Posted tagged ‘அத்தாட்சி’

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

ஜூலை 11, 2013

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.full

நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[1]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[2].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[3]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[4]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[5].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot

ஒரு பக்கம் கைது,  மறுபக்கம்  3 பேருக்கு ஜாமின்: மதுரை அலும்பட்டி பாலத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அத்வானி யாத்திரை மேற்கொண்ட போது அவரை கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு வைக்க உதவியதாக, 2011 நவம்வர் 1ல், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, இமாம்அலி கூட்டாளிகள் “போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது[6]. இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச்சில், கூட்டாளி ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.  இந்தாண்டு மார்ச் 27ல், “போலீஸ்’ பக்ருதீன் சகோதரர் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், மதுரை வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா கைது செய்யப்பட்டனர். மார்ச் 29ல், குண்டு வைக்க, பைப் வாங்கிக் கொடுத்ததாக, திருநகர் ஜாகீர் உசேன்கைது செய்யப்பட்டார்[7]. தென்காசியில் வடக்கு மவுண்ட் ரோட்டில் வசித்து வந்த முகமது அனீபா மீது இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில் அவரது சகோதரர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளிலும் முகமது அனிபா முக்கிய குற்றவாளியாவார்[8].

Mohammed Haneefa arrested - Advani murder plot

குற்றவாளிகள் விஷயத்தில் அரசியல் விளையாட்டு கூடாது: அத்வானியைக் கொண்டு வைத்து கொலைச்செய்ய முயன்றான் என்று காங்கிரஸார் அல்லது நாத்திகக் கட்சியினர் திமுக முதலியன சந்தோஷமாக இருந்து விடமுடியாது. குண்டுவெடிப்பில் தன் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அது திராவிட, தமிழ்சித்தாந்தங்களிடம் ஊறியிருந்ததால் இன்றளவும் காங்கிரஸாரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட சித்தாந்திகளுக்கும், காங்கிரஸ்காரர்கள்ளுக்கும் மோதல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதேபோல இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது, சீக்கிய தீவிரவாதம் தலைத்தூக்கியது. சீக்கிய படுகொலைகளுக்குப் பின்னர் சீக்கியர் காங்கிரஸின் நிரந்தர எதிரிக்கள் ஆனார்கள். இப்பொழுது, ராகுல் காந்தி சரப்ஜித் சிங்கின் அந்திமக் கிரியைகளில் பங்கு கொண்டதால் மட்டும் ஒட்டு மொத்த சீக்கிய சமூகம் அவர்களுக்கு இழைத்த அநீதிகளை மறந்துவிடப் போவதில்லை. இதற்காக பிஜேபிகாரர்களுகும் சந்தோஷப்பட்ட முடியாது.

November 2011 - BJP demonstrated against terrorism

தொடர்ந்து குற்றவாளிகள் குற்றங்களை செய்வது ஏன்?: குற்றத்தைப் பழக்கமாகக் கொண்டுள்ளவர்களின் (habitual offenders / regular charge-sheeters / involved in multiple offences) இத்தகைய செயல்களை சட்டங்களை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்ந்து கொலைகள் செய்து வருபவன்  சாவதற்கு தயாராக இருக்கிறான் என்பது தெரிகிறது. அதிலும் முஸ்லிம் என்பதால் ஜிஹாதித்துவத்தில் ஊறியப்பிறகு, தியாகி விட்டதால் இனி அதே மனநிலையில் அழிவுகளில் தான் அவன் ஈடுபடுவான். அத்தகைய போக்கு இவர்களில் காணப்படுகிறது. இதனால், மேன்மேலும் போலீஸார் வழக்குகள் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பயனும் இல்லை. மேலும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்னர் என்றறிந்தும் மற்ற முஸ்லிம்கள் கண்டிக்காமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது மற்றவர்களுக்குக் குற்றவாளிகளாக, கிரிமினல்களாக இருந்தாலும் அவர்களைப் பொறுத்த வரைக்கும் “ஜியாதி” மற்றும் “ஷஹீத்” என்ற நிலையில் வைத்து விட்டதால் அமைதியாக இருக்கிறார்கள். இது இந்திராகாந்தி-ராஜிவ்காந்தி கொலையாளிகளை வீரர்களாகக் கருதி வழிபடுவதைப் போன்றதே ஆகும். மாறாக, நீதிமன்ற மறுப்பு, போலீஸ் தடைகளை மீறி அத்தகைய கிரிமினல் குற்றவாளிகளை பத்தாண்டு சிறைவாசம் முடிந்தால் விடுவிக்கவேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்துவதையும் காணலாம். இவையெல்லாம் பத்து-பதினைந்து  நாட்களில் நடக்கின்றன.

நடக்கும் நிகழ்சிகள் காட்டுவது என்ன?: பொதுமக்கள், தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளைப் படித்து மரத்து போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புகள், குரூரக் கொலைகளைக் கூட அடிக்கடிக்காட்டி, பிரபலப்படுத்தி, உணர்ச்சியற்றத் தன்மையினை உருவாக்கி விட்டனர்.

01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[9]

04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[10].

07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.

08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[11].

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன.

குற்றவாளிகளின் மனோதத்துவ அலசல்: சுருக்கமாக, கீழ்கண்ட நிலைகளை இக்குற்றவாளிகளின் போக்கில் காணலாம்:

  • குற்றம் செய்ய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது – தூண்டுதல்
  • தொடர்ந்து அதே குற்றத்தை செய்வது – குற்றஞ்செய்ய மனநிலை ஸ்திரமான நிலை
  • சட்டங்களை செயல்படுத்துவர்களைத் தாக்குதல்
  • நீதிமன்றத்திலேயே, நீதிபதிக்கு முன்பாக சட்டமீறல் காரியங்களை செய்வது.
  • தற்கொலை செய்துகொள்ள முயல்வது அல்லது அம்மாதிரி நடிப்பது.
  • “காவலில் இறப்பு” என்ற நிலை உருவாக அழுத்தத்தை ஏற்படுத்துவது.
  • இந்த குற்றவாளிகளுக்கு தொடர்ந்து சட்டரீதியில் ஆதரவு, பாதுகாப்புக் கொடுப்பது.
  • பொய்யான வழக்குகள் போட்டு திசைத் திருப்புவது[12].
  • இக்குற்றவாளிகளின் குடும்பங்களை கவனித்துக் கொள்வது, ஆதரிப்பது, உதவுவது.

ஆகவே, இவையெல்லாம் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே ஆண்டில் தீர்மானித்து செயல்படுத்தும் காரியமல்ல. அவ்வாறு இவ்வுலகத்தில் எந்த மனிதனையும் தயார் படுத்து விடமுடியாது. ஏனெனில், எந்த மனிதனும் இறப்பதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தாம் எவனுக்கும் இருக்கும் ஆனால், மாறாக இறக்கத் தயாராகிரான், தயாராகி விட்டான் என்றால் அது இப்பொழுது காணப்படுகின்ற ஜிஹாதித்துவத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

© 11-07-2013


[9] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் –

ஜூலை 02, 2013  at   10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore

வேலூரில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.வெள்ளையன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[10] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

http://dinamani.com/tamilnadu/2013/07/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1668100.ece

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

நவம்பர் 7, 2009

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்தது என்ற வதந்தியைப் பரப்ப ஆரம்பித்தது இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian History Congress) என்ற மார்க்ஸிஸ்ட்-முஸ்லீம் கூட்டத்தின் திட்டமிட்ட செயல்[1] ஆகும். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் (Aligarh Muslim University) ஒரு முஸ்லீமை வைத்து அத்தகைய “ஆய்வு கட்டுரை” படிக்கப் பட்டது. ஆனால், எல்லோராலும் அக்கட்டுரை நிராகரிக்கப் பட்டதில்லாமல், கேலிக்குண்டானது.

முன்பு கல்கத்தாவில் நடந்த 51வது மாநாட்டில் 1990 சமரேந்திர நாராயண் ஆர்யா என்பவர் “அயோத்யாவின் சரித்திரத் தன்மை” என்ற கட்டுரை அயோத்யாவை உத்திரபிரதேசத்தில்தான் வைத்து ஆதாரங்களை எடுத்துக் கட்டினார்[2]. அப்பொது அமைதியாக அக்கட்டுரை ஏற்றுக் கொள்லப் பட்டது அல்லாமல், பதிப்பிக்கவும் பட்டது. ஆனால், எந்த ஊடகமும் அதைப் பற்றி சொல்லவில்லை!

“சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு: இதனால், 1997ல் ஸ்யாம் நாராயண் பாண்டே என்பவரை வைத்து 58வது கூட்டத்தில் “சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு (“Historical Rama distinguished from God Rama”) என்று எடுத்துக் காட்டி கட்டுரை வாசிக்க வைக்கப்பட்டது. சரித்திர ராமர் என்று பார்த்தால், இப்பொழுதுள்ள அயோத்தி 800 B.C. காலத்திற்கு முன்பு செல்லாது. ஆனால் சரித்திர ராமரின் அயோத்யா, ஆப்கானிஸ்தானிலுள்ள ஹீரத் என்ற நகரத்திற்கு அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில் இருந்தது. “ஹரி ருத்” என்பதுதான் ஹரயு > சரயு என்றாகியது. ராமர் இறந்தபிறகு அந்நகரம் அழிக்கப்பட்டது. பிறகு காஸி அல்லது குஸிலவஸ் இன மக்களால் குஸக் என்ற பெயரில் ஒரு நகரம் கட்டப்பட்டது. அதுதான் பிறகு குஸ என்று ராமரின் மகனின் பெயரில் விளங்கியது. அந்த காலங்களில் காஸி மற்றும் அயோத்யா என்பது ஒரே இடத்தைக் குறிக்கும்.

ஆகவே பாணினி மற்றும் ரிக்வேதம், மற்ற ஆசிரியர்களின் கருத்தின் [பி. சி. லா, ஏ. எஸ். அட்லேகர், ஏ. எல். பாஷம், கே. எஸ். குலிஸ் முதலியவர்கள்] படி சரித்திர ரீதியில் ராமர் என்பவர் ஆப்கானிஸ்தானத்தில் இருந்தார். ஆகவே சரித்திர ராமரைத் தேடவேண்டுமானால் இந்தியாவின் வடகிழக்கே அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவருடைய கருத்தை ஆமோதித்த ஆர். எஸ். சர்மா என்ற பிரபல சரித்திர ஆசிரியர், “ராமர் அயோத்யாவில் பிறக்கவில்லை என்று சொல்லமுடியாது”., என்றும் நக்கலாகச் சொன்னார்!

பாண்டே பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் நிருபரிடத்தில் பேசுகையில்[3], “மனத்தளவில் நினைக்கின்ற ராமர் காலத்தால் மிகவும் முந்தையவர். எப்படி புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்களோ, நாமும் அந்த உன்மைகளை கவனிக்கும்போது, ராமர் உத்திரபிரதேசத்தில் அயோத்யாவில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது”, என்றார்!

1999ல் ராஜேஸ் கொச்சார்[4] என்ற நட்சத்திர-பௌதிகவியல் விஞ்ஞானி (Astro-physicist), ஆனால் மார்க்ஸீய சித்தாந்தவாதியும், பாப்ரி முஸ்லீம்களை ஆதரிக்கும் கூட்டத்தில் இருப்பதால், மறைமுகமாக ரிக்வேதம் ஆப்கானிஸ்தானில்தான் இயற்றப்பட்டது. வேதகாலத்திற்கு முற்பட்ட மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, அது ஏன் அவ்வளவு தொலைவில் இருந்தது என்றும் கேட்கவில்லை? அதாவது அயோத்யா ஆப்கானிஸ்தானத்திலேயே இருந்திருந்தால், அவன் ஏன் அங்கிருந்தே அங்கு செல்லவேண்டும்?  ஆனால் கொச்சார் கேட்பது, வேறுவழியில் அதாவது வடமேற்கில் இருந்ததால், கங்கைக்கரையின்மீது தேடவேண்டியதில்லை[5]. மேலும் லாஹூர் என்ற லவ்-பூர், ராமனுடைய மகனைக் குறிக்கிறது[6]. அதுவும் வடமேற்கில்தான் உள்ளது!

இதிலிருந்து அறியப்படும் / பெறப்படும் விஷயங்கள்:

1. அயோத்யா ஆப்கானிஸ்தானத்தில் தான் இருந்தது என்றால் பிரச்சினையே இல்லையே. பிறகு எதற்கு “சர்ச்சையில் இருந்த கட்டிடம்” / “பாப்ரி மஸ்ஜித்” இடிக்கப்பட்டது என்றெல்லாம் கலாட்டா செய்யவேண்டும்.

2. இது கூடவா பாபருக்குத் தெரியவில்லை. தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ளதை விட்டு விட்டு பிறகு எதற்கு அவ்வளவு தூரம் வந்து உத்திரபிரதேசத்தில் உள்ள “அயோத்யாவிலுள்ள” ராமர் கோவிலை இடிக்கவேண்டும்? அதாவது மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, எப்படி அவன் அதிக தூரம் செல்லவேண்டியடில்லையோ, அதுபோல! ஆனால், பாபர் வந்தது இந்தியாவிற்குதான். கோவிலை இடித்தது உபியில் – அயோத்யாவில் இருந்த கோவிலைத்தான்!

3. மொஹ்ஹம்மது கஜ்னிவிற்கு அல்-லத் சோமநாதபுரத்தில்தான் உள்ளது என்றறிந்து, அங்கு வந்து அதை இடித்து, தானும் முந்தைய முஹ்ஹம்மதுவை (PBCH) போன்றவனே[7] என்று நிரூபித்தான்! அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்பவை (Al-Lat Al-Manat, and Al-Uzzaa) “அல்லாவின் மகள்கள்” என்று குரான் குறிப்பிடுகின்றது[8].

4. ஆகவே பாபரைவிட சிறந்த சாட்சி உலகத்தில் இருக்கமுடியாது! பாபர்நாமாவே அதனை ஒப்புக் கொள்கின்றது. அதனால்தான் முஸ்லீம்கள் குறிப்பாக அந்த பக்கங்கள் காணவில்லை என்கின்றனர் போலும்! ஆகவே கருணாநிதியோ, கமலஹாஸனோ பாபரை மிஞ்சமுடியாது!

5. பாப்ரி மஸ்ஜித் கமிட்டி உச்சநீதி மன்றத்திற்கு முன்பு கொடுத்த அத்தாட்சிகளிலோ, ஆவணங்களிலேயோ இந்த விவரத்தைச் சொல்லவில்லை. அதாவது, அவர்களுக்கு அப்படி அந்த உண்மை தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.

6. ஆர். எஸ். சர்மா இங்கு 1997ல் அமோதிக்கிறார். ஆனால், மற்றொரு இடத்தில்[9] 2001ல் எழுதும்போது, “அகழ்வாய்வு ரீதியில் 500 BCE வரை அயோத்யாவில் எந்த அத்தாட்சியும் கிடைக்காததால், அதனை ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான் மற்றும் பலியா, முங்கர் முதலிய மாவட்டங்களில் இருக்கும் என்று தேடுகின்றனர்” ஆகவே, இவர்கள் எப்படியெல்லாம் மாற்றி-மாற்றி பேசுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும்.

7. அதாவது சித்தாந்தரீதியில் இந்துக்களுக்கு எதிராக பேசினால் தங்களுக்கு “செக்யூலரிஸ”ப் பட்டம் கிடைக்கும் என்று இங்கு இப்படி பேசுவது, மேலைநாட்டு புத்தகத்தில் தமது கட்டுரை வரவேண்டும் என்றால், அகழ்வாய்வைப் பிடித்துக் கொள்வது. இதில் என்னவேடிக்கை என்றால், அதே புத்தகத்தில் பி.பி.லால் தனது கட்டுரையில் அயோத்யாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பற்றிக் குறிப்பிடுகிறார்[10]. ஆனால் அவரது கட்டுரை, இவர்களுக்கு சாதகமாக இல்லாததனால், அதைப் பற்றி சொல்வதில்லை. ASIயின் 2003 அறிக்கையின்படி அகழ்வாய்வு அத்தாட்சிகள் 1000 BCE வரை செல்கின்றன.

8. ஆகவே, முன்பு ஸ்யாம் நாராயண் பாண்டே, கொச்சார், முதலியோர் அயோத்யா அத்தாட்சிகள் 800 B.C. முன்பாகச் செல்லாது என்ற கருத்த மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களும் தமது தவறை உணர்ந்து மௌனிகளாக இருக்கின்றனர். ஆனால், ஊடகங்கள் கிளப்பிய பொய் பிரச்சாரம், அரசியல்வாதிகள் உளறியது அப்படியே உள்ளன. ஆகையால்தான், கமலஹாஸன் இன்றும் உளறுகிறார், பிதற்றுகிறார் முகமதியர் முன்பு!

9. பிரபலமான கமலஹாஸன் அவ்வாறு உளருவதாலும், முதல்வர் கருணாநிதி பிதற்றுவதாலும் ஊதகங்கள் தாராளமாக அசற்றை பரப்புகின்றன. ஆனால், அவை தவறு என்று எடுத்துக் காட்டும்போது, அவ்வாறான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, மறுபடியும் கமலஹாஸன் சொன்னார், கருணாநிதி சொன்னார் என்று கிளம்பிவிடுவர்!

10.  “புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்கள்”, என்கிறாரே, இதை சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

11.  கௌசல்யாவைப் போல அவர்களது அம்மாக்களையும் அவ்வாறே அனுப்பிவைத்தார்களா, என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா?

சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்: முன்பு எம்ஜியாரை கூத்தாடி, கூத்தாடிக்காரன் என்றே கருணாநிது செல்லமாக சொல்லுவார். அதாவது சினிமாகாரர்களை அப்போது அவ்வாறு சொல்வது வழக்கம். ஆகையால், இப்போதும் அவ்வாறு சொல்வது பொருந்தும் போல இருக்கிறது. சினிமா / அரசியல் என்றால் அதோடு இருக்கவேண்டும், ஆனால், அதிகபிரசங்கித் தனமாக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு, குறிப்பாக இந்துக்களை தாக்குவது, தூஷிப்பது என்றால் முன்னே வந்து செய்வது, அதுவும், முகமதியர் முன்பு செய்வது என்றெல்லாம் ஏதோ தமக்கே உரிய லட்சணங்கள் என்பது போல இவர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, இந்த கூத்தாடிகள், இனிமேல், முழுவதுமாக படித்து விட்டு உளரவேண்டும் அல்லது யாராவது முழுவதும் தெரிந்தவர்களிடம் உரு வார்த்தைக் கேட்டுக் கொண்டு உளரவேண்டும். இல்லையென்றால், நிச்சயம், ஒரு நாள் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். பொய்-மேல்-பொய் சொல்லி ஆடுகின்ற ஆட்டமில்லை கோசலையைப் பற்றி அவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தால், எந்த ராஜலட்சுமியும், அஞ்சுகமும் பொறுக்கமாட்டார்கள்.


[1] 1987லிருந்து தொடர்ச்சியாக மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசிக்கும் ஆயுட்கால அங்கத்தினர்களிடமிருந்து சேகரித்த தகவல்கள் மற்றும் Proceedings of the Indian History Congress புத்தகங்களை பார்த்து தொகுத்த விவரங்கள்.2 Samarendra Narain Arya, Historicity of Ayodhya, Proceedings of the Indian History Congress, 51st session, Calcutta, 1990, pp. 44-49.

[3] http://www.indianexpress.com/ie/daily/19971120/32450403.html

[4] Rajesh Kochhar, The Vedic People, Their History and Geography, Orient Longman, Delhi 1999.

[5] Ibid, p.209.

[6] Ibid, p.210.

[7] அதாவது முஹ்ஹம்மத் காபாவைத் தவிர, சுற்றியிருந்த 360 விக்கிரங்களை இடித்து போட்டார். பிறகு அரேபியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காபா விக்கிரத்தை விட்டுவைத்தார்!

[8] Koran, Surah:53.19

[9] Robert Layton, Julian Thomas, Peter G. Stone (Eds.), Destruction and conservation of cultural property, Routleg Taylor & Francis group, 2001, USA, p.127.

இதில் மற்ற கட்டுரைகளும் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்கின்றன. எல்லோருமே அயோத்யாவை உபியில்தான் வைக்கின்றனர்.

[10] B. B. Lal, A note on the excavations at Ayodhya with reference to the Mandir-masjid issue, in Destruction and conservation of cultural property, as mentioned above, pp.117-120.