Posted tagged ‘அல்லா’
ஜூன் 26, 2020
கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்திருப்பது: கொரோனா உடல், மனம், ஆரோக்கியம், படிப்பு, வேலை, தொழில், வாழ்வாதாரம், பொருளாதாரம், மதம், சமூகம் என்று அனைத்தையும் பாதித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களை எந்தவித பாரபட்சமும் இன்றி கொன்றுள்ளது. இன்றும் பீடித்து வருகிறது, அதன் தீவிரம் தெரிகிறது. மதநம்பிக்கையாளர்கள் தத்தம் கடவுளர்களை பிராத்தனை செய்து, வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குறையவில்லை. அந்நிலையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைப் பெற்று வரும் வருடாந்திர பண்டிகைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், விரதங்கள், சடங்குகள் என்று எல்லாமே தடுக்கப் பட்டுள்ளன. ஏனெனில், மக்கள் கூடினால், நெருங்கினால், கொரோனா தொற்று அதிகமாகும். உயிரின் மீது ஆசை இருப்பதால், மக்கள் அடங்கி இருக்கிறர்கள். கடவுள் மீதான பயத்தை விட கொரோனாவின் மீதான பயம் அதிகமாக இருப்பது தெரிகிறது.

ஹஜ் பயணத்தையும் கட்டுப்படுத்திய கொரோனா: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ளது[1]. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள்[2]. ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது. சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது[3]. சவுதி அரேபியா மார்ச் மாதத்தில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது, மேலும் அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது[4].

கொரோனா மெக்கா-மதினாவைத் தாக்கியது: ஒரோனா பாதிப்பு, தொற்று என்று சவுதி அரேபியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அதிக அளவில் இறந்துள்ளனர். இதனால் மார்ச் மாதம் முதலே, மெக்கா / மக்கா, மதினா போன்ற, இஸ்லாமிய மத-ஸ்தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசு அங்கு, உட்புறம்-வெளிப்புறம் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், ஜம்-ஜம் என்ற இடத்தில் உள்ள நீரை பக்தர்கள் குடிப்பது, எடுத்துச் செல்வது உண்டு. மார்ச் மாதத்திலேயே, சவுதி அரேபியா, ஹஜ் திட்டங்களை நிறுத்து வைத்தது. இத்தாண்டும் அடையாளமாக சிலரே, தகுந்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப் படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது[5]. விமானங்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதை மார்ச் மாதத்திலிருந்து தடை செய்துள்ளது[6]. திராவிட நாத்திகர், இந்துவிரோத அவநம்பிக்கையாளர், கடவுள்-மறுப்பாளிகள் போல இந்துக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், துலுக்கர், இன்றும், இப்பொழுதும் இந்துமதத்தைத் தூஷித்து வருவது, சரியில்லை என்றோ, அவர்களை கண்டிப்பதோ இல்லை. அந்நிலையில் தான், இந்துக்கள் துலுக்கர், வெறிபிடித்த முஸல்மான்கள், முஸ்லிம்களின் நம்பிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதாகிறது.

வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாது–சவுதி அரேபியா: கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாத சூழலால் அதற்கு செல்வதற்காக இந்தியாவில் விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் 23-06-2020 அன்று தொடங்கியுள்ளது[7]. கரோனா தொற்று சவால்கள் காரணமாக, சவுதி அரேபிய அரசு எடுத்த முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தி்ல் கொண்டும், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை (1441 H/2020 AD) மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[8].

சவுதி அரேபியா முடிவால், இந்தியா பணத்தைத் திரும்ப கொடுத்தது: 23-06-2020 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசினார். சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர். முகமது சலே பின் தாகர் பென்டனிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு (1441 H/2020 AD[9]), இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பவேண்டாம் என சவுதி அரேபியா அமைச்சர் ஆலோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து விரிவாக ஆலோசித்தாகவும், கரோனா தொற்று சாவல்களை இந்த உலகமே சந்தித்து வருவதாகவும், இதனால் சவுதி அரேபியாவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் கூறினார்[10]. இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்[11]. விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும்[12]. இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள 2.13 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்[13].

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது: இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையில்லாமல் செல்ல 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இந்தாண்டு விண்ணப்பம் அடிப்படையில் அடுத்தாண்டு (2021) ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். இது தவிர புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த 2019ஆம் ஆண்டில், மொத்தம் 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர் என நக்வி தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதபெண்களும் அடங்குவர். ஆண் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை மத்திய அரசு கடந்த 2018-இல் உறுதி செய்த பின், மொத்தம் 3,040 பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்[14]. இந்திய விடுதலைக்குப் பின், நம் நாட்டை சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது இதுவே முதல்முறை என்று முக்தாஸ் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[15].

நாத்திகர், முகமதியர், மற்ற மதத்தினர் உணர்ந்து ஒழுங்காக இருக்க வேண்டும்: மெக்காவில் இருக்கும் பெரிய மசூதி மற்றும் நபிகள் மசூதி இவற்றை ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ், “ஹூஷோன் டெக்” உபயோகப் படுத்தி, காபா பகுதியை கிருமிகள் நீங்க, மருந்து அடித்து, ஏப்ரல் மாதத்தில் சுத்தப் படுத்தினார்[16]. அதேபோல, மற்ற பகுதிகள், உள்ளே இருக்கும், முக்கியமான இடங்கள் முதலியனவும் சுத்தம் செய்யப் பட்டன.[17] காபா, காபத்துல்லாஹ் என்றால், அல்லாஹ் கடவுள் வாழும் இடம், அப்படியென்றால், கடவுள் தன்னுடைய இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டாரா, சுத்தமாக வைத்திருக்க மாட்டாரா, தெரியாதா என்று நாத்திகவாதிகள், திராவிட கடவுள் மறுப்பு கோஷ்டிகள், பெரியாரிஸ வெங்காயங்கள் கேட்கவில்லை. ஆக, உண்மையில், இந்த கொரோனா, இத்தகைய போலிகளை, பொய்யர்களை, சித்தாந்த இரடைவேட கபோதிகளை வெளிப்படுத்தியுள்ளன. துலுக்கரும்ம் தம் நிலை உணர வேண்டும். இத்தகைய உண்மைகளை அறிந்து, மற்ற மதத்தினரைத் தாக்குவது, இழிவு படுத்துவது போன்ற வேலைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும். இவையெல்லாம் கிருத்துவர்களுக்கும் பொறுந்தும்.
© வேதபிரகாஷ்
26-06-2020

[1] மாலைமலர், ஹஜ் யாத்திரைக்கு அனுமதி இல்லை… கட்டணம் திரும்ப கொடுக்கப்படும் –முக்தார் அப்பாஸ் நக்வி, பதிவு: ஜூன் 23, 2020 14:13 IST
[2] https://www.maalaimalar.com/news/national/2020/06/23141342/1639365/Indian-pilgrims-will-not-travel-to-Saudi-Arabia-for.vpf
[3] தினத்தந்தி, குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும் – சவுதி அரேபியா, பதிவு: ஜூன் 23, 2020 07:38 AM
[4] https://www.dailythanthi.com/News/World/2020/06/23073805/Saudi-Arabia-confirms-Haj-to-be-held-this-year.vpf
[5] Gulfnews, Saudi Arabia considers limiting Haj numbers amid COVID-19 fears, Reuters, Published: June 08, 2020 22:25.
[6] https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-considers-limiting-haj-numbers-amid-covid-19-fears-1.1591641097152
[7] தமிழ்.இந்து, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை இல்லை; விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் பணத்தை பிடித்தம் இல்லாமல் திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை, Published : 23 Jun 2020 04:04 PM; Last Updated : 23 Jun 2020 04:29 PM.
[8] https://www.hindutamil.in/news/india/560783-muslims-from-india-will-not-go-to-saudi-arabia-to-perform-haj-2020.html
[9] இந்து நிருபர்கள் இன்னும் AD போடுவதை கவனியுங்கள், மெத்டப் படித்த, பயிற்சி எடுத்த அவர்களுக்கு CE தெரியாதா என்ன?
[10] ZH Web (தமிழ்), இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்: முக்தர் அப்பாஸ் நக்வி , Updated: Jun 23, 2020, 06:24 PM IST.
[11] https://zeenews.india.com/tamil/india/indian-muslims-will-not-go-to-haj-this-year-mukhtar-abbas-naqvi-337185
[12] நக்கீரன், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்து மத்திய அரசின் புதிய அறிவிப்பு…, Published on 23/06/2020 (17:21) | Edited on 23/06/2020 (17:43), நக்கீரன் செய்திப்பிரிவு.
[13] https://www.nakkheeran.in/24-by-7-news/india/hajj-trip-cancelld-india-2020
[14] தினமணி, நிகழாண்டு ஹஜ் பயணம் ரத்து: மத்திய அமைச்சா் நக்வி, By DIN | Published on : 23rd June 2020 11:06 PM
[15] https://www.dinamani.com/india/2020/jun/23/hajj-trip-canceled-central-senchach-naqvi-3429099.html
[16] Tuqa Khalid, Al Arabiya English, Coronavirus: Saudi Arabia’s Al-Sudais uses ‘Ozone tech’ to sterilize Kaaba in Mecca, Tuesday 28 April 2020
[17] The General President of the Affairs of the Grand Mosque and the Prophet’s Mosque, Sheikh Abdul Rahman Al-Sudais used on Monday “Ozone tech” to sterilize Islam’s holiest site, the Kaaba, in the Grand Mosque in Mecca, amid the coronavirus outbreak.
https://english.alarabiya.net/en/coronavirus/2020/04/28/Coronavirus-Saudi-Arabia-s-Al-Sudais-uses-Ozone-tech-to-sterilize-Kaaba-in-Mecca
பிரிவுகள்: அச்சம், அத்தாட்சி, அனுமதி, அன்சாரி, அன்சார், அமைதி, அரேபிய ஷேக்கு, அரேபியா, அல்லா பெயர், அல்லாஹ், கொண்டாட்டங்கள், கொரோனா பாதிப்பு, சடங்குகள், சுத்தம் செய்தல், தொடாதே, தொடு, தொடுதல், தொற்று, தொற்று மருந்து, பண்டிகைகள், பீடித்தல், மசூதி, மருந்து அடித்தல், மருந்து தெளித்தல், முகமது, முல்லா, முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லிம் சாமி, முஸ்லிம் பிரச்சினை, முஸ்லீம், முஸ்லீம்கள், விரதங்கள், விழாக்கள், வைரஸ், வைரஸ் கொரோனா, ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹஜ் மானியம், ஹஜ் யாத்திரை, Uncategorized
Tags: அல்லா, இஸ்லாம், கரோனா தொற்று, காபத்துல்லாஹ், காபா, கொண்டாட்டங்கள், கொரோனா, கொரோனா பாதிப்பு, கொரோனா வைரஸ், சடங்குகள், சவுதி, சவுதி அரேபியா, சுத்தம், ஜம்ஜம், தொற்று, நோய், பண்டிகைகள், மக்கா, மருந்து, மெக்கா, மெதினா, மோமின், விரதங்கள், விழாக்கள், வைரஸ் கொரோனா, ஹஜ் பயணம், ஹஜ் மானியம், ஹஜ் யாத்திரை
Comments: Be the first to comment
திசெம்பர் 2, 2016
மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன!

முதலில் இருவர், நால்வர் என்று இறுதியாக அறுவர் கைதானது: இதில், குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக முகம்மது அய்யூப் தெரிவித்த தகவலின்பேரில், மதுரை நெல்பேட்டை கீழமாரட் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (25) என்பவரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் மதுரையில் கைதான 4 பேரும் மேலூர் கோர்ட்டில் 29-11-2016 அன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மேல் விசாரணைக்காக பெங்களூர் தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த, இவர்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு, கைதான 4 தீவிரவாதிகளும் 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கொண்டு வரப்பட்டனர். முன்னதாக வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் விஜய் வரவழைக்கப்பட்டு கோர்ட் வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது.
- தாவூத் சுலைமான்(வயது 23), [கரீஸ்மா பள்ளிவாசல், மதுரை[1]]
- அப்பாஸ் அலி(27) [மதுரை இஸ்மாயில்புரம் நயினார் முகமது மகன்[2]],
- கரிம் ராஜா(23), [புதூர் விஸ்வநாதநகர் ராமுகொத்தனார் காம்பவுண்டைச் சேர்ந்த முகமது ஜைனுல்லாபுதின் மகன். பி.காம் படித்தவன், சிக்கம் கடை வைத்துள்ளவன்[3]]
- முகமது அயூப் அலி(25), [மதுரை திருப்பாலை ஐஸ்லாண்ட் நகர் முகமது தஸ்லிம் மகன்[4]]
- சம்சுதீன் என்ற கருவா சம்சுதீன்(25)[சிக்ந்த்ரின்மகன், நெல்பேட்டையைச் சேர்ந்தவன்[5] ]
- மொஹம்மதுஅயூப் [25, மொஹம்மதுதஸ்லிமின்மகன்[6]]
முக்கிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது: மத்திய குற்றப்புலனாய்வு எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையில் டெல்லி தேசிய புலனாய்வுப்படையினர், கைதான நால்வரையும் மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்பு ஆஜர்படுத்தினர்[7]. பின்னர் நால்வரையும் டிச. 1ம் தேதிக்குள் பெங்களூரு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[8]. கைதானவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோர்ட் வாசலில் காத்திருந்தனர். பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கைதானவர்கள் நால்வரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை அட்டைப்பெட்டியில் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் தேசிய பாதுகாப்பு படையினர் சீல் வைத்தனர். கிளம்புவதற்கு முன்னதாக, கைதானவர்களின் தாய்மார்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது மகனைப் பார்த்து பேசிவிட்டு வந்த ஒரு தாய், கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீவிரவாத பயிற்சி அளித்தவர்கள் கைதாகியுள்ளனர்: 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்ட 4 தீவிரவாதிகளும், மாலை 6.30 மணிக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிற்குப்பிறகு, காரில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாதுகாப்பு கருதியே மதுரையை தவிர்த்து மேலூர் கோர்ட்டில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்’ என்றார். முன்னதாக பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரை மற்றும் சென்னையில் கைதான தீவிரவாத கும்பல், கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நவ. 1ம் தேதி வரை ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் நெல்லூர், கேரள மாநிலம், கொல்லம் மற்றும் மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகப் பகுதிகளில் 5 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர்[9]. இச்சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட குக்கர், பேட்டரி, வெடிபொருட்களை மதுரையில் தயாரித்து, 4 மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது[10]. இதற்காக மதுரை மேலூர், சிவகாசி பகுதிகளில் வெடி மருந்துகள், பொருட்கள் வாங்கி தயாரித்துள்ளனர்[11]. மேலும், மதுரையில் 30 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளனர். சுலைமான் கைது, விவகாரங்களை சுலபமக்கியுள்ள்து[12].

கணினி வல்லுனனான சுலைமான் தலைவன்: இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் செல்போன்களை கொடுத்தால், பின்னர் போலீஸ் விசாரணையில் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால், அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தினால், அவர்கள் குண்டு வைக்கும் இடம் வரை செல்கிறார்களா என்பதை எளிதாக சென்னையில் உள்ள சுலைமான் கண்காணிப்பான். பின்னர் குண்டு வைத்து விட்டு திரும்பி வரும்வரையும் ஜிபிஎஸ் மூலமே அவர் கண்காணிப்பார். ஒருவேளை போலீஸ் பிடித்து விட்டால், மற்ற தீவிரவாதிகள் தப்புவதற்கும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வந்தனர் என்றும் தெரியவந்தது. மேலும் டிசம்பருக்குள் தென் மாநிலங்களில் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்[13]. இதற்கான வரைபடங்கள் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளன. இது குறித்தும் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[14]. இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், தமிழகத்தில் தேசிய புலனாய்வு படையினர் தங்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[15].
© வேதபிரகாஷ்
02-12-2016

[1] Dawood Suleiman, 23 yrs, s/o Saeed Mohd. Abdulla of Karimsa Pallivasal, Madurai, now
residing at Chennai. He works in a software firm and was the main leader of the terrorist gang.
He has been arrested in Chennai today 28-11-2016, for the involvement in the crime.
[2] Abbas Ali, 27 yrs, s/o Nainar Mohammed, resident of 11/23, 2nd floor, 4th street, Ismailpuram, Munichalai Road, Madurai. He studied up to 8th standard, and a painter. He is also running a library in the name ‘DARUL ILM’ at Madurai. He has been arrested in Madurai today [28-11-2016], for his involvement in the crime.
[3] Samsum Karim Raja, s/o V.S. Mohammed Jainullah- buddin, resident of No.17, Ramu kothanar compound, Viswanatha Nagar, K. Pudur, Madurai. He is a B.Com graduate and runs a chicken broiler shop at Kannimara Koil street in Madurai. He has been arrested in Madurai today 28-11-2016, for his role in the crime.
[4] Md. Ayub Ali, age 25 yrs, s/o Mohd Tasleem, resident of Island nagar, Madurai. He is a Public liaison officer for a hearing aid company. He is being further examined in Madurai for his role in the crime.
[5] Today 29-11-2016, NIA has arrested accused namely Shamsudeen, aged 25 yrs, S/o
Sikander, R/o No.13-C, Kilamarat Veedhi, Opposite Thayir Market, Nelpettai, Madurai
[6] Today 29-11-2016, NIA has arrested accused namely Mohd Ayub aged 25 yrs, S/o Mohd Dhaslim, Island Nagar, 2nd Cross Street, Kaipathur, Madurai in Madurai in RC-03/2016/NIA/HYD.
[7] http://timesofindia.indiatimes.com/city/chennai/TCS-techie-who-plotted-to-target-PM-Modi-held-in-TN/articleshow/55677420.cms
[8] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/114_1_PressRelease_29_11_2016_1.pdf
http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/360_1_PressRelease_29_11_2016_2.pdfUPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST
[9] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் மேலும் இரு தீவிரவாதிகளை இன்று கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், By: Veera Kumar, Published: Tuesday, November 29, 2016, 15:33 [IST]
[10] The Hindu, NIA detains four youths for blasts in courts, Vijaita Singh, MADURAI/NEW DELHI: NOVEMBER 29, 2016 01:07 IST UPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST.
[11] http://www.thehindu.com/news/national/NIA-detains-four-youths-for-blasts-in-courts/article16717767.ece
[12]
[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/mysuru-blast-2-more-from-base-movement-secured-nia-268498.html
[14] The Hindu, NIA arrests one more terror suspect in Madurai, by S. Sundar, MADURAI NOVEMBER 29, 2016 20:47 IST UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IST.UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IS
[15] http://www.thehindu.com/news/national/NIA-arrests-one-more-terror-suspect-in-Madurai/article16721360.ece
பிரிவுகள்: அப்துல் கயூம், அமைதி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, அழிப்பு, அழிவு, ஐ.டி.தீவிரவாதி, சம்சுதின், சுலைமான், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, தாருல்-இஸ்லாம், தாருல்-ஹராப், தார்-உல்-இஸ்லாம், நீலாங்கரை, மின்னணு ஜிஹாதி, மின்னணு ஜிஹாத், Uncategorized
Tags: அப்பாஸ் அலி, அல் - உம்மா, அல்-குவைதா, அல்லா, கரீம் ராஜா, குண்டு, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, சுலைமான், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகள், ஜிஹாத், தாவூத், தீவிரவாதம், தீவிரவாதி, பயங்கரவாதம், பயங்கரவாதிகள், மதுரை
Comments: 2 பின்னூட்டங்கள்
நவம்பர் 20, 2016
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.

இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டேசனின் நடவடிக்கைகள்: மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்[1]. இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது[2]. இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்[3]. அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்[4]. இருப்பினும் வெளிநாடு சென்ற நாயக் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை[5]. சென்ற வாரம் தனது தந்தை இறந்த போது கூட, வந்தால், கைது செய்யப் படுவோம் என்று அஞ்சி வராமல் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனிக்கும் போது, வெளிநாட்டில் இருக்கும் நாயக்கிற்கு, விசயங்கள் சென்று சேர்ந்து வருகின்றன என்று தெரிகிறது.

மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[6]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[7]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[8]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[9]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[10]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூரமாக தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப் படுத்தப்படுவதாக உறுதியானது.
19-11-2016 அன்று நடந்த சோதனைகள்: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் [National Investigation Agency], அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 2016 நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். பங்களாதேசமே இதை அறிவித்து, தடை செய்யுமாறுஈந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன. இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.
முறைப்படி மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள்: ஊடகங்கள் தினமும், அரசு நடவடிக்கைகளை பலவிதமாக வர்ணித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முக்கிய பிரச்சினைகளை விடுத்து, ஜாகிர் நாயக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும், கைது செய்யப் பட்டால் என்ன செய்வார், ய்ஜடை செய்யப் பட்டால் மேல்முறையீடு செய்வாரா, என்றெல்லாம் விவாதம் என்ற பெயரில் நாயக்கிற்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத செயல்களை உலகளவில் கட்டுப் படுத்த எல்லா நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் ஜி.எஸ்.டி அமூல் படுத்தியவுடன், அந்நிய நாடுகளின் முதலீடு அதிகமாகி, தொழிற்சாலைகள் நிறுப்பப்படும். அந்நிலையில், தீவிரவாதிகள் ஒன்றும் செய்யக் கூடாது. அத்தகைய, சுமூகமான நிலையை இந்தியா ஏற்ப்டுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஜாகிர் நாயக்கின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்தது.
முறைப்படி விசாரணை, ஆதாரங்கள் முதலியவற்றுடன் வழக்கு பதிவு செய்த விதம்: சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால், ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை செய்பவஎகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாயக்கின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை கொண்டு வரப்பட்ட முழுமையாக அலசிப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கிறேன் என்ற போர்வையில், எவ்வாறு முஸ்லிம்-அல்லாதர்களின் மீது ஜிஹாத் என்ற போரை நடத்துவது, போன்ற தீவிரவாதத்தை போதிக்கும் போக்கு அறியப்பட்டது. இவரால் ஈர்க்கப் பட்டு, ஐசிஸ்.சில் சேர்ந்து, ஓடி வந்தவர்களிடம் விசாரித்து திட்டத்தையும் அறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15–ந்தேதி [செவ்வாகிழமை 15-11-2016] அறிவித்தது[11]. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் [ Unlawful Activities (Prevention) Act and the Indian Penal Code] பல்வேறு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை 18-11-2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது[12]. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
© வேதபிரகாஷ்
20-11-2016

[1] தினகரன், ஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.ஐ.ஏ நடவடிக்கை, Date: 2016-11-20@ 00:02:37.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=260007
[3] பிபிசி.தமிழ், இஸ்லாமிய போதகர் ஷாகிர் நாயக்கோடு தொடர்புடைய மும்பையின் 10 இடங்களில் சோதனை, நவம்பர் 20,2016,11.25 pm.
[4] http://www.bbc.com/tamil/india-38040016
[5]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html
[6] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.
http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[7] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST
[8] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html
[9] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html
[10] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[11] தினத்தந்தி, தொண்டு நிறுவனங்களில் சோதனை: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 2:26 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 3:45 AM IST
[12] http://www.dailythanthi.com/News/India/2016/11/20022625/Religious-preacher-Zakir-Naik-cases–National-intelligence.vpf
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அழிவு, அழுக்கு, ஆதரவு, ஆதாரம், ஆயுதப்படை, இந்திய ஊடகங்கள், இந்தியா, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐஸில், ஒஸாமா பின் லேடன், ஜாகிர் நாயக், ஜாகீர், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாத், மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, யுத்தம், வங்காள தேசம், வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, வளைகுடா, வழக்கு, வேலை, ஷிர்க், Uncategorized
Tags: அமைதி குலைத்தல், அமைதி டிவி, அல்லா, இடையூறு, இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐஎஸ்ஐஎஸ், ஐசில், ஐசிஸ், சவுதி, சவுதி அரேபியா, சிரியா, ஜாகிர், ஜாகிர் நாயக், தடை, துவேசப் பேச்சு, பீஸ் டிவி, மும்பை
Comments: Be the first to comment
திசெம்பர் 31, 2015
ஆயிஷா அன்ட்ரப் – பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி: துக்தரன்-இ-மில்லத் [(Dukhtaran-e-Millat (DeM), உம்மாவின் மகள்கள்] என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி-தலைவி ஆஷியா அன்ட்ரபி (Asiya Andrabi, வயது 53) 2010களில் “கல்லடி கலாட்டா” என்ற யுக்தியைக் கையாண்டு, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை தெருக்களில் வந்து, பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் மீது கற்களை எறியும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். கடந்த ஆகஸ்ட் 14, 2014 அன்று பாகிஸ்தான் கொடியேற்றி, பாகிஸ்தான் விடுதலை தினத்தைக் கொண்டாடினாள். இதே போல மார்ச்.23, 2014 அன்றும் செய்துள்ளாள். செப்டம்பர் 2014ல் கைது செய்யப்பட்டாள்[1]. உடன் பெஹ்மிதா சூபி [Fehmida Soofi] என்ற இன்னொரு பிரிவினைவாதக்குழுத் தலைவியும் இருந்தாள். இதனால், இவள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது[2]. உடனே, தொலைபேசியில், மும்பை குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேடப்பட்டுவரும், தீவிரவாதியான ஹாவிஸ் சையதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். சையது ஜிலானியின் மாணவி, பிரிவினைவாதத்தில் ஈர்க்கப்பட்டு, ஜிலானி வழியில் செயல்பட்டும் அடிப்படைவாத போராளி. மனித உரிமைகள் பெயரில், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் குரூரக் கொலைகள், கற்பழிப்புகள் முதலியவற்றை மறைத்து, அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் உரிமைகள் பற்றி பேசிவரும் திறமைசாலி. இதனால், சிறைக்குள் செல்வது, வெளியே வருவது என்பது வாடிக்கையாகி விட்டது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி என்று போதிக்கும் இவள் பிரிவினைவாதப் போர்வையில், ஜிஹாத் தத்துவத்தை பெண்களுக்கு போதித்து வருகிறாள்.

ஜிஹாதி குடும்பத்தில் பிறந்து, ஜிஹாதியாக செயல்பட்டுவரும் ஜிஹாதி–பெண்: ஆயிஷா அன்ட்ரபி 1962ல் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது[3]. 1990ல் ஆஷிக் ஹுஸைன் என்ற பயங்கரவாதியை நிக்காஹ் செய்து கொண்டாள், அவனும் பயங்கரவாத செயல்களுக்காக கடந்த 23 ஆண்டுகளாக 1992லிருந்து சிறையில் இருக்கிறான். ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைத் துவக்கியவர்களுள் ஒருவன். மொஹம்மது பின் காசிம் (23) மற்றும் அஹமது பின் காசிம் (15) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவளுடைய மற்ற உறவினர்கள் பாகிஸ்தான், சௌதி அரேபியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டனர். 1990ல் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி, பிறகு 2004-2007 காலத்தில் தலைமறைவாக வாழ்ந்தாள். சர்வகட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் [All Parties Hurriyat Conference] கிளையாக துக்தரன்-இ-மில்லத் செயல்பட்டு வருகிறது. இவளின் மூன்று மைத்துனர்கள், தீவிரவாத தொடர்புகளுக்காக, பாகிஸ்தானில் செப்டம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர். 2010ம் வருடம் மஸ்ரத் ஆலத்துடன் “கல்லடி கலாட்டாவில்” இறங்கியவள். இளைஞர்கள் மற்றவர்களைத் தூண்டிவிட்டு நடத்திய இந்த கல்லடி கலாட்டாக்களில் சுமார் நூறு பேர் இறந்ததாக தெரிகிறது. வெளிப்டையாக ஜிஹாதித்துவத்தை போதித்து இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி வருகிறாள் என்று காஷ்மீர மிதவாதிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.

கல்லெறி கலாட்டா ஜிஹாதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட்.2011)[4]: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தும் கொழுத்தினார்கள். கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அங்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பாலஸ்தினத்தில் பயன்படுத்தப் படும் முறை என்பதனையும் அறியப்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதிலும் ஊடகக்காரர்கள் காயப்பட்டனர். ஆனால், இதைப் பற்றி அவர்கள் ஒன்றும் ஆர்பாட்டம் செய்யவில்லை. இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கலவரத்தின் போது தீ வைப்பு போன்ற சட்ட விரோத செயலில் சம்பந்தப்படாமல் கல்வீச்சில் மட்டும் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டது[5]. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது[6]. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைத்தவர்களை தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கூறினார்[7].

பசுமாட்டை அறுத்து எதிர்ப்புத் தெரிவித்த பயங்கரவாதி[8]: ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட பசு-மாமிச விற்பனை தடையை எதிர்த்து செப்டம்பர் 2015ல் ஒரு பசுவைக் கொன்று, அந்த கொலைக்காட்சி விடியோவை வெளியிட்ட[9] ஆயிஷா அன்ட்ரபியை என்னென்பது? அவளைக் கொடூரக்காரி எனலாமா அல்லது ஜிஹாதி என்று பாராட்டலாமா? பெண்களுடன் நின்று கொண்டிருக்கிறாள். ஒரு பசுமாட்டை இழுத்து வந்து, அவள் முன்னால் அறுக்கிறார்கள். அந்நேரத்தில் “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்” என்று கத்துகிறாள். வெறியோடு கத்தும் அவளது குரல் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இதில் திகிலூட்டுவது என்னவென்றால், குழந்தை ஏந்திய ஒரு பெண் முன்வரிசையில் நின்று கொண்டு அவ்வாறு கத்துகிறாள். இப்படி பயங்கரமான செயல்களை சிறுவயதிலிருந்தே பார்த்து, கடினமாகி, இருகிவிட்ட இம்மனங்களுக்கு ஜீவகாருண்யம் என்பதெல்லாம் எப்படி புரியும்? பெண்கள் மென்மையானவர்கள் என்றெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. பெண் என்றால், பேயும் இரங்கும் என்றேல்லாம் சொல்லமுடியாது, ஏனெனில், பேயே இவளைக் கண்டால், பயப்படும். மற்ற பெண்களின் துன்பத்தை கண்டுகொள்ளாமல் மரத்துப் போன, வெறிபிடித்த ஜிஹாதி, முஸ்லிம் பெண்களுக்காக பாடுபடுகிறாள் என்று வேறு சொல்லிக் கொள்கிறாள். இந்நிகழ்ச்சி வெளிப்படையாக ஊடகங்களில் வரவில்லை. மறைக்கப்பட்டது எனலாம். “பீப்” விசயத்தில் அத்தனை கலாட்டா, ஆர்பாட்டம் செய்த ஊடகங்களை இதனை ஏன் மறைக்க வேண்டும்? இது சகிப்புத்தன்மையா என்று யாரும் கேட்கவில்லை.

ஆயிஷா அன்ட்ரபி ஐசிஸ்க்கு ஆள்பிடிக்கும் போராளியா?: இப்பொழுது டிசம்பர் 2015ல் ஹைதரபாதிலிருந்து மூன்று இளைஞர்கள் அன்ட்ரபியை சந்தித்து ஐசிஸ்ஸில் சேர செல்வதாக மத்தியாரசு புலனாய்வுத் துறைக்குத் தெரிய வந்தது[10].
- மொஹம்மது அப்துல்லா பசித் [Mohd Abdulla Basith],
- சையது ஒமர் பரூக் ஹுஸைனி [Syed Omer Farooq Hussaini]
- மாஜ் ஹஸன் பரூக் [ Maaz Hasan Farooq]
இவர்கள் எல்லோருமே 20-22 வயதினர், உறவினர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, அன்ட்ரபியை சந்தித்து, பாகிஸ்தான் வழியாக ஐசிஸ் சேர செல்வதாக இருந்தது. கடந்த வாரம் மஹாராஷ்ட்ரா ஏ.டி.ஸ்.பிரிவு போலீஸாரால், நாக்பூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது அவ்விவரம் தெரியவந்தது. அவர்கள் அன்ட்ரபியை சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்தனர்[11]. இவர்களது மாமா சையது சலாவுத்தீன், தடை செய்யப்பட்ட சிமியின் தலைவர் ஆவார். இவர்கள் ஐசிஸ், தாலிபான், அல்-குவைதா அல்லது ஹிஜ்புல் முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத இயக்கத்துடன் சேருவதாக திட்டமிட்டிருந்தனர்[12]. ஆனால், அன்ட்ரபி அவர்கள் தன்னை சந்திக்கவில்லை என்றும், அவர்கள் யார் என்பதும் தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் வேண்டுமென்றே தன் பெயரை இழுத்து விட்டனர் என்றும் கூறியுள்ளாள்[13]. சட்டத்தை வளைப்பதற்கு இவ்வாறு பேசுவது, பலமுறை சிறைச் சென்று விடுவிக்கப்பட்ட இவளுக்கு கைவந்த கலை என்பதால், ஒன்றும் வியப்பில்லை. விடுவிக்கப்பட்ட பிரிவினைவாதியான மஸரத் ஆலமும் [Masarat Alam] மறுபடியும் கைது செய்யப்பட்டான்.

© வேதபிரகாஷ்
31-12-2015
[1] The youngest child of prominent Srinagar doctor Sayeed Shahabuddin Andrabi, 1962-born Ms. Andrabi had completed a degree in biochemistry, and hoped to study further in Dalhousie. http://www.geo.tv/article-197860-Asiya-Andrabi-arrested-four-Kashmiris-killed-in-Indian-army-firing-
[2] The DeM chief celebrated Pakistan’s Independence Day on August 14 at her residence by singing that country’s national anthem and unfurling the flag of the neighbouring country on the outskirts of the city. Hours after that, Andrabi had stoked another controversy by addressing via phone a rally in Pakistan which was organized by Mumbai attack mastermind Hafiz Saeed-led Jamat-ud Dawa (JuD).
Saeed was sitting on the stage during Andrabi’s address. Andrabi had earlier also celebrated Pakistan’s National Day on March 23 this year and hoisted the flag of the country and sung its national anthem, following which the police registered a case against her under the Unlawful Activities Prevention Act.
http://articles.economictimes.indiatimes.com/2015-09-18/news/66677405_1_dem-chief-pakistani-flag-saeed
[3] http://www.thehindu.com/news/national/inside-kashmirs-new-islamist-movement/article580687.ece?ref=relatedNews
[4] மாலைமலர், கல் எறிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு: காஷ்மீர் அரசு அறிவிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28, 3:04 PM IST.
[5] http://www.maalaimalar.com/2011/08/28150458/Amnesty-for-throwing-stones-Ka.html
[6] தினமலர், கல் எறிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு, ஆகஸ்ட்.28, 2011, 17:14.
[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=302950
[8] https://www.youtube.com/watch?v=UVwF71dJWMQ
[9] Ms. Andrabi, who slaughtered a cow after a court ordered banning the same, faces a number of FIRs in the Valley. She released a 1:15-minute video on September 10 wherein she slaughtered a cow to defy the beef ban.
http://www.thehindu.com/news/national/separatist-andrabi-arrested-for-antinational-activities/article7664426.ece
[10] The central government has ordered an investigation by a high-level body after three boys, Mohd Abdulla Basith, Syed Omer Farooq Hussaini and Maaz Hasan Farooq (all aged around 20-22) from Hyderabad claimed they were on their way to Srinagar to meet Andrabi.
http://www.hindustantimes.com/punjab/dukhtaran-e-millat-chief-asiya-andrabi-denies-isis-links/story-uSQaI3tGwRuMcn9g6Q00tL.html
[11] Whether Kashmiri separatist leader Asiya Andrabi visited Telangana has yet to be determined, said the local police today amid reports that three young men arrested for wanting to join jihadi groups in Pakistan have confessed that they wanted to meet the 53-year-old.
http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743
[12] During the interrogation, the arrested men reportedly confessed that they were trying to join any of the jihadist groups — ISIS, Al Qaeda or Hizbul Mujahideen. The police say their uncle was Sayed Salahuddin, the former chief of the banned Students Islamic Movement of India or SIMI.
http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743
[13] “I came to know about the story through the media. Even the ATS (Anti-Terrorism Squad) Hyderabad was quoted saying that they [the boys] wanted to meet me. I think the arrested boys know better why they named me. It seems my name has been deliberately dragged in,” said Ms. Andrabi.
http://www.thehindu.com/news/national/other-states/never-met-hyderabad-youths-andrabi/article8046023.ece
பிரிவுகள்: அப்சல் குரு, அமர்நாத் யாத்திரை, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்-முஜாஹித்தீன், அல்-முஹாஜிரோன், அல்லாஹூ அக்பர், ஆயிஷா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கற்களை வீசி தாக்குவது, கற்பழிப்பு ஜிஹாத், கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், காஃபிர், கிலானி, கொலை வெறி, சரீயத், சரீயத் சட்டம், துக்தரன்-இ-மில்லத், பசு, பசு மாமிசம், பசு வதை, மாட்டிறைச்சி, Uncategorized
Tags: அல்லா, ஆயிசா, ஆயிசா அன்ட்ரப், ஆயிஷா அன்ட்ரப், ஆயிஸா அன்ட்ரப், ஐசில், ஐசிஸ், கத்தி, கல், கல்லெறி கலாட்டா, கல்லேறி ஜிஹாத், சிரியா, ஜிஹாதி கணவன், ஜிஹாதி குடும்பம், ஜிஹாதி மனைவி, ஜிஹாத், துக்தரன்-இ-மில்லத், பசு, பசு மாமிசம், பசுவதை, பெண் ஜிஹாத்
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 28, 2015
தாய்மார்கள் தங்கள் மகன்களை என்கவுன்டரில் கொலை செய்ய்யப் படுவார்களோ என்று அச்சப்படுகின்றனரே – அப்படியென்றால் அவர்களால் கொலை செய்யப் பட்டவர்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள் என்ன பாட்டு பாட்டிருப்பர், இன்றும் தவித்துக் கொண்டிருப்பர்?

puzhal_ஜெயிலர், வார்டன், போலீஸ் தாக்கப்படல்
புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்[1]: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[2]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”. இவையெல்லாம் யாரோ சொல்லிக் கொடுத்து பேசப்பட்டவை என்று நன்றகவே தெரிகிறது[3].

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், ஒஇலால் மாலிக், அபுபக்கர் சித்திக் – அல்-உம்மா,
ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[4]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[5], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[6]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும்” என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[7]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது. பன்னா இஸ்மாயில் நேற்று மதியம், மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் ரிமாண்ட் கைதிகள் உள்ள 2 வது ‘செல்’லில் அடைக்கப்பட்டார். அவரை சிறை காவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[8].

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் – அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு
பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி: சிறை நிலவரம் குறித்து மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கிடையில் பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது[9]: “சிறையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன். பாதுகாப்பு மிகுந்த சிறையில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறைக்காவலர்களை எப்படி தாக்க முடியும். காயம்பட்ட அவர்களை மட்டும் காண்பிக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் அவர்களை சந்திக்க முயன்ற போது, ஜெயிலர் எங்களை மோசமாக நடத்துகிறார். நோன்பு கஞ்சியை கூட சரியாக தருவதில்லை. மேலும் எங்களிடம் வேண்டுமென்றே வம்பு செய்கிறார் என்று கூறினார்கள். நாங்கள் இது குறித்து உயர் அதிகாரியிடம் தெரிவித்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் அங்கு கலவரம் ஏற்படுத்தி, அவர்களை என்கவுண்ட்டர் செய்ய தான் திட்டம் தீட்டி உள்ளனர். முதியவர்களாகிய நாங்கள் வெகு தூரத்திற்கு சென்று அவர்களை சந்திக்க முடியவில்லை. எனவே அரசு அவர்களை நாங்கள் எளிதில் சந்திக்கும் வண்ணம் மதுரை அல்லது திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும். நாங்கள் அடிக்கடி சந்திப்பதால் அவர்கள் திருந்த அதிக வாய்ப்பு உள்ளது. அதை விட்டு, விட்டு அவர்களை தனித்தனியாக பிரித்து என்கவுண்ட்டர் செய்ய சதி நடப்பதாக எங்களுக்கு தகவல் வருகிறது. திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது. அவர்களை அருகில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்[10]. பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜாகிர் உசேனை அடித்து கலாட்டா செய்து, கலவரம் உண்டாக்கி ஜெயிலர், வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கியதால், அவர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

“திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”: குண்டுவெடிப்பு, கொலைகள், அப்பாவி மக்களின் உயிர்பலி, குடும்பங்கள் அதோகதி, தந்தையர்களை இழந்த மகன்கள் – மகள்கள், கணவர்களை இழந்த மனைவிகள், மகன்களை இழந்த தாயார்கள், சகோதர்களை இழந்த சகோதரிகள், இவர்களைப் பற்றி இந்த தாய்மார்கள் யோசித்துப் பார்த்திருப்பார்களா? பிறகு மகன்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட எப்படி சம்மதம் கொடுத்தனர், ஒப்புக் கொண்டனர்? அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அவஎகளை அப்பொழுதே திருத்தி இருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை? “திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”, என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாமானது? இவர்கள் திருந்தியிருந்தால், புழல் ஜெயிலில் இத்தகைய கலவரம், தாக்குதல், முதலியன நடந்திருக்காதே? சித்தூரில் குடும்பம் முழுவதும் சேர்ந்து கொண்டு தானே இதே தீவிரவாதிகளுக்கு உதவி செய்தனர்? குழந்தைகளை முன் வைத்து, தப்பிச் செல்லப்பார்த்தனரே? அவர்களுக்கு உண்மைகள் எல்லாமே தெரிந்து தானே இருந்திருக்க வேண்டும். இல்லாமலா அவர்கள் போலீஸாரையும் எதிர்த்து வேலை செய்திருக்கிறார்கள்?
© வேதபிரகாஷ்
28-09-2015
[1] தினமலர், பிலால் மாலிக், பக்ருதீன் உயிருக்கு ஆபத்து போலீஸ் மீது சகோதரர் குற்றச்சாட்டு, செப்டம்பர்.26, 2015: 22.29.
[2] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].
[3] முன்பு பெங்களூரு குண்டுவெடிப்பில் கைதானவர்களை, எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று கைதானவர்களின் மனைவிகள் வழக்கு போட்டார்கள், பேட்டி கொடுத்தார்கள், ஆனால், குற்றவாளிகள் தாம் என்றவுடன் அமைதியாகி விட்டன. விளம்பரம் கொடுத்த ஊடகங்களும் அடங்கிவிட்டன.
[4] விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)
Last updated : 16:05 (26/09/2015).
[5] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html
[7] http://www.vikatan.com/news/article.php?aid=52934
[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350856&Print=1
[9] மாலைமலர், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கை என்கவுண்டர் செய்ய சதி: உறவினர்கள் பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27, 6:23 PM IST.
[10] http://www.maalaimalar.com/2015/09/27182331/Police-Fakhruddin-Bilal-Malik.html
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அல் - உம்மா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், என்கவுன்டர், காவலர், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, கொலை, சிறை, ஜெயிலர், ஜெயில், புழல், வார்டன்
Tags: ஃபத்வா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், என்கவுன்டர், கலவரம், காபிர், சிறை, சிறைச்சாலை, ஜிஹாதி, ஜெயிலர், ஜெயில், புழல், போலீஸார், வார்டன்
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 17, 2015
மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை – பத்வாவுக்கு பொருட்செறிவு கொண்ட ரஹ்மானின் பதில்!

A R REhmans reply to fatwa
மெசஞ்சர் ஆஃப் காட் என்ற ஈரானிய திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக தமிழகத்தை சேர்ந்த ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர், ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையை சேர்ந்த’ ரஸா அகாடமி ‘ என்ற சன்னி முஸ்லிம் அமைப்பு ஃபத்வா விடுத்தது.லிரான் ஒரு ஷியா நாடு, இருப்பினும் இஸ்லாத்தை காப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இன்றைய நாட்களில், சுன்னி நாடுகளில் ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்க்ஜள், அவர்களது மசூதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுதுள்ள தீவிரவாத இயக்கங்களும் சுன்னி ஆதரவு கோஷ்டிகளாக உள்ளன. ஐ.எஸ் / ஐசிஸ் போன்றவையும் ஷியா-விரோத இயக்கங்களாக இருக்கின்றன. இந்நிலையில், இப்படத்திற்கு சுன்னி அமைப்பு பத்வா கொடுத்துள்ளது வினோதமாக இருக்கிறது. மேலும் ரஹ்மான் போன்ற கலைஞர்களை இஸ்லாமிய அடிப்படவாதத்தில் சுருக்கிவிடும் வகையில் இந்த மிரட்டல் உள்ளது. சூபித்துவத்தில் பற்று கொண்ட ரஹ்மான் இஸ்லாத்தை பக்தியுடன் அணுகியுள்ளார். அவர் ஒரு சிறந்த இஸ்லாமிய நம்பிக்கையாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, அவரை சுன்னி-ஷியா சர்ச்சகளில் சிக்கவைக்க வேண்டிய தேவையும் இல்லை.
ஏ.ஆர். ரஹ்மானின் பொருட்செறிவு மிக்க பதில்: இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் ரஹ்மான் தனக்கு விடுக்கப்பட்டுள்ள ஃபத்வாவிற்கு பதிலளித்துள்ளார்[1]டாங்கிலத்தில் உள்ள அவரது பதிலை ஒவ்வொரு இந்திய முஸ்லிம், ஏன், இந்துவும் கூட படித்து அதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த படத்துக்கு இசையமைத்ததை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. படத்தை இயக்கியதிலும் தயாரித்ததிலும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அந்த பணியில் எனக்கு கிடைத்த ஆன்மீக தொடர்பான ஆத்ம திருப்தியை நான் பகிர விரும்பவில்லை[2]. இது எனது தனிப்பட்ட விஷயம் ” என கூறியுள்ளார்[3]. [அதாவது ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவேளை ஆன்மிகமாக உணர்வதற்கு, காணுவதற்கு பல சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை பற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவை ஒருவேளை உருவம் கொடுப்பது போன்ற நிலை ஏற்பட்டு விட்மோ என்ற அச்சம் தேவையில்லை என்று எடுத்துக் காட்டுகிறார்].

Ranbir-Kapoor-In-Rockstar-concert-03
முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?: ரஹ்மான் தொடர்லகிறாற், “ராஸா அமைப்பின் தலைவரான நூரி , ‘இது போன்ற படத்தை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை‘ என அல்லா என்னிடம் கேட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிலளித்துள்ள ரஹ்மான்[4], ”இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் அதே காரணத்திற்காகத்தான். ஒருவேளை அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்தை ஒருங்கிணைப்பது, அன்பை பற்றிய போதனைகள், ஏழைகளின் முன்னேற்றம், தர்ம சிந்தனை, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை தவிர்த்து விட்டு மனித இனத்துக்கு சேவை செய்வது போன்ற போதனைகளை உள்ளடக்கிய முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?”. கடைசிநாளில், உயித்தெழும் போது, அல்லா அவரவருக்கு ஏற்றபடி தீர்ப்பு கொடுப்பார், அந்நாளில், அல்லா அப்படி ஒருவேளை கேட்டால்…………..என்று ரஹ்மான் கேட்டுள்ளதில், அவரது ஆழ்ந்த பக்தி, இறையுணர்வு, அசைக்கமுடியாத நம்பிக்கை, அல்லாவை காணத்துணிக்கும் துடிப்பு என்று எல்லாமே வெளிப்படுகிறது. இசையால் இறைவனைக் காணத்துடிக்கும், அப்பக்தனின் ஏக்கமும் புரிகிறது. அத்தகைய கலைஞனை மிரட்ட வேண்டிய தேவையே இல்லை.

A R Rahman sufism
எல்லோரும் அமைதியாக, சந்தோஷமாக இருப்போம்: ரஹ்மான் தொடர்கிறார், “நபிகளை பற்றிய போதனைகளை முறையாக புரிந்து கொள்ளாமல், தவறான கருத்துகளை இணையங்களில் காண முடிகிறது[5]. காட்சி ஊடகங்கள் வழியாக சரியான விஷயங்களை கொண்டு புரிய வைக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தேன்[6]. மத சுதந்திரம் கொண்டுள்ள இந்திய நாட்டில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது, அதற்காக நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளவர்களாக இருக்கிறோம்[7]. இங்கே எல்லா சமூகங்களும் குழப்பம் மற்றும் வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை வாழ்வதே நோக்கம்[8]. நான் இஸ்லாமியத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை அறிந்துள்ள அறிஞர் அல்ல. பிரச்னைகளை கருணையோடு எதிர்கொள்வாம். கண்ணியத்தோடு கையாள்வோம் வன்முறை வழியாக அல்ல. இந்த உலகத்திற்காகவும், எந்த நாட்டில் நாம் வாழ்கிறோமோ, அந்நாட்டை ஆசிர்வதிக்கவும், நாம் இதயப்பூர்வமாக மன்னிப்புக்காக வேண்டுவோம், அதுதான் மிக உயர்ந்த மற்றும் ஞானம் இவற்றின் தன்மை கொண்ட மதொப்பிக்குரிய மொஹம்மதை (PBUH) இறைஞ்சுவதாகும்‘‘, இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்[9]. அவரது உருக்கமான பதில் எல்லா ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது[10]. இதைவிட, ஒரு முஸ்லிம் என்ன சொல்லவேண்டும் என்று ராஸா அகடெமி எதிர்பார்க்கிறது?

A R Rahman sufism experiences felt
ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்: மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற அந்த அமைப்பு முகமது: மெஸஞ்சர் ஆஃப் காட் படத்திற்கு இசையமைத்தற்காக விடுக்கப்பட்ட ஃபத்வாவில் புனிதப்படுத்தும் கலீமா உறுதி மொழியை மீண்டும் எடுக்க வேண்டுமென்றும் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி , ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் திருமண பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியிருந்தது. சாதாரண சித்திரங்கள் குறித்தே இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றி திரைப்படம் எடுப்பதே மிகவும் தவறானது என்று அந்த ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது[11]. இந்த நிலையில், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று, தன் முயற்சிகளால் தமிழகத்துக்கும் தேசத்துக்கும் உலக அரங்கில் புகழ் ஈட்டித்தந்துள்ள ரஹ்மான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பக்க பதிவின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்.

ar-rahman-fatwa-reply-true muslim
ரஹ்மான் தாய்மதம் திரும்பவேண்டும்: இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே[12]. அதாவது அவரது ‘கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது[13]. வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் இதுகுறித்து கூறியதாவது[14], “ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிதீர்ப்பு மொழி.. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல. எனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்”, இவ்வாறு சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[15]. இந்துக்களுக்கு, ஒருவேளை அத்தகைய நிலை சிறிது சந்தோஷத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ரஹ்மான் இதே நிலையில் உள்ளவரை, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முஸ்லிம்களில் நிறைய பேர் ஷிரிடி சாய்பாபா, புட்டபர்தி சாய்பாபா மற்ற இஸ்லாமிய பாபாக்கள் முதலியோரை நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்க்கலாம். ஆனால், சூபித்துவத்தில் ஊறிய அம்மனங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எப்படி ஒரு இந்து அல்லாவை ஏற்றுக் கொண்டு, இஸ்லாத்தை ஒதுக்கலாமோ, அந்நிலை தான் அது.
வேதபிரகாஷ்
© 17-09-2015
[1] விகடன், ரஹ்மான் பதில்: இறைதூதரின் படத்துக்கு இசையமைக்காதது ஏன் என்று அல்லா கேட்டால் என்ன சொல்ல முடியும்?, Posted Date : 12:08 (15/09/2015); Last updated : 12:08 (15/09/2015).
[2] “I am not a scholar of Islam. I follow the middle path and am part traditional and part rationalist. I live in the Western and Eastern worlds and try to love all people for what they are, without judging them,” said the double Grammy winner.
http://www.hindustantimes.com/music/ar-rahman-replies-to-fatwa-against-him-says-composed-music-in-good-faith/article1-1390446.aspx
[3] நக்கீரன், நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்; யாரையும் புண்புடுத்துவது எனது நோக்கமில்லை: ஏ.ஆர்.ரஹ்மான், பதிவு செய்த நாள் : 15, செப்டம்பர் 2015 (19:30 IST);மாற்றம் செய்த நாள் :15, செப்டம்பர் 2015 (19:30 IST).
[4] தினமணி, ஃபத்வா குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம், By DN
First Published : 15 September 2015 11:46 AM IST.
[5] தமிழ்.இந்து, நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்: ‘ஃபத்வா‘ விதித்த அமைப்புக்கு ரஹ்மான் அழுத்தமான பதில், Published: September 15, 2015 11:02 ISTUpdated: September 15, 2015 12:20 IST.
[6] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article7654749.ece
What, and if, I had the good fortune of facing Allah, and He were to ask me on Judgement Day: ‘I gave you faith, talent, money, fame and health… why did you not do music for my beloved Muhammad film? A film whose intention is to unite humanity, clear misconceptions and spread my message that life is kindness, about uplifting the poor, and living in the service of humanity and not mercilessly killing innocents in my name’,” he continued.
[7]http://www.dinamani.com/cinema/2015/09/15/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/article3029453.ece
[8] Rahman bats for religious freedom in India, “We are indeed fortunate and blessed to live in a country like India where religious freedom is practiced and where the aim of all communities is to life in peace and harmony sans confusion and violence.”
http://www.thehindu.com/entertainment/music-director-ar-rahman-writes-back-after-fatwa/article7652238.ece
[9] “Let us set a precedent in clearing conflict with grace and dignity and not trigger violence in words or actions. Let us pray for forgiveness, and from our hearts bless those who suffer in the world and bless the country that we live in. To so pray is to reflect the noble and enlightened nature of our beloved Muhammad,” the musician concluded.
http://www.vikatan.com/news/article.php?aid=52444
[10] http://www.newsx.com/entertainment/10723-ar-rahmans-excellent-reply-to-the-fatwa-issued-against-him
[11] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=151172
[12] தமிழிந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் ‘கர்–வாப்ஸி’-க்கு உகந்த நேரம் இதுவே: வி.எச்.பி., Published: September 16, 2015 17:34 ISTUpdated: September 16, 2015 17:34 IST
[13] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து சமூகம் புதல்வனுக்க காத்திருக்கிறது. ஏஆர்.ரஹ்மானை தாய் மதத்திற்கு அழைக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் Posted by: Sakthi Kumar Published: Wednesday, September 16, 2015, 22:50 [IST].
[14]http://tamil.thehindu.com/india/%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article7659610.ece
[15] http://tamil.oneindia.com/news/india/vhp-appeals-a-r-rahman-return-hinduism-235848.html
பிரிவுகள்: ஃபத்வா, அடிப்படைவாதம், அடையாளம், அல்லா, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இறைத்தூதர், ஏ.ஆர்.ரஹ்மான், மொஹம்மது, ரஹ்மான்
Tags: ஃபத்வா, அனுபவம், அல்லா, ஆன்மீகம், இந்துக்கள், இரான், இறைத்தூதர், இறையுணர்வு, ஈரான், ஏ.ஆர்.ரஹ்மான், காலிப், சன்னி, சுன்னி, சூபி, சூபித்துவம், ச்ன்னி, திலிப் குமார், மொஹம்மது, ரஹ்மான், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 28, 2015
இந்திய தேசிய கொடி எரிப்பும், ஐ.எஸ் கொடி எரிப்பும்: முஸ்லிம்களின் போலித்தனம், தேசவிரோதம், தீவிரவாத ஆதரவு!

ஐ.எஸ் கொடி
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடியை எரித்ததற்கு காஷ்மீர் முஸ்லிம்கள் கலாட்டா, ஆர்பாட்டம்: இந்தியாவில் எல்லாமே விசித்திரமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன, அதிலும் காஷ்மீர் என்றால் கேட்கவே வேண்டாம். ஜூலை 18 2015 அன்று ஐசிஸ் கொடியை எரித்ததற்காக கலாட்டா, ஊரடங்கு என்று 14-07-2015, செவ்வாய் கிழமையிலிருந்து நடந்து வருகிறது. விஷமிகள் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள் என்று அரசு உடனே முன்னெச்சரிக்கையாக ஜி.பி.ஆர்.எஸ்.சேவையை முடக்கி விட்டது[1]. போலீஸார், பாதுகாப்புத் துறையினர், தெருக்களில் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தினர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் ஆட்கள் ஐசிஸ் கொடியின் மீது, கலிமா-தாயபா எழுதி எரித்ததாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்[2]. எங்களுக்கு ஐசிஸ் கொடியை எரிப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை, ஆனால், அவர்கள் ஒரு கருப்புக் காகிதத்தால் ஐசிஸ் கொடி போன்று செய்து, அதில் கையினால், குரான் வசனங்களை எழுதி எரித்தனர் என்று விளக்கம் அளித்தனர்[3]. அதனால், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூச்சலிட்டனர். ஐ.எஸ் எப்படி அதே வாசகங்களை தங்களது கொடிகளில்[4] வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

Curfew in rajouri
ஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடுகள்: ஊரடங்கு உத்தரவை மீறி 15 முஸ்லிம்கள் கலாட்டா செய்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் ஆட்களைக் கேட்டதற்கு, நாங்கள் கொடியைத்தான் எரித்தோம் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர்[5]. உண்மையில் நாங்கள் ஆர்பாட்டக்காரர்களை ஐசிஸ் கொடியில் அவ்வாறு எழுதப்பட்டிருப்பதை எதிர்க்கச் சொன்னதாகக் கூறினர்[6]. ஐ.பி.என்-சி.என்.என் இந்த செய்தியை வெளியிட்டு, “Protests in Rajouri after VHP burns IS flag, curfew imposed”, என்று தலைப்பிட்டுள்ளது விசமத்தனமாக உள்ளது[7]. இதே செய்தியை மற்ற ஊடகங்களும் அப்படியே சில மாறுதல்களுடன் வெளியிட்டுள்ளன. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தீப்தி உப்பால் தெரிவித்து உள்ளார். இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதம் கொடி எரிக்கப்பட்ட விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கைதுசெய்யப்படுவார்கள் என்பதை மறுத்துவிட்டார். தீப்தி பேசுகையில், தீவிரவாத இயக்கம் மற்றும் தேசத்திற்கு எதிரான இயக்கங்களின் கொடியை எரிப்பது என்பது தேசபற்று பணியாகும், என்று கூறினார். “நாங்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியை தான் எரித்தோம், ஆனால் அதில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்று எங்களுக்கு தெரியாது,” என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் ராமாகாந்த் துபேய் தெரிவித்து உள்ளார்[8].

IndiaTv-Rajori-protest-final
முஸ்லிம்கள் கலாட்டா, கல்-எரிதல், ஊர்-அடங்கு உத்தரவு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தங்களுக்கு எதிரான வெளிநாட்டவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து கொன்று குவிப்பதோடு பெண்கள், குழந்தைகளை கூட மிக கொடூரமாக அவர்கள் கொலை செய்வது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் ரஜொரி நகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியை விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[9]. இதனை கண்டித்து போலீசார் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். அமைப்பின் கொடியை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பதற்றம் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் மற்றும் ராணுவத்தினர் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்[10].

kashmir-Pakistan flag shown
ஐ.எஸ் கொடியை எரித்தால், முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வருகிறது?: தீவிரவாதத்தை எதிர்ப்பதும், அவர்களது சின்னங்களை எரிப்பதும் எப்படி குற்றமாகும் என்று வி.எச்.பி உள்ளூர் தலைவர் கேட்டார்[11]. ஹுரியத் கான்பரன்ஸ் என்ற இந்தியவிரோத அமைப்பும் இதற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இப்படியே ஜம்மு முஸ்லிம்களின் மீது சதிகளைத் திணித்துக் கொண்டே இருந்தால், காஷ்மீர் பள்ளத்தாகிலிருந்து, பெரிய எதிர்ப்பு கிளம்பும், அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தது[12]. ஜே.கே.எல்.எப்.பின் ஆட்கள் மற்றும் தனி எம்.எல்.ஏவான ஷேக் அப்துல் ரஷ்ஹித் [ independent MLA Shiekh Abdul Rashid ] முதலியோரும் ஆர்பாட்டத்தில் இறங்ககினர் இருப்பினும் தடுக்கப் பட்டு கைது செய்யப்பட்டனர்[13]. இதே முகமதியர்கள், ஐ.எஸ் மற்றும் பாகிஸ்தான் கொடியேந்தி ஆர்பாட்டம் செய்தபோது, இந்திய-விரோத கோஷங்கள் இட்டபோது, ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஜூலை 25 அன்று கடையடைப்பு போராட்டம் வேறு நடத்தியிருக்கிறார்கள்[14]. அதற்கு அழைப்பு விடுத்தது, காஷ்மீர் வணிகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு, காஷ்மீர் தொழிற்சாலைகள் ஒருங்கிணைப்பு, காஷ்மீர பொருளாதார கூட்டமைப்பு மற்றும் வழக்கம் போல தேச-விரோதிகளின் கட்சிகள் இத்யாதிகள். ஓட்டல்கள்-விடுதிகள் சங்கம், சுற்றுலா துறை, ஏஜென்டுகள் சங்கம், வக்கீல்கள் சங்கம், டாக்டர்கள் சங்கம், பள்ளிகள், கல்லூரிகள் எல்லாரும் கலந்து கொண்டனர்[15]. ஆக இங்கும், முஸ்லிம்கள், முஸ்லிம்களாகத் தான் செயல் பட்டிருக்கின்றனரே அன்றி, இந்தியர்களாக செயல்படவில்லை. பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகளை ஆதரிப்போர் என்று எல்லோரும் சேர்ந்து, தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதை கவனித்த மற்ற இந்திய முஸ்லிம்களும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, தங்களது செக்யூலரிஸத்தை வழக்காம் போலக் காட்டிக் கொண்டு அமைதியைக் காத்தன. செக்யூலரிஸப் பழங்களைப் பற்றி கேட்கவே வ்டேண்டாம், அவை காணாமல் போய்விட்டன.

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014
இந்திய தேசியைக் கொடியை எரித்தால் சந்தோஷம், பாகிஸ்தான் கொடியைக் காட்டினால் சந்தோஷம், ஆனால், ஐ.எஸ் கொடியை எரித்தால் கோபம் ஏன்?: பாவம், ஐசிஸ் கொடி கிடைக்காததால், அவ்வாறு கருப்புக் காகிதத்தை வைத்து கொடியைத் தயாரித்தார்கள் போலும். சரி, அதேபோல ஏதோ எழுதினார்கள் என்றால், அவர்களுக்கு அரேபிய, பாரசீக அல்லது உருது மொழி தெரியாதே, பிறகு எப்படி அவர்கள் குரான் வசனங்களை அக்காகிதத்தில் எழுத முட்டியும்? ஒருவேளை அதேபோன்று கிறுக்கியிருப்பார்கள். ஆகவே, ஒரு தார்மீக எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்திய தேசியக் கொடிகளைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் எரித்து வருகிறர்கள் அதற்கு எந்த முஸ்லிமும், எம்.எல்.ஏவும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உண்மையில் அது ராஜ-துரோக, தேசவிரோத குற்றமாக இருந்தாலும், நடந்து கொண்டே இருக்கிறது. ஊடகங்கள் அவற்றைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறர்கள். ஐசிஸ் முதல், பாகிஸ்தான் கொடி வரை கைகளில் ஏந்தி கொண்டு, ஆட்டி, ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். இந்திய தேசக்கொடி பலமுறை எரிக்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் அவற்றை தாராளமாகக் காட்டி வருகின்றன. ஆனால், இதுவரை, யாராவது கைது செய்யப்பட்டார்களா, சட்டமீறல்களுக்காக, தண்டனை கொடுக்கப்பட்டதா, ஜெயிலுக்குப் போனார்களா என்றெல்லாம் தெரியவிக்கப் படவில்லை. ஊடகங்கள் அத்துடன் அமைதியாகி விடுவதுதான் வழக்கமாகக் கொண்டுள்ளன.
© வேதபிரகாஷ்
28-07-2015
[1] Arun Sharma, Curfew continues to remain in force over IS flag burning in Rajouri , Indian Express, Published:July 22, 2015 9:51 am
[2] http://indianexpress.com/article/india/india-others/curfew-continues-to-remain-in-force-over-is-flag-burning-in-rajouri/
[3] It is being alleged that some VHP and Bajrang Dal activists made an IS flag using a black piece of paper, and wrote the holy inscriptions on it by hand, followed by the words “IS” and “Hai Hai’’. Later, local Muslim leaders clarified that while they had no objection to the burning of the IS flag, they were protesting against writing of holy inscriptions by hand. The protesters asked the police to register a case and arrest the culprits by Monday evening.
[4] The flag is black with the words La ‘ilaha ‘illa-llah – “There is no God but God” – emblazoned across the top in white in a somewhat coarse, handwritten Arabic script. It’s a very different kind of typeface from the more elaborate calligraphy on the Saudi flag, for example, that also includes this same shahada, or Islamic statement of faith. Even more rough around the edges is the white circle in the middle of the ISIS flag. Inside it are three words: “God Messenger Mohammed.” It’s an interesting choice of word order given that the second part of the shahada is “and Mohammed is God’s messenger.” http://time.com/3311665/isis-flag-iraq-syria/
[5] However, clarifying that it had no intention to hurt the sentiments of Muslims, the VHP, on the other hand, asked the protesters to demonstrate against the IS for writing holy inscriptions on its flag. “We had only burnt the IS flag. We did not know as to what was written on it in Persian,” the state VHP patron, Ramakant Dubey, said today.
[6] http://www.greaterkashmir.com/news/jammu/curfew-in-rajouri-town-after-vhp-burns-is-flag/192233.html
[7] http://www.ibnlive.com/news/india/protests-in-rajouri-after-vhp-burns-is-flag-curfew-imposed-1023783.html
[8] http://www.dailythanthi.com/News/India/2015/07/22090023/Curfew-Imposed-in-Jammu-and-Kashmir-s-Rajouri-Over.vpf
[9] http://www.vikatan.com/news/article.php?aid=49886
[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=157270
[11] http://indianexpress.com/article/india/india-others/tension-in-rajouri-over-burning-of-isis-flag-by-vhp-bajrang-dal/
[12] It cautioned that if this process is not stopped and “hatching of conspiracies against the Jammu Muslims not stopped, it will have serious consequences and provoke a strong reaction against this in Kashmir Valley.”
http://www.dailykashmirimages.com/news-hurriyat-g-condemns-burning-of-flag-with-%E2%80%98kalima-tayyaba-73058.aspx
[13] http://www.outlookindia.com/news/article/jklf-langate-mla-protest-against-burning-of-is-flag-in-jk/907536
[14] The bandh call was first issued by the Kashmir Chamber of Commerce and Industries, Federation Chamber of Industries, Kashmir, and the Kashmir Economic Alliance. It was later supported by the Traders and Manufacturers Federation and other groups. The JKLF and the moderate faction of the Hurriyat Conference, headed by Mirwaiz Umar Farooq, had also supported the shutdown call http://www.tribuneindia.com/news/jammu-kashmir/kashmir-shuts-against-rajouri-flag-burning/111324.html
The strike was also supported by a faction of Hurriyat Conference-led by Mirwaiz Umar Farooq, Yasin Malik-led Jammu Kashmir Liberation Front (JKLF) and High Court Bar Association (HCBA).
http://risingkashmir.in/news/kashmir-observes-shutdown-over-flag-burning-row/
Kashmir Hotel & Restaurant Association (KHARA), Travel Agents Society of Kashmir (TASK), Kashmir
[15] Handicraft Manufactures & Exporters Association, J&K Private Diagnostic Centers Association, Joint Committee of Private Schools among others also supported the strike call.
http://www.kashmirreader.com/valley-shuts-down-over-rajouri-flag-burning/
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய கொடி, இந்திய முஜாஹத்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், இஸ்லாமிய நாடு, இஸ்லாம், ஐ.எஸ், ஐசிஸ், கொடி, சிரியா, பாகிஸ்தான் கொடி
Tags: அல்லா, இந்திய கொடி, இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், ஊடகத் தீவிரவாதிகள், ஐ.எஸ், ஐசிஸ், கடையடைப்பு, கலவரம், காபிர், காஷ்மீர், குரான், கொடி, கொடி எரித்தல், சுற்றுலா, ஜிஹாதி, தொழில், பாகிஸ்தான் கொடி, வணிகம், வியாபாரம்
Comments: Be the first to comment
பிப்ரவரி 19, 2014
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ரகளை, கலவரம், போலீசாரின் மீது தாக்குதல்!

முஸ்லிம்கள் ரகளை ராமநாதபுரம் 2014
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது?: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[1], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[2], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[3].

பாப்புலர் பிரென்ட் தினம் 2014.போலீசாரைத் தாக்கும் முஸ்லிம்கள்
கேரள அரசு அம்மாநிலத்தில் நடந்துள்ள 27 கொலைகளுக்கு (மார்க்சிஸ்ட், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உட்பட) இவ்வியக்கங்கள் தாம் காரணம் என்று கேரள உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள தன்னிலை விளக்கத்தில் கூறியுள்ளது[4]. தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தனர் இவ்வாறு புதிய இயக்கங்களாக மாறிவருவதாகவும் தெரிகிறது[5]. 2006ல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனித நீதி பாசறை, ஃபோரம் பார் டினிடி ஆப் கர்நாதகா [Forum for Dignity of Karnataka] என்று முறையே கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உருவாக்கப் பட்டன. இவற்றிற்கு இஸ்லாத்தைக் காப்போம், மைனாரிட்டிகளின் உரிமைகளுக்காக பாடுபடுவோம் என்ற கொள்கைகள் இருப்பதாகப் பறைச்சாற்றிக் கொண்டாலும், அங்கத்தினர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர், பல வழக்குகளிலிலும் சிக்கியுள்ளனர். தெற்கிலிருந்து வடக்காக இவ்வியக்கத்தின் தாக்கம் நகர்வதாகத் தெரிகிறது. இதற்காக திடீரென்று கூட்டம் சேர்க்கப்பட்டு வருகிறது[6]. ஜூலை 2010ல் டி. ஜோசப் என்ற ஒரு விரிவுரையாளரின் கையை இந்த PFI ஆள் வெட்டியபோது[7] இவ்வியக்கத்தின் பெயர் இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம். தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[8]. இவ்வியக்கத்தினரின் இடங்களை சோதனையிடும் போது, தலிபான் போன்ற இயக்கத்தினரின் தீவிரவாத இயக்கத்தினரின் நூல்கள், செயல்முறை கையேடுகள், பயிற்சிப் புத்தகங்கள், முதலியவை சிக்குவதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன[9]. அத்தகைய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுதான், தமிழகத்திலும் காணப்படுகிறது.

பாப்புலர் பிரென்ட் தினம் 2014.வாக்குவாதம், கல்லெறிதல், போலீஸ் தடியடி
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இயக்கதினம் (17-02-2014): திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கும், போலீசாருக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன[10]. அதே பாணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இயக்க தினம் (17-02-2014) ராமநாதபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதே அமைப்பு உடுப்பியில் ஊர்வலம் சென்றபோது, ஒன்றும் நடக்கவில்லை[11], ஆனால், ராமநாதபுரத்தில் கலவரம் போன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டனர். இதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஊர்வலத்திற்காக மதுரை – ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டனர். ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதித்தனர். இதன்படி, ராமேஸ்வரம் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில், குமரையா கோவில் பகுதியில், 17-02-2024 அன்று மதியம், 3:30 மணிக்கு, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்கள், ஊர்வலமாக சென்றனர்[12]. அப்போது சிலர் திடீரென்று வெள்ளை சீருடை அணிந்து டிரம்செட் வாசித்தபடி ஊர்வலத்தில் செல்ல முயன்றனர். அனுமதி இல்லாததால் இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் செல்ல மட்டுமே அனுமதி வழங்கியுள்ளோம். டிரெம்செட் மற்றும் சீருடை அணிந்து செல்ல கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.

பாப்புலர் பிரென்ட் தினம் 2014
ராமநாதபுரத்தில் தடையை மீறி ஊர்வலம் : கலவரத்தில் கல் வீச்சு: போலீஸ் தடியடி[13]: சீருடை ஊர்வலம் தடுக்கப்பட்டதால், கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செல்கிறார்கள், நாங்கள் செல்லக்கூடாதா, நாங்களும் இந்தியர்களாம், எங்களுக்கும் உரிமைகள் உள்ளன, என்றெல்லாம் வாதிட்டனர். அப்போதும், சிலர் தடையை மீறி டிரெம்செட் வாசித்தபடி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது சிலர் கல்வீசி தாக்கினர். இதைப்பற்றியும் போலீசார் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆட்களைக் குற்றஞ்சாட்டுகின்றனர், ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆட்களோ, யாரோ கல் எரிந்தனர், மறைந்து விட்டனர் என்று சொல்கிறார்கள்[14]. இதனால் அங்கு பதற்றம் ஏற்படவே போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கூட்டத்தின் பின்பகுதியில் இருந்து மேலும் சில கற்கள் வீசப்படவே, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதுவும் வழக்கமான விசயங்கள். பி.எப்.ஐ / எஸ்டிபிஐ இவ்விசயங்களில் இம்மாதிரியான கலவரம் ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளை நடத்துவதில் வல்லவர்கள். இதனால் அங்கு கலவர சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கமுதி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி, திண்டுக்கல் ஆயுதப்படையை சேர்ந்த செந்தில்குமார், பாலமுருகன், திரவியசெல்வன், ஜெயமுருகன் / ஜெயமுகுந்தன் உட்பட 18 காயமடைந்தனர். இதேபோல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

PFI attack police 2014
சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு முதலியன: இந்த சம்பவம் காரணமாக ராமநாதபுரத்தில் பதட்டம் உருவானது. கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. போலீசாரை கண்டித்து, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதன்பின், மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்[15]. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங், ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதலும் கூறினர். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 2 சிறப்பு காவல்படை பட்டாலியன், சிவகங்கை மற்றும் விருதுநகரில் இருந்து ஆயுதப்படை பட்டாலியன், ராமநாதபுரம் வரவழைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பியது[16].

PFI photo from their website
பி.எப்.ஐ மற்றும் போலீசார் பரஸ்பர குற்றச்சாட்டுகள்: காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டனர்[17]. அதன்படி ஐ.ஜி. அபய் குமார்சிங், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி ஆகியோர் வீடியோவை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக கூடுதல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் 1011 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[18]. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் இஸ்மாயில் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி[19]: “நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலவர தடுப்பு படையினர், கண்ணீர் புகை குண்டு வாகனத்தை ஏற்பாடு செய்தது சந்தேகம் அளிக்கிறது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு எழுத்து பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து நிர்வாகிகள் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தேவையின்றி ஒரு கலவர சூழ்நிலை போலீசாரால் ஏற்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று தெரிவித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது[20].

PFI lathicharged 2014
இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்குஎஸ்.டி.பி. ஐகண்டனம்[21]: இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான்பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “இராமநாதபுரத்தில் பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க தினமான பிப்ரவரி 17 ம் தேதி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு போலீசாரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், பேரணி துவங்கும் நேரத்தில் காவல்துறை அதிகாரிகள்அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசமிகள் சிலர் கூட்டத்தின் மீது கல்வீசி தாக்கினர். இதை காரணம் காட்டி கூட்டத்தினர் மீது மிக கொடூரமாக காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதோடு தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறி வைத்தும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடைபெற்றது. கல்வீசிய விசமிகள் சிலரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு காவல்துறையால் அரங்கேற்றப்பட்டதாகவே தெரிகிறது. காவல்துறையின் வன்முறை வெறியாட்டமும், துப்பாக்கிச் சூடும் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் தமிழக அரசிற்கு எதிராக முஸ்லிம்களை திருப்ப முயற்சி செய்திருப்பது, அரசுக்கு எதிரான காவல்துறையின் சதியா என்ற கோணத்தில் தமிழக அரசு சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மையினர் மீதான இந்தத்தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்காததோடு, வன்முறைக்கு காரணமான இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பிவெள்ளத்துரை ஆகியோரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் மிக அமைதியான முறையில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் காவல்துறையினரின் தாக்குதலும், அணுகுமுறையும் வேதனைக்குரியது. நாடு முழுவதும் எத்தனையோ, ஊர்வலங்கள் பேரணிகள் நடைபெறும் போது, முஸ்லிம்கள் நடத்தும் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது[22]. இங்கு ஏதோ மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதைப் போல கூறியிருக்கிறார். ஆனால், “வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென மர்ம நபர்கள் கூட்டத்தினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி 6 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அப்பகுதியல் பதற்றம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன”, என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது[23].

PFI lathicharged 2014.4
http://tamil.oneindia.in இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள்: இந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும். நாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை. எது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொலிப்பார்கள் என்று நம்புகிறோம்[24]. நாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்…எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது…..வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோ …அடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்….!! இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது, என்று அவர்கள் தாம் பதில் சொல்லவேண்டும்: முஸ்லிம்கள் ஜிஹாதிகளாக இந்தியாவில் குண்டுகளை வெடிக்கும் போ

Manitha neya pasarai.2
தோ, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் போதோ, தினம்தினம் காஷ்மீரத்தில், மற்ற பகுதிகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிக்கின்றபோதோ, இந்த இஸ்லாமிய அமைப்புகள் தங்களை தேசபக்தர்களாகக் காட்டிக் கொள்வதில்லை. அப்பொழுது தீவிரவாதத்திற்கு எதிராக ஊர்வலம் போவோம் என்று வருவதில்லை. மேலும், மக்கள் என்ற பொதுப்பெயரை உபயோகித்திருந்தாலும், குறுகிய நோக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தீவிரமாக கடைபிடுக்கும் போக்கு தான் இவ்வியக்கத்தின் நடவடிக்கைகளினின்று வெளிப்பபட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது, என்று அவர்கள் தாம் பதில் சொல்லவேண்டும்.
வேதபிரகாஷ்
© 19-02-2014
[4] The Kerala government today told the high court that the Popular Front of India is the ‘resurrection’ of banned SIMI in another form and along with National Democratic Front, had “active involvement” in 27 murder cases, mostly of cadres of CPI-M and RSS. The objectives of NDF and PFI were similar. However, NDF felt that if it were to remain confined to Kerala, it would be branded as any other communal organization and to spread its activities to other states, PFI was formed on December 19, 2006 at a meeting of NDF, Manitha Neethi Passrai (MNP- Tamil Nadu) and Forum for Dignity of Karnataka, held at Bangalore. Though PFI had claimed that it was formed to safeguard human rights and protection of minority, they were “clandestinely engaged in wholetime criminal activities with the object to defend Islam”, it was submitted. http://news.outlookindia.com/items.aspx?artid=769976
[6] Cadres of banned Students Islamic Movement of India (SIMI) are understood to have been fast regrouping under the banner of Popular Front of India (PFI), an outfit which has expanded its tentacles to north after carrying out initial recruitment in south India. SIMI has since been banned thrice by the government and the organisation has lost its case in the Supreme Court seeking lifting of the ban.
[7] The PFI had come on the national radar after its activists chopped off the palm of a lecturer in Ernakulum district’s Newman College on July 4,2010, for alleged blasphemy in preparation of examination papers.
[8] According to a government paper,starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF),the PFI now has more than 80,000 members and sympathisers,with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry,states that the PFI has a militant core cadre,radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month,subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.
[9] போலீசார், நேற்று முன்தினம் (11-07-2010), இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும், தமிழக – கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், “ரெய்டு’ நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார். முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, “சிடி’க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், “ரெய்டின்’ போது சிக்கியது.”இக்குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’ என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, “ரெய்டு’ மற்றும் கைப்பற்றிய சில குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, “சிடி’க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38159
[18]மாலைமலர், ராமநாதபுரம்ஊர்வலத்தில்கலவரம்: 1011 பேர்மீதுவழக்குப்பதிவு, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 18, 11:28 AM IST
[19] தினகரன், போலீசைதாக்கியதாக 1000 பேர்மீதுவழக்கு: ராமநாதபுரத்தில்போலீஸ்குவிப்பு, மாற்றம் செய்த நேரம்:2/19/2014 2:54:22 AM
[21] ஒன் இந்தியா தமிள், இராமநாதபுரத்தில்முஸ்லிம்கள்பேரணியில்போலீஸ்துப்பாக்கிச்சூட்டுக்குஎஸ்.டி.பி.ஐகண்டனம், Karur Vadivel,
Updated: Tuesday, February 18, 2014, 14:20 [IST]
பிரிவுகள்: ஊர்வலம், காபிர், கொலை, சையது, தாருல்-இஸ்லாம், தாருல்-ஹராப், தேசவிரோத செயல்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மெக்கா, மெதினா, மோமின், ராமநாதபுரம், லெப்பை, வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்
Tags: அல்லா, காபிர், கொலை, சப்தம், டிரம், தாருல்-இஸ்லாம், தாருல்-ஹராப், தாளம், தேசவிரோத செயல்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மெக்கா, மெதினா, மேளம், மோமின், வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல், ஹீயீத்
Comments: 14 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 15, 2013
அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!

2009 முதல் 2013 முதல் கடவுளுக்கு எந்த சொல்லை உபயோகிப்பது?: 2009ம் ஆண்டு மலேசியாவில் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவ பத்திரிகை “ஹெரால்ட்” அல்லா என்ற வார்த்தையை கிருத்துவக் கடவுளுக்காக உபயோகப்படுத்தி இருந்தது[1]. குறிப்பாக மலாய் மொழி பைபிளில் கடவுளுக்குப் பதிலாக “அல்லா” என்ற வார்த்தை உபயோகப் படுத்தப் பட்டது[2]. அதை எதிர்த்து முஸ்லிம் இயக்கத்தினர் வழக்குத் தொடர்ந்தன. அதனால், “ஹெரால்ட்” பத்திரிக்கைக்காரர்கள் அதனை உபயோகிக்கக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தது[3]. இதற்கு எதிராக கிருத்துவ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இடைக்கால தடையை அது ரத்து செய்தது. இதில் உள்துறை அமைச்சகம் தலையீடு இருந்தது. இதனால், 2010ல் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள், குறிப்பாக, சர்ச்சுகள் தாக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு, கற்கள், பெயிண்ட் முதலியை அத்தாக்குதல்களில் உபயோகப் படுத்தப் பட்டன[4]. அரசு மேல்முறையீடு செய்தது.

மலேசிய அரசியல்வாதிகளும், இந்திய அரசியல்வாதிகளைப் போலத்தான் செயல்படுகின்றனர்: 2009ல் நஜீப் ரஸாக் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது, மலாய் முஸ்லிம் மற்றும் முஸ்லிம்-அல்லாத சிறுபான்மையினருடன் குறிப்பாக சீன மற்றும் இந்திய வம்சாவளி மக்களுடன் தாஜா செய்து கொண்டிருந்தார்[5]. பிறகு முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்களுடன் சேர்ந்து செயல்படுகிறார். மலேசியாவின் மக்கட்தொகையில் 60% முஸ்லிம்கள், 9% கிருத்துவர்கள். இப்ராஹிம் அன்வர் கடந்த மலேசிய மேமாத தேர்தல், ஒரு பெரிய பிராடு / மோசடி என்று வர்ணித்தார்[6]. எது எப்படியாகிலும், முஸ்லிம்-அல்லாதோர் மலேசியாவில் அவஸ்தைப் படவேண்டியதுதான். நஜீப் ரஸாக், இப்ராஹிம் அன்வர் முதலியொர் பேசுவது, நடந்து கொள்வது, சோனியா, திக்விஜய் சிங், முல்லாயம் சிங் யாதவ், கருணாநிதி போன்றே உள்ளது. ஆகவே, அடிப்படைவாதிகளுக்குக் கொண்டாட்டம் தான்!

அல்லா முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானவர்: “அல்லா” என்ற சொல்லை கடவுளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது[7]. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை 14-10-2013 அன்று மலேசிய நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், கடந்த 2009ல் கீழ் நீதிமன்றம் ஹெரால்ட் என்ற பத்திரிகைக்கு அல்லா என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்து, இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிறிஸ்துவ மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இந்த அல்லா என்ற வார்த்தை கட்டாயம் இல்லை என்பதாலும், கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால், மற்றவர்கள் குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அல்லா என்ற வார்த்தை இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே உபயோகத்தில் இருந்தது, கடவுள் என்பதை குறிக்கும் இந்த சொல்லை அனைவரும் பயன்படுத்த உரிமை உண்டு. என்றெல்லாம் வாதிடப்பட்டது[8]. மூன்று நீதிபதிகள் கொண்ட இத்தீர்ப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.

“அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும்: இதே கருத்தைத்தான் மலேசிய அரசும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டது. மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது. மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர். “அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும் என்று சபா பிராந்திய, எஸ்டர் மோய்ஜி என்பவர் பிபிசியிடம் முறையிட்டுள்ளார்[9].

கிருத்துவ-முகமதிய இறையியல் மோதல்கள்: “ஹெரால்ட்” செய்தித்தாளின் ஆசிரியர் லாரன்ஸ் ஆன்ட்ரூ [ Lawrence Andrew, editor of the Catholic newspaper, The Herald] மேல்முறையீடு செய்ய தீர்மானிக்த்துள்ளார்[10]. 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் தலைமையிடமான புத்ராஜெயாவுக்கு வெளியே கூடியிருந்து இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டன. ஜெப்ரிஜால் அஹமது ஜாபர் என்பவர், “ஒரு முஸ்லிமாக நான் அல்லா என்ற வார்த்தையை ஜிஹாத் போல கருதுகிறேன். அதனை நான் ஆதரிக்கிறேன்”, என்று கூறுகிறார்[11]. இந்தோனியா, போனியோ மற்றும் அரபு நாடுகள், முதலியற்றில் உள்ள கிருத்துவர்கள் அவ்வார்த்தையைத் தொடர்ந்து உபயோகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளனர்[12].

© வேதபிரகாஷ்
14-10-2013
[5] Prime Minister Najib Razak, who took office in 2009, has walked a tight-rope between pleasing his ethnic Malay Muslim base while not alienating the country’s non-Muslim ethnic Chinese and Indian minorities.
பிரிவுகள்: அருவம், அல், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாஹ், அழிப்பு, இடிப்பு, இறைவன், இலா, இலாஹி, இல், உடைப்பு, உருவம், எலோஹிம், எல், ஒழிப்பு, கடவுள், கல், குதா, குரான், சிலை, தெய்வம், நாசம், பைபிள், விக்கிரகம், வெறி
Tags: அருவம், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாஹ், அழிப்பு, இடிப்பு, இறைவன், இலா, இலாஹி, இல், உடைப்பு, உருவம், எலா, எலோஹிம், எல், கடவுள், குதா, சிலை, துலுக்கர், தெய்வம், நாசம், மதவெறி, மீன், முகமதியர், முஸ்லிம், விக்கிரகம், வெறி
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 12, 2013
முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்!

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!: முந்தைய இடுகைகளில் இதைப் பற்றி அதிகமாகவே இப்பிரச்சினை அலசப்பட்டுள்ளது. அப்பொழுது (ஜூலை 2010) விசயங்களை கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் நரபலி அதிகமாகி வருவது விவரங்களோடு எடுத்துக் காட்டப்பட்டது. இதில் காணப்படும் முறை,
- குழந்தைகள் காணாமல் போவது,
- பெற்றோர் புகார் கொடுப்பது,
- ஆளில்லாத இடத்தில் குழந்தைகள் உடல்,
- உடற்பாகங்கள் காணப்படுவது,
- சில ஆட்கள் / மந்திரவாதிகள் கைது செய்யப்படுவது,
- அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது…………..
பிறகு என்னவாயிற்று என்று தெரியாமல் வழக்குகள் முடிக்கப்படுவது…………..என்ற போக்குத்தான் தெரிய வருகிறது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[1].

நரபலி முஸ்லீம்களுக்கோ, தமிழகத்திற்கோ புதியதல்ல[2]: இங்கு குறிப்பாக முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகள், தர்காக்கள், முஸ்லிம் மாந்திரீகர்கள் முதலியோர் சம்பந்தப் படுவதால், இக்கொணத்தில் பார்க்க வேண்டியிருந்தது. இதை முஸ்லீம் பிரச்சினை என்று பார்க்கவில்லை, ஏனெனில் மற்ற இடங்களில் இந்துக்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இங்கு, முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன என்று ஆராயும் நோக்கில் அலப்பட்டது. முன்பு 2007ல் இக்பால் மற்றும் ஜாபர் என்ற இரண்டு மந்திரவாதிகள் இதே மாதிரி எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். அதை பற்றியும் அவ்விடுகையில் விளக்கப்பட்டது[3].

இரண்டாண்டுகள் கழித்து அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர் மேல்முறையீடு செய்தல்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தனர் அப்துல்கபூர்,30. இவர் ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில், சமையல்காரராக இருந்தார். அங்கிருந்த ரமீலா பீவிக்கும், 32, அப்துல்கபூருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். “தலைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், முன்னேற்றம் அடையலாம்’ என, சிலர் கூறியதை நம்பி, தலைப்பிரசவ குழந்தையைத் தேடி, மதுரை வந்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் கவுகர்பாட்ஷா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி சிரின் பாத்திமா, தன் ஒரு வயது குழந்தை காதர்யூசுப் மற்றும் தாய் சுல்தான் பீவி ஆகியோருடன், நேர்த்திக்கடன் செலுத்த, 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் தர்காவில் தங்கினர். மறுநாள் இரவு, மூன்று பேரும் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். காதர்யூசுப்பை கடத்திய அப்துல்கபூரும், ரமீலாபீவியும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு ஒரு விடுதி குளியலறையில், காதர்யூசுப்பின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை வாளியில் பிடித்தனர். தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி, பூஜை செய்து, குழந்தையின் உடலை புதைத்தனர். தலையை திருச்செந்தூர் அருகே கடற்கரையில் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, 2012 ஆக.,3 ல் அப்துல்கபூர், ரமீலாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.

குழந்தையை கடத்தி நரபலி கொடுத்த தம்பதி : ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு[4]: மதுரையில், ஒரு வயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில், கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில், கணவன், மனைவி மேல்முறையீடு செய்தனர்[5]. இதை ரத்து செய்யக்கோரி, இருவரும் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு குறிப்பிட்டனர். நேற்று, இவ்வழக்கு பட்டியலில் இடம் பெற்றது. விசாரிக்கப்படவில்லை. முன்பு கூட “காளி உத்தரவின் படி பலி கொடுத்தேன்”, என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தான்[6]. கொலைக்கு தண்டனை கொடுப்பதானால் காளிக்குக் கொடுங்கள்[7] என்று சொன்னதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.

கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்: அப்பொழுது செக்யூலரிஸ ரீதியில் ஊடகங்கள் செயல்பட்டன. முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட பிரச்சினை என்பதால், வெறும் கொலை போல, டிவிக்களிலும் காட்டப்பட்டது. “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாற்றி வர்ணிக்கப்பட்டன. கீழுள்ளவை முந்தைய பதிவில் உள்ளபடி கொடுக்கப்படுகின்றன:
- மந்திரவாதி, தாந்திரிக்[8], ஃபகிர்[9] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[10].
- அசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;
- மனைவி, காதலியாகி, கள்ளக்காதலியாகிவிட்டாள்;
- திடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்!
- பலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………
- காளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.
- 15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
- தர்கா லாட்ஜாகிறது, வீடாகிறது;
- குரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்!

முஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது, பரப்புவது முதலியன[11]: “ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும் சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்”, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்”, என்று அப்பொழுது முடித்திருந்தேன். இப்பொழுது, “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனராம்.
செக்யூலரிஸ அமைதி, ஊமைத் தனம் மற்றும் பாரபட்சம்: திராவிட சித்தாந்திகள், கம்யூனிஸ வல்லுனர்கள், பெண்ணிய வீராங்கனைகள், “கற்பில்” வேதாந்தியான குஷ்பு போன்ற பெண்மணிகள், யாருமே, இவ்வழக்கைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது. “தேவதாசி” பற்றி பேசினால், வீராங்கனைகள் கிளம்பி விடுகிறார்கள், ஆனால், உண்மையாகவே, ஒரு பெண் நரபலியில் சம்பந்தப் பட்டிக்கும் போது, அந்த வீராங்கனைகள் “ஆள்-அட்ரஸ்” தெரியாமல் இருக்கிறார்கள்! நாத்திக-சித்தாந்திகள், மூட-நம்பிக்கைகளை சாடுகின்ற தமிழனத் தலைவர்கள், இனமானப் போராளிகள் எல்லோருமே கப்-சிப் தான்! சட்ட வல்லுனர்கள், நீதிமான்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முதலியோரும் ஊமைகளிகி விடுகின்றனர்.
© வேதபிரகாஷ்
12-10-2013
[4] தினமலர், நரபலிகொடுத்ததம்பதி : ஆயுள்தண்டனையைஎதிர்த்துமேல்முறையீடு, சென்னை பதிப்பு, பக்கம்.4, பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2013,00:30 IST
[8] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்தான் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது!
[9] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது
[10] ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆகையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.
பிரிவுகள்: அப்துல் கபூர், அவூலியா, ஆணை, குரான், சதை, சோறு, நரபலி, நரம்பு, நாளம், பலி, பிண்டம், மண்டையோடு, மந்திரம், மாந்திரீகம், மாமிசம், ரத்தம், ரமீலா, ஹக்
Tags: அல்லா, ஆணை, உத்தரவு, குதா, குரான், சதை, சோறு, தர்கா, நரபலி, நரம்பு, பலி, பிண்டம், மண்டையோடு, மந்திரம், மாந்த்ரீகம், மாமிசம், முஸ்லிம், ரத்தம், ஷரீயத், ஹக், ஹதீஸ்
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்