Posted tagged ‘ஃபரூக்’

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் “நான்தான் கடவுள்”…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்தது – இதெல்லாம் என்ன?

ஜூலை 1, 2020

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்ததுஇதெல்லாம் என்ன?

Allowing Friend to rape his wife, 29-06-2020-NewsTM

கொரோனா காலத்தில் பெண்கள் படும் பாடு: கொரோனா காலத்தில், ஆண்களை விட அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது, தொடர்ந்து பாதிக்கப் படுவது பெண்கள் தாம்.ஆண்கள் வேலைக்குப் போகாமல், வீட்டிலேயே அடைபட்ட நிலையில், சாப்பிட்டு-சாப்பிட்டு, டிவி-பேப்பெர் பார்த்து, மொபைல் இருந்தால் வம்பு பேசிக் கொண்டு, தூங்கி விழிப்பது தான் அவர்கள் வேலை என்றாகி விட்ட நிலையில், பெண்களுக்கு பாரம் இன்னும் அதிகமாகி விட்டது. காஷ்மீர் முதல் குமரி வரை, குஜராத் முதல் மேகாலயா வரை, எல்லா இடங்களிலும் பெண்கள் கஷ்டப் பட்டு உழைத்து வருகிறாற்கள். மற்ற மாநிலங்களிலிருந்து, அத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில், அதிகமாக, பாலியல் குற்றங்கள், கற்பழிப்புகள், அவற்றைச் சார்ந்த கொலைகள் என்றுதான், அதிகமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை, ஒரு சாதாரணமான நோக்கர் கூட கண்டு கொள்ளலாம். ஆகவே, இப்பிரச்சினை ஆய்வுக்குரியது. அதிலும், மதசார்ந்த விசயங்கள் எனும்போது, ஊடகங்கள், சொதப்பி, குழப்பி, பிறகு அப்படியே அமுக்கி விடுகிறது. இப்பொழுதைய திருச்சி-பாலியல் விவகாரமும் அப்படியே 2005லிருந்து 2020 வரை தொடர்ந்துள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD

2005ல் தினேஷ் பர்வீனை காதலித்து மணந்தது: திருச்சி கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம் (41). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் முகமது பாரூக் (41) கல்லூரி காலத்தில் இருந்து நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்[1]. இதில் தினேஷ் கடந்த 2005ம் ஆண்டு பர்வீன் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷை அவரது நண்பர் ஃபாரூக் இஸ்லாமியராக மாதம் மாற்றி, அவருக்கு முகமது அஸ்லாம் என பெயர் வைத்துள்ளார்[2]. இந்த நிலையில் பர்வீனை கடந்த 2008ம் ஆண்டு முகமது அஸ்லாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முகமது அஸ்லாமின் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது நண்பரான ஃபாரூக்கை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு உன் மனைவியிடம் தான் பிரச்சனை இருக்கிறது, அதனால் அவருக்கு நான் புனித நீர் கொடுக்கிறேன் என தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நீரில் மயக்க மருந்து கொடுத்து பர்வீனை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Allowing Friend to rape his wife, 29-06-2020

நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்ததுதினமலர் கொடுக்கும் செய்தி: திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்வீன், 32. இவர், ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய அஸ்லாம், 39, என்ற எம்.பி.ஏ., பட்டதாரியை, 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார். அஸ்லாமுக்கு மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்[3]. இதை நம்பிய அஸ்லாம், மனைவியிடமும், பாரூக்கை வணங்கும்படி கூறி வந்தார்[4]. இதை பயன்படுத்தி, புனித நீர் கொடுப்பதாக, மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து, பர்வீனை, பாரூக் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ‘சிரியா போருக்கு உதவ வேண்டும்; ஜிகாத்துக்கு உதவ வேண்டும்’ எனக் கூறி, பர்வீனிடம் இருந்து, 25 சவரன் நகையையும் பாரூக் வாங்கி, ஏமாற்றி விட்டார். பிறகு இது “லவ் ஜிஹாத்” போலிருக்கிறதே? பெண்களைத் தான் குறிவைத்தார்கள் என்றால், ஆண்களையும் குறிவைப்பது போலத் தெரிகிறது. அதாவது, இப்படி திருமணம் செய்து வைத்து, போதை ஏற்றி, மூளை சலவை செய்து, பிறகு சிரியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் போலும்!

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint

2008ல் போலீஸாரிடம் புகார் கொடுத்தது, நகைகளைத் திருப்பில் கொடுத்தது: மயக்கம் தெளிந்து தனக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்ட பர்வீன் இதுகுறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார்[5]. ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது[6]. உடனே மதபோதகர் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும், கணவரின் தங்கை எவரமிடமும் கூறி கதறி அழுதுள்ளார்[7]. ஆனால் இருவரும் ஃபாரூக் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் செய்ய வேண்டும் என பர்வீனிடம் கூறியுள்ளனர்[8]. மேலும் தனிமையில் இருந்தபோது மற்றும் நிர்வாணமாகவும் பர்வீனை மதபோதகர் ஃபாரூக் புகைப்படங்களை எடுத்துள்ளார்[9]. இந்த புகைப்படங்களை காட்டி பர்வீனிடம் 25 பவுன் தங்க நகைகளை ஃபாரூக் பறித்ததாக கூறப்படுகிறது[10]. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு பர்வீன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி மதபோதகர் ஃபாரூக்கை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஃபாரூக் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint-2

படங்களைக் காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்தது: இதனை அடுத்து அந்த புகைப்படங்களை காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்[11]. இந்த நிலையில் கடந்த வாரம் நண்பன் முகமது அஸ்லாமின் மூத்த மகளிடம் மதபோதகர் ஃபாரூக் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது[12]. இதனால் ஆத்திரமடைந்த பர்வீன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் ஃபாரூக், பர்வீனின் கணவர் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது அஸ்லாமின் சகோதரி எரம், மற்றும் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவை போலீசார் தேடி வருகின்றனர். நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they located

இஸ்லாமில் ஒருவன், தன்னை இறைதுாதர், கடவுள் என்று சொல்லிக் கொண்டது: செய்திகள் இப்படி இருக்கின்றன:

  1. அஸ்லாமுக்கு (தினேஷுக்கு) மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்.
  2. பர்வீனிடம் சென்று, “நான் தான் கடவுள்” என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 30-06-2020-News DM

இங்கு தான் ஏதோ பிரச்சினை, விவகாரம் மற்றும் மர்மம் உள்ளது. தினேஷை மதம் மாற்றி கல்யாணம் செய்து வைத்தான் எனும் போது, பாரூக் மசூதி, ஜமாத் முதலியவற்றுடன் நெருக்கமாக இருக்கிறான் என்று தெரிகிறது. அதனால், தான் 2008ல் புகார் கொடுத்தபோது, போலீஸார் கண்டுகொள்ளாமல், சமரசம் செய்து அனுப்பி விட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும், அதே பாணியில் நகைபரிப்பு என்று ஈடுபடுவது, நம்புகின்றதாக இல்லை. மேலும், பர்வீன் தனது மூத்த மகளையும் பாரூக் கற்பழிக்க முயல்கிறான் என்பது, விவகாரம் வேறு மாதிரி போகிறது. இஸ்லாத்தில், அவர்களுக்கு சாதகமாக, நிறைய விலக்குகள் இருக்கலாம். ஆனால், இந்திய சமூகத்தில், எல்லோரும் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. திராவிடத்துவத்தால், ஏற்கெனவே சமூகம் சீரழிந்துள்ளது. அது சினிமாவுடன் சேர்ந்து அதிகமாகியுள்ளது, இஸ்லாமும் சேரும் போது, பயமாக, பயங்கரமாக இருக்கிறது. மாற-மாற்ற-மாற்றப்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

30-06-2020

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they lived

[1] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், ‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால்பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..!, By Selvakumar | Jun 30, 2020 11:19 AM

[2] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/trichy-woman-sexually-abused-by-husbands-friend-9-years-arrested.html

[3] தினமலர், இளம்பெண் பலாத்காரம் மதபோதகர் கைது, Added : ஜூன் 29, 2020 22:49.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2567171

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நான்தான் கடவுள்“.. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்! By Hemavandhana | Published: Tuesday, June 30, 2020, 9:59 [IST].

[6] https://tamil.oneindia.com/news/trichirappalli/woman-raped-and-two-arrested-near-trichy-389856.html

[7] தினத்தந்தி, கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவர்மதுவுக்கு அடிமையானதால் விபரீதம், பதிவு : ஜூன் 29, 2020, 09:11 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/29211115/1471683/Trichy-Husband-Wife-Issue.vpf

[9] நியூஸ்.டி.எம்.தமிழ், நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்…, By Newstm Desk | Tue, 30 Jun 2020.

[10] https://newstm.in/tamilnadu/a-clergyman-who-sexually-abused-a-friends-wife-for-several/c77058-w2931-cid747710-s11189.htm

[11] விகடன், `புனித நீர் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்!’ மதபோதகரால் நண்பரின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை, எம்.திலீபன், தே.தீட்ஷித், Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM.

[12] https://www.vikatan.com/news/crime/trichy-police-arrested-man-in-sexual-harassment-case