Archive for the ‘வக்ப்’ category

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (1)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (!)

கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதமாற்றம் ஏன் நடக்கிறது?: தமிழகத்தில் இந்துக்கள் மதம் மாறுவது நடந்து கொண்டே இருக்கிறது. தீண்டாமை மற்றும் ஜாதி, ஜாதிக் கொடுமைகள் காரணமாக எடுத்துக் காட்டப் பட்டு, கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டால், அத்தகைய வேறுபாடுகள், வித்தியாசங்கள், பாகுபாடுகள் முதலியன மட்டுமல்லாது, சமுத்தவம், சகோதரத்துவம், சம-அந்தஸ்து எல்லாம் கொடுக்கப் படும் அல்லது கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டு அல்லது பிரச்சாரம் செய்யப் பட்டு, அத்தகைய மதமாற்றங்கள் நடந்தன, நடந்து வருகின்றன. இவையெல்லாம், ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் போன்றவற்றைக் கடந்து திட்டமிட்டு நடந்து வருகின்றன என்பது அரசாங்க, நிறுவனங்கள் ஆராய்ச்சிகள், தரவுகள் முதலியவை மூலம் அறியப் பட்டுள்ளன. மீனாக்ஷிபுரம் மதமாற்றம் அதனால் தான் பெரும் சர்ச்சையை உண்டாக்கி அடங்கி விட்டது. அதனால், எத்தனை மதம் மாறிய இந்துக்கள் பணக்காரர்கள் ஆனார்கள், உயர்ந்த சமுக்கத்தின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள், சிறந்த நிலையை அடைந்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மதமாற்றத்தால் உயர்ந்த நிலை கிடைத்ததா இல்லையா?: மண்டல் கமிஷன் தீர்ப்பு இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் இடையேயும் ஜாதிகள் உண்டு என்றவுடன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகளின் ஆதாரமாக, அவர்கள் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், Caste [காஸ்ட்] மற்றும் class [கிளாஸ்] என்றவற்றிற்குள் இருக்கும் உண்மையினை அறிந்து கொள்ளாமல், உணர்ச்சி, அரசியல், சித்தாந்தம் போன்றவற்றால் உந்தப்பட்டு, மற்றவர்களையும் உசுப்பி விட்டு, பிரச்சினைகளை வளர்த்து வருவதும் தெரிகிறது. ஒரு பக்கம் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம-உரிமைகள், எல்லோருக்கும் எல்லாம் என்றெல்லாம் பேசிக் கொண்டே, “எல்லாமே எனக்குத்தான்” என்று பல கூட்டங்கள் பெருகி வருவதைக் காணலாம். இங்கு தான், அப்பிரச்சினைகள், பெரிதாகி நீதிமன்றங்கலுக்குச் செல்கின்றன. அங்கு உண்மைகள் ஆராயும், அலசும் மற்றும் முடிவில் தீர்ப்புகளாக வரும் பொழுது, பிடித்தும்-பிடிக்காமலும் போகும் நிலை உண்டாகிறது. இப்பொழுது, இந்த தீர்ப்பும் அவ்வாறே இருக்கிறதா . இல்லையா என்று கவனிப்போம்.

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு: மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது[1]. இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தாலும், வழக்கம் போல, “பி.டி.ஐ” பாணியில், “தமிழ்.இந்துவில்” வந்ததை மற்ற ஊடகங்கள் அப்படியே / வேறு தலைப்புகள் இட்டு / சிறிது மாற்றி வெளியிட்டுள்ளன. ஊடக வித்தகர்களும், நிருபர்களும், அப்படியே செய்தியை போட்டு, அமைதியாகி விட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப் பட்டவரிடம் சென்று பேட்டி காணவில்லை, முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர்களிடம், துறை அமைச்சர்களிடம் கமென்ட் / விளக்கம் கேட்கவில்லை, அன்று மாலையிலேயே, டிவிசெனல்களில் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. சமூகநீதி வித்தகர்கள், சமத்துவ சித்தாந்திகள், சமவுரிமை போராளிகள், சமன்பாட்டு வித்தகர்கள் முதலியோரும் காணப்படவில்லை.

காஜி கொடுத்த முஸ்லிம் சான்றிதழ், கேட்கும் பிசி அந்தஸ்து, மறுத்த TNPSC:  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்[3]. நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் (a group within Muslim community which has been notified as a backward class) என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்[4]. 2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன்[5]. எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன்[6]. இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை[7]. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்[8]. என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார். [இந்த TNPSC அதிகாரி வருவாய் அதிகாரியை விட பெரியவர்களா அல்லது அவர்கள் கொடுக்கும் சான்றிதழை மறுக்க அதிகாரம் உள்ளதா?]

லெப்பை முஸ்லிமா, பிற்படுத்தப் பட்ட முஸ்லிமா, ஜாதியா?: என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது[9]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு[10]. “தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்[11]. அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது[12]. அதை தவிர – அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர – சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது[13]. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது[14].  [காஜி தனது மத இறையியலின் படி தீர்மானிக்கிறரா அல்லது வேறு ஏதோரு அதிகாரம் அல்லது அதிகார ஆணை மூலம் தீர்மானிக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும்,ஐஸ்லாமிய இறையியலின் படி முஸ்லிமுக்கு இரண்டு வித சமூக நிலை, அந்தஸ்து. இடவொதிக்கீடு எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.]

© வேதபிரகாஷ்

04-12-2022 


[1] தமிழ்.இந்து, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 02 Dec 2022 08:22 PM; Last Updated : 02 Dec 2022 08:22 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/909128-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders.html

[3]காமதேனு, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பி.சி முஸ்லிமாக கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு, கி.மகாராஜன், Updated on :  2 Dec, 2022, 9:40 pm.

[4]  https://kamadenu.hindutamil.in/national/a-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders-action

[5] ஜி.7.தமிழ், இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் உத்தரவு  | hindu convert to islam cannot be considered a bc muslim high court orders || G7TAMIL, By g7tamil -December 2, 2022.

[6] https://g7tamil.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

[7] தமிழ்.மினட்ஸ், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC வகுப்பா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, by Bala S, December 3, 2022.

[8] https://tamilminutes.com/madurai-high-court-rejected-religion-changed-case/

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முஸ்லிம் மதம் மாறிய இந்து பிற்படுத்தப்பட்டவர் அல்ல.. மதுரை உயர்நீதிமன்றம், Written by WebDesk, Madurai, December 3, 2022 2:22:42 pm

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/the-madurai-high-court-has-ordered-that-a-hindu-convert-to-islam-is-not-a-backward-class-552158/

[11] இ.டிவி.பாரத், மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, Published on December 03, 2022; Updaed; December 04, 2022.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/a-convert-cannot-be-considered-a-bc-muslim-high-court/tamil-nadu20221203130924644644445

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Madurai HC: ‘டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுநீதிமன்றம், Karthikeyan S, 03 December 2022, 15:10 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-hc-rejects-backward-quota-claim-of-hindu-man-converted-to-muslim-131670060279181.html

வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல்சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?

செப்ரெம்பர் 17, 2022

வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?

பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் தில்லி மாடலா, திராவிட மாடலா?: வக்பு விவகாரங்களில் இந்தியாவில் மாநிலங்களில் பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களும் அதில் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்விவகாரங்களில், பெரும்பாலாக, கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்று வருகின்றன. துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்ளும் அந்நிய-அரேபிய வகையறாக்கள் தாங்கள் குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்ற புத்தகங்கள், சட்டநெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம் என்று சொல்லிக் கொண்டாலும், அது நாட்டிற்கு நாடு, பிரிவிக்குப் பிரிவு மாறித்தான் உள்ளது. இவையெல்லாம் அவர்களின், அதாவது, துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் என்று வரும் போது, அரசு, ஆட்சி, அதிகாரம், மோசடிகள், ஊழல்கள் முதலியவற்றில், புதிய பரிமாணங்கள் வருகின்றன. அதனால் வக்பு வாரிய மோசடிகள், ஊழல்கள் முதலியவையும் அவ்வாறே உள்ளன. தில்லி மாடல், திராவிட மாடல்………என்றெல்லாம் கூறிக் கொண்டாலும், நடப்பவை இவ்வாறுத் தான் உள்ளன.

2016லிருந்து தில்லி மாடல் வக்பு ஊழல் நடைபெறுகிறதா?: சமீபத்தில் வக்பு வாரிய அடாவடித் தனம், ஹிந்துக்களின், கோவில்களின் நிலம் அபகரிப்பு மற்றும் கோவிலே தமது நிலத்தில் உள்ளது போன்ற விவகாரங்களில் வெளிப்பட்டன. மேலும், துலுக்கரின் உள்-விவகார ஊழல்களும் வெளிவந்தன. அந்நிலையில் தில்லி வக்பு ஊழல் விவகாரமும் சேர்கிறது. பிப்ரவரி 8ஆம் தேதி 020 வக்ஃபு வாரிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ஏஏபி எம்எல்ஏ, வக்ஃபு வாரியத் தலைவர் அமனத்துல்லா கான் ( AAP MLA Amanatullah Khan) ஆகியோரை ஊழல் தடுப்புக்கிளை (Anti-Corruption Branch (ACB)  ஏசிபி) புதன்கிழமை 08-02-2020 அன்று வழக்குப்பதிவு செய்தது[1]. பின்னர், வக்ஃபு வாரிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், ‘ஒழுங்கற்ற ஆள்சேர்ப்பு’ செய்ததாகவும் ஏ.சி.பி. தலைவர் அரவிந்த் தீப் தெரிவித்தார்[2]. இது குறித்து அமனத்துல்லா ​​கானிடம் கேட்டபோது, “நான் முதலில் புகாரை முழுமையாகப் படித்துப் பார்க்கிறேன், அதன் பிறகு அதைப் பற்றி பேசுகிறேன்,” என்றார். கடந்தாண்டு வக்ஃபு வாரியத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டது குறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது[3]. இரண்டு ஆண்டுகளாகப் படித்துக் கொண்டே இருந்தார் போலும். அதற்குள் ஊழல் தடுப்புத் துறைக்குத் தெரிந்து விட்டது போலும்.

மத்திய-மாநில அரசுகளின் மோதல்கள், அரசியல் குழப்பங்கள்: டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது[4]. அங்குச் சமீபத்தில் தான் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடுகளில் ரெய்டு நடத்தி இருந்தனர்[5]. இதுபோன்ற ரெய்டுகள் இப்போதைக்கு அங்கு முடிவதாகத் தெரியவில்லை. இப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் ஊழல் புகார் ஒன்றில் செய்யப்பட்டு உள்ளார்.  பிஜேபி-அல்லாத மேற்கு வங்காளம், பஞ்சாப், தில்லி, கேரளம் முதலிய மாநிலங்கள் – மாநில அரசாளும்  ஆட்சியாளர்கள், ஆளும் மத்திய அரசுடன் எப்பொழுதும் பிரச்சினை செய்து கொண்டு வந்தது தெரிந்த விசயமே. ஆளுநர் விவகாரம் என்று வைத்துக் கொண்டு அவ்வாறு கலாட்டா செய்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், திராவிட மாடல், என்றெல்லாம் கூவிக் கொண்டு, முழுமையாக மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடித்து வருகிறது. இதற்கு, திராவிடத்துவ சித்தாந்திகள் திராவிடியன் ஸ்டாக், ஒன்றிய அரசு, மாநில சுயயாட்சி போன்ற குப்பையில் வீசப் பட்ட சித்தாந்தங்களையும் துடைத்து கையில் எடுத்துள்ளனர்.

விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது என்றால் அதை இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர்?: இஸ்லாமிய மத மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்கள், நிலங்களை பராமரிக்க, நிர்வகிக்க பொது மற்றும் தனியார் வக்பு வாரியங்கள் உள்ளன. நம்பிக்கையாளர்கள் அல்லாவுக்கு பயந்து, பய-பக்தியுடன் செயல் படவேண்டும், செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றில் எப்படி ஊழல் வந்தது என்பதனை அல்லாவிடாம் தான் கேட்க வேண்டும் போலிருக்கிறது. இதனிடையே, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான். இவர் 2016-ல் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக செயல்பட்டார். தலைவராக இருந்த காலத்தில், விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது[6], பணமோசடியில் ஈடுபட்டதாக அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது[7]. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியின் வீட்டில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 24 லட்ச ரூபாய், உரிமம் இல்லாத 2 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றினர்.

வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில்  முறைகேடு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கு: அப்படியென்றால், இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர், மற்ற வக்பு போர்ட் உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்? போன்ற கேள்விகள் எழுகின்றன. வக்பு வாரிய ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை லஞ்ச ஒழிப்புத்துறை (ஏசிபி) போலீசார் 16-09-2022 அன்று கைது செய்தனர்[8]. டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனதுல்லா கான் இருந்து வருகிறார்[9]. இவர், வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.12 லட்சம் ரொக்கம், உரிமம் பெறாத துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1609-2022 அன்று நண்பகலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான அவரை, போலீசார் திடீரென கைது செய்தனர்.

வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார்: தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது[10]. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹர்னாம் சிங், பர்வேஷ் ஆலம், அலி மெஹந்தி, பர்வேஷ் முகமது, அன்ஸார் -அல்-ஹக், ஜாவேத் செளத்ரி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிக் குழு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை 15-09-2022 வியாழக்கிழமை அன்று சந்தித்து மனு அளித்தது[11]. அதில், தில்லி வக்ஃபு வாரியத்தில் அமைச்சர் அமானதுல்லா கான் அவரது உறவினர்களை முறைகேடாக நியமித்துள்ளார். இதுபோன்று முறைகேடாக 33 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஹர்னாம் சிங் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என துணைநிலை ஆளுநர் உறுதியளித்துள்ளார்’ என்றார். பர்வேஷ் ஆலம் கூறுகையில், “தில்லி வக்ஃபு வாரிய நியமன முறைகேடுகள் தொடர்பாக அதன் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும்’ என்றார். ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை. இது காங்கிரஸ் மாடல் போலும்.

எழும் இக்கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்குமா?:

  1. தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது.
  • அதாவது, தில்லி வக்ஃபு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டு தில்லி வக்ஃபு வாரியத்தின் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
  • ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை.
  • இது காங்கிரஸ் மாடல் போலும், தில்லி மாடல் அவ்வாறு இருக்கும் பொழுது, திராவிட, வங்காள மாடல்களும் அப்படியே உள்ளன!
  • பஞ்சாப, சிந்து, குஜராத, மராடா, திராவிட, உத்கல, வங்கா – கூட பொறுந்துகிறது. ஆனால், இந்த கூட்டணி பார்முலா செல்லுமா என்று பார்க்க வேண்டும்.
  • வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளது?
  • குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை எப்படி அந்த முகமதியர்-முஸ்லிம்கள் மீற முடியும், ஊழல் செய்யக் கூடும், அல்லா அனுமதி அளித்தாரா?
  • மோமின்கள் எப்படி காபிர் அதிலும் நாத்திக, கம்யூனிஸ காபிர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? யார் அனுமதித்தது?
  • மோமின்–காபிர் கூட்டு, சகவாசம், கூட்டணி ஹராமா-ஹலாலா, இதனால் கிடைப்பது சொர்க்கமா-எரியும் நரகமா, அல்-கிதாபியா என்ன சொல்கிறது?
  1. தமிழகம் போல, தில்லியிலும் இந்துக்கள், கோவில் நிலங்களை முகமதியினர் ஆக்கிரமித்து உள்ளார்களா? வக்பிடம் சான்றிதழ் கொடுக்க ஆணை போட்டுள்ளார்களா?

© வேதபிரகாஷ்

17-09-2022


[1] இ.டிவி.பாரத், வக்ஃபு வாரிய நிதி முறைகேடு: தலைவர் அமனத்துல்லா கான் கருத்து, Published on: January 30, 2020, 4.33 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/bharat-news/delhi-acb-books-aap-mla-amanatullah-khan-for-alleged-misuse-of-waqf-board-funds/tamil-nadu20200130163314221

[3] A case against Khan was filed in 2016, following a complaint from the sub-divisional magistrate (headquarters), revenue department, alleging that appointments to various “existing and non-existing posts” in the Waqf Board were “arbitrary and illegal”. The ACB registered an FIR in January 2020, under Section 7 (public servant taking gratification) of the Prevention of Corruption Act, and Section 120-B (criminal conspiracy) of the IPC.

https://indianexpress.com/article/cities/delhi/aaps-amanatullah-khan-raided-acb-finds-pistol-and-cash-8155646/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, ஊழல் புகார்.. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் கைது! இரு துப்பாக்கிகளும் பறிமுதல்! டெல்லியில் பரபர, By Vigneshkumar Published: Saturday, September 17, 2022, 0:00 [IST].

[5] https://tamil.oneindia.com/news/delhi/after-raids-aap-mla-amanatullah-khan-arrested-in-2-year-old-allegation-476093.html

[6] தினத்தந்தி, வக்பு வாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்.எல்.. கைதுலட்ச கணக்கில் பணம், துப்பாக்கி பறிமுதல், தினத்தந்தி Sep 17, 2:08 am

[7] https://www.dailythanthi.com/News/India/aaps-amanatullah-khan-arrested-after-raids-794221

[8] தினகரன், வக்பு வாரியத்தில் ஊழல் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி, 2022-09-17@ 02:26:04

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=799774

[10] தினமணி, தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு விவகாரம்: துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்,  By DIN  |   Published On : 12th July 2019 07:20 AM  |   Last Updated : 12th July 2019 07:20 AM.

[11] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/jul/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3190553.html

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [2]

ஓகஸ்ட் 29, 2020

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [2]

மேல்முறையீடு முதலியவை இருக்கும் போது, குறுக்குவழி பின்பற்றப் படுகிறதா?: தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க எதிர் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது[1]. முன்னதாக தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்று தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது[2]. தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது[3]. இந்நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று 28-08-2020 வெள்ளிக்கிழமை, விசாரணைக்கு வந்தது[4]. இதையடுத்து நீதிபதிகள், வக்பு வாரியம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் ஆக.17 அளித்த / பிறப்பித்த முந்தைய உத்தரவை ரத்து செய்வதாகவும்[5], அதேபோல் இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புவதாகவும் உத்தரவிட்டனர்[6]. இதையடுத்து தள்ளி வைக்கப்பட்டிருந்த முத்தவல்லிகள் மூலம் தோ்வு செய்யபட வேண்டிய 2 உறுப்பினா்களுக்கான தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது[7]. இதற்கான பணிகள் குறித்து அமைச்சா் நிலோபா் கபீல், வக்பு வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்[8].

வக்ஃப் கல்லூரி விவகாரம், உறுப்பினர்கள்தொடர்பு உள்ளதா?: மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பல்வேறு பணி நியமனங்கள் தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாகவும், அந்த தொகை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், வக்பு வாரிய தலைவரும், எம்.பி.யுமான அன்வர் ராஜா, அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்[9]. மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, பணி நியமன முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது[10]. இதை எதிர்த்து வக்பு வாரிய கல்லூரி நிர்வாகி என்.ஜமால் முகைதீன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து, அவற்றை ‘சீல்’ இடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.


அன்வர் ராஜா வீட்டில் 21-03-2029 அன்று சிபிஐ சோதனை: அதிமுக-வைச் சேர்ந்த அன்வர் ராஜா ராமநாதபுரம் எம்பி-ஆகவும் வக்ஃபு வாரியா தலைவராகவும் உள்ளார். மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மதுரை சிபிஐ அதிகாரி கார்த்திகை சாமி, காவல்துறை ஆய்வாளர் வேலாயுதம், மதுசூதனன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் 21-03-2010 அன்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள அன்வர் ராஜா வீட்டிற்கு சென்றனர்[11]. அங்கு அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சிபிஐ நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யயுள்ளது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சி எம்பி அன்வர்ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் சிட்டிங் எம்பி அன்வர் ராஜாவுக்கு சீட் வழங்கப்படாமல் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ராமநாதபுரத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது[12].

அரசியலா, உள்-பிரச்சினையா?: திராவிட அரசியலில் முஸ்லிம் லீக்குடன் திமுக-அதிமுக வைத்துள்ள தொடர்புகள் அலாதியானது. ஐ.யூ.எம்.எல், முஸ்லீம் லீக் முதலியவை மூன்று-நான்கு குழுக்களாக இருந்து, திமுக-அதிமுக பேரம் பேசி, எப்பொழுதும் மூன்று-நான்கு எம்.எல்,ஏக்களை தேர்ந்தெடுத்துக் கொள்வது, முகமதிய கட்சிகளின் சாமர்த்தியம். ஒருவேளை, திமுக-அதிமுக கட்சிகள், இதை வைத்து, 2021 தேர்தலுக்கு ஒத்திகை பார்க்கின்றனவோ எனு தோன்றுகிறது. எப்படியும் எம்.எல்,ஏக்களை வரவு வைக்க வேண்டும் என்றால், இதுதான் அரசு-அதிகாரத்துடன் செயல்படலாம். திமுக எம்.பி பலம் வைத்து, கண்க்கு போடலாம். ஆனால், அதற்கெல்லாம், முகமதியர் ஒப்புக் கொள்ள வேண்டும். முகமதிய்ரைப் பொறுத்த வரையில், இதனை, அவர்கள் தங்களது, உள்ளுக்குள் முடித்துக் கொள்ளும் பிரச்சினையாகத்தான் எடுத்துக் கொள்வர்.

வேதபிரகாஷ்

29-08-2020


[1] தினத்தந்தி, தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடைஉச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு, பதிவு: ஆகஸ்ட் 28, 2020 11:57 AM

[2] https://www.dailythanthi.com/News/State/2020/08/28115722/Interim-injunction-against-the-order-of-the-Government.vpf

[3] தினகரன், தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்ற ஆணை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு, ஆகஸ்ட்.29, 2020.

[4] தினமணி, வக்பு வாரிய விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை, By DIN | Published on : 28th August 2020 11:56 PM |

[5] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/aug/28/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D–%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3456534.html

[6] தினகரன், தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்ற ஆணை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு, ஆகஸ்ட்.29, 2020; https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=612999

[7] தினமணி, 2 வக்புவாரிய உறுப்பினா் பதவிக்கு விரைவில் தோ்தல், By DIN | Published on : 29th August 2020 08:34 AM.

[8] https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/aug/29/2-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3456631.html

[9] தினத்தந்தி, மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, பதிவு: ஏப்ரல் 17, 2019 02:46 AM

[10] https://www.dailythanthi.com/News/India/2019/04/17024643/Madurai-Waqf-Board-College-Appointment-Issue-CBI-Supreme.vpf

[11] நியூஸ்.தமிழ்.18, சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை!, LAST UPDATED: MARCH 22, 2019, 1:32 PM IST

[12] https://tamil.news18.com/news/tamil-nadu/cbi-raid-in-wakf-board-office-in-chennai-mannadi-anwar-raja-va-128925.html

ரம்ஜான் கஞ்சியும், செக்யூலரிஸமும், பச்சரிசியும்-ரேசன் அரிசியும், இப்தர் பார்ட்டிகளும்-சமூக விலகலும்- எல்லாமே கொரோனா விளையாட்டு தான்!

ஏப்ரல் 17, 2020

ரம்ஜான் கஞ்சியும், செக்யூலரிஸமும், பச்சரிசியும்-ரேசன் அரிசியும், இப்தர் பார்ட்டிகளும்-சமூக விலகலும்- எல்லாமே கொரோனா விளையாட்டு தான்!

No gruel cooking at mosque, Daily Thanthi, 17-04-2020

2020 ரம்ஜான் மாறுபட்டதாக இருக்கிறது: கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது[1]. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க, அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது[2] என்று நியூஸ்.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், ரம்ஜானுக்கு இலவசமாகத்தான் அரசு அர்சி டன் டன்னாக கொடுத்து வருகிறது.. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது[3]. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்[4]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், “5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும்,” என்றார். இவை வரும் 19ஆம் தேதிக்குள் [இஸ்லாமிய] தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்[5]. மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[6].

No gruel cooking at mosque, Malai Murasu, 17-04-2020

அரசு தலைமை காஜியை வைத்து விவகாரத்தை முடிக்க ஆலோசனை கூட்டம் நடதியது: இதனிடையே இது போன்ற விவகாரங்கள் முடிவெடுக்கும் போது இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து தான் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்[7]. ஆனால் இன்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியை அழைத்து அவருடன் மட்டும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது[8] என்கிறது இன்னொரு ஊடகம். ஏனெனில், துலுக்க இயக்கத்தினர், இதுவரை, “கொரோனா பிரச்சினை” வரும் வரை, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் கஞ்சி காய்ச்சுவது மசூதியிலா, விட்டிலா என்பதை எல்லாம் தீர்மானிப்பது, துலுக்கரின் வேலையே தவிர அரசின் வேலை கிடையாது. ஆனால், இம்முறை கரோனா அச்சுருத்தல், அனைவரையும் பீடித்துள்ளது. தப்லிக் விவகாரத்தினால், துலுக்கர் பலர், தொற்றினால் பீடித்துள்ளனர். அதனால், குடும்பங்கள், வீதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், யார் கஞ்சி காய்ச்சுவது, யாருக்குக் கொடுப்பது, குடித்தால் என்னாகும் போன்ற கேள்விகள் எழுந்து அச்சுருத்தத் தொடங்கி விட்டன. இது அவரளுக்குள்ளேயே பிரச்சினையாகி உள்ளது.

Mosques get free rice, The Hindu,17-04-2020

ரேசனில் மோசமான அரிசி, ரம்ஜான் கஞ்சிக்கு பச்சரசி: ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும்[9]. ரேசனில் மோசமான அரிசி விநியோகித்தது இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சக்கூடாது என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்[10]. இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 25 அன்று தொடங்க உள்ளது[11]. ஆனால், கொரோனா பீதி காரணமாகப் பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், துலுக்கர் ஒன்றாக வந்து, கஞ்சி காய்ச்சி உண்ணும் நிலையில், கரோனா விதிமுறைகள் பின்பற்ற முடியாமல் போகும். அதனால், பிரச்சினை ஏற்படும். அதனால், ரமலான் நோன்பு வருவதை ஒட்டி நோன்புக் கஞ்சி காய்ச்ச தமிழக அரசு அரிசியை வழங்குவது, ரமலான் நோன்பை எதிர்கொள்வது, தொழுகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இஸ்லாமியத் தலைவர்கள், தலைமை காஜி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

No gruel cooking at mosque, Namadhu Murasu, 17-04-2020

5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம்: பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம். இதை இந்த ஆண்டு கரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவினைக் கருத்தில் கொண்டு அரிசியை எப்படி வழங்குவது பள்ளிவாசல்கள் எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்லாமியத் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினோம். இன்றும் இஸ்லாமிய சமயத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஆலோசனை செய்து அதன்படி சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நோன்புக் கஞ்சி காய்ச்ச பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் அரிசி 19-ம் தேதிக்குள் நேரடியாக வழங்கப்படும். அதை சிறு, சிறு பைகளாக பிரித்து தன்னார்வலர்கள் மூலம் அந்தக் குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

No gruel cooking at mosque, Manasoli, 17-04-2020

கஞ்சியாக கொடுப்போம் என்று அடம் பிடித்த துலுக்கர்: செயலர் தொடர்ந்தார்,  “இதைக் கஞ்சியாக தயாரித்து வழங்கி விடுகிறோமே என இஸ்லாமியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கஞ்சி தயாரித்து வழங்குவது என்பது தினந்தோறும் கஞ்சியைத் தயாரித்து அதைத் தன்னார்வலர்கள் வீடு நோக்கிச் சென்று கொடுப்பது. அப்படிச் செய்தால் பாத்திரங்கள் பயன்பாடு காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. நோய்த்தொற்று வரக் காரணமாக அமையும். ஆகவே அது கூடாது என முடிவெடுக்கப்பட்டது[13]. ஆகவே 5,450 டன் பச்சரிசி வழக்கம்போல் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். அதை 22-ம் தேதிக்குள் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் கொண்டு சேர்த்து விடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட, குவாரண்டைன் பகுதிகளில் என்ன வழிவகைகளைப் பின்பற்றி அளிக்கப்படுகிறதோ அதை அப்படியே பின்பற்றி தன்னார்வலர்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கொண்டு சேர்ப்பார்கள்[14]. சிறப்புத்தொழுகை பற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்கள் மதம் சார்ந்த பிரச்சினை. அதை அவர்கள் மதம் சார்ந்த தலைவர்கள் அறிவிப்பார்கள். ஏற்கெனவே வீடுகளில் தொழுகை என முடிவெடுத்து விட்டார்கள். அதனால் பிரச்சினை இல்லை,” இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பேட்டி அளித்தார்.

No gruel cooking at mosque, Makkal Kural, 17-04-2020

ஈரோட்டில் தனித்தனியாக கஞ்சி: ஈரோடு மாவட்ட, அரசு ஹாஜி முகம்மது கிபாயதுல்லா, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்[15]. அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசால் வழங்கப்படும் அரிசி, எங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை, நாங்களே ஜமாஅத் மூலமாக வீடுகளுக்கு வினியோகம் செய்து விடுகிறோம். அல்லது நாங்களே, நோன்பு கஞ்சி தயாரித்து வீடுகளுக்கு அனுப்பி, மக்கள் மசூதிகளுக்கு வருவதை தவிர்த்து விடுகிறோம். எனவே, ரம்ஜான் நோன்புக்காக வழங்கும் அரிசியை எங்களுக்கு வழங்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளார்[16]. ஈரோட்டில், கொரோனா பிரச்சினை தீவிரமாக உள்ளது என்பது அறிந்ததே. பெருந்துறை ஆஸ்பத்திரியில், தொற்றுடன் இன்னும் பீடித்துள்ளவர்கள் இருக்கிறார்கள்.

©  வேதபிரகாஷ்

17-04-2020

No gruel cooking at mosque, Tamil Hindu, 17-04-2020

[1] நியூஸ்.தமிழ், நியூஸ்.தமிழ், ரம்ஜான் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு !!, By Searma Samy | Thu, 16 Apr 2020, By Searma Samy | Thu, 16 Apr 2020

[2] https://newstm.in/tamilnadu/tamil-nadu-government-imposes-restrictions-on-ramzan/c77058-w2931-cid538450-s11189.htm

[3] தினத்தந்தி, ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்து ஆலோசனைஇஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அறிவிப்பு, பதிவு : ஏப்ரல் 17, 2020, 08:00 AM

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/17080011/1265214/Discussion-on-Ramzan-festival.vpf

[5] தினகரன், பள்ளிவாசல்களுக்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்குள் நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும்: தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி, 2020-04-16@ 18:05:50.

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=579522

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுப்புவீடுகளுக்கு பச்சரிசியை விநியோகிக்க முடிவு, By Arsath Kan | Published: Thursday, April 16, 2020, 20:21 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/denial-of-permission-to-produce-fasting-porridge-in-mosques-382848.html

[9] தமிழ்.இந்து, ரமலான் நோன்புக் கஞ்சிக்கு 5,450 டன் அரிசி; பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சப்படாது: தலைமைச் செயலர் அறிவிப்பு, Published : 16 Apr 2020 06:37 PM

Last Updated : 16 Apr 2020 10:01 PM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/549886-5450-tonnes-of-rice-for-ramadan-fasting-porridge-porridge-is-not-feverish-in-mosque-notice-of-chief-secretary.html

[11] ஏசியா.நெட்.தமிழ், வீட்டிலேயே தொழுகைபள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி கிடையாதுதமிழக அரசு அதிரடி அறிவிப்பு!, By Asianet Tamil, Chennai, First Published 16, Apr 2020, 9:34 PM…

[12] https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-government-on-ramzan-festival-in-corona-curfew-period-q8w1zw

[13] புதியதலைமுறை, பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு, Web Team, Published :16,Apr 2020 09:48 PM

[14] http://www.puthiyathalaimurai.com/newsview/68618/Chief-Minister-Palanisamy-has-said-that-Islamic-organizations-have-decided-that-Ramadan-does-not-provide-porridge

[15] தினமலர், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி: மாவட்ட அரசு ஹாஜி கோரிக்கை, Added : ஏப் 15, 2020 09:02; https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561

[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது – தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி!

ஜனவரி 29, 2014

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது – தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி!

பகீம் பெய்க் கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய்க் கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது: இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்களை மாநிலங்கள் தோறும் ‘வக்ஃப் வாரியம்’ நிர்வகித்து வருகிறது. இதற்கான மத்திய வக்ஃப் கமிட்டி அலுவலகம் புது டெல்லியில் உள்ளது. இதனை மேம்படுத்தி ‘தேசிய வக்ஃப் மேம்பாட்டு வாரியம்’ [ the National Waqf Development Corporation Limited (NAWADCO)] ஒன்றை ஏற்படுத்தி நாடு முழுவதிலும் உள்ள 4.9 லட்சம் வக்ப் சொத்துகளை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து நலிவடைந்த நிலையில் உள்ள ஏழை முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ள வாரியங்களை சேர்த்து இப்படி ஒரு கம்பனி உருவாக்குவதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை.

பகீம் பெய்க் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய்க் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

வக்ப் என்றால் என்ன?: வக்ப் என்றால் ஒரு முஸ்லிம் எந்த அசையும் அல்லது அசையாத சொத்தை முஸ்லிம் சட்டப்படி ஒரு புனிதமான, மதம் மற்றும் தரும காரியங்களுக்கு உபயோகப்படுத்தப் படக்கூடிய சொத்தாகும். ஒருமுறை அவ்வாறு சொத்தை அளித்து விட்டால், அளித்தவருக்கும் அச்சொத்துக்கும் உள்ள எல்லா உரிமைகளும் இல்லாமல் போய்விடுகின்றன. அதாவது அதற்குப் பிறகு, வக்ப் வாரியத்தின் அனுமதி இல்லாமல் அச்சொத்தை மாற்றியமைக்கவோ, மாற்றவோ எம்முறையிலும் விற்கவோ முடியாது. இந்த சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து நலிவடைந்த நிலையில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்கு உதவ உபயோகப்படுத்தப் படுகிறது. ஆனால், முஸ்லிம்களே – அதாவது வாரியத்தில் உள்ள மற்ற பணக்கார முஸ்லிம்கள் – அவற்றை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

அதாவது, முஸ்லிம்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை ஏன் இப்படி பெரிது படுத்தி, அதற்கு ஒரு கம்பனியை உண்டாக்க வேண்டும்? முஸ்லிம்களில் உள்ள எல்லா பிரிவினரும் (சுன்னி, ஷியா, போஹ்ரா, அஹம்மதியா, லெப்பை, சையது) இதனை ஏற்றுக் கொள்வார்களா அல்லது மறுப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப் படுமா?

Manmohan Singh with Sonia Gandhi and K. Rahman Khan inauguration of National Waqf Development Corporation in New Delhi on 29-01-2014. Photo-S. Subramanium

Manmohan Singh with Sonia Gandhi and K. Rahman Khan inauguration of National Waqf Development Corporation in New Delhi on 29-01-2014. Photo-S. Subramanium

தேசிய  வக்ஃப்  மேம்பாட்டு  வாரியத்தின்  துவக்க  விழா: இந்த தேசிய வக்ஃப் மேம்பாட்டு வாரியத்தின் துவக்கவிழா 29-01-2014 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இது சிறுமான்மையினர் நலம் அமைச்சகத்தின் கீழ் வருகின்ற மத்திய அரசு நிறுவனமாக ஏற்படுத்தப் பட்டுள்ளது. வல்க் (திருத்தம்) சட்டம் 2013 [Waqf (Amendment) Act, 2013] உருவாக்கப் பட்டு, வக்ப் சொத்துக்களை வெலிப்படையாக நிருவகிக்கும் முறையில் சட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி நிதியுதவியுடன் இந்நிறுவனம் அமைக்கப் பட்டுள்ளது. மத்திய / மாநிலங்களில் உள்ள வக்ப் வாரியங்கள் மற்றும் மூத்தாவலி [state/Union Territory waqf boards and mutawallis (managers)] முதலியோர்களுக்கு நிதியுதவி அளித்து குஸ்லிம்களுக்கான சொத்துகளை மேம்பாடு செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது[1]. இதுவரை 4,90,00 வக்ப் சொத்துக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன, அவற்றி மூலம் ரூ.163 கோடி வருவாய் வந்துகொண்டிருக்கிறது[2]. சச்சார் கமிட்டியின் அறிக்கையின் படி, இவற்றை தகுந்தபடி மேம்பாடு செய்தால் குறைந்த படசம் ரூ.12,000 கோடிகள் வரும் உயரும் என்று பரிந்துரைத்துள்ளது[3]. பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பகீம் பெய் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

எப். ஃபஹிம்பெய்க்என்பவரின் எதிர்ப்பு: பிரதமர் பேசி முடித்ததும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து எழுந்து நின்ற ஒருவர், மேடையை நோக்கி கையை நீட்டி கூச்சலிட்டார்[4]. பிரதமரை நோக்கி விரலை நீட்டிய அவர், ‘ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் எதையுமே அரசு ஒழுங்காக செயல்படுத்துவதில்லை[5]. எந்த திட்டத்தின் பலனும் நலிந்த நிலையில் இருக்கும் சிறுபான்மையின மக்களை சென்றடைந்ததே இல்லை[6]. இந்த நிலையில் இதைப் போன்ற புதிய திட்டங்களுக்கான அவசியமே இல்லை’ என்று குற்றம் சாட்டினார்[7]. ‘இதுவரை உங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட கடிதங்களை நான் அனுப்பியுள்ளேன். ஆனால், அவற்றுக்கான எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை’ எனவும் பிரதமரை பார்த்து நேருக்குநேராக அவர் கேள்வி எழுப்பினார். பிரதமரும், சோனியா காந்தியும் அந்நபரை உற்றுபார்த்தபடி அமர்ந்திருந்தனர். இதனால் அந்த அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்துவந்த போலீசார் அவரை அரங்கத்தில் இருந்து வெளியேற்றி அழைத்து சென்றனர்[8]. பிரதமருக்கு எதிராக குரல் எழுப்பிய அவரது பெயர் எப். ஃபஹிம் பெய்க் [ M Faheem Baig] என்றும் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாபராபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், மேடையில் அமர்ந்திருந்த சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான  மத்திய  மந்திரி ரஹ்மான் கானை அழைத்த பிரதமர், ஃபஹிம் பெய்க்கை சந்தித்து அவரது குறை என்னவென்று கேட்டறிந்து, அவர் ஏற்கனவே அனுப்பியதாக கூறும் கடிதங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்[9].

தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி: ஏற்கெனவே வக்ப் வாரியங்கள் எல்லா மாநிலங்களிலும் உள்ளபோது, அவற்றிற்கெல்லாம் சேர்த்து ஒரு கம்பெனி உருவாக்கப் பட வேண்டிய அவசியம் என்ன என்று முஸ்லிம்களே கேட்கிறார்கள். ஏனெனில், இதன் மூலம், மேலும் அதிகார வர்க்க முஸ்லிம்கள் தான் பயனடைவார்களே தவிர சாதாரண முஸ்லிம்களுக்கு எந்த நலனும் ஏற்படாது.மேலும், இந்த கம்பெனி அரசின் கட்டுப்பாடில் வரும் என்ற நிலையிருக்கும் போது, அரசியல் பலம் வாய்ந்த முஸ்லீம்கள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்வர். இதனால் தான், கூட்டத்தில் ‘ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் எதையுமே அரசு ஒழுங்காக செயல்படுத்துவதில்லை[10]. எந்த திட்டத்தின் பலனும் நலிந்த நிலையில் இருக்கும் சிறுபான்மையின மக்களை சென்றடைந்ததே இல்லை[11]. இந்த நிலையில் இதைப் போன்ற புதிய திட்டங்களுக்கான அவசியமே இல்லை’, என்று எப். ஃபஹிம் பெய்க் குற்றஞ்சாட்டினார்[12]. மேலும், செக்யூலரிஸ அரசு இம்மாதிரியான கம்பெனிகளை உருவாக்கினால், மதசார்பு நிலை என்னாகும் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்குல் மேலாக, தேர்தலுக்கு முன்னர் இது ஆரம்பிக்கப் பட்டுள்ளதால் இது சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி என்றே தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 30-01-2014


[3] NAWADCO has been set up on a recommendation of the Sachar committee. India has the largest number of waqf properties in the world. There are 490,000 registered waqf properties and the current annual income from these is about Rs 163 crore. The Sachar committee has estimated such properties, if properly developed, with a minimum return of 10 per cent, would be able to generate at least Rs 12,000 crore per annum.

[4] மாலைமலர், பார்வையாளரின் எதிர்கேள்வியால் பிரதமர், சோனியா பங்கேற்ற ‘வக்ஃப்’ நிகழ்ச்சியில் பரபரப்பு, பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 29, 2:18 PM IST