Archive for the ‘முதலீடு’ category

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை!

ஓகஸ்ட் 8, 2021

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை!

பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முதல் ஷேக் முகைதீன் வரை (2010-2021)[1]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[2]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ் துறையில் விரல் ரேகை பிரிவு நிபுணராக 1970ல் சேர்ந்தார். 2005ல் விருப்ப ஓய்வு பெற்றேன். சென்னையில் பசிபிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கியது. அதைப்பார்த்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரையில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினேன். இதன் நிர்வாக இயக்குனர்களாக நானும் (ஷேக்முகைதீன்), எனது மனைவி மனைவி ஜானு, மகன்கள் சர்தார் உசேன், யாகூப் உசேன் மற்றும் சிவக்குமார், முபாரக்அலி ஆகியோர் இருந்தோம்”.

ஷேக் முகைதீன் வாக்குமூலத்தில் சொன்னது[3]: “திருக்குறள் புத்தகங்களை விற்பதில் கிடைக்கும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதாக அறிவித்தேன். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. திட்டங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு லாபம் கிடைக்கும். இதில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக சேர்ந்தனர். அவர்களிடம் இருந்து 210 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்தது. அதில் 200 கோடி ரூபாய்க்கு வாடிக்கையாளர்களிடம் பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. பத்து கோடி ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது. குட்ஷெட்தெருவில் உள்ள ஆக்சிஸ், கோட்டக், .சி..சி.., தல்லாகுளம் கரூர் வைஸ்யா வங்கிகளில் கணக்கு துவங்கினேன். வங்கிகளில் 80 லட்சம் ரூபாய் உள்ளது. குவாலிஷ், இன்னோவா, டெம்போ ஆகிய வாகனங்கள் உள்ளன. அழகர்கோயிலில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் திடீர் உத்தரவால் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் பணத்தை திருப்பி வழங்க இயலவில்லை”, இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருக்குறளும், திருக்குர்ஆனும்”- “திட்டப்பணிசெய்ய, ரூ, 2, 50, 000/- “செம்மொழிசெய்தி மடல்-1 (2010): இந்நிலையில், முனைவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் “திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது[4] வேடிக்கையாக உள்ளது! இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களுடையதை எவர்களுடையதும் கூட இப்போதும், எங்கும், எவ்வாறும் ஒப்பீடு செய்யக்கூடாது, சமன் செய்யக் கூடாது, ………………………என்றெல்லாம் இருக்கும்போது, இந்த ஜின்னா எப்படி பணம் வாங்கினார்? எப்படி ஆராய்ச்சி செய்யப் போகிறார்? அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன், எவ்வாறு குரானை பொறுத்திப் பார்க்கப் போகிறார்,………………….. முதலியவற்றைப் பற்றியெல்லாம் பொறுத்துதான் பார்க்கவேண்டும்[5] போல இருக்கிறது! இருப்பினும், தன்னது ஆராய்ச்சி விண்ணப்பப் படிவத்தில், அதைப் பற்றி சொல்லியிருப்பார். அதை பார்க்கவேண்டும். ஆக பொய் சொல்லி அரசு பணத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் அபகரிப்பது என்பது இப்படிகூட இருக்கும் போல இருக்கிறது. மேலும் யார் இந்த முகம்மது அலி ஜின்னா என்பதும் தெரியவில்லை! இது எழுதி மூன்று மாதங்கள் ஆகின்றன. முகம்மது அலி ஜின்னா வந்தாரோ இல்லையோ, ஷேக் மைதீன் என்ற இன்னொரு முஸ்லீம் கிளம்பி 220 கோடிகளை ஏமாற்றிவிட்டாராம்!

திருக்குறளை விற்று வியாபாரம்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது[6]. மதுரை, சின்ன சொக்கிகுளம் அஜ்மல்கான் ரோட்டில், ‘பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ நிறுவனம் செயல்பட்டது[7]. ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து 900 ரூபாய் முதிர்வு தொகை வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது[8]. இதை நம்பி, 45 ஆயிரத்து 501 பேர், 65.46 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்[9]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல், நிறுவனத்தைச் சேர்ந்த ஷேக் முகைதீன், கவுஸ் சர்தார் ஹூசைன், ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹூசைன், பானு ஆகியோர் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி, அசையும், அசையா சொத்துக்கள் வாங்கினர். பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் 2010ல் மோசடி வழக்குப் பதிந்தனர். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற – டான்பிட் -நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்கள் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.

குரளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு, திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா?[10] இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை[11].

© வேதபிரகாஷ்

08-08-2021


[1] தினமலர், மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளுக்குசீல், மே 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18450

[2] தினமலர், மதுரையில் ரூ.பல லட்சம் மோசடி: நிதிநிறுவன உரிமையாளர் கைது, மே 07,2010,00:00  IST; http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18377

[3] லைவ்.மதுரை, பாராமவுன்ட்மொத்த வர்த்தகம் ரூ. 210 கோடி : மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வாக்குமூலம், Saturday 08, May 2010

http://livemadurai.yavum.com/index.php?index=MaduraiNews&news=398

[4] வேதபிரகாஷ், முகம்மது அலி ஜின்னாவும், திருக்குறளும், திருக்குர்ஆனும்!, 14-02-2010.

[5]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[6] தினமலர், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம்,  Added : ஆக 08, 2021  02:32

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2818906

[8] தினமலர், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், Added : ஆக 07, 2021  23:28.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2818691

[10] வேதபிரகாஷ், கோவைக்கு அடுத்தது மதுரை: நிதிமோசடி கும்பல்கள், நடத்தும் நாடகங்கள், நம்பும் விசுவாசிகள்!, 15-05-2010.

[11]https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2010/05/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/