று காலை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் ஜே.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்[17]. அவருக்கு 5 நாள் காவல் அனுமதிக்கும்படி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 நாள் அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[18]. இதையடுத்து மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[19].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Delay-in-Booking-Inspector-led-to-Ambur-Clash/2015/07/08/article2908517.ece

[2] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1311782

[4]  தினமலர், ஆம்பூர் கலவர வழக்கு விவகாரம் இன்ஸ்பெக்டரிடம் 3 நாள் விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[6] http://www.deccanchronicle.com/150708/nation-crime/article/suspended-inspector-named-ambur-custody-death-absconding

[7] தினகரன், ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் குறித்து சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[8]  ராஜ்-டிவி, கோப்பியம் நிகழ்ச்சி, https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-takes-custody-of-pallikonda-inspector/article7505510.ece

[10]  தி இந்து, ஆம்பூர் கலவரத்தில் சஸ்பெண்ட் ஆன காவல் ஆய்வாளரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: வேலூர் நீதிமன்றம் உத்தரவு, Published: August 6, 2015 08:02 ISTUpdated: August 6, 2015 08:04 IST.

[11] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[12]  The Hindu, Inspector suspended over Ambur clash held for hunting deer, Updated: August 1, 2015 05:53 IST.

[13] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-to-Grill-Premraj-for-3-days/2015/08/06/article2960000.ece

[14] http://www.thehindu.com/news/national/tamil-nadu/inspector-suspended-over-ambur-clash-held-for-hunting-deer/article7487594.ece

[15] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/08/05184106/Ambur-murder-case-of-a-young-man3-days-inspectorCipiciaiti.vpf

[16] During the questioning that followed it was found that they were C Christopher (51) of Kottricode, T Iyyappan (46) of Puthukadai, N Gopala Krishnan (22) of Puthukadai all from Kanyakumari district and C Martin Prem Raj (50) of Thirukoviloor in Villupuram district, said forest officials. All the four were booked under section 9 of Wild Life Protection Act on charges of trespassing into a reserve forest and poaching a sambar deer. They were arrested and were produced at the forest court, officials added. Of the arrested four Martin Prem Raj was an inspector of police who was on the look out list of Vellore police in connection with the Ambur riots in Vellore district recently.

http://m.newindianexpress.com/tamil-nadu/511278

[17] தினத்தந்தி, ஆம்பூர் வாலிபர் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டரை 3 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி..டி. போலீசார் விசாரணை வேலூர் கோர்ட்டு அனுமதி, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 06,2015, 2:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 05,2015, 6:41 PM IST.

[18]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7506466.ece

[19] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=160119

நீதிமன்ற தடை மீறல், போலீஸ் உத்தரவு எதிர்த்தல், போக்குவரத்து பாதிப்பு – ஊர்வலம் செல்ல முயன்ற தமுமுகவினர் கைது!

ஜூலை 7, 2013

நீதிமன்ற தடை மீறல், போலீஸ் உத்தரவு எதிர்த்தல், போக்குவரத்து பாதிப்பு – ஊர்வலம் செல்ல முயன்ற தமுமுகவினர் கைது!

TMMK defying ban court July 2013தடையை மீறி தமுமுக சென்னையில் ஊர்வலம் (06-07-2013): தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கோட்டை நோக்கி பேரணி இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து இந்த பேரணி அதன் தலைவர் ரிபாயி தலைமையில் செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது. இட ஒதுக்கீடு, திருமண சட்டத்தில் திருத்தம், நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடப்பதாக இருந்தது.  சென்னையில் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன. கோட்டை நோக்கி செல்லும் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை[1]. இதனை எதிர்த்து தமுமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதி மன்றம் 05-07-2013 அன்று தள்ளுபடி செய்தது[2]. எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது[3]. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயிருந்து பேரணி நடத்த தீர்மானித்தனர். ஆனால் த.மு.மு.க.வினர் ஒன்று திரண்டு பேரணியாக செல்ல திட்டமிட்டனர்[4]. அவர்களின் திட்டத்தை முறியடிக்க போலீசார் உஷாரானார்கள். இதையடுத்து பேரணிக்கு வாகனங்களில் வந்த தமுமுகவினரை சென்னைக்கு வெளியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தனர். ரயில் மூலம் சென்ட்ரல், எழும்பூர் வந்தவர்களும் தடுத்து நிறுதத்ப்பட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியலில் ஈடுபட்ட சுமார் 1,500 பேரை போலீஸார் கைது செய்தனர்.

TMMK defying ban court July 2013.2பஸ் – ரெயிலில் வந்த கூட்டம், கைது: பேரணியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் எழும்பூர் நிலையம் வந்த தொண்டர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 500 தொண்டர்கள் ரெயில் நிலைய வாசலில் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். த.மு.மு.க. தொண்டர்கள் திடீரென கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்தனர். இதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்ரு தெரியவில்லை. ஆனால் போலீசார் எழும்பூர் பகுதி முழுவதும், ரெயில் நிலையம் முன்பும் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களது போராட்டம் முறியடிக்கப்பட்டது. இப்படி செய்தி வெளியிட்டிருப்பதே வேடிக்கையாக இருக்கிறது.

TMMK leaders - Ribayi, Harun Ismail, Abdul Ajis, Kuthbudhin, Zakir Hussaiதமுமுகவின்  மூன்று கோரிக்கைகள்: தமுமுக வைத்துள்ள கோரிக்கைகள் இவைதான்:

  • முஸ்லிம்களுக்கான, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்;
  • 10 ஆண்டுகளை நிறைவு செய்த முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்;
  • திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

இவற்றை ஆழமாக அலசினால், அவர்கள் இந்தியாவில் ஏதோ தனியான மக்கள் போலவும், இந்நாட்டு சட்ட-திட்டங்கள் தமக்கு ஓத்துவராது போலவும் தெரிக்கிறது. எஸ்.சிக்களுக்குண்டான இடவொதுக்கீட்டில், உள்-ஓதுக்கீடு செய்கிறோம் என்று 3.5%த்தை ஜாதியேயில்லை என்று பறைச்சாற்றிக் கொள்ளும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதை எஸ்.சிக்கள் எதிர்த்துள்ளனர். ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் ஏனிப்படி இடவொதுக்கீடு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. பிரச்சினைகளை பாரபட்சமாக அணுகுவது தமுமுகவின் ஆர்பாட்டங்களில் தெரிகிறது[5]. லிங்கம் பெருமாள் என்ற தமிழக வீரர் காஷ்மீரத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தது[6], சிமி தொடர்புகள், அயல்நாட்டு பணம் பெற்றது முதலிய விஷயங்களில் சந்தேகமற்ற நிலையில்லாமல் இருப்பது[7] என்பன சில உதாரணங்கள்.

TMMK 2011 December 6 protestடிசம்பர் 6 2011ல் ஆர்ப்பாட்டம்

ஆதித்தனார் சிலை ரவுண்டானாவில் போராட்டம்[8]: இந்நிலையில் மாலை 3 மணியில் இருந்து எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகே தமுமுகவினர் குவிந்தனர். போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. பேரணியாகச் செல்ல முடியாததால் தமுமுகவினர் அங்கேயே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் மட்டுமன்றி அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சாலை உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினரை போலீஸார் கைது செய்தனர்[9]. பின்னர் தமுமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதை முன்னரே செய்யாமல், இவ்வாறு ஆர்பாட்டம் செய்து, பிறகு செய்தது எதைக் காட்டுகிறது?

TMMK  demonstration in Udhagamandalam Feb 2013பிப்ரவரி 2013 – உதகையில் போராட்டம்

போக்குவரத்து பாதிப்பும், மக்கள் தொந்தரவு அடைந்ததும்[10]: தமுமுகவினரின் இந்த பேரணியால் சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இன்று மாலை மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்த பேரணி காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இப்படி பிடிவாதமாக நடந்து கொள்வதால் சாதிப்பது என்ன ஆல்ல்லட்து இவர்கள் பொது மக்களுக்கு என்ன அறிவிக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பொது மக்கள் என்ன நினைப்பார்கள், இதனால், ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. விடுமுறை நாட்களில் பொதுவாக சென்னையில் கடைகளுக்குச் செல்வது என்று தான் இருப்பார்கள்.

M H Jawahirullahஜவாஹிருல்லா எம்.எல்.., கூறியதாவது[11]: “மாநிலம் தழுவிய பிரச்னைகளுக்கு, பேரணி நடத்த உரிமை உண்டு. நாங்கள், மூன்று அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய பிரச்னை என்பதால், சென்னையில், கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டோம்; பேரணிக்கு அரசு தடை விதித்துள்ளது. “மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு தடை விதிப்பதுஎன, முடிவு செய்து, முதலாவதாக எங்களில் இருந்து ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். இது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல் என்பதால், தடையை மீறி பேரணிக்கு குவிந்துள்ளோம். சட்டம்ஒழுங்கை மதிக்கவும் தெரியும்; எங்கள் உரிமையை வென்றெடுக்கவும் தெரியும். இரவு முதலே போலீசார், எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்து, ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளனர்; நாங்கள் எல்லாரும் அமைதியாக கைதாவோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

chennai_usconsulate_attack-by muslim party ibnliveசென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது

tmmk Hyder Aliவழக்கமான கைதும், விடுவிப்பும்: இந்த போராட்டத்தில் தமுமுக மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர், துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் வழக்கம் போல விடுவிக்கப்பட்டனர்[12]. சிரித்துக் கொண்டே பஸ்சில் ஏறியவர்கள், சிரித்துக் கொண்டே கைகளை உயர்த்தி ஆட்டிக் கொண்டு வெளியே வந்துவிட்டனர் போலும்!

TMMK taking everybody a raidசட்டப் பிரிவுகள் வலுவிழக்கின்றனவா அல்லது வழக்கமான சட்டத்தை மீறுபவர்  தப்பித்துக் கொள்கின்றனரா:  தமுமுகவின் தடையை மீறி செய்யப்படும் இத்தகைய சட்டமீறல்கள் வழக்கமாக, பழக்கமாக, வாடிக்கையாக தொடர்ந்து இருந்து வருவது தெரிக்கிறது. குறிப்பிட்ட நபர்கள் செய்யும் அதே குற்றமீறல்களை (repeated violations of the provisions of the same Act and Rules) மறுபடி-மறுபடி செய்யும் போது, அச்சட்டப் பிரிவுகள் வலுவிழக்கின்றனரா அல்லது வழக்கமான சட்டத்தை மீறுபவர் (habitual offenders) என்ற நிலையினை அடைகின்றனரா என்று சட்ட வல்லுனர்கள் ஆராய வேண்டும். வருடாவருடம், இம்மீறல்கள் நடைபெறுவதால், இது ஒரு சட்ட-வேடிக்கை நிகழ்வாக ஆகிவிட்டது. “காலையில் கைது–மாலையில் விடுதலை” என்ற அரசியல் வேடிக்கையாகவும் மாறி வருகிறது. ஆனால், ஏற்படும் பாதிப்பு அவ்வாறில்லை. நடந்தது நடந்ததாகத்தான் இருக்கிறது. விரயம் ஆனது விரயமானது தான், திரும்ப வராது. இழந்த நேரம், இழந்ததுதான்.

கீழ்கண்டவை உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது:

Business Standarad, Hundreds of TMMK members held in Chennai for defying ban, Chennai  July 6, 2013,  Last Updated at 23:18 IST[13]Special Correspondent, TMMK volunteers arrested for defying ban, The Hindu, Saturday, May 10, 2008[14].
Special Correspondent, TMMK man arrested in Ramnad, January 3, 2009, The Hindu,  RAMANATHAPURAM: The Tamil Nadu Muslim Munnetra Kazhagam district president Salimulla Khan was on Friday arrested under the Tamil Nadu Public Property Damage and Loss Act. Sources said when the cadres of TMMK led by him were taken to the police station by vans after being arrested for blocking the rail traffic in Ramanathappuram on December 6 they reportedly damaged seats of the police vans[15].

Tims of India, Hundreds arrested for defying ban, SWATI DAS, TNN | Dec 6, 2004, 05.48 PM IST[16]

வேதபிரகாஷ்

© 07-07-2013


[1] மாலைமலர், சென்னைபேரணிக்குஅனுமதிமறுப்பு: ரெயிலில்வந்த.மு.மு.. தொண்டர்கள் 500 பேர்கைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 06, 3:26 PM IST

[8] தினமணி, தடையை மீறி முஸ்லிம் அமைப்ப்பினர் போராட்டம்: 1500 பேர் கைது, ஜூலை 7, 2013.

[12] தினமலர், தடையைமீறிகோட்டைநோக்கிபேரணிக்குமுயற்சி : .மு.மு..,வினர் 3,400 பேர்கைது, பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013,00:20 IST