Archive for the ‘மௌலானா மதனி’ category

பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!

மே 20, 2011

பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!

தவறான பட்டியல் கொடுத்த சிதம்பரம்: சிதம்பரத்தின் கையாலாகத்தன்மை, திறமையின்மை, நிலையில்லாத்தன்மை முதலிய குணாதிசயங்கள் மறுபடியும் வெளிப்பட்டுள்ளன. வெட்கமில்லாமல், இதில் நடந்ததற்கு பொறுபேற்கிறேன் என்று வேறு பேசியுள்ளார். அமெரிக்கா ஒசாமா பின் லேடனை கொன்ற பிறகு, ஏதோ வீரம் வந்துவிடது போல, தேவை ஏற்பட்டால், 26/11 போன்ற தாக்குதல் நடப்பதேயானால், இந்தியா தகுந்த பதிலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்திய மக்கள் எதிர்பார்ப்பதாக, சிதம்பரம் சொல்லியிருக்கிறார்! அதற்குள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி தாங்கள் இந்தியாவிலுள்ள சில முக்கியமான இடங்களை தாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அதற்கான ஒத்திகையும் நடந்டேறிவிட்டது என்றும் அறிவித்தார். வழக்கம் போல, மற்ற தீவிரவாதிகள் கூட்டம் போட்டு இந்தியாவிற்கு எதிராகக் கத்தித் தீர்துள்ளன,

தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் கான் பெயர் சேர்க்கப்பட்டது தவறுதான்: ப.சிதம்பரம்[1]புதுதில்லி, மே 18, 2011: பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் வாசூல் கமார் கானின் பெயரைச் சேர்த்த்து தவறு என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.   மும்பை போலீஸôர் செய்த தவறும் ஐ.பி. உளவுப் அமைப்பின் கவனக் குறைவுமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.

இந்தப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய வாசூல் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.  ஆனால், கானை மும்பை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்ததாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரது பேட்டியும் பத்திரிகையில் வெளியானது.

இந்தியாவுக்குள் வசிக்கும் ஒருவரது பெயர் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானதால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பாகிஸ்தாவுடனான இந்தியாவின் அரசு ரீதியான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியது:

இந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். மும்பை போலீஸார் செய்த தவறும் ஐ.பி. அதிகாரிகளின் கவனக்குறைவுமே கான் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றதற்குக் காரணம்.  கான் கைது செய்யப்பட்டது குறித்து இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.பி. அலுவலகத்துக்கு மும்பை போலீஸôர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஆனால் மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட தேடப்படுவோர் பட்டியலில் இந்த விவரம் சரிபார்க்கப்படவில்லை.

கடந்த ஆண்டு மே 21-ம் தேதி கான் கைது செய்யப்பட்ட விவரம் முறையாகத் தெரிவிக்கப்படாததால் சிபிஐ அமைப்பால் தேடப்படுவோர் பட்டியலிலும் கான் பெயர் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.  இப்போது சிபிஐ முதல் இன்டர்போல் வரை அனைத்து அமைப்புகளுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் ப.சிதம்பரம்.

சிபிஐ பட்டியலில் கான் பெயர் நீக்கம்: இதனிடையே சிபிஐ அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சிபிஐ இணையதளத்திலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.  கடந்த மே மாதமே மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவும், மும்பை போலீஸôரும் கானை கைது செய்த நிலையில், அந்தத் தகவல் சிபிஐக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், கானுக்கு எதிராக சிபிஐ கைது உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதாகத் தெரிய வந்திருப்பதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.  இந்தத் தவறு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவிலேயே உள்ளனர்: இதற்குள் வீராப்புடன், மிகவும் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் 40 பேர்களைக் கொண்ட ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள பிரோஸ் அப்துல் ரஸீத் கான் (Feroz Rashid Rashid Khan ) வயது 51, என்பவன் ஏற்கெனவே ஆர்தர் ரோடு ஜெயிலில் உள்ளான் என்று தெரிய வந்துள்ளது[2]. இவன் 1993 மும்பை வெடிகுண்டு வழக்கிற்காக கைது செய்யப் பட்டான். சி.பி.ஐ இந்த தவறை ஒப்புக்கொண்டது. உள்துறை அப்பட்டியிலில் அவனது பெயரை நீக்க மறந்து விட்டதாக உள்துறை எழுதியுள்ளதாகவும் ஓம்கார் கேடியா என்ற சி.பி.ஐ தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

இதற்கு முன் வஜுல் கமர் கான் என்ற பெயர் பட்டியிலில் இருந்தபோது, அவன் ஏற்கெனெவே பிணையில் விடுதலையாகி தானேவில் சுதந்திரமாக திரிந்து வருவதாகத் தெரிந்தது. இவன் 2003ல் வில்லி-பார்லே மற்றும் காட்கோபர் மற்றும் 2002ல் மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தகுண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்டான். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதற்காக, பிணையில் வெளியே விடப்பட்டான்.

இது ஒரு தவறு, அவ்வளவேதான்! இத்தவறுகளை உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டாலும், கொடுத்த பட்டியலை திரும்பப் பெறமுடியாது என்று கூறியுள்ளது[3]. உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ, எம்.எச்.ஏ முதலிய நிறுவனங்கள் ஒன்றையொன்று குற்றாஞ்சாட்டிக் கொள்வது, நாட்டின் மதிப்பையே குறைப்பதாக/குளைப்பதாக உள்ளது. பலநிலைகளில் இந்த பட்டியல் சரிபார்க்கப் பட்டு, பற்பல அதிகாரிகளால் சரி பார்க்கப் பட்டு, பின்னரே உள்துறை அமைச்சரிடம் வருகிறது, அவர் கையெழுத்திடுகிறார்[4]. ஆனால், இப்படி உடம்பின் ஒரு அங்கம் மற்றதின் மீது குற்றஞ்சொல்வது போல, இந்த அமைப்புகள் நடந்து கொள்வது படு கேவலமாக இருக்கிறது. சிதம்பரம் இம்முறை “தவறை” ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றாலும், மற்ற துறைகளை சாடியுள்ளார்[5]. இத்தவறுக்கானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்[6].

பாகிஸ்தான் மற்றும் இதர ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன: பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை சாடியுள்ளது. பொய் பட்டியல் கொடுத்து ஒசாமா கொலை விஷ்யத்தை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது என்று தலைப்பிட்டு, திட்டித் தீர்த்துள்ளன[7] (Indian Fake List & Desire of Cashing OBL Killing Thursday May 19, 2011 (1440 PST). குற்ற்ப்பத்திரிக்கைக் கூட போடாமல், ஓடி மறைந்துள்ள தீவிரவாதிகள் என்று கூறும் இந்தியாவை நக்கல் அடித்துள்ளன[8]. பி.பி.சி போன்ற அயல்நாட்டு ஊடகங்களும் கேலி செய்துள்ளன[9]. “காணாமல் போன தீவிரவாதியை இந்தியா மும்பையில் கண்டு பிடித்துள்ளது”, என்று பி.பி.சி கிண்டலடித்துள்ளது. இன்கிலாந்து டெலிகிராப் நாளிதழ் கூறுவது, “தப்பியோடி பாகிஸ்தானில் ஒளிந்துள்ளதாக கூறப்பட்ட குற்றாவாளி தாயுடன் வாழ்ந்து வருதாக தெரிந்தவுடன் இந்திய அதிகாரிகளின் முகங்கள் சிவந்துவிட்டன” (Indian officials red-faced after ‘most-wanted’ fugitive found living at home with mother)[10].
வேதபிரகாஷ்

20-05-2011


மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!

செப்ரெம்பர் 18, 2010

மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!

மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி[1]: கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸின் ஜாமீன் மனுவை, மதுரை சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்மதானி. பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இக்கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸ். இவர், மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பெறப்பட்டதாக போலி “டிடி’ தயாரித்து, மதுரை வடக்குமாசிவீதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யினர் 1994ல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல்அஜீஸை, பெங்களூருவில் கடந்த செப்.,3ம் தேதி சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஜெகநாதன் உத்தரவுப்படி, அப்துல்அஜீஸ் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். சி.பி.ஐ., வக்கீல் ரோசாரியா சுந்தர்ராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணை நடத்திய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

ரூ. 95 லட்சம் வங்கி மோசடியில் மதானி உறவினர்: மதுரையில் உள்ள மகாராஷ்ட்டிரா பாங்கியில் கடந்த 1994-ம் ஆண்டு ரூ. 94 லட்சத்து 85 ஆயிரம் செக் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக மதானி யின் உறவினரான அப்துல்அஜீஸ், மதுரை விளக்குத்தூண் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மேலும் சச்சின்சிராஜ்கிலானி, பாலசுப்பிரமணி முத்து கிருஷ்ணன், ரானாமகாதேவ் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அப்துல் அஜிஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடப் பட்டனர். இந்த மோசடி சம்பந்தமான வழக்கு மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஜாமீனில் சென்றவர்கள் அப்துல்அஜீசை தவிர மற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக அப்துல்அஜீஸ் இருப்பதால் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப் பட்டது. இதையொட்டி அவரை சி.பி.ஐ. போலீசார் தேடி வந்தனர்.

மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு[2]: இந்த நிலையில் கர்நாடக போலீசார் மதானியை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்தபோது அவருக்கு ஜாமீன் வாங்க அப்துல்அஜீஸ் பெங்களூர் சென்றிருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளி என தெரிந்த கர்நாடக போலீசார் அவரை கைது செய்து தமிழ்நாடு சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை கொண்டு வரப்பட்ட அப்துல்அஜீசை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஜெகநாதன் வீட்டிற்கு நேற்று இரவு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அவரை 16-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மதானியின் உறவினர் அப்துல்அஜீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை 2 மணி அளவில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.


[1] தினமலர், மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி, செப்டம்பர் 18, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87124

[2] மாலைச்சுடர், மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

ரூ. 95 லட்சம் மோசடியில் கைதான மதானி உறவினர், மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு , http://www.maalaimalar.com/2010/09/05173505/95-lakhs-cheating-madhani-caus.html

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓகஸ்ட் 23, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும்! ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.

கேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா? கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம்! அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே? மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே?

தாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா? தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10].  நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா?


[1] http://www.ndtv.com/article/india/zareena-19-and-mother-killed-by-militants-in-kashmir-46663

[2] http://timesofindia.indiatimes.com/india/Protestors-in-Kashmir-face-stones-their-own-bitter-pill/articleshow/6420878.cms

[3] http://www.dnaindia.com/india/report_kashmir-stone-pelters-get-a-taste-of-their-own-medicine_1427515

[4] தினமணி, மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்; First Published : 23 Aug 2010 04:26:06 PM IST; Last Updated : 23 Aug 2010 04:28:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………….SectionName=Latest

[5] Demonstration in Tamil Nadu condemning Kerala and Karnataka govts on Madani’s arrest; Published: Monday, Aug 23, 2010, 15:30 IST; Agency: PTI
http://www.dnaindia.com/india/report_demonstration-in-tamil-nadu-condemning-kerala-and-karnataka-govts-on-madani-s-arrest_1427524

[6] http://www.indiatalkies.com/2010/08/activists-muslim-voluntary-forum-protest-madanis-arrest-karnataka-police.html

[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: .மு.மு.., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68650

[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

[9] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[10] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

[11] Dajjiworld, Madani in Madikeri, IB team Coming,  Sunday, August 22, 2010 11:16:15 AM (IST) ,

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=83862&n_tit=Madani+in+Madikeri%2C+IB+team+Coming+