Posted tagged ‘அன்சாரி’

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு (2)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (2)

மதம் மாறியவர் வெறும் முஸ்லிமா, லெப்பை முஸ்லிமா?:  நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லது முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படவில்லை[1]. முஸ்லீம் சமூகத்தில் உள்ள 7 குழுக்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்களில் லெப்பைகளும் அடங்கும். மனுதாரரின் மதமாற்றம் குறித்து காஜி வழங்கிய சான்றிதழில், அவர் முஸ்லிம்களின் லெப்பை குழுவாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை[2]. மனுதாரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று தான் கூறுகிறது. அதனால், மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[3]. இனி தீர்ப்பில் உள்ள கடைசி முக்கியமான பத்திகளை கவனிப்போம்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கை: 12. பிரச்சினையை இன்னொரு கோணத்தில் அணுகலாம். தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கையின் படி, பின்வருவனவற்றின் பின்தங்கிய வகுப்பினரின் (முஸ்லிம்கள்) பட்டியலை மட்டும் பட்டியல்படுத்துகிறது:

“1. Ansar – அன்சார்,

2. Dekkani Muslims  – தெக்கானி முஸ்லிம்கள் [தக்காண முஸ்லிம்கள்],

3. Dudekula – துதேகுல,

4. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)- ரவுத்தர் உட்பட லப்பைகள் மற்றும் மரக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது),

5. Mappilla – மாப்பிள்ள [குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள்],

6. Sheikh – ஷேக்,

7. Syed – சையத்.”

இவர்களை முஸ்லிம்கள் பிரிவுகள், சமூக அடுக்குகள், கட்டமைப்புகள் அல்லது ஜாதிகள் என்று எப்படி கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஜாதியில்லை என்றால், இந்த ஏழு குழுக்களும் மாறி, அல்லது மாற்றம் பெற முடியுமா என்றும் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜி.மைக்கேல் தீர்ப்பு [Kailash Sonkar v. Maya Devi (1984) 2 SCC 91 and G.Michael v. S.Venkateswaran [1952 (1) MLJ 239]: எப்பொழுது ஒரு இந்து இஸ்லாத்திற்கு மாறும்போது, அவன் ஒரு முசல்மான் ஆகிறான், அவனுடைய இடம்முஸ்லீம் சமூகம் அவருக்கு முன் எந்த சாதியை சார்ந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படவில்லை, படுவதில்லை. காஜியே அதமாற்றம் அடைந்தவர். மாற்றியவர் ப்படி இருக்க வேண்டும் என்று அறிவிக்காதபோது, மதச்சார்பற்ற அரசாங்கத்தின் வருவாய் அதிகாரி எப்படி, அவரை “லெப்பை” என்று அடையாளம் கண்டு, தீர்மானித்து, இஸ்ல்லாம் என்ற கூண்டுக்குள் அடைக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கும் புரியவில்லை.

எஸ்.ருஹய்யா பேகம் வழக்கு [S.Ruhaiyah Begum vs The Government Of Tamil Nadu (WPNo.2972 of 2013 dated 19.02.2013)]: .எஸ்.ருஹய்யா பேகத்தைப் போல ஒரு இந்து “மற்ற வகையை” சேர்ந்தவர்கள் என்ற பக்குப்பிலிருந்து, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு தம்முடைய நிலையை சாமர்த்தியமாக நிர்வகிக்கிறார்கள் அவர் அல்லது அவள் மேற்கூறிய அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர் என்பது போன்ற சான்றிதழைப் பெறவும் இத்தகைய புத்திசாலித்தனத்தால் செய்கிறார் என்றால், சமூக நீதியின் நோக்கமே அதனால் தோற்கடிக்கப்படும் உத்திகள். நன்கு கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே மதமாற்றத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகிறார். பின்னர் தனியாக அவர் பிசி (முஸ்லிம்) என்று கருதலாம். எஸ்.ருஹய்யாவில் நடைபெற்றது என்று வாதித்தால், அந்த முயற்சியை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும், தீர்மானிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலையில் உள்ள வழக்கு: “13. எஸ்.யாஸ்மின் வழக்கில் கவனிக்கப்பட்டபடி, மதமாற்றத்திற்குப் பிறகும் பிறந்த சமூகம் [ஜாதி போன்றவற்றை] ஒரு நபர் தனது சுமந்து செல்ல முடியாது. மதமாற்றத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட நிலை இருக்க வேண்டுமா, இடஒதுக்கீட்டின் பலன் கொடுக்கப்பட வேண்டுமா என எழுப்பிய  கேள்வி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உன்பு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மாண்புமிகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை கைப்பற்றியுள்ளபோது, இந்த நீதிமன்றத்தை எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இந்த காரணத்திற்காக, மனுதாரரின் கோரிக்கை. நான் வற்புறுத்தினாலும் ஏற்ல முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய முன்மாதிரிகளும் அவ்வாறே, வரும் திர்ப்புக்குக் கட்டுப்பட்டது. ஆகவே, இரண்டாவது பிரதிவாதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது, அதில்எந்த குறுக்கீடும் எய்ய முடியாது, அது  தேவையற்றதும் ஆகும்”.

இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்இடவொதிக்கீடுமுதலிய அரசியல்வாதிகளின் சலுகைகள்: மதம் மாறிவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க அரசியல்வாதிகள் பலமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அவை தான், சட்டங்கள், தீர்ப்புகள், நீதிகள், வரையறைகள் என்று எல்லாவற்றையும் மீறி செயல்பட முயற்சித்து பிரச்சினைகளை உண்டாக்குகின்றனர். “இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்-இடவொதிக்கீடு” என்ற போர்வைகளில் மாநில அரசுகள் முஸ்லிம்களைக் குறிப்பாக தாஜா செய்து, “ஓட்டு வங்கி,” மற்றும் எல்லைகள் கடந்த பொருளாதார ஆதாயங்களைப் பெற “ரிசர்வேஷன்” சலுகைகளைக் கொடுத்து வருகிறார்கள். உண்மையில் அம்மதங்கள், அவர்கள் மதங்கள் அத்தகைய பாகுபாடுகள் கொண்டிருக்கவில்லை, 100% சமத்துவம், சகோதரத்துவம், சமவுரிமைகள் என்றெல்லாம் கொண்டிருக்கின்றன என்றால், மண்டல் கமிஷன் தீர்ப்பு, சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகள்  எல்லாம் பொய், தவறு, தங்களது பைபிள் / குரான் –க்ளுக்கு எதிரானவை, ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும். ஆர்பாட்டம்-போராட்டம் செய்து, மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜாதிகள் உண்டு என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறர்கள்.

முரண்பாட்டுடன் இறையியல் சித்தாந்தம் இருக்க முடியாது: கிருத்துவர்கள் லாப-நஷ்ட கணக்குப் போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் தீர்ப்பு-ஆதரவு, ஆசை-பேராசை போன்றவற்றால் தவிக்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே, நீதிமன்றங்களில் சோதனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், இறையியல் விவகாரங்கள் வெளிவரும் போது, மறைக்கப் பார்க்கிறார்கள். வழக்கம் போல, இந்து மதம், சனாதனம் என்றெல்லாம் பேசி, திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை, பிற மதங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் இடஒதுக்கீட்டை இழக்கின்றனர்[4]. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக’ (மதமாற்றத்திற்கு முன் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) கருதப்பட்டாலும், மதம் மாறிய முஸ்லீம்களின் விஷயத்தில், ஒரு நபர் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவை ‘மற்றவை’ என மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன, போன்ற கருத்துகள் ஏற்கெனவே வைக்கப் பட்டுள்ளன[5].

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்: இந்திய அரசியலமைப்பில், OBC கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராக (SEBC) விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசாங்கம் அவர்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, OBC கள் மேல் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு அதற்கு கொடுக்கப் படுகிறது.  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கல்வி அல்லது சமூகத்தில் பின்தங்கிய சாதிகளை வகைப்படுத்த இந்திய அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும். பொது சாதிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) ஆகியவற்றுடன் இந்தியாவின் மக்கள்தொகையின் பல அதிகாரப்பூர்வ வகைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC கள் நாட்டின் மக்கள்தொகையில் 52% என்று கண்டறியப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடைபெற்ற போது 41% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் OBC களின் சரியான எண்ணிக்கையில் கணிசமான விவாதம் உள்ளது; இது பொதுவாக கணிசமானதாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் மண்டல் கமிஷன் அல்லது தேசிய மாதிரி கணக்கெடுப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களை விட இது அதிகம் என்று பலர் நம்புகிறார்கள்.

பொருளாதார ரீயில் பின்தங்கிய வகுப்பினர்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடிமக்கள் மற்றும் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBCs). இப்பொழுது, இந்தியாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்பது குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கும் (US$10,000) குறைவாக உள்ளவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள SC/ST/OBC போன்ற எந்த வகையிலும் சேராதவர்கள் அல்லது தமிழில் MBC அல்லாதவர்களின் துணைப்பிரிவாகும்.  இப்பொழுது, இப்படியெல்லாம் பிரிக்கப் படும் நிலையில், மதம் போன்ற காரணிகளும் நுழையுமா, நுழைக்கப் படுமா, அல்லது செக்யூலரிஸ கொள்கை பின்பற்ரப் படுமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-12-2022 


[1] Live Law, One Can’t Carry His Caste After Conversion’: Madras High Court Rejects Backward Quota Claim Of Man Who Converted To Islam From Hinduism, Upasana Sajeev, ‘3 Dec 2022 9:31 AM.

[2] https://www.livelaw.in/news-updates/madras-high-court-a-person-cannot-carry-his-community-of-birth-even-after-conversion-rejects-backward-class-reservation-of-man-215673

[3] Case Title: U Akbar Ali v The State of Tamil Nadu and another Citation: 2022 LiveLaw (Mad) 492 Case No: WP (MD)No.1019 of 2022.

[4] The Hindu,‘Converted Muslims losing out on reservation in TNPSC jobs’- The same rule does not apply to converted Christians, says a former judge, T.K. ROHIT, – CHENNAI, March 27, 2022 10:50 pm | Updated March 28, 2022 07:48 am IST

[5] Muslims who have converted from other religions are losing out on the reservation for the Backward Class Muslims in Tamil Nadu Public Service Commission (TNPSC) jobs as they are treated as belonging to the category of ‘Others’. While those converting to Christianity are treated as belonging to the ‘Backward Classes’ (even if they belonged to the Scheduled Caste before conversion), in the case of converted Muslims, even if a person originally belonged to the Backward Class or Most Backward Class, they are only classified as ‘Others’.

https://www.thehindu.com/incoming/converted-muslims-losing-out-on-reservation-in-tnpsc-jobs/article65265386.ece

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (1)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (!)

கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதமாற்றம் ஏன் நடக்கிறது?: தமிழகத்தில் இந்துக்கள் மதம் மாறுவது நடந்து கொண்டே இருக்கிறது. தீண்டாமை மற்றும் ஜாதி, ஜாதிக் கொடுமைகள் காரணமாக எடுத்துக் காட்டப் பட்டு, கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டால், அத்தகைய வேறுபாடுகள், வித்தியாசங்கள், பாகுபாடுகள் முதலியன மட்டுமல்லாது, சமுத்தவம், சகோதரத்துவம், சம-அந்தஸ்து எல்லாம் கொடுக்கப் படும் அல்லது கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டு அல்லது பிரச்சாரம் செய்யப் பட்டு, அத்தகைய மதமாற்றங்கள் நடந்தன, நடந்து வருகின்றன. இவையெல்லாம், ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் போன்றவற்றைக் கடந்து திட்டமிட்டு நடந்து வருகின்றன என்பது அரசாங்க, நிறுவனங்கள் ஆராய்ச்சிகள், தரவுகள் முதலியவை மூலம் அறியப் பட்டுள்ளன. மீனாக்ஷிபுரம் மதமாற்றம் அதனால் தான் பெரும் சர்ச்சையை உண்டாக்கி அடங்கி விட்டது. அதனால், எத்தனை மதம் மாறிய இந்துக்கள் பணக்காரர்கள் ஆனார்கள், உயர்ந்த சமுக்கத்தின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள், சிறந்த நிலையை அடைந்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மதமாற்றத்தால் உயர்ந்த நிலை கிடைத்ததா இல்லையா?: மண்டல் கமிஷன் தீர்ப்பு இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் இடையேயும் ஜாதிகள் உண்டு என்றவுடன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகளின் ஆதாரமாக, அவர்கள் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், Caste [காஸ்ட்] மற்றும் class [கிளாஸ்] என்றவற்றிற்குள் இருக்கும் உண்மையினை அறிந்து கொள்ளாமல், உணர்ச்சி, அரசியல், சித்தாந்தம் போன்றவற்றால் உந்தப்பட்டு, மற்றவர்களையும் உசுப்பி விட்டு, பிரச்சினைகளை வளர்த்து வருவதும் தெரிகிறது. ஒரு பக்கம் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம-உரிமைகள், எல்லோருக்கும் எல்லாம் என்றெல்லாம் பேசிக் கொண்டே, “எல்லாமே எனக்குத்தான்” என்று பல கூட்டங்கள் பெருகி வருவதைக் காணலாம். இங்கு தான், அப்பிரச்சினைகள், பெரிதாகி நீதிமன்றங்கலுக்குச் செல்கின்றன. அங்கு உண்மைகள் ஆராயும், அலசும் மற்றும் முடிவில் தீர்ப்புகளாக வரும் பொழுது, பிடித்தும்-பிடிக்காமலும் போகும் நிலை உண்டாகிறது. இப்பொழுது, இந்த தீர்ப்பும் அவ்வாறே இருக்கிறதா . இல்லையா என்று கவனிப்போம்.

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு: மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது[1]. இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தாலும், வழக்கம் போல, “பி.டி.ஐ” பாணியில், “தமிழ்.இந்துவில்” வந்ததை மற்ற ஊடகங்கள் அப்படியே / வேறு தலைப்புகள் இட்டு / சிறிது மாற்றி வெளியிட்டுள்ளன. ஊடக வித்தகர்களும், நிருபர்களும், அப்படியே செய்தியை போட்டு, அமைதியாகி விட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப் பட்டவரிடம் சென்று பேட்டி காணவில்லை, முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர்களிடம், துறை அமைச்சர்களிடம் கமென்ட் / விளக்கம் கேட்கவில்லை, அன்று மாலையிலேயே, டிவிசெனல்களில் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. சமூகநீதி வித்தகர்கள், சமத்துவ சித்தாந்திகள், சமவுரிமை போராளிகள், சமன்பாட்டு வித்தகர்கள் முதலியோரும் காணப்படவில்லை.

காஜி கொடுத்த முஸ்லிம் சான்றிதழ், கேட்கும் பிசி அந்தஸ்து, மறுத்த TNPSC:  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்[3]. நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் (a group within Muslim community which has been notified as a backward class) என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்[4]. 2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன்[5]. எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன்[6]. இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை[7]. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்[8]. என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார். [இந்த TNPSC அதிகாரி வருவாய் அதிகாரியை விட பெரியவர்களா அல்லது அவர்கள் கொடுக்கும் சான்றிதழை மறுக்க அதிகாரம் உள்ளதா?]

லெப்பை முஸ்லிமா, பிற்படுத்தப் பட்ட முஸ்லிமா, ஜாதியா?: என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது[9]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு[10]. “தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்[11]. அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது[12]. அதை தவிர – அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர – சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது[13]. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது[14].  [காஜி தனது மத இறையியலின் படி தீர்மானிக்கிறரா அல்லது வேறு ஏதோரு அதிகாரம் அல்லது அதிகார ஆணை மூலம் தீர்மானிக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும்,ஐஸ்லாமிய இறையியலின் படி முஸ்லிமுக்கு இரண்டு வித சமூக நிலை, அந்தஸ்து. இடவொதிக்கீடு எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.]

© வேதபிரகாஷ்

04-12-2022 


[1] தமிழ்.இந்து, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 02 Dec 2022 08:22 PM; Last Updated : 02 Dec 2022 08:22 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/909128-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders.html

[3]காமதேனு, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பி.சி முஸ்லிமாக கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு, கி.மகாராஜன், Updated on :  2 Dec, 2022, 9:40 pm.

[4]  https://kamadenu.hindutamil.in/national/a-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders-action

[5] ஜி.7.தமிழ், இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் உத்தரவு  | hindu convert to islam cannot be considered a bc muslim high court orders || G7TAMIL, By g7tamil -December 2, 2022.

[6] https://g7tamil.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

[7] தமிழ்.மினட்ஸ், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC வகுப்பா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, by Bala S, December 3, 2022.

[8] https://tamilminutes.com/madurai-high-court-rejected-religion-changed-case/

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முஸ்லிம் மதம் மாறிய இந்து பிற்படுத்தப்பட்டவர் அல்ல.. மதுரை உயர்நீதிமன்றம், Written by WebDesk, Madurai, December 3, 2022 2:22:42 pm

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/the-madurai-high-court-has-ordered-that-a-hindu-convert-to-islam-is-not-a-backward-class-552158/

[11] இ.டிவி.பாரத், மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, Published on December 03, 2022; Updaed; December 04, 2022.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/a-convert-cannot-be-considered-a-bc-muslim-high-court/tamil-nadu20221203130924644644445

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Madurai HC: ‘டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுநீதிமன்றம், Karthikeyan S, 03 December 2022, 15:10 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-hc-rejects-backward-quota-claim-of-hindu-man-converted-to-muslim-131670060279181.html

ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

ஒக்ரோபர் 29, 2016

ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

huthis-accused-of-attacking-mecca-with-missiles-2

காபாவைக் காப்பவர்கள் யார்?: மெக்காவில் உள்ள காபா, மெதினா முதலியவற்றை இன்று சவுதி அரேபியா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிர்வகித்து வருவதால், இஸ்லாத்தையே தான்தான் காக்கிறது என்பது போல காட்டிக் கொள்கிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இரானுக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஹஜ் பயணத்தின் போதும், இந்த வேறுபாடு, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். இரான் முஸ்லிம்கள் பெரும்பாலோர் ஷியா என்பதினால், ஷியா-எதிர்ப்பு மூலம் வெளிப்படும், ஜிஹாதி, இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தினர், இயக்கங்கள் முதலியற்றில் அதிகமாக இருப்பது சுன்னிகள் தாம். இதனால் தான், ஐசில் ஜிஹாதிகள் கூட ஷியாக்களைத் தாக்கிக் கொன்று வருகின்றனர். ஒருபக்கம் சுன்னி-ஷியா வித்தியாசம் இருந்தாலும், இவற்றுடன், போராளிகள்-தீவிரவாதிகள் சண்டையும், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு முதலியனவும் பின்னிப் பிணைந்துள்ளன. முன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அமெரிக்கா இரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஷாவின் ஆட்சி தூக்கியெரியப் பட்டப் பிறகு, அமெரிக்க விரோத கொள்கை பின்பற்ரப்பட்டு வருகின்றது.

houthi-militant

27-10-2016 வியாழக்கிழமை அன்று ஹௌத் போராளிகள் தாக்கினரா?: ஏவுகணையை வீசி தாக்குதல் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை [Houthi rebels] ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு 2015 மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன[1]. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு தெற்கில் உள்ள அல்-தைப் [al-Taif] குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து 27-10-2016 வியாழக்கிழமை அன்று ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்[2] என்று செய்திகள் வந்துள்ளன.   இந்த ஏவுகணைகள் சி-802 என்ற [Chinese C-802] சைனாவின் கப்பல் தடுப்பு ஏவுகணையின் சிறந்த வகையைச் சேர்ந்ததாகும்.  சைனாவின் ஏவுகணைகள் எப்படி இவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

houthi-militant-yemeni-civil-war-position

ஹௌத் என்ற போராளிகள் யார்?: ஹௌத் என்ற போராளிகள் “அன்சார் அல்லா”, கடவுளை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஷியைத் பிரிவைச் சேர்ந்த ஜெயித் குலத்தைச் சேர்ந்தவர்கள்[3]. சுன்னி முஸ்லிம்களுக்கும், இவர்களுக்கும் சில இறையியல் வித்தியாசங்கள் உள்ளன. 1960களிலிருந்தே, சவுதி அரேபியா, ஏமனின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்றது. அமெரிக்க-சவுதி அடக்குமுறைகளினால் சுமார் 10,000 மக்கள் இறக்க நேர்ந்துள்ளது. அதில் 4,100 சாதாரண குடிமக்கள் ஆவர். தவிர, 3.2 மில்லியன் / 32,00,000, 32 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வியாதி போன்றவற்றாலும் பாதிப்புள்ளது[4]. மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்க இங்கு நடந்துள்ளவற்றிற்கு பொறுப்பேற்பதானால், அமெரிக்கா முதலில் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்[5]. சவுதிக்கு ஆதரவு கொடுப்பதையும், ஏமன் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[6].

houthi-militant-attack-mecca

ஏவுகணைகளை உபயோகிப்பதாக ஹௌதி போராளிகளின் மீது குற்றச்சாற்று: ஜூலை 14, 2006 அன்று C-802 ஏவுகணை மூலம் இஸ்ரேலின் ஏவுகணை கப்பலைத் தாக்கி [Israeli missile ship INS Hanit] சேதத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவு கூற வேண்டும். முதலில் சைனாவின் ஏவுகணைகள் எப்படி, இப்பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளிடம் வருகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு உபயோகமாக அவை உபயோகப்படுத்தப்படுகின்றன என்றால், அமெரிக்கா அதை எதிர்ப்பதில்லை என்பதும் வியப்பான விசயமே. ஆயுத உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்தாலும். சைனா போன்ற நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டுதான் வருகின்றன, அவை, ஜிஹாதிகளுக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி, உலகத்தில் எல்லை சண்டைகள், உள்நாட்டு போர்கள், ஜிஹாதி தாக்குதல்கள், ஐசில் போன்ற குரூர கொலைகள்-ஆக்கிரமிப்புகள் முதலியன இருக்கும் வரை, இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எல்லோரும் தமது தீவிரவாதத்தை விட்டுவிட்டால், அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி தொழிஸ்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலை உண்டாகும்!

huthis-accused-of-attacking-mecca-with-missiles

ஹௌதி போராளிகள் குறி வைத்தது மெக்காவா இல்லையா?: ஹௌதி போராளிகள் தாங்கள் மெக்காவைத் தாக்க ஏழுகணைகளை உபயோகித்தனர் என்ற செய்தியை மறுத்துள்ளனர்[7]. இரானும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்துள்ளது. மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் [40 miles] தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. சவுதி அரேபியா அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளை [U.S.-made, surface-to-air Patriot missile batteries]  உபயோகித்தனர். இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது[9]. மொஹம்மது அல்-பெகைதி [Mohammed al-Bekheity] என்ற ஹௌதி தலைவர், “நாங்கள் மெக்காவுக்கு குறிவைக்கவில்லை. நாங்கள் மக்கம் மற்றும் புனித இடங்களை தாக்குவதில்லை,” என்றார்[10]. இதைப் பற்றி இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது[11].

irans-proxy-missile-as-alleged-by-american-interpretation

ஏமனின் இரானிய எதிர்ப்பு: யாமெனி பிரத மந்திரி அஹமது ஒபெய்த் பின் இத்தகைய தாக்குதலை ஊக்குவிக்க இரானின் மீது குற்றஞ்சாற்றியுள்ளார். “ஏமனில் மார்ச்.26, 2015 அன்று யுத்தம் ஆரம்பித்தது. ஹௌதி போராளிகள் தங்களது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் அரசிற்கு விரோதமாக போரில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இரான் அல்லது பெய்ரூட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது,” என்று பின் தகர் பிரெஞ்சு தூதுவர் ஏமன் கிரிஸ்டியன் திஸ்தியை சந்தித்தபோது கூறினார். இரானின் புரட்சி பாதுகாப்புப் படை [Iranian Revolutionary Guard Corps (IRGC)] மற்றும் ஹிஜ்புல் [Hezbollah] இவ்வாறு செயல்படுவது, அரசியல் திட்டத்தை இவ்வாறு புரட்சியாளர்களின் மூலம் தீர்த்துக் கொள்வதாகத் தெரிகிறது.

houthi-militant-carrying-flag

இரான் நீர்போக்குவரத்து பாதைகளை பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செல்லுத்த விரும்புகிறாதா?: இரான் பப் அல்-மன்டப் குடாவை [Bab al Mandab Strait] தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வரவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றது. ஏனெனில், அதனை பிடித்து விட்டால், சூயஸ் கால்வாயை ஆதிக்கம் செய்யும் நிலை வந்துவிடும்[12]. ஹோர்மூஸ் கால்வாயையும் [Strait of Hormuz] பிடித்து விட்டால், அரேபிய நாடுகளிலிருந்து செல்லும் கப்பல்களை இரன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்[13]. அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா பரஸ்பர உடன்படிக்கை 1945லிருந்து 71 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இத்தகைய நீர்வழி ஆதிக்கத்தின் மூலம், இரான் அந்த ஒப்பந்தத்தை வலுவிழக்கத்தான் திட்டம் தீட்டுகிறது என்று அமெரிக்கா குறை கூறுகிறது[14]. இரான் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத்தை உபயோகப்படுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் குறைகூறுகிறது.

© வேதபிரகாஷ்

29-10-2016

Middle east - who is for, who is against.jpg

[1] மாலைமலர், மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா குற்றச்சாட்டு, பதிவு: அக்டோபர் 28, 2016 11:08

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/28110835/1047538/Saudi-Arabia-says-Yemen-rebels-fire-missile-toward.vpf

[3] The Houthis, known as Ansar Allah, or “Supporters of God” (who doesn’t claim to be that in the Middle East?), belong to the Zaydi sect, and are Shia-lite, maintaining some theological similarities with Sunnis.

[4] As a result of Washington’s support for Saudi ruthlessness, Yemen has suffered desperately. Roughly 10,000 people, including some 4100 civilians, have died, 3.2 million people (12 percent of the population) have been displaced, pestilence (in the form of Cholera) has hit the capital, and famine approaches, with more than half the population “food insecure,” according to the UN World Food Program. Eight in ten people need some outside aid.

http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop

[5] CATO Institute, America Should Quit Saudi Arabia’s War in Yemen: the Senseless Killing Must Stop, By Doug Bandow, This article appeared in “Forbes” on October 25, 2016.

[6] http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop

[7] The Washington times, Iran’s proxy missile attacks- The Islamic regime seeks control of Middle East waterways, By James A. Lyons – – Tuesday, October 25, 2016

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்தடுத்து அழித்த செளதி அரேபியா, By: Amudhavalli, Updated: Friday, October 28, 2016, 20:58 [IST]

[9] http://tamil.oneindia.com/news/international/yemeni-rebels-attack-holy-mecca-265932.html

[10] Mohammed al-Bekheity, a Houthi leader, denied that the missile targeted Mecca. “We do not target civilians and, in turn, we would not target holy areas,” he said.

http://www.aljazeera.com/news/2016/10/yemens-houthis-accused-firing-missile-mecca-161028132859767.html

[11] Al-Jazeera, Yemen’s Houthis accused of firing missiles at Mecca, October.28.11.40 pm

[12] http://www.washingtontimes.com/news/2016/oct/25/irans-proxy-missile-attacks/

[13] IBTimes, Yemen Rebels Target Saudi Holy City Of Makkah; Missile Intercepted And Destroyed, by Marcy Kreiter, 10/27/16 AT 8:48 PM.

[14] http://www.ibtimes.com/yemen-rebels-target-saudi-holy-city-makkah-missile-intercepted-destroyed-2438403

 

மனித மக்கள் நேயக் கட்சி உள்-குற்றச்சாட்டுகள், சண்டை, பிளவு, முதலியன எதைக் காட்டுகிறது?

ஜனவரி 25, 2016

மனித மக்கள் நேயக் கட்சி உள்குற்றச்சாட்டுகள், சண்டை, பிளவு, முதலியன எதைக் காட்டுகிறது?

MMK Tameem Ansariஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியை போலி என்று குற்றஞ்சாட்டினார்: பொதுக்குழு கூட்டம் நடந்த பிறகு, போட்டிக் குழுக்கள் ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியையும், தமிமும் அன்சாரி ஜவாஹிருல்லாவையும் வெளியேற்றி தீர்மானங்களை நிறைவேற்றின. ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியை போலி என்று குற்றஞ்சாட்டினார்[1]. கடந்த அக்டோபரில் அவர் அடிப்படை உறிப்பினர் நிலையிலிருந்து நீக்கப்பட்டார். அனவரி 2015லேயே அவரது மூன்றாண்டு தலைவர்  காலம் முடிவடைந்தது. அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பட்டு, கட்சியிலிருந்து நவம்பர் 13, 2015ல் மதுரையில் அடந்த கூட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இப்பொழுது, மாநில அவை தம்மை அங்கீகாரத்துள்ளதால், மனித மக்கள் நேயக் கட்சி [Manithaneya Makkal Katchi (MMK)] உடையாத நிலையில் தான் உள்ளது. வட மரைக்காயர் தெருவில் அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வருகிறது என்று  ஜவாஹிருல்லா தெரிவித்தார்[2].

Ansar, Jawahirullaஜவாஹிருல்லா தமிமும் அன்சாரிக்கு எச்சரிக்கை[3]: மனிதநேய மக்கள் கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டத்தை ஜவாஹிருல்லா சென்னை தாம்பரத்தில் கடந்த அக்டோபர்.6-ம் தேதி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த தமீமுன் அன்சாரி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமீமுன் அன்சாரி, தஞ்சையில் நாளை மமக பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்று அறிவித்தார். இதற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கையினையும் வெளியிட்டார்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி தலைமையில் மேற்கு தாம்பரத்தில் கடந்த 6-ம் தேதி நடந்தது. மமக நிர்வாகக் குழுவை கலைக்க பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த தேர்தலில் கட்சித் தலைவராக எம்.எச்.ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ப.அப்துல் சமதுவும், பொருளாளராக ரஹமதுல்லாஹ்வும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், எனது தலைமையிலான மமகவுக்கு போட்டியாக தஞ்சையில் அக்டோபர் 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானதாகும். அந்தக் கூட்டத்தில் பங்கேற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மனிதநேய மக்கள் கட்சி தலைமையின் அனுமதியில்லாமல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்[4].

அதிமுக, திமுக, ஊட்டணிகளில் மனிதநேய மக்கள் கட்சி:[5] மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரண்டு இடங்களில் இன்று பொதுக்குழு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது துவக்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. மதிமுக,கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அடங்கிய மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்றது.

மூன்றாவது அணி பிரச்சினையும், மனிதநேய மக்கள் கட்சியும்[6]:  மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். இதனால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மக்கள் கூட்டியக்க போராட்டங்களில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கும், கட்சி தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவாகியது. இதன் ஒரு பகுதியாக இரண்டு இடங்களில் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.

மனித நேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டது: இது தொடர்பாக கட்சியின் மூத்ததலைவர் மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி சென்னை எழும்பூரில் நாளை மமக பொதுக்குழுவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில்,  மமக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.  தாம்பரத்தில் மமக பொதுக்குழுவை அறிவித்துள்ளார்[7]. கூட்டணி குறித்த முரண்பாடு தொடர்பாக இருவரும் தனித்தனியே கூட்டம் நடத்துவதாக தகவல்.  மமக கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்தது[8].

இப்பிளவின் பின்னால், திமுக அல்லது அதிமுக இல்லை என்று அன்சாரி தெளிவாக கூறினார்: இது குறித்து ஜவஹிருல்லா, 92 சதவீத நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியில் தான் உள்ளனர். போட்டி பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள தமீம் அன்சாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளைய பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். கட்சியை உடைக்க சதி நடக்கிறது. 2011- தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது நல்ல முறையில் தான் நடத்தினர்’’ என்று தெரிவித்துள்ளார்[9]. இது குறித்து தமீம் அன்சாரி, ’’ஜவாஹிருல்லா நாளை கூட்ட உள்ள பொதுக்குழு சட்டவிரோதமானது. எனது தலைமையில் நாளை நடக்க உள்ள பொதுக்குழு தான் அதிகாரப்பூர்வமானது. கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில் எனக்கு தான் பொதுக்குழு கூட்ட அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்[10]. இப்பிளவின் பின்னால், திமுக அல்லது அதிமுக இல்லை என்று அன்சாரி தெளிவாக கூறினார்[11]. இப்பிரிவு தங்களது அலுவலகத்தை சூரையாடியது என்று குற்றஞ்சாட்டியது[12].

முஸ்லிம்கள் கட்சிகள் என்று தமிழகத்தில் பல பிரிவுகள் இருந்தாலும், எப்படியாவது இரண்டு-மூன்று எம்.பி, எம்.எல்.ஏ என்று கிடைக்குமாறு அரசியல் பேரங்கள் நடக்கின்றனட் அவ்வாறே சாதித்தும் வருகின்றானர். ஆனல், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால், ஒரு எம்.பி, எம்.எல்.ஏ கூட வருவதில்லை. இந்துக்கள் நலனிற்காக, எந்த கட்சி எம்.பி, எம்.எல்.ஏ பாடுபடுவதில்லை. கடந்த 60 ஆண்டுகள் ஆட்சியில், இந்துக்கள் படாத பாடு பட்டனர். கோவில்கள், கோவில் சொத்துகள் சூரையாடப்பட்டன. இந்துக்கள் – அல்லாதவர்களே அவற்றை அனுபவிப்பதுடன், ஆக்கிரமித்தும், சட்டத்தை வளைத்து வாங்கியும் வருகின்றனர். முதலமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு திராவிட நாத்திகத் தலைவர்கள் பல அவதூறு பேச்சுகளை பேசியுள்ளானர், செயல்களையும் செய்துள்ளனர்.

[1]  The Hindu, Ansari, a rank imposter: Jawahirullah, Chennai, January 25, 2016 , Updated: January 25, 2016 08:00 IST.

[2] http://www.thehindu.com/news/cities/chennai/ansari-a-rank-imposter-jawahirullah/article8149593.ece

[3] ஹமிழ்.இந்து, மமக பெயரில் பொதுக்குழு கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா எச்சரிக்கை, Published: October 10, 2015 20:58 ISTUpdated: October 10, 2015 20:58 IST.

[4] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7747518.ece

[5]   அதிரை எக்ஸ்பிரஸ்,   கட்சி இரண்டாக உடைந்தது?, Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 10/06/2015 10:50:00 AM in a-adiraimujeeb.

[6] http://www.adiraixpress.in/2015/10/blog-post_16.html – .VqXWqvl97IU

[7] நக்கீரன், தமீமுன் அன்சாரிஜவாஹிருல்லாஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள் : 5, அக்டோபர் 2015 (23:41 IST); மாற்றம் செய்த நாள் :5, அக்டோபர் 2015 (23:41 IST).

[8] தினமலர், கட்சியை உடைக்க சதி: ஜாவஹிருல்லா குற்றச்சாட்டு, அக்டோபர்.5,2015.21.17.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1357512

[10] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=152475

[11] Dismissing allegations that the DMK was behind the split, Ansari said, “Neither Kalaignar nor Jayalalithaa are behind this. The rift happened because of Jawahirullah’s jealousy.”. In the same breath, supporters of Jawahirullah confided that though they don’t suspect the hand of DMK behind the episode, Ansari’s recent actions given enough to suspect a DMK role in this.

http://www.deccanchronicle.com/151007/nation-current-affairs/article/ansari-mh-jawahirullah-leave-mmk-divided

[12] http://www.news7india.com/videos/teaser/jawahirullah-damaged-manithaneya-makkal-katchi-office-at-pudhupet-tamim-ansari-supporters-2/

தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!

ஜூலை 16, 2013

தீவிரவாதம், முஸ்லிம்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள், கட்சிகளின் போட்டாபோட்டி!

வழக்குகள் நடத்தப்படுவது,  தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏகுகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன எற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்ன்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.

இந்திய முஜாஹித்தீன்என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.

தீவிரவாதத்தின் நிறம்,  திசைத் திருப்பல்  –  செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்ற சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.

முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டதால் டாஸ்க் போர்ஸ்உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்!ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].

முஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது?: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].

சட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும்,  கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].

Khurshid is heard saying: “Mujhe wakilon ka mantri banaa diya, mujhe law minister banaa diya, aur kahaa kalam se kaam karo. Karoonga, kalam se kaam karoonga, lekin lahu se bhi kaam karoonga… Wo jaayein Farrukhabad, woh aayein Farrukhabad, lekin laut kar bhi aayein Farrukhabad se… Wo baat yeh kehte hain ki hum sawaal poochhenge, tum jawaab dena. Hum kehte hain ki tum jawaab suno, aur sawaal poochhna bhool jaao (I have been made the Law Minister and asked to work with the pen. I will work with the pen but also with blood… Let him go to Farrukhabad, but let him also return from Farrukhabad. They say they will ask questions and we should respond. I say that you hear the reply and forget asking questions).” –

ஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].

வேதபிரகாஷ்

© 16-07-2013


[1] Four criminal cases are pending against Rahman Khan himself and major being the charges of embezzlement of the Amanath Cooperative Bank’s funds of Rs.156.77 crore. and also accused of causing loss of property wort Rs 2 lakh crore to Wakf board affecting several thousands of people belonging to minority community. Knowing his past deeds, how can anyone believe him and expect him to do any justice to anyone including Muslims youths who are jailed on terror charges.

http://www.deccanchronicle.com/130712/news-politics/article/rahman-khan-kicks-row

[4] Minority Affairs Minister Rahman Khan on Sunday clarified his demand for setting up a task force to oversee terror cases involving Muslims, which placed him under fire from the Opposition. Khan on Friday (12-07-2013) had said that a task force will ensure justice for “innocent Muslim youth” languishing in jails in terror cases. The minister has now backtracked saying the task force will prevent the rise of radicalisation and terrorism amongst minorities. He also said that the government will soon launch a new helpline for the minorities for lodging complaints against human rights violations.

http://ibnlive.in.com/news/rahman-khan-does-a-uturn-on-setting-up-task-force-for-muslims/406472-37-64.html

[8] On Sunday, while campaigning for his wife, Mr Khurshid said that if it is elected, the Congress will set aside a nine per cent sub-quota for UP government jobs for backward Muslims; this would be carved out of existing reservation for Other Backward Castes (OBCs) in UP. The minister said more than eight Muslim castes would benefit from this move. The UP election office has taken cognisance of a newspaper report to serve notice on Louise Khurshid. She has been asked to explain within three days the statements made by her husband. The notice to Mr Khurshid would be served by the Election Commission, sources said, based on a complaint made by the BJP this morning.

http://www.ndtv.com/article/assembly-polls/salman-khurshid-in-trouble-over-muslim-quota-speech-165484

[10] Union Law Minister Salman Khurshid has criticised the Election Commission (EC) for issuing a notice to him for his Muslim sub-quota promise and claimed he did not violate the model code of conduct. Khurshid defended his announcement of granting sub-quota to Muslims if Congress came to power in Uttar Pradesh and insisted that it is not a poll violation of any sorts. Khurshid had promised 9 per cent sub-quota for backward Muslims within 27 per cent OBC quota in Uttar Pradesh if the party wins the Assembly elections.

http://ibnlive.in.com/news/muslim-quota-is-in-congress-manifesto-says-salman-khurshid/219917-37-64.html

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

பிப்ரவரி 28, 2013

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.

 

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1].  ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

 

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –

  1. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
  2. குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
  3. அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
  4. ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
  5. தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

  1. டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
  2. மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
  3. இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.

 

இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].

 

© வேதபிரகாஷ்

28-02-2013


[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.

[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.

[7] The police said the Danish, whose release is demanded in the letter, is Danish Riyaz alias Syed Afaque Iqbal, who was arrested for his role in the 2008 Ahmedabad blasts.

Read more at:http://indiatoday.intoday.in/story/indian-mujahideen-narendra-modi-mukesh-ambani/1/251980.html

[10] Anti-terrorism squad (ATS) sources said the IM has in the past sent at least five emails to news channels claiming responsibility for blasts.

http://timesofindia.indiatimes.com/india/Cops-tighten-Mukesh-Ambanis-security-after-threat/articleshow/18720646.cms