Archive for the ‘வாணியம்பாடி’ category

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

Ambur riot - police  attacked.

Ambur riot – police attacked.

அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு ஜவாஹிருல்லா மறுப்பு: கலவரத்தைத் தூண்டிவிட்டதில் அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்புள்ளதாக, போலீஸ் விசாரிக்க ஆரம்பித்துள்ளது[1]. அஸ்லம் பாஷா ஒரு முஸ்லிம் இளைஞனைத் தூண்டிவிட்டதாக சொல்லப்பட்டுகிறது[2]. ஆனால், ஜவாஹிருல்லா உள்ளூர்வாசிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்கின்றனர். கலவரத்தின் போது, ஆம்பூர் எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, அமைதி ஏற்படுத்த முயற்சி செய்தார். அவரை கலவர வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடுப்போம். கலவரத்திற்கு முன், போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தில், பெண் போலீசார் உட்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார். எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர் சுகூர் உட்பட பலர் உடனிருந்தனர்[3].

Ambur riot - police  attacked.2

Ambur riot – police attacked.2

உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன் – பெண் பொலீஸ் கதறல்! ஆம்பூரில் கலவரத்தின்போது, கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பெண் போலீஸ் ஒருவர், 2 கி.மீ., துாரம் ஓடி, உயிர் பிழைத்துள்ள தகவல், வெளியாகி உள்ளது[4]. வேலுார் மாவட்டம், ஆம்பூரில், வாலிபர் ஒருவர், மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கடந்த மாதம், 27ம் தேதி இரவு, பெரிய அளவிற்கு கலவரம் வெடித்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். ஆம்பூர் ஆயுதப்படை போலீஸ் விஜயகுமார், 34, கால், தொடை, வயிறு, கழுத்து, தொண்டை, கை மற்றும் தோள்பட்டையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். கலவரம் குறித்து, விஜயகுமார் கூறியதாவது[5]: “சம்பவம் நடந்த, 27ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ஆம்பூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, 300க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள், என்னை சூழ்ந்து, கத்தியால்சரமாரியாக குத்தினர்சரமாரியாக தாக்கினர் – அப்போது, அங்கு வந்த, இரண்டு பெண் போலீசாரையும் அடித்து உதைத்தனர். அவர்கள், உயிர் பிழைக்க தப்பி ஓடிய போதும், கலவர கும்பல் அவர்களை துரத்திச் சென்று தாக்கியது. இதை பார்த்த நான், படுகாயத்துடன் இருந்தாலும், அந்த பெண் போலீசாரை காப்பாற்ற போராடினேன். இதனால், கலவர கும்பல், என்னை கற்களாலும், தடியாலும் தாக்கினர். அப்போது, ஒரு கும்பல் வந்து, ‘இது எங்கள் கோட்டை; நீங்கள் எப்படி, இங்கு வரலாம்எனக்கூறி தாக்கினர். அதன்பின், பாதுகாப்புக்கு வந்த, போலீசார் எங்களை மீட்டனர்”, இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் காயம்

போலீசார் காயம்

காரை மடக்கிகாஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த மல்லிகா கூறியதாவது[6]: ஆம்பூரில் கலவரம் நடக்கும் போது, கற்களால் தாக்கியவர்களை, சக போலீசாருடன் சேர்ந்து விரட்டினேன். இதை பார்த்த ஒரு கும்பல், என்னை தடியால் தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிக்க, 2 கி.மீ., துாரம் ஓடி, வழியில் வந்த காரை மடக்கி, அதில் ஏறி உயிர் தப்பினேன். கண்ணில் பட்ட போலீசாரை எல்லாம், கலவர கும்பல் சரமாரியாக தாக்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: என் சர்வீசில், நிறைய கலவரங்களை பார்த்திருக்கிறேன். கலவரம் செய்பவர்களை தடியால் அடித்தால், பயந்து ஓடுவர். அதைப் போலத்தான், இந்த கலவரத்தை நினைத்தேன். ஆனால், கலவரம் செய்தவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் எங்களை விரட்டினர். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட ஓட விரட்டி… இதனால், கலவர கும்பல், எங்களை ஓட ஓட விரட்டி தாக்கினர்; நாங்களும் அடி வாங்கிக் கொண்டு, திரும்ப ஓடி வந்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கலவரத்தை அடக்குவதற்காக, வேலுார், தி.மலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், ஆம்பூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி, ஆம்பூர் சென்றவர்களில், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான, 50க்கும் மேற்பட்ட போலீசாரில், இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர்: ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை, மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ஜவாஹிருல்லா, நேற்று பார்வையிட்டார். கலவர கும்பல் தாக்கியதில், படுகாயம் அடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் பெண் போலீசார், கோபமாக, ஜவாஹிருல்லாவைப் பார்த்து, பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர். கத்தியால் வெட்டினர்; தடியால் அடித்தனர்; கற்களால் தாக்கினர். ஒரு பெண் போலீசின் சட்டையை கிழித்துள்ளனர்; இதெல்லாம் நியாயமா என, ஆவேசமாக கேட்டனர். இத்தகைய செய்தி வந்த பிறகுக்கூட பெண்ணிய வீராங்கனைகள் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரணமான விசயங்களுக்கு பிருந்தா காரத் இத்யாதிகள் தங்களது கருத்துகளை அள்ளி வீசுவர், ஆனால் இப்பொழுது……………..அதே மாதிரி அந்த குஷ்புவையும் காணவில்லை.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

ஆம்பூர் கலவரத்தில் தவறு நடந்து விட்டது‘ – ஜவாஹிருல்லா மன்னிப்பு: ஆம்பூர் கலவரத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெறும் போலீசாரிடம், மனித நேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா மன்னிப்பு கேட்டார். தவறு நடந்துவிட்டது இதை கேட்ட, ஜவாஹிருல்லா, ‘தவறு நடந்து விட்டது; நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என, சிகிச்சை பெறும் ஒவ்வொரு போலீசாரிடமும் சென்று, மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின், அவர், நிருபர்களிடம்கூறியதாவது: ஜமில் அகமது மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் பிரேம்ராஜ், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆம்பூரில் நடந்த கலவரத்தை, சில விஷமிகள் முன்னின்று நடத்தியுள்ளனர். கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர். அவப்பெயரை ஏற்படுத்த சதி…. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, மக்களிடம் நல்லிணக்கம் ஏற்படுவதையே விரும்புகிறது. அரசிடம், எங்கள் கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தி தர, சிலர் முயற்சிக்கின்றனர். கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர்; அவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்.

போலீசார் தாக்கப்படல் - விகடன் போட்டோ

போலீசார் தாக்கப்படல் – விகடன் போட்டோ

முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? முஸ்லிம்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்த எந்த முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியதுதானே? இல்லை, இவ்வாறு சொல்லி தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றனரா? கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால், கொலைவெறி பிடித்தவர்கள் இருந்தார்களே, அவர்களை பைத்தியங்கள் என்று சொல்லி தப்பிக்க தூபம் போடுகிறாரா? கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்று சேர்த்து சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும். இத்தனை நாசத்தை உண்டாக்கி விட்டு, போலீஸ் நிலைய, ஜீப்புகள் மற்றும் போலீஸ்காரர்களையும் தாக்கி விட்டு, கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால் என்ன அர்த்தம்? முஸ்லிம்களுக்கு அத்தகைய நிலைமை எதனால், ஏன் ஏற்படும் என்பதனையும் ஒன்று அவர்களே விளக்கவேண்டும் அல்லது மற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

ஆம்பூர் கலவரம் - 30_06_2015_011_003

ஆம்பூர் கலவரம் – 30_06_2015_011_003

போலீஸ் ஜீப் எரித்தவர்கள் கைது: ஆம்பூரில் நடந்தது கலவரம் என்பதை விட, போர்க்களம் என்றே சொல்ல வேண்டும். கலவரக்காரர்கள், கத்தி, கற்கள், தடியால் தாக்கினர். அவர்களிடம் துப்பாக்கி இருந்திருந்தால், ஒரு போலீஸ்காரர் கூட, உயிருடன் வீடு திரும்பி இருக்க முடியாது. இருதயராஜ், போலீஸ்காரர், காஞ்சிபுரம். 113 பேர் கைது ஆம்பூர் கலவரம் தொடர்பாக, இதுவரை, 113 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் நடந்தபோது, ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த ஜீப், ஆம்பூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஆகியவற்றை, கலவர கும்பல், தீ வைத்து கொளுத்தியது. இது தொடர்பாக, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்பூர் கே.எம்.நகரைச் சேர்ந்த கயம், 20, அக்பர், 23, சபீர், 26, சலீம், 22, ஆகிய, நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.

பவித்ராவை தேடுகிறது தனிப்படை! வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த,குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் பவித்ரா, 23, காணாமல் போனது தொடர்பாக, அவரது கணவர் பழனி கொடுத்த புகாரின்படி, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட பவித்ரா, எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. இவரை தேடும் பணியில், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், கோவிந்த சாமி தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், பவித்ராவின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பஸ் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில், பவித்ரா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தனர். ஒரு பெண் காணவில்லை என்பதைப்பற்றியும் பெண்ணிய வீராங்கனைகள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நீதியை கலவரத்தால், வன்முறையால் அடைய முடியும் என்பது விசித்திரமான தத்துவம் தான். முசபர்நகர் கலவரமும் இதே பாணியில் ஆரம்பித்தது என்பதனை நினைவு கொள்ள வேண்டும். இங்கு வேண்டுமானால், இன்னொரு கோயம்புத்தூர் போல ஆகக்கூடாது என்று அறிவுஜீவிகள் சொல்லலாம், ஆனால், இருக்கும் முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைக்கும் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் முதலிய தோல் தொழிற்சலைகளில் இந்து பெண்கள் மதம் மாற்றப்படுவது நடந்து வருகின்றது. எனவே பிரச்சினை பெரிதாகாமல் இருக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

01-07-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Police-Probe-Role-of-MLA-in-Ambur-Riot/2015/06/29/article2891992.ece

[2] New Indian express, Police Probe Role of MLA in Ambur Riot, By J Shanmugha Sundaram, Published: 29th June 2015 06:10 AM;  Last Updated: 29th June 2015 06:10 AM.

[3] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1286934

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Recall-Horror-During-Ambur-Clash/2015/07/02/article2897905.ece

[6] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


மெகந்தீ – இதுவதந்தீ ; பெண்கள்அச்சம் ; ரம்ஜான்நாளில்பொய்தகவல்பரபரப்பு!

ஓகஸ்ட் 20, 2012

மெகந்தீஇதுவதந்தீ ; பெண்கள்அச்சம் ; ரம்ஜான் நாளில் பொய் தகவல் பரப்பு, பரபரப்பு!

 மெஹந்தி வதந்தி பரப்புதல்: தினமலரில் இப்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரம்ஜான் நாள் கொண்டாட தயராகி கொண்டிருந்த நேரத்தில் பெண்கள் மெகந்தி வைத்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது[1].  எஸ்.எம்.எஸ் மூலம் இத்தகவல் வந்ததாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் வேலூர் மற்றும் சென்னையில் மருதாணி வைத்துக் கொண்ட ஏராளமான பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சில குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் தகவல் பரவியது[2].
செஞ்சியில் பெண்களிடம் கலவரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தக்காசுரத்தூர் பகுதியிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்தனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக இரவில் தகவல் பரவியது[3]. இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணி அளவில் சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த யாஸ்மீன் (வயது 9) ஷமீம் (வயது 15) தில்ஷாத் (வயது 25) ரஜீமா (40) அஷ்ரத் (12) ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இதில் அஷ்ரத்துக்கு மயக்கம், தலைவலி இருந்ததால் செஞ்சியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இத்தகவல் செஞ்சி பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மொபைல் போன் மூலம் வேகமாக பரவியது[4]. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிவரை 123 பேர் மெகந்தி பாதிப்பு ஏற்பட்டதாக சிகிச்சைக்கு வந்தனர். இதனால் செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள அப்பம்பட்டு பகுதிக்கும் பரவியது. அந்த பகுதியில் மருதாணியிட்டுக் கொண்டவர்களும் பயந்து செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு டாக்டர்கள் ஊசிபோட்டு அனுப்பி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் பரப்பட்டது: இந்த தகவல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாட்டங்களில் வதந்தி பரவியது[5]. சென்னையில் பல இடங்களில் இத்தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், மெகந்தி வைத்தவர்கள் பீதி அடைந்தனர். உடனே, கைகளை கழுவி சுத்தப்படுத்தினர். மேலும், டாக்டர்களை பார்த்து சிகிச்சை பெற்றனர். சென்னையில் புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டேரி உள்பட பல இடங்களில் பெரும் பீதி ஏற்பட்டது. ராயப்பேட்டையில் முற்றுகை போராட்டமும் நடந்தது[6]. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்; மெகந்தி மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக அறிகுறி யாருக்கும் இல்லை. சிலருக்கு உடல்களில் அரிப்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் மெகந்தி வைத்த இடத்தில் எவ்வித கோளாறும் இல்லை. என்றார். இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

வேலூரில் ஆரம்பித்த வதந்தி, கலாட்டா: முதன் முதலாக வேலூரில் இந்த அலர்ஜி ஏற்பட்டது . இதன் சுற்றுப்பகுதியான வாணியம்பாடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவியது. வேலூர் ஆஸ்பத்திரிக்கு 45 பேர் சிகிச்சைக்காக வந்தனர். செஞ்சியில் மட்டும் 140 பேர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வந்னைர். அச்சத்தின் காரணமாக இந்த தகவல் மொபைல் மூலம் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என பகிர்ந்துள்ளனர். மெகந்தி வைத்தவர்கள் எல்லோரும் தமக்கும் எதுவும் பாதிப்பு இருக்குமோ என்று அஞ்சி பலரும் ஆஸ்பத்திரி நோக்கி வந்துள்ளனர். இது போல் பல பகுதிகளுக்கு பரவியது. காலையில் சிறப்பு தொழுகையின்போது மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் புரளியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

போலீஸ், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை: செஞ்சியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை குறித்து முழுக்கவனமாக கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தாசில்தார் வாசுதேவன் கூறுகையில், மெகந்தியினால் பாதிப்பு இல்லை. தவறான தகவல் பரப்புவோர் யார் என கண்டறிந்து அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குறிப்பாக மத்திய அரசு பல்க் மெசேஜ் தடை செய்திருப்பதால் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இல்லையேல் மேலும் பலருக்கு இந்த பொய்செய்தி போய்ச்சேர்ந்திருக்கும். சமீபத்தில் வட மாநிலத்தவர்கள தாக்கப்படுவதாக மொபைல் மூலம் தகவல் பரப்பி விடப்பட்டது. இதனையடுத்து பல்க் மெசேஜ் அனுப்பிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த மெகந்தீ வதந்தி குறித்தும் போலீஸ் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் கலாட்டா: வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் இருந்த ஏராளமானோர் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இரவு 1.30 மணிக்கு கூட்டம் அதிகமானது. அப்போது ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இருந்தார். இதனால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அனைவருக்கும் விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமான தகவலறிந்ததும் டி.எஸ்.பி. மாதவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசினர்[7].  போலீசார் பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆஸ்பத்திரியில் நிறுத்தியிருந்த 2 தனியார் ஆம்புலன்சு கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்தில் கடும் பதட்டம் ஏற்பட்டது. இந்த மோதலில் பாத்திமா(வயது 52) என்ற பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ் தயடிடிக்கு பின்னர் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. திருப்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஷில்பா பிரபாகர் அதிகாலை 3.30 மணிக்கு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். உடன் தாசில்தார் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் வதந்தி குறித்து விளக்கம் அளித்தனர்.  இந்த சம்பவத்தையடுத்து வாணியம்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மருதாணி, மெகந்தி பூசிய 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற இரவு 12 மணிக்கு மேல் வந்தனர். அப்போது ஒரே ஒரு டாக்டர் வந்தார். சிகிச்சைக்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 3 கண்ணாடிகளை உடைத்தனர்[8]. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

மசூதிகளில் ஒலிபெருக்கிகளில் தெரிவித்தது: இதேபோல் சேலம் அரசு மருத்துவமனையிலும் பலர் குவிந்தனர். இரவு 12.30 மணியில் இருந்து விடிய விடிய முஸ்லிம்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்காக்களில் மெகந்தி பற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த பலர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் திரண்டனர். இங்கு 150 பேருக்கு ஊசி போடப்பட்டது. இதேபோல் சூளகிரி, ஒசூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் வதந்தி பரவி ஆஸ்பத்திரிகளில் திரண்டனர்[9].

வேலூரிலிருந்து ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பரவிய வதந்தி: வேலூர், ஓசூர், பெங்களூரு, சித்தூர் என்று பரவிய போக்கு வேண்டுமென்றே செய்துள்ளது தெரிகிறது. ஆந்திர மாநிலம் பலமனேர், சித்தூர் மற்றும் பெங்களூர் பங்காருபேட்டை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் மருதாணி, மெகந்தி வைத்தவர்களுக்கு அரிப்பு மற்றும் வாந்தி ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இதைவிட, ஒன்றும் இல்லை, இதெல்லாம் வதந்தி தான் என்று ஏன் எஸ்.எம்.எஸ் அனுப்பக்கூடாது?


[4] இவ்வாறு அனுப்பவேண்டிய தேவையென்ன என்று தெரியவில்லை. ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறியபிறகு, சம்பந்தப்பட்டவர்கள், அதனைப் புரிந்த கொண்ட பிறகும், அப்படி பரப்ப வேண்டிய அவசியம் இல்லை.