Archive for the ‘வசூல்’ category

தி கேரளாஸ் டோரி, லவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (2)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (2)

கோயம்புத்தூரில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம்: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கோவையில் வணிக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்[1]. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு – பரபரப்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்[2]. இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்[3]. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது[4]. இதனைத் தொடர்ந்து ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.

இப்படத்தில் விவரிக்கப் படும் விசயங்கள் என்ன?: இதன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய மாணவிக்கு தம்முடன் தங்கியிருப்பவர்களை மூளைச்சலவை செய்யும் ASSIGNMENT கொடுக்கப்படுகிறது. அவரோடு 4 இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து கொள்கின்றனர். பிற மதக் கடவுளர்களை இஸ்லாமிய மாணவி விமர்சிக்கும் காட்சிகளும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது என அவர் கூறும் வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்துகொள்வது போன்றும், அதன்பிறகு அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்றும் காட்டப்படுகிறது. இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இது மேலும் அனலைக் கூட்டியுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்!: இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய் ‘THE கேரளா ஸ்டோரி’ திரைப்படம்” என கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும், “படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை என்றால், கேரளாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கிறோம்” என்றும் அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் தலையிட்டு, “இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளர்” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.

படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்: . கேரள உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம்!’தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று வாதம் நடந்தது. இப்படத்துக்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ”படத்தின் ட்ரெய்லரில் வரும் உரையாடல்கள் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அப்பாவி மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இது கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கலாம். இந்தப் படம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அப்படத்தின்  ட்ரெய்லரே உணர்த்துகிறது” என்றார். ”படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் அல்ல” – நீதிபதி அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிராக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்றார். அதற்குப் பதிலளித்த துஷ்யந்த் தவே, முழுப் படத்தையும் பார்த்தால் புரியும் என்றார். அதற்கு நீதிபதி, தணிக்கை வாரியம் சர்ச்சைக்குரிய பல காட்சிகளை நீக்கிவிட்டதே என்றும் மேலும் இந்தப் படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் இல்லை எனவும் எடுத்துரைத்தார். அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புனைகதை என்றாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக இப்படம் அமைந்துள்ளது எனவும் வாதிட்டார்.

சில மாறுதல்களுடன் நீதிமன்றம் திரையிட அனுமதி: அதற்கு நீதிபதி, இந்து சன்யாசிகளை கடத்தல்காரர்களாகவும் பாலியல் வன்முறை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் இந்தி மற்றும் மலையாளத்தில் வெளிவந்து உள்ளன. அப்போதெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.   ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் மதத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டார்.   படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி கடம், ‘இது உண்மைக் கதைகளால் ஈர்க்கப்பட்ட புனைகதைஎன்று நாங்கள் டிஸ்கிளைமரில் குறிப்பிட்டுள்ளோம் என்றும் படத்தின் டிரெய்லருக்கு தணிக்கை வாரிய சான்றிதழ் தேவையில்லை,” எனவும் வாதிட்டார். மேலும் அவர், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ‘கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்’ என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இப்படத்தைக் குறிப்பிட்டது: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்[5]. பிரதமர் பேசுகையில்[6], “தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்தைத்தான் தடை செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது,” எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்[7].மேலும், “இந்த திரைப்படம் கேரளாவை சேர்ந்த பெண்கள் எப்படி ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதங்களில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்? பின்னர் அவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் போன்றவை நடைபெறுகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பாழாகிறது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தீவிரவாத ஆதரவாளர்களுக்கு துணைபோகிறது,” என்று பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்[8].

உண்மையான செக்யூலரிஸ்டுகள்கிறிஸ்துவர்கள்இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறுமா?: கவனமாக இப்பிரச்சினையை ஆராய்ந்தால், அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம் ஓட்டுகளை வாங்கினால் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும். இவர்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும். கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர். ஆனால், அங்கு இந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது. ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

  1. தி கேரளா ஸ்டோரி பிரச்சினையை கவனமாக ஆராய்ந்தால், அதை அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனலாம்.
  • கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை,
  • ஹிந்துக்கள் 55%, முஸ்லிம் – 27%, கிறிஸ்துவர் – 18% என்றுள்ள நிலையில், யாரும் இந்து ஓட்டுவங்கியை நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள்!
  • ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம்களிடம் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும்.
  • ஹிந்துக்கள்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும்.
  • கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர்.
  • ஆனால், அங்கு ஹிந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. இதனால், ஹிந்துக்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர்!
  • அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது.
  • ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
  1. இதனால் தான் ஜிஹாத் ஆதரிக்கப் படுகிறது, ஹிந்துக்களுக்கு எதிராக விரோதிகள் சேர்கின்றனர், எல்லைகளும் கடக்கின்றன!

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. கோவையில் பரபரப்பு, By தந்தி டிவி, 5 மே 2023 6:33 PM

[2] https://www.thanthitv.com/latest-news/protest-against-the-movie-the-kerala-story-commotion-in-coimbatore-184433

[3] நக்கீரன், தி கேரளா ஸ்டோரிவலுக்கும் எதிர்ப்புகள்; களத்தில் முதல் போராட்டம், Published on 05/05/2023 (18:21) | Edited on 05/05/2023 (19:32)

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kerala-story-continues-protests-first-struggle-field

[5] புதியதலைமுறை, தி கேரளா ஸ்டோரி‘ : அனல் பறக்கும் விவாதம்.. சூடுபிடிக்கும் போராட்டங்கள்.. களத்தில் இறங்கிய பிரதமர்!, , Justindurai S, Published on : 5 May, 2023, 3:21 pm.

[6] https://www.puthiyathalaimurai.com/india/kerala-high-court-refuses-to-stay-release-of-the-kerala-story

[7] தினமணி, தி கேரளா ஸ்டோரி: பிரதமர் மோடி கருத்து, By DIN  |   Published On : 05th May 2023 03:04 PM  |   Last Updated : 05th May 2023 03:04 PM

[8] https://www.dinamani.com/india/2023/may/05/pm-modi-opinion-about-the-kerala-story-movie-4001039.html

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை – வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

நவம்பர் 2, 2022

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரைவழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

திருக்குறளை வைத்து பணம் டிபாசிட் பெற்று மோசடி செய்த ஷேக் முகைதீன்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையை, மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் முடிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது[1]. மதுரை, சின்ன சொக்கிகுளம் ஹக்கீம் அஜ்மல்கான் ரோட்டில், பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டது[2]. இங்கு, ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து, 900 ரூபாய் முதிர்வுத் தொகை வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது[3]. இத்தவறான வாக்குறுதியை நம்பி, 45 ஆயிரத்து, 501 பேர், 65 கோடியே, 46 லட்சத்து, 87 ஆயிரத்து, 508 ரூபாய் முதலீடு செய்தனர்[4]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல் ஏமாற்றியதாக நிறுவனம் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் உட்பட சிலர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், 2010ல் மோசடி வழக்கு பதிந்தனர்[5].  இது பற்றிய விவரங்களை, எனது முந்தைய, சென்ற வருட பதிவில் காணலாம்[6].

பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முதல் ஷேக் முகைதீன் வரை (2010-2021)[7]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[8]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ் துறையில் விரல் ரேகை பிரிவு நிபுணராக 1970ல் சேர்ந்தார். 2005ல் விருப்ப ஓய்வு பெற்றேன். சென்னையில் பசிபிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கியது. அதைப்பார்த்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரையில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினேன். இதன் நிர்வாக இயக்குனர்களாக நானும் (ஷேக்முகைதீன்), எனது மனைவி மனைவி ஜானு, மகன்கள் சர்தார் உசேன், யாகூப் உசேன் மற்றும் சிவக்குமார், முபாரக்அலி ஆகியோர் இருந்தோம்”.

2011ல் விசாரணைக்கு வழக்கு வந்தது: 06-05-2010 அன்று ஷேக் முகைதீன் கைது செய்யப் பட்டார். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்தாண்டு டிசம்பர் 2009 வரை லாபத் தொகையை கொடுத்தார். இதன் பின், காலம் தாழ்த்தினார். சிலர், போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, முதலீடு பணத்தை திருப்பிக் கொடுத்தார். இன்னும் வாங்காதவர்கள் நேற்று நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த தேவேந்திரன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, ஷேக் மைதீனை இன்ஸ்பெக்டர் நேதாஜி கைது செய்தார். முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

2022ல் மறுபடியும் விசாரணைக்கு வழக்கு வந்தது: டான்பிட் எனப்படும் மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது[9]. பாதிக்கப்பட்டோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம். நிர்மல்குமார் முன் முறையிட்டதாவது: “டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டான்பிட் நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் முன்னேற்றம் இல்லை. விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எங்கள் தரப்பில் தாமதம் ஏற்படவில்லை. 2,685 சாட்சிகளை விசாரித்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கத் தயார்’ என, தெரிவித்தது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றடான்பிட்நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்கள் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.

மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும்: ஆக, இதை எதிர்த்து மேல்முறையீடு செய்து, உச்சநீதி மன்றத்திற்குச் சென்று காலந்தாழ்த்தி இருப்பதும் தெரிகிறது. அதனால் தான்  முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது, என்றாலும், ஷேக் முகைதுனுக்கு ஏதோ ஆதரவு உள்ளதால், இது நடந்துள்ளது. சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்றாலும், இழுத்தடிப்பு வேலை நடந்துள்ளது.  நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளார். இப்பொழுது நவம்பர் 2022, அதாவது, மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும். என்னாகுமோ பார்க்கலாம்.

வேதபிரகாஷ்

02-11-2022


[1] தமிழ்.இந்து, திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 01 Nov 2022 06:39 AM; Last Updated : 01 Nov 2022 06:39 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/890545-order-to-close-the-case-in-6-months.html

[3] தினமலர், திருக்குறள் புத்தகம் விற்பனை மோசடி விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு,  தமிழகம் செய்தி, Added : நவ 02, 2022  00:34

[4] https://www.dinamalar.com/news_detail.asp?

[5] ஜி.7.தமிழ், திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, Order to close the case in 6 months, 1 day ago g7tamil

[6]  வேதபிரகாஷ், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை,  ஆகஸ்ட் 8, 2021.

[7]  தினமலர், மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளுக்கு ‘சீல்’, மே 10,2010,00:00  IST

[8] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18450

[9] https://g7tamil.in/tag/%E0%AE%B0%E0%AF%82-65-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/

கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்?

ஓகஸ்ட் 4, 2013

கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்? AIADMK Iftar காபிர்கள் அதிலும் நாத்திகர்கள் அதிலும் இந்துவிரோதிகள் நடத்தும் இப்தார் பார்ட்டிகள்: அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது[1]:– “இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்அமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களை கெளரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்[2]. அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், முதல்அமைச்சர் ஜெயலலிதா, வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மாலை சென்னை, லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள் [அறிஞர்கள்[3]], தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், .தி.மு.. மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[4]. இது ஜூலை 27ம் தேதி நடப்பதாக இருந்து ஏற்காடு எம்.எல்.ஏ பெருமாள் இறந்ததால் தள்ளிவைக்கப்பட்டது[5]. Dravidian Iftar or Iftar with Atheits முஸ்லிம்களே மாறி-மாறி போட்டிப் போட்டுக் கொண்டு நடத்தும் பார்ட்டிகள்: ஓட்டல் இம்பீரியல் (எழும்பூர்) ஹாலில் திமுகவிற்கு மற்றும் அதிமுகவிற்கு என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனித்தனியாக பார்டி நடத்தியது. போதாகுறைக்கு பிரிந்த கோஷ்டிகள் ஓன்றுக்கொன்று வசைமாறி பொழிந்து கொண்டன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [the Indian Union Muslim League] சென்ற வாரம் திமுகவினருக்கு பார்ட்டி நடத்தியது. இப்பொழுது (ஆகஸ்ட் 2), பாத்திமா முஸாபர் அதிமுகவினருக்கு நடத்தியுள்ளார். வளர்மதி, எஸ். அப்துல் ரஹீம் முதலியோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் தான் இரண்டு பார்ட்டிகளும் நடந்துள்ளன. “அவர்கள் வந்தார்கள், உட்கார்ந்தார்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால், அவர்கள் தாம் கட்சி உடைய காரணமாக இருந்தார்கள்”, என்று பாத்திமா முஸாபர் திமுகவை விமர்சித்தார்[6]. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாரதத்தை இரண்டாகப் பிரித்த மதவாத கட்சி, ஆனால், திராவிட கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. ரம்ஜான் வரும் போது, குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கின்றன. இருநிலைகளிலும், முஸ்லிம்கள் நாத்திக திராவிட கட்சிகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன. Dravidian Iftar or Iftar with Atheits.2 மூன்றுபேரிச்சம்பழங்களும், முன்னூறுதின்பண்டங்களும்: “இப்தார்” என்றால் ரமதான் / ரம்ஜான் மாதத்தில் உபவாசத்தை, உண்ணாநோன்பை முடித்துக் கொள்வது, அதாவது சூரியன் உதிக்கும் முதல் மாலை வரை உண்ணாமல் இருக்கும் முஸ்லிம்கள் பிறகு உண்பார்கள்.  பொதுவாக “மக்ரிப்” நேரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் மொத்தமாக அல்லது குழுக்களாக சேர்ந்துண்டு அவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொள்வார்கள். முஹம்மது நபி மூன்று பேரிச்சம் பழங்களை உண்டு தனதுஅவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொண்டார். ஆனால், இன்று பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பலவிதமாக உண்டு விழா நடத்துகிறார்கள். போதாகுறைக்கு இந்தியாவில், கட்சிக்கு ஒரு பார்ட்டி நடத்துகிறார்கள். “நன்றாக / விதவிதமாக சாப்பிடலாம்” என்று இதற்காக ஒரு கூட்டமே வருகிறது. Hosni Mubarak, Benjamin Netanyahu, Barrack Obama and others checking their watches for sunsetதீவிரவாதத்திற்கு எதிராக போரை நடத்தி வரும் ஒபாமாவே இத்தகைய பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். BJP Shahnawaz Hussain, Ravi Shankar Prasad, Sushil Kumar Modi at an Iftar party in Patnaமுஸ்லிம்களின் விரோதி என்று சொல்லப்படும் பிஜேபியே இப்தார் பார்டி நடத்தி வருகிறது, அதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். Iftar menu இப்தார் பார்ட்டிகள் பெரிய வியாபாரமாகி விட்டது: ரோஸா இப்தார், ரமதான் இப்தார், இப்தார் கரீம், இப்தார் பார்டி என்று குறிப்பிடும் இதற்கு அழைப்பிதழ்களும் கொடுக்கப்படுகின்றன. பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.Iftaar_party_invitation_card_by_Raza786 இந்தியா முழுவதிலும், அரசு சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கு கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. தவிர கட்சிகள் சார்பில், முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கும் கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. sponsor-an-iftar-E-Flyerஇதற்காக “ஸ்பான்சர்சிப்” அதாவது ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியும் அழைப்பிதழ்கள் அனுப்பப் படுகின்றன. இவ்வாறு, இது ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது. ஓட்டல்களில் “இப்தார் மெனு” என்று போட்டு வியாபாரம் செய்கின்றனர். ?????????????????????? 2013-2014 ஆண்டுகளில்இம்மாதிரியானதமாஷாக்கள்அதிகமாகவேஇருக்கும்: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[7]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.  காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கும். இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். வேதபிரகாஷ் © 04-08-2013


[3] தினமணியில் “அறிஞர்கள்” என்றும், மாலைமலரில் “பெருமக்கள்” என்றும் உள்ளது.
[5] Iftar party Chief minister and AIADMK supremo J Jayalalithaa has called off her Iftar party on July 27, following the sudden demise of Yercaud  MLA Perumal. http://timesofindia.indiatimes.com/Iftar-party/speednewsbytopic/keyid-50082.cms
[6] “They came and sat here, and their leader gave a speech appealing for unity among Muslims. That was ironic, for they were the very people who caused the split in our party,” said Fathima, lashing out at the DMK. She had to start a splinter group of the IUML after being sidelined for addressing a press conference ahead of the 2011 Assembly polls, where she had hit out at both her party organisation for making compromises and the DMK for taking the IUML for granted. http://newindianexpress.com/cities/chennai/IUML-group-hosts-Iftar-for-AIADMK-ministers/2013/08/03/article1715558.ece