Posted tagged ‘அன்பழகன்’

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!

மார்ச் 25, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!

முஸ்லீம் லீக் / கட்சிகள் எவ்வாறு சண்டை போடுவது போல நாடகம் ஆடி, தனித்தனியாக ஆறு தொகுதிகளைப் பெற்றுவிட்டன என்பதை எட்த்துக் கட்டப்பட்டது. அன்பழகனே பலிக்காடாவாக்கப் பட்டார்[1]. திமுக-அதிமுக இரண்டிலும் சேர்த்து ஆறு தொகுதிகலைப் பெற்றனர்[2]. அவ்வாறு இரட்டை வேடம் போட்டனர் என்று அப்பொழுதே எடுத்துக் கட்டப் பட்டது[3]. ஆக, ஏதோ சண்டைப் போட்டுக் கொண்டது போலவும், அதிரடியாக திட்டிக் கொண்டு, வசை பாடி, இணைத்தளங்களில் ஏதோ இவர்கள் எல்லோருமே அடிமையாகி சரண்டர் ஆகி விட்டது போல தோற்றத்தை உண்டாக்கி விட்டு, இப்பொழுது தனித்தனியாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்[4]. இந்நிலையில், பாத்திமா முசாபர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது[5].

கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று கொடிபிடித்த பாத்திமா முசாபர் வெளியேற்றப் பட்டாராம்: ஒரு சீட்டு, காங்கிரஸுக்குக் கொடுக்கப் பட்டதற்கு, பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்”, என்றார். ஆனால், 24-03-2011 அன்று, கட்சியின் விரோதமாக செயல்படுவதற்காக, அவர் கட்சியிலிருந்து வெளியெற்றப் பட்டுள்ளார்.

பாத்திமா முசாபர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார் : இந்திய யூனியன் முஸ்லிம் லீலிருந்து, அதன் தமிழ்நாடு மாநில மகளிரணி அமைப்பாளரான பாத்திமா முஸபர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-  “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வரும் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் அவர்கள், கடந்த சில தினங்களாக இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பத்திரிக்கைகளிலும், தொலைகாட்சிகளிலும் இயக்க முடிவுகளுக்கு மாறான செய்திகள் வெளியிட்டும் வருவதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் தகுதி உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் இன்று முதல் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார். இயக்கத் தோழர்கள் இயக்கம் சம்மந்தமாக அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சாதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.

யார் இந்த பாத்திமா முசாபர்? அஹமத் வோர்ட் டிராவல்ஸ் டூர்ஸ் & கார்கோ பிரைவேட் லிமிடெட்[6] என்ற கம்பெனியின் இயக்குனரான, இவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும், மறைந்த அப்துல் சமதின் மகளாவார். . கணவர் அல்ஹஜ் அஹமத் மேனேஜிங் டைரக்டர்[7]. ஏப்ரல் 2009ல் பாஸ்போர்ட் ஊழல் வழக்கில் இவர் சி.பி.ஐ.யினால் கைது செய்யப்பட்டார்[8]. பாஸ்போர்ட் வாங்குவதற்கு அதிகமாக பணம் வசூலித்ததாலும், அதனால் பாற்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரனுக்கு லஞ்சம் கொடுத்ததாலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்[9]. ரவிச்சந்திரன் தனியாக ஒரு பாஸ்போர்ட் அலுவலகமே நடத்தி வந்தனராம்[10]. இவர் அன்பழகின் மறுமகள்[11] என்றும் செய்திகள் கூறுகின்றன[12]. தயாநிதி மாறன் டெலிகம் அமைச்சரானதும், 2004ல் இவர் பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப் பட்டாராம். இதனால் அவரும் கைது செய்யப் பட்டார்[13]. கனிமொழிக்கு வேண்டியவர். ரம்ஜான் கஞ்சிக் கொடுக்கும் நோன்புக்குத் தப்பாமல் இப்பொழுதெல்லாம் வந்து விடுகிறார்.

அன்பழகன் என்பதால்தான் இந்த நாடகமா? அன்பழகனின் தியாகம், பாத்திமாவை நிச்சயமாக வருத்தமடையச் செய்திருக்கும். ஏனெனில், ஏற்கெனவே, அன்பழகனுடைய மறுமகளுக்கு – சுமதி ரவிச்சந்திரனுக்கு, இவரால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், மறுபடியும், தங்கள் கட்சியால், அவருக்கு தொந்தரவு ஏற்பட்டிருப்பத் கண்டு, விசுவாசத்தின் அடிப்படையில், எதிர்த்திருப்பார்.

வேதபிரகாஷ்

25-03-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3),

https://islamindia.wordpress.com/2011/03/16/anbazhagan-scapegoat-sacrificed-iuml-dmk/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/

[3] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[4] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4), https://islamindia.wordpress.com/2011/03/22/1370-three-plus-three-muslims-get-six/

[5] தினமலர், 25-03-2011, சென்னை, பக்கம்.2

[6] We are group of Young and Energetic Professionals from Travel Industry having decades of Experience. We feel the best way to serve is to serve personally. That is exactly what we specialise at AHMED WORLD TRAVELS TOURS & CARGO PVT LTD. Since 1989

http://www.ahmedworldtravels.com/

[8] According to a Superintendent of Police of the CBI, Fathima Muzaffar Ahmed, a travel agent of Ahmed World Travels, T.Nagar, allegedly demanded Rs.9,000 as bribe to be paid to the Regional Passport Officer from P.Lakshmanan of MGR Nagar, who had applied for a passport under the tatkal scheme. This was in addition to the prescribed fee and service charge of Rs.1,000.

http://www.dinamani.com/edition/story.aspx?artid=51752&SectionID=136&MainSectionID=134&SEO=&Title=

[10] Sumathi’s husband Ravichandran too has been arrested by the CBI. He stands accused of running a ‘parallel passport office’.

http://ibnlive.in.com/news/cbi-arrests-passport-officer-on-corruption-charges/91138-3.html

[12] The CBI’s anti-corruption wing has arrested the Chennai regional passport officer, who is the daughter-in-law of finance minister K Anbazhagan of Tamilnadu. Sumathi, an Indian Postal Service officer, was appointed RPO in 2004 with the blessings of then Union communications minister Dayanidhi Maran of the DMK.
CBI arrests minister kin who is the daughter-in-law of finance minister K. Anbazhagan

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]

மார்ச் 16, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1)[1] மற்றும் (2)[2] பதிவுகளையும் சேர்த்து வாசிக்கவும்

தியாக கீதங்களா, ஓலங்களா – காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்: எங்களால் தான் திமுக பிழைத்தது என்றனர் முதலில்! அதாவது, அவர்களின் மாபெரும் தியாகத்தினால் கூட்டணி பிழைத்தது! ஆனால், அடுத்த நாளிலேயே, நாங்கள் அதிமுகவை / ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்றும் பாட்டு பாடினர். கேரளாவில் இந்திய யுனீயன் முஸ்லீம் லீக்குக்கு வாரிக் கொடுக்கும் காங்கிரஸ், இங்கு ஏன் பிடுங்கிக் கொள்கிறது என்று தெரியவில்லை. அழுத குழந்தைக்கு பால் கிடைத்ததா, ஓலமிட்டு வாங்கிக் கொண்டார்களா, மிரட்டி பிடுங்கிக் கொண்டார்களா? தியாகம் தான் பதில் சொல்லும்!  முஸ்லீம் சமுதாயமே இதனை எதிர்த்து நிற்கிறது[3] என்றதும் பயந்து விட்டாரா கருணாநிதி?

 

திராவிட கூட்டணியின் தியாகத் திருநாள்! தியாகம் என்றால் சொல்லவேண்டுமா? தியாகத்திற்கு பரிசு என்று புது பாட்டு, மெட்டு, தாளன்ம், கூத்து, கும்மாளம்! முன்பு கருணாநித் பிடுங்கிக் கொடுத்தார் என்றன ஊடகங்கள்! ஆனால் இன்றோ தியாகப்பாட்டைப் பாடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்காக தனது ஒரு இடத்தை விட்டுத் தந்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தியாகத்தைப் பாராட்டும் வகையில், அந்தக் கட்சிக்கு மீண்டும் மூன்று இடங்களைக் கொடுத்துள்ளார் கருணாநிதி. காதர் மொஹைதீன் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆரம்பத்தில் திமுகவில் 3 சீட்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி செய்து வந்த பெரும் குழப்பத்தைத் தொடர்ந்து, பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களிலிருந்து தலா ஒரு இடத்தை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. அதற்காக காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் ஒரு நன்றி கூட கூறவில்லை இந்த இரு கட்சிகளுக்கும். இந்த நிலையில் நேற்று தொகுதிள் விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் 3 இடங்களை ஒதுக்கி திமுக அறிவித்தது[4].

 

உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீன் லீக் போட்டி: ஐந்து கேட்டு மூன்று கிடைத்தது. மூன்று இரண்டாகி, மறுபடியும் மூன்றாகி விட்டது. சரி, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால்[5], தன்மானம், பகுத்தறிவு எல்லாம் இருக்குமா, போய் விடுமா? கடவுளை நம்பும் முஸ்லீம்களில் இப்படி நாத்திக திமுகவின் போர்வையில் மறைந்து கொண்டு, பகுத்தறிவு நாடகம் போட்டுக் கொண்டு, தியாக டிஊயட் பாடிவருவது வேடிக்கைத்தான்!

 

அன்பழகனின் மாபெரும் தியாகம்! முன்பு நெடுஞ்செழியனை கருணாநிதி அடியோடு தியாகம் செய்தார். பாவம், அன்பழகன், வேறெங்காவது சென்றால், அவரைவிட மோசமான கதி ஏற்படும் என்று என்றும் னெம்பர்.2 என்ற நிலையில் இருந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்தார். ஆக, மறுபடியும் பலிக்கடாவாக மாறியிருப்பது அன்பழகன் தா! மீண்டும் மூன்று இடங்கள் ஏன்றால், யாருக்கு நஷ்டம்? இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், காதர் மொஹைதீனும் கையெழுத்திட்டனர். முஸ்லீம் லீக் கட்சிக்கு பெருமை வாய்ந்த சென்னை துறைமுகம் தொகுதியை திமுக கொடுத்துள்ளது. இந்தத் தொகுதி முதல்வர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் லீக் கட்சிக்கு, துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன[6].

 

வேதபிரகாஷ்,

16-06-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/