Posted tagged ‘ஆங்கிலேயர்’

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

Bhawans compromising act - Tipu and Aryans books

Bhawans compromising act – Tipu and Aryans books

முஸ்லிம் அமைப்புகள், கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்தது (2013): ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்றபோது, தயாரிப்பாளர்-நடிகர் சஞ்சய் கானுக்கு சரித்திர உண்மைகள் மறைக்காமல் சொல்லப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். கர்நாடகத்தின் சாராய மன்னன் திப்பு சுல்தானின் கத்தியை வாங்கி தனது செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு மதன் எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[1]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று அவர்களால் மதன் தொந்தரவுப்பட்டதும் உண்டு[2]. ஐ. எம். முத்தண்ணா[3] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.  இப்புத்தகம் இன்று வரை மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இப்பொழுது கூட எப்படி ஒரு கொடுமைக்காரனிடமிருந்து, ஒரு புலி உருவாக்கப்பட்டது என்று சரித்திர ஆதாரங்களுடன் திப்புவைப் பற்றி வெளியிடுகிறார்கள்[4]. இவ்வாறு எழுதியுள்ளவர் இந்து-ஆதரவாளர் அல்ல என்ரு குறிப்பிடத்தக்கது.

சுதந்திய யுத்தமேஇல்லை என்று மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் விளக்கம் கொடுக்கும் பொது, திப்பு எப்படி சுதந்திர போராளி ஆவான்?: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். அதாவது, அது வெறும் ஒரு கிளர்ச்சி, சாதாரணமான அங்கங்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சி, என்று தான் இன்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்[5].

1990ல் பகவான் எஸ். கித்வானி என்பவரின் நாவலை ஆதாரமாகக் கொண்டு, “திப்பு சுல்தானின் கத்தி” என்ற டிவி-தொடர் தூர்தர்ஷணில் ஒலி-ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டது. அதில் திப்பு சுல்தானின் கூரூரங்களை, கொடுமைகளை, கொலைகளை மறைத்து, ஏதோ மிகவும் நல்லவன் மாதிரி காட்டப்பட்டது. இதனால், இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சரித்திர ஆதாரம் இல்லாதலால், கீழ் கண்ட வாசங்களை ஒவ்வொரு காட்சியின் முதலும் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது[6].

“No claim is made for the accuracy or authenticity of any episode being depicted in the serial. This serial is a fiction and has nothing to do either with the life or rule of Tipu Sultan. The serial is a dramatised presentation of Bhagwan Gidwani’s novel.” இந்த டிவி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிக்கு எந்த உண்மையோ, ஆதாரமோ இருக்கிறது என்று கோரவில்லை. இது ஒரு கற்பனைக் கதையே அன்று, இது உண்மையான திப்புவின் வாழ்க்கை அல்லது ஆட்சியுடன் சம்பந்தமில்லாதது. இந்த தொடர் பகவான் கித்வானியின் நாவலை ஆதாரமாகக் கொண்டு நாடகம் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர். இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[7]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வர்கின்றன. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது.

கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[8].

திப்பு ஜெயந்தி எப்படி கொண்டாடப்பட்டது?: அரசு சார்பில் இவ்விழா கொண்டாடப்படுவதால், அரசின் பணம் உபயோகப்படுத்தப் படுகிறது. அதாவது, பெருபான்மையினரான இந்துக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை வைத்துக் கொண்டே, இவ்விழா எடுத்து, இந்துக்களை கொன்ற, கொடுமைப்படுத்திய திப்புவுக்கு ஜெயந்தி கொண்டாடுவதால் தான் அங்குள்ள மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும், முஸ்லிம் கோணத்தில் பார்த்தாலும், காபிர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு, இத்தகைய விழாக்கள் கொண்டாடப்படலாமா என்ற கேள்வியையும் எழுப்பலாம். இவ்விழாவில் திப்புவின் படம் வைக்கப்பட்டு, பூமாலை போடப்பட்டிருந்தது. பிறகு அனைவரும், அப்படத்திற்கு பூதூவி மரியாதை செய்தனர். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். கைக்கூப்பி வணங்கவும் செய்தனர். இப்பொழுதெல்லாம், முஸ்லிம்கள் படங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள், உருவங்களுக்கு மரியாதை செய்ய மாட்டார்கள், பூதூவி பூஜைப் போன்றெல்லாம் செய்ய மாட்டார்கள், வணங்க மாட்டார்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி, இந்த திப்பு ஜெயந்தி இவ்விதமாக நடந்தது? எப்படி ஆசாரமுள்ள முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டார்கள்? இவற்றையெல்லாம் “‌ஷிர்க்” என்றோ “ஹராம்” என்றோ கூறி தடுக்கவில்லையே? தொலைக் காட்சிகளில் காட்டப்பட்ட போது கூடல் கொதிக்கவில்லையே? அப்படியென்றால், சாமர்த்தியமாக ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லாவின் எச்சரிக்கைகளையும் மீறி அத்தகைய தகாத காரியங்களை அனுமதிக்கிறார்கள். சித்தராமையாவும், சந்தோஷமாகக் கொண்டாட தீர்மானித்து, முடித்து வைத்து விட்டார். இந்துக்களுக்கு வேண்டிய தீபாவளி நாளில் கொண்டாடி, ஒரு இந்துவயும் சாகடிக்க வைத்து விட்டார்.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[2] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[3] I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.

[4] http://www.ibnlive.com/blogs/india/d-p-satish/tipu-sultan-making-a-tiger-out-of-a-tyrant-11027-1162986.html

[5] https://secularsim.wordpress.com/2013/06/24/why-conflicting-views-come-about-hyder-ali-and-tipu-sultan/

[6]  A. G. Noorani. “Menace to free speech”. Online edition of The Frontline, volume 22, issue 26, December 17–30, 2005. Retrieved 2007-08-17.

[7] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[8] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

Bhawans compromising act - Tipu and Aryans books

Bhawans compromising act – Tipu and Aryans books

முஸ்லிம் அமைப்புகள், கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்தது (2013): ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்றபோது, தயாரிப்பாளர்-நடிகர் சஞ்சய் கானுக்கு சரித்திர உண்மைகள் மறைக்காமல் சொல்லப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். கர்நாடகத்தின் சாராய மன்னன் திப்பு சுல்தானின் கத்தியை வாங்கி தனது செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு மதன் எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[1]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று அவர்களால் மதன் தொந்தரவுப்பட்டதும் உண்டு[2]. ஐ. எம். முத்தண்ணா[3] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.  இப்புத்தகம் இன்று வரை மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இப்பொழுது கூட எப்படி ஒரு கொடுமைக்காரனிடமிருந்து, ஒரு புலி உருவாக்கப்பட்டது என்று சரித்திர ஆதாரங்களுடன் திப்புவைப் பற்றி வெளியிடுகிறார்கள்[4]. இவ்வாறு எழுதியுள்ளவர் இந்து-ஆதரவாளர் அல்ல என்ரு குறிப்பிடத்தக்கது.

1857 rebellion - not war of independence- Marxist interpretation

1857 rebellion – not war of independence- Marxist interpretation

சுதந்திய யுத்தமேஇல்லை என்று மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் விளக்கம் கொடுக்கும் பொது, திப்பு எப்படி சுதந்திர போராளி ஆவான்?: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். அதாவது, அது வெறும் ஒரு கிளர்ச்சி, சாதாரணமான அங்கங்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சி, என்று தான் இன்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்[5].

1857 rebellion - not war of independence

1857 rebellion – not war of independence

1990ல் பகவான் எஸ். கித்வானி என்பவரின் நாவலை ஆதாரமாகக் கொண்டு, “திப்பு சுல்தானின் கத்தி” என்ற டிவி-தொடர் தூர்தர்ஷணில் ஒலி-ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டது. அதில் திப்பு சுல்தானின் கூரூரங்களை, கொடுமைகளை, கொலைகளை மறைத்து, ஏதோ மிகவும் நல்லவன் மாதிரி காட்டப்பட்டது. இதனால், இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சரித்திர ஆதாரம் இல்லாதலால், கீழ் கண்ட வாசங்களை ஒவ்வொரு காட்சியின் முதலும் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது[6].

“No claim is made for the accuracy or authenticity of any episode being depicted in the serial. This serial is a fiction and has nothing to do either with the life or rule of Tipu Sultan. The serial is a dramatised presentation of Bhagwan Gidwani’s novel.” இந்த டிவி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிக்கு எந்த உண்மையோ, ஆதாரமோ இருக்கிறது என்று கோரவில்லை. இது ஒரு கற்பனைக் கதையே அன்று, இது உண்மையான திப்புவின் வாழ்க்கை அல்லது ஆட்சியுடன் சம்பந்தமில்லாதது. இந்த தொடர் பகவான் கித்வானியின் நாவலை ஆதாரமாகக் கொண்டு நாடகம் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர். இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[7]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வர்கின்றன. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது.

Mallaya, Janata Dal and Tipu politics 2003-04

Mallaya, Janata Dal and Tipu politics 2003-04

கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[8].

திப்பு ஜெயந்தி - முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி எப்படி கொண்டாடப்பட்டது?: அரசு சார்பில் இவ்விழா கொண்டாடப்படுவதால், அரசின் பணம் உபயோகப்படுத்தப் படுகிறது. அதாவது, பெருபான்மையினரான இந்துக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை வைத்துக் கொண்டே, இவ்விழா எடுத்து, இந்துக்களை கொன்ற, கொடுமைப்படுத்திய திப்புவுக்கு ஜெயந்தி கொண்டாடுவதால் தான் அங்குள்ள மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும், முஸ்லிம் கோணத்தில் பார்த்தாலும், காபிர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு, இத்தகைய விழாக்கள் கொண்டாடப்படலாமா என்ற கேள்வியையும் எழுப்பலாம். இவ்விழாவில் திப்புவின் படம் வைக்கப்பட்டு, பூமாலை போடப்பட்டிருந்தது. பிறகு அனைவரும், அப்படத்திற்கு பூதூவி மரியாதை செய்தனர். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். கைக்கூப்பி வணங்கவும் செய்தனர். இப்பொழுதெல்லாம், முஸ்லிம்கள் படங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள், உருவங்களுக்கு மரியாதை செய்ய மாட்டார்கள், பூதூவி பூஜைப் போன்றெல்லாம் செய்ய மாட்டார்கள், வணங்க மாட்டார்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி, இந்த திப்பு ஜெயந்தி இவ்விதமாக நடந்தது? எப்படி ஆசாரமுள்ள முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டார்கள்? இவற்றையெல்லாம் “‌ஷிர்க்” என்றோ “ஹராம்” என்றோ கூறி தடுக்கவில்லையே? தொலைக் காட்சிகளில் காட்டப்பட்ட போது கூடல் கொதிக்கவில்லையே? அப்படியென்றால், சாமர்த்தியமாக ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லாவின் எச்சரிக்கைகளையும் மீறி அத்தகைய தகாத காரியங்களை அனுமதிக்கிறார்கள். சித்தராமையாவும், சந்தோஷமாகக் கொண்டாட தீர்மானித்து, முடித்து வைத்து விட்டார். இந்துக்களுக்கு வேண்டிய தீபாவளி நாளில் கொண்டாடி, ஒரு இந்துவயும் சாகடிக்க வைத்து விட்டார்.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[2] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[3] I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.

[4] http://www.ibnlive.com/blogs/india/d-p-satish/tipu-sultan-making-a-tiger-out-of-a-tyrant-11027-1162986.html

[5] https://secularsim.wordpress.com/2013/06/24/why-conflicting-views-come-about-hyder-ali-and-tipu-sultan/

[6]  A. G. Noorani. “Menace to free speech”. Online edition of The Frontline, volume 22, issue 26, December 17–30, 2005. Retrieved 2007-08-17.

[7] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[8] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (2)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (2)

ரஜினி, திப்பு, சுல்தான்

ரஜினி, திப்பு, சுல்தான்

திப்புவை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது ஏன்?:  தி்ப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக கன்னட திரையுலக தயாரிப்பாளர் அசோக் கெனி எம்எல்ஏ கூறினார்[1]. இந்த படத்தில் திப்பு சுல்தானாக, ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினி நடிக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன[2]. இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நம்புவதாக, பா.ஜ. தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது[3]. “ரஜினி திப்பு சுல்தான் படத்தில் நடிக்கப் போவதில்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். அப்படியிருந்தும், ரஜினியை முன்னிறுத்தி மதவெறியை கக்கியிருக்கிறது, இந்து முன்னணி”, என்று தனக்கேயுரிய பாணியில் தமிழ்.வெப்.துனியா கமென்ட் அடித்திருந்தது, அதனுடைய சிந்தாந்த வெளிப்பாடாக இருந்தது[4]. இது குறித்து இந்து அடிப்படைவாதியும், இந்து முன்னணி தலைவருமான ராமகோபாலன் மதவெறி கருத்துக்களை வெளியிட்டுள்ளார், என்றும் தொடர்ந்தது[5].  பொதுவாகவே, முஸ்லிம் ஆதரவான “வினவு” என்ற இணைதளமும், தன்னுடைய சித்தாந்தத்தை வெளிப்படுத்தியது[6]. ஆனால், முஸ்லிம்கள் என்ன பேசினர், அவர்களது கருத்து என்ன என்பது பற்றி இவை குறிப்பிடவில்லை. அவர்களது கருத்தும் உச்சங்களைத் தொட்டுள்ளது. தௌஹீத் அமைப்பின் வீடியோ ஒன்று உதாரணமாகக் காட்டப்படுகிறது[7]. அதாவது ரஜினி விவரம் அவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகத் தெரிந்துள்ளது. சிபிஎம்.மும் விடவில்லை, உடனே இராமகோபாலனுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது[8]. ஆகவே, இப்பிரச்சினை தமிழகத்திலும் அரசியலாக்கப் பட்டுவிட்டது.

ரஜினி, சந்திரமௌளி, திப்பு சுல்தான்

ரஜினி, சந்திரமௌளி, திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் பற்றி இராம கோபாலன் எடுத்துக் காட்டியது (செப்டம்பர்.2015): சரி, என்ன அப்படி இராம கோபாலன் சொல்லிவிட்டார் என்று பார்ப்போம், “திப்பு சுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும். தமிழர்களை துரத்தியடித்த திப்பு சுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதல்அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர். எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.” – இவ்வாறு ராமகோபாலன் கூறினார். இதில் என்ன கருத்துக்களை வெளியிடப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. சரித்திர உண்மைகளை சொன்னால், அது மதவேறி என்றால், இவர்களது ஞானசூன்யத்தை என்னென்பது? இதேபோல தௌஹீத் வீடியோ பேச்சையும் கேட்கலாம். அவர் ஏதோ திப்புதான் ஆங்கிலேயரை எடுத்து பாராடினான், ராக்கெட் விட்டான் என்ற ரீதியில் பேச்சு இருக்கிறது. இதனால், 2013ல் நடந்தவற்றை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

செயின்ட் தாமஸ் சினிமா, கரு, ரஜினி, குஷ்பு, பிஷப்புகள் 2008

செயின்ட் தாமஸ் சினிமா, கரு, ரஜினி, குஷ்பு, பிஷப்புகள் 2008

தாமஸ்படத்தில் ரஜினி நடிப்பார் என்று கிறிஸ்தவ பாதிரிகள் அறிவித்தது: ரஜினிகாந்த்தின் பெயரை அந்த அளவுக்கு சுலபமாக இழுத்து விட முடியுமா என்று கவனிக்க வேண்டும். முன்னர் கூட, ரஜினிகாந்த், “தாமஸ்” படத்தில் நடிப்பார் என்றெல்லாம் கிறிஸ்தவ பாதிரிகள் அறிவித்தனர். அதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் செய்தனர். ஆனால், “தாமஸ்” பிரச்சினையில் பல்வேறு விவகாரங்கள் அடங்கியிருந்ததால், எங்கே விசயங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்று விளைவுகளை அறிந்த கிறிஸ்தவர்களே அடங்கி விட்டனர்[9]. அதாவது, இந்து-எதிர்ப்பு என்பதனால் நின்றுவிடவில்லை. அதேபோல, இப்பொழுது ரஜினி “திப்பு”வாக நடிப்பார் என்று ஒரு கன்னட தயாரிப்பாளர் சொல்வதை ஒதுக்கிவிட முடியாது. ரஜினியே கர்நாடகாவில் இருந்து வந்தவர் தாம், இன்றும் அவரது உறவினர்கள் அங்குள்ளனர். மற்றும் பலவிசயங்களில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆகவே, மற்ற கட்சியினர் கருத்துத் தெர்விக்கும் போது, இந்து சார்புடைய கட்சிகள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதில் ஒன்றும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா 2013லேயே, இதனை அரசியலாக்கிவிட்டார்.

ஹைதர் அலி - திப்பு - ஜெயலலிதா

ஹைதர் அலி – திப்பு – ஜெயலலிதா

மேமாதத்தில் 2013 ஜெயலலிதா எடுத்த முடிவு[10]: திப்புப் பிரச்சினையை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தது ஜெயலலிதா தான். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் மே 2013ல் கூறியிருப்பதாவது: “…………………………. இதே போன்றுஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும்அடிமைத் தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில்அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்”.[11], என்று அறிவித்ததால், திப்பு ஆதரவு-எதிர்ப்பு தமிழகத்திலும் ஏற்பட்டது. அம்மா செக்யூலரிஸ ரீதியில் எல்லோருக்கும் மணிமண்டபம், இவர்களுக்கும் அப்படியே என்ற ரீதியில் சொல்லிவிட்டார்! ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[12]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[13] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[14]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

திப்பு ஜெயந்தி - முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமாதிப்புவின் நினைவு நாளா, பிறந்த நாளா, ஜெயந்தியா?: பொதுவாக, இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் அவர்களது இறையியலை அறியாத மக்கள், எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். இல்லையென்றால், “நமக்கு எதுக்கு வம்பு, இதெல்லாம் துலுக்கன் பிரச்சினை”, பிரச்சினைதான் வரும் என்று ஒதுங்கி விடுவர். ஆனால், நாகை மன்சூர்[15] போன்றோர் அதனை எதிர்த்ததும்[16], பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தியதும் கவனிக்கத்தக்கது. முஸ்லிம்களுக்கு பிறப்பை விட, இறந்த நாள் தான் முக்கியத்துவமானது. அதனால் தான் அவர்கள்  214 நினைவு ஆண்டு என்று இறந்ததை-இறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், சித்தராமையா போன்ற செக்யூலரிஸ அரைகுறைகள் ஜெயந்தி, அதாவது பிறந்த நாள் என்று கொண்டாடுகின்றனர். இருப்பினும், முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது, இதை வைத்து ஓட்டு வங்கி, கலவரம், இந்து-விரோதம், அரசியல் நிலையில் வலதுசாரிகளுக்கு பாதிப்பு போன்றவற்றை உருவாக்கலாம், இருப்பதை அதிகமாக்கலாம், பிறகு அவற்றை உலகரீதியில் செய்திகளாக பரப்பி, பிரச்சாரம் செய்யலாம் என்று அவர்கள் தீர்மானத்துடன் அவ்வாறிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், முட்டாள் இந்து அமைப்புகள் எதிப்பு தெரிவித்து அவர்கள் விரித்த வலையில் விழுந்துள்ளன.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] http://tamil.cinecoffee.com/news/rajini-and-rajamouli-join-for-tipu-sultan-movie/

[2]  தினமலர், திப்பு சுல்தானாக ரஜினி : பா.. எதிர்ப்பு, செப்டம்பர்.15, 2015.09.39.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1342499

[4] தமிழ்.வெப்.துனியா, திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினியா? மதவெறியை தூண்டும் இந்து முன்னணி, Last Modified: சனி, 12 செப்டம்பர் 2015 (14:45 IST).

[5] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tipu-sultan-rajini-religious-fanaticism-hindu-munnani-ramagopalan-115091200017_1.html

[6] http://www.vinavu.com/2015/09/15/ramagopalan-diktat-to-rajinikanth-inside-story/

[7] http://thowheedvideo.com/5411.html

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/after-hindu-group-warns-rajini-cpm-says-tipu-protected-communal-235624.html

[9] மேலும் விவரங்களுக்கு என்னுடைய www.thomasmyth.wordpress.com என்ற தளத்தைப் பார்க்கவும்.

[10]  http://news.vikatan.com/article.php?module=news&aid=14904

[11]  http://www.dinamalar.com/news_detail.asp?id=714454&Print=1

[12] http://newindianexpress.com/states/tamil_nadu/Memorials-for-Sahajananda-Tipu-Hyder/2013/05/16/article1591819.ece?pageNumber=1&parentId=70530&operation=complaint

[13] https://www.facebook.com/NagaiMansoor

[14] https://www.facebook.com/pages/Islamic-Youngsters-EMAIL/228120720548662

[15] https://www.facebook.com/NagaiMansoor

[16] https://www.facebook.com/pages/Islamic-Youngsters-EMAIL/228120720548662