Archive for the ‘முஸ்லீம்களின் அடிப்படைவாதம்’ category
பிப்ரவரி 21, 2020
வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை. பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.
© வேதபிரகாஷ்
21-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”
Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece
[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.
[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.
[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST
https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html
[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்க… கொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.
[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow
பிரிவுகள்: அகிம்சை, அசாம், அடி உதை, அடிப்படைவாதம், அன்சாரி, அமைதி, அல்-உம்மா, அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், அஸ்ஸாம், அஹம்மதியா, ஆப்கன், ஆப்கானிஸ்தான், ஆர்.எஸ்.எஸ், இந்திய கொடி, இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியப் பிரச்சினை, இந்து தமிழன், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமிய சாதி, இஸ்லாமியத் தீவிரவாதி, உள்ளே நுழைவது, ஊடுருவல், ஊர்வலம், எச்சரிக்கை, எதிர்ப்பு, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, கருத்து, கருத்துச் சுதந்திரம், கருத்துரிமை, கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காவலர், குடியுரிமை சட்டம், சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சமரசப்பேச்சு, ஜனநாயகம், ஜமா அத், ஜமாஅத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தமிமும் அன்சாரி, தமிமுல் அன்சாரி, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் இந்து, தமிழ் ஜிஹாதி, தமிழ் நாத்திகன், நரேந்திர மோடி, பாகிஸ்தான், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, பாராளுமன்றம், பிரசாரம், பிரச்சாரம், பிரஜை, பிரிவினை, பிரிவினைவாதம், போலீஸ், மண்ணடி, மயன்மார், முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லிம் தெரு, முஸ்லிம் பிரச்சினை, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முஸ்லிம்கள் முற்றுகை, முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், ரோஹிங்க, ரோஹிங்கர், ரோஹிங்கா, ரோஹிங்கிய, ரோஹிங்கியா, ரோஹிங்ய, ரோஹிங்யா
Tags: ஆப்கானிஸ்தான், ஆர்பாட்டம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஊடுருவல், குடியுரிமை, குடியுரிமை சட்டம், தமிழ் முஸ்லிம், பங்களாதேசம், பங்களாதேஷ், பர்மா, போராட்டம், போராளி, மியன்மார், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், வண்ணாரப்பேட்டை
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 15, 2019
தமிழ் நாட்டில் ஜமைத் உல் முஜாஹித்தீன் [Jamiat ul Mujahideen] – பங்களாதேச தீவிரவாதம் மற்றும் ஐசிஸ் கைக் கோக்கிறதா?

தமிழ்நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ந்து கைதாவது: இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அது போன்று சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அப்போது திடுக்கிடும் தவல்கள் வெளியானது. இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து நாடு முழுவதும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். 26% தீவிரவாதிகள் தமிழகத்தில் கைது செய்யப் பட்டது கவனிக்கத் தக்கது.

பாகிஸ்தானின் பண பட்டுவாடா, தீவிர ஊக்குவாதம் முதலியன: கூட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் பேசினார்கள். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கூறியதாவது[1]: “பயங்கரவாதத்திற்கு எதிராக பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தானை பல்வேறு தடவை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது. தற்போது அந்த சர்வதேச அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கூடி பயங்கரவாதிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நாடுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பாகிஸ்தான் அரசு எப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் இந்த செயல் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை சர்வதேச நாடுகளிடம் நிரூபிக்க இன்னும் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு வங்கிகள் மூலம் உதவி செய்வதை தேசிய புலனாய்வு அமைப்பு மிக திறமையாக கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேவையான அளவுக்கு நிதி கொடுக்கிறது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன,” இவ்வாறு அஜித்தோவல் கூறினார்[2].

அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர்: நாடு முழுவதும் ரகசியமாக செயல்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் திட்டத்துடன் 33 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இலங்கை குண்டு வெடிப்பின்போது தற்கொலை படையாக மாறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியான ஜக்ரான் ஹசீம் என்பவனின் வீடியோ பேச்சுக்களே தமிழக இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு முகமையின் கூட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் யோகேஷ் சந்தர் மோடி மற்றும் ஐ.ஜி. அசோக் மிட்டல் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 பேர், கேரளாவை சேர்ந்த 17 பேர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 127 பேரை கைது செய்துள்ளோம்[3].

ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வளர்த்தது: இதில், தமிழகம் மற்றும் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தாங்கள் ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்[4]. இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்டது இதே ஜாஹ்ரன் ஹஸிம்தான். கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களில் பெரும்பாலானோர் மதப் பிரச்சாரகர் ஜாகிர்நாயக்கின் பேச்சை வீடியோவில் கேட்டு, தீவிரவாத எண்ணத்தை வளர்த்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம் தொடர்பாகவும் எங்களுக்கு துப்பு கிடைத்துள்ளது[5]. சீக்கியர்கள் நடுவே இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பு தொடர்பாக ஐந்து பேரை உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளோம். இவ்வாறு அலோக் மிட்டல் தெரிவித்தார்[6].

தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான “ஜமாத் உல் முகாஜுதீன்”: இதன்படி தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான “ஜமாத் உல் முகாஜுதீன்” என்கிற அமைப்பும் புதிதாக சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் புர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி வந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமாத் உல் முகாஜுதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் பெங்களூரில் மூன்று மாதத்துக்கு முன்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மேற்கு வங்க குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ரஹ்மான், கவுசர் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் குண்டு வெடிப்புக்கு பயிற்சி பெற்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாதிகள் இருவரையும் கிருஷ்ணகிரி மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மலைப் பகுதியில் வெடிகுண்டு துகள்கள் சிக்கியது. ஜெலட்டின் குச்சிகளும் பிடிபட்டன. இது தொடர்பாக 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனை மற்றும் ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை: இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனையுடன் சேர்த்து ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை நடத்தி இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது[7]. தமிழகத்தை பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களே தொடர்ந்து பிடிபட்டு வந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த “ஜமாத் உல் முகாஜுதீன்” பயங்கரவாத அமைப்பும் புதிதாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது உள்ளூர் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[8]. கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் இந்த இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் தனியாக வந்து ராக்கெட் லாஞ்சர் சோதனையை நடத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரிய அளவில் ‘நெட் வொர்க்’ அமைத்து செயல்பட்ட பின்னரே இரண்டு பயங்கரவாதிகளும் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கருதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ராக்கெட் லாஞ்சரை செலுத்திய இரண்டு பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[9]. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் பிடிபட்டுள்ளனர். இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்[10].

கிருஷ்ணகிரியில் யார் கண்ணிலும் படாமல் வேலை செய்தனர் என்பதே வியப்புதான்: கிருஷ்ணகிரி மலைப் பகுதிகளில் “அதை கண்டு பிடித்தேன், அதை கண்டு பிடித்தேன்,” என்று ஆராய்ச்சியாளர்கள் திரிந்து கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்பொழுது, செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. பிறகு, அவர்களையும் மீறி, ஏமாற்றி, தீவிரவாதிகள் பயிற்சி பெற்றனர், ராக்கெட் லாஞ்சர் விட்டனர் என்றால் திகைப்பாக இருக்கிறது. முன்னர், எல்.டி.டி.இக்கு, அம்பத்தூர் தொழிற்சாலைக்கு, ராக்கெட் லாஞ்சர் பாகங்கள் எல்லாம் சென்றது ஞாபகத்தில் இருக்கலாம். அதே போல, இப்பொழுது, ஹோசூரிலிருந்து அல்லது சுற்றியுள்ள தொழிற்சாலைலளில் அவை உற்பத்தி செய்யப் பட்டு, அவர்களுக்கு சப்ளை செய்யப் பட்டிருக்கலாம். தமிழ் நாடு மறுபடியும், இன்னொரு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு இலக்காகாமல் இருந்தால் சரி.
© வேதபிரகாஷ்
15-10-2019

[1] மாலைமலர், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு – தமிழ்நாட்டில் 33 பேர் கைது, பதிவு: அக்டோபர் 14, 2019 14:46 IST
[2] https://www.maalaimalar.com/news/district/2019/10/14144623/1265911/33-arrested-in-TN-contact-with-IS-Militants.vpf
[3] புதியதலைமுறை, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு… தமிழகத்தில் 33 பேர் கைது, Web Team Published : 14 Oct, 2019 11:58 am
[4] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73127-connection-with-is-127-arrested.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்,
By Veerakumar, Updated: Monday, October 14, 2019, 18:35 [IST]
[6] https://tamil.oneindia.com/news/delhi/33-isis-supporters-arrested-from-tamilnadu-says-nia-365609.html
[7] தினத்தந்தி, தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்– ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி, பதிவு: அக்டோபர் 15, 2019 14:13 PM.
[8] https://www.dailythanthi.com/News/India/2019/10/15141354/New-terrorist-terror-plot-in-Tamil-Nadu-Rocket-Launcher.vpf
[9] மாலைமலர், தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்– ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர், பதிவு: அக்டோபர் 15, 2019 12:19 IST.
[10] https://www.maalaimalar.com/news/district/2019/10/15121902/1266070/New-Militants-plot-in-Tamil-Nadu.vpf
பிரிவுகள்: ஃபத்வா, அசோக் மிட்டல், அஜித்தோவல், காலிஸ்தான், கிருஷ்ணகிரி மலை, ஜமைத் உல் முஜாஹித்தீன், பங்களாதேச தீவிரவாதம், முஸ்லிம் பிரச்சினை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், ஹவாலா, ஹுஜி பங்களா, ஹூஜி
Tags: அசோக் மிட்டல், அஜித்தோவல், காலிஸ்தான், கிருஷ்ணகிரி மலை, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், பங்களாதேச தீவிரவாதம்
Comments: Be the first to comment
நவம்பர் 5, 2017
பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு, மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)!

முகமதிய மற்றும் கிருத்துவர்களின் “கர் வாபசி” செயல்கள்: “சத்திய சரனி” என்ற நிறுவனம்[1], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[2]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[3]. “சத்திய சரணி” இணைதளம், கிருத்துவர்கள், முஸ்லிம்களை ஏமாற்றி, அவர்களுக்கேற்ற முறையில், “கர்-வாபசி” போன்ற மதமாற்றம் செய்து வருகின்றனர், என்று குற்றஞ்சாட்டுகிறது[4]. அவர்கள் எப்படி ஏழை முஸ்லிம்களை மதமாற்றினார்களோ, அதேபோல, மறுபடியும், அவர்களை இஸ்லாத்தில் திரும்ப வரசெய்ய ஆவண செய்வதாகக் கூறிக்கொள்கிறது[5]. இத்தகைய, “கர்-வாபசி”களைப் பற்றி, அறிவுஜீவிகள் விவாதிப்பதில்லை. இத்தகைய மதமாற்றங்களும், “கடவுளின் சொந்த தேசத்தில்” பல கலவரங்களை உண்டாக்கலாம், அமைதியைக் குலைக்கலாம். ஐசிஸ்.ம் இதில் சேர்ந்து விடும் போது, பிரச்சினை தீவிரமாகி விட்டது.

மதமாற்றத்தில் போட்டியா, அடிப்படைவாதம் வேலை செய்து, தீவிரவாதத்தை அரங்கேற்ற முயற்சியா?: நூற்றுக்கணக்கில் கேரள முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸில் சேர்ந்தது, கொல்லப்பட்டது என்ற விவகாரங்கள் வெட்டவெளிச்சமாக, தினசரி செய்தியாகி விட்டது. போதாகுறைக்கு, அதில் மதமாற்றமும் சேர்ந்து விட்டதாலும், கிருத்துவ பெண்களும் பாதிக்கப் படுவதால், விவகாரம் முக்கியமாகி விட்டது. அதற்குள் இப்பொழுது ஐசிஸில் உள்ள ஆறுபேர் புகைப்படங்களை கேரள போலீஸார் வெளியிட்டது[6]:
- அப்துல் கையூம் [Abdul Ghayoom],
- அப்துல் மனஃப் [Abdul Manaf],
- ஷபீர் [Shabeer],
- சஃபான் [Safwan],
- சுஹைல் [Suhail] மற்றும்
- ரிஸ்வான், சுஹைலின் மனைவி [his wife Rizwana]
ஷாஜஹான் வெல்லுவ கன்டி [Shahjahan Velluva Kandy] என்பவன், தனது ஐசிஸ் தொடர்புகளை, பேஸ்புக் மூலமே தெரிவித்திருக்கிறான்[7]. அல்-குவைதா கவிதைகளை போட்டு, ஐசிஸ் போராளிகள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமும் கொடுத்துள்ளானாம்[8]. மதமாற்றம் என்பது கேரளாவில் பெரிய பிரச்சினையாக உள்ளது. கிருத்துவர்-முஸ்லிம்கள் இந்துக்களை மதம் மாற்றுவது என்ற நிலையுள்ளது தெரிந்த விசயமே, ஆனால், கிருத்துவர்-முஸ்லிம்கள் ஒருவரையொருவர் மதமாற்றி, தீவிரவாத காரியங்களில் ஈடுபட வைத்த நிலையில் தான் பிரச்சினை, பூதாகாரமாகி, வெளியில் தெரிய வந்தது. இதனை போட்டி என்றோ, கர்-வாபசி என்றோ சொல்லும் எல்லைகளைத் தாண்டியுள்ளது.

ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[9]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[10]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[11]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –
- ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
- ரிஷல் (30) வலாபட்டனம்,
- ஷமீர் (45)
- அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
- ஷாஜீர் (25) எச்சூர்
ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[12]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்? இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[13].
- முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது.
- ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது.
- மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது.
- வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது.
- வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது.

6. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது.
7. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது.
8. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது.
9. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவஎர்களுடனே இருந்து விடுகிறது.
10. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது.
இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[14].
© வேதபிரகாஷ்
04-11-2017

[1] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com, http://www.sathyasarani.org/
[2] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.
India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST
[3] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html
[4] The website of the institution asserted that “Christian missionaries are targeting the poor Muslims from different parts of the state. They are brainwashed and driven to Christianity, exploiting their poverty and lack of religious awareness.” According to the website, Sathya Sarani “could identify such people (Muslims who have been converted to Christianity) and succeed in bringing them back to the faith by way of convincing them the concept of monotheism of Islam.”
https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms
[5] Times of India, Sathya Sarani attempted ‘Gharvapasi’ on Christian converts?, M P Prashanth| TNN | Nov 3, 2017, 11:04 IST.
https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms
[6] Hours after the India Today TV report , Kerala police released the names and photographs of half a dozen youngsters from the state who are currently with ISIS in Syria.The six, including a woman, have been identified as Abdul Ghayoom, Abdul Manaf, Shabeer, Safwan, Suhail and his wife Rizwana, all hailing from Kannur district. All the men were active PFI workers in Kannur.
India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST
[7] Shahjahan Velluva Kandy, a native of Kerala’s Kannur district, has also used Facebook to call Islamic State fighters ‘role models’ alongside posts on al- Qaeda ‘poetry’..
Daily Mail, Popular Front of India member exposed as ‘ISIS sympathiser’ on Facebook after failing to reach Syria three times and posting al-Qaeda poetry, By SHASHANK SHEKHAR and ARVIND OJHA PUBLISHED: 22:51 GMT, 1 November 2017 | UPDATED: 00:32 GMT, 2 November 2017.
[8] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-5040351/Popular-India-member-exposed-ISIS-sympathiser.html
[9] தினத்தந்தி, ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி
[10] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST
[11] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html
[12] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf
[13] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:
Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.
[14] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat
பிரிவுகள்: அடிப்படைவாதம், அரேபிய ஷேக்கு, அரேபியா, அழிப்பு, அழிவு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரளா, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜைனபா, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தீவிரவாத திட்டம், தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதம், தீவிரவாதி, துருக்கர், துருக்கி, துரோகம், தேசவிரோதம், தேசிய புலனாய்வு துறை, பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, பி.எப்.ஐ, புனிதப் போர், மதமாறிய பெண்கள், மதமாற்றம், மலபார், மலப்புரம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், லவ் ஜிஹாத், லவ்ஜிஹாத், வளைகுடா, வாட்ஸ்அப், வாஹாபி, வாஹாபி இயக்கம், ஷஹீத்
Tags: கண்ணூர், சத்திய சரணி, சத்திய சரனி, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாத், ஜைனபா, தாவா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, லவ் ஜிஹாத்
Comments: Be the first to comment
ஏப்ரல் 14, 2017
சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டுகள் தயாரித்தது, நான்கு மாநிலங்களில் வெடித்தது – இது ஒரு பரந்த ஜிஹாதி தீவிரவாதம் தான் (4)

நீதிமன்ற வளாகங்களில் 2016ல் வெடிகுண்டுகள் வெடித்தது: இந்திய நீதிமன்றங்களை நாங்கள் மதிக்க மாட்டோம், போலீஸார் எங்களை ஒன்றும் செய்யமுடியாது, ஆதாரங்களை அழித்தல்-மறைத்தல், உடனே அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள், ஆள்-கொணர்வு மனு போடுதல், ஒரே குற்றத்தில் பலமுறாஇ சம்பந்தப்பட்டுள்ளது போல காண்பித்துக் கொள்வது போன்றவையும், அவர்களைக் காட்டிக் கொடுத்தது. ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடித்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அபுபக்கர், அப்துல்ரகுமான் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு பிரிவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்[1]. கடந்தாண்டு –
- ஏப்ரல்.,7 2016ல், ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகம் மற்றும்
- ஜூன் 15ல் கேரளா கொல்லம் நீதிமன்றம்,
- ஆகஸ்ட்.,1ல் கர்நாடகா மைசூரு நீதிமன்றம்,
- செப்டம்பர்.,12ல் ஆந்திரா நெல்லுார்,
- நவம்பர்.,1ல் கேரளா மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.பி.,) விசாரணை நடத்தி வருகிறது[2]. இதில், தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்பிற்கு தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த அமைப்புடன் தொடர்பு உடைய, மதுரை இஸ்மாயில்புரம் அப்பாஸ் அலி உள்ளிட்ட 4 பேரை என்.ஐ.பி., கைது செய்தது. ஏற்கனவே, இவர்களின் வீடுகளில் என்.ஐ.பி., சோதனையிட்ட நிலையில், கடந்த மார்ச் 27ம் தேதி 2017 கேரளா போலீசார் மதுரையில் உள்ள அபுபக்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தினர்[3]. இந்நிலையில், நேற்று சித்துார் நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரை செல்லுார் அபுபக்கர், மீனாட்சி பஜாரில் கடை வைத்திருக்கும் அப்துல்ரகுமான் ஆகியோரிடம் என்.ஐ.பி., அதிகாரிகள் விசாரித்தனர்[4]. ஏற்கனவே கடந்த ஜனவரியில் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தனர்[5]. அப்பொழுது சரிவர பதில் சொல்லவில்லை, ஒத்துழைக்கவில்லை. தற்போது அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வெடிப்பொருட்கள் அனுப்பியது, கொரியர் கம்பனி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அபூபக்கருக்கு உள்ள தொடர்பும் கண்டுபிடிக்கப்பட்டது[6]. தீவிர விசாரணை மற்றும் ஆதாரங்கள் சரிபார்த்தவுடன் தான், இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்[7].

படித்த முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக தயாராவது: தீவிரவாதிகள் கைதானதும், பொதுவாக பெற்றோர், உற்றோர், மாற்றோர், “ஐயோ அந்த பிள்ளை, ரொம்ப நல்ல பிள்ளை, தானுண்டு, தன் வேலையுண்டு, என்றிருப்பான்”; “நல்ல முஸ்லிம், ஐந்து வேளை தொழுகை செய்வான், அவ்வளவுதான்”; “ஏதோ வெளியூரில் வேலை செய்கிறான் என்று அடிக்கடி சென்று வருகிறான், அவ்வளவு தான், மற்ற விவரங்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது”; “எதுக்கு, இதையெல்லாம் கேட்குறீங்க, பிறகு தீவிரவாதி என்று சொல்லவா?” – இப்படி பலதரப்பட்ட பேச்சுகளை விசாரிப்பவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். படித்த, நவநாகரிகத்துடன் காணப்படும், இந்த முஸ்லிம் இளைஞர்கள் ஏன், எப்படி தீவிரவாதிகளாக மாற முடியும் என்று யோசிக்க வேண்டும். ஆரம்பித்திலிருந்தே, நாங்கள் தனித்தவர், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர், தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே தாழ்ந்தவர்கள், காபிர்கள், இந்துக்கள், முன்னால் முகமதியர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள் என்ற எண்ணத்தி ஊட்டி, சிறுவய்திலிருந்து வளர்க்கப் படும் இவர்கள், தேவையில்லாமல், இந்துக்களை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள், பிறகு, ஐசிஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள், மாதம் நன்றாக சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறது. இதனால், தீவிரவாதமே, வேலையாக, தொழிலாக மாறிவிடுகிறது. “வேலை செய்கிறேன், சம்பளம் கொடுக்கிறார்கள்” என்ற நிலையில் தீவிரவாதத்தில் அமுங்கி விடுகிறார்கள். அவர்களை அதற்கும் மேலாக மூளைசலவை செய்ய வேண்டிய அவசியமே இல்லாதவர்களாகி விடுகின்றனர்.

2008 மும்பை மற்றும் தொடர்புடைய வழக்கில் 12-04-2017 அன்று தீர்ப்பு: கடந்த 2008-ம் ஆண்டு மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டில் 12-04-2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது[8]. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும், அந்த ஆத்மாக்கள் சாந்தியடையாது. மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் கடந்த 2008-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து தீவிரவாத ஒழிப்பு படையினர் விசாரணை நடத்தினர்[9]. விசாரணையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாத ஒழிப்பு படையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்[10]. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்ந்த –
- சையது முகமது நவுசத்(வயது 28),
- அகமது பாஷா(35),
- அகமது(46)
- மொஹம்மது அலி, முக்கச்சேரியைச் சேர்ந்தவன்.
- ஜாவித் அலி (மேலே குறிப்பிட்டவனின் மகன்)
- மொஹம்மது ரபீக் போலந்தாரு பன்ட்நாலை சேர்ந்தவன்.
- சபீர் பட்கல் அல்லது ஷபிஇர் மௌலி,
ஆகியோர் உள்பட 7 பேரை பயங்கரவாத ஒழிப்பு படையினர் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்தனர்[11].

மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை, நால்வர் போதிய அத்தாட்சி இல்லாததால் விடுவிப்பு: அவர்கள் அனைவரும் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைதான 7 பேர் மீதும் தீவிரவாத ஒழிப்பு படையினர் மங்களூரு 3-வது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து, நீதிபதி புஷ்பாஞ்சலி தேவி கடந்த 10-ந் தேதி இவ்வழக்கில் சையது முகமது நவுசத், அகமது பாஷா, அகமது ஆகிய 3 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர்கள் 3 பேருக்குமான தண்டனை விவரங்கள் 12-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கூறி அவர் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 3 பேரைத் தவிர மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்[12]. இந்த நிலையில் நேற்று தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சையது முகமது நவுசத், அகமது பாஷா, அகமது ஆகிய மூன்று பேருக்குமான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன[13]. அதற்காக அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் நீதிபதி புஷ்பாஞ்சலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி புஷ்பாஞ்சலி உத்தரவிட்டார்[14]. ஆனால், இவர்கள் மேல்முறையீடு செய்வார்கள், காலந்தாழ்த்துவார்கள். ஆனால், தீவிரவாதம் குறையுமா அல்லது இந்த ஜிஹாதிகள் தான் மாறுவார்களா?
© வேதபிரகாஷ்
14-04-2017

[1] தினமலர்,சித்தூரில் குண்டு வெடித்த வழக்கு : மதுரையில் 2 பேரிடம் விசாரணை, பதிவு செய்த நாள். ஏப்ரல்.10, 2017.23.58.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1749096
[3] http://english.mathrubhumi.com/news/kerala/malappuram-collectorate-blast-2-more-arrested-1.1860732
[4] Indian Express, Malappuram collectorate blast: Two men from al-Qaeda inspired group arrested in Madurai, By Express News Service | Published: 10th April 2017 09:21 PM, Last Updated: 10th April 2017 09:22 PM
[5] http://www.newindianexpress.com/states/kerala/2017/apr/10/malappuram-collectorate-blast-two-men-from-al-qaeda-inspired-group-arrested-in-madurai-1592145.html
[6] Times of India, Two accused in Malappuram blast case arrested from TN, TNN | Updated: Apr 11, 2017, 07.11 AM IST.
[7] http://timesofindia.indiatimes.com/city/kozhikode/two-accused-in-malappuram-blast-case-arrested-from-tn/articleshow/58116486.cms
[8] மாலைமலர், இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை: மங்களூரு கோர்ட்டில் தீர்ப்பு, பதிவு: ஏப்ரல் 13, 2017 01:32
[9] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/13013212/1079674/Mangalore-3-held-in-2008-on-charges-of-terror-and.vpf
[10] Indian Express, 2008 terror case: Three convicted, four acquitted, By Express News Service, Published: 11th April 2017 04:27 AM, Last Updated: 11th April 2017 04:27 AM
[11] http://www.newindianexpress.com/states/karnataka/2017/apr/11/2008-terror-case-three-convicted-four-acquitted-1592294.html
[12] Four others — Mohammed Ali of Mukkacherry, his son Javed Ali, Mohammed Rafique from Bolontharu in Bantwal and Shabbir Bhatkal alias Shabbir Maulvi — were let off due to lack of evidence.
[13] India Today, RI for three and four let out: IM, Published: 11th April 2017
[14] http://indiatoday.intoday.in/story/mangalore-3-held-in-2008-on-charges-of-terror-and-indian-mujahideen-links-get-life-term/1/927025.html
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, ஃபத்வா, ஃபிதாயீன், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மைசூரு, மைசூர், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, Uncategorized
Tags: குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, சித்தூர், நரபலி, நெல்லூர், பிரசர் குக்கர், பிரஷர் குக்கர், மதுரை, மல்லபுரம், மீனாக்ஷி பஜார், மீனாட்சி பஜார்
Comments: Be the first to comment
திசெம்பர் 2, 2016
ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரை – குறி அத்வானி முதல் மோடி வரை!
மதுரையில் வளர்ந்த குண்டுதயாரிப்பு, வெடிப்பு நிகழ்வுகள்: மதுரையில் இஸ்லாமிய தீவிரவாதம் ஊக்குவித்து வளர்த்தது, இப்பொழுது எல்லைகளைக் கடந்து விட்டன. தொடர்ந்து குண்டு தயாரிப்பு, குண்டுவெடித்தல் மற்றும் ஜிஹாதிகளுக்கு பயிற்சி, ஆள்-சேர்ப்பு என அனைத்தும் நடைபெறுவது ஒரு சாதாரண மதுரைவாசிக்குக் கூட தெரியும் அளவுக்கு இருக்கிறது. மலைகளை வெடித்து, பாறைகள் எடுக்கும் தொழில் போர்வையில், வெடிமருந்துகள் வாங்கப்பட்டு அவை, குண்டு தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப் படுகின்றன. வெடிமருந்து தயாரிப்பாளர்களிடமிருந்தும், அவர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைத்து வருகின்றன. சிவகாசி அருகில் இருப்பதால், அவர்களது வேலை அமோகமாக நடந்து வருகிறது. மேலும், பாஸ்போர்ட், விசா, கரன்சி மாற்றுதல், பணப்பரிமாற்றம், ரெயில்-பஸ் முன்பதிவு போன்ற எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், இத்தகைய வேலைகளை செய்து வர சுலபமாக இருந்து வருகிறது. பெற்றோர்களுக்கு தெரியும்-தெரியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன.
மதுரையில் அல் கொய்தா இயங்கி வருவது: மதுரையில் அல் கொய்தா அடைப்படை இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த 3 பேரை தேசிய புலனாய்வுத்துறை கைது செய்து உள்ளது[1]என்று செய்தி இப்பொழுது தான் வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் எப்படி மறைந்திருந்தது என்று தெரியவில்லை. பிரதமர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த 22 தலைவர்களை கொல்ல இவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 6 நாட்டு தூதர்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர்[2]. தென்மாநிலங்களில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைதான நிலையில், 29-11-2016 அன்று மேலும் ஒருவர் மதுரையில் கைதானார்[3]. என்.ஐ.ஏ முகவும் ஜாக்கிரதையாக செய்ல்பட்டு, இக்கைதுகளை செய்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோர்ட் வளாகங்களில் குண்டுவெடிப்புகளை நடத்திய விவரங்கள்: கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் கோர்ட் வளாகங்கள் உட்பட 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி குண்டு வெடித்தது. இதுபோன்று, ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[4].
- ஆந்திராவில் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வாகன காப்பகத்தில்4.2016-ல்[5],
- கேரளாவில் கொல் லம் தலைமை குற்றவியல் நீதி மன்ற வாகன காப்பகத்தில்6.2016-ல்,
- கர்நாடகா மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில்6.2016-ல்,
- ஆந்திராவில் நெல்லூர் நீதிமன்றத் தில்9.2016-ல்,
- கேரளாவில் மல்லபுரம் நீதிமன்ற கழிப்பறையில்11.2016-ல் என அடுத்தடுத்து தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்ப வங்கள் நடந்தன.
நீதி, நீதிமன்றம், முதலியவை எல்லாம் எங்களுக்கு துச்சம், நாங்கள் இந்நாட்டு சட்டங்களை மதிக்க மாட்டோம் என்பதை காட்டவும், பீதியைக் கிளப்புவும், இக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.
மைசூர் குண்டுவெடிப்பு, கைது, விசாரணை இத்தீவிரவாதிகளைக் காட்டிக் கொடுத்துள்ளது: மைசூரு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினர் (என்ஐஏ) விசாரணை நடத் தியபோது, அனைத்து வெடிகுண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும், அதே குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது[6]. மதுரையைச் சேர்ந்த சிலர் சதிச் செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ‘தி பேஸ் மூவ்மெண்ட்’ என்ற அமைப்பின் பெயரில் துண்டு பிரசுரங்கள், பென் டிரைவ் உள்பட பல்வேறு தடயங்களும் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்தன. அந்த அமைப்பு ‘அல்கொய்தா‘ தீவிரவாத அமைப்பின் பெயரின் ஆங்கில மொழியாக்கத்தில் இயங்கியது என்றும் விசாரணையில் தெரியவந்தது[7]. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் குண்டுகளை வெடிக்க செய்தது தெரிந்தது. இதன்பேரில் கடந்த 3 நாட்களாக தேசிய புலனாய்வுப்படையினர் (என்ஐஏ) மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதில், –
- மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
- மதுரை புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோர் 28-11-2016 அன்று கைதாகினர்[8].
இவர்களது தகவலின்பேரில் தீவிரவாத கும்பலின் தலைவராக செயல்பட்ட மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுலைமான் (23) என்ற சென்னையில் உள்ள TCS ஐடி நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினனியரையும் அன்றே, சென்னையில் தேசிய புலனாய்வுப்படையினர் கைது செய்தனர்[9]. இதுதவிர மதுரை புதூரை சேர்ந்த முகம்மது அயூப் (25) என்பவரும் சிக்கினார். அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா மற்றும் முகம்மது அய்யூப் ஆகியோரை மதுரை அருகே இடையபட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து தேசிய புலனாய்வுப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர்.
© வேதபிரகாஷ்
02-12-2016

[1] தினத்தந்தி, மதுரையில் அல் கொய்த அடிப்படை இயக்கம் நடத்திய 3 தீவிரவாதிகள் கைது, பதிவு செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST
[2] http://www.dailythanthi.com/News/State/2016/11/28155132/In-Madurai-The-basic-movement-Al-koyta–3-terrorists.vpf
[3] தினகரன், மதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம், Date: 2016-11-30@ 00:53:25
[4] தினத்தந்தி, மைசூரு கோர்ட்டு வளாக குண்டு வெடிப்பு: கைதான பயங்கரவாதிகள் 5 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல், மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST.
[5] The Indian Express, Chittoor blast: NIA arrests, interrogates three Al-Qaeda suspects in Madurai, By Express News Service | Published: 28th November 2016 08:31 PM |
Last Updated: 29th November 2016 08:12 AM.
http://www.newindianexpress.com/nation/2016/nov/28/chittoor-blast-nia-arrests-interrogates-three-al-qaeda-suspects-in-madurai-1543528.html
[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9400836.ece
[7] http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2016/12/01043306/Mysore-Campus-Court-blast.vpf
[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262467
[9] The Times of India, TCS techie who ‘plotted’ to target PM Narendra Modi held in Tamil Nadu, TNN | Updated: Nov 29, 2016, 06.20 PM IST
பிரிவுகள்: ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, சித்தூர், சுலைமான், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், தீவிரவாத திட்டம், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், தெலிங்கானா, தெலுங்கானா, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, தொலைபேசி, நாகூர், நீதி மன்றம், நெல்லூர், மத-அடிப்படைவாதம், மதரசா, மதரஸா, மனித நேயம், மல்லபுரம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மூளை சலவை, மூளைசலவை, மைசூரு, வன்முறை, வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், ஷஹீத், Uncategorized
Tags: அல் - உம்மா, அல் - கொய்தா, அல்-குவைதா, இஸ்லாம், என்.ஐ.ஏ, குண்டு, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, சித்தூர், சுலைமான், சென்னை, தீவிரவாதம், நெல்லூர், மதுரை, மல்லபுரம், மைசூர்
Comments: Be the first to comment
மார்ச் 23, 2016
2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிலைப்பாடு: ”அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், கூட்டணியில் தொடர்வோம்,” என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்து அதிமுக மற்றும் திமுக கோஷ்டிகளில் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருவதால், இத்தகைய மதவாதக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் பற்றி பேசும் “சுத்தமான” திராவிடக் கட்சிகள் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து விட்டன. அதாவது திமுக காங்கிரசூடன் சேர்ந்து விட்டது. இதனால், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு “அரசியல் தீண்டாமை” வந்து தள்ளாட ஆரம்பித்து விட்டன. இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது[1]: வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் அந்த கூட்டணியில் தொடரும். சட்டசபை தேர்தலில் போட்டியிட, தமிழக முதல்வரிடம் சீட் கேட்டுள்ளோம். அவர் எங்கள் கட்சிக்கு, பல தொகுதிகள் வழங்குவார் என நம்புகிறோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பதை விட, நல்ல ஆட்சி தான் முக்கியம். தமிழக அரசு நடத்தும் உருது பள்ளிகளில், உருது ஆசிரியர்கள் நியமிக்க நேர்காணல் நடந்து வருகிறது. விரைவில் காலியாக உள்ள உருது பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்[2].
மூன்றாவது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.
தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.வை தவிர மூன்றாவது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டுஅனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்ததும் வேடிக்கையாகவே இருந்தது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைத்தார்கள். அதே நிலைதான் 2016லும் உள்ளது.

அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை அள்ளும் முஸ்லிம் கட்சிகள்: உண்மையில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில் தங்களது தொழில், வியாபாரம், வர்த்தகம், ஏற்றுமதி-இறக்குமதி, கான்ட்ரேக்ட், முதலியவற்றில் தான் அவர்களுக்குக் குறிக்கோள் அதற்கு அவர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தொடர்புகளை தாராளமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பலவிதங்களில் வலுவாக இருப்பதினால், அங்கிருக்கும் பலம், அதிகாரம் முதலியவையும் கிடைக்கின்றன. குற்றங்கள் புரியும் போது, வரியேய்ப்புகளில் ஈடுபடும் போது, இவர்கள் தங்களது அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள். அவற்றுடன் கடந்த 30-40 ஆண்டுகளில் தீவிரவாதமும் இணைந்து விட்டது. தடை செய்யப்பட்ட சிமி, அல்-உம்மா போன்ற கூட்டனர் தார் இப்பொழுது வெவ்வேறு பெயர்களில், பேனர்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓட்டு வங்கி உருவாக்கி பேரம் பேசும் முஸ்லிம் கட்சிகள்: மதத்தின் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய முஸ்லிம் லீக் இன்று வரை தான் செக்யூலரிஸ கட்சியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. மானங்கெட்ட திராவிடக் கட்சிகள் அதனுடம் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது செக்யூலரிஸத்தை நிரூபித்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் செக்யூலரிஸம் பேசுவது முதலியன முரண்பாடானது மட்டுமல்ல ஜனநாயக கேலிக் கூத்தாகும். தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்தது பற்றியே முஸ்லிம்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று பதிவு செய்து கொண்டார்கள். மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை, திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை முதலிய தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுடன் தான் ஜெயிக்க முடியும் என்ற ஓட்டு வங்கி அரசியலை உண்டாக்கி, அதன் மூலம் தான் திராவிட கட்சிகளிடம் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளின் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசார்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.
© வேதபிரகாஷ்
23-03-2016
[1] தினமலர், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம் முஸ்லிம் லீக் தலைவர் தகவல், பிப்ரவரி.28, 2016. 07:31.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467302
[3] மாலைமலர், 3 –வது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.
[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html
[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html
பிரிவுகள்: ஃபத்வா, அதிமுக, அன்பழகன், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அரசியல்வாதிகள், அல் - உம்மா, இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இரட்டை இலை, இரட்டை வேடம், உருது மொழி, எஸ்டிபிஐ, ஓட்டுவங்கி, கனிமொழி, காதர் மொகிதீன், காதர் மொய்தின், காதர் மொஹ்தீன், காதர்மொய்தின், முஸ்லீம் மாவோயிஸ்ட், முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், ஷேக் மைதீன், ஹைதர் அலி, Uncategorized
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கடத்தல், கூட்டணி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், தீண்டாமை, பாஜக, பிஜேபி, புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஸ்லீம்கள், வரியேய்ப்பு
Comments: Be the first to comment
பிப்ரவரி 10, 2014
இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பெண் தராயாக இருக்கிறாளாம் – ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!

ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!
3வது திருமணத்திற்காக மதம் மாற்றம்?: தினமலர், “இந்தநிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது”, என்று குறிப்பிட்டாலும், “. யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்”, என்று ஆர். எஸ்.அந்தணன் விவரித்துள்ளார்[1]. இந்த அந்தணன் அல்லது பார்ப்பனன் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை!

ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!
இது குறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில், கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! (இறைவனுக்கு நன்றி!) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார். பிறரின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது திருமணத்திற்காகவோ தான் இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றும் தன்னுடைய ஆய்வின் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு மாறியதாக யுவன் சங்கர் ராஜா பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Deccan chronicle Yuvansankar raja conversion
டெக்கான் க்ரோனிக்கல் எனும் ஆங்கில பத்திரிகைக்கு யுவன் அளித்துள்ள பேட்டி:. அப்பேட்டியில் தான் கண்ட கனவுகள் மற்றும் தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிய போது அவை குர்ஆனில் கிடைத்ததாக கூறியுள்ள யுவன், தான் ஒன்றரை வருடத்திற்கு மேலாக இஸ்லாத்தை ஆய்வு செய்தே இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ஊடகங்களில் வெளியாவதை போல் இயக்குநர் அமீர் உள்ளிட்ட யாருக்கும் இதில் எவ்வித பங்குமில்லை என்று கூறிய யுவன் இஸ்லாம் தன்னை தேர்ந்தெடுத்துள்ளது என்றே தாம் உணர்வதாக கூறியுள்ளார். மேலும், தன் தந்தை இளையராஜா முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பின் முழு மனதுடன் தன் மத மாற்றத்தை ஏற்று கொண்டதாகவும் தன் வீட்டில் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் எவ்வித பிரச்னையுமில்லை என்றும் கூறினார். தன் நண்பனின் திருமணம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி தவறு என்றும் யுவன் கூறினார். ஏ. ஆர். ரஹ்மானின் வழியை பின்பற்றி தாம் இஸ்லாத்திற்கு வரவில்லை என்றும் தன் ஆன்மாவின் முடிவு என்றும் யுவன் குறிப்பிட்டுள்ளார்[2].

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்
இஸ்லாமியர் ஆகிறார் யுவன்! வெளிவராத பின்னணி தகவல்கள்[3]: ஆர்.எஸ்.அந்தணன் என்பவர் எழுதியுள்ளதாக இவ்விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன, “அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது. நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர். மனமே அமைதி கொள்… என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது? இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர் [எல்லாம் தெரிந்த அந்தணர் பெயரைக் குறிப்பிடவில்லை], இஸ்லாமியர்களின் வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்து ‘இதை படி. மனம் அமைதியடையும்’ என்றாராம் [குரான் படித்தால் சாந்தம் கிடைக்கும் என்றால் வளைகுடா நாடுகளில் அல்லடு இஸ்லாம் உள்ள இடங்களில் சாந்த இருக்க வேண்டும் ஆனால் குண்டுகள் தாம் வெடித்துக் கொண்டிருக்கின்றன]. உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன் [அந்தணர் சரியாக எண்ணிக் கொண்டே இருந்தார் போலும்]. மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை. மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன். ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்…. [புத்தகத்தைப் படித்து மனம் உடைந்ததா என்று தெரியவில்லை].

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்
அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு. இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். [இதுவரை ஏதோ எல்லாம் தெரிந்தால் பொல எழுதிவிட்டு இங்கு கூறுகிறார்கள் என்றுள்ளதால், கதைவிட்டுருக்கிறர்கள் என்று தெரிகிறது] விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன். அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். [அதாவது ஒரு பெண்ணும் தயாராக இருக்கிறாள் என்று தெரிகிறது] எதுவாக இருப்பினும் நல்லதே. யுவன் எந்த மதத்திலிருந்தாலும், அவரது இசை எல்லா மதத்தினர் மத்தியிலும் இருக்கும். அது போதும்! -ஆர்.எஸ்.அந்தணன் [இப்படி அந்தணன் என்ற பெயரை உபயோகப் படுத்துவதிலிருந்து இது வேண்டுமென்றே ஒருவர் இப்படி எழுதியுள்ளது தெரிகிறது], இதை ஆங்கிலத்தில் இங்கு வெளியிட்டுள்ளனர்[4].

Yuvansankarraja converting to islam
முஸ்லிம் ஆக வீட்டில்எதிர்ப்பு! யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்[5] என்று தினமலர் கூறுகிறது. ஆனால், ஒன்றுமே பிரச்சினை இல்லை என்று யுசரா கூறுகிறார். இந்த முரண்பாடும் தெரிகிறது.

இரண்டாவது திருமணம் 2011
இளையராஜா வெளியேற்றம்? எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொழு / கொலு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொழு / கொலு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார்[6]. பின்பு கொழுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார். தினமலர் கொழு என்று போட்டிருந்தாலும், அது கொலு என்று இருக்கலாம், அதாவது பொம்மைகளை வைத்து பாடுவதை எதிர்க்கும் அளவில் அடிப்படைவாதம் அப்பொழுதே ஏறிவிட்டதா? இவையெல்லாம் யுசரா டுவிட்டர் மற்றும் டெக்கான் குரோனிகள் முதலியவற்றில் சொன்னதிற்கு விரோதமாக இருக்கிறது.

இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011
குரான் பரிசளித்த அமீர்? யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்தவதையும் கடைபிடித்து வருகிறாராம். தினமலர் இப்படி குறிப்பிட்டாலும், சிரித்துக் கொண்டே மறுத்ததாக டெக்கான் குரோனிகள் கூறுகிறது. ஆனால், பெயரைக் குறிப்பிடாமல் “இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர்” என்று ஆர்.எஸ். அந்தணர் கூறியுள்ளார். இந்த அந்தணர் ஒரு

முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.
பார்ப்பனைப் போலள்ளாது, ஒரு துலுக்கனைப் போலவே நன்றாக எழுதியுள்ளார். ஆகவே, நண்பர் ஒரு முஸ்லிம் என்று தெரிகிறது, ஆக அவர் அமீரா அல்லது வேறொரு முஸ்லிமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
- இஸ்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் என்றது, இல்லை முஸ்லிம் ஆகிவிட்டேன் என்றது.
- பெண்ணில்லை, விவாகம் செய்து கொள்ளவில்லை என்றது, ஆனால், அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள், என்றது,
- குடும்பத்தார் எதிர்க்கவில்லை என்றது, பிறகு எதிர்த்துள்ளார் என்று விவரங்கள் வெளிவருவது.
- ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள் – என்று இணைதளத்தில் வெளியிடுவது!
- “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா.
- இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[7],
- யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது. என்று முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன்[8].
- ஒருவருடமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்பதெல்லாம் பொய். இரண்டு பெண்களுடன் தாம்பத்யம் நடத்த முடியாத நிலையில் ஏதோ ஒரு மூன்றாவது பெண் வலை விரித்திருக்கிறாள், விழுந்திருக்கிறாள். ஆகவே, முஸ்லிம் ஆனது வசதிக்காகத்தான்! அதில் ஆன்மீகமும் இல்லை, நம்பொஇக்கையும் இல்லை.
- ஆக, இதில் முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது.
- யுசரா தானாக மதம் மாறினாலும், திட்டமிட்டு முஸ்லிம்கள் மதம் மாற்றினாலும், இது ஒரு மோசடி என்றே தெரிகிறது.
வேதபிரகாஷ்
© 10-02-2014
[5] தினமலர், இஸ்லாமுக்குமதம்மாறியதுஏன் ? யுவன்சங்கர்ராஜாகுறித்துபுதியதகவல் ,பிப்ரவரி.10, 2014.
பிரிவுகள்: இந்தியத்தனம், மும்பை, முஸ்லிம் பெண்கள், முஸ்லீம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்கள், மூளைசலவை, மோசடி, யுவன்சங்கர் ராஜா
Tags: அமீர், அழகான பெண், அழகிய இளம் பெண்கள், இந்துக்கள், குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், புனிதப்போர், யுவன்சங்கர் ராஜா
Comments: 41 பின்னூட்டங்கள்
மே 11, 2013
பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?
பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?
பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].
பாகிஸ்தானில்தேர்தல் – திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

© வேதபிரகாஷ்
11-05-2013
[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.
[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
பிரிவுகள்: அஃறிணை, அடிப்படைவாதம், அடையாளம், அது, அலி, அலி சகோதரர்கள், அழுக்கு, அவதூறு, அவன், அவள், ஆஜ்மீர், ஆணல்ல, ஆண்பால், ஆண்மை, ஆளுமை, இஸ்லாமாபாத், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஓட்டு, ஓட்டுவங்கி, காஃபிர், கார்டூன், காஷ்மீர், சரீயத், சரீயத் சட்டம், சிந்து, சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், சின்னம், சியாசத், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சூபி, ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், தாஹிர் ஷைஜாத், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணல்ல, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்பால், பெண்மை, மிலாடி நபி, மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், ரத்தம், ராவல்பிண்டி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, லஸ்கர்-இ-தொய்பா, லாகூர், லாஹூர், லீனா, வாசிம் அக்ரம், வாசிம் அக்ரம் மாலிக், வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை, ஷியா, ஷியா-சுன்னி, ஹதீஸ்
Tags: அது, அலி, அவன், அவள், ஆணல்ல, ஆண், ஆண்மை, ஆளுமை, இம்ரான் கான், இஸ்லாம், ஓட்டு, ஓட்டு வங்கி, ஓட்டுரிமை, கராச்சி, கான், செரீப், திருநங்கை, தேர்தல், நடனம், நாட்டியம், பந்து, பாட்டு, பிஎன்பி, பிபிபி, பெண், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணல்ல, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்மை, முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டு, ராவல் பின்டி, விக்கெட், விளையாட்டு
Comments: 3 பின்னூட்டங்கள்
மே 10, 2013
வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதி சவிகுர் ரஹ்மான் பர்க்!

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார் சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[2]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[3].

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[4]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன்.யாவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கைபெரிய்துஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[5]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[6].

முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்;இம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[7]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[8].

“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[9]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: எமுஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[10]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[11]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.
© வேதபிரகாஷ்
10-05-2013
[4] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.
பிரிவுகள்: சவிகுர் ரஹ்மான் பர்க், தேசியவாதி, மத்ரஸா, மனநிலை, மனநோய், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது, வன்முறை, விமர்சனம், வெள்ளிக்கிழமை, வேடம், வேலை, ஷரீயத், ஹலால்
Tags: சவிகுர் ரஹ்மான் பர்க், தேசியவாதி, முகமதியர், முசல்மான், முஸ்லிம், வந்தே மாதரம்
Comments: 6 பின்னூட்டங்கள்
மார்ச் 17, 2013
குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

Rajiv Gandhi-with-Muslim-cap-1990
முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

லல்லு-பாஷ்வான்-குல்லா
ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

Omar Abdullah – Rahul-Mullah-Topi
எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].
வேதபிரகாஷ்
17-03-2013
பிரிவுகள்: அகிலேஷ், அடிப்படைவாதம், அடையாளம், அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அல்லா, அஹமது ஷா புகாரி, ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இமாம், இமாம் கவுன்சில், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உருது மொழி, உலமா வாரியம், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குரான், குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், சட்டசபை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயபிரதா, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், மனநிலை, மனித நேயம், மிதிக்கும் இஸ்லாம், முலாயம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, முஸ்லீம்தனம், முஹம்மது, யாதவ், ரஹ்மான், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹதீஸ்
Tags: ஃபத்வா, அகிலேஷ், அமர் சிங், அலஹாபாத், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியரா, இந்துக்கள், இமாம், கஞ்சி, கஞ்சி குல்லா, குரான், குல்லா, குல்லா கஞ்சி, கொலை, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜியா உல் ஹக், ஜெயபிரதா, தாடி, தில்லி, தில்லி இமாம், தேர்தல், நக்வி, பர்வீன் ஆஜாத், பிஜேபி, புகாரி, போலீஸ், முலாயம், முஸ்லீம், முஸ்லீம்கள், யாதவ், ராம்பூர், ராஹுல், ரேபெரிலி, ரைபெரிலி, ஷாஹி இமாம்
Comments: 9 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்