ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே சொன்ன விவரங்கள்[1]: தர்ம ஜாக்ரண் மஞ்ச் என்ற பஜ்ரங் தள் அமைப்பின் பிரிவு, “கர் வாபஸி” (வீட்டுக்குத் திரும்ப வருதல்) என்ற நிகழ்சி மூலம், சுமார் 60 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்றியுள்ளதாக செய்திகள் புகைப்படங்கள், வீடியோக்களுடன் வெளிவந்தன. அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், பணம் எல்லாம் கொடுக்கப் பட்டது என்றும் கூறப்படுகின்றது[2]. எகனாமிக்ஸ் டைம்ஸ், “ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது”, என்று வெளிப்படையாக செய்தியை வெளியிட்டுள்ளது[3]. “அலிகர் இதற்காகப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது இந்துக்களுக்கு அந்நகரத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ராஜபுத் வீரர்களால் கட்டப்பட்டது அந்நகரம், அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு கட்டப் பட்டுள்ள முஸ்லிம்களின் நிறுவனங்கள் தாம் இப்பொழுதுள்ளன. கிருஸ்துமஸ் தினம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது, ஏனெனில், அது பரீட்சை செய்து / சோதித்து பார்க்கும் தினமாக அமையும். அலிகர், பூலத்சர், ஹத்ராஸ் போன்ற சேரிக்களில் வாழும் முஸ்லிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 4,000 கிருத்துவர்களும் வால்மீகி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 1,000 முஸ்லிம் குடும்பங்கள் தாகூர் மற்றும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்”, என்றெல்லாம் ராஜேஸ்வர் சிங் என்ற [RSS regional pracharak Rajeshwar Singh ] ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே அவ்வாறு சொல்லியுள்ளதாக வெளியிட்டுள்ளது. வெளிந்சாட்டு ஊடகங்களும் இதை வெளியிட்டுள்ளன[4]. ரீயூட்ட்ர்ஸ் இந்தியா [Reuters India], இலவச உணவு கொடுக்கப் படும் என்றுகூட வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்று சேர்த்துள்ளது. அதாவது, முன்பெல்லாம் பால் பவுடர், ரொட்டி போன்ற உணவு கொடுத்து கிருத்துவர்கள் இந்துக்களை மதமாற்றினார்கள் என்று சொல்வதுண்டு, அதனால், அப்படி நக்கலாக அதையும் சேர்த்துள்ளது போலும்! சத்தீஸ்கரில் இந்துத்வா கிருத்துவர்களை மாற்ற முயற்சிக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன[5].

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!
வெளிப்படையாக சொல்லி செய்யும் முட்டாள்களா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள்?: இதெல்லாம் முந்தைய “தெஹல்கா”வின் குத்தும் ஆபரேஷன் செய்திகள் (Sting operation news) போன்றுள்ளது. குஜராத் கலவரங்கள் விவகாரங்கள் விசயத்தில் தெஹல்கா மற்றும் என்டிடிவி தொடர்ந்து சில காட்சிகளை பிரச்சாரரீதியில் நாள் முழுவதும் காட்டிக் கொண்டிருந்தது, பிறகு, அவையெல்லாமே வெட்டி-ஒட்டி செய்யப் பட்ட டேப்புகள் என்று தெரியவந்தது. ஆகவே, அந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் அப்படிபட்ட முட்டாளாஹைவ்வாறு டமாரம் அடித்து சொல்வதற்கு, என்று தெரியவில்லை. பொதுவாக, சில இந்துத்துவவாதிகள் விசயமே இல்லாமல் இருந்தாலும், தாங்கள் எதையோ சாதித்து விடுவோம், இல்லை சாதித்து விட்டோல் என்பது போல பேசித் தம்பட்டம் அடித்துக் கொள்வர். அம்மாதிரியாக இவர் பேசினாரா அல்லது உண்மையிலேயே அத்தகைய திட்டம் உள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இல்லை அந்த நாளிதழின் பேட்டியாளர் சொன்னதைத் திரித்து செய்தியாக வெளியிட்டுளாரா? நாளைக்கு ராஜேஸ்வர் சிங் தான் அவ்வாறு சொல்லவில்லை என்றுதான் கூறப்போகிறார்.

Members from Bajrang Dal and VHP hold a trident during a protest in New Delhi – ரியூட்டர் இப்படத்தை இந்த செய்திக்குப் போட்டுள்ளது!
லோக்சபா–ராஜ்ய சபாக்களில் எதிர்கட்சிகள் அமளி: ஆக்ராவில் உள்ள முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன[6]. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் வாழுபவர்களுக்கான பிபிஎல் (BPL) ( ஏழை) அட்டை தருவதாக கூறி பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், கட்டாயப்படுத்தப்பட்டு தாங்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்[7]. மாநிலங்களவையில் நேற்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். அக்குடும்பத்தினர் கொடுத்துள்ளத் தகவல்களின் படி, கடந்த நான்கைந்து மாதங்களாக, அவ்வியக்கத்தினர் தங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும், தாங்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால், நிதியுதவி கிடைக்கும் என்ற காரணங்களுக்காக மதமாற ஒப்புக் கொண்டதாகவும் கூறியதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன[8].

An Indian Hindu sadhu holds a trident during a protest in New Delhi – ரியூட்டர் இப்படத்தை இச்செதிக்குப் போட்டுள்ளது!
மாயாவதி நேரிடையாக ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றஞ்சாட்டியது: மாயாவதி, ‘‘ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்கள் 100 பேரிடம் ஆசைவார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும் இந்துவாக மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான பஜ்ரங்தள் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் முக்கிய பிரச்னை. அரசியலமைப்பு சட்டத்தில் மதச் சுதந்திரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தையும் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. ஆக்ரா சம்பவத்துக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்[9]. மாயாவதி தொடர்ந்தார், “மதமாற்றம் செய்துகொள்ள ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதேபோல அலிகாரிலும் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப் பெரிய மத மோதல்களும் கலவரங்கள் ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர் அளிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார்.

Members of the Muslim community stage a protest against alleged forced conversion of 300 people, in Agra on Wednesday Raju Tomar- HT Photo
இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான் – கம்யூனிஸ்டுகள் உறுதி: இந்நிலையில் மாயாவதியின் கருத்தை காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர். இது தொடர்பாக காங்கிரûஸச் சேர்ந்த ஆனந்த் சர்மா கூறுகையில், “சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்[10]. இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இது சட்டம், ஒழுங்கு பிரச்னை என்பதால், இதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் எதுவும் செய்ய முடியாது. இச்சம்பவத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் பெயர் இழுக்கப்படுகிறது. இதை அவை குறிப்பில் இருந்து, அவைத் தலைவர் நீக்க வேண்டும்’’ என்றார்[11]. இதே பிரச்னை குறித்து விவாதிக்க மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுல்தான் அகமது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்[12]. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்களான டி.ராஜா, யச்சூரி முதலியோர், இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான். கிருஸ்துமஸுக்கு முன்னால், ஓட்டுவங்கி அரசியலுக்காக இப்பிரச்சினையைக் கிளப்புகிறது, என்றெல்லாம் பேசினர்[13].
“தர்ம கஜாக்ரண் மஞ்ச்” என்ற இயக்கத்தின் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு வழக்குப் பதிவு[14]: “தர்ம கஜாக்ரண் மஞ்ச்” [ Dharma Jagran Manch] என்ற இயக்கம் மற்றும் அதன் உபியின் தலைவர் கிஷோ மீது சதர் பஜார் போலீஸார் மக்கள் பிரிவுகளுக்குள் விரோதத்தை உண்டாக்குவது, மோசடி செய்வது போன்ற, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளில் [Police registered cases under Section 153 (A) (promoting enmity between different groups) and Section 415 (using fraudulent means) of the IPC.] எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது[15]. இந்தியாவில் மதமாற்றம் குற்றமாகுமா என்ற சர்ச்சையும் உள்ளது, ஏனெனில், கிருத்துவ இயக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே, மதமாற்றம் தங்களது உரிமை என்றும் அதற்கு அரசியல் நிர்ணயச் சட்டத்திலும் இடமுள்ளது என்று வாதிட்டு வருகின்றது. மேலும்ம் இங்கு இந்துபெயரில் உள்ள இயக்கங்கள் எல்லாமே, ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரைக் குத்தப் படுகிறது, சங்கப்பரிவார் என்று பேசப்படுகிறது. ஆனால், பிறகு ஆர்.எஸ்.எஸ் சம்பந்தமில்லை என்று மறுக்கிறது. பிறகு எதற்காக கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து அத்தகைய பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள்?

Noor Mohammad, who alleged that the two RSSoffshoots had lured them into a programme to collect BPL and ration cards HT photo
முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முடியுமா?: பொதுவாக முஸ்லிம் மதமாற முடியாது, அப்படி மாறினால், உடனடியாக அவன் மதத்துரோகி, விரோதி (apostate) என்று முத்திரைக் குத்தப் பட்டு கொல்லப்படுவான். ஆகவே விசயம் தெரிந்த எந்த முஸ்லிமும் வெளிப்படையாக மதமாற மாட்டான், மாறினாலும், சொல்லிக் கொள்ளா மாட்டான். இப்பொழுதே, நாங்கள் ஒன்றும் மதமாற்றப் படவில்லை என்று ஆக்ரா முஸ்லிம்கள் சொல்லியதாக செய்திகள் வந்துள்ளன[16]. உடனே இந்துத்துவவாதிகள் அவர்கள் பயந்து அவ்வாறு பேசுகிறார்கள் என்றும் கூறுகின்றனர்[17]. எனவே, இதெல்லாம் பிரச்சாரத்திற்காக செய்யப் பட்டதா அல்லது ஏதோ பிரச்சினையைத் திசைத் திருப்ப செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படும் போது, அமைதியாக இருக்கும் அரசியல்வாதிகள், ஊடகங்கள் இப்பொழுது ஏன் குதிக்கின்றன என்று வினய் கத்தியார் கேட்டிருப்பதாகவும் செய்தியுள்ளது[18].
© வேதபிரகாஷ்
11-12-2014
[1] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rss-plans-to-convert-4000-christian-1000-muslim-families-to-hinduism/articleshow/45442684.cms
[2] Around 60 Muslim families participated in a “ghar wapsi” ceremony organised by Bajrang Dal’s Dharm Jagran Manch on Monday. ‘Ghar Wapsi’ literally means ‘return home’ and according to the organisers it is meant for people who had left the Hindu fold and are now returning to it. A day later, these families are alleging that they had been promised ration cards and money in exchange for participating in the religious conversion ceremony.
[3] Vasudha Venugopal, RSS plans to convert 4,000 Christian & 1,000 Muslim families to Hinduism , ET Bureau | 10 Dec, 2014, 04.40AM IST, Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/45442684.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
[4] http://in.reuters.com/article/2014/12/10/india-religion-conversions-idINKBN0JO1CN20141210
[5] Firstpost, Hindutva targeting of Christians in Chhattisgarh over conversions really about land?, by Parivesh Mishra Dec 10, 2014 18:54 IST.
[6] இந்நேரம்.காம், முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம், வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014 02:58, பதிவர்: ஜாஃபர்
[7] http://www.inneram.com/i-news/india/3311-muslims-convert-to-hidu-in-agra.html
[8] According to the details given by the families, volunteers from the Dharm Parivartan Mach had been in touch with them for the past four-five months. Since they were mostly poor and in dire financial straits, the families claim that they consented to change their religion for monetary compensation.
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=122001
[10]http://www.dinamani.com/india/2014/12/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/article2565153.ece
[11] http://timesofindia.indiatimes.com/india/Agra-conversions-rocks-Parliament/articleshow/45464405.cms
[12] தினகரன், ஆக்ராவில் மதமாற்றம் மாயாவதி எதிர்ப்பு, சென்னை, 00.04.11, 12-11-2014.
[13] CPI-M leader and Rajya Sabha MP Sitaram Yechury said the re-conversions were a ploy to vitiate the environ¬ment before Christmas.“This is clearly a ploy, a scheme, being worked out before Christmas. This is the dirtiest of vote-bank politics being played by RSS and the BJP.
http://kashmirreader.com/forced-conversion-oppn-accuses-centre-of-hindutva-agenda-28105
[14] http://www.abplive.in/india/2014/12/10/article452586.ece/FIR-against-forced-religious-conversion#.VIjqx_mSynU
[15] http://www.deccanchronicle.com/141210/nation-current-affairs/article/fir-against-forced-religious-conversion-agra
[16] Hemendra Chaturvedi, Agra: Muslim families deny changing faith, slam Hindu groups, Hindustan Times Agra, December 09, 2014; First Published: 20:12 IST(9/12/2014) | Last Updated: 10:10 IST(10/12/2014)
[17] http://www.hindustantimes.com/india-news/day-after-homecoming-muslim-families-deny-embracing-hinduism/article1-1294852.aspx
[18] http://www.ndtv.com/article/india/protests-in-parliament-against-mass-conversions-united-opposition-scores-debate-632030
அண்மைய பின்னூட்டங்கள்