கடவுள் பெயர் பிரச்சினை: மலேசியாவில் கிறித்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்
சரவாக், பேராக், மலாக்காவிலும் தேவாலயங்கள் தாக்கப்பட்டன
January 10, 2010, 8:44 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
http://www.malaysiaindru.com/?p=30683
சரவாக், பேராக் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரவாக், மிரியிலுள்ள ஒரு தேவாலயம் தீயிடப்படும் முயற்சியின் இலக்காக இருந்ததாக உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் கூறியதாக பெர்னாமா கூறுகிறது. ஆனால், நிலமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். “பொது மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எஸ்எம்எஸ் வழியாக பரப்பப்படும் ஊகங்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அவர்
கேட்டுக்கொண்டார். தைப்பிங்கில் மோலொடோவ் தீப்பந்துகள் இரண்டு தேவாலயங்கள் மீதும் எஸ்எம் கான்வெண்ட் பள்ளியின் பாதுகாவலர் குடில் மீதும் வீசப்பட்டன. நாட்டின் மிகப் பழமையான ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்திற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பள்ளியின் பாதுகாவலர் குடிலுக்குச் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது என்று பேராக் போலீஸ் தலைவர் ஜுல்கிப்லி அப்துல்லா கூறினார்.
மலாக்கா தேவாலயத்தில் கருப்பு பெயிண்ட் வாரியடிக்கப்பட்டது: மலாக்காவில், நான்யாங் சியாங் பாவ் செய்திப்படி டுரியான் டாவுனிலுள்ள மலாக்கா பேப்டிஸ்ட் தேவாலயத்தின் மீது கருப்புச் சாயம் வாரியடிக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடவுள் பெயர் பிரச்சினை: மலேசியாவில் கிறித்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்
கோலாலும்பூர், ஜன.9-_ முஸ்லிம் அல்லாதவர்-களும் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற சொல்லை பயன்படுத்தலாம் என்கிற சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் சில மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்-பாட்டங்கள் நடத்துவதற்கு முன்னர் மூன்று கிறித்துவ தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
சாராயம் நிரப்பிய குண்டுகளை வீசினர்.
இந்த தேவாலயங்களில் ஒன்றின் அலுவலகம் மிகவும் மோசமாக தீக்கிரையானது. மற்ற கட்டடங்கள் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டன.
Fourth church attacked in Malaysia as Allah row deepens
அல்லாப் பிரச்சினை தீவிரமடைவதால் நான்காவது சர்ச் தாக்கப்பட்டது! முதலில் மூன்று சர்ச்சுகள் தாக்கப்பட்டன!
Three churches attacked in Kuala Lumpur – PTI

தீக்குண்டுகள் வீசப்பட்டது இறுதி ஆட்டம் என்று சபா அரசியல்வாதி கருதுகிறார்
January 09, 2010, 4:32 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
கோலாலம்பூரிலும் பெட்டாலிங் ஜெயாவிலும் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து சபாவிலும் சரவாக்கிலும் உள்ள நிரந்தர கிறிஸ்துவ வாக்கு வங்கிகளை கூட்டரசு அரசாங்கம் இனிமேலும் முழுமையாக நம்ப முடியாது. “அந்தத் தேவாலயத் தாக்குதல்களுக்கும் 2008 தீவகற்ப மலேசியாவில் ஏற்பட்ட அரசியல் சுனாமிக்கு முந்திய கோவில் உடைப்புக்களுக்கும் ஒற்றுமை இருக்கிறது”, என்று அவ்விரு மாநிலங்களுக்குமான பிகேஆர் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான் கூறினார்.
அவர் கோத்தா கினாபாலுவில் மலேசியாகினிக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி சீன வாக்காளர்களும் இறைவனுக்கு அஞ்சும் முஸ்லிம்களில் பலரும் கூட கிழக்கு மலேசிய மக்களுடன் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவைக் கைவிடுவர் என்று அவர் நம்புகிறார். “அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக எங்களுடைய பாஹாசா இந்தோனிசியா பைபிள்களை சுங்கத்துறை தேக்கி வைத்திருப்பதே கடுமையான விஷயம்”, என்று கூறிய ஜெப்ரி, இப்போது அந்த தீ வைப்புச் சம்பவங்கள் சமூகத்தில் இன்னும் காணப்படும் எல்லா சந்தேகங்களையும் முற்றாக நீக்கி விடும் என்றார். அல்லாஹ் என்ற சொல் மீதான நீதிமன்ற விவாதங்கள் கூட கிராமப்புற மக்களை அம்னோவின் பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை என்று பிகேஆர் தேசிய உதவித் தலைவருமான அவர் சொன்னார். “நான் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அறிவுப்பூர்வமாக விஷயங்களை அணுகுகின்றவன்.” – “ஆனால் தீவகற்ப மலேசியாவில் தேவாலய தீக்குண்டு வீச்சு படங்களைப் பார்த்ததும் நானே உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் முதன் முறையாக என் கண்கள் குளமாகின.”
கிழக்கு மலேசியாவுக்கு ஹிண்ட்ராப் முன்னுதாரணம்: அந்த படங்கள் கிழக்கு மலேசியாவில் கிராமப்புறப் பகுதிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த சபா அரசியவாதி கருதுகிறார். உள்ளூர் அரசியல்வாதிகள் அந்தச் சம்பவங்கள் மீது தங்களது சொந்த கருத்துக்களையும் வெளியிடுவர் என்பதை ஜெப்ரி மறுக்கவில்லை. கோவில் உடைப்புக்களைத் தொடர்ந்து ஹிண்ட்ராப் போராளிகளிடையே அதுதான் நிகழ்ந்தது. ” இந்திய வாக்காளர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள 67 நாடாளுமன்றத் தொகுதிகளில் அவர்களுடைய உணர்வுகள் தூண்டப்பட்டன”, என்றார் அவர். அந்தத் தீ வைப்பு சம்பவங்கள் “சில கோழைகள் அல்லது தீவிரவாதிகளினால்” மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட சம்பவங்கள் என்று ஜெப்ரி கருதவில்லை. அல்லாஹ் விவகாரத்தை அம்னோ கையாளும் முறை “நாட்டில் உருவாகி வரும் புதிய அரசியல் பாணிக்கு அந்தக் கட்சி நல்லதைச் செய்யாது” என்பதை தெளிவாக உணர்த்துவதாகவும் அவர் சொன்னார்.
“அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு அவசியமானால் வலிமையையும் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பும் சில சக்திகள் அம்னோவில் இருப்பதாக நான் கருதுகிறேன்”, என்றும் அவர் குறிப்பிட்டார். “மற்றவர்களைப் பணிய வைப்பதற்கு அவர்களை வேண்டுமென்றே மிரட்டி, அச்சத்தை ஏற்படுத்துவது தான் அதுவாகும்.” …“வெகு தொலைவில் சபா, சரவாக்கில் உள்ள நாங்கள் எங்களுடைய பைபிளிலும் பிரார்த்தனைகளிலும் கடவுளுக்கு அல்லாஹ் என்னும் சொல்லை பயன்படுத்துவது மீது தீவகற்ப மலேசியா உள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வினோதமாக இருகிறது”, என்றும் ஜெப்ரி குறிப்பிட்டார்.
கடவுள் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் அமைதியாகத் தான் இருந்தார்: “அல்லாஹ் என்ற சொல் தீவகற்ப மலேசியாவில் உள்ள கிறிஸ்துவ சமூகத்திற்கு பிரச்னையே இல்லை. ஆனால் தென் சீனக் கடலுக்கு இந்தப் பக்கம் உள்ளவர்களுக்குத்தான் அது பிரச்னை. 300 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் எங்கள் கடவுளை எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு தீவகற்ப மலேசியாவில் இருப்பவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது. நன்கு திட்டமிடப்பட்டது என்று ஜெப்ரி மீண்டும் வலியுறுத்தினார். “சபா சரவாக் மக்களை முழுமையாக அடிபணிய வைப்பது அதன் நோக்கம் ஆகும்”, என்றார் அவர். பிரதமர் நஜிப்பும் அவரது நெருங்கிய உறவினருமான உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஊக்கமூட்டி வந்துள்ளனர் என்றும் ஜெப்ரி கூறினார்.
ஏமாற்றப்பட்ட உணர்வு வலுவடைந்து வருகிறது: “மலேசியா தோற்றுவிக்கப்பட்டதில் சபாவுக்கும் சரவாக்கிற்கும் நன்மை இல்லை என்பது ஆண்டுக்கு ஆண்டு தெளிவாகி வருகிறது”, என்று அவர் கூறினார். “அல்லாஹ் விவகாரத்தில் மட்டும் தீவகற்ப மலேசியா எங்களை அச்சுறுத்தவில்லை. புதிய காலனித்துவ சுரண்டலுக்கும் நாங்கள் பலியாகி வருகிறோம்.” பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக் கொண்ட அம்னோ இன்னும் மாறவில்லை என்று மாநில உரிமைகளுக்கும் சுயாட்சிக்கும் போராடி வரும் அந்த சபா அரசியல்வாதி கூறினார். “பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று உள்ள ஒரு கட்சி நமக்கு இன்னும் தேவை தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நமது சுதந்திரம் எங்கே?” என்று ஜெப்ரி வினவினார். “அவர்கள் பிரிட்டிஷ்காரர்களைப் போன்று பிரித்து ஆளும் தந்திரங்களைப் பின்பற்றுகின்றனர். எங்களை அடிமைகளைப் போன்று நடத்துகின்றனர். மலாயாவைப் போன்று இன ரீதியாக வேறுபடுத்த முயற்சிக்கின்றனர். எங்கள் மாநிலங்களை மேம்படுத்தாமல் எங்கள் வளங்களை சுரண்டுகின்றனர்.” “என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தான் பல ஆண்டுகளாகத் தோண்டிய குழியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அம்னோ முயன்று வருகிறது”, என்று ஜெப்ரி எச்சரித்தார். “நஜிப்பின் ஒரே மலேசியா என்று அழைக்கப்படும் கோட்பாட்டில் உள்ள வெறுமையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஆனால் அது தான் உண்மை.”
அண்மைய பின்னூட்டங்கள்