Archive for the ‘ரோஹிஞ்ச’ category

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக் கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (2)

ஏப்ரல் 8, 2023

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (2)

ஜூன் 2021ல் திருப்பூரில் மூவர் கைது: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி, முறைகேடாக தங்கிய வங்க தேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்[1]. திருப்பூர், அம்மாபாளையம் ராக்கியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்; நகல் எடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை, ஏப்., மாதம் ஷிமுல் காஜி, 30, என்பவருக்கு வாடகைக்கு விட்டார். ஆதார் கார்டில் ஈரோடு மாவட்ட முகவரி இருந்தது.அவர், வங்க தேசத்தவர் என பின் தெரிந்தது.இது குறித்து, ஷிமுல் காஜியிடம் கேட்டபோது, அவருடன் சேர்ந்து, அவரது நண்பர்கள் சைபுல் இஸ்லாம், 40, மன்னன் மோலல், 31, ஆகியோரும் சேர்ந்து, மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்தனர். அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.அவர் அளித்த புகார்படி, திருமுருகன்பூண்டி போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்தனர். வங்க தேசத்தைச் சேர்ந்த மூவரும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது தெரிந்தது. கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தங்கியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்[2]. இவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனரா, குடும்பத்தினருடன் தங்கியிருந்தனரா என விசாரணை நடக்கிறது.

ஊன் 2019 பிரச்சினைதிருப்பூர் இச்செயல்களுக்கு மையமாகிறதா?: திருப்பூர், ஜூன் 1 –திருப்பூர் மாநகரில் சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வங்கதேசத்தவர் உள்ளிட்ட வெளிநாட்டினர் பிரச்சனை குறித்து காவல் துறை சார்பில் சம்பிரதாயத்துக்கு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிறுபூலுவபட்டி அத்திமரத்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் இங்கு தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப் பட்டனர்[3]. இதற்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நைஜீரியா நாட்டில் இருந்து வந்தவர்கள் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் இங்கு வந்து ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்ததும் அவ்வப்போது கண்டறியப்பட்டுள்ளது[4]. இது தவிர திருப்பூர் போன்ற ஏற்றுமதி நகரத்தில், நைஜீரியர்கள், வங்கதேசத்தவர் போன்ற வெளிநாட்டினர் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்கள் அதிகளவு வருகை தருவதை குறுகிய அடையாள அரசியலைப் பின்பற்றும் அரசியல் சக்திகள் பயன்படுத்தி பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதும் அதிகரிக்கிறது.

வங்க தேசத்தில் இருந்து பலர் மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் வந்து, பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்திலும் இதுபோன்று குடியேறுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் இருந்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது, தொழில்நுட்ப உதவியுடன் இன்டர்நெட் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர்பு குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மத்திய உளவுத் துறை மற்றும் சென்னை கடலூர் கண்காணிப்பு பிரிவு போலீசார் வங்கதேசத்தவரை தேடிவந்துள்ளனர். விசாரணையில் தெரியவந்தது[5]. மேலும் விசாரணையில், நாஜ்மூர் ஷித்தர் (வயது 35), அவரது மனைவி பரீதாபீவி (25), 3 வயது சிறுவன் மற்றும் ஷக்தர் முல்லா (50), பாபுஷேக் (22) பாத்திமா பீவி (25) என்பதும், முறையான ஆவணங்கள் இல்லாமல் அங்கு குடியேறியதும் தெரியவந்தது[6]

பல கேள்விகள் எழுப்பினாலும் வஙகதேசத்திலிருந்து வருவது நிதர்சனமாக உள்ளது:

  • வங்கதேசத்தில் இருந்து இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது எப்படி,
  • ரெட்டிச்சாவடி பகுதிக்கு இவர்களை அழைத்து வந்தவர்கள் யார்?,
  • அங்கு குடியேறியதற்கான காரணம் என்ன?,
  • இவர்களை போன்று வேறு யாரேனும் கடலூர் மாவட்டத்தில் குடியேறி இருக்கிறார்களா?

என்று பல்வேறு கோணங்களில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதே வேளையில், இங்கு வசித்து வந்தவர்களுக்கு தீவிரவாதிகளுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா என்றும் கியூ பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோல் அடையாளம் தெரியாத நபர்கள் வங்கதேசத்தினர் போன்றவர்கள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மட்டும் 73,000 வங்காள தேசத்தவர்கள் இருக்கிறார்கள்: சென்னையில் மட்டும் 73,000 வங்காள தேசத்தவர்கள். உரிய அனுமதி இன்றி ஊடுருவியர்கள். என தெரிய வந்துள்ளது[7]. கட்டிடத் தொழிலில் பெரும்பாலோர் இவர்களாகத் தான் இருக்கிறார்கள். வேலையைப் பொறுத்த வரையில் இவர்கள் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு கடின வேலைகளை செய்து வருகின்றனர். இது கொரானாவால் வெளி வரும் உண்மைகள்.சென்னையில் மட்டுமே இவ்வளவு பேர் என்றால் தமிழகம் முழுக்க,நாடு முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள். ஏன் CAA வை எதிர்க்கிறார்கள் என்பது இப்போது நன்கு புரியும்[8]. வன்முறையில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போது அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்கள். அவர்களின் ஆவணங்களை கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார்கள். பின் தீவிர விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மேற்கு வங்கம் வந்து பின் தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள் என்றாலும் தெரிவிக்கப் பட வேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு  யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

08-04-2023


[1] தினமலர், வங்கதேசத்தவர் மூவர் கைது, Added : ஜூன் 25, 2021  01:46.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2790752

[3] தீக்கதிர், சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வெளிநாட்டினர் பிரச்சனை திருப்பூரில் சம்பிரதாயத்துக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டம், நமது நிருபர் ஜூன் 2, 2019.

[4]https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/illegal-refuge-is-the-issue-of-aliens-conference-meeting-held-in-tirupur

[5] தமிழ்.ஏபிபி.லைவ், கடலூரில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடும்பம் கைதுBy: சிவரஞ்சித் | Published at : 03 Jul 2021 12:08 PM (IST); Updated at : 03 Jul 2021 12:08 PM (IST).ச்

[6] https://tamil.abplive.com/crime/illegal-immigrants-from-bangladesh-were-trapped-with-their-families-8203

[7] ஒரே தேசம், வெளிமாநிலத்தவர் என்ற போர்வையில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவல்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!, Oredesam BY OREDESAM  May 18, 2020

[8] https://oredesam.in/bangladeshis-under-the-guise-of-being-outspoken/

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (3)

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

Burmese army arrested three Rohingya with Bangladeshi mobiles

கள்ளக் குடியேறிகளின் மீது மலேசியா எடுக்கும் நடவடிக்கை: மலேசியாவில் சட்ட அமலாக்க அதிகாரிகள் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கள்ளக் குடியேறி கள் 2,170 பேர் கைது செய்யப்பட்டதுடன் முதலாளிகள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய உள்துறை துணை அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு மே மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி கூறினார். மலேசியாவுக்குள் நுழையும் “கள்ளக் குடியேறிகளின்” எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்காக மலேசிய அதிகாரிகள் அந்த சோதனையை மேற்கொண்டனர். குடியேறிகள் 7032 பேரை சோதனை செய்ததில் “கள்ளக் குடியேறிகள்” என்று தெரியவந்த 2,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக வான் ஜூனைடி கூறினார். கள்ளக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அமைச்சு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என்றும் சம்பந்தப்ட்ட நிறுவனங்களும் சமூகத்தினரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்[1].

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

rohingya-muslim-myanmar-begs-bangladesh-coast-guard-official-stay

தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர மாறு வேடம் தரித்த ஆட்கள்என்று குற்றஞ்சாட்டும் மலேசியா: தீவிரவாதிகள் / போராளிகள் இயக்கத்தில் சேர விரும்பும் மலேசியர்களில் சிலர், அரசாங்கம் சாரா அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் மாறு வேடம் தரித்து போராளிகள் குழுக்களில் சேர்கின்றனர் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் வான் ஜூனைடி துங்கு ஜஃபார் கூறியுள்ளார். அரசாங்கம் சாரா மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த உதவிப் பணியாளர்கள் போல் அவர்கள் மாறு வேடம் தரித்திருப்பதால் யார், யார் அத்தகைய போராளிகள் குழுக்களில் சேரவுள்ளனர் என்பதை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று வான் ஜூனைடி கூறினார்[2]. ஐசிஸ் ஆள்சேர்ப்பு நடவடிக்கையால், உலகம் முழுவதும் மூளைசலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்று போராட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால், எந்த நாடும் அத்தகைய போராளிகள் / தீவிரவாதிகள் தங்களது நாட்டிலிருந்து சென்றார்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடவோ, அதனால், அந்நாட்டவர் மற்றவர்களால் சந்தேகிக்கப் படவோ, எந்த நாடும் விரும்பவில்லை. இதனால் தான், முஸ்லிம்கள் என்றாலும், முஸ்லிம் நாடுகள் தயங்க்கின்றன.

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

Rohingya Muslims found on boat rescued by Myanmar navy

ரோஹிங்கா முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் ஊடுருவலும், இந்தியாவிற்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளும் (2014)[3]: இவர்களின் பிரச்சினை இந்தியாவிலும் உள்ளது. இத்தகைய தீவிரவாதத் தொடர்புகள் மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல, இருப்பினும் ஆளும் கட்சியின் தொடர்புகள், ஆதரவு, போலீஸ் மெத்தனமாக நடந்து கொள்வது முதலியன மற்ற தீவிரவாத ஆராய்வு குழுக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 127 ரோஹிங்கா முஸ்லிம்களை மாநில அரசு கைது செய்துள்ளது. தீவிரவாத தொடர்புகள் இல்லையென்றாலும், ஐ.பி, ஒவ்வொருவனின் பின்னணியையும் ஆராய்ந்து வருகிறது. சுமார் 10,000 பேர் எல்லைகளைக் கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஸ்வரூப்நகர், பரிர்ஹத் மற்றும் கைகதா என்ற பகுதிகள் வழியாக அவர்கள் ஊடுருவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊடகங்கள் இவர்களை “ரோஹிங்கர்”, “முஸ்லிம்கள்”, “இடம் பெயர்ந்தவர்கள்”, “அகதிகள்” என்று பலவாறாகக் குறிப்பிடுவதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோருமே மியன்மார் / பர்மா குடிமகன்கள். முசபர்நகர் கலவரங்களின் போது, ரோஹிங்க முஸ்லிம்கள் மயன்மாரில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் புழக்கத்தில் விட்டதால் தான் கலவரங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆக, ரோஹிங்க முஸ்லிம்களின் பிரச்சினை இந்தியாவையும் பாதித்துள்ளது.

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

Rohingya migrants bring back food supplies dropped by a Thai army helicopter after jumping to collect them at sea from a boat

பங்களாதேசத்தின் பங்குமுஸ்லீம்களைப் பெருக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது: பர்மாவின் மத்தியில் இருக்கும் மெய்க்திலா (central city of Meikhtila) என்ற நகரத்தில் தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. பங்களாதேசத்தில் அதிகமாக உள்ள முஸ்லீம்களை அடுத்த நாடுகளில் நுழைய வைப்பது, அவர்களது வேலையாக உள்ளது. ஒரு இடத்தில் முஸ்லீம்கள் இடத்திற்கு அதிகமாக பெருகிவிட்டால், அவர்கள் அப்படியே இடம் கொள்ளாமல் பொங்கி பக்கத்தில் விழுந்து விடுவார்களாம். அப்படி ஒரு சித்தாந்தமே பேசப்பட்டு வருகிறது. இதனால், இந்த ரோஹின்யா முஸ்லீம்கள் பங்களாதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்[4]. இவர்களுக்கு இடம் கொடுப்பது, சலுகைகள் வழங்குவது முதலியவற்றை பௌத்தர்கள் விரும்பவில்லை. இது முஸ்லீம்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன[5] என்று மனித உரிமைக் குழுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லீம்கள் வழக்கம் போல எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் ஒருமாதிரி இருப்பார்கள், எண்ணிக்கை அதிகமானால் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறே புதன்கிழமை, ஒரு புத்த பிட்சு, ஒரு முஸ்லீம் கடையில் பொருள் வாங்கும்போது, வாதம் ஏற்பட்டது. அது விவகாரமாகி கலவரத்தில் முடிந்தது. ஆனால், முதலில் கொல்லப்பட்டது அந்த புத்த பிட்சு தான். இதுதான் கலவரத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது[6]. பர்மாவில் ஏற்பட்டுள்ள கலவரங்களுக்கு உலக அளவில் கவலை ஏற்பட்டுள்ளது[7].

Rohingya Muslims condition

Rohingya Muslims condition

ரோங்கிய பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?: ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பணக்கார இஸ்லாமிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனேய் போன்றவை இம்முஸ்லிம்களை காக்கலாம் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்[8]. கடார் $ 5,00,00,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது[9]. உண்மையிலேயே 10 லட்சம் முஸ்லிம்களை பணக்கார முஸ்லிம் நாடுகள் தத்தெடித்துக் கொள்வது, அகதிகளாக ஏற்றுக் கொள்வது, போன்ற செயல்களை செய்வது மிகவும் சுலபமாகும். இருப்பினும், கருத்துகளைத் தெரிவிப்பதோடு நின்றுள்ளன. மியன்மாரும் தன்னுடைய எல்லைகளுக்குள் அவர்களுக்கு இடம் கொடுத்து பிரச்சினையை முடிக்கலாம்[10]. அதற்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும். தங்களுடைய எல்லைக் கடந்த போக்குவரத்துகள், உறவுகள், சம்பந்தங்கள் முதலியவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்[11]. பௌத்தர்களிடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலந்து தாங்களும் பர்மிய ச்நாட்டவர் என்ற உணர்வைக் கொள்ள வேண்டும். பௌத்தர்களும் அதேபோல, அவர்களை நடத்த வேண்டும், அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இருப்பினும், என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லாத நிலையுள்ளது. ஏனெனில், இப்பிரச்சினை அந்த அளவிற்கு அரசியலாக்கப் பட்டுள்ளது.

PARIS, FRANCE - OCTOBER 27:  The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani  attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France.  (Photo by Pierre Suu/Getty Images)

PARIS, FRANCE – OCTOBER 27: The Heir Apparent of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani attends the Memorial Service For Christophe De Margerie, Total CEO, at Eglise Saint-Sulpice on October 27, 2014 in Paris, France. (Photo by Pierre Suu/Getty Images)

ஊடகங்களும் பாரபட்சத்துடன் செய்திகளை கொடுத்து வருகின்றன. மற்ற நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இதனை முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி ஆர்பாட்டங்கள் முதலியவற்றைச் செய்து வருவதும் வினோதமாக உள்ளது. ரோஹிங்க முஸ்லிம்களை ஏன் ஆயுத போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கவில்லை என்று தெரியவில்லை. கலவரங்களுக்கு காரணமான முஸ்லிம்களையும் கண்டிக்கவில்லை. அப்படியென்றால், முஸ்லிம்கள் அத்தகைய கலவரங்கள் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்களா?

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.tamilmurasu.com.sg/story/26037

[2] http://www.tamilmurasu.com.sg/story/43388

[3] https://buddhismstudies.wordpress.com/2013/03/23/why-buddhist-burma-could-not-get-peace-and-harmony/

[4] http://www.thehindu.com/news/international/south-asia/clashes-rock-myanmar-again/article4537607.ece

[5] Mark Farmaner of human rights group Burma Campaign UK said, “We’ve seen examples of anti-Muslim propaganda in Mon state, Shan state, Kachin state and Karen state, where people are distributing anti-Muslim leaflets,” he told the Guardian. “It may not be directly linked to violence in Rakhine state in an obvious way but … aan incident like this [an argument in a gold shop] wouldn’t normally lead to deaths and thousands of people trying to flee, if there weren’t already incredibly high tensions in the first place. That means it’s been organised and that no action has been taken to put a lid on it.” President Tun Khin of the UK-based Burmese Rohingya Organisation described the violence in Meikhtila as a state-sponsored attack, and said: “These are not communal clashes; this is not equal sides fighting. These are organised attacks to cleanse [Burma] of Muslims where the vast majority of those killed and displaced are Muslims … There should be laws on racism if the government wants to see durable peace in Burma.”

http://www.guardian.co.uk/world/2013/mar/22/burma-ethnic-violence-dead-meikhtila

[6] Troubles began on Wednesday after an argument broke out between a Muslim gold shop owner and his Buddhist customers. A Buddhist monk was among the first killed, inflaming tensions that led a Buddhist mob to rampage through a Muslim neighbourhood.

[7] http://online.wsj.com/article/SB10001424127887324103504578376403112277548.html

[8] Muslim countries within ASEAN – Indonesia, Malaysia and Brunei – have more than enough wealth to care for their Islamic neighbors

http://thediplomat.com/2015/05/aseans-refugee-embarassment/

[9] http://www.ibtimes.co.uk/qatar-pledges-33mn-indonesia-rescuing-muslim-rohingya-migrants-1503410

[10] http://thediplomat.com/2015/05/solving-the-rohingya-crisis/

[11] http://burmatimes.net/burmese-army-arrested-three-rohingya-with-bangladeshi-mobiles/

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள்: மே.28, 2012 அன்று மூன்று முஸ்லிம்கள் ஒரு பௌத்த பெண்மணியைக் கற்பழித்தனர். இதனால், பௌத்தர்கள் முஸ்லிம்களைத் தாக்கியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மனித உரிமைகளைக் கண்காணிக்கும் குழு, இது முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியது[1]. சுமார் 75,000 முஸ்லிம்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர்[2]. இவ்விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது, எதற்காக கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது நோக்கத்தக்கது. ஏற்கெனவே, தாக்கப்படும் நிலையில் இருக்கும் போது, இத்தகைய பிரச்சினைகளில், சமூக குற்றங்களில் முஸ்லிம்கள் ஏன் ஈடுபட வேண்டும்? மேலும் ரோஹிங்கிய முஜாஹித்தீனின் தாக்குதல்களும் இருப்பதால், பரிமீய பௌத்தர்கள் அவர்களை “வங்காள தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர்.

A refugee tries to help his unconscious friend after being save from the sea in Kuala Langsa

A refugee tries to help his unconscious friend after being save from the sea in Kuala Langsa

மியன்மார் தனது நிலையைத் தெளிவாக கூறியுள்ளது: கப்பல்களில் காணப்படும் முஸ்ம்களைப் பற்றி பங்களாதேசம், மியன்மார், மலேசியா, தாய்லாந்து முதலிய நாடுகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. இந்த எல்லா நாட்களும் அவர்கள் தங்கள் பிரஜைகள் அல்ல என்று மட்டும் அறிவிப்பதோடு, “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்களை தங்களது நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த வியாழக்கிழமை 21-05-2015 அன்று முறைகேடான பாதுகாப்பு இல்லாத படகில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை ஐநா குழுவினர் பார்வையிட்டு மருத்துவ உதவிகளை அளித்தனர். மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை சமூக விரோதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு கடத்தி செல்ல இருந்ததாக மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரோஹிங்கிய சிறுபான்மையின மக்களை தங்களது நாட்டு மக்களாக மியான்மர் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த நிலையில், ரோஹிங்கிய மக்கள் பிரச்சினையில் மியான்மர் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் தெரிவித்துள்ளார். மேலும், “அகதிகளான மக்களுக்கு ஏற்படும் பிரசின்னைகளுக்கு ஊகத்தின் அடிப்படையில் மியான்மரை காரணம் காட்டக் கூடாது. அவரகள் எங்கள் நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள கூறுவது தவறானது” என்றார்[3].

Bangladeshi migrants walk toward a temporary shelter al at Kuala Langsa Port in Langsa

Bangladeshi migrants walk toward a temporary shelter al at Kuala Langsa Port in Langsa

தாய்லாந்தில் இத்தகைய முஸ்லிம்கள் வந்ததால் விசாரணை[4]: தாய்­லாந்­தின் தெற்குப் பகு­தி­யில் நூற்­றுக்­கும் அதி­க­மா­ன­ சட்டவிரோதக் குடியேறிகளிடம் அவர்­கள் ஆட்­க­டத்­தல் நட­ வ­டிக்கை­க­ளால் குடி­யே­றி­யவர்­களா என்பது குறித்து அதி­கா­ரி­கள் விசாரணை மேற்­கொண்­டுள்­ள­னர்[5]. தாய்­லாந்து எல்லைக்­குள் ஆட்­க­டத்­தல் முகாம்­கள் பற்றிய உண்மை­களைக் கண்ட­றி­யும் முயற்­சி­யில் இந்த விசாரணை நடத்­தப்­பட்­டுள்­ளது. மியன்­மார், பங்­ளா­தேஷ் நாட்­ட­வ­ருடையதாக இருக்­க­லாம் என நம்பப்­படும் சுமார் 33 உடல்­கள் சொங்க்லா மாவட்­டத்­தில்­ ஒரு பள்­ளத்­தாக்­கில் கடந்த வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது; ஆட்­க­டத்­தல் முகாம்­கள் மூன்று கண்டு­பி­டிக்­கப்­பட்­டன. இதனையடுத்து சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்­தலை முறி­ய­டிக்க அதி­கா­ரி­களுக்கு 10 நாட்கள் அவ­கா­சம் அளித்­தி­ருந்தார் தாய்லாந்து பிர­த­மர் பிரயுத் சனோச்சா. மலேசியா, மியன்­மார் நாடு­களு­டன் முத்­த­ரப்பு கூட்டம் ஒன்றை இதன் தொடர்­பில் நேற்று முன்­ தி­னம் நடத்­தினார் திரு பிரயுத். தற்போது விசா­ரிக்­கப்­படும் 199 பேரில் 74 பேர் மியன்­மாரைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்­லிம்­கள்; 58 பேர் பங்­ளா­தேஷைச் சேர்ந்த­வர்­கள். கடத்தப்பட்டவர்கள் தாய்லாந்­தின் சமுதாய மேம்பாடு, மனிதப் பாது­காப்பு அமைச்­சி­டம் ஒப்­படைக்­கப்­படு­வர். தாமாக விரும்பி தாய்­லாந்­துக்­குள் நுழைந்­தவர்கள் குடி­நுழை­வுப் போலி­சா­ரி­டம் ஒப்­படைக்­கப்­பட்டு சொந்த நாடு­களுக்­குத் திருப்பி அனுப்­பப்­படு­வர், என்று அரசு அறிவித்துள்ளது.

Burma Rohingya Refugee Camp

Burma Rohingya Refugee Camp

முரண்பட்ட செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாய்லாந்தில் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் 29-05-2015 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்து. இதில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தை தங்களது நாட்டு மக்களுக்கான பிரச்சினையாக எடுத்தக் கொள்ள வலியுறுத்த உள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டது[6]. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்தர்கள் தொடுக்கும் தாக்குதல்கள் காரணமாக, பெருமளவிலான முஸ்லிம் மக்கள் மியன்மாரை விட்டு கப்பல்களில் பிற நாடுகளுக்கு தப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, கப்பல்களில் அடைக்கலம் தேடி வரும் மியன்மார் முஸ்லிம் மக்களை ஏற்க பல நாடுகள் மறுப்பதால், உண்ண உணவின்றி கப்பலிலேயே அவர்கள் பரிதாபமாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள், மியன்மார் இனத்தவர்கள் அல்ல என 1956 இல் இருந்தே ஒரு கருத்து அந்த நாட்டில் நிலவி வருகிறது, அந்த காலகட்டத்தில் இருந்து ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் அரங்கேறின. இன்று ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் பலவந்தமாக மியன்மாரை விட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். படகுகளில் ஏற்றி அவர்களை வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் செயலை அங்குள்ள பௌத்த இனவாதிகள் செய்து வருகிறார்கள்[7]. அண்மையில் இவ்வாறு படகில் தத்தளித்தவர்களுக்கு மலேசியா அடைக்கலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் ஊடகங்கள் ஒரு குழப்பத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன[8]. மேலும் பங்களாதேசத்திலிருந்து வரும் அகதிகளும் இவர்களுள் சேர்ந்துள்ளது மர்மமாக உள்ளது.

MYANMAR_MIGRANTS, where they go

MYANMAR_MIGRANTS, where they go

நாடற்றவர்கள்”, “கள்ளக்குடியேறிகள்”, என்றெல்லாம் சொல்லப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள்: அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய அதிகாரிகள் மியன்மார் சென்றுள்ளனர். அண்மை நாட்களாக மோசமாகிவரும் கள்ளக்குடியேறிகளின் சர்ச்சை குறித்து மியன்மார் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது அந்தப் பயணத்தின் நோக்கம்[9]. இந்தோனேசியா, தாய்லந்து, மலேசியா ஆகிய மூன்றும், வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர முயற்சி செய்வோர் வரும் படகுகளை அனுமதிக்கப்போவதாகக் கூறியிருந்தன. அதனைத் தொடர்ந்து மூன்று நாடுகளும் அவற்றின் அதிகாரிகளை மியன்மாருக்கு அனுப்பிவைத்துள்ளன. வாரக் கணக்காக அந்தப் படகுகள், கடலில் அங்குமிங்கும் தத்தளித்ததைத் தொடர்ந்து, கரைக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடலில் அகப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கானோருக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள மியன்மார் நெருக்கப்பட்டு வருகிறது[10]. இருப்பினும், மியன்மார் அம்மக்களின் அடையாளங்களை வைத்துதான் தீர்மானம் செய்யப்படும் என்றால், அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. பங்களாதேசம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி வருவதால், மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கும், அத்தகைய முறைப்பற்றி சந்தேகம் எழத்தான் செய்கிறது. இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியில் எந்த நாடும் அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், “நாடற்றவர்கள்” என்ற நிலையில் முஸ்லிம்களை, இதனால் தான் முஸ்லிம் நாடுகளே ஏற்க தயங்குகின்றன மற்றும் மறுக்கவும் செய்கின்றன.

Stranded Burma-Migrants-AFP

Stranded Burma-Migrants-AFP

புதைக்குழி பற்றிய விவாதங்கள்: 25-05-2015 அன்று மலேசியாவில் கண்டெடுக்கப் பட்ட புதைக்குழிகள் பல்வேறு விசயங்களை எடுத்துக் காட்டுகிறது[11]. அது இம்மாத ஆரம்பத்தில் தாய்லாந்தில் கண்டு பிடித்தது பொன்றேயுள்ளது. ஆட்கடத்தல், சமூக விரோத செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படல், கள்ளக்கடத்தல், போட்டிக் கூட்டங்களில் நடந்த சண்டை என்று பலவாறு விவாதிக்கப்படுகின்றன[12]. பங்களதேசம் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகளை ஆல்-கடத்தல் கும்பல்கள் பலவிதங்களில் சதாய்த்து வருகின்றன[13]. தாய்லாந்து மற்றும் மலேசிய எல்லையில், இவ்வாறான புதைக்குழியில் பிணங்கள் கண்டுபிடிக்கப் பட்டது, பல்வேறுபட்ட யூகங்களை உண்டாக்கியுள்ளன. பொதுவாக, தென்கிழக்காசிய நாடுகள், எத்தகைய பிரச்சினை, தீவிரவாதம், போன்ற விசயங்களை ஏற்பதாக இல்லை.  அவர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தான் என்று வாதிக்கும் நேரத்தில் தான், மியன்மார் அவர்கள் தங்கள் நாட்டவர் அல்ல என்கிறது மற்றும் மலேசியா “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடுகிறது. ஐநா போன்ற குழுக்கள் பொதுவாக மனித உரிமைகள் என்றெல்லாம் பேசினாலும், முரண்பாடுகள் அதிகம் உள்ள இப்பிரச்சினையில், அனைவருமே ஜாக்கிரதையாகத் தான் செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் வழக்கம் போல இதன் மூலம் ஆதாயம் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஊடக விளம்பரங்களுக்குக்காக ஆர்பாட்டங்கள் நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.hrw.org/sites/default/files/reports/burma0413webwcover_0.pdf

[2] http://www.cbc.ca/news/world/why-burma-s-rohingya-muslims-are-among-the-world-s-most-persecuted-people-1.3086261

[3] http://www.telesurtv.net/english/news/Myanmar-Denies-Rohingya-Muslims-Citizenship-Under-UN-Pressure-20150529-0018.html

[4] http://www.tamilmurasu.com.sg/story/50804

[5] http://www.telesurtv.net/english/news/Thousands-of-Rohingya-Migrants-Remain-Stranded-at-Sea-20150516-0011.html

[6]http://www.tamilantelevision.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99-20362.html

[7]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE-219430.html

[8] http://www.telesurtv.net/english/news/Malaysia-Says-800-Rohingya-Migrants-Muslims-Not-Welcome-20150514-0009.html

[9] http://www.tamilmurasu.com.sg/story/51689

[10] http://seithi.mediacorp.sg/mobilet/asia/21may-us-asia-migrants/1862354.html

[11] http://www.chicagotribune.com/news/nationworld/ct-boat-people-mass-grave-20150524-story.html

[12] http://www.dailyherald.com/article/20150525/news/305259989

[13] http://www.chicagotribune.com/news/nationworld/ct-migrants-rohingya-20150516-story.html#page=1

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)

map-rohingya muslims activities

map-rohingya muslims activities

1942ல் தேசிய பௌத்தர்களுக்கும், ரோஹிந்திய முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட நடந்த மோதல்கள்[1]: இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானிய ராணுவம் ஆங்கில காலனியான பர்மாவின் மீது படையெடுத்தது. ஆங்கிலேயப்படைகள் பின்வாங்கியதால், பௌத்த ராங்கைன் மற்றும் முஸ்லிம் ரோஹிங்யர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. ரோஹிங்க முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரம் விரும்பிய தேசிய பர்மிய பௌத்தர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதால், இவர்களுக்கு இடையே உள்ள பிளவுகள் அதிகமாகின. ஜப்பானிய படையெடுப்பின் போதும், ரோஹிங்க முஸ்லிம்கள் அவர்களை எதிர்ப்பதற்கு பதிலாக, அரக்கானில் உள்ள மக்களைத் தாக்கி கொல்ல ஆரம்பித்தார்கள். இதனால் மார்ச்.28, 1942 அன்று ஏற்பட்ட மோதல்களில் 5000 முஸ்லிம்கள் மற்றும் 20,000 அரக்கான் பிரதேச மக்களும் கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் நுழைந்த ஜப்பானிய ராணுவமும் அங்குள்ள மக்களைத் தாக்கியது. இந்நிலையில்ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேஇனார்கள் – 22,000 முஸ்லிம்கள் சிட்டகாங் வழியாக (ஒன்றிணைந்த) இந்தியாவில் நுழைந்தார்கள், 40,000 பேர் சிட்டகாங்கிலேயே தங்கிவிட்டார்கள். இவ்விதமாக இம்மக்களிடையே பிளவு ஏற்பட்டது அடிக்கடி கலவரங்களில் முடிந்து வருகின்றன.

A Mujahideen leader surrendered arm to Brigadier Aung Gyi as part of the government's peace process in Buthidaung, Arakan, on 4 July 1961

A Mujahideen leader surrendered arm to Brigadier Aung Gyi as part of the government’s peace process in Buthidaung, Arakan, on 4 July 1961

ரோஹிங்கர்களின் ஆயுத போராட்டமும், பர்மா தேசியமும்: ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதிலும், பலதரப்பட்ட மக்களை, விவசாயத்திற்கு, பண்ணை மற்றும் தொழிற்சாலை வேலைகளுக்கு, ஒரு பகுதியில் உள்ள மக்களை இன்னொரு பகுதிக்கு குடியேற ஊக்குவித்தனர் மற்றும் மறைமுகமாகத் தூண்டி விட்டனர். கடல் கடந்த பகுதிகளில் அடிமைகளாகக் கூட்டிச் சென்று குடியேற்றினர். இதனால், புதியபகுதிகளில் குடியேறிய மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் எப்பொழுதும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. இரண்டாம் உலகபோருக்குப் பிறகு, காலனிய சக்திகள், அவரவர் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை விட்டு வெளியேற தீர்மானித்தனர். அப்பொழுதும் தேசிய மற்றும் தேசவிரோத பிரிவினை சக்திகளுக்கு, காலனிய சக்திகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தூண்டி விட்டன, உதவின. இங்கும் ரோஹிங்க முஸ்லிம்கள், பர்மீய தேசியத்துடன் இணையாமல், தனிநாடு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்டை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் தூண்டுதல்களினால், அவர்கள் ஆயுத போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், திடீரென்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை பலப்பகுதிகளாகப் பிரித்து, அவற்றிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்தனர். இதனால், திபெத், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் (1947), இந்தியா (1947), இலங்கை (1947), பர்மா (1948) என்று பல நாடுகள் உருவாகின. ஆங்கிலேயரது நிர்வாகத்திற்கு முன்பு, இவை ஒன்றாகத்தான் இருந்தன. இதனால், இந்த புதிய நாடுகளில் பிரச்சினைகள் உருவாகின. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் தனிநாடு கோரிக்கைகள் எழுந்தன. அவ்வாறு எழுந்தது தான் ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரிவினைவாத செயல்கள். ஆனால், தேசிய பர்மீய மக்கள் அதனை எதிர்த்தனர். இது இப்பொழுது பௌத்த-முஸ்லிம் மக்களுக்கிடையே நடக்கும் மதவாத மோதல்களாகக் கருதப்படுகின்றன.

Rohingya Muslims 50 years back

Rohingya Muslims 50 years back

ஆங்கிலேயரை ஆதரித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் (1941-45): இம்முஸ்லிம்கள் 1941ம் ஆண்டில் இங்கிலாந்தை ஆதரித்து வந்ததால், இவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மோதல்கள் இருந்து கொண்டே இருந்தன. பர்மா தான் தாய்நாடு எனும்போது, அவர்கள் எதற்காக ஆங்கிலேயர்களை ஆதரிக்க வேண்டும் என்பதனையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் ஜின்னா அவ்வாறு வேலைசெய்து தனிநாடு கேட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இங்கு இவர்கள் இவ்வாறு தங்களது விசுவாசத்தை காலனிய ஆதிக்கக் காரர்களுக்குக் காட்டி வந்தால், அந்நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்கள் மீது சந்தேகம் வரத்தான் செய்யும். மியன்மாரில் 90% பௌத்தர்கள் இருப்பதால், முஸ்லிம்களின் செயல்பாடுகள் சந்தேகத்துடனே பார்க்கப்பட்டது, இன்றும் பார்க்கப்படுகிறது. 1978 மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில் ராணுவத்தால் மேற்கொண்ட முயற்சிகளில் 4,50,000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். ஆனால், அதே காலத்தில், இம்மூஸ்லிம்களுள் உள்ள சிலர்களின் தீவிரவாத தொடர்புகளும் எளிப்பட்டன. ரோஹிங்கிய முஜாஹித்தீனின் செயல்பாடுகள் அறியப்பட்டன.

Rohinghya school started in Japan

Rohinghya school started in Japan

ரோஹிங்கிய முஸ்லிம்களின் இடம் எது?: ரோஹிங்ய முகமதியர் மேற்கு பர்மாவில் வசிக்கும் பத்து முதல் பதினைந்து லட்சம் மக்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் வடக்கில் பங்களாதேசம் மற்றும் மேற்கில் வங்காள விரிகுடா என்றுள்ள ராகைன் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பர்மா ராணுவ ஆட்சியின் கீழ் வந்ததும், தேசவிரோத குழுக்களை அடக்க ஆரம்பித்தார்கள். இதனால், ரோஹிங்கிய ஆயுத போராளிகளை தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு உதவும் மற்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதும் நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், இவர்களில் ஆயிரக்கணக்காணோர் பங்களாதேசம், சவுதி அரேபியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். மேற்கில் பங்களாதேசத்தில் உள்ள சிட்டகாங் பிரதேசம் எல்லாவித தீவிரவாதச் செயல்களுக்கும் பெயர் போனது. ரோஹிங்கிய முஸ்லிம்களுள் சிலர் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளது மற்றும் பங்களாதேசம் வழியாக இந்தியாவிலும் நுழைகின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் வெறும் அகதிகளாக செயல்பட்டால் பரவாயில்லை, ஆனால், தாங்கள் முஸ்லிம்கள் என்ற மனப்பாங்கில் தீவிரவாதிகளுக்கு உதவி வருவதால், சுற்றியுள்ள நாடுகள் அவர்களை ஏற்க தயங்குகின்றனர்.

British soldiers on patrol in the ruins of the Burmese town of Bahe during the advance on Mandalay, January 1945

British soldiers on patrol in the ruins of the Burmese town of Bahe during the advance on Mandalay, January 1945

ரோஹிங்கிய முஸ்லிம்கள் யார்?: பர்மாவின் 1982 குடிமைச் சட்டத்தின் படி இவர்கள் அந்நாட்டுப் பிரஜைகளாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் அவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்றால், 1823ம் ஆண்டுக்கு முன்னரே அவர்களது மூதாதையர் அங்கு வந்து குடியேறிவிட்டதாக ஆதாரங்களைக் காட்டவேண்டும். ஆனால், அவ்வாறு காட்டுவது கடினமான காரியம் ஆகும். சமீபத்தில் இப்பிரச்சினையை அலசும் தமிழக ஊடகங்கள் பாரபட்சமான, குழப்பமான விசயங்களைக் கொடுத்து வருகின்றன. புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான  ரோஹ்ங்கிய மக்கள் கடல் வழியாக படகுகளில்வெளியேறி வருகின்றனர் என்று தினகரன் கூறுகிறது[2]. இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர் நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர். மியன்மாரில் பிரதான மூன்று வகையாக‌ முஸ்லிம்கள்  இருக்கின்றார்கள் .

  1. பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
  2. பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
  3. ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் ) என அறியப்படுகிறது.

இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில்  1956ல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்தன . இதனால், அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் படிக்கக் கூட அனுமத் மறுக்கப்படுகிறது. அதே போல அரசு அல்லது தனியார் வேலையும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. இதனால் அவர்களது போக்குவரத்து ராகைன் மாகாணத்தின் எல்லைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலைகள் போடுவதற்காக கற்களை உடைப்பது போன்ற வேலைகளை சம்பளம் இல்லாமல் செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமானால், பர்மா ராணுவ அதிகாரிகள் அவர்களுடைய விலங்குகள், பொருட்கள் முதலியவற்றை லஞ்சமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், அடிப்படைவாத, தீவிரவாத முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தில் வைத்திருப்பதால், போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடப்பது வாடிக்கையான விசயங்களாகி விட்டன. இப்படி விடாகொண்டான், கொடாகொண்டான் போக்கில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் செயல்பட்டு வருவதால், அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

Rohingya burmese fightings

Rohingya burmese fightings

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரின் குடிமக்களே[3]: அஹிம்சைவாதிகளான பௌத்தர்கள் ஆக்ரோஷமான முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்ற விசித்திரமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மியன்மார் அவர்கள் தங்கள் பிரஜைகள் இல்லை என்று மறுக்கும் நிலையில், அவர்களைப் பற்றி, “தி இந்து” அவர்கள் இப்படி இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்ற போக்கில் இவ்வாறு எழுதியுள்ளது, “மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் வாழ்ந்து வருபவர்கள் ரோஹிங்கிய மக்கள் ஆவர். இவர்கள் பேசும் மொழி ரோஹிங்கிய மொழி. இவர்கள் மியான்மர் மண்ணின் மைந்தர்கள் என்று கல்வியியாளர்கள் சிலரும், மற்ற வரலாற்றாசிரியர்கள் சிலர் இவர்களை வங்காளத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும் கூறிகின்றனர்.  அதாவது மியான்மர், பர்மாவாக இருந்த போது பிரிட்டீஷ் ஆட்சியில் ரோஹிங்கிய மக்கள் குடியேறியவர்கள் என்று ஒருதரப்பினரும், 1948-ம் ஆண்டு பர்மா விடுதலையடைந்த பிறகு சிறிய அளவில் குடிபெயர்ந்தவர்கள் என்றும் மேலும் வங்கதேசம் தனிநாடாக 1971-ம் ஆண்டு போருக்கு பிறகு, உருவான பிறகு, சிறிதளவும் மியான்மரில் குடியேறியவர்கள் என்றும் பல்வேறு விதமாக இவர்களைப் பற்றி வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன”. இப்படி பல்வேறு கருத்துகள் உள்ளன என்றால், உண்மை என்ன என்பது தெரியவில்லை என்றாகிறது, இல்லை மியன்மார் அரசு கூறுவது சரி என்றாகிறது, அதாவது அவர்கள் வெளியிலிருந்து மியன்மாரில் நுழைந்தவர்கள் என்றாகிறாது. விகிபீடியா இவ்வாறான தகவல்களைக் கொடுக்கும் போது, “இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியது” என்ற எச்சரிக்கையுடன் போட்டுள்ளது. ஆனால், தமிழ் ஊடகங்கள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது.

© வேதபிரகாஷ்

30-05-2015

[1]  Chan (Kanda University of International Studies), Aye (Autumn 2005). “The Development of a Muslim Enclave in Arakan (Rakhine) State of Burma (Myanmar)” (PDF). SOAS Bulletin of Burma Research 3

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=147664

[3] http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7251897.ece?ref=relatedNews