Archive for the ‘முகமது நபி’ category

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

ஏப்ரல் 10, 2016

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

இறைதூதர் கருணநிதி

எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்: மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொரி ஆறுமுகம், நாகை நாகராஜன் முதலியோர் பேசினர். தீப்பொரி ஆறுமுகம் 1960களில் பேசும் அலாதியே தனிதான். மெட்ராஸ் பாஷை, கெட்ட வார்த்தை முதலியவை சரளமாக வரும். நாகை நாகராஜன் பேசும் போது, முஸ்லிம் கட்சிகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கலைஞரிடம் கூட்டு சேர்ந்துள்ளன, என்று விவரிக்க ஆரம்பித்தார். ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன், “இந்தத் தேர்தலில் தான் சிறுபான்மை இனத்திலே மிகப்பெரிய இனமான இஸ்லாமிய இனத்தின் அத்தனை அமைப்புகளும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியைப் பார்த்துநீங்கள் தான் நபிகள் நாயகத்திற்குப் பிறகு எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்,” என்று பேசியுள்ளார்[1]. இந்த வீடியோவிலும் அப்பேச்சைக் கேட்கலாம்[2]. திமுகவிடம் கூட்டு வைத்துக் கொண்டு, கெஞ்சி-கூத்தாடி அதிகமான சீட்டுகளை வாங்கிக் கொண்டுள்ளன முஸ்லிம்களின் பிளவுபட்ட கட்சிகள். ஒருவேளை வெளியில் சண்டைப் போட்டுக் கொள்வது போன்று நாடகம் ஆடி, இவ்வாறு அரசியல் செய்கின்றனரா என்று “செக்யூலரிஸ்டுகளுக்கு” தோன்றுகிறது.

நாகை நாகராஜன், கருணாநிதி, முஸ்லிம் கட்சிகள் கூட்டுமனித நேயக்கட்சி அறிவித்த கண்டனம்: கடந்த மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் பேசும் போது நபிகள் நாயகத்திற்கு பிறகு முஸ்லிம் இனத்தை பாதுகாக்க வந்த இறைதூதர் தலைவர் கருணாநிதி என்று கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது[3]. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைதூதர் வரமுடியாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்கள் முஸ்லிம்கள் . எனவே நாகை நாகராஜனின் பேச்சை பற்றி செவியுற்ற அனைத்து முஸ்லிம்களுமே வேதனை அடைந்துள்ளனர். எனவே இது தவிர்க்க பட வேண்டும், கண்டிக்க பட வேண்டும். தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேர, ஜவாஹிருல்லாஹ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக திமுக தலைமைக்கு செய்தியை புகராக கொண்டு சென்றார். மேலும் வாழும் மனிதர்களை புகழ வேண்டும் என்பதற்காக மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்காக எந்த நிலையிலும் அடிப்படை கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம். திமுக தலைமையையும் நேரில் சந்தித்து இது பற்றி புகார் அளிக்க உள்ளோம். எனவே யாரும் பதட்டம் அடையவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். என்று மனித நேயக்கட்சி தலைமையகம் அறிவித்தது[4].

கருணாநிதி இறைதூதர் - தமிழ்நாடு இமாம் கவுன்சில் எதிர்ப்பு - -7-04-2016எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு.![5]: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது.  இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது.  திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும். தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” இப்படிக்கு மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி, மாநில செய்தி தொடர்பாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு[6].

இறைதூதர் கருணாநிதி - நாகை நாகராஜன்- முஸ்லிம்கள் எதிர்ப்பு 07-04-2016போலீஸ் புகார் கொடுக்காமல் மிரட்டும் முஸ்லிம் கட்சிகள்: கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது நல்ல தமாஷாகத் தெரிகிறது. ஏனெனில், இப்படியெல்லாம் மிரட்டும் இவர்கள் போலீஸாரிடம் உரிய புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அவ்வாறு புகார் கொடுத்திருக்கலாம். வழக்குப் பதிவு செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் இப்பிரச்சினை வரும் போது, விவரங்கள் அலசப்படும் போது, பேசியது உண்மையிலேயே இந்தி சட்டங்களின் பிரிவுகளை மீறியவையா, குற்றமாகுமா, எந்த தண்டனை கொடுக்கலாம் என்று வாத-விவாதங்கள் உண்டாகும். ஆனால், அவற்றைத் தடுக்கவே முஸ்லிம் கட்சிகள் இவ்வாறி மிரட்டி அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது. மேலும், இதை பிரச்சினையாக்கினால், முஸ்லிம் கட்சிகளின் ஒதுக்கீடு காலியாகி விடும், ஒரு சீட்டுக் கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் அறிவிப்பு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டை முற்றுகை இடப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது[7]. இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீமை தொடர்பு கொண்டு கேட்டபோது,   “சமீபத்தில் தி.மு.க. பேச்சாளர் நாகராஜ் என்பவர், கருணாநிதியை இறைதூதர் என்று குறிப்பிட்டு பேசினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டுமே இசுலாமியர்கள் இறைதூ தராக நினைக்கிறார்கள்.  ஆகவே நாகராஜை கண்டிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தோம். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, இன்று (08-04-2016) மாலை நான்கு மணி அளவில் அவரது கோபாலபுர இல்லத்தை முற்றுகையிடப்போகிறோம்” என்றார்[8].

Fight among the mohammedan parties in Tamilnadu

முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்பு[9]: காலைமலர் என்ற இணைதளம், “முஹம்மது நபி அவர்களை திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் என்பவர் கலைஞருடன், இணைத்து இழிவு படுத்திய போது பொங்காத பேராசிரியர்! தன்னுடை மமக கட்சியை தீவிரவாத இயக்கம் என்று சொன்ன ஹைச்.ராஜாவை நோக்கி பொங்காத பேராசிரியர்! கலைஞரை ஜாதியை சொல்லி இழிவு படுத்திய விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட வைகோவை நோக்கி மட்டும் டிவி சேனலில் பொங்க காரணம் என்ன? நாயவான்களே! நீங்களே சொல்லுங்கே! சீட்டு, பதவிக்காக தன்னையே மறந்து செயல்படும் ஜவாஹிருல்லாஹ்வின் செயல்பாடுகள் அவரின் மோசமான அரசியலை பிரதிபலிக்கின்றது. அரசியலுக்காக கலைஞரை இவர் மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டாரோ? என்று முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்படைந்து உள்ளனர்”, என்று சாடியுள்ளது[10]. இது ஜவாஹிருல்லாஹுக்கு எதிராக செயல்படும் முஸ்லிம் கூட்டம் போலிருக்கிறது.

Karus warning to Nagai Nagarajan for comparing Mohammed and himself 08-04-2016

தி.மு.. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: “சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை[11]. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும். ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட, மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்[12]. ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் “யாகாவாராயினும் நா காக்க” என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும். நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

10-04-2016

 

[1] http://www.seythigal.com/?p=9486; https://youtu.be/Rdj8_gblPD8

[2] https://www.facebook.com/1416474845231879/videos/1695088387370522/

[3] முக்கண்ணாமலைப்பட்டி அறிவிப்பு, இறைதூதர் தலைவர் கருணாநிதி, Muckanamalaipatti, 00:38, ஏப்ரல்.2016.

[4] http://muckanamalaipatti.blogspot.in/2016/04/blog-post_88.html

[5] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[6] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[7] பத்திரிக்கை.காம், இன்று மாலை கருணாநிதி வீடு முற்றுகை: இந்திய தேசிய லீக் அறிவிப்பு, Posted by : டி.வி.எஸ். சோமு, on Friday, April 8, 2016 @ 11:03 am.

[8] https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/

[9] காலைமலர்.நெட், கலைஞரை இறைதூதர் என்று சொன்னதை ஜவாஹிருல்லா ஏற்றுக்கொண்டாரா? By Mathiyalagau, Apr 7, 2016.

[10] http://kaalaimalar.net/kalingar-javahi-is-no-comment/

[11] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am

By : Sam Kumar.

[12] http://www.tamilnewsbbc.com/2016/04/07/532916.html

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

பிப்ரவரி 13, 2013

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

Photo0647

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

Kashmir Door to Teach India a Lesson - Hafiz Saeed

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.

“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?

காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.

நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.

 காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.

 மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை.  அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

 JKLF meeting at Islamabad

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guru

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

Mixed reactions- while people protested in Kashmir, others elsewhere in India celebrated

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!

பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

வேதபிரகாஷ்

11-02-2013


[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.

Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”

[3] “Indian administered Kashmir”, “India Occupied Kashmir”, Indian Held Kashmir (IHK) என்றுதான் பாகிஸ்தானிய மற்றும் காஷ்மீர முஸ்லீம்கள், ஊடகவாதிகள் கூறி-எழுதி வருகின்றனர்.

http://dawn.com/2013/02/11/at-least-two-dead-in-indian-administered-kashmir/

[6] On Sunday afternoon, Mr. Saeed reached the venue of Mr. Malik’s hunger strike and the two met briefly.

http://www.thehindu.com/news/national/centre-probing-yasin-maliks-alleged-passport-violations/article4407896.ece

[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.

[12] Commenting on the execution of Kashmiri leader Afzal Guru by India, Pakistan on Monday reaffirmed its solidarity with the people of Jammu and Kashmir and expressed serious concern on high-handedness of the Indian government with Kashmiris.

http://paktribune.com/news/Pakistan-voices-concern-on-Indias-treatment-of-Kashmiris-257326.html

கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!

ஜனவரி 16, 2012

கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!

பாகிஸ்தானில், ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கான்பூரில், ஞாயிற்றுக் கிழமை (15-01-2012 அன்று) இமாம் ஹுஸைன், (மொஹம்மது நபியின் பேரன்) இறந்த 40 வது தினத்தை அனுஸ்டிக்க ஷியா முஸ்லீம்கள் ஊர்வலத்தை நடத்தினர்[1]. அப்பொழுது, தீவிரவாத சன்னி முஸ்லீம்களால் குண்டு வெடிக்கப் பட்டதில், 20 பேர் கொல்லப்பட்டனர்,  30ற்கும் மேலானோர் காயமடைந்தனர்[2]. 20% மக்கட்தொகையுள்ள, ஷியாக்களின் மீது தாக்குஇதல் நடத்துவது, குண்டு வைப்பது, கொல்வது முதலியன வழக்கமாக பாகிஸ்தானில் நடந்து வருகிறது. எல்லோரும் மூஸ்லீம்களஸென்று சொல்லிக் கொண்டாலும், இப்படி சன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்களைக் கொன்று வருவது வினோதமே. ஒரே கடவுளை நம்பும் முஸ்லீம்கள் எப்படி, இப்படி அரடித்துக் கொல்கிறாற்கள் என்று தெரியவில்லை.

நாற்பது நாட்களுக்கு முன்னமும், பின்பும்: சரியாக நாற்பது நாட்களுக்கு முன்பு, 06-12-2011 அன்று இதே மாதிரி குண்டு வெடிக்க வைத்து முஸ்லீம்கள் கொலைசெய்யப்பட்டனர், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[3]. கொடுத்துள்ள பட்டியலில், இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். சரி, எதற்கு இத்தனை கொலைவெறி? தாத்தா மற்றும் பேரன்களைப் பின்பற்றுவதிலும் கூட இப்படி மத-சண்டைகள், கொலைகள் இருக்குமா?

வேதபிரகாஷ்

16-01-2012


[1] The explosion hit the gathering in Rahim Yar Khan district where Shias were marking the 40th day of mourning of the death of the Prophet Mohammad’s grandson Imam Hussain, Al Jazeera’s Zein Basravi reported from Islamabad.

[3] வேதபிரகாஷ், , இமாம்ஹுஸைனின் 700வதுதியாகத்திருநாள்அன்றுகுண்டுவெடிப்பு: 54 ஷியாமுஸ்லீம்கள்சாவு, 160ற்கும்மேல்காயம்தாலிபன்களின்கொடூரம்!, https://islamindia.wordpress.com/2011/12/06/shias-killed-in-suicide-bomb-attack-in-afghanistan-2011/

மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

செப்ரெம்பர் 4, 2010

மறுபடியும் 70 ஷியா முஸ்லீம்கள் கொலை, 150 படுகாயம், பாகிஸ்தானில் தொடரும் தற்கொலை ஜிஹாதி குண்டுவெடிப்புகள்!

தடை செய்யப் பட்ட தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (Tehrik-e-Taliban Pakistan) கடந்த லாஹூர் மற்றும் குவெட்டா குண்டுவெடிப்புக் கொலைகளுக்கு தனது பங்ஐ ஒப்புக்கொண்டுள்ளது.

ஷியாக்கள் கொல்லப்படுதல்: பலூச்சிஸ்தானின் தலைநகரான குவெட்டா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை அன்று 03-08-2010 தற்கொலை குண்டு வெடிப்பில், மறுபடியும் 60ற்கும் மேற்பட்ட ஷியாக்கள் கொல்லப்பட்டனர், 100ற்கும் மேலானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்[1]. இப்படி தொடர்ச்சியாக ஷியாக்கள் தாக்கப்படுவது, இஸ்லாத்தில் கூறப்படும் ஒருத்துவம், சகோதரத்துவம் முதலியவையெல்லாம் கேள்விக்குறிகளாகின்றன!

ஷியாக்களின் பாலஸ்தீன ஆதரவு: ஷியாக்கள் ரமதான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று, அல்-குத்ஸ் எனப்படுகின்ற நாள் அன்று கூடி, பாலஸ்தீன விடுதலைக்காக, அம்மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பது வழக்கம். அதுபொலவே சுமார் 2000 ஷியாக்கள் மீஜான் சௌக் என்ற இடத்தில் ஷியா இமாமியா மாணவர்கள் இயக்கம் சார்பில் கூடியபோது 3.30 அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வாரத்தில் நடக்கும் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல் ஆகும்[2].

ஷியாக்களின் மீதான தொடரும் தாக்குதல்கள்: பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து பிரிந்தபோதே, லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்துதான் சுதந்திரத்தை முஸ்லீம்கள் அடைந்தனர். அந்த ரத்தம் தோய்ந்த சுதந்திரம், ரத்ததத்தினாலேயே தொடர்வது போல உள்ளது. ஏனெனில், சுன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்கள் மற்றும் இதர முஸ்லீம்களைக் கொல்லும் வழக்கம் அப்பொழுதே ஆரம்பித்து விட்டது.

முந்தைய ஆட்சியாளர்களின் ஆதரவு: பாகிஸ்தானிய அதிகாரிகள் சுன்னி கொரில்லாக்கள் இயக்கமான ஷிபாஹ்-இ-சஹபா (Sipah-e-Sahaba) என்பதை குறைகூறுகிறார்கள்[3]. ஷிபாஹ்-இ-சஹபா என்றால் முகமது நபியின் நண்பர்களின் ராணுவம் என்று பொருளாம். அப்படியென்றால், முகபது நபியின் மைத்துனரான இமாம் ஹஜரத் அலியை பின்பற்றும் ஷியா முஸ்லீம்களை, இந்த நண்பர்கள் எப்படி, இப்படி கொடூரமாகக் கொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. முந்தைய ராணுவ ஆட்சியாளர் முஹமது ஜியா உல் ஹக் இந்த பயங்கரவாத இயக்கம் வளர்வதற்கு உறுதுணையாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது[4].

Major attacks at mosques, religious events, and Islamic institutions in Pakistan since December 2007[5]:

Sept. 3, 2010: A suicide bomber attempted to storm a mosque in Mardan, but was stopped by security guards. One person was killed after he detonated his vest.

Sept. 1, 2010: Suicide bombers detonated during Shia religious processions in Lahore, killing 28 people.

Aug. 23, 2010: A suicide bomber detonated at a mosque in Wana, South Waziristan, killing 18 people.

July 1, 2010: Suicide bombers detonated at the Data Ganj Bakhsh shrine in Lahore, killing 41 people and wounding more than 170.

May 28, 2010: The Punjabi Taliban assaulted two Ahamadi mosques in Lahore, killing more than 70 people.

Dec. 18, 2009: A suicide bomber detonated inside a mosque frequented by policemen in Lower Dir, killing 12.

Dec. 4, 2009: A suicide assault team stormed a mosque in Rawalpindi that is frequented by Army officers, killing 40.

Oct. 20, 2009: A pair of suicide bombers detonated their vests at Islamabad’s International Islamic University, killing five.

June 12, 2009: A suicide bomber killed five Pakistanis, including anti-Taliban cleric Dr. Sarfraz Naeemi, in an attack on a mosque in Lahore during Friday prayers.

June 12, 2009: A suicide bomber killed six worshipers and wounded more than 90 in an attack inside a mosque in Nowshera. The attack collapsed the dome of the mosque.

June 5, 2009: A suicide bomber killed 49 worshipers in an attack on a mosque in a remote village in Dir.

April 5, 2009: A suicide bomber killed 24 worshipers and wounded more than 100 in an attack outside a Shia religious center in the Chakwal district in Punjab province.

March 27, 2009: A Taliban suicide bomber killed more than 70 worshipers and wounded more than 125 in an attack at a mosque in the Khyber tribal agency.

March 5, 2009: An attacker threw a hand grenade into the middle of a mosque in Dera Ismail Khan, wounding 25 worshipers.

March 2, 2009: A suicide bomber killed six people during an attack at a gathering in a mosque in the Pishin district in Baluchistan.

Feb. 20, 2008: A suicide bomber killed 32 Pakistanis and wounded more than 85 in an attack on a funeral procession for a Shia elder who was murdered in Dera Ismail Khan.

Feb. 5, 2009: A suicide attack outside a mosque killed more than 30 Shia worshipers and wounded more than 50.

Nov. 22, 2008: A bombing at a mosque in Hangu killed five civilians and wounded seven.

Nov. 21, 2008: A suicide attack on a funeral procession in Dera Ismail Khan killed 10 mourners and wounded more than 25.

Sept. 10, 2008: The Taliban attacked a mosque filled with Ramadan worshipers in the district of Dir in northwestern Pakistan. More than 25 worshipers were killed and more than 50 were wounded.

Aug. 19, 2008: A suicide bomber killed 29 Shia mourners and wounded 35 after detonating in the emergency ward of a hospital.

June 17, 2008: Four Pakistanis were killed and three wounded in a bombing at a Shia mosque in Dera Ismail Khan.

May 19, 2008: Four Pakistanis were killed in a bombing outside a mosque in Bajaur.

Jan. 17, 2008: A suicide bomber killed 10 and wounded 25 in an attack on a Shia mosque in Peshawar.

Dec. 28, 2007: A suicide bomber detonated in the middle of a mosque in Charsadda in an attempt to kill former Interior Minister Aftab Sherpao as he conducted Eid prayers. More than 50 were killed and more than 200 were wounded

Read more: http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php#ixzz0yWYNTMw4


[1] http://www.indianexpress.com/news/Shia-march-bombed-again–60-dead/677032

[2] http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[3]Pakistani officials have blamed Sunni guerrillas of the Sipah-e-Sahaba movement and allied militant groups for an increase in sectarian killings this year.

http://www.businessweek.com/news/2010-09-03/third-pakistan-sectarian-attack-in-week-kills-35-injures-100.html

[4] Sunni militant attacks on other groups have risen steadily since the 1980s.In that decade, the military government of General Muhammad Zia ul-Haq secretly promoted the growth of Sipah-e-Sahaba, or Army of the Friends of the Prophet, and similar groups, according to Hassan Abbas, a Pakistani scholar at the New York- based Asia Society and author on Pakistani religious extremism.

[5] http://www.longwarjournal.org/archives/2010/09/taliban_kill_48_in_a.php

காபாவைப் பற்றிய உண்மைகளும், மாயைகளும்

மே 22, 2010

காபாவைப் பற்றிய உண்மைகளும், மாயைகளும்

காபா, காபத்துல்லாஹ், என்றெல்லாம் வழங்கப்படுவது முஸ்லீம்களின் வழிப்பாட்டு ஸ்தலமாகும். ஆனால், இதைப் பற்றி பல தகவல்கள், விவரங்கள், சரித்திரத்திற்கு புறம்பாக பிரச்சார ரீதியில் பரப்பப் படுகின்றன. இது எல்லோரும் நினைப்பது போல இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதல்ல. இஸ்லாத்திற்கு முந்தியிருந்த பலவற்றை இஸ்லாத்தில் தகவமைத்துக் கொண்டவற்றில் இதுவும் ஒன்றாகும் என்பதே உண்மையாகும்.

மெக்காவில் விக்கிரங்கள் இருந்ததைப் பற்றி பலவிதமான விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் கொடுக்கின்றனர். மெக்கா ஒரு பழமையான வானியல் சாத்திர நோக்கு மையமாக இருந்ததினால், அந்த 360 விக்கிரங்கள் 360 பாகைகளைக் குறிப்பதற்காக அமைக்கப் பட்டிருந்ததாகவும், ஆனால், அந்த 360 விக்கிரங்களையும் முகமது நபி உடைக்க ஆணையிட்டு இவ்வாறே உடைக்கப் பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மத்தியில் இருந்த ஒரு பெரிய விக்கிரகத்தை மட்டும் அரேபியர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க விட்டுவைத்ததாகவும், ஆனால் அந்த விக்கிரகமும் பலமுறை தாக்குதல்களுக்கு உட்பட்டதாலும், எரிக்கப்பட்டதாலும், பல துண்டுகளாகின. அவ்விடத்தை விட்டு வெளியே எடுத்துச் சென்ரும் உள்ளனர். பிறகு, மறுபடியும் உள்ளே கொண்டு வந்து வைத்துள்ளனர். அரேபியர்கள் இஸ்லாத்திற்கு முன்பும், பின்னும் அதனை “கடவுளாக” அல்லது “இறைச்சின்னமாக” மதித்து வழிபட்டு வந்துள்ளனர். இப்பொழுது, அவ்வாறில்லை என்று மறுக்கப் படுகிறது.

islam-black-stone-fragments

islam-black-stone-fragments

தலைமை தேவதை ஜிப்ராயில் மூலம் பெறப்பட்ட பெரிய கருப்புக் கல் – ஹட்ஜெரா எல்–அஸௌத் (Hadjera el-Assouad) எனவும் வழங்கப்படுகிறது. அதன் அதிகபட்ச விட்டம் 30.5 செ.மீ அதாவது ஒரு அடிக்கு சிறிது நீளமாக உள்ளது.

hajar-aswad-embedded-in-silver

hajar-aswad-embedded-in-silver

உடைந்த துண்டுகள் வெள்ளியில் பதிக்கப் பட்டு வைத்துள்ளன.

Kaaba-Interior

Kaaba-Interior

உள் அமைப்பு

காபா அமைக்கப்படுவது

காபா அமைக்கப்படுவது

காபாவின் படங்கள் பலவித விவரங்களைத் தருகின்றன.

Kaaba_Interior2

Kaaba_Interior2

அந்த காபாவிற்குள் என்ன இருக்கும் என்று பல முஸ்லீம்களுக்கே இன்று வரை தெரியாமல் இருக்கிறது.

Kaba-Hacibektas

Kaba-Hacibektas

இடைக்காலத்திலிருந்து, இப்பொழுதுவரை பல படங்கள், சித்திரங்கள் இருந்தாலும், அவற்றுள் எஞ்சிள்ளவை சிலவே.

pics--flood kaba 1941 01

pics--flood kaba 1941 01

1940ல் வெள்ளம் வந்தபோது, வெள்ளத்தில் மூழ்கியபோது எடுத்த படங்கள், சில விவரங்களைக் கொடுக்கின்றன.

pics--flood kaba 1941 02

pics--flood kaba 1941 02

அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் இப்பொழுது உள்ளனவா என்று தெரியவில்லை.

pics--flood kaba 1941 03

pics--flood kaba 1941 03

உள்ளேயும் நீர் போனபோது, திறந்து சுத்தம் செய்தபோது, சில முஸ்லீம்கள் எல்லாவற்றையும் பார்த்திருப்பார்கள்.

pics--flood kaba 1941 04

pics--flood kaba 1941 04

ஒவ்வொரு நூறு ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

KABA 1960

KABA 1960

கிருத்துவர்களைப் போன்றே எதிர்மறை மற்றும் உடன்பாட்டு முறையிலான பிரச்சார யுக்திகளை இதில் பயன்படுத்துவது தெரிகின்றது. அதாவது, பக்திமான் போன்று சிரத்தையுடன் மாயைகளையும் கட்டுக்கதைகளையும் பரப்புவது.  எதிர்ப்பதைப் போன்றும், மேன்மேலும் விவரங்களை கொடுத்து குழப்புவது. அதாவது, இல்லை என்று ஆரம்பித்தால், இருக்கிறது என்று வந்து விடுவர்கள் பலர். அதன் மூலம், அதிக தகவல்களைப் பெறலாம். மேலும், நமக்குத் தெரியாமல் அப்படி ஆதாரங்கள் உள்ளன என்று எடுத்துக் க்ஆட்டினால், அதையும் அழித்து விட்டு, தமது கொள்கைகலுக்கேற்றபடி செயல்படலாம், என்றெல்லாம் திட்டங்களுடனும் செய்ல்படுவர்.

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

மார்ச் 29, 2010

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

இவற்றிற்குள்ள தொடர்பு என்ன?

ஆமாம்,

தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அத்தகைய ஒன்றை

பார்த்தோ அல்லது பார்க்காமலோ, அத்தகைய ஒன்றை

யாரோ வரைந்து விட்டாராம்!

சித்தரித்து விட்டாராம்!

மற்றொருவருக்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை, அவர் – அந்நிலையிலேயே அச்சிட கொடுத்து விட்டாராம்!

ஒன்றுமேத் தெரியாத அச்சடிக்கும் தொழிலாளியும் [இப்பொழுது மிஷின்-தான்] தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை அச்சடித்து விட்டாராம் [தொழிலாளிக்கும் மரியாதை].

பிறகெப்படி,தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை மற்றவர்கள் அடையாளம் காணுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள்?

தஸ்லிமா நஸ்.ரீன், “பர்தா ஹை பர்தா”, கலவரம்!

மார்ச் 3, 2010
தஸ்லிமா நஸ்-ரீன் பிரச்சினை என்ன?

கர்நாடகத்தில் பிஜேபி ஆட்சியிலுள்ளது என்ற காரணத்திற்காகவே அவ்வப்போது ஏதாவது பிரச்சினையைக் கிளப்பவேண்டும் என்றமுறையில் காரியங்கள் நடக்கின்றன. செய்திகள் வருகின்றன.

கருணாநிதியோ எடியூரப்பாவைப் புகழ்ந்து தள்ளுகிறார், விழாக்களுக்கெல்லாம் “பன்னி, பன்னி” (கன்னடத்தில் பன்னி / பன்றி என்றால் வாருங்கள் என்று பொருள்) என்று ஆள் விட்டு இல்லை, மந்திரியையே அனுப்பி அழைக்கிறார்! ஆனால் அவர் மாநிலத்தைச் சேர்ந்த தேவ கவுடாவோ கெட்ட வார்த்தயில் (அதை தமிழில் எழுதுவதைவிட அந்த கமல் ஹஸன் ஒரு திரைப்படத்தில் சொன்னதைக் குறிப்பிடலாம்) திட்டுகிறார்! ஆனால் இந்த பாராட்டும், திட்டும் நபர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம்!

மூன்று நாட்களுக்கு முன்பு, பல-அடுக்கு மாடி கட்டிடத்தின் மேலே டீஸல் டேங் இருந்தது, என்று பிரம்மாண்டமாக ஆங்கில டிவி செனல்கள் செய்திகள் வெளியிட்டு அடங்கிவிட்டன.

கர்நாடகா மற்றும் குஜராத்தில் நல்லது நடந்தால் எதுவும் பேச மாட்டார்கள், ஆனால், ஒரு சிறிய அல்லது சம்பந்தமே இல்லாத விஷயம் இருந்தால் அதை தேசிஅ மற்றும் உலகப் பிரச்சினையாக்கிவிடுவார்கள்.

இப்பொழுதும் அத்தகைய தொல்லைதான், ஆனால் பாவம், ஏற்கெனவே இரண்டு மனித உயிர்கள் சென்றுவிட்டன. இப்பிரச்சினையின் பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன

சப்தஹிகா என்ற கன்னட பிரபாவின் வார இணைப்பிலே தஸ்லிமா நஸ்-ரீன் எழுதியதாக “பர்தா ஹை பர்தா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெலிவந்திருந்தது. நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த அந்த பத்திரிக்கையில், அது மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது அல்லது ஆங்கிலத்தில் “சிந்து” என்ற தலைப்பில் எழுதப்பட்டதின் தழுவல், முன்பு விளியான விவரம், தேதி,…… என்றெல்லாம் மூலத்தை…………விவரங்களைக் குறிப்பிடவில்லை.

கேட்கவேண்டுமா, உடனே “சியாசத்”: என்ற உருது பத்திரிக்கைத் திரித்து அதைப் பற்றி மார்ச் 1, 2010 அன்று விமர்சனம் செய்து வெளியிட்டது. அதன் பிரதியும் யாருக்கும் கிடைக்கவில்லையாம்!

உடனே பி. எஸ். எடியூரப்பா சொந்த ஊரான சிமோகாவில் எதிர்ப்புப்போராட்டங்கள், கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன.

முஸ்லீம்கள் ஹஸனில் “அந்த கட்டுரைக்கு” எதிராக நடத்திய பேரணி!

முஸ்லிம்கள் பச்சைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்”……………கடையடைப்பு, …………….கலாட்டா, ………………கல்வீச்சு………………………., அரசிற்கு எதிராக வசவுகள், …..மிரட்டல்கள், …………போலீஸார் நிலைமைக் காட்டுக்கடங்காமல் போன நிலையில் சுட்டதில்  இரண்டுபேர் இறந்துள்ளனர்– அதாவது சுட்டதில் ஒருவர், கல் எறிதாக்குதலில் ஒருவர் என இறந்துள்ளனர். அலர் காயமடைந்துள்ளனர்.

A shop in Kattanakere market gutted in fire during protests in Hassan on Monday.
THE HINDU A shop in Kattanakere market gutted in fire during protests in Hassan on Monday 01-02-2010
படம்- தி இந்து – நன்றி.
unday.
Material from a cushion and cloth store set ablaze by miscreants strewn around on H Siddaiah Road in Shimoga on Tuesday. DH Photo

படம்-டெக்கான் ஹெரால்ட் – நன்றி

செய்திதாள்கள் மன்னிப்புத் தெரிவித்தன. எஃப்.ஐ.ஆர் போட்டு இந்திய குற்றவியல் சட்டத்தின் 153A, 153B and 295A of the IPC (Indian Penal Code) பிரிவுகளில் கக்களைத் தூண்டிவிட்டதற்கும், இரண்டு பிரிவினரிடையில் தப்பெண்ணம் உண்டாக்கியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஸ்லிமா நஸ்-ரீனே தான் அந்த செய்திதாளுக்கு எந்த கட்டுரையும் எழுதவில்லை என்று தமது  அதிரச்சியை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது தான், “முஹமது நபி பர்காவிற்கு எதிராக இருந்தார் என்று எப்பொழுதும் குறிப்பிடவில்லை”, என்ரு தெளிவு படுத்தினார். ஆகாவே, இது ஒரு, “திரித்து எழுதப்பட்ட கட்டுரையே’, என்று முடிவாக எடுத்துக் காட்டினார்.

தஸ்லிமா நஸ்-ரீனின் கட்டுரையை இங்கே படிக்கவும்:  http://taslimanasrin.com/OPINION.pdf

தேடிப்பார்த்ததில் ஏற்கெனவே “அவுட் லுக்” என்ற பத்திரிக்கை 2007ல் தஸ்லிமா நஸ்-ரீனின் கட்டுரையை அவருடைய சம்மதம் இல்லாமலேயே வெளியிட்டுள்ளதாகத் தெரிகின்றது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்:  http://www.outlookindia.com/article.aspx?233670

அந்த  Outlook என்ற பத்திரிக்கை பெரும்பலும், முஸ்லீம்களுக்கு சாதகமாக அல்லது அவர்களைத் தூண்டிவிடும் வகையில் எழுதுவது, செய்திகள், கட்டுரைகள் வெலியிடுவது வழக்கம். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஓரளவிற்கு மூலத்தைப் போல உள்ளதென்றாலும், ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில்தான் இருந்தது. ஏனெனில் சில வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் தூண்டிவிடும் வகையில் இருந்தன என்று படித்தவர்கள் எடுத்துக் காட்டினர். மேலும் இந்த கட்டுரை வெளியிடப்படும் நேரத்தில்தான் தஸ்லிமா நஸ்-ரீன் இந்தியாவில் நிரந்தர குடியிருப்பாக கோரியது ( permanent residency ) மற்றும் மீலாடி நபியும் வந்தது!

ஆகவே ஹசன் மற்றும் சிமோகாவில் முஸ்லீம்கள் வேண்டுமென்றே பிரச்சினை எழுப்பவே அவ்வாறு செய்ததாகத் தெரிகின்றது. அதாவது இது “திரும்ப-திரும்ப செய்வது” என்ற முறையில் வருகிறது. முன்புகூட ஏற்கெனவே வெளிவந்த ஒரு சிறுகதையை “டெக்கான் ஹெரால்ட்” மொழிபெயர்த்து வெளியிட்டபோது, அந்த செய்திதாளின் அலுவலகத்தைதாக்கி, நொறுக்கியடித்து, தீவைத்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுதும் அதே முறைக் காணப்படுவதாக கையாளப்படுவதாக எடுத்துக் காட்டுகின்றனர். அத்தகைய பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கப்படுவதும் திட்டமிட்டதாகவே தெரிகிறது.

http://news.outlookindia.com/item.aspx?675677

முகமது நபி பிறந்தநாளை முன்னிட்டுமதுக்கடைகள் மூட உத்தரவு!

பிப்ரவரி 26, 2010

நாளை 27-02-2010: மதுக்கடைகள் மூட உத்தரவு!

Chennai liquor shops asked to shut on Miladi Nabi- 25-10-2010

இஸ்லாம், முகமது நபி, மது குடித்தல், மீலாடி நபி: முகமதியர் மது குடிப்பதில்லை என்பதில்லை. சாதாரணமாக பல இடங்களில் அவர்கள் மது குடிப்பதைப் பார்க்கலாம். பாகிஸ்தானிலேயே, மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.  இந்தியாவிலும், தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் முகமதுவின் பிறந்த நாளன்று மதுக்கடைகள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாடு தடை இல்லை. அந்நிலையில், தமிழகத்தில், நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபியையொட்டி பிப்ரவரி 27ம் தேதியன்று மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது[1]. பிப்ரவரி 27ம் தேதி மிலாடி நபி எனப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று மதுக்கடைகள், ஹோட்டல்கள், மற்றும் கிளப்புகளில் உள்ள பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[3].

Miladi Nabi - Hyderabad

முகமதுவின் பிறந்த நாள் கொண்டாடலாமா, கூடாதா?: முகமதுவின் பிறந்த நாள் பற்றிய கணக்கீட்டிலும் சில வேறுபாடு இருப்பதால், மீலாடி நபி கொண்டாட வேண்டாம் என்ற கருத்தும், சில ஆசார முஸ்லிம்களிடம் கருத்துள்ளது. கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.  நபி பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்.

Miladi Nabi - Mumbai Cong MLA

வழக்கமாக ஒவ்வொரு வருடமும், ஒரு அறிக்கை வெளியிடப் படுகிறது: இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற ……… அன்று நபிகள் நாயகம் பிறந்த தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தவறினால், மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Miladi Nabi - no liquor- 2015-Dinamalar

மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும்[4]: இன்று மதுக்கடைகள் பெருகியுள்ளது. இஸ்லாமுக்கு அதில் அறவே விருப்பமில்லை. நபிகள் நாயகம், மது அருந்துதலின் தீமையைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார். மதுப்பழக்கம் வாழும் காலத்தில் மட்டுமல்ல, வாழ்க்கைக்குப் பிறகும் கடும் துயரங்களை நமக்குத் தரும்.  ஒருமுறை, நபிகள் நாயகத்திடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். “இறை தூதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,” என்றார். அவரிடம் நாயகம், “”அந்த மதுவில் போதை இருக்கிறதா?” என்றார். “ஆம்’ என பதிலளித்த தோழரிடம், “அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக்கூடாது,”என்றார் நாயகம்.  “சரி…நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,” என்று தோழர் சொன்னதற்கு, “அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,” என்றார் நாயகம். குடிப்பவர்களுடன் சண்டை போட்டாவது அவர்களைத் திருத்த வேண்டும் என்பது நபிகளாரின் கொள்கை. மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டுவிடுவான்[5].

Islam prohibits alcohol

மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும்[6]: ஒருமுறை மது அருந்திய ஒருவரை நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்தார்கள். நாயகம் அவர்களிடம், “இவரை அடியுங்கள்,” என்றார். சிலர் அவரை கையால் அடித்தனர். சிலர் துணியை முறுக்கி அடித்தனர். சிலர் செருப்பால் அடித்தனர். மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும் என்கிறார் நாயகம்.  “மது அருந்திய நிலையில் ஒருவனது உயிர் பிரியுமானால், இறைவன் அவனுக்கு கவுத்தா என்னும் நதியில் இருந்து நீரைப் புகட்டுவான். “கவுத்தா’ என்றால், விலைமாதின் மர்ம ஸ்தானத்தில் இருந்து வெளிப்படும் நீர்,” என்று அவர் சொல்கிறார். அது மட்டுமல்ல! “மது அருந்துபவன் இறந்தால், அவனுக்கு மறுமையில், நரகவாசியின் சீழ், வியர்வை ஆகியவற்றை அல்லாஹ் அருந்தச் செய்வான்’ என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது[7]. மது தயாரிப்பவர், தயாரிக்கக் கூறுபவர், அருந்துபவர், அருந்தத் தருபவர், மதுவை எடுத்துக்கொண்டு போகிறவர், எடுத்துச் செல்லக் கூறுபவர், விற்பவர், மதுவை வாங்கிச் செல்பவர், மதுவை அன்பளிப்பாக தருபவர், மது விற்ற பணத்தில் உணவு உண்பவர் ஆகிய 10 பேரும் சபிக்கப்பட்டவர்கள் தான் என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

26-02-2010

07-12-2017 அன்று மாற்றப்பட்டது.

[1] தமிழ்.ஒன்,இந்தியா, மிலாடி நபி – 27ம் தேதி மதுக் கடைகளை மூட உத்தரவு, Published: Thursday, February 25, 2010, 13:22 [IST]

[2] https://tamil.oneindia.com/news/2010/02/25/liquor-shops-be-closed-miladi-nabi.html

[3] நக்கீரன், நாளை 27-02-2010: மதுக்கடைகள் மூட உத்தரவு!, 26-02-2010. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27641

[4] தினமலர், மது அருந்துபவர்களுடன் யுத்தம் செய்யுங்கள்! , ஆகஸ்ட் 11,2015,12:52  IST

[5] http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=9320

[6] விவேகம் நியூஸ், மது குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்” – நபிகள் நாயகம், குமார் 18/08/2015

[7] http://www.vivegamnews.com/Page.aspx?id=14165