Archive for the ‘ரகசிய சர்வே’ category

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

மார்ச் 22, 2013

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

Hijbul Mujahiddeen - Paki-terrorist group

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

Paki-terrorist arrested - militant of Al-barq

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா  (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

Haji Arafat Guest house - room No.301 arms stored

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

Kashmir terror

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

Indian flag burned

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8].  இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார்.  அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

Indian-flag-burned2

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2013


[7] NDTV has learnt that Liyakat Shah and his family, including his 18-year-old daughter flew from Karachi to Kathmandu and reached Sanauli post on the Indo-Nepal border on March 20. There, they informed the border police. However, instead of allowing them to proceed to Jammu and Kashmir as planned and promised, the Delhi Police arrested them.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[8]  Delhi Police seized an AK-56 assault rifle, two magazines with 30 cartridges each, and a hand grenade from a room of a guest house near the famous Jama Masjid mosque.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.

[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.

[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.

[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.

கருப்புதினமாகக் கொண்டாடிய காஷ்மீர மக்களும், குண்டுகளைப் பொழிந்த பாகிஸ்தானியரும், குண்டுகள் வெடிக்கப்பட்ட மணிப்பூரும்: சுதந்திரநாள் கொண்டாடப்பட்டவிதம்!

ஓகஸ்ட் 16, 2012

கருப்புதினமாகக் கொண்டாடிய காஷ்மீர மக்களும், குண்டுகளைப் பொழிந்த பாகிஸ்தானியரும், குண்டுகள் வெடிக்கப்பட்ட மணிப்பூரும்: சுதந்திரநாள் கொண்டாடப்பட்டவிதம்!

 

சுதந்திர நாள் கொண்டாட்டம் என்றால் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை விட்டு, ஏதோ தீவிரவாத தாக்குதல் தடுப்பு தினமாகக் கொண்டாடப்படுவதைப் போன்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாகி வருகிறது. இப்படி பயந்து கொண்டே கொண்டாடுவது கொண்டாட்டமா என்று தெரியவில்லை.

 

வழக்கம்போல பிரிவினைவாத, அடிப்படைவாத, இந்திய-எதிர்ப்பு காஷ்மீர முஸ்லீம் மக்கள் சுதந்திரதினத்தை கருப்பு நாளாகக் கொண்டாடி பெருமை சேர்த்துள்ளனர்[1].

 

பாகிஸ்தானியர்கள் கடந்த 11 நாட்களில், ஏழு முறை சட்டங்களை / ஒழுங்கை மீறி எல்லைப்புறங்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி, இந்திய வீரர்களுக்கு குண்டுகளை கொடுத்துள்ளது[2].

 

மணிப்பூரிலேயோ, குண்டுகள் வெடித்தே சுதந்திர நாள் கொண்டாடப்பட்டுள்ளது[3].

 

ஆனால், பிரதமந்திரியோ பத்திரமாக, குண்டு துளைக்காத கண்ணாடி கவசத்தின் பின்னாக நின்று கொண்டு, உணர்ச்சியே இல்லாமல் தயார் செய்து கொடுத்த பேச்சை தட்டுத் தடுமாறி இந்தியில் பேசி முடித்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாது, பல இடங்களில் உளறிக் கொட்டியுள்ளார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[4].


இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே: கேரளாவில் 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, வழக்கு பதிவு!

நவம்பர் 7, 2010

இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே: கேரளாவில் 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, வழக்கு பதிவு!

ஒபாமா வருகையைப் பற்றி அமெரிக்கா நடத்திய கருத்துக் கணிப்பு: ஒபாமா இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு, இந்திய முஸ்லீம்கள் அமெரிக்கா, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதலியவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றறிய இந்தியாவின் பல நகரங்களில் கருத்தறிய சர்வே ஒன்றை அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நடத்தியுள்ளது. ஆனால், கேரளாவில் நடந்தபோது, அது பிரச்சினையாகியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தினரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ரகசிய சர்வே நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள முஸ்லீம்களிடம் அமெரிக்காவின் கருத்துக் கணிப்பு: கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிமடம் காலனி இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி. இங்கு அக்டோபர் 2ம் தேதி ஐந்து பெண்கள் சென்று இஸ்லாமிய பெண்களிடம் சர்வே நடத்தினர். அவர்கள் அப்பெண்கள், ஆண்கள் என பலரிடமும் வினாத்தாளில் இருந்த 90க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடை தேடினர். அதில், “ஒசாமா பின்லாடனை நீங்கள் விரும்புகிறீர்களா?’ “நீங்கள் பர்தா (இஸ்லாமிய பெண்கள் அணியும் சம்பிரதாய உடை) அணிவீர்களா?’ போன்ற இஸ்லாமிய சமுதாயம் சம்பந்தமான வினாக்களைக் கேட்டனர். அங்கிருந்த ஏழைப் பெண்களுக்கு அவர்கள் எதற்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கின்றனர் என தெரியாமல் பதிலளித்துள்ளனர். சர்வேக்காக வந்த பெண்கள் அப்பகுதியில் வசிக்கும் நாசர் என்பவரது வீட்டுக்கும் சென்றனர். அங்கு அப்பெண்களிடம் நாசர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அப்பெண்கள் சரிவர பதில் சொல்லவில்லை. இதனால் அப்பெண்கள் மீது சந்தேகம் கொண்ட அவர் அப்பெண்களை தனது வீட்டில் சிறை வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்[1].

போலீஸார் விசாரித்த பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]: இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் அப்பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பெண்கள் டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெய்லர் நெல்சன் சோப்ரஸ் இந்தியா TNS (Taylor Nelson Sofres-India) நிறுவனத்தின் கொச்சி கிளையில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் என்பதும், அவர்களுக்கு ஒரு சர்வேக்கு 30 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதும் தெரிந்தது. அப்பெண்கள் அளித்த விலாசத்தில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரித்தனர். TNSஐக்கெட்டபோது, அவர்கள் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் சர்வே ஆராய்ச்சி நிறுவனத்திற்காக (Princeton Survey Research Associates) அந்த சர்வே செய்வதாக கூறினர்[3]. போலீசார் உடனே இரு சமூகத்தினரிக்டையே வெறுப்பையுண்டாக்க முயல்வதாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்[4].

மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்திய கேரள அரசு: விசாரணையில், டில்லி நிறுவனம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் இருந்து செயல்படும் பிரின்ஸ்டன் சர்வே ரிசர்ச் அசோசியேட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்காக இந்த சர்வே பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுபோல், டில்லி, ஐதராபாத் நகரங்களிலும் சர்வே நடந்துள்ளதாகவும் தெரிந்தது. விசாரணைக்குப் பின் அப்பெண்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் விசாரணை, பொதுமக்கள் எதிர்ப்பு ஆகியவை காரணமாக கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் நடத்தப்பட இருந்த இதுபோன்ற சர்வேக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற சர்வே நடந்து வருவதால், இதுகுறித்து மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி விட்டதாக, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர்  கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொடியேறி பாலகிருஷ்ணன், கொடியை அவமத்தித்த கிலானி, ஆராய்ச்சி செய்யும் போலீஸார்; எல்லாம் விஷயத்தை அறிந்து கொண்டு இப்படியெல்லாம் பேசுவது கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு கைவந்த கலை, ஏனெனில் அவர்களுக்கு வேண்டியது முஸ்லீம்களின் ஓட்டுதானே தவிர வேறொன்றும் இல்லை, ஒபாமாவைப் பற்றிய கவலையும் இல்லை. ஆனால், டில்லியிலேயோ அருந்ததிராய், கிலானி, ஜிலானி, வராவர ராவ் போன்ற பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தேசவிரோதமாக பேசியதற்கு வழக்குப் பதிவு செய்ய போலீஸார் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கேட்கப்பட்ட கேள்விகள் (பல பத்திரிக்கைகளினின்று தொகுத்தது): சர்வே 85 பக்கங்களில் 90க்கும் மேற்பட்ட கொண்ட அந்த கருத்துக் கணிப்பு இரண்டு பகுதிகள் கொண்டதாக இருந்தது. முதலாவது அமெரிக்கா, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதலியவற்றைப் பற்றியது, இரண்டாவது பகுதி முஸ்லீம்களுக்கென்றே கேள்விகள் பித்யேகமாகத் தொகுக்கப்பட்டிருந்தது[5].

*         தாங்கள் முதலில் இந்தியர் அல்லது முஸ்லீம் என்று கருதுவீர்களா[6]?

*         இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி மதிக்கப் படுகிறார்கள்?

*         மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள்?

*         இந்திய ராணுவத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

*         இந்திய ராணுவம் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

*         இந்தியாவில் ஷரீயத் சட்டத்தை அமூலாக்க விரும்பகிறீர்களா?

*         அமெரிக்காவை முஸ்லீகளின் எதிரி நாடாகக் கருதுகிறீர்களா?

*         அமெரிக்காவைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         இந்திய-அமெரிக்க உறவுமுறைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         ஒபாமா இந்தியாவிற்கு வருவதால், இந்தியாவிற்கு என்ன லாபம்?

*         இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்ததை ஆதரிக்கிறிர்களா?

*         அமெரிக்காவின் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்ற நிலைப்பாட்டைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*          ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்க மேற்கொண்ட செயலை ஆதரிக்கிறீர்களா?

*         இரானைப் பற்றிய தங்களது கருத்து என்ன?

*         இஸ்லாமிய சட்டம் இந்திய குற்றவியல் சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாகக் கருதுகிறீர்களா[7]?

*         இந்தியா பொதுவாக முஸ்லீகளின் எதிராக உள்ள நாடாகக் கருதுகிறீர்களா?

*         இந்தியாவில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?

*         ஒஸாமா பின் லேடனை விரும்புகிறிர்களா[8]?

*         தாங்கள் பர்கா / பர்தா அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளீர்களா?

*         ஒபாமா இந்தியாவிற்கு வருவதைப் பற்றி தங்களது கருத்து என்ன[9]?

*         இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         ஷரீயத்தை விடுத்து இந்திய அரசியல் சட்டத்தின்படி நடக்கவேண்டும் என்றால் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டில் வாழ நினைக்கிறிகள்[10]?

இக்கேள்விகள் ஒன்று பிரமாதகாக இருப்பதாகத் தெரியவில்லை. அன்று அருந்ததி ராய் பேசியதில் பத்து சதவீதம் கூட இருப்பதாக தெரியவில்லை! தற்கு போய் கேரள முஸ்லீம்கள் மற்றும் அரசு இப்படி அலட்டிக் கொள்வதுதான் விசித்திரமாக இருக்கிறது.

ஆராய்ச்சி என்றால் சர்வே, கருத்துக் கணிப்பு முதலியவை மிகச்சாதாரணமான விஷயம் தான்: கேள்விகளின் தொகுப்பை விநியோகம் செய்தல், கேள்விகளுக்கு பதிலை நேரிடையாகவோ, தபாலிலேயோ பெறுவது, அவற்றைத் தொகுப்பது, குறிப்பிட்ட தலைப்புகளுக்கு ஏற்றவகையில் அவற்றைப் பிரிப்பது,  தர வரிசைப் படுத்தி அவற்றை வரிசைப்படுத்துவது……………..முதலியன ஆராய்ச்சியின் ஒரு கட்டம். இதன் பிறகு பல வேலைகள் இருக்கின்றன. இதில் பாரபட்சம் இல்லாமல் இருக்க, கேள்வி கேட்பவர்கள் மற்றும் பதில் சொல்பவர்கள் என இரண்டு பக்கத்திலும் பல விருப்பு-வெறுப்புகள், தாக்கங்கள், முதலியவற்றை அகற்ற, கேள்விகளின் அமைப்பு குறிப்பிட்டவாறு அமைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட பதில்களை சொல்லுமாறு கிரமப்படுத்தப் பட்டிருக்கும். இதனால் அத்த்தகைய குறைகள் நீக்கப்படும். பெங்களூரில் ஒரு கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் முஸ்லீம்களைப் பற்றி இவ்வாறு கருத்துக் கணிப்பு நடத்தி இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்கம் மற்றும் இஸ்லாமியர்களின் சமூக சீர்திருத்தம் என்ற இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளது[11]. அதில் இவற்றைவிட இன்னும் பற்பல கேள்விகள் கேட்டு ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். அப்பொழுதெல்லாம் வராத பிரச்சினை, இப்பொழுது ஏன் வருகிறது என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

© 07-11-2010


[1] தினமலர், இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே : 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121228

[3] TNS authorities were called in who said they were doing the survey for the Washington-based Princeton Survey Research Associates.

[4] “Since the survey had many questions with a communal overtone, we have registered a case of promoting enmity between various groups (Sec 153 A of IPC) and we are investigating the matter. We have also sought the help of the Central agencies on this,” said Jacob Punnoose, Director General of Police, Kerala.

[5] ………….the firm planned to survey as many as 6000 citizens, mostly members of the Muslim community, in 55 different regions in the country. The 85-page two-part questionnaire had 93 questions in all. The second part of the questionnaire was meant exclusively for respondents from the Muslim community.

[8] “Do you consider yourself an Indian first or Muslim?”, “What’s your view on imposing Islamic law in India?”, “Do you like Osama bin Laden?” and “Do you wear burqa?” http://www.hindustantimes.com/Row-over-survey-in-Muslim-area-Central-probe-sought/Article1-622550.aspx

[11] K. S. Durrany, The Impact of Islamic Fundamentalism, CISRS and ISPCK, Bangalore,  1993.