Archive for the ‘முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது’ category

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மே 30, 2023

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்ற போது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மருத்துவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா?: அப்போதுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரோ அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றும் மருத்துவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மருத்துவகுழுமூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். ஆனால், இன்னொரு பக்கம் தலைமறைவாக இருந்தவரை, தேடி பிடித்து கைது செய்தனர் என்றுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை.  இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என்றும் உள்ளது.

முஸ்லிம் தலைவர், முஸ்லிம் போன்றே அறிக்கை விட்டுள்ளது: “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], ”நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜவாஹிருல்லா கூறியது:ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்[3]. சீமானும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்[4].

சீமானின் இஸ்லாம் அதரவு அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான சீமான் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

லிஸ்ட் போட்டு ஆதரவு கொடுக்கும் சீமான்[5]:

  • என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது,
  • நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது,
  • ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது,
  • பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது,
  • இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது,
  • மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது

என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும். இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்[6].

29-05-2023 ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: 29-05-2023 அன்று, ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்’ அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது[7]. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்புவிடம் அளித்துள்ள மனுவில் இதனை வலியுறுத்தியுள்ளார்[8]. மருத்துவ மனை, நொயாளி, நள்ளிரவில் சிகிச்சைக்கு வந்தது, நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தது, முதலியவற்றைப் பற்றி எந்த விவரங்களையும் எந்த ஊடகமும் கொடுக்கவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றுள்ளது. குறிப்பிட்ட மருத்துவர் சண்டை போடுவதிலும், வீடியோ எடுப்பதிலும், அதனை உடனடியாக யாருக்கோ அனுப்புவதிலும் தான் மும்முறமாக இருந்தது தெரிகிறது. பிறகு, ஆவண தோரணையுடன், கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர் போன்றே கணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபர் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 26 May 2023 02:44 PM, Last Updated : 26 May 2023 02:44 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/996833-threatening-doctor-wearing-hijab-should-be-punished-according-to-law-jawahirullah.html

[3] தமிழ்.இந்துஸ்தான் டைம்ஸ், Hijab: ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல், Pandeeswari Gurusamy, 27 May 2023, 16:55 IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/seeman-insists-that-the-bjp-executive-who-threatened-the-doctor-not-to-wear-hijab-should-be-severely-punished-131685186096080.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஹிஜாப் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் போக்கில் திமுக அரசு.. 6 பாயிண்டுகளை முன்வைக்கும் சீமான்!, By Mathivanan Maran Updated: Saturday, May 27, 2023, 11:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/hijab-row-seeman-blames-dmk-govt-support-to-rss-513636.html?story=1

[7] தினமலர், பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மனு, பதிவு செய்த நாள்: மே 30,2023 03:59

[8] https://m.dinamalar.com/detail.php?id=3334072

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை – வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

நவம்பர் 2, 2022

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரைவழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

திருக்குறளை வைத்து பணம் டிபாசிட் பெற்று மோசடி செய்த ஷேக் முகைதீன்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையை, மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் முடிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது[1]. மதுரை, சின்ன சொக்கிகுளம் ஹக்கீம் அஜ்மல்கான் ரோட்டில், பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டது[2]. இங்கு, ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து, 900 ரூபாய் முதிர்வுத் தொகை வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது[3]. இத்தவறான வாக்குறுதியை நம்பி, 45 ஆயிரத்து, 501 பேர், 65 கோடியே, 46 லட்சத்து, 87 ஆயிரத்து, 508 ரூபாய் முதலீடு செய்தனர்[4]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல் ஏமாற்றியதாக நிறுவனம் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் உட்பட சிலர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், 2010ல் மோசடி வழக்கு பதிந்தனர்[5].  இது பற்றிய விவரங்களை, எனது முந்தைய, சென்ற வருட பதிவில் காணலாம்[6].

பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முதல் ஷேக் முகைதீன் வரை (2010-2021)[7]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[8]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ் துறையில் விரல் ரேகை பிரிவு நிபுணராக 1970ல் சேர்ந்தார். 2005ல் விருப்ப ஓய்வு பெற்றேன். சென்னையில் பசிபிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கியது. அதைப்பார்த்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரையில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினேன். இதன் நிர்வாக இயக்குனர்களாக நானும் (ஷேக்முகைதீன்), எனது மனைவி மனைவி ஜானு, மகன்கள் சர்தார் உசேன், யாகூப் உசேன் மற்றும் சிவக்குமார், முபாரக்அலி ஆகியோர் இருந்தோம்”.

2011ல் விசாரணைக்கு வழக்கு வந்தது: 06-05-2010 அன்று ஷேக் முகைதீன் கைது செய்யப் பட்டார். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்தாண்டு டிசம்பர் 2009 வரை லாபத் தொகையை கொடுத்தார். இதன் பின், காலம் தாழ்த்தினார். சிலர், போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, முதலீடு பணத்தை திருப்பிக் கொடுத்தார். இன்னும் வாங்காதவர்கள் நேற்று நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த தேவேந்திரன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, ஷேக் மைதீனை இன்ஸ்பெக்டர் நேதாஜி கைது செய்தார். முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

2022ல் மறுபடியும் விசாரணைக்கு வழக்கு வந்தது: டான்பிட் எனப்படும் மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது[9]. பாதிக்கப்பட்டோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம். நிர்மல்குமார் முன் முறையிட்டதாவது: “டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டான்பிட் நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் முன்னேற்றம் இல்லை. விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எங்கள் தரப்பில் தாமதம் ஏற்படவில்லை. 2,685 சாட்சிகளை விசாரித்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கத் தயார்’ என, தெரிவித்தது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றடான்பிட்நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்கள் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.

மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும்: ஆக, இதை எதிர்த்து மேல்முறையீடு செய்து, உச்சநீதி மன்றத்திற்குச் சென்று காலந்தாழ்த்தி இருப்பதும் தெரிகிறது. அதனால் தான்  முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது, என்றாலும், ஷேக் முகைதுனுக்கு ஏதோ ஆதரவு உள்ளதால், இது நடந்துள்ளது. சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்றாலும், இழுத்தடிப்பு வேலை நடந்துள்ளது.  நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளார். இப்பொழுது நவம்பர் 2022, அதாவது, மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும். என்னாகுமோ பார்க்கலாம்.

வேதபிரகாஷ்

02-11-2022


[1] தமிழ்.இந்து, திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 01 Nov 2022 06:39 AM; Last Updated : 01 Nov 2022 06:39 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/890545-order-to-close-the-case-in-6-months.html

[3] தினமலர், திருக்குறள் புத்தகம் விற்பனை மோசடி விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு,  தமிழகம் செய்தி, Added : நவ 02, 2022  00:34

[4] https://www.dinamalar.com/news_detail.asp?

[5] ஜி.7.தமிழ், திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, Order to close the case in 6 months, 1 day ago g7tamil

[6]  வேதபிரகாஷ், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை,  ஆகஸ்ட் 8, 2021.

[7]  தினமலர், மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளுக்கு ‘சீல்’, மே 10,2010,00:00  IST

[8] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18450

[9] https://g7tamil.in/tag/%E0%AE%B0%E0%AF%82-65-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

மே 15, 2022

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].

முசலியார் மேடையில் இருக்கும் போது பெண்கள் வரக்கூடாதாம்கோபித்துக் கொண்டு திட்டிய உலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர் ஆன் கட்டளைகளை மீறி முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இச்சம்பவம் இன்னொரு உதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.

உங்களுக்கு மத விதிகள் தெரியாதா எனவும் எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள் அதிகம் நிறைந்த, பெண்கள் அதிகம் வாழும் கேரளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சமூகத்தை பல தலைமுறைகளுக்கு கீழ் நோக்கி இழுப்பவர்களிடம் இருந்து மக்கள் விழிப்படைய வேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.

பெண்கள் தனிமைப் படுத்தப் படவேண்டும் என்பது விதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின் கட்டளைகளையும் மீறி, முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் தகுதியான விருதைப் பெறும்போது மேடையில் அவமானப்படுத்தப்பட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. மதகுருமார்கள் குரானின் கட்டளையை மீறியும், அரசியலமைப்பு சட்டத்தை மீறியும் முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவது, அவர்களின் ஆளுமையை நசுக்குவது ஆகியவற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்த விவகாரத்தில் கேரளா ஆளும் தரப்பினர் மௌனம் குறித்து வருத்தம் அளிக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவருமே இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர். நமது வீட்டுப் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியம் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இது குறித்துப் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களை விட (கேரள அரசு) நான் அதிகம் பேசி உள்ளேன்,” என்றார்[12].

அடிப்படைவாத இஸ்லாமில் பெண்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில் ஆண்கள், பெண்களை பிரித்து உணவு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] டாப்.தமிழ்.நியூஸ், கேரளாவில் பள்ளி மாணவியை மேடைக்கு அழைத்த விழா அமைப்பாளர்களை கண்டித்த முஸ்லிம் மத குரு.., By KRISHNA G Wed, 11 May 20225:48:27 AM

[2] https://www.toptamilnews.com/india/Samastha-Kerala-Jem-iyyathul-Ulama-leader-MT-Abdulla/cid7371111.htm

[3] விகடன், `பெண்களை பரிசு பெற மேடைக்கு அழைக்கக்கூடாது!’ – கேரள இஸ்லாமிய தலைவரின் செயலால் கொதித்த கவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.

[4] https://www.vikatan.com/news/india/kerala-muslim-body-leader-scolds-members-for-inviting-girl-student-on-stage-draws-flak

[5] காமதேனு, முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவதா?’- மதக்குருக்களை எச்சரிக்கும் கேரள ஆளுநர்,என்.சுவாமிநாதன், Updated on : 12 May, 2022, 3:37 pm.

[6] https://kamadenu.hindutamil.in/national/religious-people-who-isolate-muslim-women-kerala-governor-warns

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள் மேடைக்கு வரக்கூடாது..!! இந்த காலத்தில் இப்படி ஒரு இசுலாமிய அமைப்பா.? கொந்தளிக்கும் ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/women-should-not-come-on-stage-is-there-such-an-islamic-organization-in-this-period-governor-condemned–rbtavy

[9] தினமணி, மலப்புரத்தில் சிறுமி அவமதிப்பு விவகாரம்: அரசியல் தலைவா்களின் மெளனம் ஏமாற்றமளிக்கிறது, By DIN  |   Published On : 13th May 2022 03:01 AM  |   Last Updated : 13th May 2022

[10]https://www.dinamani.com/india/2022/may/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3843656.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, அவர்களின் மவுனம் ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது!” கேரள அரசை சாடும் ஆளுநர் ஆரிப் கான்எதற்கு தெரியுமா, By Vigneshkumar Updated: Friday, May 13, 2022, 0:18 [IST].

[12] https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-governor-questions-silence-of-leadership-on-girl-humiliated-on-stage-issue-458104.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, ஓட்டலில் ஆண்பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம், By Nantha Kumar R Updated: Saturday, May 14, 2022, 12:36 [IST]

[14] https://tamil.oneindia.com/news/international/in-afghan-taliban-bans-men-and-women-dining-together-458287.html

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

14-02-2022 அன்று காணாமல் போன சிறுமி சாவு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார்[1]. 16 வயது என்கிறது தமிழ்.இந்து. அதன் பிறகு அவர் மாயமானார்[2]. 14-02-2022 அன்று காணாமல் போனாள் என்று மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் 15-02-2022 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். 16/17 வயது சிறுமி 12 வயது வித்தியாசம் கொண்ட ஒரு வாலிபனுடன் சென்றாளா அல்லது அவன் ஏமாற்றி, வலுக்கட்டாயமாக அல்லது வெறேதாவது காரணத்திற்காகக் கடத்திச் சென்றானா என்று புரிந்து கொள்ள முடியாதா? அதாவது, ஒரு முஸ்லிம், இந்து சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல், உடலுறவு கொண்டுள்ளான், கற்பழித்துள்ளான். ஆகையால், இது “லவ் ஜிஹாத்” வகையில் கூட வரும், என்றாகிறது.

14-02-202 அன்று காணாமல் போன சிறுமியை 03-03-2022 அன்று ஹனிபாவின் தாய் ஒப்படைத்தது, 06-03-2022 அன்று மரணமடைந்தது: இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் 03-03-2022 அன்று ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 06-03-2022 அன்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று நாட்களில் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மருத்துவ மனையிலும், மருத்துவர்கள் சிறுமி விசம் குடித்ததைக் கண்டு பிடித்து, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

05-03-2022 அன்று கைதான நாகூர் ஹனீபா சொன்னதுஎலி மருந்து சாப்பிட வைத்தேன்: இதற்கிடையே நேற்று முன்தினம் 05-03-2022 அன்று நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன[3]. இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு[4]: “நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை பிப்., 14ல் திருப்பரங்குன்றத்தில் நண்பர் பெருமாள் கிருஷ்ணன், 25, வீட்டிற்கு நண்பர்களுடன் அழைத்துச் சென்றேன்[5]. பின்னர் அங்கிருந்து 15-02-2022 அன்று ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன்[6]. இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன். இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[7]. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன். இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[8]. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[9]. அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்,” இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற காதலன் காதலியை ஏன் ஏமாற்ற வேண்டும்?: நாகூர் ஹனிபா சிறுமிக்கு மட்டும் எலிமருந்து கொடுத்து சாப்பிட வைத்து, இவன் துப்பி விட்டான் என்றால், நாடகம் ஆடியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்த அப்பாவி சிறுமியை கொலைசெய்ய தீர்மானித்திருக்கிறான். அப்படியென்றால் அவளை கொலைசெய்ய வேண்டிய அவ்சியம் என்ன? அவளை ஒரே அடியாக ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் என்ன? அதாவது, அவள் ஏதோ ஒரு உண்மையினை சொல்லலாம், அவ்வாறு சொன்னால், இவன் மாட்டிக் கொள்வான் என்ற நிலை இருந்திருக்கிறது. அத்தகைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில், “கூட்டு பலாத்காரம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவனே திருமணம் செய்து கொள்ளாமல் 14-02-2022 முதல் 02-03-2022 வரை கற்பழித்திருக்கிறான். மற்ற விவகாரங்கள் தெரியவில்லை.

8 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி: இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது: “மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்[10]. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.

©வேதபிரகாஷ்

07-03-2022


[1] தினத்தந்தி, மதுரை: 17 வயது சிறுமி கடத்தி விஷம் கொடுத்து கொலைகாதலன் உள்பட 8 பேர் கைது, மார்ச் 07, 04:52 AM.

[2] https://www.dailythanthi.com/amp/News/TopNews/2022/03/07045239/8-arrested-for-kidnapping-and-poisoning-girl.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, எலி மருந்து கொடுத்து 17 வயது மேலூர் சிறுமி கொலை? 8 பேர் கைது.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம், By Vishnupriya R, Updated: Mon, Mar 7, 2022, 14:08 [IST]

[4] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/police-arrested-8-members-those-who-are-involved-in-17-years-old-melur-girl-death-450910.html

[5] தினமலர், கடத்தப்பட்ட சிறுமி மரணம்: சிறுமியின் காதலன் உட்பட 8 பேர் கைது,  Added : மார் 07, 2022  10:48.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2977283

[7] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[8] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

[10] தமிழ்.இந்து, கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தலால் உயிரிழப்பு? – காதலன் உட்பட 8 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 07 Mar 2022 08:17 AM; Last Updated : 07 Mar 2022 08:17 AM.

[11] https://www.hindutamil.in/news/crime/774781-sexual-harassment.html

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]

Police warns about spreading false details - 16-02-2020

உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த அளவுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்கியுள்ளது, எஸ்.சிக்களுக்கு அவர் தொடர்ந்து செய்து வரும் துரோகம் எனலாம். அவர் முஸ்லீமாக மாறி, அவர்களுக்கே உழைக்கலாம், எஸ்.சிக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

News cutting, police dissatisfied 16-02-2020

தமுமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்தது [18-02-2020]: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளும் போராடிவரும் நிலையில் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது[1]. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்திலிருந்து பேரணியாக சென்ற தமுமுக-வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[2].  இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கப் பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை.

Sweden support washermenpet demo- nakkeeran-16-02-2020

14-02-2020 லிருந்து போராட்டம் நடைபெறுகிறது என்றால், எப்படி?: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[3]. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் ஸ்டைலில், தமிழில் கோஷங்கள் இட்டு, ராப் பாடினர்[4]. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். 7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Washermenpet Muslim poster Feb 2020-2

சிறுவர்கள், பெண்களை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்வது: முஸ்லிம்கள் பொதுவாக பெண்களை பர்கா உடுத்த வைத்து, வீட்டிற்குள் அடைத்து தான் வைத்திருக்கிறார்கள். சில பெண்கள் தாம், வெளியே வந்து மால்களுக்கு, கடைகளுக்கு வந்து செல்கிறார்கள். அந்நிலையில். பெண்களை வெளியே அழைத்து ஆர்பாட்டம் செய்ய வைத்தது, அவர்களுக்கு உத்வேகமாக இருந்தது போலும். உணர்ச்சிப்பூர்வமாக, ஆவேசமாகக் கத்துகிறார்கள். தண்ணீர், உணவு எல்லாம் சரியாகக் கிடைக்கப் பெறுவதால், ஜாலியாக வந்து உட்கார்ந்து கொண்டு, பொழுது போக்குகிறார்கள். போராட்டம் செய்ன்றனர். ஆனால், இதெல்லாம் பாலஸ்தீனம்-காஷ்மீரம் திட்டம், வழிமுறை, அரசை எதிர்ப்பது, போலீஸாரை மதிக்காமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பது தெரிகிறது. தொடர்ந்து, ஊடக-செய்திகளை கவனித்து வருவர்கள், இதையெல்லாம், சுலபமாகக் கண்டு கொள்கிறார்கள். அப்பொழுடு தான், அவர்களுக்கு, முஸ்லிம்கள் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள் என்று தெரிந்து விட்டது. முதல் அமைச்சர் சட்டசபையில் பேசியதற்கு, “வண்ணாரப்பேட்டையிலிருந்து ஒரு சாமானியன்” என்று, விகடன் வக்காலத்து வாங்கி இருப்பது, அப்பட்டமான, முஸ்லிம்-ஆதரவு என்பது தெரிந்தது[5]. ஏனெனில், இந்த அளவுக்கு, யாரும் அத்தகைய அரசு-எதிர்ப்பு, பொய்மை கலந்த விசயங்களின் தொகுப்பை யாரும் வெளியிட முடியாது. முஸ்லிம்களின் மௌத் பீஸ் என்பார்களே, அப்படி செயல்பட்டுள்ளது[6].

Muslims against AIADMK govt.6

முஸ்லிம் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டு ஆர்பாட்டத்தை நடத்துவது.

Muslims against AIADMK govt.4

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

Muslims against AIADMK govt.1

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை செருப்பால் அடிப்பது.

Muslims against AIADMK govt.3

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

 

Muslims - Modi, Amit Shah effigy burnt-2

உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை எரிப்பது

Washermenpet Muslim poster Feb 2020-3

எல்லாமே நகல் போன்று தான் காணப்படுகின்றது: இப்போராட்டம், ஏதோ ஏற்கெனவே தெரிந்த பாடலை வேறு விதமாக பாடும் போது, இதை எங்கேயோ கெட்டது போல உள்ளதே, ஏற்கெனவே கேட்டு விட்டோமே, என்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆமாம், ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் பல்கலை, கன்னூர் IHC, ஹைதராபாத், பெங்களூரு என்று பார்த்தவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, இதில் உள்ள உற்றுமையை காண முடியும். அது தான் முஸ்லிம்களின் ஏற்பாடு, ஆதாவு, ஆசியல் முதலியன. இங்கு, தமிழகத்தில் முஸ்லிம்கள் தான் செய்கின்றனர் என்று வெளிப்படையாக உள்ளதால், அப்பிரச்சினையே இல்லை. பிறகு, தமிழக முஸ்லிம்களுக்கு, இதில் என்ன அத்தகைய அக்கரை என்ற கேள்வி எழுகின்றது. விகடன் மற்றும் அதன் நிருபர்கள், ஏதோ ஒடு மொத்தமாக, இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல, செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது அந்த அளவிற்கு, முஸ்லிம்களின் ஊடக பலம் உள்ளது என்று தெரிகிறது. பிபி.தமிழ், ஐ.இ.தமிழ், தி.இந்து என்று எல்லாமே இவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் வழக்கம் போல எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் மற்றும் ஊடகக்காரர்கள் எண்ணுகின்றது போல அல்ல திட்டம் போடுவது போல, எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களும், எதிர்கட்சியினரும், தூண்டிவிட்டி, மோடி, அமித் ஷா, பழனிச்சாமி, பன்னீர்செல்வம் முதலியோர்களின் படங்களை எரித்து, மத்திய மாநில அரசுகளை வன்மையாக விமரித்து, ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். எல்லாமே சட்டமீறல்கள் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், முஸ்லிம்களுக்கும் அலுத்து போன நிலை ஏற்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-02-2020

Vikatan undue support to Muslis Feb 2020

[1] நக்கீரன், முதல்வர் வீட்டை முற்றுகையிட தமுமுக நடத்திய பேரணி.! (படங்கள்),  Published on 19/12/2019 (15:23) | Edited on 19/12/2019 (15:35)., குமரேஷ்

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tmmk-protest

[3] ஐ.இ.தமிழ், ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள்சென்னை சிஏ.. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ், WebDeskFebruary 20, 2020 03:43:52 pm

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-caa-protest-7th-day-highlights-vannarapettai-170786/

[5] விகடன், சட்டமன்றத்தில் கொந்தளித்த எடப்பாடிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியனின் கடிதம்!, ர.முகமது இல்யாஸ் Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[6] https://www.vikatan.com/news/politics/a-letter-to-edappadi-palanisamy-from-a-common-man-on-caa-protests

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow

பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது – சவுதியில் ஆணை அமூலுக்கு வந்துள்ளது!

ஜனவரி 4, 2012

பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது – சவுதியில் ஆணை அமூலுக்கு வந்துள்ளது!

பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது: அரேபியாவில் உள்ள பெண்களுக்கான உள்ளாடைக் கடைகளில் இனி பெண்கள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு

“I and many other women like me were always embarrassed to walk into lingerie shops because men were selling the goods,” said Saudi shopper Samar Mohammed. She said that in the past she often bought the wrong underwear “because I was sensitive about explaining what I wanted to a man”.

 உத்தரவிட்டுள்ளது[1]. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பெண்கள் இனிமேல் வெட்கப்படாமல், கூச்சப்படாமல், தங்களுக்கு வேண்டிய உள்ளாடைகளை, தாங்கள் விரும்பிடயபடி, தேந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்[2]. “நான் பலமுறை தவறுதலான அளவுள்ள கீழுள்ளாடைகளை / ஜட்டிகளை வாங்கி வந்துள்ளேன். ஏனெனில், எனக்கு எந்த அளவில் வேண்டும் என்று ஆண்-விற்பனையாளரிடம் விவரிக்கக் கூச்சமாக இருந்தது”, என்று ஒரு பெண்மணி கூறினார். அப்பெண்மணி சொலவது மிகவும் நியாயமாகப் படுகிறது.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன: அங்குள்ள பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது; ஆண்கள்: துணையுடன் தான் கடைக்குப் போக வேண்டும்; கார்களை ஓட்டக் கூடாது; சூப்பர் மார்க்கெட்டுகள் / மால்களில் கேஷியராக பணி செய்யக் கூடாது[3]. இப்படி பற்பல தடைகள் உள்ளன. (இத்தடைகள் / கட்டுப்பாடுகள் மற்ற முஸ்லீம் அல்லாத பெண்களுக்கும் உண்டு). இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனி பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஆண்கள் வேலை செய்ய முடியாது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

2006-2012: மத மற்றும் சட்டப் பிரச்சினைகள்: ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இதுபோன்ற உத்தரவு பிறக்கப்பட்டும் அது அமலுக்கு வரவில்லை. ஏனெனில் அப்பொழுது பிரச்சினை, பெண்களை வேலைக்கு அனுப்பலாமா, கூடாதா

Saudi’s Arabia’s most senior cleric, Sheik Abdul-Aziz Al Sheikh, spoke out against the Labour Ministry’s decision in a recent sermon, saying it contradicts Islamic law. ‘The employment of women in stores that sell female apparel and a woman standing face to face with a man selling to him without modesty or shame can lead to wrongdoing, of which the burden of this will fall on the owners of the stores,’ he said. He also urged store owners to fear God and not compromise on taboo matters[4].

என்றிருந்தது. குறிப்பாக, மதத்தலைவர்கள், பெண்கள் இம்மாதிரியான கடைகளில் வேலை செய்யக் கூடாது என்று எச்சரித்ததுடன், பத்வாவும் கொடுத்திருந்தனர்[5]. அதுவும், இத்தகைய அலங்கார மற்றும் பெண்களின் உள்ளாடை கடைகளில், பெரிய மால்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பொருட்களை வாங்க வரும் போது, பெண்கள் அவ்வாறு கடைகளில் பொருட்களை, ஆண்களுக்கு முன்பாக விற்பது  இஸ்லாமிற்கு எதிரானதாகக் கருதப் பட்டது. ஆனால் இந்த முறை அந்நாட்டு மன்னர் அப்துல்லா பிறப்பித்துள்ள உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது[6]. இதையடுத்து உள்ளாடைக் கடைகளில் பணிபுரிய சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்பொழுது பெண்கள் 30% தான் வெளியில் வந்து வேலை செய்கின்றனர். இனிமேல் அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், சவுதி பெண்கள் சிறிதளவு வெற்றிப் பெற்றுள்ளார்கள், அவர்கள் உரிமைகள் கேட்டு போராடும் நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்கள்[7] என்றும் கருத்து உருவாகிறது[8].

விவேக் போன்றவர்கள் இனிமேல் சவுதியில் அனுமதிக்கப் படுவார்களா? விவேக் பெண்கள் உள்ளாடைகள் வைத்து ஜோக் அடிப்பது சகஜனமான “சப்ஜெக்டாக” உள்ளது. அதில் அவர் பி.எச்டியே செய்துள்ளார் எனலாம். அந்நிலையில், அத்தகைய நடிகர்கள் சவுதியில் அனுமதிக்கப் படுவார்களா? அங்கு அத்தகைய ஜோக்குகள் அனுமதிக்கப் படுமா? உள்ளாடை விளம்பரங்கள் செய்யப் படுமா? இந்தியாவில் மட்டும் எப்படி அத்தகைய அசிங்கமான, ஆபாசமான ஜோக்குகளை அனுமதிக்கிறார்கள்? வீட்டில் தொலைகாட்சியில், குடும்பத்துடன் பார்க்கும் போது, சங்கோஜம் இல்லாமல் ரசிக்கவா முடிகிறது?

வேதபிரகாஷ்

04-01-2012


பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!

ஜூலை 30, 2010

பர்கா போராட்டத்தில் வென்ற பெண்மணி

பர்கா இல்லாமல் பாடம் சொல்லித்தர வரக்கூடாது என்று தடை செய்யப்பட்ட ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர் கடைசியில் தனது போராட்டத்தில் வென்று விட்டார்[1]. அக்கல்லூரி யூனியன் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பர்கா அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆணையிடப்பட்டது. இதனால் எட்டு பெண்கள் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், ஷிரின் வெளிப்படையாக, தான் அவ்வாறு பர்கா அணிய முடியாது, ஏனெனில் அத்தகைய உடைக்கட்டுப்பாடு ஊனிவர்ஸிடி டிராண்ட் கமிஷன் சரத்துகளில் இல்லை என வாதிடினார்.

Burqa-teacher-wins-her-stand

Burqa-teacher-wins-her-stand

சையத் சம்ஸுல் ஆலம், அலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சொல்லிப்பார்த்தார். ஆனால், அடிப்படைவாதம் கொண்ட யூனியன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நிலைமையை மேற்கு வங்காள சொறுபான்மை நல அமைச்சர் அப்துர் சட்டார் என்பவருக்குத் தெரியப்படுத்தினர். உடனே, அவர் ஷிரீனை வகுப்புகளை எடுக்குமாறு பணிக்கப்பட்டார்[2]. இருப்பினும், என்றைக்கு இருந்து என்று இன்னும் சொல்லப்படவில்லை! யூனியனில் காரியதரிசி ஹசனூர் ஜமான் (Hasanur Zaman) என்பவர், தேவையில்லாமல், ஊடகங்களுக்கு இப்பிரட்சினையை எடுத்துச் சென்று ஏதோ ஒரு பிரச்சினை போன்று உருவாக்கிவிட்டார்[3] என்று மறுபடியும் அந்த பெண்ணையே குற்றஞ்சாட்டினார்!

ஏசியா-நெட்டில்-இருந்த-படம்-2010

ஏசியா-நெட்டில்-இருந்த-படம்-2010


[1] http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Teacher-Wins-Fight-Against-Burqa-Code/articleshow/6290021.cms

[2] Read more at: http://www.ndtv.com/article/cities/teacher-wins-fight-against-burqa-diktat-43435?cp

[3] http://www.indianexpress.com/news/nazis-in-a-different-garb./658211/

பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!

ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர். கடந்த மூன்று மாதங்களாக கல்லூரியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாடம் எடுக்க முடியாமல் இருக்கிறார். காரணம். அலியா பல்கலைக்கழகம் சொல்லாவிட்டாலும், அக்கல்லூரி யூனியன் சொல்வதால், பர்கா இல்லாமல் அவர் வகுப்பிற்குச் செல்லமுடியாது, பாடம் சொல்லித்தரமுடியாது.

அவர் சொல்வதாவது, “யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன், உடைபற்றிய கட்டுப்படு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இது பர்காவைப் பற்றியப் பிரச்சினை இல்லை. என்னுடைய சுய-விருப்பத்தைப் பொறுத்த விஷயமாகிறது”.

பாகிஸ்தானில் ஃபேஸன் ஷோ 2010 ஆரம்பம்!

மே 17, 2010

பாகிஸ்தானில் ஃபாஸன் ஷோ 2010 ஆரம்பம்!

Fashion-Gala-enthrals-audience-Pakistan-2010

Fashion-Gala-enthrals-audience-Pakistan-2010

இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் பர்தாவில் / பர்காவில் / ஹிஜாபில் இருக்கவேண்டும், ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யக் கூடாது,…………………………இப்படி ஏகப்பட்ட சரத்துகள், கட்டுப்பாடுகள்!

Fashion style from Pakistan

Fashion style from Pakistan

ஆனால், பாகிஸ்தானிய பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?

Fashion design product Pakistan

Fashion design product Pakistan

ஃபேஷன் ஷோவிலே கலந்து கொள்வார்களா?

Pakistan_women

Pakistan_women

அட இவர்கள் பாகிஸ்தானியர்களா?

sara-deshi-jewelry

sara-deshi-jewelry

ஓஹோ நகைகளும் அணிவார்களா? இப்படி முதுகையும் காண்பிர்ப்பார்களா?

Paki-diamond-models

Paki-diamond-models

இது ஹராமா, ஹலாலா?

Paki-model-posing-for-diamonds

Paki-model-posing-for-diamonds

நாகரிகத்துடந்தான் இருக்கிறார்கள் போலும், பாகிஸ்தானிய நாரீமணிகளும்!

முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா – 2

மே 14, 2010

முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யலாமா – 2

ஒருநிலையில், முஸ்லீம்கள் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள், குறிப்பாக அடிப்படைவாத கோஷ்டிகள், தாலிபான் வகையறாக்கள் என்ன சொல்வது, எப்படி இதனை அணுகுவது என்று திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Fatwa-no.fatwa-pardha-burqa-games

Fatwa-no.fatwa-pardha-burqa-games

Urdu press tears into latest fatwa

Mohammed Wajihuddin, TNN, May 14, 2010, 03.19am IST

http://timesofindia.indiatimes.com/India/Urdu-press-tears-into-latest-fatwa/articleshow/5928678.cms

MUMBAI: The Urdu press has slammed the Darul Uloom of Deoband’s fatwa which decreed earning of Muslim women was haraam (prohibited) and asked them not to work with men in public/private organisations. Though the fatwa was just an opinion and not binding on Muslims, it could derail the community’s efforts to empower their women, observed Urdu dailies.

In its stinging editorial titled, “Kya Deoband sun raha hai? (Is Deoband listening?)”, The Sahafat (May 13) attacked the Islamic seminary’s lack of understanding about contemporary world. “Which world do these people who issue such fatwas inhabit? If they think they spoke for today’s world, they have missed the train,” commented the editorial.

Citing examples of exemplary achievements of women in Muslim countries like Saudi Arabia, Sudan, Malaysia and Kuwait, the newspaper said the ulema should have been more careful while issuing fatwas. “Many Muslim women work because they are the sole breadwinners in their families or they supplement the families’ income earned by the male members,” said the paper. “Darul ifta (the fatwa wing of the Deoband madrassa) should recall the great role women played in Muslim society during the Prophet’s lifetime.”

The Inquilab, Mumbai’s leading Urdu daily, wondered how the Muslim women who were part of the workforce globally could be advised not to work. The paper argued that Islam never stopped women from working, provided they were dressed properly. Referring to the Prophet’s first wife, Khadeeja, who was a successful businesswoman, the paper stressed the need to propel Muslim women into mainstream, not to pull them back.

Urdu columnists and opinion makers are outraged and shocked beyond belief at the Deoband fatwa.

ஆனால், உருது பத்திரிக்கைகள், “கிழி-கிழியென்று| கிழித்துவிட்டனவாம். “என்ன தியோவந்த, நாங்கள் சொல்வது காதில் விழுகிறதா? கேட்கிறாயா?” என்ற தலைப்புகளில் தலையங்கங்கள் எழுதியுள்ளனர்.

முஸ்லீம் பெண்களை இப்படி அடிமைப் படுத்திதான் வைத்திருந்தீர்கள். ஆனால் இன்று அவர்கள் பல நிலைகளில் உயர்ந்து விட்டார்காள்.

சவுதி அரேபியா, சூடான், மலேசியா, குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளிலேயே, பெண்கள் உயர்ந்து, பல வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள், முன்னேறியுள்ளார்கள். அவர்கள் இப்பொழுது வேலை செய்து, சம்பாதித்துத் தங்கள் குடும்பங்களையே பாதுகாக்கக்கூடிய பொறுப்பான நிலையில் உள்ளார்கள். அதுமட்டுமல்லாது,  கணவனுக்கு உதவியாக அவ்வாறு உழைத்து சம்பாதித்து பணத்தைக் கொடுப்பதால், குடும்பநிலையும் உயர்கிறது. காலம் மாறிவிட்டது, இப்படியே பேசிக் கொண்டிருந்தால், முஸ்லீம்கள் பின்தங்கிவிடவேண்டியதுதான்.

தாருல் இஃதா, என் ற ஃபத்வா கொடுக்கும் தியோபந்தின் பிரிவு, எப்படி முஹம்மது நபி காலத்தில் பல பெண்கள் சமூகத்தில் பெரிய சாதனைகள் புரிந்தார்கள் என்று நினைவு கொள்ள வேண்டும், என்றும் எடுத்துக் காட்டப் பட்டது [“Darul ifta (the fatwa wing of the Deoband madrassa) should recall the great role women played in Muslim society during the Prophet’s lifetime.”].