Archive for the ‘லவ்ஜிஹாத்’ category

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

தி கேரளாஸ் டோரி, லவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (2)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (2)

கோயம்புத்தூரில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம்: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கோவையில் வணிக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்[1]. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு – பரபரப்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்[2]. இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்[3]. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது[4]. இதனைத் தொடர்ந்து ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.

இப்படத்தில் விவரிக்கப் படும் விசயங்கள் என்ன?: இதன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய மாணவிக்கு தம்முடன் தங்கியிருப்பவர்களை மூளைச்சலவை செய்யும் ASSIGNMENT கொடுக்கப்படுகிறது. அவரோடு 4 இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து கொள்கின்றனர். பிற மதக் கடவுளர்களை இஸ்லாமிய மாணவி விமர்சிக்கும் காட்சிகளும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது என அவர் கூறும் வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்துகொள்வது போன்றும், அதன்பிறகு அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்றும் காட்டப்படுகிறது. இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இது மேலும் அனலைக் கூட்டியுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்!: இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய் ‘THE கேரளா ஸ்டோரி’ திரைப்படம்” என கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும், “படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை என்றால், கேரளாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கிறோம்” என்றும் அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் தலையிட்டு, “இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளர்” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.

படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்: . கேரள உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம்!’தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று வாதம் நடந்தது. இப்படத்துக்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ”படத்தின் ட்ரெய்லரில் வரும் உரையாடல்கள் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அப்பாவி மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இது கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கலாம். இந்தப் படம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அப்படத்தின்  ட்ரெய்லரே உணர்த்துகிறது” என்றார். ”படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் அல்ல” – நீதிபதி அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிராக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்றார். அதற்குப் பதிலளித்த துஷ்யந்த் தவே, முழுப் படத்தையும் பார்த்தால் புரியும் என்றார். அதற்கு நீதிபதி, தணிக்கை வாரியம் சர்ச்சைக்குரிய பல காட்சிகளை நீக்கிவிட்டதே என்றும் மேலும் இந்தப் படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் இல்லை எனவும் எடுத்துரைத்தார். அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புனைகதை என்றாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக இப்படம் அமைந்துள்ளது எனவும் வாதிட்டார்.

சில மாறுதல்களுடன் நீதிமன்றம் திரையிட அனுமதி: அதற்கு நீதிபதி, இந்து சன்யாசிகளை கடத்தல்காரர்களாகவும் பாலியல் வன்முறை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் இந்தி மற்றும் மலையாளத்தில் வெளிவந்து உள்ளன. அப்போதெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.   ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் மதத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டார்.   படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி கடம், ‘இது உண்மைக் கதைகளால் ஈர்க்கப்பட்ட புனைகதைஎன்று நாங்கள் டிஸ்கிளைமரில் குறிப்பிட்டுள்ளோம் என்றும் படத்தின் டிரெய்லருக்கு தணிக்கை வாரிய சான்றிதழ் தேவையில்லை,” எனவும் வாதிட்டார். மேலும் அவர், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ‘கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்’ என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இப்படத்தைக் குறிப்பிட்டது: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்[5]. பிரதமர் பேசுகையில்[6], “தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்தைத்தான் தடை செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது,” எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்[7].மேலும், “இந்த திரைப்படம் கேரளாவை சேர்ந்த பெண்கள் எப்படி ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதங்களில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்? பின்னர் அவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் போன்றவை நடைபெறுகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பாழாகிறது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தீவிரவாத ஆதரவாளர்களுக்கு துணைபோகிறது,” என்று பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்[8].

உண்மையான செக்யூலரிஸ்டுகள்கிறிஸ்துவர்கள்இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறுமா?: கவனமாக இப்பிரச்சினையை ஆராய்ந்தால், அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம் ஓட்டுகளை வாங்கினால் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும். இவர்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும். கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர். ஆனால், அங்கு இந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது. ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

  1. தி கேரளா ஸ்டோரி பிரச்சினையை கவனமாக ஆராய்ந்தால், அதை அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனலாம்.
  • கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை,
  • ஹிந்துக்கள் 55%, முஸ்லிம் – 27%, கிறிஸ்துவர் – 18% என்றுள்ள நிலையில், யாரும் இந்து ஓட்டுவங்கியை நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள்!
  • ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம்களிடம் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும்.
  • ஹிந்துக்கள்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும்.
  • கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர்.
  • ஆனால், அங்கு ஹிந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. இதனால், ஹிந்துக்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர்!
  • அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது.
  • ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
  1. இதனால் தான் ஜிஹாத் ஆதரிக்கப் படுகிறது, ஹிந்துக்களுக்கு எதிராக விரோதிகள் சேர்கின்றனர், எல்லைகளும் கடக்கின்றன!

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. கோவையில் பரபரப்பு, By தந்தி டிவி, 5 மே 2023 6:33 PM

[2] https://www.thanthitv.com/latest-news/protest-against-the-movie-the-kerala-story-commotion-in-coimbatore-184433

[3] நக்கீரன், தி கேரளா ஸ்டோரிவலுக்கும் எதிர்ப்புகள்; களத்தில் முதல் போராட்டம், Published on 05/05/2023 (18:21) | Edited on 05/05/2023 (19:32)

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kerala-story-continues-protests-first-struggle-field

[5] புதியதலைமுறை, தி கேரளா ஸ்டோரி‘ : அனல் பறக்கும் விவாதம்.. சூடுபிடிக்கும் போராட்டங்கள்.. களத்தில் இறங்கிய பிரதமர்!, , Justindurai S, Published on : 5 May, 2023, 3:21 pm.

[6] https://www.puthiyathalaimurai.com/india/kerala-high-court-refuses-to-stay-release-of-the-kerala-story

[7] தினமணி, தி கேரளா ஸ்டோரி: பிரதமர் மோடி கருத்து, By DIN  |   Published On : 05th May 2023 03:04 PM  |   Last Updated : 05th May 2023 03:04 PM

[8] https://www.dinamani.com/india/2023/may/05/pm-modi-opinion-about-the-kerala-story-movie-4001039.html

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? (1)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?  (1)

19-04-2022 கவர்னருக்கு கருப்புக் கொடி, கொம்புகள் எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?

மார்ச் 2022 – தமிழக முஸ்லிம் கர்நாடக நீதிபதிகளை மிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.  மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.

  1. மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
  2. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
  3. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
  4. காரைக்கால் முகமது இர்பான், 22;
  5. சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3].  அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிக் காட்டி போலீஸாரை மிரட்ட தைரியம் எப்படி வந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம்  என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.

முகமது ஆசிக் கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] மாலைமலர், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்தமிழகத்தை சேர்ந்தவர் கைது, பதிவு: மார்ச் 23, 2022 06:07 IST; மாற்றம்: மார்ச் 24, 2022 01:27 IST.

[2] https://www.maalaimalar.com/news/national/2022/03/23060702/3604832/A-man-from-Tamil-Nadu-who-had-allegedly-issued-death.vpf

[3] தினமலர், .எஸ்., ஆதரவாளர்களுக்கு நிதியுதவி: பின்னணியை விசாரிக்கிறது என்..., Updated : மே 11, 2022  09:01 |  Added : மே 11, 2022  09:00

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3027224

[5] டாப்.தமிழ்.நியூஸ், மயிலாடுதுறை அருகே .எஸ்..எஸ் வழக்கில் தொடர்புடைய இளைஞர் கைதுஎன்.. அதிகாரிகள் நடவடிக்கை!,  By NEWSDESK Fri, 28 May 2021 2:22:36 PM.

[6]https://www.toptamilnews.com/districts/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/youth-arrested-in-connection-with-isis-case-near/cid4926959.htm

தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[7] தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[8] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/2021/may/28/the-youth-who-came-out-on-bail-in-connection-with-the-organization-was-arrested-near-mayiladuthurai-3631508.html

[9] இ.டிவி.பாரத், தலைமறைவு குற்றவாளி கைதுதேசிய புலனாய்வு முகமை அதிரடி, Published on: May 28, 2021, 3:31 PM IST

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/the-culprit-involved-in-the-isis-case-has-been-arrested/tamil-nadu20210528153155208

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

14-02-2022 அன்று காணாமல் போன சிறுமி சாவு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார்[1]. 16 வயது என்கிறது தமிழ்.இந்து. அதன் பிறகு அவர் மாயமானார்[2]. 14-02-2022 அன்று காணாமல் போனாள் என்று மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் 15-02-2022 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். 16/17 வயது சிறுமி 12 வயது வித்தியாசம் கொண்ட ஒரு வாலிபனுடன் சென்றாளா அல்லது அவன் ஏமாற்றி, வலுக்கட்டாயமாக அல்லது வெறேதாவது காரணத்திற்காகக் கடத்திச் சென்றானா என்று புரிந்து கொள்ள முடியாதா? அதாவது, ஒரு முஸ்லிம், இந்து சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல், உடலுறவு கொண்டுள்ளான், கற்பழித்துள்ளான். ஆகையால், இது “லவ் ஜிஹாத்” வகையில் கூட வரும், என்றாகிறது.

14-02-202 அன்று காணாமல் போன சிறுமியை 03-03-2022 அன்று ஹனிபாவின் தாய் ஒப்படைத்தது, 06-03-2022 அன்று மரணமடைந்தது: இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் 03-03-2022 அன்று ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 06-03-2022 அன்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று நாட்களில் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மருத்துவ மனையிலும், மருத்துவர்கள் சிறுமி விசம் குடித்ததைக் கண்டு பிடித்து, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

05-03-2022 அன்று கைதான நாகூர் ஹனீபா சொன்னதுஎலி மருந்து சாப்பிட வைத்தேன்: இதற்கிடையே நேற்று முன்தினம் 05-03-2022 அன்று நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன[3]. இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு[4]: “நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை பிப்., 14ல் திருப்பரங்குன்றத்தில் நண்பர் பெருமாள் கிருஷ்ணன், 25, வீட்டிற்கு நண்பர்களுடன் அழைத்துச் சென்றேன்[5]. பின்னர் அங்கிருந்து 15-02-2022 அன்று ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன்[6]. இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன். இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[7]. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன். இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[8]. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[9]. அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்,” இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற காதலன் காதலியை ஏன் ஏமாற்ற வேண்டும்?: நாகூர் ஹனிபா சிறுமிக்கு மட்டும் எலிமருந்து கொடுத்து சாப்பிட வைத்து, இவன் துப்பி விட்டான் என்றால், நாடகம் ஆடியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்த அப்பாவி சிறுமியை கொலைசெய்ய தீர்மானித்திருக்கிறான். அப்படியென்றால் அவளை கொலைசெய்ய வேண்டிய அவ்சியம் என்ன? அவளை ஒரே அடியாக ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் என்ன? அதாவது, அவள் ஏதோ ஒரு உண்மையினை சொல்லலாம், அவ்வாறு சொன்னால், இவன் மாட்டிக் கொள்வான் என்ற நிலை இருந்திருக்கிறது. அத்தகைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில், “கூட்டு பலாத்காரம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவனே திருமணம் செய்து கொள்ளாமல் 14-02-2022 முதல் 02-03-2022 வரை கற்பழித்திருக்கிறான். மற்ற விவகாரங்கள் தெரியவில்லை.

8 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி: இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது: “மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்[10]. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.

©வேதபிரகாஷ்

07-03-2022


[1] தினத்தந்தி, மதுரை: 17 வயது சிறுமி கடத்தி விஷம் கொடுத்து கொலைகாதலன் உள்பட 8 பேர் கைது, மார்ச் 07, 04:52 AM.

[2] https://www.dailythanthi.com/amp/News/TopNews/2022/03/07045239/8-arrested-for-kidnapping-and-poisoning-girl.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, எலி மருந்து கொடுத்து 17 வயது மேலூர் சிறுமி கொலை? 8 பேர் கைது.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம், By Vishnupriya R, Updated: Mon, Mar 7, 2022, 14:08 [IST]

[4] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/police-arrested-8-members-those-who-are-involved-in-17-years-old-melur-girl-death-450910.html

[5] தினமலர், கடத்தப்பட்ட சிறுமி மரணம்: சிறுமியின் காதலன் உட்பட 8 பேர் கைது,  Added : மார் 07, 2022  10:48.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2977283

[7] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[8] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

[10] தமிழ்.இந்து, கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தலால் உயிரிழப்பு? – காதலன் உட்பட 8 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 07 Mar 2022 08:17 AM; Last Updated : 07 Mar 2022 08:17 AM.

[11] https://www.hindutamil.in/news/crime/774781-sexual-harassment.html

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு,  மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)!

நவம்பர் 5, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள்ஆள்சேர்ப்புமதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)!

Sathya Sarani PFI conversion factory-Vedaprakash

முகமதிய மற்றும் கிருத்துவர்களின்கர் வாபசிசெயல்கள்: “சத்திய சரனி” என்ற நிறுவனம்[1], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[2]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[3]. “சத்திய சரணி” இணைதளம், கிருத்துவர்கள், முஸ்லிம்களை ஏமாற்றி, அவர்களுக்கேற்ற முறையில், “கர்-வாபசி” போன்ற மதமாற்றம் செய்து வருகின்றனர், என்று குற்றஞ்சாட்டுகிறது[4]. அவர்கள் எப்படி ஏழை முஸ்லிம்களை மதமாற்றினார்களோ, அதேபோல, மறுபடியும், அவர்களை இஸ்லாத்தில் திரும்ப வரசெய்ய ஆவண செய்வதாகக் கூறிக்கொள்கிறது[5]. இத்தகைய, “கர்-வாபசி”களைப் பற்றி, அறிவுஜீவிகள் விவாதிப்பதில்லை. இத்தகைய மதமாற்றங்களும், “கடவுளின் சொந்த தேசத்தில்” பல கலவரங்களை உண்டாக்கலாம், அமைதியைக் குலைக்கலாம். ஐசிஸ்.ம் இதில் சேர்ந்து விடும் போது, பிரச்சினை தீவிரமாகி விட்டது.

PFI conversion factory- Nov.2017

மதமாற்றத்தில் போட்டியா, அடிப்படைவாதம் வேலை செய்து, தீவிரவாதத்தை அரங்கேற்ற முயற்சியா?: நூற்றுக்கணக்கில் கேரள முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸில் சேர்ந்தது, கொல்லப்பட்டது என்ற விவகாரங்கள் வெட்டவெளிச்சமாக, தினசரி செய்தியாகி விட்டது. போதாகுறைக்கு, அதில் மதமாற்றமும் சேர்ந்து விட்டதாலும், கிருத்துவ பெண்களும் பாதிக்கப் படுவதால், விவகாரம் முக்கியமாகி விட்டது. அதற்குள் இப்பொழுது ஐசிஸில் உள்ள ஆறுபேர் புகைப்படங்களை கேரள போலீஸார் வெளியிட்டது[6]:

  1. அப்துல் கையூம் [Abdul Ghayoom],
  2. அப்துல் மனஃப் [Abdul Manaf],
  3. ஷபீர் [Shabeer],
  4. சஃபான் [Safwan],
  5. சுஹைல் [Suhail] மற்றும்
  6. ரிஸ்வான், சுஹைலின் மனைவி [his wife Rizwana]

ஷாஜஹான் வெல்லுவ கன்டி [Shahjahan Velluva Kandy] என்பவன், தனது ஐசிஸ் தொடர்புகளை, பேஸ்புக் மூலமே தெரிவித்திருக்கிறான்[7]. அல்-குவைதா கவிதைகளை போட்டு, ஐசிஸ் போராளிகள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமும் கொடுத்துள்ளானாம்[8]. மதமாற்றம் என்பது கேரளாவில் பெரிய பிரச்சினையாக உள்ளது. கிருத்துவர்-முஸ்லிம்கள் இந்துக்களை மதம் மாற்றுவது என்ற நிலையுள்ளது தெரிந்த விசயமே, ஆனால், கிருத்துவர்-முஸ்லிம்கள் ஒருவரையொருவர் மதமாற்றி, தீவிரவாத காரியங்களில் ஈடுபட வைத்த நிலையில் தான் பிரச்சினை, பூதாகாரமாகி, வெளியில் தெரிய வந்தது. இதனை போட்டி என்றோ, கர்-வாபசி என்றோ சொல்லும் எல்லைகளைத் தாண்டியுள்ளது.

Kannur PFI members joined ISIS- photos- Dinakaran

ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[9]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[10]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய  ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[11]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில்  இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –

  1. ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
  2. ரிஷல் (30) வலாபட்டனம்,
  3. ஷமீர் (45)
  4. அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
  5. ஷாஜீர் (25) எச்சூர்

ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[12]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

Five Kerala Muslims killed in ISIS

கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்?  இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[13].

  1. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது.
  2. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது.
  3. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது.
  4. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது.
  5. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது.

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

6. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது.

7. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது.

8. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது.

9. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவஎர்களுடனே இருந்து விடுகிறது.

10. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது.

இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[14].

© வேதபிரகாஷ்

04-11-2017

Caliphate of Kerala- Courtesy- Shanknad

[1] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com,  http://www.sathyasarani.org/

[2] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[3] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html

[4] The website of the institution asserted that “Christian missionaries are targeting the poor Muslims from different parts of the state. They are brainwashed and driven to Christianity, exploiting their poverty and lack of religious awareness.” According to the website, Sathya Sarani “could identify such people (Muslims who have been converted to Christianity) and succeed in bringing them back to the faith by way of convincing them the concept of monotheism of Islam.”

https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms

[5] Times of India, Sathya Sarani attempted ‘Gharvapasi’ on Christian converts?, M P Prashanth| TNN | Nov 3, 2017, 11:04 IST.

https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms

[6] Hours after the India Today TV report , Kerala police released the names and photographs of half a dozen youngsters from the state who are currently with ISIS in Syria.The six, including a woman, have been identified as Abdul Ghayoom, Abdul Manaf, Shabeer, Safwan, Suhail and his wife Rizwana, all hailing from Kannur district. All the men were active PFI workers in Kannur.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[7] Shahjahan Velluva Kandy, a native of Kerala’s Kannur district, has also used Facebook to call Islamic State fighters ‘role models’ alongside posts on al- Qaeda ‘poetry’..

Daily Mail, Popular Front of India member exposed as ‘ISIS sympathiser’ on Facebook after failing to reach Syria three times and posting al-Qaeda poetry, By SHASHANK SHEKHAR and ARVIND OJHA PUBLISHED: 22:51 GMT, 1 November 2017 | UPDATED: 00:32 GMT, 2 November 2017.

[8] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-5040351/Popular-India-member-exposed-ISIS-sympathiser.html

[9] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

[10] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST

[11] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html

[12] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf

[13] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:

Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.

[14] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat

ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – இளம் பெண்கள் மீது குறி வைப்பது ஏன்? – காசர்கோடில் நடப்பதென்ன? (2)

ஜூன் 25, 2017

ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடுஆகியதா, விஸ்டெம் அகடெமிதீவிரவாதத்தை போதிக்கிறதாஇளம் பெண்கள் மீது குறி வைப்பது ஏன்? – காசர்கோடில் நடப்பதென்ன? (2)

Times Now coverage on Gaza Street, Wisdom Academy - 1

இளம்பெண்களின் மீது ஏன் குறி வைக்கப் படுகிறது?: இந்தியாவில் கேரளாவிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இந்து இளம்பெண்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்து தீவிரவாதப் பணிகளுக்குப் பயன்படுத்தவென்றே ஒரு கும்பல் இந்தியா வந்திறங்கியிருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அஜண்டாவே; குடும்பத்தின் போதிய அரவணைப்பின்றி அனாதையாக தன்னை உணரக் கூடிய இந்து இளம்பெண்களை அடையாளம் கண்டு அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக மூளைச் சலவை செய்து தங்களது நாசவேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே ஆகும். இதற்கென அவர்களது தலைமை அவர்களுக்கு ரேட் கார்டு ஒன்றையும் தயாரித்துத் தந்திருக்கிறது. அதிகமான இளம்பெண்களை மதமாற்றம் செய்து அரேபிய நாடுகளுக்கும், சிரியாவுக்கும் அனுப்பும் ஏஜண்டுகளுக்கு போனஸ், இன்செண்டிவ் எல்லாம் உண்டாம். அதாவது, பெண்கள் சுலபமாக மூளைச்சலவை செய்ய முடிகிறது. அவர்கள், தீவிரவாதத்திற்கு,குறிப்பாக தற்கொலை குண்டாக மாற எளிதில் தயாராகிறர்கள். மேலும், தீவிரவாதிகள் தங்களது காமப்பசிக்கும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இவற்றைப் பற்றி, முந்தைய பதிவுகளில் விளக்கப் பட்டுள்ளன.

IS rate card for conversion-1

மதம் மாற்ற விலைப்பட்டியல் வைத்துள்ளார்கள்: இந்துப் பெண்களை அவர்கள் சார்ந்துள்ள மதம், ஜாதி, உள் ஜாதி எனப் பகுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு விலை நிர்ணயித்திருக்கிறார்கள்[1]. அதிர்ச்சி தரும் அந்த ரேட் கார்டுகள் தெரிவிக்கும் விவரங்களைக் கண்டால் அதில் இருக்கும் பயங்கரத் தன்மை விளங்கும்…

  • இந்து பிராமணப் பெண்ணுக்கு – 5 லட்சம் ரூபாய்கள்
  • இந்து சத்ரியப் பெண்ணுக்கு –   4. 5 லட்சம் ரூபாய்கள்
  • இந்து (OBC, SC, ST, NT)  –  2 லட்சம் ரூபாய்கள்
  • ஜெயின் இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு- 3 லட்சம் ரூபாய்கள்
  • குஜராத்தி பிராமணப் பெண்ணுக்கு- 6 லட்சம் ரூபாய்கள்
  • குஜராத்தி ( கட்ச் பெண்ணுக்கு) – 3 லட்சம் ரூபாய்கள்
  • பஞ்சாபி சீக்கியப் பெண்ணுக்கு- 7 லட்சம் ரூபாய்கள்
  • பஞ்சாபி இந்துப் பெண்ணுக்கு – 6 லட்சம் ரூபாய்கள்
  • ரோமன் கத்தோலில் கிறிஸ்தவப் பெண்ணுக்கு – 4 லட்சம் ரூபாய்கள்

IS rate card for conversion-2

என்று அவர்களது விலைப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி இந்தியப் பெண்களை மதமாற்றம் செய்ய ISIS அமைப்பு முஸ்லீம் கலிபாக்கள் மூலம் தொடர்ந்து முயன்றுவருகிறது. இதற்கு முன்னேற்பாடாக இந்தியாவெங்கும் அவர்களது ஏஜண்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்கிறது Times Now செய்தி[2]. ஆனால் இதை மறுக்கும் ஊடகங்களும் நம்மிடையே உள்ளன.  இதில் வேடிக்கை அல்லது ஒற்றுமை என்னவென்றால், 2015ல், “டெக்கான் குரோனிகலில்” லவ்-ஜிஹாத் பற்றிய செய்தியில், இதே கணக்கு காணப்பட்டது[3]. அதற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்று விசாரிக்க வேண்டும். “சனாதன் சன்ஸ்தா” வெளியிட்ட புத்தகத்தில் அவ்விவரங்கள் காணப்பட்டன[4]. இருப்பினும், கேரள உயர்நீதி மன்றத்தில், “லவ்-ஜிஹாத்” வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன; போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். உண்மையில் பெண்ணுருமை பேசும் யாரும், இப்பிரச்சினைப் பற்றி விவாதிக்காமல் இருப்பதும் பற்பல கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புகின்றன.

IS rate card for conversion-3

ஐசிஸ் பயங்கரவாதம், தீவிரவாதங்களை சுலபமாக கருத முடியாது: இந்தியாவில் முஸ்லிம் வெறுப்புணர்வை வளர்க்க இது போன்ற செய்திகளை சில ஊடகங்கள் வலிந்து உருவாக்கி மக்களிடையே திணிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது. இந்த ரம்ஜான் காலத்தில் 2017ல் அளவுக்கு அதிகமான ஜிஹாதி தீவிரவாதம், உலகம் எங்கும் அரங்கேறியுள்ளது. அப்பாவி மக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது எனும்படியான கண்டனங்களும் எழாமல் இல்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே அதற்கேற்ப பாதிக்கப் பட்ட பெண்ணின் அம்மாவே புகார் அளிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று நேற்று வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் கலிபாக்கள் நிர்ணயித்த அந்த ரேட் கார்டு ஆதாரமும் வெளியாகியிருக்கிறது. இவற்றை எல்லாம் அத்தனை சீக்கிரம் கற்பனைக் கட்டுக் கதை என்று புறம் தள்ளி விட முடியாது. உண்மையில் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? மதத்தின் பெயரால் பிரிவினையைத் தூண்டும் முயற்சியா? அல்லது இந்துப் பெண்களை சந்தை அடிமைகளாக ஆக்குவதின் மூலம் இந்துக் கலாச்சாரத்தை இழிவு படுத்தும் முயற்சியா? இந்த விசயத்தில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் இந்தியப் பெண்களின் முதல் தேவை விழிப்புணர்வும், எச்சரிக்கையும் மட்டுமே[5].

Times Now coverage on Gaza Street, Wisdom Academy - 2

இச்செய்தி வரும் நேரத்தில் காசர்கோடு முஸ்லிம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாகவாட்ஸ்அப்பில்செய்தி: “வாட்ஸ்-அப்பில்” வருவதையெல்லாம் செய்தியாக்கி விடுகிறார்கள் என்று கிண்டலடிப்பவர்களை, இதையும் பொய் என்று சொல்வார்களா? ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. ஷாஜீர் எம்.அப்துல்லா என்ற இந்த இளைஞர் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்படம் வாட்ஸ்-அப் மூலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பி.சி.அப்துல் ரகுமானுக்கு வந்துள்ளது. தகவலுடன் கூடிய இந்தப் படத்தை, ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக நம்பப்படும், காசர்கோடு மாவட்டத்தின் மற்றொரு இளைஞர் அனுப்பியுள்ளார். ஷாஜீர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான எவ்வித விவரமும் அத்தகவலில் இல்லை என அப்துல் ரகுமான் கூறினார். இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “எங்களுக்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை” என்றனர்[7]. ஆனால், பெற்றவர்களுக்குத் தெரிந்து விடுகிறதே? தமது மகன், மகள் என்று பரிகொடுப்பவர்கள், இதையெல்லாம் கட்டுக்கதை என்று அமைதியாக இருந்துவிடுவதில்லயே? பிணம் வரத்தான் செய்கிறது, அடக்கம் செய்கின்றனர், வருந்துகின்றனர். ஆனால், தீவிரவாதத்தில் சேராதே என்று சொல்லாமல் இருப்பது திகைப்படையச் செய்கின்றது.

© வேதபிரகாஷ்

25-06-2017

Zee News- coverage on Gaza Street, Wisdom Academy - 4

[1] தினமணி, இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS  நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By கார்த்திகா வாசுதேவன், Published on : 24th June 2017 05:56 PM.

[2] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–1.html

[3] The rate card that they have attributed to the forum reads, “The boy will get Rs 7 lakh for marrying a Sikh girl, Rs 6 lakh for Punjabi and Gujarati Brahmin girls, Rs 5 lakh for a Brahmin girl, Rs 4.5 lakh for a Kshatriya girl, Rs 3 lakh for Gujarati Kacchi, Jain and Marwadi girls, Rs 2 lakh for a backward class girl and Rs 1.5 lakh for a Buddhist girl.”

http://www.deccanchronicle.com/150926/nation-current-affairs/article/youth-paid-love-jihad-book

[4] While claims of love jihad by right-wing organisations have attracted a lot of flak from various sections of society, Sanatan Sanstha, in 2011, had published a book on the controversial issue. It has also produced a ‘rate card’, on the basis of which Muslim boys are supposedly paid money to marry Hindu girls. The book claims the cash reward differs on the basis of caste and region. For example, the organisation claims that a Muslim youth marrying a Sikh girl is paid the highest amount while the one marrying a Buddhist girl gets the lowest. However, the source of Sanatan’s claims is dubious. In the book, Sanatan has claimed that the rate card was announced by the ‘Muslim Youth Form’. When contacted, a Sanatan spokesperson claimed it was taken from the website of the forum. However, this newspaper did not find any such website.

DECCAN CHRONICLE, Youth paid for love jihad: Book,  SHRUTI GANAPATYE, Published Sep 26, 2015, 11:04 am IST; Updated Jan 10, 2016, 8:38 am IST

[4] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–2.html

[5] தி.இந்து.தமிழ், .எஸ்.ஸில் இணைந்த கேரள இளைஞர் பலி?, Published: June 21, 2017 09:39 ISTUpdated: June 21, 2017 09:40 IST

[5]http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article9731735.ece

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (1)

மார்ச் 1, 2015

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (1)

Riyaz on the lap of girls - Suratkal college

Riyaz on the lap of girls – Suratkal college

ஐந்து மாணவிகளின் மடியில் படுத்த மாணவன்[1]: மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவன் முகமது ரியாஷ் (Mohammed Riaz, வயது 20) என்ற மாணவன். இவன், மங்களூருவில் உள்ள கோவிந்த தாஸ என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறான். இந்த நிலையில், முகமது ரியாஷ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போல மர்ம நபர்கள் சித்தரித்து ‘வாட்ஸ்அப்’ சமூக வலைதளத்தில் படம் வெளியிட்டனர்[2]. கேலியாக பேஸ் புக்கில் வெளியிட்டனர். பிப்ரவரி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவனின் புகைப்படம் பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்து உள்ளனர். இந்த படம் ‘வாட்ஸ்அப்’ மூலமாக மங்களூரு நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது[3]. மாணவிகளின் மடியில் படுத்திருப்பது போன்ற அப்படம் பேஸ் புக்கில் வெளியிடப்பட்டது[4] என்று சில நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன[5]. இரண்டிலும் வெளியிடப்பட்டு, பரப்பப்பட்டது என்று தெரிகிறது[6]. ஆகவே, ஊடகங்கள் இவ்வாறு இரண்டுவிதமாக செய்திகளை வெளியிட வேண்டிய தேவையில்லை.

மாணவிகளுடன் ரியாஸ்

மாணவிகளுடன் ரியாஸ் – நோக்கம் என்ன என்று அவன் தான் விளக்க  வேண்டும்

மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலியார் மடியில் படுத்திருந்தது: இந்த பிரச்சினைப் பற்றி, கடந்த 21–ந்தேதி சுமார் 11 மணி அளவில் முகமது ரியாஷ், கானா என்ற இடத்தில் உள்ள, தனது வீட்டில் நண்பர்களான வினித், ரித்தீஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தான். அதாவது, சம்பந்தப் பட்ட மாணவர்களுக்கு, இவ்விவகாரம் தெரிந்திருக்கிறது என்றாகிறது. படிக்கும் மாணவர்கள் இவ்வாறு  மற்ற காரியங்களில் ஈடுபடுவது ஏற்ற்க்கொள்ளத்தக்கதன்று. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கும்பல் முகமது ரியாசை காரில் கடத்தி, பஜ்பே என்ற இடத்திற்கு அருகில் உள்ள கைகம்பா அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து அடித்து உதைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவனது மதம் என்ன என்று கேட்கப்பட்டு உதைக்கப்பட்டான் மற்றும் நண்களும் அடிக்கப்பட்டனர் என்று “தி இந்து” தனக்கே உரிய பாணியில் கூறுகிறது[7].  ஊடகங்கள் அந்த பையனின் அடையாளத்தைக் குறிப்பிடாமல் குழப்பியுள்ளது தெரிகிறது. “தி இந்து” மாணவிகளின் மடியில் படுத்திருந்தவன் “ரியாஸ்” என்று குறிப்பிடுகிறது. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கும்பல் அடையாளம் தெரியாமல் அந்த பையனை அடித்துவிட்டதாகக் கூறுகிறது. “தைஜி வார்ல்ட்” என்ற நாளிதழ் அவன் பெயர் மொஹம்மது ஸ்வாலி [Mohammed Swali] என்கின்றது[8]. படத்தில் இரு பையன்கள் இருந்தார்கள். அக்கல்லூரி மாணவர்களே, ஒரு குழுவாக அமைந்து, தவறு செய்யும் மாணவர்களைக் கண்டிக்க மேற்பட்டது. அப்பொழுதுதான், இவர்கள் மாட்டிக் கொண்டார்கள். ஊடகங்கள் உண்மையினை வெளியிடாமல், இவ்வாறு குழப்ப வேண்டிய அவசியம் இல்லை.

Coastal Karnataka love jihad

Coastal Karnataka love jihad – ஏற்கெனவே முஸ்லிம் பையன்கள், இந்து பெண்களை ஏமாற்றி பிரச்சினை செய்த விசயங்கள் இருக்கின்றன.

மொஹம்மது ரியாஸ் பெண்களுடன் இருப்பவனா?: “இதெல்லாம் ஒரு நாடகம் போன்று தோன்றுகிறது. நான் தண்ணீர் கேட்டபோது, என் வாயில் பீரை ஊற்றிக் குடிக்க வைத்தனர். பிறகு கண்கள் கட்டப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் [(Mangaluru–Udupi) 66] முக்கா என்ற இடத்தில் விட்டுச் சென்றனர்”, என்று மொஹம்மது ரியாஸ் கூறினான். கடந்த பிப்ரவரி 2014ல் தான் ஒரு இளம்பெண்ணுடன் சூரத்கல் கடற்கரையில் இருந்தபோது, ஒரு 20-வயது பையன் ஒரு கும்பலால் தாக்கப்பட்டான் என்றும் கூறினான்[9]. ஆனால், அப்பெண்ணைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை. அதற்கும், இதற்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. மொஹம்மது ரியாஸ் பெண்களுடன் சுற்றும் மற்றும் இருக்கும் பழக்கம் கொண்டவனாஎன்பதை அவன் தான் விளக்க  வேண்டும். படிக்கும் பையன்களுக்கு, இத்தகைய வேலை ஏன் என்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும். ஏற்கெனவே, “லவ்-ஜிஹாத்” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நிலையில், முகமதிய பையன்கள், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில், கொண்டுள்ள உள்நோக்கம் என்னவென்பதை, அவர்கள் தாம் விளக்கி சரிசெய்ய வேண்டும். ஆனால், தொடர்ந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபடுவதை, தமாஷாக என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

Mangalore pub attack - m oral policing

Mangalore pub attack – m oral policing – இப்பொழுது இந்த அம்மணிகள், பெண்கள் உரிமைகள் பற்றி பேசக் காணோம்!

நான் அவன் இல்லை எனும் மொஹம்மது ரியாஸ்: இதில் காயம் அடைந்த முகமது ரியாஷ் மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதற்கிடையே, அவன் சூரத்கல் போலீசில் புகார் செய்தான். அதில், ‘வாட்ஸ்அப்’பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இதற்குள் பையனின் தந்தை அப்துர் ரஹ்மான் [Abdur Rehman] சூரத்கல் போலீஸாரிடம், தன் மகனை யாரோ கடத்திச் சென்று, கொலை செய்ய முயன்றதாக புகார் கொடுத்துள்ளார்[10]. ஆனால் தன்னை மர்ம நபர்கள் தாக்கியது பற்றி முகமது ரியாஷ் புகாரில் குறிப்பிடவில்லை. அப்படியென்றால், தாக்கப்பட்டது யார் என்ற குழப்பமும் சேர்கிறது. மேலும், அவன் மொஹம்மது ஸ்வாலி என்றால், ரியாஸ் தாராளமாக சொல்லியிருக்கலாம், அவ்வாறு சொல்லவில்லை என்றால், அவன் ஏன் உண்மையினை மறைக்கிறான் என்ற கேள்வி எழுகிறது.

Muslim women-out-on-streets-against-moral-policing

Muslim women-out-on-streets-against-moral-policing –  உன்பு கொடி பிடித்த இந்த முஸ்லிம் பெண்கள், இப்பொழுது ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?

மொஹம்மது ஸ்வாலி மற்றும் ஐந்து மாணவிகள் கல்லூரியிலிருந்து இடைக்கால நீக்கம்: ஐந்து மாணவிகளுள் ஒருத்தி யாரோ தனது பேஸ்புக் கணக்கைத் திருடி, அப்போட்டோவை எடுத்து, மாற்றி வெளியிட்டு விட்டனர் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளாள்[11]. அம்மாணவி இவ்வாறு தாமதமாக புகார் கொடுத்துள்ளதும் வியப்பாக இருக்கிறது. முதலில் படிக்க செல்லும் மாணவிகள் படிப்பில் சிரத்தைச் செல்லுத்தி, முன்னேற வழிபார்த்து செல்ல வேண்டும், தமது பெற்றோர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும், இத்தகைய, குழுக்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஆனால், போலீஸார், அப்பையன் மொஹம்மது ஸ்வாலி [Mohammed Swali] என்று உறுதி செய்துள்ளனர்[12]. அதாவது, “தி ஹிந்துவின்” செக்யூலரிஸ வக்காலத்து பொய்யாகிறது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் முகமது ரியாசை மர்ம நபர்கள் காரில் கடத்தி தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, முகமது ரியாசை, மாணவிகளுடன் சேர்த்து சித்தரித்து படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது[13].

© வேதபிரகாஷ்

28-02-2015

[1] நியூஇந்தியாநியூஸ், கல்லூரி மாணவிகள் மடியில் அமர்ந்த மாணவன்: புகைப்படத்தால் வெடிக்கும் சர்ச்சை [ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 06:16.39 AM GMT +05:30 ]

[2] மாலைமலர், மாணவிகளின் மடியில் உட்கார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட், மாற்றம் செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 24, 7:38 PM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 24, 7:12 PM IST.

[3] http://www.maalaimalar.com/2015/02/24191202/morphing-photo-spread-in-socia.html4

[4] வெப்.இந்தியா, மாணவியின் மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர்கள், செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (19:26 IST)

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=133552

[6]http://www.newindianews.com/view.php?22cOl72bcy40Wb4e3KMM402dKmD3dd0pDmI203CgA42e4g04Oecb3lOec3

[7] When contacted by The Hindu , Riaz said his friend Ritesh, who was in the photo, had come to his (Riyaz’s) house in Kana with another friend, Vinith, around 11 a.m. on Sunday to discuss the photo going viral. He said that suddenly, four persons came in a car, pushed the three of them inside and drove to Kaikamba, near Bajpe. Riaz said that at a ground there, five more persons joined the assailants and mercilessly beat him after asking about his religion. They also beat up his two classmates.

[8] The photo of a boy, identified as Mohammed Swali, lying on the laps of five girls created a furore after it was uploaded on Facebook.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=299167

[9] “It was like a drama,” Riaz said. “When I asked for water, they forcibly made me drink beer,” he alleged and added that later, they blindfolded him and left him near a petrol station at Mukka on National Highway (Mangaluru–Udupi) 66. He was later admitted to hospital. At that time, he was not even aware about what happened to Ritesh and Vinith. In February 2014 at Surathkal beach, a 20-year-old youth was attacked by a group when he was found with a girl.

http://www.firstpost.com/india/mangalore-goons-thrash-college-student-after-group-photo-with-girls-goes-viral-on-whatsapp-2118939.html

[10] The victim, Mohammed Riaz, was admitted to a private hospital. Based on a complaint by Riaz’s father, Abdur Rehman, the Surathkal police have registered a case of kidnapping and attempt to murder against the assailants.

The Hindu, Youth thrashed after group photo is widely circulated on WhatsApp, Magaluru, February 23, 2015; Updated: February 23, 2015 16:13 IST

[11] In a complaint filed in Suratkal police station, a girl student of Govinda Dasa College in Suratkal has claimed that the controversial photo of five girl students with a boy lying on their laps, which was uploaded in Facebook, had been doctored and uploaded after hacking her Facebook account. She claimed that the picture in question had been originally clicked by her classmate named Vineeth on February 18 and it was uploaded in Facebook. She has alleged that some mischief-mongers accessed this photo by hacking her account, misused the photo, and then posted it back in social media after affecting certain modifications.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=299167

[12] The photo of a boy, identified as Mohammed Swali, lying on the laps of five girls created a furore after it was uploaded on Facebook.

[13] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/students-suspend-for-take-photo-of-sitting-the-women-student-and-published-on-facebook-115022400040_1.html