Posted tagged ‘அப்துல்லா’

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

TN POLICE announcement

அல்உம்மா கும்பல் தாக்கியது[1]: என்று தலைப்பிட்டு தி இந்து செய்தி வெளியிட்டது. அதற்குள் சிறை காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[2]. அந்த கைதிகளை அறைக் குள் அடைத்த போது, அவர்கள் துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் தங்கள் வசம் பிடித்து வைத்துக் கொண்டனர்[3].  காவலர்கள் அவர்களை விடுவிக்கும்படி கூறிய போது அவர்கள் மறுத்துவிட்டனர்.   இது தொடர்பாக   அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். புழல் சிறைக்குள் கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிறைத்துறை தலைவர் திரிபாதி புழல் சிறைக்கு விரைந்து வந்தார்[4]. அவர் அதிகாரிகளிடம்   நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் கைதிகள் பிடித்து வைத்துள்ள 2 காவலர்களை விடுவிக்க அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரவு அந்த காவலர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்[5].  பிறகு சிறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது[6].

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsபுழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லை:  டி.ஐ.ஜி.  ராஜேந்திரன், வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததால் தற்போது கூடுதலாக போலீசார் வரவழைக்கப் பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளை கண்காணிக்க  1 டி.ஐ.ஜி, 3 சூப்பிரண்டுகள், 2 ஜெயிலர்கள், 11 துணை ஜெயிலர்கள், 112 வார்டன், 81 துணை  வார்டன்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போது நடவடிக்கை   எடுக்கப் பட்டுள்ளது. கைதிகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் சிறை வார்டன் முத்துமணி, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   ஸ்டான்லி ஆஸ்பத்திரி ஐ.சி.யு. வார்டில் அவருக்கு   டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[7]. கொலை முயற்சி, அரசு அதிகாரியை தாக்குதல் உட்பட 12 பிரிவுகளின் கீழ் 20 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8].  ;போலீஸாரின் மனைவி, மக்கள், உறவினர் சிறைச்சாலை முன்பு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டி ஆர்பாட்டம் செய்தனர்[9].

Mohammed Haneefa arrested - Advani murder plotஅல்உம்மா தீவிரவாதிகள் கலவரத்தில் இறங்கியது ஏன்?: ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் வேலூரிலும், ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும், வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். 25-09-2015 அன்று, புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்பிரிவு போலீஸ்காரர் முத்து மணி, சிறை வார்டன்கள் செல்வன், இளவரசன், மோகன் உள்பட, 5 பேரை கைதிகள் தாக்கி, பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறையில் பதட்டம் ஏற்பட்டது.

Bomb plnters to kill Advaniஅல்உம்மா தீவிரவாதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்[10]: குறிப்பிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள் சேர்ந்திருந்தால், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதனால், அவர்கள் வெவேறு சிறைகளுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. கலவரத்திற்கு காரணமான –

  1. போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin], வேலூர் சிறைக்கும்,
  2. பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], மதுரை சிறைக்கும்,
  3. பிலால் மாலிக் [Bilal Malik], கடலூர் சிறைக்கும்,
  4. காஜா மொய்தீன் [Khaja Moideen], சேலம் சிறைக்கும்,
  5. முன்னா [Munna alias Mohammed Rafiq] கோவை சிறைக்கும்,
  6. கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip], திருச்சி சிறைக்கும் மாற்றி,

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்[11]. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் பக்ருதீன் 26-09-2015 அன்று, காலை புழல் சிறையில் இருந்து, காலை, 11 மணிக்கு வேலூர் சிறைக்கு கொண்டு சென்று, தனி செல்லில் அடைத்தனர். அவருக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 26-09-2015 அன்று மதியம், 12 மணிக்கு, போலீஸ் பக்ருதீனுக்கு மதிய உணவவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொண்டு சென்றனர். உணவு தட்டை தூக்கி எரிந்த போலீஸ் பக்ருதீன், தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என, கலாட்டா செய்தார்[12]. அதாவது அவனுக்கு எந்த அளவுக்கு கொழுப்பு, ஆணவம் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடிய சிறை காவலர்கள், நாளை சிக்கன் பிரியாணி கொடுப்பதாக கூறி, சமாதானம் செய்தனர். பிறகு வேறு உணவை கொடுத்து, சாப்பிட வைத்தனர்[13]. ஏற்கெனவே போலீஸாரைத் தாக்கி, கலவரம் செய்ததலினால், சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிக்கு, ஏன் இவர்கள் இவ்வாறு தாஜா செய்ய வேண்டும்? சமீபத்தில் ஆம்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்தபோது, போலீஸார் பிரியாணி விருந்து போட்டது ஞாபகம் இருக்கலாம். அப்படியென்றால், முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு இத்தகைய சீராட்டு கிடைக்கிறதா? இந்நிலையில் பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகமது ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  S. Vijayakumar, Al Umma cadre attack jail officials in Puzhal prison, The Hindu, September.26, 2015, Updated: September 26, 2015 13:59 IST.

[2]  தினகரன், புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயம், பதிவு செய்த நேரம்: 2015-09-25 21:08:54.

[3]  தினமலர், புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் கைதிகள், பயங்கரவாதிகள் ஆவேசம், செப்டம்பர்.26, 2015. 03.11.

[4] http://www.thehindu.com/news/cities/chennai/al-umma-cadre-attack-jail-officials-in-puzhal-prison/article7690955.ece

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350503

[6] https://www.youtube.com/watch?v=rczOrMOMIBU

[7] http://www.dailythanthi.com/News/State/2015/09/26110857/6-prisoners-were-transferred-to-another-prison.vpf

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7694509.ece

[9] Policemen’s wives protest– Furious over the attack on the warders, the family members of prison staff staged a protest near Puzhal prison demanding that security for the personnel be stepped up. The police pacified them and they dispersed only after officers assured them that the necessary measures will be taken to ensure their safety. http://www.thehindu.com/news/cities/chennai/shortage-of-personnel-hits-security-at-puzhal-prison/article7693585.ece?ref=relatedNews

[10]  Viveka Narayanan, 6 Al-Umma cadre sent to different jails, The Hindu, September.27, 2015; Updated: September 27, 2015 08:06 IST

[11] http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[12]  தினமலர், சிக்கன் பிரியாணி கேட்டு போலீஸ் பக்ருதீன் கலாட்டா, செப்டம்பர்.27, 2015.08.33.

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1351396

இஸ்லாம், மதமாற்றம், பலதார திருமணம் – பாதிக்கப் படுவது பெண்களே, குறிப்பாக இந்துப் பெண்களே.

மார்ச் 15, 2014

இஸ்லாம், மதமாற்றம், பலதார திருமணம் – பாதிக்கப் படுவது பெண்களே, குறிப்பாக இந்துப் பெண்களே.

 

Shahi Imam 1973-2009

Shahi Imam 1973-2009

முஸ்லிம்கள் தாஜா செய்யப் பட்டு வந்தது (1947-1985): நாங்கள் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்படமாட்டோம், எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது, என்ற ரீதியில் முஸ்லிம்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இந்திய முஸ்லிம்கள் விடுதலைப் பெற்ற பின்னரும், அதாவது பாகிஸ்தான் மதரீதியில் உருவானப் பிறகும், “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம், கலவரம் என்று செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 1947 முதல் 1964 வரை நேரு காலத்தில் செல்லப்பிள்ளைகளாக நடத்தப் பட்டனர். 1984 வரை, அதாவது இந்திரா பிரியதர்சினி நேரு காலம்வரை ஓரளவிற்கு மாறுபட்டனர் எனலாம். சஞ்சய் காந்தி முஸ்லிம்களுக்கும் கருத்தடை / குடும்பக்கட்டுப் பாடு ஆபரேஷனை வலுக்கட்டாயமாக செய்வித்தார் என்ற புகாரும் / சர்ச்சையும் இருந்தது[1]. ஆனால், ராகுல் கந்தி பதவிக்கு வந்தவுடன், முகமதியர் தறிக்கெட்டு நடக்க ஆரம்பித்தனர் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. 1980ல் தில்லி இமாம் அப்துல்லா புகாரி “ஆதம் சேனா” என்று ஆரம்பித்து, மதவாதத்தைத் தூண்டி விட்டார்[2].  1985ல் ஷா பானு வழக்குப் பெரியப் பிரச்சினையை ஏற்படுத்தியது[3]. சையது சஹாப்புத்தீன், ஆரிப் முகமது கான், அப்துல்லா புகாரி என அனைவரும் தாம் தான் இஸ்லாத்தைக் காக்கப் போகிறேன் என்பது போல செயல்பட்டு குடும்பச் சட்டங்களை சீர்குலைத்தனர் எனலாம். ஷா பானு வழக்கு இவர்களின் முகத்திரையைக் கிழித்தது, அவரவர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அளவுகளையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டின.

 

Sha bano divorced in 1978

Sha bano divorced in 1978

மொஹம்மதுஅஹமதுகானின்நிக்காஹ்வும், தலாக்கும், மெஹர்பிரச்சினையும் (1985)[4]: மொஹம்மது அஹமது கான் என்பவர் ஷா பானுவை 1932ல் நிக்காஹ் செய்து கொண்டார். வக்கீலாக இருந்த இவர், ஷா பானு மூலம் இரண்டு மகள்களையும் பெற்றெடுத்துக் கொண்டார். சுமார் 46 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்திய இவர், திடீரென்று 1978ல் வீட்டைவிட்டுத் துரத்தி விட்டாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளின் மகளும் ஆவார். பிறகு 06-11-1978 அன்று தலாக் / விவாகரத்து செய்து விட்டாராம். இதனால் வேறு வழியில்லாமல் மெஹர் என்று சொல்லப்படக் கூடிய ஜீவனாம்சத் தொகையான ரூ 500 பிரதி மாதமும் அளிக்கப்படவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டமுறையின் பிரிவு 125ன் கீழ் இத்தொகை கேட்கப்பட்டது. கீழ்கோர்ட் அளித்தது, ஆனால், மொஹம்மது அஹமது கான் மேல்முறையீடு செய்தார். உச்சநீதி மன்றத்தில் மொஹம்மது அஹமது கானின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, ஷா பானுவிற்கு அப்பணம் கொடுக்கப் படவேண்டும் என்றாகியது. ஆனால், முஸ்லிம்கள் இதனை வயதான மூதாட்டிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதவில்லை, மாறாக முஸ்லிம்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளில் நுழைவதாக கொத்தித்தனர்.

 

Abdullah Bukhari made VP singh to recall Jagan Mohan

Abdullah Bukhari made VP singh to recall Jagan Mohan

இஸ்லாம்  ஆபத்தில்  உள்ளதுஎன்ற  போராட்டமும், முஸ்லிமளுக்கு  தனிசட்டம்  உருவான  விதமும் (1985-87): முஸ்லிம் இயக்கங்கள் உடனே இதனை “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று திசைத்திருப்பி கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம், கலவரம் என்று ஆரம்பித்தன.  உச்சநீதிமன்றம் தனது எல்லைகளைக் கடந்து முஸ்லிம் சட்டத்திற்குள் நுழைந்து தீர்ப்பளித்துள்ளது, இது அவர்களது மதஉரிமைகளை மீறும் செயலாகும் என்று கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தில்லி மசூதி இமாம் புகாரி, உச்சநீதிமன்ற நீதிபதிகளை இழிவாகப் பேசி, அவர்களது கால்களை உடைக்க வேண்டும் என்று பேசினார், வசைபாடினார். இதனால், பேசிய அவர், செய்தியை வெளீயிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலியவற்றின் மீது வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற அவதூறு குற்றத்திற்காக வழக்குகள் தொடரப்பட்டு, உயர்நீதி மன்றங்கள் கைது செய்ய வாரண்டையும் பிறப்பித்தது. ஆனால், அவர் இறக்கும் 2009 – வரை கைது செய்யப் படவில்லை. நீதிபதிகளின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனால், முஸ்லிம்களை தாஜா செய்ய சட்டத்தை மாற்றி, முஸ்லிம்களுக்கு என்று தனியாக 1986லேயே ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அதுதான் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகளைக் காக்கும்) சட்டம், 1986 என்ற பெயரில் 19-05-1986 அன்று நிறைவெற்றப்பட்டது.

 

Two Muslim leaders always cry Islam is in danger

Two Muslim leaders always cry Islam is in danger

முஸ்லிம்  பெண்கள்  உரிமைகளில்  மிதவாதஅடிப்படைவாத  முஸ்லிம்களின்  போராட்டங்கள்  (1987-88): அதாவது, முஸ்லிம்களுக்கு மற்ற பெண்களைப் போன்று பொதுசட்டம் பொறுந்தாது. தலாக் செய்யப்பட்ட பெண்களுக்கு என்ன ஜீவனாம்சம் கொடுக்கலாம் அல்லது கூடாது என்பதெல்லாம் பற்றி யாரும் கேட்கமுடியாது. அது முஸ்லிம் சட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். சையது சஹாப்புத்தீன், ஆரிப் முகமது கான், அப்துல்லா புகாரி என அனைவரும் தாம் தான் இஸ்லாத்தைக் காக்கப் போகிறேன் என்பது போல செயல்பட்டு இவ்விசயத்தில் குழப்பத்தை உண்டாக்கினர். இவ்வாறு முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன என்று மிதவாத முஸ்லிம்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டனர். ஆனால், அடிப்படைவாத முஸ்லிம்கள் தாம் வெற்றிப் பெற்றனர், மற்ற முஸ்லிம்கள் அடங்கிவிட்டனர், அடக்கப்பட்டனர். 1988ல் இந்தியா முதலாக சல்மான் ருஷ்டியின் “சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தகத்தைத் தடை செய்தது. இது அயத்துல்லா கோமேனி என்ற இரானிய மதத்ததலைவர் பத்வா போடுவதற்கு முன்பே செய்யப்பட்ட செயலாகும்.

 

Allah quran etc symbolism

Allah quran etc symbolism

ஜம்முகாஷ்மீர்  தீவிரவாத  மாதிரி  செயல்கள்  இந்து  பெண்களைப்  பாதித்த  விதம் (1985-95): 1985-1995 காலகட்டத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களின் செயல்கள் தீவிரவாத செயல்களாகவும் மாறின. ஜகன் மோஹன் கவர்னராக இருந்தபோது, ஓரளவிற்கு கட்டுல்க்குள் இருந்தது. ஆனால், 1990 இமாம் புகாரி வி.பி.சிங்கை வற்புறுத்தி அவரை நீக்கச் செய்தார்[5]. இதனால், இஸ்லாமிய தீவிரவாதம் கட்டவுழ்த்து விடப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து இந்துக்கள் ஈவு-இரக்கமின்றி வெளியேற்றப்பட்டனர். அதாவது, முஸ்லிம்களாக மாறுங்கள், இல்லை வெளியேறுங்கள் என்று ஜிஹாதிகள், இந்துக்களை மிரட்டினர், தாக்கினர், துன்புறுத்தினர், கொலை செய்யவும் ஆரம்பித்தனர். இவ்வாறான வெளிப்படையான தீவிரவாதம் கட்டவிழ்க்கப் பட்டதால், லட்சக் கணக்கான இந்துக்கள் வெளியேறினர்; பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் – கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப் பட்டனர். காஷ்மீர இந்து பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால், சொத்துரிமை கிடையாது என்றும் மிரட்டினர். அதாவது, இம்மாநிலம் இந்து பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் ஷரீயத்தை அமல்படுத்த ஆரம்பித்தது. ஆனால், இஸ்லாம் சட்டத்தில் முஸ்லிம் பெண்களும் மாற்றமடையவில்லை. மாறாக, தற்கொலைப் படையில் சேர்ந்து குண்டுகளாக மாறினர்.

Yasin Bhatkal arrested

ஜம்முகாஷ்மீர்  மாநில  மாதிரி  மற்ற  மாநிலங்களுக்குப்  பரவிய  வீதம் (1995-2002): இத்தகைய மாற்றம் மற்ற மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் பரவியது. எங்கு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனரோ அங்கு, குறிப்பாக இந்து பெண்களை மதம் மாற்றம் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு செயல்திட்டங்களை உருவாக்கினர். இதனால், மணமான இந்துக்கள் கூட அவர்களின் வலையில் சிக்கினார்கள். அதாவது, பலதார மணங்களைப் புரிந்து கொள்ள இஸ்லாத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட இந்து பெண்கள் புகார் கொடுக்க ஆரம்பித்தனர்.  முதல் மனைவியின் விருப்பம் / சம்மதம் இல்லாமல் இந்து கணவன் இரண்டாவது, மூன்றாவது மனைவிகளைக் கொண்டு, இஸ்லாமிற்கு மாறியவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. இந்தியக் குற்றாவியல் சட்டத்தின் 494 பிரிவிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் முஸ்லிமாக மாறுகிறான். காஜியிடமிருந்து சான்றிதழ் பெறுகிறான்.  இதனால், அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இந்து மனைவிகள் தவித்தனர். 1996ல் எம். எப். ஹுஸைன் இந்து கடவுளர்களை “கலை நயத்துடன்’ வடித்துத் தாக்கியபோது கூட, இந்தியப் பெண்மைதான் தாக்கப்பட்டது.

 

Fidayeen attack 4

Fidayeen attack 4

முஸ்லிம்கள்   இஸ்லாத்தை  வைத்துக்கொண்டு  இந்து  பெண்களை  ஏமாற்றுவதால்  தான்  சரளா  முதுகல்  உச்சநீதிமன்றத்திற்கு  செல்ல  வேண்டிய  அவசியம் ஏற்பட்டது: அந்நிலையில் தான் “கல்யாணி” என்ற அமைப்பு, இப்பிரச்சினையை வழக்காக உச்சநீதி மன்றத்தில் கொண்டு சென்றது. ஶ்ரீமதி சரளா முதுகல் என்ற “கல்யாணி” அமைப்பின் தலைவி இவ்வழக்கை தொடுத்தார்[6]. உள்ள பிரச்சினை தெளிவாக நீதிமன்றத்தின் முன்பாக வைக்கப்பட்டது. 1978 முதல் 1992 வரை எவ்வாறு இந்து பெண்கள் பாதிக்கப் பட்டனர் என்ற உண்மைகள் வைக்கப்பட்டன[7]. பல முந்தைய தீர்ப்புகளை அலசி, ஒரு இந்து ஆண் செய்துகொண்ட திருமணம், திருமண பந்தம், இந்து திருமண சட்டத்தின் கீழ் வருவதால், எந்த காரணத்தினாலும் அதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாது[8]. அவன் முஸ்லிமாக மாறினாலும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 494ன் படி குற்றாவாளி ஆகிறான்[9]. அதே போல ஒரு முகமதியன் ஒரு மணமான இந்து பெண்ணை ஏமாற்றி, மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அது செல்லாது[10]. துரதிருஷடமாக அந்த முகமதியனின் ஈனச்செயலால், இந்தியக் குற்றாவியல் சட்டத்தின் 440 பிரிவின் கீழ் விபச்சாரத்தின் கீழ் குற்றஞ்சாட்டப் பட்டாள்[11]. அதாவது சட்டம் கூட அவளது கற்ப்பை பாதுகாக்க முடியாமல் தண்டிக்கிறது. அதே நேரத்தில் பாதித்த முஸ்லிமை எப்படி சட்டம் தண்டித்தது என்று குறிப்பிடவில்லை. அதாவது, இந்து பெண் இருமுறைகளில் தண்டிக்கப் படுகிறாள், சமூகத்தில் மரியாதை இழக்கிறாள், தன்னுடை சுயமரியாதை, உரிமைகள் அனைத்தையும் இழக்கிறாள்.

Hemraj-s-family-continues-fast-for-sixth-day

பழைய வழக்குகள் ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப் பட்டதால் பாரபட்சம் தெரிந்தது: இந்து ஆண் அல்லது கணவன் இரண்டாவது திருமணத்தைச் செய்து கொள்ள முஸ்லிம் ஆகி தப்பிக்கப் பார்க்கிறான், என்றால், அதே போல, இந்து பெண் தானே முஸ்லிமாக மதம் மாறி, ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டாலும் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது[12]. கிருத்துவ மனைவி அவ்வாறு முஸ்லிமாக மாற்றப்பட்டாலும், அதே முறை பின்பற்றப்பட்டது[13]. அதாவது, இவ்வாறு முஸ்லிம்கள் / மதம் மாறிய இந்துக்கள் இந்து பெண்களை பலாத்காரமாகவோ, ஏமாற்றிவோ, கடத்தியே திருமணம் செய்து கொள்வதால் பாதிக்கப் படுவது பெண்கள் தாம். இருதாரத் திருமணத்திற்காக சட்டத்திலுருந்து தப்பித்துக்கொள்ள அவர்கள் அவ்வாறு செய்யலாம் ஆனால், உண்மையில் சட்டத்தை வளைக்கத்தான் அவ்வாறு செய்வதால் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்பளித்தன.

Atrocities on Hindus -7- 2013

ஓட்டு  வங்கி  அரசியல்  சட்டமீறல்களை  ஆதரித்து  வருகின்றது: இந்து சட்டம் இந்துக்களுக்குப் பொறுந்தும் எனும் போது, இஸ்லாமை உபயோகித்து, இந்து சட்டத்தை உடைக்க முடியாது என்பதுதான் நிரூபிக்கப் பட்டது. இதுதான் சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் முடிவானது. அதனால் தான், ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அது ஷா பானு தீர்ப்பிலேயே எடுத்துக் கட்டப்பட்டது[14]. பிறகு 2003ல் கூட இன்னொரு தீர்ப்பில் நினைவு கூறப்பட்டது[15]. இது ஏதோ புதியதான சரத்து அல்ல. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 44ல் உள்ளது[16]. ஆனால், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம் ஓட்டு வங்கி என்ற முறையில் தேர்தல்களில் முஸ்லிம்களை நம்பி, குறிப்பிட்ட இடங்களில் ஜெயித்து ஆட்சிக்கு வருவதால் இதைப் பற்றி கடந்த 60 வருடங்களாக பேசுவதே இல்லை[17]. ஆனால், பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாலே, முஸ்லிம்கள் “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்று கூக்குரலிட ஆரம்பித்துவிடுவார்கள். செக்யூலரிஸ்ட் வகையறாக்களும் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்து விடும். பிஜேபி போன்ற கட்சிகள் ஏதாவது சொன்னால், அவற்றை மற்ற எல்லா கட்சிகளும் சேர்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்து விடும். இதுதான், கடந்த ஆண்டுகளில் நடந்து வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக, இதனால் தான் பிஜேபியும் அமைதியாக வேண்டியுள்ளது.

 

© வேதபிரகாஷ்

13-03-2014


[1] Syed Abdullah Bukhari became the Shahi Imam of Jama Masjid in 1973. He was one of the strong voices that opposed the Emergency in 1975. He protested against the targeting of Muslims when they were asked to undergo ‘nasbandi’ (vasectomy). The former Shahi Imam of Delhi’s Jama Masjid, Syed Abdullah Bukhari, died at the All-India Institute of Medical Sciences here on Wednesday July 8, 2009 following a heart attack. He was 87. http://www.hindu.com/2009/07/09/stories/2009070959730400.htm

[2] Seeing political leaders flocking to the Jama Masjid and seeking blessings from his father, Ahmed Bukhari too realised the political and religious significance of the Shahi Imam’s post. In 1980, he entered the political fray by forming the Adam Sena. It was publicised as an organisation that would protect Muslims from every danger, especially during communal riots. But despite all his efforts, it failed to win popular support. “The Sena was not welcomed by the Muslim community and seeing no support, Ahmed Bukhari shut down the organisation,” says senior journalist Wadood Sajid. http://www.tehelka.com/the-bullys-pulpit/

[3] Mohammed Ahmed Khan vs Shah Bano Begum and Ors – 1985 AIR 945

[7] Smt Sarla Mudgal vs UOI & Ors – 1995 AIR 1531

[8] The doctrine of indissolubility of marriage, under the traditional Hindu law, did not recognise that conversion would have the effect of dissolving a Hindu marriage. Conversion to another religion by one or both the Hindu spouses did not dissolve the marriage.

[9] It would be useful to have a look at some of the old cases on the subject. In Re Ram Kumari 1891 Calcutta 246 where a Hindu wife became convert to the Muslim faith and then married a Mohammedan, it was held that her earlier marriage with a Hindu husband was not dissolved by her conversion. She was charged and convicted of bigamy under Section 494 of the IPC. It was held that there was no authority under Hindu law for the proposition that an apostate is absolved from all civil obligations and that so far as the matrimonial bond was concerned, such view was contrary to the spirit of the Hindu law. Re Ram Kumari 1891 Calcutta 246

[10] The Madras High Court followed Ram Kumari in Budansa vs. Fatima 1914 IC 697. Budansa vs Fatima 1914 IC 697

[11] In Gul Mohammed v. Emperor AIR 1947 Nagpur 121 a Hindu wife was fraudulently taken away by the accused a Mohammedan who married her according to Muslim law after converting her to Islam. It was held that the conversion of the Hindu wife to Mohammedan faith did not ipso facto dissolve the marriage and she could not during the life time of her former husband enter into a valid contract of marriage. Accordingly the accused was convicted for adultery under Section 497 of the IPC. Gul Mohammed vs Emperor AIR 1947 Nagpur 121

[12] Nandi @ Zinab vs Criown – ILR 1920 Lahore 440

[13] Emperor vs Mt. Ruri AIR 1919 Lahore 389

[14] Mohammed Ahamed Khan vs Sha Bano Begum AIR 1985 SC 945

[15] July 23, 2003: The Supreme Court today called for a common civil code for all citizens of the country, holding that it would not go against the two key constitutional provisions governing religion. The court said the effort to secure a uniform civil code across India — Article 44 — would not come in the way of the right to freedom of religion or the freedom to manage religious affairs as laid down in Articles 25 and 26 of the Constitution. Rather, it would “help the cause of national integration”.

http://www.telegraphindia.com/1030724/asp/frontpage/story_2194921.asp

[16] In Ms. Jordan Diengdeh vs. S.S. Chopra AIR 1985 SC 935 O. Chinnappa Reddy, J. speaking for the Court referred to the observations of Chandrachud, CJ in Shah Bano Begum’s case and observed as under: “It was just the other day that a Constitution Bench of this Court had to emphasise the urgency of infusing life into Art. 44 of the Constitution which provides that “The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.” The present case is yet another which focuses .. on the immediate and compulsive need for a uniform civil code. The totally unsatisfactory state of affairs consequent on the lack of a uniform civil code is exposed by the facts of the present case. Before mentioning the facts of the case, we might as well refer to the observations of Chandrachud, CJ in the recent case decided by the Constitution Bench (Mohd. Ahmed Khan vs. Shah Bano Begum).” One wonders how long will it take for the Government of the day to implement the mandate of the framers of the Constitution under Article 44 of the Constitution of India

[17] The Successive Governments till-date have been wholly re-miss in their duty of implementing the constitutional mandate under Article 44 of the Constitution of India. We, therefore, request the Government of India through the Prime Minister of the country to have a fresh look at Article 44 of the Constitution of India and “endeavour to secure for the citizens a uniform civil code throught the territory of India”. http://indiankanoon.org/doc/733037/

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

மார்ச் 1, 2013

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

JK assembly-2013 broken mike

 

உடைந்த மைக்கின் கீழ் பகுதியை தூக்கி வரும் எம்.எல்.ஏ!

காஷ்மீர சட்டசபையில் கலாட்டா-ரகளை: காஷ்மீர சட்டபையில் தீவிரவாதி மொஹம்மது அப்சல் குரு தூக்கிலிட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர், பின்னர் உடல் கேட்டு பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்[1]. பேப்பர்களை வீசியும், மைக்கைப் பிடுங்கியும் கலாட்டா செய்தனர்[2]. மொஹம்மது அப்சல் குரு போன்று உடையணிந்த ஒருவர் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்ததை டிவி-செனல்கள் காண்பித்தன. சட்டபைக்கு வெளியிலும் ஆர்பாட்டத்தை நடத்தினர்[3]. கலாட்டா செய்த லங்கேட் அப்துல் ரஷீத் இஞ்சினியர்  (MLA Langate Abdul Rashid Engineer ) என்ற எம்.எல்.ஏ வெளியேற்றப்பட்டார்[4]. சட்டசபையில் இப்படி கலாட்டா செய்வது அவர்களுக்கு வழக்கமான-வாடிக்கையான விஷயம் தான்[5]. பெண்ணான மெஹ்பூபா முப்தியே கலட்டா செய்துள்ளார்[6].

JK assembly-2013 MLAs fight

புதைத்த உடலைக் கேட்டு சண்டை: இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டும் போட்டிப் போடுக் கொண்டு தீவிரவாதத்துரடன் துணைபோகுக் போக்கில் உடலைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்ட பிறகு, அமைதியாக இருந்தவர்கள், திடீரென்று. அவனது உடல் கேட்டு ஆர்பாட்டத்தை ஆரம்பித்தனர். திகார் சிறை வளாகத்திலேயே அவ்வுடல் அடக்கம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் வியப்பிற்குரிய விசயமாக உள்ளது.

Jammu & Kashmir Assembly March 2012

 

மார்ச் 2012ல் உமர் அப்துல்லாவை நோக்கி காலை உயர்த்தி வரும் எம்.எல்.ஏ!

முப்தி முஹம்மது சையது மற்றும் அவரது மகள் போடும் நாடகங்கள்: அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளது, போட்டாட்ப்போட்டி அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது, முன்னர் முப்தி முஹம்மது சையது, தமது மகளை எப்படி தீவிரவாதிகள் கடத்திக் கொண்டது போல நாடகம் ஆடி, பிரியாணி கொடுத்து அனுப்பி, பிறகு 180 தீவிவாதிகளை விடுவித்தார் என்பதனை நினைவு கூரவேண்டும்[7]. ஆனால், அதே முப்தியின்பின்னொரு மகள் கலாட்டா செய்கிறார்[8].

March 2011 - JK Assembly

 

மார்ச் 2011 – சட்டசபையில் கட்டிப்பிடி கலாட்டா-ரகளை!

விளம்பர கலாட்டா-ஆர்பாட்டம்-ரகளை: தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது, அண்டை நாடான இஸ்லாமிய பங்களாதேசத்தில் எப்படி, பல ஜிஹாதி பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பதனையும் மறந்து விடுகின்றனர். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது இந்த உண்மைகளை மறைக்கவே என்று தெரிகிறது.  அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பிறகும், சட்டசபையில் ரகளை செய்துள்ளது, வெறும் விளம்பரத்திற்காகவே என்று தெரிகிறது. இதில் காஷ்மீர இஸ்லாம் எப்படி செயல்படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்[9].

JK MLA uproar

 

கலாட்டா செய்யும் எம்.எல்.ஏவை தடுக்கும் போலீஸ் / மார்ஷெல்!

கடையடைப்பு-பந்த்-போராட்டம்: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களும் பெருமளவில் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்கள் நடக்கும் என்று அந்நிய நாளிதழ்கள் சந்தோஷமாக செய்திகளை முன்னரே வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[10].

Six JMB militants hanged in Bangaladesh

 

ஆறு ஜிஹாதிகள் தூக்கிலிடப்பட்ட செய்தி!

புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா?: புதைத்தப் பிணத்தைத் தோண்டி எடுக்கலாமா, மறுபடியும் புதைக்கலாமா, புதைத்த பிணம் இவ்வளவு நாள் முழுமையாக இருக்குமா, முதலிய கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் பொறுத்த வரைக்கும், தீர்ப்பு நாளில் புதைத்த உடல் உயிர் பெற்று எழும். அல்லா அவர்களின் செயல்களைப் பொறுத்து சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர். அந்நிலையில் புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா, அதனை அல்லா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

01-03-2013


 


ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!

ஒக்ரோபர் 7, 2011

ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!

காஷ்மீரில் மக்கள் கொல்லப்படுவது: காஷ்மீரில் மக்களுக்கு உயிர் போவது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குண்டுகள் வெடிப்பது முதலியவை ஒன்றும் புதியதான நிகழ்ச்சிகளோ, செய்திகளோ இல்லை. இருப்பினும், இப்பொழுது ஒருவர் மர்மமான முறையில் இறந்திருப்பதைப் பற்றி அதிகமாகவே அரசியல் கட்சிகள் கலாட்டா செய்து வருகின்றன. ஊடகங்களுக்கோ தேவையில்ல, வெறும் வாயிற்கு அவல் கிடைத்தக் கதை தான். தேசிய மாநாட்டுக்கட்சி தொண்டர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, தன் தந்தை மரணம் குறித்து முதல்வர் ஓமர் பொய் சொல்வதாக, இறந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்[1]. இவரைத் தவிர, மற்றொரு கண்ணால் பார்த்ததாக அப்துல் சலாம் ரேஷி[2] என்பவர் சைது முஹம்மது யூசுப், ஒமரின் வீட்டிற்குள் செல்லும் போது நன்றாகத்தான் இருந்தார். வெளியே வரும்போது, பேசமுடியாமல் வாந்தி எடுக்கும் நிலையில் இருந்தார்[3]. அந்நிலயில் தான் போலீஸார் அவரைப் பிடித்துச் சென்றதாகக் கூறுகிறார்.

காஷ்மீர் சட்டமேலவை பதவிக்கு லஞ்சம்: தேசிய மாநாட்டு கட்சித்தொண்டர் சையது யூசுப் (61). அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சட்டமேலவை உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக கூறி, இரண்டு பேரிடம் ரூ. 1 கோடியே 18 லட்சம் பெற்றுள்ளார். இவர் லஞ்ச வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி போலீஸ் காவலில் யூசுப் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓமர் அப்துல்லா, கட்சித்தொண்டர் மரணத்திற்கு தான் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், யூசுப் மகன் தலிப் உசேன் கூறுகையில், தனது தந்தையை போலீஸ் காவலில் வைத்து அடித்து உதைத்ததாகவும், ஓமருக்கு தெரிந்தே இது நடந்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் பொய் சொல்வதாகவும் தெரிவித்தார்.

மகனுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி – கூறுவது அப்பா!: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அக்கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபருக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்[4]. இந்த விஷயத்தில் பெரிய சதி இருப்பதாக எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜக ஆகியவை குற்றம்சாட்டின. ஓமர் அப்துல்லா பதவி விலக வேண்டுமெனவும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  இந்நிலையில் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியது: எங்கள் கட்சி எதையுமே மறைக்கவில்லை. யூசுப் இறந்தது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும்.

தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நீடிப்பது எதிர்க்கட்சிகள் விரும்பவில்லையாம்: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அரசியல் ஆதாயத்துக்காகவும், எப்படியாவது மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். எந்த விஷயத்தை வைத்தாவது எங்களை குற்றம்சாட்ட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதும், காங்கிரûஸ தவிர்த்து விட்டு எங்கள் கட்சியை மட்டும் குறிவைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எங்கள் கட்சியில் நேர்மையான முறையில்தான் பதவிகளுக்கும், தேர்தலில் போட்டியிடவும் நபர்களைத் தேர்வு செய்கிறோம். இங்கு வந்திருக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர்களைக் கேட்டு இதனை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

ராஜினாமா செய்ய முடியாது: காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தனது பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்[5].காஷ்மீர் மாநிலத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சயித் முகமது யூசுப், 61, போலீஸ் காவலில் உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறுகையில், இந்த விவகாரத்தில் நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை, நீதி விசாரணையில் உண்மைகள் விரைவில் வெளிவரும், என தெரிவித்தார்.

ஒமர் பதவி கொடுக்க பணம் வாங்கினாரா? அப்துல் சலாம் ரேஷி[6], “யூசுப் என்னை ஒமருக்கு அறிமுகப்படுத்தினார்[7]. பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுப்பதாகக் கூறினர். ஆனால், கொடுக்காததால் பணத்தைத் திரும்பக் கேட்டேன். முழுப்பணத்தைக் கொடுக்காததால் விடாமல் கேட்டேன்”. ஒருவேளை, ஒமருக்குண்டான தொடர்பு தெரிந்து விட்டது என்று, யூசுப் கொல்லப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதேப்போலத்தான், அமர்சிங் காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, பீஜேபி எம்.பிக்களுக்கு பணம் கொடுத்து, கட்சி மாற முயன்றுள்ளனர், ஆக காங்கிரஸ் இப்படி ஒரு வழியைக் கடைபிடித்து, எல்லா மாநிலங்களிலும் கோடிகளை அள்ளுகிறது போலும்!


[2] Abdul Salam Reshi, a key witness in the alleged killing of National Conference activist Syed Mohammad Yousuf, has broken his silence claiming that the latter was hale and hearty when he was taken to another room in the chief minister’s residence but was vomiting and unable to speak when he was being taken to the crime branch headquarters in a police vehicle.

[6] “I was introduced to Farooq Abdullah and Omar Abdullah by Yusuf. He came to my residence with the chief minister in a chopper. He also took me to meet Farooq Abdullah at his Jammu residence,” Reshi said in Srinagar. Reshi said his relations with Yusuf turned sour, after he demanded return of his money.  “When I went to meet Omar sahib in July, he made sure I will get back some money. I was given Rs 10 lakh after a month and another Rs 10 lakh later. It was only after Mohammed Bhat of Ganderbal complained that he paid .`85 lakh to Yusuf for a ministerial berth did the Chief Minister decide to confront Yusuf,” he added.