முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லையா? – வீடு கொடுக்க அச்சப்படவேண்டிய அவசியம் என்ன? அந்த அச்சத்தை உருவாக்கியது யார்?
முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லையா?: எஸ். அப்துல் ஹமீது என்கின்ற மனுஷ்ய புத்திரன் சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் தி.இந்துவில் “சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்” என்ற பகுதியில் “எனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்?”, சிலரை பாதித்துள்ளது என்று தெரிகிறது. பொதுவாக, சமீப காலத்தில், டிவி நிகழ்ச்சிகளில் காரசாரமாக, ஆவேசமாக, கத்திக் கொண்டு விவாதம் புரிபவர்களில் ஒருவராக அடைஉயாளம் காணப்படுகிறார். செக்யூலரிஸாத்தோடு வாதம் புரிவது போலக் காட்டிக் கொண்டாலும், இஸ்லாத்தை ஆதரிப்பவராகத்தான் தெரிகிறார். ஆனால், நக்கீரன் இதழில், “ரிசானா – சிறுமிக்கு மரணதண்டனை – பதற வைக்கும் கொடுமை!” என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரைக்கு, முஸ்லிம்களில் சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[1]. இப்பொழுது நாத்திகவாதி என்ற காரணத்திற்காக, பாரூக் என்ற முஸ்லிம் கொலை செய்யப் பட்டதற்கும், முஸ்லிம்கள் மற்றும் பகுத்தறிவுவாதிகள் அமுக்கி வாசித்து, அமுக்கியே விட்டனர். இந்நிலையில், மனுஷ்ய புத்திரன் கட்டுரையைப் பார்போம். ஜயமோகனும், இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளார்[2]. அதைப் படித்த பிறகு, அவர் சொல்லாத விசயத்தை சொல்ல வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.
ஃப்ளாட் கட்டுவதும், வீடு குடி பெயர்வதும்[3]: என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம்.
உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும். கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். | ஃப்ளாட் கட்டுவதும், வீடு குடி பெயர்வதும், சென்னை மட்டுமல்ல, நகர விரிவாக்கம் செயல்பாட்டில், ஒரு சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. 80-90 வயதான, வீட்டு சொந்தக்காரர்களுக்கு, அத்தகைய உணர்ச்சிகள் 10,000% அதிகமாகவே இருக்கும். ஆனானப் பட்ட பெரிய-பெரிய தலைவர்கள், தியாகிகள், புலவர்கள், அரசர்கள் முதலியோர்களது வீடுகள், அரண்மனைகள் முதலியன், இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துள்ள நிலையில், இவரது வருத்தம், ஒன்றுமே இல்லை. |
நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது[4].
சார், நீங்க முஸ்லிமா?: ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது. நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார்.
அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார். நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார். ‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார். நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். | முஸ்லிம் என்ற அடையாளத்தைக் காட்டிக் கொள்ள விரும்புவதே முஸ்லிம்கள் தான். 1950களிலிருந்து, இப்பொழுது வரை கவனித்தால், தாங்கள் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்ள செய்யும் செயல்களை மற்றும் அவர்களது பிடிவாதத் தனத்தைக் கவனிக்கலாம். தங்களை தனிமைப் படுத்திக் கொண்டு காட்டிக் கொள்வதே அவர்கள் தான். அதே போல குறிப்பிட்ட தெருக்களில் அதிகமாக இருக்கும் போது, மற்றவர்களின் மனங்களில் அச்சத்தை உருவாக்குவதும் அவர்கள் தான். பேருந்தில் கூட பக்கத்தில் வந்து உட்கார்ந்தால், குண்டு யாதாவது வைத்து விடுவானோ என்ற அச்சம் எழுவதை யாரும் மறுக்க முடியாது. |
அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக்காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன். | மதச்சார்பின்மைக்காகவும் சமூக நீதிக்காகவும் ஏழுதினால் மரட்டும் போறாது, வாழ்ந்து காட்ட வேண்டும். சமதர்ம நோக்குடன் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகள் எனும்போது, முஸ்லிம்கட்சிகள், தலைவர்கள் முதலியோரை இவர் எதிர்த்தாரா என்று தெரியவில்லை. நாத்திக-திராவிட கட்சிகளைப் போன்று, இந்து ஆதரவு கட்சிகளை எதிர்ப்பதால் மட்டும், இவர் செக்யூலரிஸப்பழமாகி விட முடியாது. |
கடக்க முடியாத தண்டனை: நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன்.
ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள். | முஸ்லிம் பெயரைக் கேட்டு அஞ்சுவது என்பது குண்டுவெடிப்புகளுக்கு பிறகு ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். பிரெஞ்சு கார்ட்டூன் விசயத்தில், தனது அடிப்படைவாத கருத்தை சொன்னது, தாலி விசயத்தில் பேசியது, பர்தா, தலாக் விசயங்களில் அடக்கி வாசித்தது, முதலியவற்றில் இவரது முஸ்லிம் அடிப்படைவாதம் வெளிப்பட்டது கவனிக்க வேண்டும். . இந்துத்துவா அடிப்படைவாதிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்த்த காரணன்ங்கள் வேறு என்று அறிந்துகொள்வதற்கு ஒன் றூம் கஷ்டம் இல்லை. |
மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’
என்ன ஆனது பாரம்பரியம்?[5]: சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது.
வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறையாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை! எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். | முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாகூர், நாகப்பட்டினம், கீழக்கரை, வாணியம்பாடி, வேலூர், ஆற்காடு, முதலிய ஊர்களில், இந்துக்கள் நிலையை ஆராயலாமே? கொஞ்சம்-கொஞ்சமாக இந்துக்கள் தங்களது வீடுகளை விற்று விட்டுதானே செல்கின்றனர். இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறையாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? …என்றெல்லாம் இவர் கூறுவது அபத்தமானது, ஏனெனில், முஸ்லிகள் இந்துக்களை காபிர்கள், அசுத்தமானவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ”இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக…” என்பதெல்லாம் அகம்பாவத்தைக் காட்டுகிறது. |
என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும். எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
© வேதபிரகாஷ்
31-03-2017
[1] http://onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/
[2] ஜெயமோகன், இஸ்லாமியர்களுக்கு வீடு; http://www.jeyamohan.in/96889 – .WNyGI8vhXqA
[3] தி.இந்து, எனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்?, மனுஷ்ய புத்திரன்,Published: March 29, 2017 08:59 ISTUpdated: March 29, 2017 08:59 IST
[4]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9605234.ece
[5] – மனுஷ்ய புத்திரன், கவிஞர், பதிப்பாளர், ‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com
அண்மைய பின்னூட்டங்கள்