Archive for the ‘ரஹ்மான்’ category

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை – பத்வாவுக்கு பொருட்செறிவு கொண்ட ரஹ்மானின் பதில்!

செப்ரெம்பர் 17, 2015

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள்திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை – பத்வாவுக்கு பொருட்செறிவு கொண்ட ரஹ்மானின் பதில்!

A R REhmans reply to fatwa

A R REhmans reply to fatwa

மெசஞ்சர் ஆஃப் காட் என்ற  ஈரானிய திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக தமிழகத்தை சேர்ந்த ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர், ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையை சேர்ந்த’ ரஸா அகாடமி ‘ என்ற சன்னி முஸ்லிம் அமைப்பு ஃபத்வா விடுத்தது.லிரான் ஒரு ஷியா நாடு, இருப்பினும் இஸ்லாத்தை காப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இன்றைய நாட்களில், சுன்னி நாடுகளில் ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்க்ஜள், அவர்களது மசூதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுதுள்ள தீவிரவாத இயக்கங்களும் சுன்னி ஆதரவு கோஷ்டிகளாக உள்ளன. ஐ.எஸ் / ஐசிஸ் போன்றவையும் ஷியா-விரோத இயக்கங்களாக இருக்கின்றன. இந்நிலையில், இப்படத்திற்கு சுன்னி அமைப்பு பத்வா கொடுத்துள்ளது வினோதமாக இருக்கிறது. மேலும் ரஹ்மான் போன்ற கலைஞர்களை இஸ்லாமிய அடிப்படவாதத்தில் சுருக்கிவிடும் வகையில் இந்த மிரட்டல் உள்ளது. சூபித்துவத்தில் பற்று கொண்ட ரஹ்மான் இஸ்லாத்தை பக்தியுடன் அணுகியுள்ளார். அவர் ஒரு சிறந்த இஸ்லாமிய நம்பிக்கையாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, அவரை சுன்னி-ஷியா சர்ச்சகளில் சிக்கவைக்க வேண்டிய தேவையும் இல்லை.

Mohammed-messenger of god - a sceneஏ.ஆர். ரஹ்மானின் பொருட்செறிவு மிக்க பதில்: இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் ரஹ்மான் தனக்கு விடுக்கப்பட்டுள்ள ஃபத்வாவிற்கு பதிலளித்துள்ளார்[1]டாங்கிலத்தில் உள்ள அவரது பதிலை ஒவ்வொரு இந்திய முஸ்லிம், ஏன், இந்துவும் கூட படித்து அதன் பொருளை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த படத்துக்கு இசையமைத்ததை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. படத்தை இயக்கியதிலும் தயாரித்ததிலும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அந்த பணியில் எனக்கு கிடைத்த ஆன்மீக தொடர்பான ஆத்ம திருப்தியை நான் பகிர விரும்பவில்லை[2]. இது எனது தனிப்பட்ட விஷயம்என கூறியுள்ளார்[3][அதாவது ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவேளை ஆன்மிகமாக உணர்வதற்கு, காணுவதற்கு பல சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை பற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவை ஒருவேளை உருவம் கொடுப்பது போன்ற நிலை ஏற்பட்டு விட்மோ என்ற அச்சம் தேவையில்லை என்று எடுத்துக் காட்டுகிறார்].

 

Ranbir-Kapoor-In-Rockstar-concert-03

Ranbir-Kapoor-In-Rockstar-concert-03

முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?ரஹ்மான் தொடர்லகிறாற், “ராஸா அமைப்பின் தலைவரான  நூரி , ‘இது போன்ற  படத்தை எடுப்பதை ஏன் தடுக்கவில்லைஎன அல்லா என்னிடம் கேட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிலளித்துள்ள ரஹ்மான்[4], ”இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் அதே காரணத்திற்காகத்தான். ஒருவேளை அல்லாவை  சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்தை ஒருங்கிணைப்பது, அன்பை பற்றிய போதனைகள், ஏழைகளின் முன்னேற்றம், தர்ம சிந்தனை, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை தவிர்த்து விட்டு மனித இனத்துக்கு சேவை செய்வது போன்ற போதனைகளை உள்ளடக்கிய முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?”. கடைசிநாளில், உயித்தெழும் போது, அல்லா அவரவருக்கு ஏற்றபடி தீர்ப்பு கொடுப்பார், அந்நாளில், அல்லா அப்படி ஒருவேளை கேட்டால்…………..என்று ரஹ்மான் கேட்டுள்ளதில், அவரது ஆழ்ந்த பக்தி, இறையுணர்வு, அசைக்கமுடியாத நம்பிக்கை, அல்லாவை காணத்துணிக்கும் துடிப்பு என்று எல்லாமே வெளிப்படுகிறது. இசையால் இறைவனைக் காணத்துடிக்கும், அப்பக்தனின் ஏக்கமும் புரிகிறது. அத்தகைய கலைஞனை மிரட்ட வேண்டிய தேவையே இல்லை.  

 

A R Rahman sufism

A R Rahman sufism

எல்லோரும் அமைதியாக, சந்தோஷமாக இருப்போம்: ரஹ்மான் தொடர்கிறார், “நபிகளை பற்றிய போதனைகளை முறையாக புரிந்து கொள்ளாமல், தவறான கருத்துகளை இணையங்களில் காண முடிகிறது[5]. காட்சி ஊடகங்கள் வழியாக சரியான விஷயங்களை கொண்டு புரிய வைக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தேன்[6]. மத சுதந்திரம் கொண்டுள்ள இந்திய நாட்டில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது, அதற்காக நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளவர்களாக இருக்கிறோம்[7]. இங்கே எல்லா சமூகங்களும் குழப்பம் மற்றும் வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை வாழ்வதே நோக்கம்[8]. நான் இஸ்லாமியத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை அறிந்துள்ள அறிஞர் அல்ல. பிரச்னைகளை கருணையோடு எதிர்கொள்வாம். கண்ணியத்தோடு கையாள்வோம் வன்முறை வழியாக அல்ல. இந்த உலகத்திற்காகவும், எந்த நாட்டில் நாம் வாழ்கிறோமோ, அந்நாட்டை ஆசிர்வதிக்கவும், நாம் இதயப்பூர்வமாக மன்னிப்புக்காக வேண்டுவோம், அதுதான் மிக உயர்ந்த மற்றும் ஞானம் இவற்றின் தன்மை கொண்ட மதொப்பிக்குரிய மொஹம்மதை (PBUH) இறைஞ்சுவதாகும்‘, இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்[9]. அவரது உருக்கமான பதில் எல்லா ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது[10]. இதைவிட, ஒரு முஸ்லிம் என்ன சொல்லவேண்டும் என்று ராஸா அகடெமி எதிர்பார்க்கிறது?

A R Rahman sufism experiences felt

A R Rahman sufism experiences felt

ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்: மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற அந்த அமைப்பு முகமது: மெஸஞ்சர் ஆஃப் காட் படத்திற்கு இசையமைத்தற்காக விடுக்கப்பட்ட ஃபத்வாவில் புனிதப்படுத்தும் கலீமா உறுதி மொழியை மீண்டும் எடுக்க வேண்டுமென்றும் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி , ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் திருமண பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியிருந்தது. சாதாரண சித்திரங்கள் குறித்தே இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றி திரைப்படம் எடுப்பதே மிகவும் தவறானது என்று அந்த ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது[11]. இந்த நிலையில், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று, தன் முயற்சிகளால் தமிழகத்துக்கும் தேசத்துக்கும் உலக அரங்கில் புகழ் ஈட்டித்தந்துள்ள ரஹ்மான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பக்க பதிவின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு முஸ்லிமாக, இந்திய உண்மையான செக்யூலரிஸ்டாக பதில் கூறியுள்ள ரஹ்மான் பாராட்டப்படவேண்டும்.

ar-rahman-fatwa-reply-true muslim

ar-rahman-fatwa-reply-true muslim

ரஹ்மான் தாய்மதம் திரும்பவேண்டும்: இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே[12]. அதாவது அவரது ‘கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது[13]. வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் இதுகுறித்து கூறியதாவது[14], “ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிதீர்ப்பு மொழி.. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல. எனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்”, இவ்வாறு சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[15]. இந்துக்களுக்கு, ஒருவேளை அத்தகைய நிலை சிறிது சந்தோஷத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ரஹ்மான் இதே நிலையில் உள்ளவரை, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முஸ்லிம்களில் நிறைய பேர் ஷிரிடி சாய்பாபா, புட்டபர்தி சாய்பாபா மற்ற இஸ்லாமிய பாபாக்கள் முதலியோரை நம்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்க்கலாம். ஆனால், சூபித்துவத்தில் ஊறிய அம்மனங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எப்படி ஒரு இந்து அல்லாவை ஏற்றுக் கொண்டு, இஸ்லாத்தை ஒதுக்கலாமோ, அந்நிலை தான் அது.

வேதபிரகாஷ்

© 17-09-2015

[1] விகடன், ரஹ்மான் பதில்: இறைதூதரின் படத்துக்கு இசையமைக்காதது ஏன் என்று அல்லா கேட்டால் என்ன சொல்ல முடியும்?, Posted Date : 12:08 (15/09/2015); Last updated : 12:08 (15/09/2015).

[2] “I am not a scholar of Islam. I follow the middle path and am part traditional and part rationalist. I live in the Western and Eastern worlds and try to love all people for what they are, without judging them,” said the double Grammy winner.

http://www.hindustantimes.com/music/ar-rahman-replies-to-fatwa-against-him-says-composed-music-in-good-faith/article1-1390446.aspx

[3] நக்கீரன், நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்; யாரையும் புண்புடுத்துவது எனது நோக்கமில்லை: .ஆர்.ரஹ்மான், பதிவு செய்த நாள் : 15, செப்டம்பர் 2015 (19:30 IST);மாற்றம் செய்த நாள் :15, செப்டம்பர் 2015 (19:30 IST).

[4] தினமணி, ஃபத்வா குறித்து .ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம், By DN

First Published : 15 September 2015 11:46 AM IST.

[5] தமிழ்.இந்து, நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்: ‘ஃபத்வாவிதித்த அமைப்புக்கு ரஹ்மான் அழுத்தமான பதில், Published: September 15, 2015 11:02 ISTUpdated: September 15, 2015 12:20 IST.

[6] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article7654749.ece

What, and if, I had the good fortune of facing Allah, and He were to ask me on Judgement Day: ‘I gave you faith, talent, money, fame and health… why did you not do music for my beloved Muhammad film? A film whose intention is to unite humanity, clear misconceptions and spread my message that life is kindness, about uplifting the poor, and living in the service of humanity and not mercilessly killing innocents in my name’,” he continued.

[7]http://www.dinamani.com/cinema/2015/09/15/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/article3029453.ece

[8] Rahman bats for religious freedom in India, “We are indeed fortunate and blessed to live in a country like India where religious freedom is practiced and where the aim of all communities is to life in peace and harmony sans confusion and violence.”

http://www.thehindu.com/entertainment/music-director-ar-rahman-writes-back-after-fatwa/article7652238.ece

[9] “Let us set a precedent in clearing conflict with grace and dignity and not trigger violence in words or actions. Let us pray for forgiveness, and from our hearts bless those who suffer in the world and bless the country that we live in. To so pray is to reflect the noble and enlightened nature of our beloved Muhammad,” the musician concluded.

http://www.vikatan.com/news/article.php?aid=52444

[10] http://www.newsx.com/entertainment/10723-ar-rahmans-excellent-reply-to-the-fatwa-issued-against-him

[11] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=151172

[12] தமிழிந்து, .ஆர்.ரஹ்மானின்கர்வாப்ஸி’-க்கு உகந்த நேரம் இதுவே: வி.எச்.பி., Published: September 16, 2015 17:34 ISTUpdated: September 16, 2015 17:34 IST

[13] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து சமூகம் புதல்வனுக்க காத்திருக்கிறது. ஏஆர்.ரஹ்மானை தாய் மதத்திற்கு அழைக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் Posted by: Sakthi Kumar Published: Wednesday, September 16, 2015, 22:50 [IST].

[14]http://tamil.thehindu.com/india/%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article7659610.ece

[15] http://tamil.oneindia.com/news/india/vhp-appeals-a-r-rahman-return-hinduism-235848.html

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

செப்ரெம்பர் 13, 2015

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

Mohammed messenger of God - A R RAhman fatwa

Mohammed messenger of God – A R RAhman fatwa

முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்[1]. ஆஸ்கார் விருது பெற்ற, ஸ்லம்-டாக் மில்லியனர் படம் இசைப்புகழ் ரஹ்மானுக்கு பத்வா போடப்பட்டுள்ளது என்று “ஹாலிவு ரிப்போர்டர்” தலைப்பிட்டு அறிவித்துள்ளது[2]. 1989ல் முஸ்லிமாக மாறிய இவர், தனது பெயரான திலிப் குமார் என்பதனை மாற்றிக் கொண்டார்[3]. அதிலிருந்து, இவர் பழுத்த முஸ்லிமாக நாகூருக்குச் செல்வது, மொட்டை அடித்துக் கொள்வது, சூபித்துவத்தில் ஈடுபடுத்திக் கொள்வது, சூப்பாடல்களை சினிமா பாடல்களில் சேர்ப்பது என்று பரிசோதனை செய்து வந்தார். சினிமா பாடல்களில் கூட இஸ்லாமிய ராகங்கள், இசைக்கருவிகள், கவ்வாலிகள் போன்ற மெட்டுகள் முதலியவற்றைக் காணலாம். இருப்பினும், இப்பொழுது பத்வாவிக்கு உட்பட்டிருக்கிறார்.

A R Rhman and Majid Majith

A R Rhman and Majid Majith

மஜித் மஜீதும், ரஹ்மானும், இறைத்தூதர் மொஹம்மது திரைப்படமும்: ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை மஜித் மஜிதி தன் பக்கம் ஈர்த்தார். உலகப்பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதேபோல் ‘த கலர் ஆப் பாரடைஸ்’, ‘த சாங் ஆப் ஸ்பாரோ’ போன்ற அன்பைப் பற்றி பேசும் தரமான திரைப்படங்களை இவர் அளித்துள்ளார்[4]. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ [ ‘Muhammad: Messenger of God’] என்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்[5].

Muhammad_-_The_Messenger_of_God_poster

Muhammad_-_The_Messenger_of_God_poster

இறைத்தூதர் மொஹம்மது திரைப்படத்திற்கு எதிப்புத் தெரிவிக்கும் முஸ்லிம்கள்: ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த படத்தை திரையிட கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்[6].  மஹாராச்ட்ரா முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் போன்றோரை சந்திப்போம் என்றும் கூறியுள்ளனர். தங்களது எதிர்ப்பையடுத்து, இந்த படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராஸா அகாடமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி [Saeed Noorie, chief of Raza Academy] தெரிவித்துள்ளார்[7]. இந்த ராஸா அகடெமி ஏற்கெனவே பல சர்ச்சைகளில், கலவரங்களில் ஈடுபட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மொஹம்மது இறைத்தூதர் - சினிமா

மொஹம்மது இறைத்தூதர் – சினிமா

மும்பை முதி பத்வா போட்டது ஏன்?: இது தொடர்பாக ரஸாக் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[8]:  “மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத்மெஸஞ்சர் ஆப் காட் படம்  இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தன்னைப்பற்றிய எந்த உருவத்தையும் எவ்விதத்திலும் உருவாக்கக் கூடாது என்று மொஹம்மது நபி கூறியுள்ளார்[9]. இந்நிலையில் இஸ்லாம் மத கோட் பாட்டுக்கு எதிராக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது. இந்த படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், முஸ்லிம்-அல்லாத பிற மதக்கலைஞர்களும் (காபிர்களும்) பணியாற்றியுள்ளனர்[10]. இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ.ஆர்.ரகுமானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறி இருக்கிறார்கள்[11]. இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மஜித் மஜிதி மற்றும் .ஆர்.ரஹ்மானுக்குபத்வாவிதிக்கப்படுகிறது”, இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது[12].

Mohammed messenger of God - An Iranian film

Mohammed messenger of God – An Iranian film

பிராயசித்தம் செய்ய வேண்டியது என்ன?: மொஹம்மது அக்தர், மும்பை முப்தி அந்த பத்வாவை அறிவித்துள்ளார்[13]. அப்படத்தில் நடித்த, வேலை பார்த்த முஸ்லிம்கள், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. மஜீதி மற்றும் ரஹ்மான் இருவரும், அவர்களது கருத்துகளைக் கேட்க முற்பட்டபோது, இருவரையும் காணவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது[14]. அதாவது காபிர்களுடன், மோமின்கள் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இருக்கும் நிலையில், முஸ்லிம்களான இவர்கள், காபிர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர். “இறைவனின் தூதர்” என்ற பெயரை வைத்து, அதில் காபிர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இதனால், அவர்களை காபிருத்துவம் ஒட்டிக்கொண்டுள்ளது. அதனால், அவர்கள் காபிர்களாகவும் மாறி விட்டனர். அதனால், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்வதின் மூலம் மோமின் நிலையை அடையலாம் என்று, தனக்கேயுரிய பாணியில் முப்தி கூறியுள்ளார். இனமவர்கள் பிராயசித்தம் செய்து மறுபடியும் முஸ்லீம்களாக மாறுவார்களா அல்லது அப்படியே இருப்பார்களா என்று பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-09-2015

[1] पैगंबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे महंगी फिल्म में संगीत देने वाले भारत के सबसे बड़े संगीताकार को मुस्लिम समुदाय ने फतवा जारी कर दिया है। मुंबई के सुन्नी मुस्लिम समुदाय की राजा एकेडमी ने इरानी फिल्मकार माजिद मजीदी और संगीतकार भारतीय संगीतकार एआर रहमान को फतवा जारी कर पैंगबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे बड़ी फिल्म पर कड़ा विरोध जताया है।

http://www.amarujala.com/photo-gallery/multiplex/entertainment-photo-gallery/fatwa-against-a-r-rahman-for-film-on-prophet/

[2] http://www.hollywoodreporter.com/news/fatwa-issued-slumdog-millionaire-composer-822668

[3] Rahman, 48, is one of India’s most successful composers, whose multiple awards include an Oscar and Grammy for his work onDanny Boyle‘s Slumdog Millionaire. He worked again with Boyle on the 2010 release 127 Hours. Rahman officially converted to Islam in 1989, replacing his Hindu birth name Dileep Kumar.

[4] தினமணி, .ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்புஃபத்வாஅறிவிப்பு!, By எழில்

First Published : 12 September 2015 05:17 PM IST.

[5] http://www.maalaimalar.com/2015/09/12130105/Fatwa-issued-against-AR-Rahman.html

[6]http://www.dinamani.com/cinema/2015/09/12/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/article3024497.ece

[7] மாலைமலர், ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்த .ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 12, 1:01 PM IST.

[8] தினகரன், முகமது நபிகள் பற்றிய ஈரான் படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மானுக்கு பத்வா: மும்பையை சேர்ந்த சன்னி அமைப்பு அறிவிப்பு, செப்டம்பர்.13, 2015, 03.22.14, ஞாயிற்றுக்கிழமை.

[9] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/fatwa-against-a-r-rahman-majid-majidi-for-film-on-prophet/

[10] http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/09/12142522/Fatwa-against-AR-Rahman-Majid-Majidi-for-film-on-Prophet.vpf

[11] தினத்தந்தி, .ஆர்.ரகுமான்ஈரான் இயக்குனருக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம், மாற்றம் செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST; பதிவு செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=166848

[13] Saeed Noorie, chief of Raza Academy, which initiated the fatwa that was issued by Muhammad Akhtar – the chief mufti of Mumbai.

http://www.thehindu.com/news/national/fatwa-against-ar-rahman-for-film-on-prophet/article7642275.ece

[14] In the fatwa, they cite as the reason the Prophet’s word that no visual or picture of him be created or kept. The fatwa claims the film makes a mockery of Islam, and professional actors, including some non-Muslims, have been cast in the key roles.The fatwa adds that the Muslims working on the film, especially Majidi and Rahman, have thus committed sacrilege and will have to read the kalma again and also solemnise their marriage again. Despite repeated attempts, Rahman remained unavailable for comment.

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

மார்ச் 17, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

mulayam-singh-yadavs-iftar-diplomacy-muslims

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

Mullah Mulayam and Imam - 2012

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

Mullah Mulayam and Imam

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

 

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

 

லல்லு-பாஷ்வான்-குல்லா

லல்லு-பாஷ்வான்-குல்லா

ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

Azam CD - poster of nude Jataprada

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

 

Omar Abdullah - Rahul-Mullah-Topi

Omar Abdullah – Rahul-Mullah-Topi

எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].

 

வேதபிரகாஷ்

17-03-2013


[2] However, while Maulana Bukhari indicated that he was not averse to another round of talks with Mr. Singh, he said the discussions should be centred around solid assurances.

http://www.thehindu.com/news/national/other-states/maulana-bukhari-severs-ties-with-sp/article4516659.ece

[4] Sources said that the fissures came to the fore after Ahmad was removed from the post of chairman, UP Pollution Control Board (UPPCB), following stinging charges of corruption against him. Though Ahmad was later adjusted in the Civil Defence Council, the shifting allegedly fuelled animosity between Bukhari and Akhilesh Yadav.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

[5] Jaya Prada, who is seeking re-election from Rampur constituency in Uttar Pradesh, alleged, “they (Khan and supporters) have released my CDs and posters just to scandalize my image”. “I am yet to see the content of the CDs but the posters released by them are very bad in taste, damaging my reputation. I am approaching the Election Commission to check this sort of campaigning,” she said.

http://articles.timesofindia.indiatimes.com/2009-05-11/india/28155645_1_azam-khan-rampur-jaya-prada-posters

[6] Samajwadi Party general secretary Amar Singh filed a complaint with the Election Commission charging SP rebel Azam Khan with distributing ‘nude’ photographs and obscene CDs of actor and Rampur candidate Jaya Prada.

http://www.dnaindia.com/india/report_seedy-cd-amar-wants-to-get-azams-scalp_1255500

[7] In April 2012, Bukhari entered into a murkier spat with minority affairs minister Azam Khanwho questioned the Imam’s claim of being a “Muslim leader”. It all started after Bukhari’s son-in-law Umar was nominated by SP as its candidate in the Legislative Council. Azam was peculiarly against Umar citing his failure during the assembly elections. Mulayam tried to pacify Bukhari, who, however, remained unmoved and retaliated by lambasting the SP of relying too much on Azam, while leaving nothing important for others.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

மார்ச் 3, 2013

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

Attacks on Hindus is similar to 1971

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றது. தலைநகர் டாக்காவில் கலவரம் செய்தால் அது எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால், நவகாளி, சிட்டாகாங் பகுதிகளில் வாழும் இந்துக்களைத் தாக்கினால், அதற்கு என்ன அர்த்தம்? “இஸ்லாம்” என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான் போலும்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளணர். இப்பொழுதுதான் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1].

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்தியாவில் இதைப் பற்றி மூச்சு-பேச்சு இல்லை: ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார். முலாயம் மறுபடியும் “முல்லவாகி” முஸ்லீம்களுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்[5]. ராஹுல் காந்தி பொது காரியதரிசிகளைக் கூட்டி கூட்டம் போடுகிறார்[6].

Hindu woman wails after her house looted and torched

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்:  டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[7] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[8]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[9]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

Bangladesh protesters against Capital punishment

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் போன்றோர் இப்பொழுது ஏன் வாயைத் திறக்கவில்லை?: முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்த அறிவு ஜீவிகள் இப்பொழுது ஏன் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்? பீஜேபி கூட மகிழ்ச்சியாக கூட்டம் கூடுகிறதே தவிர, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையே? ஆனால், இலங்களை தமிழர்களுக்கு ஆதரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், பீஜேபியும் அதே வழியில் செல்கிறாதா? சல்மான் குர்ஷித் முன்பு முஸ்லீம் போல கத்தினார், ஆனால், இப்பொழுதோ, அது அவர்களது “தொட்டுவிடும்” உள்நாட்டு விஷயம் என்கிறார்[10]. அப்படி என்னத்தைத் தொடுகிறது என்று சொல்லவில்லை[11]. கம்யூனிஸ்ட் யசூரி கலவரத்தைக் கண்டித்தோது சரி[12]. பிரனாப் முகர்ஜி இத்தனை கலவரங்கள், கொலைகள், எரியூட்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தமது மாமா-மச்சான்களைப் பார்க்க, தனது அங்கிருக்கும் சொந்த ஊருக்கு வருகிறாராம்!

Mulayam again poses as Mulla - hobnobbing with Muslims 2013

1971 மற்றும் 2013 – இந்துக்கள் தாக்கப்படுவது: பங்களாதேசம் உருவாக இந்திய உதவியது. அதாவது, முக்திவாஹ்னியுடன் போரிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியர்கள் அப்பொழுது அவ்வாறு நினைத்ததில்லை. ஆனால், 1071லேயே, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், ஜமத்-இ-இஸ்லாமி, போன்ற வெறிபிடித்த முஸ்லீம்களை இந்துக்களைத் தாக்கினர், பெண்களைக் கற்பழித்தனர், வீடுகளை சூரையாடினர், கோவில்களை தரை மட்டமாக்கினர். அதேதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

Taliban wanting Jihadi Bangla Muslims

‘Amra Sobai Hobo Taliban Bangla Hobe Afghanistan’ – பங்களாதேசம் ஆப்கானிஸ்தான் ஆனால் தான், எங்களுக்கு சோபை வரும் என்று வெளிப்படையாக தீவிரவாதத்தை வளர்க்கும் வங்காள ஜிஹாதிகள்! இப்படி இந்தியாவைச் சுற்றி ஜிஹாதிகள் இருந்தால், இந்தியா என்னவாகும்?

© வேதபிரகாஷ்

03-03-2013


 


[1] Police also reported attacks on several Hindu homes and temples in the southern Noakhali and Chittagong districts.

http://thepeninsulaqatar.com/qatar/227373-bangla-death-verdict-sparks-riots-34-die-.html

[6] Party vice-president Rahul Gandhi has convened a meeting of all general secretaries and central leaders in charge of states on March 6, leading to wide anticipation in the party quarters that some of them may get new assignments.http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Rahul-Gandhi-calls-general-secys-meeting/Article1-1020202.aspx

[10] Terming the riots in Bangladesh over a war crimes verdict as an internal matter of that country, External Affairs Minister Salman Khurshid on Friday said the government sitting in Dhaka is fully capable of handling this situation and that the law will take its own course. Khurshid said it is a very touchy political issue for some sections of the Bangladesh polity. http://www.indianexpress.com/videos/international/21/bangladesh-capable-of-handling-riots-over-war-crimes-verdict-khurshid—/15760