Posted tagged ‘அசாம்’

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ்ஜிஹாத் செய்யலாம்,  எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2)

திசெம்பர் 6, 2022

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ் ஜிஹாத் செய்யலாம்எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2)

05-12-2022 – தமிழ்.இந்து மறுபடியும் அதே செய்தியை வெளியிட்டது: “பெண்களுக்கு 18 முதல் 20 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கும் இஸ்லாமிய பார்முலாவுக்கு இந்துக்களும் மாற வேண்டும்[1]. அப்போதுதான் குழந்தைப்பேறு எளிதாக இருக்கும் என்பதுடன் பெற்றோரும் தங்களது இளம் வயதிற்குள்ளாகவே தங்களது பிள்ளைகளுக்கும் வசதியாக திருமணம் நடத்தி வைக்க முடியும்,” என அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் மேலும் கூறியது, “இஸ்லாமிய வழக்கப்படி ஆண்களுக்கு 20-22 வயதில் திருமணம் முடித்து வைக்கப்படுகிறது. அதே போன்று பெண்களுக்கும் அரசு அனுமதித்துள்ள 18 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மறுபக்கம், அவர்கள் (இந்துக்கள்) திருமணத்துக்கு முன்பாகவே சட்டவிரோதமாக இரண்டு அல்லது மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர்[3]. [தமிழில் தமிழ்.இந்து உட்பட முதலில் இப்படி வெளியிட்டு விட்டு, பிறகு, “சட்டவிரோத மனைவிகளை……” என்றதை சேர்த்து வெளியிட்டனர்.] இது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே அத்தகைய “எடிடிங்” போன்ற முறை கையாளப் பட்டதா என்று தெரியவில்லை.

இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்: [இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்.– தினத்தந்தி] பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல், வாழ்க்கையை அனுபவித்து பணத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்[4]. 40 வயதில் என்னபெற்றோரின் நிர்பந்தத்தால் 40 வயதுக்குப்பிறகு அவர்கள் முறைப்படியான திருமணத்தை செய்து கொள்கின்றனர்[5]. 40 வயதிற்குப் பிறகு திருமணம் செய்து அவர்கள் எப்படி குழந்தைகளைப் பெற்று வளர்ப்பார்கள்[6]. நிலத்தில் சரியான நேரத்தில் விதைக்கும் போதுதான் நல்ல வளர்ச்சியையும், விளைச்சலையும் எதிர்பார்க்க முடியும்”. [இந்த கடைசி வரியும் விசமத்தனமானது. இத்தகைய கருத்துகளை இந்துக்கள் சொல்லியிருந்தால், அது பெருத்த சர்ச்சையாகி இருக்கும். எல்லா முஸ்லிம் தலைவர்களும் குதித்திருப்பார்கள்….இந்துக்கள் படித்து, வேலைக்குச் சென்று சம்பாதித்து, பெற்றோர்களை மற்ற குடும்பத்தினரை பொறுப்புடன் காப்பாற்றி வரவேண்டியுள்ளது. சகோதரிகள்-சகோதரர்களுக்கு திருமணம் ஆனப் பிறகு, தம்பி-தங்கைகளுக்கு திருமணம் போன்ற சம்பிரதாயங்களும் அனுசரிக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம் கொச்சைப் படுத்த முடியாது…..இந்து இளைஞர்கள் அவ்வாறு பினைப்புகளுடன் இருப்பதனால், முஸ்லிம்களை போல பயங்கரவாதம், தீவிஅவாதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் எனலாம்….]

நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்: முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், டெல்லியில் ஷ்ரித்தா வாக்கர் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் லவ் ஜிகாத் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியாவுக்கு அப்தாப்புக்கள் வேண்டாம், கடவுள் ராமர் போன்ற நரேந்திர மோடி தான் வேண்டும் என்றும் கூறியிருந்தார். அது குறித்து கூறிய பத்ருதீன், “உங்களை யாரும் தடுக்கவில்லையே. நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள். நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்று கூறியுள்ளார். வக்ஃபு வாரியம் நாடு முழுவதும் புதிதாக பெண்களுக்காகவே 10 கல்லூரிகளை கட்டவிருப்பதாக அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய பத்ருதீன், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார். [நிச்சயமாக இதெல்லாம் உள்நோக்கம் கொண்ட கருத்துகள், பேச்சுகள்…எந்த இந்துவும் அம்மாதிரி முஸ்லிம் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லமாட்டான்.  “உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்பதிலும் வெறுப்புப் பேச்சுதான் வெளிப்படுகிறது….]. இப்பொழுது அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களைப் போல, இந்துக்கள் காரியங்களைச் செய்ய முடியாது: கருத்து சொல்வதற்கே முஸ்லிம்கள் பொறுப்பதில்லை. சமீபத்தில் நூபுர் சர்மா கருத்திற்கு தலை வெட்டி கொலை செய்த குரூரங்கள் எல்லாம் நடந்தேறி விட்டன. பிறகு, ஒரு இந்து முஸ்லிம் பெண்ணைத் தூக்கிச் செல்வது என்பதெல்லாம் கலவரங்கள், குண்டுவெடிப்புகளில் தான் முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். “நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்பதில் மிரட்டல் தொணி தான் வெளிப்படுகிறது. ஆமாம், நிச்சயமாக, இந்துக்களுக்கு அத்தகைய, அந்தவிதமான பலம் இல்லை. இருந்தாலும், அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஆகவே, அவ்வாறு தூண்டிவிடு வகையில் பேச வேண்டிய தேவை, அவசியம், எதிர்பார்ப்பு என்னவென்று தெரியவில்லை. வக்ஃ / முஸ்லிம்கள் கல்லூரிகளில், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்,” என்றால், அவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்குமா அல்லது அவர்கள் திரும்பி வரமுடியாத நிலை ஏற்படுமா என்று ஆராய வேண்டியுள்ளது.

எதிர்ப்பு கிளம்பியதும், மன்னிப்பு கேட்டதும்: இதற்கிடையே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அஜ்மல் பேசியுள்ளதாக காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தாவடு, உயர்வு நவிற்சி, கிண்டல், நக்கல், இருமாப்பு முதலியவற்றைக் கண்டுகொள்ளாமல், காங்கிரஸ் வ்வாறு செய்கிறது என்பது உஅனாகிறது. குஜராத் தேர்தல் நடக்கும் நிலையில், திசை திருப்பும் வகையில் பா.ஜ., கூறியபடி அஜ்மல் பேசியுள்ளதாக அக்கட்சிகள் விமர்சித்துள்ளன. மேலும், அஜ்மலிமன் விசமத்தனமான பேச்சுக்கு எதிராக அசாமின் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிணமுல் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நேற்று நடத்தப்பட்டது[7]. இந்நிலையில், பத்ருதீன் அஜ்மலின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்த நிலையில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்[8]. இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் ஹிந்துக்கள் குறித்தும், ஹிந்து பெண்கள் குறித்தும் குறிப்பிடவில்லை; பொதுவாக குறிப்பிட்டேன்[9]. இருப்பினும் இது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது[10]. என் பேச்சுக்காக அவமானப்படுகிறேன். அவ்வாறு நான் பேசியிருக்கக் கூடாது.என் பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். எனது வார்த்தைகள் யாருடைய உணர்வையும் புண்படுத்தி இருந்தால் நான் என் வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்[11]. யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அரசு சிறுபான்மையினருக்கு நீதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றார்[12].

© வேதபிரகாஷ்

05-12-2022 


[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Badruddin Ajmal: இந்துக்கள் முஸ்லிம்கள் பார்முலாவை பின்பற்ற வேண்டும்: அசாம் ஏஐடியுஎப் தலைவர் சர்ச்சைப் பேச்சு, Pothy Raj, First Published Dec 3, 2022, 5:08 PM IST; Last Updated Dec 3, 2022, 5:10 PM IST.

[2] https://tamil.asianetnews.com/india/hindus-should-adopt-the-muslim-model-says-badruddin-ajmal-of-assam-rmbcbv

[3] தமிழ்.இந்து, முஸ்லிம்களைப் போல இந்துக்களும் 18-22 வயதில் திருமணம் செய்ய வேண்டும்: ஏஐயுடிஎஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கருத்து, செய்திப்பிரிவு, Published : 05 Dec 2022 10:07 AM; Last Updated : 05 Dec 2022 10:07 AM.

[4] https://www.hindutamil.in/news/india/910345-like-muslims-hindus-should-marry-at-age-18-22-aiudf-president-bhadruddin-ajmal.html

[5] தினத்தந்தி, இந்துக்கள் முஸ்லீம்களைப்போல் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்பத்ருதீன் அஜ்மல், டிசம்பர் 3, 1:57 pm

[6] https://www.dailythanthi.com/News/India/hindus-should-follow-muslim-formula-assams-badruddin-ajmal-on-population-boom-850045

[7] புதியதலைமுறை, இளவயது திருமணம் கருத்து தெரிவித்த அசாம் எம்.பி மீது அரசியல் கட்சிகள் தொடர் வழக்குகள், Justin Durai, Published: 04, December 2022 10:17 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/151933/Police-cases-continue-against-Ajmal-over-controversial-remark-Assam-Congress-leader-latest-complainant.html

[9] தினமலர், ஹிந்து பெண்கள் குறித்து கருத்து: மன்னிப்பு கேட்டார் அசாம் எம்.பி., பதிவு செய்த நாள்: டிச 05,2022 04:54

[10] https://m.dinamalar.com/detail-amp.php?id=3186557

[11] தினத்தந்தி, , இந்து மதத்தினர் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்கருத்துக்கு மன்னிப்பு கோரிய பத்ருதீன் அஜ்மல், டிசம்பர் 4, 2:36 am.

[12] https://www.dailythanthi.com/News/India/ajmal-apologises-for-hurting-sentiments-parties-link-his-comments-to-guj-polls-850580

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

ஆம்பூர் உமர் சாலையில் மதரஸாஎன்ற இடத்தில் கைதா அல்லது மதரஸாவில் கைதா? – தமிழ்.ஒன்.இந்தியாவின் உண்மை மறைப்பு செய்தி[1]: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது[2]என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது[3]. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மதராஸவில் தங்கியிருந்த பயங்கரவாதி கைது என்று உண்மையை வெளியிட ஏன் மறைப்பு என்று தெரியவில்லை. மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு / தீவிரவாதங்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையினை மறைக்க அவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கலாம். பி.டி.ஐ ஏற்கெனவே அவ்வுண்மையினை வெளியிட்டுள்ளது[4]. அச்செய்தி மற்ற ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன[5].

ஆம்பூர் சாலை - உதாரணம்

ஆம்பூர் சாலை – உதாரணம்

.பி.போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்[6] / தீவிரவாதிகள்[7]: உத்தரபிரதேச ஆக்ரா தாலியான் காண்டி பகுதியை சேர்ந்தவர் சையது மாமூன் அலி. இவரது மகன் சையது முகம்மது அலி (வயது 37). இவர் மீது உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தர்கா, மற்றும் நிறுவனம் முதலியவற்றிற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததால் வழக்குகள் பதிவாகி உள்ளன[8]. ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளது[9]. ஒரு இது தொடர்பாக சையது முகம்மது அலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார். இதனால் தீவிரவாதிகளுடன் சையத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அவரை அறிவித்தனர். மேலும் சையத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவரை சுற்றியுள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவரை போலீசார் தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சையத் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறைக்கு, உத்தரபிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். உள்துறை அதிகாரிகள் உளவு துறை மூலம் வேலூர் மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர்[10]. “புதிய தலைமுறை” டிவி பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றது.

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

ஆம்பூர் மதரஸாவில் தங்கியிருந்த தீவிரவாதி கைது: எஸ்.பி. செந்தில்குமாரி உத்தரவின்பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சையது முகம்மது அலியின் அடையாளங்களை சேகரித்து, அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உமர் ரோட்டில் சையத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு மதரஸாவில் தங்கியிருந்தான் என்று பி.டி.ஐ கூறுகிறது[11]. இதையடுத்து டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை நேற்றிரவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சையத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்த அணைக்கட்டு காவல் போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று முன்தினம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சையத் என்பது தெரியவந்தது. கடந்த 14–ந் தேதி அடுத்தடுத்து 2 முறை இந்தி, ஆங்கில மொழியில் மாறி, மாறி போனில் மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சென்னை உள்பட பல்வேறு இடங்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்[12].

புதியதலைமுறை - பயங்கரவாதிகள்

புதியதலைமுறை – பயங்கரவாதிகள்

ஆம்பூருக்கு அல்லது தமிழகத்திற்கு என்ன தொடர்பு?: எதற்காக சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சையத் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் சையத் தீவிரவாதிகளின் சிலிபர் செல் எனப்படும் உள்நாட்டு குழுக்களை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சையத்துடன் தொடர்புடைய நபர்கள் வேறு யாராவது? தமிழகத்தில் பதுங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையத் கைது செய்யப்பட்டது குறித்து உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாநில போலீசார் வேலூருக்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட சையத் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. சையத் பிடிபட்டபோது அவரிடம் இருந்து 5 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் எண் பட்டியலையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதியதலைமுறை - அணைக்கட்டு காவல் நிலையம்

புதியதலைமுறை – அணைக்கட்டு காவல் நிலையம்

விசாரணையில் வெளியாகும் குழப்பமான விவரங்கள்: காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் - கைது - உதாரணம்

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் – கைது – உதாரணம்

வேலூர் லாட்ஜுகளில் சோதனை: இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது, Posted by: Mayura Akilan, Published: Friday, October 16, 2015, 16:59 [IST].

[2] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[4] http://www.ptinews.com/news/6626972_Man-wanted-for-making-terror-threats-in-UP-held-in-TN.html

[5] Business Standard, Man wanted for making terror threats in UP held in TN, Press Trust of India , Vellore (TN) October 16, 2015 Last Updated at 22:22 IST.

[6] https://www.youtube.com/watch?v=PWxP66jhXx0

[7] மாலைமலர், சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதியா? – ரகசிய இடத்தில் விசாரணை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 12:06 PM IST

[8] Syed Ahmed Ali had allegedly made terror threats to Taj Mahal in Agra, a dargah besides an institution in Lucknow. He had arrived here two days ago and stayed in a Madrasa in Ambur. http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[9] தினகரன், ஆக்ரா, ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பில் தொடர்பு: வேலூரில் கைதான தீவிரவாதியிடம் விசாரணை, அக்டோபர்.17, 20125. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173391

[10] http://www.maalaimalar.com/2015/10/16120645/CMC-hospital-bomb-threat-Ambur.html

[11] Intelligence Bureau officials alerted Tamil Nadu police about the presence of Ali in Ambur in a Madrasa. “We immediately began our probe and with the help of local people we identified Ali…Now Uttar Pradesh police are on their way to take this man into their custody through court,” the official added.

http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[12] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/10/17014634/CMC-Hospital-bomb-threat.vpf

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)

திசெம்பர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)

Burdwan blast accused Shahnoor Alam -Photo- PTI-File

Burdwan blast accused Shahnoor Alam -Photo- PTI-File

இந்திய-விரோத அந்நிய சக்திகளில் வடகிழக்கு மாநிலங்களில் சதிதிட்டங்களை செயல்படுத்தி வருவது: வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் இந்திய-விரோத செயல்கள், தீவிரவாத காரியங்கள், உள்ளூர் மக்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாத வேலைகள் முதலியவற்றில், பெரும்பாலும் அந்நிய சக்திகள் பின்னணியில் இருந்து கொண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, அல்-குவைதா, தலிபான், வங்காளதேசத்தின் ஜமாத்-உல்-முஜாஹித்தீன், கிருத்துவ மிஷனரிகள், இடதுசாரி-கம்யூனிஸ்ட் சித்தாந்த போடோலாந்து தீவிரவாதிகள், நக்சல்பாரிகள் முதலியோர் அடங்கும். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இக்காரயங்கள் நடந்து வந்தபோதிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்பொழுது திரிணமூல் கட்சி இவ்விசயங்களில் மெத்தனமாகவே செயல் பட்டு வந்துள்ளன. இதனால், வங்காளதேசத்திலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவி, அசாம் மாநிலங்களில், நிரந்தரமாகத் தங்கி வாக்காளர் அட்டை, ரேஷ்னகார்ட் முதலியவற்றைப் பெற்று ஆளும் கட்சிகளுக்கு ஓட்டு வங்கியாக செயல்பட்டு வருவதுடன், கடத்தல், கள்ளநோட்டு-போதை மருந்து விநியோகம், மனிதகடத்தல் (பெண்கள்-குழந்தைகளையும் சேர்த்து) முதலிய காரியங்களிலும் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தின் பங்கை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்து வருவதால், அவர்களும் அமைதியாகவே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மறுபடியும் அந்நிய சக்திகள் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளன.

21-12-2014-10 grenades found JMB - Assam

21-12-2014-10 grenades found JMB – Assam

ஒரே நாளில் இம்பால் குண்டுவெடிப்பில் மூன்று பேர் சாவு, பஸ்கா மாவட்டத்தில் 10 கையெறிகுண்டு கண்டுபிடிப்பு: 21-12-2014 அன்று மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் ஒரு குண்டு வெடித்து, மூன்று பேர் கொல்லப்பட்ட அதே நாளில்[1], அசாமில், பார்பேடாவில், நாம்பாரா மாவட்டத்தில், பதசர்குச்சி என்ற கிராமத்தில் ஷாஹநூர் ஆலத்தின் [Sahanur Alom] கையாளியான நூர்ஸலால் ஹக் [Nurjamal Haque வயது 25] என்பவன் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் குறிப்பிட்ட இடத்தில், மறைத்து வைக்கப்பட்ட தோண்டிப் பார்த்ததில் 10 நாட்டு கையெறி-வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன[2]. அக்குண்டுகள் பஸ்கா மாவட்டத்தில், பன்பரா கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன[3]. வெடிகுண்டுகள் தவிர, கையெறி குண்டுகளும் தயாரிக்கப்படுகின்றன என்று தெளிவாகிறது. சஹநூர் ஆலத்தின் வீட்டிற்கருகில் சுமார் 500 மீ தொலைவில் ரூபோஹி நதிக்கரையில் பாலிதீன் உறைகளில் சுற்றி அவை புதைக்கப்பட்டிருந்தன[4].  அதாவது, சோதனைக்கு வருகிறார்கள் என்பதும், அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கிறது என்றாகிறது. 90க்கும் மேற்பட்ட குண்டுகள் மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது[5]. இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் சோதனைக்குப் பின்னர் அழிக்கப்பட்டன.

jmb - Bangala terror

jmb – Bangala terror

மதரஸாவின் முதல்வரே குண்டுகள் விசயத்தில் கைது: ஜிஹாதி நோட்டிசுகள், கையேடுகள், சிறுபுத்தங்களும் குழிகளில் கண்டெடுக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதி இயக்கத்திற்கு சேர்ப்பது, அவர்களை இத்தகைய பிரச்சார இலக்கியங்களினால் வெறிகொள்ள செய்வது, தீவிரவாதிகளாக மாற்றுவது போன்ற வேலைகளில் தான் மதரஸாக்கள் ஈடுப்பட்டுவருகின்றன என்பது தெளிவாகிறது. நூர்ஸலால் ஹக் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பஸ்கா மாவட்டத்தில், சல்பாரி கிராமத்தில் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டான். இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டனர்[6]. இன்னொரு கூட்டாளியான நஜ்முல் இஸ்லாம் [ Nazmul Islam] என்பவன் ஞாயிற்றுக்கிழமை 14-12-2014 அன்று பார்பேடாவில் கைது செய்யப்பட்டான்[7]. இவன் கோராகுரி அஞ்சாலிக் மதரஸாவின் பிரின்சிபால் ஆவான்[8]. அதாவது, மதரஸாக்கள் எப்படி ஜிஹாதி-தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

huji Bangaladesh

huji Bangaladesh

அனைத்து அசாம் மாணவர்கள் குழுமத்தின் அறிக்கையில் வெளியாகும் தகவல்கள்: அடுத்த நாள் (22-12-2014), அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் [The All Assam Students’ Union (AASU)] அல்-குவைதா, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டுமானால், சட்டத்திற்குப் புறம்பாக, வங்காளதேசத்திலிருந்து ஊரடுருவியுள்ள முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மறுபடியும் வைத்தது[9]. அரசே பார்பேடா, நல்பாரி மற்றும் பஸ்கா போன்ற மாவட்டங்களில் தீவிரவாதிகள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒப்பொஉக் கொண்டுள்ளதால், உடனடியாக, அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டது[10]. அசாம் உடன்படிக்கையை அரசு செயல்படுத்தத் தயங்கியதால், பாகிஸ்தானிலிருந்து வரும் ஐ.எஸ்.ஐ ஆட்களும் அந்த போர்வையில், வங்காளாதேசத்தின் வழியாக, எல்லைகளைக் கடந்து அசாமில் வந்து நுழைந்துள்ளார்கள்[11]. மேலும் உச்சநீதி மன்றம் சட்டவிரோதமாக உள்நுழைந்த-இடம் பெயர்ந்தவர்களை அடையாளம் காணும் சட்டத்தை [Illegal Migrants (Determination by Tribunals) Act] திரும்பப்பெற்றதால், அசாம் வெளியிலிருந்து தாக்குதல்களையும், உள்ளே கலவரத்தொந்தரவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளதையும், அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியது[12].

AASU demand on illegal immigration, infiltration etc

AASU demand on illegal immigration, infiltration etc

மதரஸாக்களைக் குறைகூறக்கூடாது என்றால், அவை ஏன் குண்டு தொழிற்சாலையாக, கிடங்குகளாக செயல்படவேண்டும்?: மதரஸாக்களை ஒட்டு மொத்தமாகக் குறைகூறக்கூடாது என்று எதிர்க்கும் முஸ்லிம்கள், மதரஸாக்கள் இவ்வாறு தீவிரவாதத்திற்கு உபயோகப்படுத்தப் படுவதை ஏன் எதிர்ப்பதில்லை, போலீஸாரிடம் புகார் கொடுப்பதில்லை அல்லது முளையிலேயே கிள்ளி எரிவதில்லை என்ற வினாக்களிலிருந்தே, அவர்களது, நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு வெளிப்படுகிறது. முன்பு பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு, அதில் சில இந்துக்களையும் ஆதரவாகப் பேசவைத்ததை நினைவு கூறவு, இப்பொழுது, அவர்கள் எல்லோருமே அமைதியாகி விடுவர். இதனை எதிர்த்துக் கூட்டம் போடமாட்டார்கள், கண்டன-அறிக்கைகளையும் வெளியிட மாட்டார்கள். அதுதான், அவர்களது தங்களது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்தும் விதம் போலும். உண்மையில், இத்தகைய செக்யூலரிஸாத்தால் தான் ஜிஹாதித்துவ-தீவிரவாதம், ஊக்குவிக்கப்படுகிறது, ஆதரிக்கப்படுகிறது மற்றும் வளர்க்கப்படுகிறது,

Photo taken on the occasion of signing of memorandum of settlement on the Assam problem between the Government representatives and representatives of the All Assam Students Union and the all Assam Gana Sangram Parishad in New Delhi on August 15, 1985.

Photo taken on the occasion of signing of memorandum of settlement on the Assam problem between the Government representatives and representatives of the All Assam Students Union and the all Assam Gana Sangram Parishad in New Delhi on August 15, 1985.

மதரஸாக்கள் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக செயல்பட்டது: அசாமில் உள்ள பல கிராமங்களில் தீவிரவாத செயல்களுக்கு, முஸ்லிம்களை தயாராக்கி வைத்திருக்கிறார்கள். லார்குச்சியில் உள்ள மதரஸா அதற்காகப் பயன்படுத்தப் பட்டது. பல இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ஜிஹாதி பயிற்சி அளிக்கப்பட்டது[13]. கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் மிகவும் திட்டமிட்டு, இக்காரியங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று தெரிகிறது. ஒருவேளை, அக்டோபர்.2, 2014 அன்று குண்டுவெடித்து, அவர்கள் மாட்டிக் கொண்டிருக்காவிட்டால், இவர்கள் நாடு முழுவதும், பல குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், அவர்கள், ஜிஹாதி எண்ணங்களில் ஊறியுள்ளது, அவர்களது பேச்சுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஏதோ தீவிரவாத செயல்களை செய்கிறோமோ என்ற எண்ணமே இல்லாமல், புனித காரியத்தைச் செய்கிறோம் என்ற நிலையில் உள்ளார்கள். அப்பாவி மக்களைக் கொல்வதும், அவர்களுக்கு புனித காரியமாகவே தோன்றுகிறது.

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

he girls Madrasa at Simulia village under Mangalkot PS of Burdwan, alleged terror training centre

வழக்கம் போல திரிணமூல்-பிஜேபி பரஸ்பர குற்றச்சாட்டுகள்: 21-12-2014 அன்று ஷகீல் அஹமதுவின் உடலும் புதைக்கப் பட்டது[14]. முன்பு உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கலாட்டா செய்து வந்தனர். தீர்ணமூல் காங்கிரஸ் தொடர்ந்து தனக்கும், இந்த குண்டுவெடிப்புகள், தொழிற்சாலை, ஜே.எம்.பி தீவிரவாத ஊக்குவிப்பு முதலியவற்றில் தொடர்பில்லை என்று வாதிட்டு வந்தாலும், அவற்றிற்கிடையே உள்ள சம்பந்தங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி பணமும், இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[15]. வழக்கம் போல மம்தா இது பிஜேபியின் சதி, ராவின் மூலம் தான் இவையெல்லாம் செய்யப்பட்டது என்று கூறிவருவது, மிக்க வியப்பாகவும், பொறுப்பற்ரதாகவும் இருக்கிறது. மதகலவரங்களை உருவாக்கவே இவையெல்லாம் செய்யப் பட்டு வருகின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்[16]. அதற்கு மேலும் டெரிக் ஓபராய் என்ற அக்கட்சி ஊடக தொடர்பாளர், தமதிச்சைக்கேற்றபடி பேசி வருவதும் வியப்பாக உள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ, அமைச்சர் என்று பலருடைய தொடர்புகள் இதில் மெய்ப்பிக்கப்பட்டும், இருவரும் அப்பட்டமாக இல்லவே இல்லை என்று சாதித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

25-12-2014

[1] http://www.assamtribune.com/dec2114/at044.txt

[2] The Special Operation Unit of the state police recovered the bombs that were hidden in Nampara village in Patacharkuchi following the alleged confession of Nurzalal Haque who is an alleged associate of Shahnoor Alam, the prime accused in the October 2 Burdwan blast. Alam, who was arrested nearly two weeks ago by the National Investigation Agency from the state, was the face of jihadi terror in Assam, according to the police.

http://www.ndtv.com/article/india/10-crude-bombs-found-in-assam-after-alleged-confession-of-burdwan-blast-accused-637943

[3] In a major breakthrough, the Assam Police today managed to recover 10 bombs of the Jamaat-ul-Mujaheedin, Bangladesh (JMB). Police sources said that the crude bombs were kept concealed inside a banana plantation in Panpara village in Baksa district. The recoveries were made following the confessions of JMB militant Nurjamal, who was arrested on Friday. Sources said that Nurjamal was a trained cadre of the JMB and he was a close associate of Sahanur Alom, one of the key men of the Bangladesh based militant outfit in the State. http://www.assamtribune.com/dec2214/at051.txt

[4] Based on Sahanur’s confession, the National Investigation Agency (NIA) recovered the grenades near Rupohi river, about 500 metre from his house in Salbari sub-division, NIA sources said.

http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-case-nia-recovers-10-hand-grenades/

[5] http://www.deccanchronicle.com/141221/nation-current-affairs/article/burdwan-blast-case-nia-recovers-10-hand-grenades

[6] http://www.telegraphindia.com/1141222/jsp/frontpage/story_4732.jsp#.VJjNKULY8

[7] NDTV, 10 Crude Bombs Found in Assam After Alleged Confession of Burdwan Blast Accused All India | Edited by Mala Das (with inputs from Agencies) | Updated: December 22, 2014 11:32 IST

[8] Police today arrested Nazmul Islam, principal of Koraguri anchalik madarsa in Barpeta district, based on the confession of Haque.

http://www.telegraphindia.com/1141222/jsp/frontpage/story_4732.jsp#.VJjNKULY8

[9] The All Assam Students’ Union (AASU) today reiterated its demand for uprooting the fundamentalist organisations like Al-Qaeda and Jamaat-ul-Mujahideen Bangladesh and also for deporting the illegal Bangla migrants from Assam. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[10] http://www.assamtribune.com/dec2314/at055.txt

[11] Illegal Bangla migrants, members of the fundamentalist organisations and even members of the intelligence organisation of Pakistan are entering Assam taking advantage of its porous border with Bangladesh. This is because of the failure of the Government to implement the Assam Accord, it said. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[12] It reminded the Central as well as the State Government of the observation made by the Supreme Court of India while repealing the infamous Illegal Migrants (Determination by Tribunals) Act. The apex court had, interalia, said in its verdict that due to illegal migration, Assam is facing external aggression as well as internal disturbances, said the student body. http://www.assamtribune.com/dec2314/at055.txt

[13] http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-probe-key-suspect-shahnoor-alam-arrested/

[14] http://www.oneindia.com/india/body-of-another-burdwan-blast-accused-buried-1599494.html

[15] http://articles.economictimes.indiatimes.com/2014-12-21/news/57280801_1_saradha-scam-trinamool-rajya-sabha-trinamool-congress

[16] http://www.ndtv.com/article/india/centre-stage-managed-burdwan-blast-to-trigger-riots-in-bengal-claims-mamata-banerjee-624484

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா - அரசியல்-ஜிஹாத்

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்

வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link

Vadapalani -burdwan link

ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள்.  தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி - தொடர்பு

பர்த்வான் வடபழனி – தொடர்பு

வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்தி

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி

ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].

மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014

[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.

http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html

[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.

[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D

ரூ.2 கோடி பரிசு – அசாமில் பங்களாதேசியைக் கண்டு பித்தால் – சவால் விட்டுள்ளார் – அபு அசிம் ஆஸ்மி!

ஓகஸ்ட் 22, 2012

ரூ.2 கோடி பரிசு – அசாமில் பங்களாதேசியைக் கண்டு பித்தால் – சவால் விட்டுள்ளார் – அபு அசிம் ஆஸ்மி!

Azmi challenges Raj to find Bangladeshis; offersRs. 2 crore

Press Trust of India | Updated: August 22, 2012 17:08 IST

http://www.ndtv.com/article/india/azmi-challenges-raj-to-find-bangladeshis-offers-rs-2-crore-257917
Azmi challenges Raj to find Bangladeshis; offers Rs 2 crore

Mumbai: Samajwadi Party leader Abu Asim Azmi on Wednesday offered Rs. two crore to MNS chief Raj Thackeray if he substantiates his allegation about Bangladeshi voters in the Assembly constituency from where he won the poll.

“Raj Thackeray says there are lakhs of Bangladeshis in my constituency. I will give Rs. 2 crore if he shows even one lakh Bangladeshis and Pakistanis in Bhiwandi,” Mr Azmi said at a press conference in Mumbai.

Mr Azmi even displayed the Rs. two crore cheque on the occasion.

“I will quit politics if his charge is proved. If he fails, he will have to quit,” Mr Azmi said, accusing the MNS

chief of playing politics by fooling Marathi people.

“Raj has abused me. Even I can hurl abuse, but my tehzeeb doesn’t allow it,” Mr Azmi said. The MNS morcha was taken out in Mumbai on Tuesday without permission and police should act against the organisers, he said.

Mr Azmi congratulated Mumbai police commissioner Arup Patnaik for displaying “restraint” while tackling the August 11 violence at Azad Maidan.

“The drug mafia was behind that violence. The culprits joined the protest morcha later,” he said.

On Raj Thackeray displaying a purported Bangladeshi passport at the rally on Tuesday, Mr Azmi said: “The throwing of passport should be inquired into. It is a serious offence.”

“Raj Thackeray is against Dalits and Muslims. His Hindutva face has come to the fore,” Mr Azmi said.

மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

ஓகஸ்ட் 12, 2012

மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால்  மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.  அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.

  • காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
  • குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
  • பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
  • அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
  • அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.  அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு  CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8].  மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12].  இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].

ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!

உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?

[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]

© வேதபிரகாஷ்

12-08-2012


[1] A senior officer said the probe, given to the Crime Branch later in the evening, was zeroing in on a group that came from Nehru Nagar. “This group could not enter Azad Maidan, and there were reports that it was the first flashpoint,” the officer told TOI.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.

[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.

[5] As news of a minor scuffle outside reached the dais, the organisers decided to wrap up with a dua (seeking of divine blessings) led by Maulana Moin Ashraf Qadri of Madrassa Jamia Qadriya, Grant Road.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.

[7] Several newspersons, including photographers Shriram Vernekar and Prashant Nakwe from The Times of India, were beaten up and Vernekar’s camera was broken. Cops were singled out for specially violent treatment.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[13] Meanwhile, Raza Academy distanced itself from the violence. “While we were protesting at the ground, some people got aggressive and started behaving violently,” Mohammed Saeed, General Secretary of the academy, said. “We never encourage violence and strongly condemn such acts,” he added.

http://www.indianexpress.com/news/16-injured-as-antiassam-riot-protest-turns-ugly-in-mumbai/987080/2

[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.

[17] Farah Naqvi, Assam calls for a human response, The Hindu, August 6, 2012. http://www.thehindu.com/opinion/op-ed/article3731625.ece

[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.

“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.

http://www.thehindu.com/news/national/article3754980.ece