Archive for the ‘ஹிஜ்புல் முஜாஹித்தீன்’ category

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

பிப்ரவரி 23, 2013

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

Afzal-Hyderabad-Kasab-nexus

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

Hyderabad blasts - locations with time

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்

தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

IED - cycle bombs placed - locations

ஐ.ஈ.டி. விவரங்கள்

கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது  உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

CCTV images pointing to the suspects

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?

கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

IM-email-2010-1

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்

மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

Blasts taken place 2006-2013

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Key players in the blasts

இவர்களை பிடிக்க முடியாதா?

வேதபிரகாஷ்

23-02-2013


[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.

[2]  Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[4] Mohammed Ahmed Siddibapa Mohammed Zarrar alias Yasin Bhatkal, who is said to be heading the operations of Indian Mujahideen in India, has dodged the bumbling intelligence agencies on at least three occasions. He was first arrested and jailed in Kolkata’s Alipore jail between December 2009 and February 2010 in a case of fake currency seizure.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2283048/Indian-Mujahideen-head-jailed-2009-got-bail-cops-did-know-terror-links.html#ixzz2LjIERYiR

[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.

[6] India is one of the most vocal supporters of continued engagement and has given Afghanistan more than $2 billion since the US-led invasion in 2001 overthrew the Taliban regime, which sheltered virulently anti-Indian militants.

http://www.infowars.com/india-fears-for-afghanistan-after-nato-withdrawal/

[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.

[10] Once NATO forces pull out, several splinter groups will try to take over control of the troubled nation and this could lead to immense instability in the region, which could be fatal to India.

http://www.rediff.com/news/report/natos-afghan-pull-out-may-prove-costly-for-india/20121015.htm

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

பிப்ரவரி 13, 2013

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

Photo0647

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

Kashmir Door to Teach India a Lesson - Hafiz Saeed

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.

“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?

காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.

நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.

 காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.

 மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை.  அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

 JKLF meeting at Islamabad

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guru

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

Mixed reactions- while people protested in Kashmir, others elsewhere in India celebrated

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!

பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

வேதபிரகாஷ்

11-02-2013


[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.

Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”

[3] “Indian administered Kashmir”, “India Occupied Kashmir”, Indian Held Kashmir (IHK) என்றுதான் பாகிஸ்தானிய மற்றும் காஷ்மீர முஸ்லீம்கள், ஊடகவாதிகள் கூறி-எழுதி வருகின்றனர்.

http://dawn.com/2013/02/11/at-least-two-dead-in-indian-administered-kashmir/

[6] On Sunday afternoon, Mr. Saeed reached the venue of Mr. Malik’s hunger strike and the two met briefly.

http://www.thehindu.com/news/national/centre-probing-yasin-maliks-alleged-passport-violations/article4407896.ece

[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.

[12] Commenting on the execution of Kashmiri leader Afzal Guru by India, Pakistan on Monday reaffirmed its solidarity with the people of Jammu and Kashmir and expressed serious concern on high-handedness of the Indian government with Kashmiris.

http://paktribune.com/news/Pakistan-voices-concern-on-Indias-treatment-of-Kashmiris-257326.html

பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!

மே 20, 2011

பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!

தவறான பட்டியல் கொடுத்த சிதம்பரம்: சிதம்பரத்தின் கையாலாகத்தன்மை, திறமையின்மை, நிலையில்லாத்தன்மை முதலிய குணாதிசயங்கள் மறுபடியும் வெளிப்பட்டுள்ளன. வெட்கமில்லாமல், இதில் நடந்ததற்கு பொறுபேற்கிறேன் என்று வேறு பேசியுள்ளார். அமெரிக்கா ஒசாமா பின் லேடனை கொன்ற பிறகு, ஏதோ வீரம் வந்துவிடது போல, தேவை ஏற்பட்டால், 26/11 போன்ற தாக்குதல் நடப்பதேயானால், இந்தியா தகுந்த பதிலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்திய மக்கள் எதிர்பார்ப்பதாக, சிதம்பரம் சொல்லியிருக்கிறார்! அதற்குள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி தாங்கள் இந்தியாவிலுள்ள சில முக்கியமான இடங்களை தாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அதற்கான ஒத்திகையும் நடந்டேறிவிட்டது என்றும் அறிவித்தார். வழக்கம் போல, மற்ற தீவிரவாதிகள் கூட்டம் போட்டு இந்தியாவிற்கு எதிராகக் கத்தித் தீர்துள்ளன,

தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் கான் பெயர் சேர்க்கப்பட்டது தவறுதான்: ப.சிதம்பரம்[1]புதுதில்லி, மே 18, 2011: பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் வாசூல் கமார் கானின் பெயரைச் சேர்த்த்து தவறு என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.   மும்பை போலீஸôர் செய்த தவறும் ஐ.பி. உளவுப் அமைப்பின் கவனக் குறைவுமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.

இந்தப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய வாசூல் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.  ஆனால், கானை மும்பை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்ததாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரது பேட்டியும் பத்திரிகையில் வெளியானது.

இந்தியாவுக்குள் வசிக்கும் ஒருவரது பெயர் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானதால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பாகிஸ்தாவுடனான இந்தியாவின் அரசு ரீதியான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியது:

இந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். மும்பை போலீஸார் செய்த தவறும் ஐ.பி. அதிகாரிகளின் கவனக்குறைவுமே கான் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றதற்குக் காரணம்.  கான் கைது செய்யப்பட்டது குறித்து இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.பி. அலுவலகத்துக்கு மும்பை போலீஸôர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஆனால் மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட தேடப்படுவோர் பட்டியலில் இந்த விவரம் சரிபார்க்கப்படவில்லை.

கடந்த ஆண்டு மே 21-ம் தேதி கான் கைது செய்யப்பட்ட விவரம் முறையாகத் தெரிவிக்கப்படாததால் சிபிஐ அமைப்பால் தேடப்படுவோர் பட்டியலிலும் கான் பெயர் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.  இப்போது சிபிஐ முதல் இன்டர்போல் வரை அனைத்து அமைப்புகளுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் ப.சிதம்பரம்.

சிபிஐ பட்டியலில் கான் பெயர் நீக்கம்: இதனிடையே சிபிஐ அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சிபிஐ இணையதளத்திலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.  கடந்த மே மாதமே மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவும், மும்பை போலீஸôரும் கானை கைது செய்த நிலையில், அந்தத் தகவல் சிபிஐக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், கானுக்கு எதிராக சிபிஐ கைது உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதாகத் தெரிய வந்திருப்பதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.  இந்தத் தவறு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவிலேயே உள்ளனர்: இதற்குள் வீராப்புடன், மிகவும் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் 40 பேர்களைக் கொண்ட ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள பிரோஸ் அப்துல் ரஸீத் கான் (Feroz Rashid Rashid Khan ) வயது 51, என்பவன் ஏற்கெனவே ஆர்தர் ரோடு ஜெயிலில் உள்ளான் என்று தெரிய வந்துள்ளது[2]. இவன் 1993 மும்பை வெடிகுண்டு வழக்கிற்காக கைது செய்யப் பட்டான். சி.பி.ஐ இந்த தவறை ஒப்புக்கொண்டது. உள்துறை அப்பட்டியிலில் அவனது பெயரை நீக்க மறந்து விட்டதாக உள்துறை எழுதியுள்ளதாகவும் ஓம்கார் கேடியா என்ற சி.பி.ஐ தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

இதற்கு முன் வஜுல் கமர் கான் என்ற பெயர் பட்டியிலில் இருந்தபோது, அவன் ஏற்கெனெவே பிணையில் விடுதலையாகி தானேவில் சுதந்திரமாக திரிந்து வருவதாகத் தெரிந்தது. இவன் 2003ல் வில்லி-பார்லே மற்றும் காட்கோபர் மற்றும் 2002ல் மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தகுண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்டான். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதற்காக, பிணையில் வெளியே விடப்பட்டான்.

இது ஒரு தவறு, அவ்வளவேதான்! இத்தவறுகளை உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டாலும், கொடுத்த பட்டியலை திரும்பப் பெறமுடியாது என்று கூறியுள்ளது[3]. உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ, எம்.எச்.ஏ முதலிய நிறுவனங்கள் ஒன்றையொன்று குற்றாஞ்சாட்டிக் கொள்வது, நாட்டின் மதிப்பையே குறைப்பதாக/குளைப்பதாக உள்ளது. பலநிலைகளில் இந்த பட்டியல் சரிபார்க்கப் பட்டு, பற்பல அதிகாரிகளால் சரி பார்க்கப் பட்டு, பின்னரே உள்துறை அமைச்சரிடம் வருகிறது, அவர் கையெழுத்திடுகிறார்[4]. ஆனால், இப்படி உடம்பின் ஒரு அங்கம் மற்றதின் மீது குற்றஞ்சொல்வது போல, இந்த அமைப்புகள் நடந்து கொள்வது படு கேவலமாக இருக்கிறது. சிதம்பரம் இம்முறை “தவறை” ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றாலும், மற்ற துறைகளை சாடியுள்ளார்[5]. இத்தவறுக்கானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்[6].

பாகிஸ்தான் மற்றும் இதர ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன: பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை சாடியுள்ளது. பொய் பட்டியல் கொடுத்து ஒசாமா கொலை விஷ்யத்தை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது என்று தலைப்பிட்டு, திட்டித் தீர்த்துள்ளன[7] (Indian Fake List & Desire of Cashing OBL Killing Thursday May 19, 2011 (1440 PST). குற்ற்ப்பத்திரிக்கைக் கூட போடாமல், ஓடி மறைந்துள்ள தீவிரவாதிகள் என்று கூறும் இந்தியாவை நக்கல் அடித்துள்ளன[8]. பி.பி.சி போன்ற அயல்நாட்டு ஊடகங்களும் கேலி செய்துள்ளன[9]. “காணாமல் போன தீவிரவாதியை இந்தியா மும்பையில் கண்டு பிடித்துள்ளது”, என்று பி.பி.சி கிண்டலடித்துள்ளது. இன்கிலாந்து டெலிகிராப் நாளிதழ் கூறுவது, “தப்பியோடி பாகிஸ்தானில் ஒளிந்துள்ளதாக கூறப்பட்ட குற்றாவாளி தாயுடன் வாழ்ந்து வருதாக தெரிந்தவுடன் இந்திய அதிகாரிகளின் முகங்கள் சிவந்துவிட்டன” (Indian officials red-faced after ‘most-wanted’ fugitive found living at home with mother)[10].
வேதபிரகாஷ்

20-05-2011


சையது அலி ஷா கிலானி, சூஸன்னா அருந்ததி ராய் இவர்களுக்குள்ள தொடர்பு என்ன?

ஒக்ரோபர் 31, 2010

சையது அலி ஷா கிலானி, சூஸன்னா அருந்ததி ராய் இவர்களுக்குள்ள தொடர்பு என்ன?

மாநாடுகள் / கருத்தரங்கங்கள் பெயரில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் கூட்டங்கள்: காஷ்மீர் பிரச்சினையை பிரபலப்படுத்த பல பாகிஸ்தானிய ஆதரவு கூட்டங்கள் செயல் பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, ஆகஸ்ட் 28-30, 2010 தேதிகளில் பாங்காக்கில் சாயோப்ரயா பாதை-2 (Chaopraya Track II dialogue) என்ற உரையாடல் கூட்டம் நடந்தது. பாகிஸ்தானிய ஜின்னா மன்றம் மற்றும் இந்தியாவின்  அமைதி மற்றும் மோதல்கள் பற்றி ஆராயும் கழகம் பங்கு கொண்டன[1]. பாகிஸ்தான் தரப்பில் ஷெரி ரெஹ்மான், முந்தைய அமைச்சர் மற்றும் இந்திய தரப்பில் தீபாங்கர் பானர்ஜி, ராணுவ அதிகாரி (ஓய்வு) தலைமை வகித்தனர். வழக்கம் போல இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரசினையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் பேசினர்[2]. இதனால் பாகிஸ்தான் விளம்பரம் பெறுகிறதே தவிர, இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை. ஆனால், கடந்த வாரம் 21-10-2010 அன்று தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் நடந்த கருத்தரங்கம் திட்டமிட்டு இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்ததுதான்[3].

Susanna-geelaani-2010

Susanna-geelaani-2010

ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங் என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[4]. நக்ஸல் / மாவோயிஸ்ட் சித்தாந்தி வராவர ராவ் என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெரிகிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. “பார்லிமென்ட் அட்டாக்” புகஷ் ஏஸ்.எ. ஆர்.கிலானி, மற்ற பிரிவினைவாத கோஷ்டிகளும் கலந்து கொண்டன. வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்.

Arundhati-Roy-SAR.Jilani-2010

Arundhati-Roy-SAR.Jilani-2010

அருந்ததி ராய் ஜிஹாதிகளை ஆதரித்து பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[5]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[6]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[7]. இப்பொழுதும் வழக்கு இல்லை[8] என்று முடிவு செய்து விட்டனர்!

சூஸன்னா அருந்ததி

சூஸன்னா அருந்ததி

அருந்ததி ராயும், ஜிஹாதி அமைப்புகளும்: சினிமாவில் தோல்வி என்றதும் “பொதுநல போரட்டம்” என்ற ரீதியில் “நர்மதா பிரச்சினை”யை எடுத்துக் கொண்டார். அப்பொழுது மெஹ்தா பட்கரை ஓரங்கட்டி தான் பிரபலமாக வேண்டும் என்று திட்டம் பொட்டதும் எடுபடவில்லை. குறிப்பாக நர்மதா அந்தோலனில் முக்குடைப்பட்டதால், அருந்ததி ராய் ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பேசி புகழ் பெற வேண்டும் என்று செயல்படுவதாகத் தெரிகிறது. 2002ற்கு பிறகு, இவர் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பேசுவது நோக்கத்தக்கது. குறிப்பாக உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தில் தண்டனை வழங்கி சிறையிலடைத்ததும், இந்திய அரசின் மீது தாளாத ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதனை தேசவிரோதமாக செய்து வருவதும் தெரிகிறது[9].

திஹார் சிறைவாசமும், மூக்குடைப்பும்: மார்ச் 2005ல் அருந்ததி ராய் எவ்வலவு சொல்லியும் கேட்காமல் அடாவடித்தனம் செய்ததால், உச்சநீதி மன்றம் கடுமையாக சாடி, மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது[10]. ஆனால், ஒருநாள் சிறையில் இருந்து ரூ.2,000/- அபராதம் கட்டி வெளியே வந்தார். இருப்பினும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை, மறுபடியும் கன்னாப்பின்னா என்று பேசினார்[11]. தனது ஆதிக்கம், முதலியனவால் தன்னை யாரும் ஒன்றும் செய்து முடியாது என்ற திமிரில் இருந்தது எடுபடவில்லை. ஆகஸ்ட் 2005லும், “இந்திய ராணுவம் சுதந்திரம் மற்றும் அமைதி என்ற போர்வையில் காஷ்மீர மக்களை வதைத்து வருகிறது…………இந்தியாவின் காஷ்மீர ஆக்கிரமிப்பு சிலியின் பினோசெட் என்பவனைவிட அதிகமாகிவிட்டது……………ஊடகங்கள் இதை எடுத்துக் காட்டுவதில்லை”, என்று பேசினார்[12]. கத்துவது, சண்டை போடுவது எடுபடாது என்றவுடன் தனது “மேனரிஸ”த்தை மாற்றிக் கொண்டார். அதாவது தலையை ஆட்டுவது, சிரிப்பது, கவர்ச்சியாக ஆடை அணிந்து கொள்வது போன்ற நிலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேந்தும்ம் என்ற முறையைக் கையாண்டு வருகிறார்.

ஹுரியத்-தீவிரவாதிகள் தொடர்பு என்றெல்லாம் சம்பந்தப்படும் நிலையில் அருந்ததி ராய் ஆகஸ்ட்,2008ல் பேசியது: காஷ்மீரத்திற்கு இந்தியாவிலிருந்து விடுதலை தேவைப்படுகிறது என்று பேசினார்[13]. “இன்று காஷ்மீர மக்கள் திரண்டுள்ளது, அவர்கள் தங்களை பிரதிநிதிக்களாக உறுதி செய்து விட்டனர் என்றே தெரிகிறது. ஆக வேறு யாரும், அவர்களுக்காக பரிந்துரை செய்யவேண்டியதில்லை. எப்படி காஷ்மீரத்திற்கு இந்தியாவிலிருந்து விடுதலை தேவைப்படுகிறதோ, அதேமாதிரி இந்தியாவிற்கும் காஷ்மீரத்திலிருந்து விடுதலைத்தேவைப் படுகிறது”, என்று பேசியது வியப்பாக இருந்தது!

சையது அலி ஷா கிலானி அப்துல் கனி லோன் கொலையில் சம்பந்தம்: அப்துல் கனி லோன் என்பவர் “மக்கள் மாநாடு” என்ற இயக்கத்தின் தலைவராக இருந்தபோது, 22-05-2002ல் அவர் அடையாளம் தெரியாத தீவவரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார்[14]. அப்பொழுது, அவரது மகன் சஜ்ஜத் கனி லோன், சையது அலி ஷா கிலானி தான் தனது தந்தை கொல்லப்படுவதற்காக சதி செய்தார் என்று குற்றம் சாட்டினார்[15]. 2003ல் தேர்தலின்போது தேர்தலை சிர்குலைக்க பல வழிகளை கிலானி கடைப்பிடித்தார். தொகுதிகளில் பலரை நிறுவி குழப்பத்தை உண்டாக்கினார்.

குடும்பமே பிரிவினை-தீவிரவாதங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது: ஜூலை 8, 2002ல் இவரும், இவரது மறுமகன் அட்லஃப் ஃபன்டூஸ் (Altaf Fantoosh) என்பவனும் ஐ.எஸ்.ஐ இடமிருந்து ஹவாலா முறையில் பணம்[16] பெற்று அவற்றை பயங்கரவாத-திவிரவாத அமைப்புகளுக்குப் பட்டுவாடா செய்வது கண்டு பிடிக்கப்பட்டதால், பொடாவில் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கன்டிலிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தியபோது, கணக்கில் இல்லாத பல லட்ச ரூபாய் பணம், இரண்டு கணிணிகள், அதில் தீவிரவாதிகளின் பட்டியல் மற்றும் ஏராளமான பிரிவினைவாத, ஜிஹாதி பிரச்சார பிரசுரங்கள் முதலியன கைப்பற்ரப்பட்டது. ஜூன் 10,2002ல் அவரது இன்னுமொரு மறுமகன் இஃப்திகார் கிலானி (Iftikhar Geelani) கைது செய்யப்பட்டான். அவனது தில்லி இல்லைத்தில் இருந்த கணிணிலியில் ஜம்மு-காஷ்மீரத்தில் இருக்கும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எங்கு நிறுத்தப் பட்டுள்ளனர் பற்றிய விவரங்கள் இருந்தன. இதனால் அரசாங்க ரகசிய சட்டத்தின் (Official Secrets Act) சரத்துகளை மீறியதற்காக வழக்குத் தொடரப்பட்டது. துக்ரான்-ஏ-மிலத் என்ற அமைப்பை நடத்தி வரும் பெண் தீவிரவாதியான ஆயிஷா இந்திரா பீ மீதும் போடோவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகமும் சோதனையிடப்பட்டது. ஆனால், அவர் போலீசாரிடம்சிக்கவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். இவருக்கு சொந்தமான கடைகளிலும் ரெய்ட் நடந்தது[17].

ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஐ.எஸ்.ஐ மற்ற தொடர்புகள்: இம்தியாஜ் பஜாஜ் (Imtiyaz Bazaz) என்ற காஷ்மீர பத்திரிக்கையாளரை கைது செய்தபோது,  உலக காஷ்மீர் விடுதலை இயக்கம் (World Kashmir Freedom Movement) என்ற இங்கிலாந்திலிருந்து செயல்படும் நிறுவனத்திலிருந்து எப்படி அயூப் தாகூர் (Ayub Thukar) மூலம் பணம் வருகிறது என்ற தகவல்கள் வெளிவந்தன. இம்தியாஜின் வாக்குமூலம் மற்ற ஆவணங்கள் பாகிஸ்தான் அக்கிரமிரப்பில் உள்ள காஷ்மீர் பகுதியிலிருந்து இயங்கிவரும் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவன் சையது சலாஹுத்தீன் எப்படி அயூப் தாகூர் மற்றும் கிலானி வழியாக தனது தளபதிகளுக்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. சையது அலி ஷா கிலானி 1933ல் பிறந்தவர், ஆசிரியராக பனியைத் துவங்கியவர், ஜமாத்-இ-இஸ்லாமியின் தீவிர உழைப்பாளியாக இருந்தார். 1972, 1977  மற்று, 1987 மூன்று முறை எம்.எல்,ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 1987ல் பிரிவினைவாத கும்பலுடன் சேர்ந்தார்.

2002ல் துபாய் மாநாடு, கிலானி-லோனே வேற்றுமை- லோனேயின் கொலை; ஏப்ரல் 2002ல் உமர் ஃபரூக் மற்றும் லோனே, துபாயில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது வெறுப்படைந்தார். அதுமட்டுமல்லாது, தில்லியுடன் நடக்கும் எல்லா அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தையும் எதிர்த்து செயல்பட்டுவந்தார்[18]. அப்துல் கனி லோனெ என்பவர் “மக்கள் மாநாடு” என்ற இயக்கத்தின் தலைவராக இருந்தபோது, 22-05-2002ல் அவர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார். அப்பொழுது, அவரது மகன் சஜ்ஜத் கனி லோனெ, சையது அலி ஷா கிலானி தான் தனது தந்தை கொல்லப்படுவதற்காக சதி செய்தார் என்று குற்றம் சாட்டினார்[19]. லோனின் இறப்பிற்குப் பிறகுதான், கிலானி பிரபலமடைந்தார். அதே காலகட்டத்தில் தான், அருந்ததியும் ஜிஹாதி ஆதரவாக பேச ஆரம்பித்தார்.

அமெரிக்கா அருந்ததி ராயை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறதா? அமெரிக்காவிற்கு ஏற்கெனெவே ஒரு ஜிலானியால் ஏகப்பட்ட பிரச்சினையுள்ளது – அவன் தான் – டேவிட் கோல்மென் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானி. அமெரிக்கனான இவன் பல ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தது முதலிய விவரங்கள் வெளிவருவது, அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லை[20]. பல சமீபத்தில் கூட, அமெரிக்காவிற்கு மும்பை தாக்குதல் தெரிந்திருந்தும் சமயத்தில் சொல்லவில்லை, முன்னமே சொல்லியிருந்தால் 26/11ஐத் தடுத்திருக்கலாம், என்றெல்லாம் பேச்சு எழுந்தது, அமெரிக்காவிற்கு சங்கடமாகியது. மேலும், அவன் அமெரிக்காவில் இருந்திருக்கிறான், அமெரிக்காவின் ஏஜென்டாவாகவும் செயல்பட்டிருக்கிறான்[21]. அவன் இந்தியாவில் அமெரிக்கப் பெயரை, பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டுதான் வேவு பார்த்து சென்றுள்ளான். இதையெல்லாம், அமெரிக்காவால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், முந்தைய குண்டு வெடிப்புகளில் (அஹமதாபாத் ஆகஸ்ட் 2008), இந்திய முஜாஹித்தீனிற்கு ஈ-மெயில் அனுப்ப, ஒரு அமெரிக்க கிருத்துவ பாதிரி மும்பையிலிருந்து உதவியுள்ளான்[22]. செய்து அறிந்ததும், அவனை அப்படியே அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது[23]. இதற்கெல்லாம் சோனியாதான் உதவியுள்ளார்[24]. அதே மாதிரி கத்தோலிக்கக் கிருத்துவராக உள்ள சூஸன்னா அருந்ததி ராயிற்கு சோனியா உதவுகிறார் என்றால் மிகையாகாது. மேலும், அமெரிக்க ஜிஹாதிகளைப் பற்றி அமெரிக்கா அடக்கி வாசிக்க முயல்கிறது.

வேதபிரகாஷ்

© 31-10-2010

 


 

[3] வேதபிரகாஷ், சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!, http://secularsim.wordpress.com/2010/10/23/354/

வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கல் எழுப்பினர்!,

[5] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.

[6] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.

[7] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:

http://www.global-sisterhood-network.org/content/view/2178/59/

[8] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!, http://secularsim.wordpress.com/2010/10/29/upa-soft-corner-towards-susanna-arundhati/

………………….., தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!, http://secularsim.wordpress.com/2010/10/29/no-action-against-arundhati-and-geelani/

[9] இவரது வாழ்க்கை ஆரம்பகாலத்திலிருந்தே பல விருப்பு-வெறுப்புகளுக்கு உட்பட்டிருந்ததாலும், பெற்றோரை மதிக்காமல், தனியாக இருந்து “மண்டை கர்வம்” ஜாஸ்தி என்பதனால், யாருடனும் ஒத்துப் போகாமல், திருமண வாழ்க்கைகளிலும் தோல்வியடைந்து, சினிமாவில் அடிபட்டு…………………, எல்லொருடனும் சண்டை போட்டு, பிறகு இந்திய-எதிர்ப்பு மனப்பாங்கில் செயல்பட்டுவருகிறார்.

[10] The Supreme Court however in March 2005 convicted[10] Arundathi Roy, the Booker Prize winner, for having “committed criminal contempt of this court by scandalising its authority with mala fide intentions” and sentenced her to a “symbolic imprisonment” for one day and pay a fine of Rs. 2,000; in default, to undergo a simple imprisonment for three months.

[11] After paying the fine and spending day in the jail, she passed arrogant remarks again[11]. For more details, see the site: http://www.narmada.org/sc.contempt/, as ii contains all details.

[12] In 2005, she criticised (Aug 31, 2005) the Indian media for failing to highlight the plight of the ordinary Kashmiris, who she said were being tormented and brutalised by security forces every day in the name of freedom and peace. After uttering many things, she declared[12], “Indian occupation in Jammu and Kashmir has surpassed the excesses of Pinochet in Chile.”

[13] “Kashmir needs freedom from India” declared Arundhati Roy[13]. After talking about “history” in her own way,  Roy concluded with words, “India needs azadi from Kashmir as much as Kashmir needs azadi from India.”

[15] Mukhtar Ahmad, Geelani abetted Abdul Gani Lone’s assassination: Sajjad Lone, July 08, 2003 20:47 IST http://ia.rediff.com/news/2003/jul/08jk.htm

[16]வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, http://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[19] Mukhtar Ahmad, Geelani abetted Abdul Gani Lone’s assassination: Sajjad Lone, July 08, 2003 20:47 IST http://ia.rediff.com/news/2003/jul/08jk.htm

[21] எனது முந்தைய பதிவுகளைப் பார்க்கவும்.

[22] Ken Haywood, the American national, from whose computer the Indian Mujahideen e-mail has generated just minutes before the blasts, said that he was completely innocent and cooperating fully with investigative agencies.

[23] Zeenews bureau, Ken Haywood’s exit facilitated by US Embassy: Reports, Tuesday, August 19, 2008, http://www.zeenews.com/news463028.html

Ahmedabad, Aug 19: A day after US national Ken Haywood fled India, even after a lookout notice against him; reports now suggest that his exit was facilitated by the US Embassy in Delhi. Meanwhile, US Embassy have denied any such involvement in Haywood’s exit. Sources claimed on Tuesday that US Embassy officials had closed a door meeting with Intelligence officials following which Haywood’s exit became a reality. However, there are also reports that Haywood has assured that he would be ready to join the investigations at a later stage of the probe if required.  He left by Jet Airways flight JW-230 to New York via Brussels on Sunday. Haywood was not stopped from boarding the flight to US as he had appropriate documents. The glaring question remained that why his passport was not seized after his name figured in the investigations.

The Mumbai ATS, which was investigating his any possible role in the blasts threat mail that was sent from an email account IP address traced to Haywood’s wi-fi computer connection, at his residence in Navi Mumbai, are also under the scanner as to how could he simple slip away when the investigations into the Ahmedabad blast are far from over. Moreover, ATS is also under scanner as Haywood had planned his trip well in advance yet the premiere investigating agency was unaware of his moves. Haywood had reportedly left Mumbai for Delhi soon after the press conference of Ahmedabad Police – who claimed to have cracked the case. When asked to comment on Haywood fleeing the country, the red-faced ATS only said that their efforts at contacting Haywood were not fruitful for the last 2-3 days. There is a meeting in Mumbai where top police officers are mulling over the incident.

Haywood underwent a lie-detector and brain-mapping test along with eight others from Navi Mumbai, including some residents of Sanpada’s Gunina building, on August 14.  Haywood had said his computer could have been hacked and volunteered for the advanced tests when informed about it, the ATS added.  He had earlier alleged that an ATS officer had asked for bribe to let him go scot free in the case. However, the ATS is awaiting the examination report of the Internet router and the final reports on both (the computers and router) is expected to be ready in the next few days. In the email sent to media organisations minutes before the synchronised terror attacks in Ahmedabad, an outfit calling itself the Indian Mujahideen had warned: “The Indian Mujahideen strike again! Do whatever you can, within five minutes from now, feel the terror of death!”  Haywood works as a general manager with the Navi Mumbai operations of a US-based company, Campbell White, which also has a branch in Bangalore. He has been posted to India for a four-year period of which Haywood, a specialist in executive soft skills, has completed a year. He has also been pastor at a church in Arizona, US.