Archive for the ‘முஸ்லீம்களுக்கு விடிவு காலம்’ category

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? (1)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?  (1)

19-04-2022 கவர்னருக்கு கருப்புக் கொடி, கொம்புகள் எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?

மார்ச் 2022 – தமிழக முஸ்லிம் கர்நாடக நீதிபதிகளை மிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.  மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.

  1. மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
  2. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
  3. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
  4. காரைக்கால் முகமது இர்பான், 22;
  5. சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3].  அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிக் காட்டி போலீஸாரை மிரட்ட தைரியம் எப்படி வந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம்  என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.

முகமது ஆசிக் கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] மாலைமலர், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்தமிழகத்தை சேர்ந்தவர் கைது, பதிவு: மார்ச் 23, 2022 06:07 IST; மாற்றம்: மார்ச் 24, 2022 01:27 IST.

[2] https://www.maalaimalar.com/news/national/2022/03/23060702/3604832/A-man-from-Tamil-Nadu-who-had-allegedly-issued-death.vpf

[3] தினமலர், .எஸ்., ஆதரவாளர்களுக்கு நிதியுதவி: பின்னணியை விசாரிக்கிறது என்..., Updated : மே 11, 2022  09:01 |  Added : மே 11, 2022  09:00

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3027224

[5] டாப்.தமிழ்.நியூஸ், மயிலாடுதுறை அருகே .எஸ்..எஸ் வழக்கில் தொடர்புடைய இளைஞர் கைதுஎன்.. அதிகாரிகள் நடவடிக்கை!,  By NEWSDESK Fri, 28 May 2021 2:22:36 PM.

[6]https://www.toptamilnews.com/districts/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/youth-arrested-in-connection-with-isis-case-near/cid4926959.htm

தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[7] தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[8] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/2021/may/28/the-youth-who-came-out-on-bail-in-connection-with-the-organization-was-arrested-near-mayiladuthurai-3631508.html

[9] இ.டிவி.பாரத், தலைமறைவு குற்றவாளி கைதுதேசிய புலனாய்வு முகமை அதிரடி, Published on: May 28, 2021, 3:31 PM IST

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/the-culprit-involved-in-the-isis-case-has-been-arrested/tamil-nadu20210528153155208

இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஏன்?

ஜூலை 7, 2010

இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஏன்?

இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஏன்? பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு, மதத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் பாரதம் என்ற தொன்மையான நாட்டிலிருந்து, அத்தகைய நாட்டினை கோடிக்கணக்கான இந்துக்களின் ரத்தம், கொலை, கொள்ளை முதலியவற்றுடன் உருவாக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், இஸ்லாமியர்களே, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, சமீபத்தில் அதிகமாகவே இஸ்லாமிய நாடுகளில் வளர்ந்து வருகிறது. இந்நிலை முன்னமே இருந்திருக்கிறது, ஆனால், இப்பொழுதைய ஊடகங்களின் மூலமாக, அத்தகைய நிகழ்வுகளை உலகம் முழுவதும் உள்ள மற்ற கோடானு கோடி மக்களும் பார்க்கிறார்கள், தெரிந்து கொள்கிறார்கள். அந்த கொல்லும் முறை என்பது, குண்டு வெடிப்பு, தற்கொலை குண்டு வெடிப்பு, முதலியவற்றுடன் தான் இயங்கி வருகின்றது. குறிப்பாக வெள்ளிக் கிழமையன்று ஜிஹாதி கொலைக்காரர்கள் அத்தகைய தீவிரவாத கொண்டுக்கொலை காரியங்களை செய்து அப்பாவி மக்களை, முஸ்லீம்கள் என்றாலும் கூட கொன்று வருகின்றனர். ஆக முஸ்லீம்களுக்கே தனித்தனியாக இரண்டு சொர்க்கங்கள், நரகங்கள் ஏற்படுத்தபட்டிருக்கிறது போலும். இதைப் பற்றியெல்லாம் முஸ்லீம்கள் தீர ஆலோசித்து ,முடிவிற்கு வரவேண்டும்.

இஸ்லாமிய நாடு தாங்கமுடியாத இஸ்லாமிய பயங்கரவாதத்தை செக்யூலரிஸ இந்தியா தாங்குமா? இந்நிலையில், தீவிரவாதத்தில், வன்முறையில், ரத்தக்களரியில் பிறந்து, வளர்ந்த நாட்டிலே, தீவிரவாத இயக்கங்கள் என்று அவர்களே தடை செய்வது விசித்திரமாக இருக்கிறது. மேலும், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிற்கே அவை அத்தகைய அடங்காத, குரூரக் கொலை ஜிஹாதி கூட்டங்களாக இருக்கின்றன என்றால் செக்யூலரிஸ நாடான இந்தியாவின் கதி என்ன? குறிப்பாக, அடிக்கொரு தடவை காஃபிர்களை ஒழித்துக் கட்டுவோம் என்றெல்லாம் முழங்கி வருகிறார்களே, அந்த காஃபிர்களின் கதி என்ன – அதாவது இந்துக்கள் எனப்படுகின்ற இந்தியர்காளின் கதி என்ன? இதைப் பற்றி இந்திய அரசியல்வாதிகள் முஸ்லீம்களை தாஜா செய்வோம் என்ற கொள்கையில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற உண்மையும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஜிஹாத், காஃபிர்களைக் கொல்லுவோம் என்ற ரீதியிலேயே இருந்தால் மக்கள் எப்பொழுதுதான் வாழ்வார்கள்? ஜிஹாத் இஸ்லாத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வேலை செய்யும், செயல்படும் என்றால், முஸ்லீம்களுக்கே விடிவு காலம் இல்லையே? ஒரு இஸ்லாமியக் கூட்டம், அடுத்த இஸ்லாமியக் கூட்டத்தை, ஏதோ ஒரு காரணத்திற்காக “காஃபிர்” என்று பிரகடனப்படுத்தி, ஜிஹாத் ஆரம்பித்து விட்டால், அடித்துக் கொண்டு சாவது என்ற நிலைதானே இஸ்லாத்தில் உள்ளது? பிறகு, இதற்கு முடிவு தான் என்ன? இஸ்லாமிய நாடுகளிலேயே, இஸ்லாம் அமைதியை நிலைநட்டமுடியவில்லை என்ற உண்மையை முஸ்லீம்கள் அறிந்த பின்னர், அது ஏன் என்று பொறுமையாக ஆராய வேண்டும். நோயை தீர்க்கத்தான் மருந்தை உட்கொள்கிறோம். அந்நிலையில் அம்மருந்து நிறைய நாட்கள் உட்கொண்ட பிறகும், எந்த வேலையும் செய்யவில்லை எனும்போது, நோயின் மீது குற்றமா அல்லது மருந்தின் மீது குற்றமா என்று ஆராய்ந்து தெளிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளிலேயே, இஸ்லாம் அமைதியை ஏன் நிலைநட்டமுடியவில்லை? இதை பொறுப்புள்ள எல்லா முஸ்லீம்களும் சிந்திக்க வேண்டும். உலகத்தில் முஸ்லீம்களும் இருக்கிறார்கள், அவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு உள்ளது, குறிப்பாக ஜிஹாதி தீவிரவாதத்தால் உலகமே பாதிக்கப் படுகிறது எனும் போது, மற்றவர்களும் இதைப் பற்றி கவலையோடு ஆராயத்தான் செய்வார்கள். 1300 வருட சரித்திர காலமும், இஸ்லாத்தின் உண்மையைக் காட்டுகிறது. இஸ்லாமியர்கள் அரேபியாவில் தனித்து மற்றவர்களின் உதவியில்லாமல், மற்ற இடங்களில் கிடைக்கும் பொருட்கள் இல்லாமல் வாழ முடியாது. இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. ஆக முஸ்லீம்கள் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவர்களுடைய மனங்களினின்று முஸ்லீம்கள், முஸ்லீம்-அல்லாதவர்-காஃபிர் என்ற வெறுப்பை, பகைமையை, தீவிரவாதத்தை, குரூரத்தை, பயங்கரவாதத்தை வளர்க்கும் எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும். ஏனெனில் அது இஸ்லாமிய நாடுகளிலும் மற்ற இஸ்லாம் இல்லாத நாடுகளிலும் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறது.

மசூதிகளில் ஏன் குண்டுகள் வெடிக்க வேண்டும்? மசூதி முஸ்லீம்களுக்குரிய வழிபாட்டு ஸ்தலம். அங்கு நம்பிக்கையுள்ள முஸ்லீம்கள் வந்து தொழுகிறார்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று அதிகமாக மக்கள் வந்து வழிபடுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என்றெல்லாம் வந்து தொழுகிறார்கள். அவர்களுக்கும், தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும், ஜிஹாதிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால், அத்தகைய அப்பாவி மக்கள் ஏன் இஸ்லாம் பெயரில், முஸ்லீம்களாக இருந்தாலும் கொல்லப்படவேண்டும்? இதில் என்ன நியாயம் இருக்கிறது? பொறுப்புள்ள, நல்ல, அமைதியான முஸ்லீம்கள் இதைப் பற்றி யோசிக்கலாமே? இதற்கு ஒரு வழிமுறையை காணலாமே?

பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்காக, கிழ்கண்ட இயக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன:

The 17 outfits, which were banned by the Home Department, Punjab, include:

  1. Lashkar-e-Jhangvi,
  2. Sipah Sahaba Pakistan,
  3. Sipah-e-Muhammad Pakistan,
  4. Lashkar-e-Taiba,
  5. Jaish-e-Muhammad,
  6. Tehrik-e-Jafriya Pakistan,
  7. Tehrik Nifaz Shariat-e-Muhammadi,
  8. Millat-e-Islamiya Pakistan,
  9. Khudamul Islam,

10.  Islami Tehrik Pakistan,

11.  Hizb-ut-Tehrir, J

12.  amiat-ul-Ansar,

13.  Jamiat-ul-Furqan,

14.  Khair-un-Naas International Trust,

15.  Islamic Students Movement (ISM),

16.  Balochistan Liberation Army (BLA) and

17.  Jamaat-ud-Daawa.

1. லஸ்கர்-எ-ஜாங்வி

2. சிபா சஹபா பாகிஸ்தான்

3. சிபா – இ -மொஹம்மது பாகிஸ்தான்

4. கஸ்கர்-இ-ய்ஹொய்பா

5. ஜெய்ஸ்-இ-முஹம்மது

6. டெரிக்-இ-ஜஃப்ரியா பாகிஸ்தான்

7. தெரிக் நிபாஃப் சரியட்-இ-முஹம்மதி

8. மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான்

9. குதாமுல் இஸ்லாம்

10. இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி

11. ஹிஜ்ப்-உத்-தெர்ஹிர், ஜே

12. அமைத்-உல்-அன்ஸார்

13.ஜமைத்-உக்-ஃபர்கன்

14. கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட்

15. இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட்

16. பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி

17. ஜமாத்-உத்-தாவா