Archive for the ‘ரத்தம் குடித்தல்’ category

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

ஏப்ரல் 3, 2017

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

Abdul Waheed before becominh Peer

இவனேமனநோயாளிஎன்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

Sargohda - dargh inside - photos of peers

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

Abdul Waheed killed 20 at sargodha

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மதகாப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை.  பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.

© வேதபிரகாஷ்

03-04-2017

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.2

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.

[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.

[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused

[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.

[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html

[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.

http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.

[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html

[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT

[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html

[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

மார்ச் 10, 2013

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!

ஜூலை 25, 2010

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!

சமிபத்தில் கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் நரபலி அதிகமாகி வருவதைக் காணலாம். இதில் காணப்படும் முறை, குழந்தைகள் காணாமல் போவது, பெற்றோர் புகார் கொடுப்பது, ஆளில்லாத இடத்தில் குழந்தைகள் உடல், உடற்பாகங்கள் காணப்படுவது, சில ஆட்கள் / மந்திரவாதிகள் கைது செய்யப்படுவது, அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது…………..பிறகு என்னவாயிற்று என்று தெரியாமல் வழக்குகள் முடிக்கப்படுவது…………..என்ற போக்குத்தான் தெரிய வருகிறது. இப்பொழுது செய்திகள் இப்படி வருகின்றன:

மதுரையில் காணாமல் போன குழந்தை ஏர்வாடியில் கொலை[1]: மதுரை தர்ஹாவில் காணாமல் போன குழந்தையின் உடல் ஏர்வாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கவுஸ் பாஷா, அவர் மனைவி ஷிரின் பாத்திமா. அவர்களுக்கு ஒன்றரை வயது மகன் காதர் யூசுப். திடீரென்று கவுஸ் பாஷா விபத்தில் இறந்தததால், ஷிரின் பாத்திமா துக்கத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் ஆழ்ந்த கவலையில் இருந்த ஷிரின் பாத்திமா, தனது ஒன்றரை வயது குழந்தை காதருடன், கடந்த இரண்டாம் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்காவுக்கு சென்றுள்ளார். அங்கு பிராத்தனையில் ஈடுபட்ட பாத்திமா அன்று இரவு தனது குழந்தையுடன் அந்த தர்காவில் உறங்கியுள்ளார்.

தர்காவில் குழந்தை காணவில்லை: காலையில் எழுந்ததும் அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு பாத்திமா அதிர்ச்சி அடைந்தார். தல்லாகுளம் போலீசில் செரீன் பாத்திமா புகார் செய்தார்[2]. இன்ஸ் பெக்டர் சிதம்பரம் முருகேசன், கோரிப் பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி நடமாடிய திருச்செந்தூர் காயல் பட்டினத்தை சேர்ந்த அப்துல் கபூர் (30) என்பவரை பிடித்து விசாரித்தார்.

மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : தூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப்பு[3]: அப்துல் கபூர் என்பவனை போலீஸார் விசாரித்தலில், அவன் சொல்லிய விவரங்கள் பயங்கரமாக இருந்தான. மேலும் தமிழ் ஊடகங்கள் – பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் சில முரண்பாடான விஷயங்களை கொடுக்கின்றன. அதாவது, அவன் மந்திரவாதி, அவனை நரபலி கொடுக்கத்தூண்டியது அசரீரி, இல்லை காளி, அவன் ரத்தத்தைக் குடித்தான், மனைவியும் சேந்து குடித்தான், பூஜை செய்தான், பரிகாரம் செய்தான்…………முதலியவை எதையோ மறைக்க முயல்கின்றன என்று தெரிகின்றது. டிவி-செய்தியின்படி, அந்த கிராம மக்கள், இவனின் நடவடிக்கைகளை சந்தேகித்துள்ளனர் என்று தெரிகிறது. ஆனால், ஏன் புகார் கொடுக்கவில்லை என்பது மர்மமாக உள்ளது.

தர்காவில் வந்தது அசரீரியா, காளி தேவியா – அப்துல் கபூர் கூறியதாவது: இதில்தான் நாளிதழ்கள் வேறுபடுகின்றன. தினத்தந்தியில் உள்ளது[4]: “கோரிபாளையம் தர்காவில் நான் தங்கி இருந்தபோது கனவில் தலைப்பிள்ளையாக பிறக்கும் ஆண்குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தைக் குடித்தால் மாந்திரிக சக்தி அதிகரிக்கும் என்று அசரீரி கூறியது”. ஆனல் தினமலரில், “கனவில் வந்த காளிதேவி, தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன்”, என்றுள்ளது!  தர்காவில் புதைக்கப்பட்ட முஸ்லீம் மதத்தலைவர்கள், குருக்கள், சூஃபிக்கள்…………..முதலியோர் பேசுவார்கள், குறைத்தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. முன்பு 15 வருடங்களுக்கு முன்பு “அமீர் குஸ்ரூ” என்ற டிவி-தொடர் ஒலிபரப்பப்பட்டது. அதில் எப்படி ஒரு சூஃபி, அமீர் குஸ்ரூவிடம் பேசுகிறார் என்று காண்பிக்கப்பட்டுள்ளது[5].

குழந்தையை எப்படி பலி கொடுக்கப்பட்டது என்று விளக்கப்படுகிறது: அப்துல் கபூர் தொடர்கிறான், “இதனால் நானும், என் மனைவியும் குழந்தை காதர் யூசுப்பை கடத்திக்கொண்டு காயல்பட்டினம் அருகே உள்ள ஏரல் கிராமத்திற்கு சென்றோம். அங்கு கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, ஒரு வாளியில் ரத்தத்தை பிடித்து, இன்னொரு வாளியில் தலை மற்ற பாகங்களை வைத்தோம். தலையை குலசேகரன்பட்டினம் செல்லும் வழியிலுள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றோம். அங்கு ரத்தத்தை குடித்து பரிககரம் செய்தபின் தலையை அங்கேயே புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்காவை அடுத்த கடற்கரை பகுதியிலுள்ள காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து தன்கினோம். அங்கு குழந்தையின் உடல் பாகங்களை புதைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டோம்”, என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, நேற்று அப்துல்கபூரை மதுரை தல்லாகுளம் போலீசார் ஏர்வாடி அழைத்து வந்தனர்.

உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டப்படுவது: கீழக்கரை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில், குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின் திருச்செந்தூர் அருகே தலையை புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க போலீசார் அங்கு அழைத்து சென்றனர். “ஏர்வாடி காட்டுப்பள்ளி வாசல் சேர்மன் தெருவில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல், இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்,’ என, போலீசார் தெரிவித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை கொலை செய்து தலையை தூத்துக்குடியிலும், உடலை ஏர்வாடி தர்ஹா அருகிலும் புதைத்திருப்பதாக தெரிவித்தார்[6]. அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தையை நரபலி கொடுத்தால் மனநோய் சரியாகும் என்பதால் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையில் உடலை மீட்க குற்றவாளி அப்துல் கபுருடன் தாசில்தார், உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தை நரபலி: இங்கு திடீரென்று, இப்படியொரு வரி காணப்படுகிறது[7], “அப்துல் கபுருக்கு மனநிலை சரியில்லாததால், தலைக்குழந்தையை நரபலி கொடுத்தால் மனநோய் சரியாகும் என்பதால் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது”! தினகரனும் மற்ற இணைதளங்களும் குறிப்பிட்வது, “தலைச்சன் பிள்ளையை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்கும் என்று சிலர் சொன்னதால், இந்த குழந்தையை நரபலியை கொடுத்ததாக அப்துல் கபூர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்”, என்றுதான் உள்ளது[8]. நரபலி விஷயத்தில் ஊடகநிபுனர்கள் குழம்பியுள்ளார்களா, குழப்பப்பார்க்கிறார்களா, பயந்து போயிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

நரபலி முஸ்லீம்களுக்கோ, தமிழகத்திற்கோ புதியதல்ல; இங்கு குறிப்பாக முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகள், தர்காக்கள், முஸ்லிம் மாந்திரீகர்கள் முதலியோர் சம்பந்தப் படுவதால், இக்கொணத்தில் பார்க்க வேந்தியுள்ளது. இதை முஸ்லீம் பிரச்சினை என்று பார்க்கவில்லை, ஏனெனில் மற்ற இடங்களில் இந்துக்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இங்கு, முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன என்று ஆராயும் நோக்கில் அல்சப்படுகிறது. முன்பு 2007ல் இக்பால் மற்றும் ஜாபர் என்ற இரண்டு மந்திரவாதிகள் இதே மாதிரி எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். விவரம் இதோ:

உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை[9] (ஏப்ரல் 2007): பெற்ற மகனையே நரபலி கொடுப்பதற்காக அமராவதி ஆற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். உடுமலை அருகே சோழமாதேவியை சேர்ந்த முகம்மது அலி மகன் முகம்மது இக்பால் (32). மாந்திரீகம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இதே பகுதியில் வசிக்கும் மாந்திரீகர் ஜாபருடன் சேர்ந்து மாந்திரீகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதனால், இக்பால் மனைவி ஜமீலா தனது சொந்த ஊரான கேரளா மாநிலம் சோலக்கரைக்கு சென்றுவிட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து திண்டுக்கல்லில் அமைதியாக குடும்பம் நடத்தினார். இந்நிலையில், இவரின் மகன் ஆரீப்கான் (3) பிணமாக அமராவதி ஆற்றில் மிதந்தார். இச்சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, குழந்தையின் தந்தை முகம்மது இக்பால் மற்றும் மாந்திரீகவாதி ஜாபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதில், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.

மந்திரசக்தி பெற குழந்தை நரபலி: கொலை நடந்த அமராவதி ஆற்றுக்கு முகம்மது இக்பாலை போலீசார் அழைத்து சென்று, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து கேட்டனர். அப்போது, ஜாபர் முதலில் குழந்தையை ஆற்றுக்கு அழைத்து வந்ததை மட்டும் கூறியுள்ளார். பின்னர், குழந்தையை பாறை மீது அமரவைத்து தண்ணீருக்குள் தள்ளியதாகக் கூறியுள்ளார். போலீசார் கூறும் போது, “அதிக மாந்திரீக ஈடுபாடு காரணமாக கொலை நடந்துள்ளது. முகம்மது இக்பால் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. பிரேத பரிசோதனையிலும், குழந்தை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கொலைக்கான காரணம், கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விரைவில் தெரியவரும்’ என்றனர்.

முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகள் மாயமாகும் மர்மங்கள் (ஆகஸ்ட் 2009): குறிப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காணோம் என்றுதான், இந்த நரபலி செய்திகளில் தெரிய வருகின்றன. ஆகையால், அத்தகைய நரபலி கூட்டம் அல்லது, அத்தகைய எண்ணம் உள்ளவர்கள் தமகேற்ற முறையில்தான், “பலி ஆடுகளைத்” தேடிப் பிடிக்கின்றனர், என்று தெரிகின்றது.

கீழக்கரையில் குழந்தை மாயம்

First Published : 02 Aug 2009 01:21:23 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid…………… %8D

Last Updated :

கீழக்கரை, ஆக. 1, 2009: கீழக்கரையில் இரண்டு வயதுக் குழந்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த அஹமது முர்சலீன் மகன் முஹம்மது நபில் (2). சம்பவத்தன்று, இந்தக் குழந்தை வீட்டுமுன்பு மதியம் 1.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்ததாம்.

பின்னர், சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து, பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல், கீழக்கரை காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து கொண்ட போலீஸôர், குழந்தையை தேடி வருகின்றனர்.

நீதிமன்றங்கள் இவ்வழக்ககுகளை அலட்சியமாகவே தீர்ப்பளித்து முடிக்கின்றன[10] (ஜூன் 2010): மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன் மூன்று மாத குழந்தை மாயமான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, பைசல் செய்தது. குழந்தையை அடையாளம் தெரிந்து கண்டுபிடிக்க இயலாது எனவும் கருத்து தெரிவித்தது. நாகபட்டினத்தை சேர்ந்த விஜயா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: “எனக்கு ஒரு பெண், மூன்று மாத ஆண் குழந்தை இருந்தது. என் தாயாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஒரு மனநல காப்பகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக நான், குழந்தைகளுடன் அங்கு தங்கியிருந்தேன். 1996 செப்., 20ம் தேதி அங்கு படுத்திருந்த போது, என் ஆண் குழந்தையை காணவில்லை. அங்கு பணிபுரிந்த ஜஹாங்கீர் உட்பட சிலர் கடத்தியிருக்கலாம். ஏர்வாடி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. என் குழந்தையை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்”, என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், ஏ.ஆறுமுகச்சாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அழகுமணி, அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் டேனியல் மனோகரன் ஆஜராயினர். நீதிபதிகள், மூன்று மாத குழந்தை காணாமல் போயுள்ளது. அப்போது, அக்குழந்தையின் ஒரு போட்டோவை கூட மனுதாரர் போலீசாரிடம் வழங்கவில்லை. தற்போது 14 ஆண்டுகள் ஆகி விட்டன. குழந்தையை அடையாளம் காண்பது இயலாத காரியம். மனுவை நிலுவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. மனு பைசல் செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

குவாரி கும்பல் அட்டூழியம்மூன்றரை வயது குழந்தை நரபலி[11] (நவம்பர் 2008)?மதுரை நவம்பர் 20, 2008: மதுரையில் குவாரி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக மூன்றரை வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரையை அடுத்தள்ள புது தமரைப்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் ரவி. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது மூனறரை வயது மகள் கோபிகா எல்.கே.ஜி. படித்து வந்தாள். அவள் எனது வீட்டு முன்பு கடந்த செப்டம்பர் 6 ம் தேதி அன்று விளையாடிக் கொண்டிருந்தாள். ஆனால் திடீரென காணாமல் போனாள். அவளை பல இடங்களில் தேடியும் காணவில்லை. மறு நாள் நாட்டாமங்கலம் கால்வாயில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாள். கோபிகா காணாமல் போன நாட்கள் முதல் எனது வீட்டு அருகில் வசிக்கும் ரவி என்பவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. தொடர் விசாரணை செய்தபோது, எனது குழந்தையை ரவி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதும், குவாரி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக எனது மகள் கோபிகாவை சிலருடன் இணைந்து நரபலி கொடுத்ததும் தெரியவந்தது. எனது மகள் இறந்த இடத்தில் 30 வது நாளில் சிலர் அந்த இடத்தில் பூஜைகள் நடத்தியுள்ளனர்”, என்று புகார் கொடுத்தார்.

நீதிபதி கே.என். பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது (2008): ஆனால், இந்த சம்பவத்தில் கோபிகா மாருதி வேனில் அடிபட்டு இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்துள்ளனர். இதன்மூலம் உண்மையை மறைக்க போலீசார் முயல்கின்றனர். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி கே.என். பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரம் தள்ளி வைத்தார் (அதற்குப் பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை). மதுரை அருகே கீழவளவு பகுதியில் இருந்த பல குன்றுகளையும் மலைகளையும் குவாரி கும்பல் சுரண்டி சுரண்டி தரைமட்டமாக்கிவிட்டனர். இப்போது மலைகள் இருந்த இடத்தில் பெரிய பள்ளம் தான் உள்ளது. தரைக்கு அடியிலும் இப்போது சுரங்கம் தோண்டி கிரானைட்டையும் மார்பி்ள் கற்களையும் எடுத்து வருகின்றனர். இதனால் எல்லா கட்சி கரை வேட்டிகளுக்கும் கொழுத்த லாபம்.

கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு[12] (அக்டோபர் 2009): சேலம், அக். 7, 2009:   சேலம் அருகே கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது காரிப்பட்டி. இங்குள்ள ஒரு ஓடையின் அருகில் தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதை அப்பகுதி வழியாகச் சென்ற சிலர் கண்டனர். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி கணேசமூர்த்திக்கு அவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். பிணமாகக் கிடந்த குழந்தைக்கு சுமார் 2 வயது இருக்கும். உடலில் இடது கை முழுமையாகவும், வலது கையில் மணிக்கட்டு வரையும் காணவில்லை. இதேபோல் இடுப்புக்கு கீழே கால்கள் எதுவும் இல்லை. குழந்தை இறந்து 3 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது ஆணா பெண்ணா என்பதையும் கண்டுபிடிக்க இயலாத நிலையில் இருந்தது.

போலீசாரிடம் புகார்: குழந்தையின் உடல் கிடப்பது குறித்த தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சேலத்தில் இருந்து மோப்ப நாய் அர்ஜூனும் கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இப்பகுதியில் காலைக்கடன் கழிக்க வந்த பொதுமக்கள் சிலர், துர்நாற்றம் வீசியதை வைத்து குழந்தையின் உடல் கிடப்பதைக் கண்டுள்ளனர். குழந்தை இறந்து அநேகமாக 36 மணி நேரம் ஆகியிருக்கலாம். குழந்தைக்கு 2 வயதுக்குள் இருக்கும். உடல் அழுகத் தொடங்கியதால் கை, கால்கள் சிதிலமடைந்திருக்கலாம். இருப்பினும் நரபலி கொடுப்பதற்காக கை, கால்கள் வெட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வெட்டப்பட்டதாக கூறப்படும் கை, கால்களையும் தேடி வருகிறோம். இந்த குழந்தையின் உடலை வேறு பகுதியிலிருந்து இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம்”, என்றார் மயில்வாகனன்.

மக்கள் சொல்வது நரபலி, போலீஸார் சொல்வது வேறு: சம்பவம் நடைபெற்ற காரிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது. மேலும் சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஓடைக்கு சற்று தொலைவில் மயானம் உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட உடலை நாய்கள் கடித்து வெளியே கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த மயானத்தில் சமீபத்தில் உடல்கள் எதுவும் அடக்கம் செய்யப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். முனியப்பன் கோயிலின் மிக அருகில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்ததால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல் கிடப்பது குறித்து காலை 9.30 மணிக்கே காரிப்பட்டி போலீஸôருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் 11.45 மணியளவில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து மாலை 4 மணி வரையிலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. குழந்தையின் உடலுக்கு ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டுமே காவலுக்கு இருந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு மேல் தான் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.


[1] தினமலர், மதுரையில் காணாமல் போன குழந்தை ஏர்வாடியில் கொலை, ஜூலை 24,2010, மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைத்தளத்தைப் பார்க்கவும்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46417

[2] தினமலர் மற்றொரு பதிப்பில் இவ்வாறு உள்ளது: “இது குறித்து கோரிப்பாளையம் போலீசில் ஜூலை 2ம் தேதியன்று புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த கோரிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபுர் (30) என்பவரை கைது செய்தார்”.

[3] தினமலர், மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : தூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப்பு, ஜூலை 24,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46480

[4] தினத்தந்தி, திருடிச்சென்று நரபலி கொடுத்தார் ஒன்றரை வயது குழந்தையின் தலையை துண்டித்து குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது, http://www.dailythanthi.com/article.asp?NewsID=582561&disdate=7/25/2010

[5] முஸ்லீம் உலகத்தில் இது எல்லொருக்கும் உள்ள நம்பிக்கையாகும். சமாதிகளுக்கு / தர்காக்களுக்கு செல்வதே அதற்காகத்தான்.

[6] தினகரன், தம்பதியர் வெறிச்செயல் மதுரை தர்காவில் இருந்து குழந்தையை கடத்தி நரபலி, http://www.dinakaran.com/crimedetail.aspx?id=11252&id1=11

[7] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46417

[8] http://www.inneram.com/201007249491/child-murder-at-madurai

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=5432

[9] தினமலர், உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை, 24.04.2007

[10] தினமலர், ஏர்வாடியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை மாயமான வழக்கு பைசல்; ஐகோர்ட் கிளை உத்தரவு, ஜூன் 12,2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17785

[11] குவாரி கும்பல் அட்டூழியம்-மூன்றரை வயது குழந்தை நரபலி?

http://thatstamil.oneindia.in/news/2008/11/20/tn-child-sacrified-near-madurai-by-quary-miners.html

[12] தினமணி, கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு , First Published : 08 Oct 2009 04:07:07 AM IST; Last Updated : 08 Oct 2009 08:52:52 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid………………. %81