Posted tagged ‘அரவிந்த் கேசரிவால்’

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

நவம்பர் 11, 2013

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த ட்தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

Acharya Pramod Krishan with Baba Ram dev

பத்வா மௌலானாவின் விவரங்கள்: தௌகீர் ராஸா கான், இதிஹாத்-இ-மில்லத் கவுன்சில் [ Ittehad-e- Millat Council] என்ற தீவிரகருத்துக்களைப் பரப்பி வரும் இயக்கத்தின் தலைவர். என்ற அடிப்படை முஸ்லிம் ஏற்கெனவே கலவரங்களைத் தூண்டி விட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டவர். புஸ்ஸின் தலைக்கு ரூ ஒரு கோடி என்று அறிவித்து பத்வா போட்டவர். அதாவது, தஸ்லிமா நஸ் ரீன் இஸ்லாமுக்கு எதிராக எழுதினார் என்ற காரணத்திற்காக, அயத்துல்லா கோமேனி மாதிரி, தண்டனை விதித்து, யாராவது அவரைக் கொன்று தலை வெட்டிக் கொண்டு வந்தால் பணம் கொடுக்கப்படும் என்று அர்த்தமாம். அதே மாதிரி, பிறகு தஸ்லிமா நஸ் ரீன் என்ற பங்களாதேச தலைக்கு ரூ 5 லட்சம் என்று அறிவித்தவர். இப்படி பத்வா போட்டு பிரபலமாகியதால், இவரை “பத்வா மௌலானா” என்றே அழைக்கப் படுகிறார்.

after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan

அரவிந்த் கேசரிவால் தௌகீர்ராஸாகானை சந்தித்தது:  ஒன்பது நாட்களுக்கு முன்னர் 01-11-2013 அன்று அரவிந்த் கேசரிவால் என்கின்ற “ஆம் ஆத்மி கட்சி”த் தலைவர், இந்த கம்யூனல், அடிப்படைவாத, தீவிரவாத கொள்கைளைக் கடைப்பிடிக்கும் மௌலானாவை பிரெய்லியில் சந்தித்து தங்கள் கட்சிற்காக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது “கம்யுனிலிஸத்துடன் ஜோடி சேர்கிறார், ஓட்டுவங்கி அரசியல் நடத்த்ய்கிறார்ரென்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் இவரைக் கடுமையாக சாடினார்கள்[1]. மீம் அப்சல் என்ற காங்கிரஸ் கட்சி ஊடக பேச்சாளர், அரவிந்த் கேசரிவாலின் அரசியல் ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிப்பதில் உள்ளது, அதனால் முஸ்லிம்களை கால்பந்து போல நினைக்கிறார்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[2]. அரவிந்த் கேசரிவாலோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, என்று சப்பைக்கட்டியதோடு, ஏதோ பெரிய இஸ்லாமிய பண்டிதர் போல, முப்தியால் தான் பத்வா போட முடியும், மௌலானாவால் பத்வா போட முடியாது என்று விளக்கம் கொடுத்தார். வேடிக்கையென்னவென்றால், இதனை எந்த முப்தியோ, மௌலானாவோ தவறு அல்லது சரி என்று சொல்லவில்லை, இல்லை என்ன காபிராகிய நீர், எங்கள் மதவவிசயங்களைப் பற்றி வியாக்யானம் செய்கிறாயே, என்று கண்டிக்கவில்லை.

Digvijay and Tauqeer together 2013

காங்கிரஸ் ஊக்குவிக்கும் சாமியார்கள்: காங்கிரஸுக்கு நெருங்கிய சாமியாரான, ஆச்சார்யா பிரமோத் கிருஷண் என்பவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்[3]. அது மட்டுமல்லாது மோடிக்கு எதிராக பேசும் சாமி என்றும் குறிப்பிடத் தக்கது[4]. பல போலி சாமியார்கள் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் பேசி வருகிறார். பாபா ராம் தேவ் விசயத்தில், அவர்க்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாலகிருஷ்ணனின் போலி பாஸ்போர்ட் வழக்கில் பங்கு கொண்டுள்ளார்[5]. இவர் பேசும் விதம், நடந்து கொள்ளும் போக்கு முதலியவற்றைப் பார்க்கும் போது, காங்கிரஸுக்கு சார்பாக, இந்து நலன்களுக்கு எதிராக செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. இதனால், இந்து சந்நியாசிகளின் ஒற்றுமை குலைகிறது. அதாவது, சந்நியாசிகள், மடாதிபதிகள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது, பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸும், காங்கிரஸ் ஆதரவு சந்நியாசிகளும் வேலை செய்கின்றனர் என்ரும் தெரிகிறது.

some-swami, Tahil Ali, Dig, Tauqir Raza, Acharya Pramod Krishan

மதவெறிக் கொண்டவர் “இந்து-முஸ்லிம்” பாடுபடப் போகிறாராம்: “கல்கி மஹோத்சவம்” என்ற நிகழ்சியில் கலந்து கொண்டபோது, 10-11-2013 அன்று தனக்கு வலது பக்கத்தில் தாரிக் அன்வர் [Union Minister of State for Agriculture Tariq Anwar] மற்றும் இடது பக்கத்தில் தௌகீர் ராஸா கான் உட்கார்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோருமே ஒரே மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நடுவில் திக்விஜய் நன்றக குனிந்து, தௌகீர் ராஸா கானின் பின்பக்கத்தில் ஸ்வாமியுடன் ஏதோ பேசியதும் வீடியோவில் தெர்கிறது[6]. அதாவது அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கின்றனர் என்ரு காட்டிக் கொள்கின்றனர். திக்விஜய் சிங்கோ, தௌகீர் ராஸா கானைப் புகழ்ந்து, அவர் ஸ்வாமியுடன் சேர்ந்து கொண்டு “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறார். பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்[7], என்று பாராட்டி பேசினார்[8]. மக்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும். அவரை மதவாதி போல பார்க்கக் கூடாது என்றெல்லாம் விளக்கினார்.

Beware of anti-Hindu hindus

கோசாலையைத் திறந்து வைத்து பசுவதையைப் பற்றி பேசினாராம்: தௌகீர் ராஸா கான் ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொலைசெய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் முறையை எதிர்க்கிறேன். இப்படியே பசுக்கள் கொல்லப்பட்டால், நாளைக்கு குழந்தைகள் குடிக்க பாலே இருக்காது, என்று ஒரு பசு காப்பகத்தைத் திறந்து வைக்கும் போது பேசினார்[9]. பிறகு தௌகீர் ராஸா கான், ஊடகக்காரர்களுடன் பேசும் போது, தான் மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதாக தெரிவித்தார். பத்வா விசயத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார்[10].

TAUQEER REZA KHAN

காங்கிரசஸின் வஞ்சக திட்டம்: முன்னர் ராமஜன்ம பூமி விசயத்தில், காங்கிரஸே முந்தி கொண்டது. முலாயம் சிங் யாதவோ, கரசேகர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி, இந்துக்களைக் கொன்று, முல்லாயம் சிங் யாதவ் ஆனார். இப்பொழுது, சோனியா இந்து சாமியார்களைப் பிரிக்க சட்ய்ஹி செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. பதவி, பணம், அதிகாரம் இருப்பதனால், சோனியா இவர்களை சுலபமாக வளைத்து விடுகிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு இந்து எழுச்சியையும் அடக்க இவ்வாறான எதிர்மறையான செயல்களை செய்து வருவது தெரிகிறது. முன்னர் அஜாரே ஆர்.எஸ்.எஸ் தூண்டுதல் பேரில் தான், ஊழல் எதிர்ப்பி போராட்டம் நடத்துகிறார் என்பது போல செய்தி வந்தது. அவர் ஒதுங்கிக் கொண்டார். அரசியல்வாதிகளை எதிர்ப்பதானால், கட்சி தொடங்கி தேர்தலில் நில்லுங்கள் என்ரு கபில் சிபல் சவால் விட்டார். இவ்விதமாக காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை அடக்கியது. அரவிந்த கேசரிவால் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி விட்டார். இதனால், காங்கிரசூக்குத் தான் ஆதாயம்.

© வேதபிரகாஷ்

11-11-2013


. [1] Earlier on November 1, Arvind Kejriwal met Maulana Tauqeer Raza Khan in Bareilly, which sparked a political conspiracy as Congress claimed that the AAP leader is playing a communal card ahead of the Assembly election in Delhi. http://www.niticentral.com/?p=155911

[2] Congress spokesman Meem Afzal had alleged that Kejriwal “whose politics originated with the backing of the RSS was trying to make Muslims a football” for electoral mileage.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[3] The function was organised by Swami Pramod Krishnan, who is said to have good relations with the Congress. Krishnan also praised the cleric and said people like him were needed to promote communal harmony in the country

[5] Pramod Krishnan, who is a litigant in the fake passport case filed against Balkrishan, even feared that Shankar Dev may have been killed by them as their guru knew of the fake documents that were submitted by him at Bareilly passport office to procure the passport.

http://www.tribuneindia.com/2012/20120806/dun.htm#7

[7] Speaking at the inauguration of Kalki Mahotsava here last night, Digvijay praised Raza, who enjoys minister of state rank in SP government in Uttar Pradesh, and said that he along with Acharya Pramod Krishnan have started a mission of Hindu-Muslim unity in the country.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/after-arvind-kejriwal-digvijay-singh-praises-controversial-muslim-clerictauqeer-raza-khan/articleshow/25562343.cms

[8] Dig vijay Singh on Sunday shared the stage with controversial Muslim cleric Tauqeer Raza Khan praised him for working for ‘Hindu-Muslim unity’. his party attacked AAP leader Arvind Kejriwal following his meeting with the religious leader.

http://zeenews.india.com/news/nation/digvijay-praises-tauqeer-raza-says-he-started-mission-of-hindu-muslim-unity_889072.html

[9] Inaugurating a cow shelter, Raza said the manner in which thousands of cattles were being slaughtered and exported to foreign countries was a matter of great concern and if it was not stopped a day would come when the children in the country would not get milk to drink.He said that a joint campaign was needed to save cattle.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[10] Tauqeer Razadenied having any hand in the violence. He has also denied that he had issued any “fatwa” against Taslima Nasreen.

http://www.deccanherald.com/content/368211/digvijay-shares-stage-039controversial039-cleric.html

தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!

ஜூலை 16, 2013

தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!

வழக்குகள் நடத்தப்படுவது,  தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏகுகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன எற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்ன்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.

இந்திய முஜாஹித்தீன்என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.

தீவிரவாதத்தின் நிறம்,  திசைத் திருப்பல்  –  செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்ற சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.

முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதால் டாஸ்க் போர்ஸ்உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்!ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].

முஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது?: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].

சட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும்,  கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].

Khurshid is heard saying: “Mujhe wakilon ka mantri banaa diya, mujhe law minister banaa diya, aur kahaa kalam se kaam karo. Karoonga, kalam se kaam karoonga, lekin lahu se bhi kaam karoonga… Wo jaayein Farrukhabad, woh aayein Farrukhabad, lekin laut kar bhi aayein Farrukhabad se… Wo baat yeh kehte hain ki hum sawaal poochhenge, tum jawaab dena. Hum kehte hain ki tum jawaab suno, aur sawaal poochhna bhool jaao (I have been made the Law Minister and asked to work with the pen. I will work with the pen but also with blood… Let him go to Farrukhabad, but let him also return from Farrukhabad. They say they will ask questions and we should respond. I say that you hear the reply and forget asking questions).” –

ஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].

வேதபிரகாஷ்

© 16-07-2013


[1] Four criminal cases are pending against Rahman Khan himself and major being the charges of embezzlement of the Amanath Cooperative Bank’s funds of Rs.156.77 crore. and also accused of causing loss of property wort Rs 2 lakh crore to Wakf board affecting several thousands of people belonging to minority community. Knowing his past deeds, how can anyone believe him and expect him to do any justice to anyone including Muslims youths who are jailed on terror charges.

http://www.deccanchronicle.com/130712/news-politics/article/rahman-khan-kicks-row

[4] Minority Affairs Minister Rahman Khan on Sunday clarified his demand for setting up a task force to oversee terror cases involving Muslims, which placed him under fire from the Opposition. Khan on Friday (12-07-2013) had said that a task force will ensure justice for “innocent Muslim youth” languishing in jails in terror cases. The minister has now backtracked saying the task force will prevent the rise of radicalisation and terrorism amongst minorities. He also said that the government will soon launch a new helpline for the minorities for lodging complaints against human rights violations.

http://ibnlive.in.com/news/rahman-khan-does-a-uturn-on-setting-up-task-force-for-muslims/406472-37-64.html

[8] On Sunday, while campaigning for his wife, Mr Khurshid said that if it is elected, the Congress will set aside a nine per cent sub-quota for UP government jobs for backward Muslims; this would be carved out of existing reservation for Other Backward Castes (OBCs) in UP. The minister said more than eight Muslim castes would benefit from this move. The UP election office has taken cognisance of a newspaper report to serve notice on Louise Khurshid. She has been asked to explain within three days the statements made by her husband. The notice to Mr Khurshid would be served by the Election Commission, sources said, based on a complaint made by the BJP this morning.

http://www.ndtv.com/article/assembly-polls/salman-khurshid-in-trouble-over-muslim-quota-speech-165484

[10] Union Law Minister Salman Khurshid has criticised the Election Commission (EC) for issuing a notice to him for his Muslim sub-quota promise and claimed he did not violate the model code of conduct. Khurshid defended his announcement of granting sub-quota to Muslims if Congress came to power in Uttar Pradesh and insisted that it is not a poll violation of any sorts. Khurshid had promised 9 per cent sub-quota for backward Muslims within 27 per cent OBC quota in Uttar Pradesh if the party wins the Assembly elections.

http://ibnlive.in.com/news/muslim-quota-is-in-congress-manifesto-says-salman-khurshid/219917-37-64.html