Archive for the ‘முகமது அலி ஜின்னா’ category

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [2]

பிப்ரவரி 7, 2021

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [2]

1972ல் பெரியார் அழுதது, பேசியது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “முன்னதாக காயிதே மில்லத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுக் கல்லூரிக்குப் பெரியார் வந்தார். அப்போது அங்கே கடுமையான கூட்டம். பெரியாரின் நெருங்கிய நண்பரான ஈரோடு கே.ஏ.எஸ். அலாவுதீன் சாஹிப், கூட்டத்தினரை விலக்கிவிட்டு பெரியாரை காயிதே மில்லத் உடல் அருகே அழைத்துச் சென்றார். அப்போது தேம்பிய பெரியார், “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்,” என்று அனைவரின் காதுகளிலும் விழும்படி கூறினார். இதை அலாவுதீன் சாஹிபே பதிவுசெய்திருக்கிறார். பெரியார் சாதாரணமாக யாரையும் புகழ மாட்டார். அப்படிப்பட்ட பெரியாரிடம் இருந்து காயிதே மில்லத் பற்றி வெளியான இந்த வார்த்தைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத்தின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்துக்கு வெளியே காயிதே மில்லத்தின் மேன்மையைப் புரிந்துகொண்டு அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றினார்கள்.,” என்று எழுதி முடித்தது. காயிதே மில்லத்தின் நினைவிடம், சென்னை திருவல்லிக்கேணியில் வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2016ல் ஈவேரா துலுக்கர் ஆனார் என்று கதைகட்டி விட்டனர். ஆனால், எடுபடவில்லை.

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டை

பெரியார் துலுக்கர் ஆனாரா?- முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[1]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்[2]. “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார்[3]. இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[4]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[5]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

பெரியார் முஸ்லிம்

ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[6]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[7]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[8].

சாவதற்கு முன்னார் கலிமா சொல்லி மரணிப்பேன் - பெரியார்

பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது

© வேதபிரகாஷ்

07-02-2021


[1] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[2] வேதபிரகாஷ், நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!, 02-04-2016.

[3] https://dravidianatheism.wordpress.com/2016/04/02/converting-periyar-to-islam-falsification-of-recent-history-by-muslims/

[4] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[5] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

[6] வேதபிரகாஷ், 19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!, 02-04-2016.

[7] https://dravidianatheism.wordpress.com/2016/04/02/islamization-of-dravidian-movement-by-making-periyar-a-mohammedan/

[8] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

பிப்ரவரி 13, 2013

மொஹம்மது அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு ஒமர் அப்துல்லா கண்டனம், யாஸின் மாலிக் உண்ணாவிரதம், ஹாவிஸ் சையீத் எச்சரிக்கை

ஒமர் அப்துல்லாவின் அரசியல்: மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா எப்பொழுதும் அரசியல் செய்து, இந்தியாவை ஏமாற்றி பதவிக்கு வந்து, வாழ்க்கையை அனுபவித்து வரும் மறைமுக ஜிஹாதிகள். பயங்கரவாதி முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்[1]. உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு ஆகியவற்றின் உத்தரவின்படி நிறைவேற்றுப்பட்டுள்ள தண்டனைக்கு மாநில முதல்வர் ஒருவர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிடுவதிலிருந்து, எப்படி இங்குள்ளவர்களும் மறைமுகமாக ஆதரிக்கின்றனர் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல சென்னையிலேயே, தூக்கிலிட்டதை எதிர்த்து சுவரொட்டிகளும் காணப்படுகின்றன.

Photo0647

(இந்திய) விரோத மனப்பான்மை உருவாகும்: இது தொடர்பாக ஒமர் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், (இந்திய) விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே அவர்களால் கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் சென்று விடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே நாம்தான் பாதிக்கப்படும் மக்கள் என்ற எண்ணமும், தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் காஷ்மீர் மக்களிடம் உருவாக அனுமதித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இப்போது சில கருத்துகளைக் கூறுகிறேன்”, என்றார். இவர்கள் ஏதோ இந்தியாவிற்காக வேலை செய்வது போலவும், நல்லவர்கள் போலவும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

Kashmir Door to Teach India a Lesson - Hafiz Saeed

சாவிலும் பிழைப்பைத்தேடும் ஜிஹாதி மனப்பாங்குள்ளவர்கள்: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், “அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றார். தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என்று உறுதிபடப் பேசிய ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். ஆனால், அரசாங்கத்தின் தரப்பில் உரிய முறைகளைப் பின்பற்றித்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற விஷயங்கள் தமிழக நாளிதழ்கள் வெளியிடவில்லை. ஜிஹாதிகளைப் பொறுத்த வரைக்கும் சாவு “ஷஹீதுத்துவம்” என்றுதான் ஏற்றுக் கொண்டு சாகின்றனர். மனிதகுண்டுகளே அவ்வாறுதான் உருவாகி வெடித்துக் கொண்டிருக்கின்றன.

“எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார் ஒமர்: ஜிஹாத் என்ற மதவெறியில் குண்டுகளை வெடித்து அப்பாவி மக்களை வயது கூட பார்க்காமல் குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று அனைவரையும் கை-கால்கள் சிதற, தலைகள் சிதற, ரத்தம் பீரீட்டு கொட்ட, சதைகள் சிதற குரூரக் கொலைப்பலிகள் செய்து வருவதை நினைந்து, உள்ளம் உருத்தத்தான் இப்படி கூறுகிறார் போலும் ஒமர், “எனக்கு ரத்தவெறி ஏதும் இல்லை’ என்றார். அப்படியென்றால், யாருக்கு ரத்தவெறி இருக்கிறது?

காஷ்மீர் மக்களின் (முஸ்லீம்களின்) கருத்து: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பலரில் அப்சல் குருவை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாகக் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் எனது கருத்து. இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது[2].

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள்? இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் தனது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது குறித்து அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை விளக்குவது மிகவும் கடினம். ஒருமித்த அளவில் மக்களின் மனவோட்டத்தில் திருப்தி அடைவதன் மூலம் ஒருவரைத் தூக்கிலிட்டு விட முடியாது. சட்டப்படியும், நீதிப்படியும் அத்தண்டனை வழங்குவதற்கான காரணங்கள் அனைத்தும் வலுவாக இருக்க வேண்டும்.

நிறைவேற்றி இருக்கக் கூடாது: மரண தண்டனைக்காக காத்திருப்பவர்கள் குறித்தும், இதுவரை மரண தண்டனை பெற்றவர்கள் குறித்தும் வேறுவிதமான கேள்விகளை எழுப்ப நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டில் இருந்து மத்திய அரசு தன்னை காத்துக் கொள்ள வேண்டும். இது சட்டப்படியே எல்லாம் நடந்துள்ள என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் இருத்திருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கட்சியின் கருத்து என்றார். இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசில் இருந்து விலகுவீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் விலகினால் அப்சல் குருவை மீண்டும் கொண்டு வர முடியும் என்றால் அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று ஒமர் அப்துல்லா பதிலளித்தார். இவரும் இவரது உறவினரான மெஹ்பூபா முப்தியும் இப்படி மாறி-மாறி பேசியதும், எதிர்பார்த்தபடி, கலவரங்கள் ஆரம்பித்துள்ளன.

 காஷ்மீரில் 2ஆவது நாளாக ஊரடங்கு: ஸ்ரீநகர், பிப். 10:÷நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு சனிக்கிழமை (09-02-2013) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீரில்[3] பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவையும் மீறி காஷ்மீரில் பல இடங்களில் சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்தே அவர்களுக்கு முன்னமே விஷயம் தெரிந்துள்ளது என்றாகிறது. அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 36 போராட்டக்காரர்களுக்கும், 23 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இன்டர்நெட் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புவதை கேபிள் ஆபரேட்டர்கள் தவிர்த்து விட்டனர்.

 மோதலில் ஒருவர் சாவு: 6 பேர் படுகாயம்: ஸ்ரீநகர், பிப். 10: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அதிகாரவட்டாரங்கள் தெரிவித்ததாவது: மத்திய காஷ்மீர் பகுதியில் உள்ள கந்தர்பால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் விரட்டியபோது தாரிக் அகமது பட் மற்றும் மேலும் 2 பேர் ஆற்றில் குதித்தனர். இதில் பட் உயிரிழந்தார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் இந்த தகவலை மறுத்தனர். படகில் சென்றபோது அது கவிழ்ந்ததில் ஒருவர் நீந்தி கரைசேர்ந்தார். மற்றொருவரை சிலர் காப்பாற்றினர். தாரிக் அகமது பட்டை காப்பாற்ற இயலவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அவரது சாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் வாட்டர்காம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அவர்களை கலைந்துபோகச் செய்த பாதுகாப்புப் படையினருடன் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வீட்டுக் காவலில் கிலானி?: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஜாகீர் ஹுசேன் கல்லூரியில் பேராசிரியராக உள்ள எஸ்.ஏ.ஆர். கிலானியை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கிலானியை அதே ஆண்டு டிசம்பரில் தில்லி போலீஸார் கைது செய்தனர். எனினும், கிலானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்று 2003-ல் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காலையில் விசாரணைக்காக நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கிலானியை போலீஸார் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கிலானியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தில்லியில் வசித்து வரும் ஹுரியத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், பத்திரிகையாளர் இஃப்திகர் கிலானி ஆகியோரின் வீட்டு வாயிலில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 2வது நாளாக தொடருகிறது ஊரடங்கு[4]: அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஒரு சில இடங்களில், நேற்று முன்தினம், வன்முறை ஏற்பட்டது. இதில், 23 போலீசார் உட்பட, 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காஷ்மீரில், நேற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது. பதற்றமான இடங்களில், போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். செய்தி சேனல்கள், மொபைல் போன், இணையதள சேவைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் முடக்கி வைக்கப்பட்டிருந்தன; பத்திரிகைகளும், வெளிவரவில்லை.  அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்[5].

 JKLF meeting at Islamabad

இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி கைகோர்த்துக் கொண்டு போராட்டம்: இஸ்லாமாபாதில் இந்தியவிரோதி யாஸின் மாலிக் மற்றும் பயங்கரவாதி ஹாபிஸ் சையீது தண்டனையை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். மொஹம்மது அப்சலின் உடலை ஒப்புவிக்கும் படி ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, இந்தியவிரோதி மற்றும் தீவிரவாதி-பயங்கரவாதி இருவரும் மேடையில் அருகருகில் உட்கார்ந்து கொண்டது, பேசிக்கொண்டது பற்றி செய்திகள் வந்துள்ளன[6]. இறுதிமரியாதை சடங்கும் நடத்தப் பட்டது. ஹாவித் சையதே செய்து வைப்பான் என்று அறிவிக்கப்பட்டாலும், ஜமத்-இ-இஸ்லாமி தலைவர் செய்து வைத்தார்[7].

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guru

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான். கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[8]. இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

மனைவியுடன் இருக்க வருடா-வருடம் பாஸ்போர்ட் கொடுக்கும் சோனியா அரசு[9]: யாஸின் மாலிக்கின் மனைவி பாகிஸ்தானில் இருக்கிறாள். இவளுடன் சேர்ந்து இருக்க வருடா-வருடம் சோனியா அரசு பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுத்து வருகிறது. இவனோ மனைவியுடனும் இருந்து, ஜிஹாதிகளுடனும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அம்மா சொன்னால் அப்படியே தலையாட்டி வருகிறார்கள், காலில் விழவும் தயாராக இருக்கிறர்கள். அம்மையார் தலைவி என்றால்தான், அவர்களுக்கு பதவி, பட்டம், சொத்து, பணம் எல்லாம். ஆகவே, இத்தகைய அடிமை வாழ்வு தொடர்ந்தே வருகிறது. இடைக்காலத்தில் இதைப் போன்ற இந்திடயர்கள் முஸ்லீகம்களுடன் துணைபோனதால் தான் முஹம்மது கோரி, முஹம்மது கஜினி, மாலிக்காபூர், பாபர், ஹுமாயூன் முதலியோர் இந்துக்களைக் கொன்று, சூறையாடினார்கள். இப்பொழுது இப்படி கூட்டணியில் குண்டு போட்டு கொன்று வருகிறார்கள், ஊழலில் கோடிகளை கொள்ளையடித்து வருகிறார்கள் இதுதான் வித்தியாசம்!

Mixed reactions- while people protested in Kashmir, others elsewhere in India celebrated

ஊடகங்களின் விஷமத்தனம்: இந்திய அரசு தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதைப் பொறுத்த வரைக்கும் உள்ள முறையை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டினாலும், ஏதோ அரசு அவசரப்பட்டுவிட்டது, குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப் படவில்லை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் கதைகளை அவிஅத்துவிட ஆரம்பித்துள்ளனர். ஜிஹாதி-பயங்கரவாதிகளால், ஜிஹாதி-தீவிரவாதிகளால் மக்கள் கொள்ளப்பட்டபோது, இவர்கள் இவ்வாறு பேசவில்லையே, ஏன்? அப்படியென்றால் அவர்களுக்கு குடும்பங்கள், உரிமைகள் இல்லையா? இல்லை, அவர்கள் இவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் அல்லது வேற்றுமையானவர்கள்? இப்படி கேள்விகள் கேட்டால், விடை என்னவென்று மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அகவே, ஊடகங்களின் விஷமத்தனம் நன்றாகவே தெரிகிறது. அதனால்தான், ஒரு ஊடகம் இப்படி – இந்தியர்களில் சிலர் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், சிலர் கொண்டாடுகிறார்கள் என்று போலித்தனமான-விஷமத்தனமான படத்தை வெளியிட்டுள்ளார்கள்[10]. சிறுவனை உயிர்தியாகியாக்கிய இந்திய ராணுவம் என்று பாகிஸ்தான் நாளிதழ்[11] கூறுகிறது!

பாகிஸ்தானின் விரோதத்தனம்: நட்பு என்று சொல்லிக் கொண்டு, தலைகளைத் துண்டாடி, துரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய பாகிஸ்தான், கேடு கெட்ட செக்யூலார் இந்தியாவை இந்த சமயத்திலும் நன்றாகவே சாடியுள்ளது[12]. இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கிறது[13]. அதை வெட்கம்-மானம்-சூடு-சொரணை இல்லாத உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

வேதபிரகாஷ்

11-02-2013


[2] இதற்கேற்றார்போல, அருந்ததிராய் போன்ற கூட்டத்தார் பேசி வருகிறார்கள்.

Sujato Bhadra, a Kolkata-based member of the Association for Protection of Democratic Rights, said that the higher courts had not addressed Guru’s claims that his trial had been faulty. “The government carried out the execution without allowing him to exhaust a judicial recourse after the president rejected his mercy petition,” Bhadra said.”This is a blatant miscarriage of justice.”

[3] “Indian administered Kashmir”, “India Occupied Kashmir”, Indian Held Kashmir (IHK) என்றுதான் பாகிஸ்தானிய மற்றும் காஷ்மீர முஸ்லீம்கள், ஊடகவாதிகள் கூறி-எழுதி வருகின்றனர்.

http://dawn.com/2013/02/11/at-least-two-dead-in-indian-administered-kashmir/

[6] On Sunday afternoon, Mr. Saeed reached the venue of Mr. Malik’s hunger strike and the two met briefly.

http://www.thehindu.com/news/national/centre-probing-yasin-maliks-alleged-passport-violations/article4407896.ece

[7] Though JuD activists had claimed that Mr. Saeed would lead the ‘ghayabana namaz-e-janaza’ (funeral prayers in absentia) for Afzal at the protest site, the prayers were led by a Jamat-e-Islami leader.

[12] Commenting on the execution of Kashmiri leader Afzal Guru by India, Pakistan on Monday reaffirmed its solidarity with the people of Jammu and Kashmir and expressed serious concern on high-handedness of the Indian government with Kashmiris.

http://paktribune.com/news/Pakistan-voices-concern-on-Indias-treatment-of-Kashmiris-257326.html

காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.

ஜூன் 22, 2010

காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.

சுதந்திரத்தின் முன்னும், பின்னும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை அளவிற்கு அதிகமாக கொஞ்சி, கெஞ்சி, செல்லம் கொடுத்து, சீரழந்துதான் மிச்சம். அதுமட்டுமல்லாது, நாட்டையே இரண்டாகப் பிளந்து, பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தது. “சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்”, என்று முகமது அலி ஜின்னா எகத்தாளத்துடன் கூறிக்கொண்டார். ஆனால், காந்திஜியோ லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை.

முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் உள்ள இந்துக்களையும் அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. அதனை கேட்க எந்த இந்திய அரசியக் கட்சிக்கும் யோக்கியதை இல்லை, உணர்வுல் இல்லை. மதத்தால் ஒன்றாக இருக்கமுடியாத பாகிஸ்தான் இரண்டாகியது. ஆனால், விடுதலைக்காக உதவிய இந்தியாவிற்கே எதிராகத்தான் பங்களாதேசம் செயல்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது.

செக்யூலரிஸம் வந்து முஸ்லீம்களின் வெறித்தனத்தை, அடிப்படைவாதத்தை, ஏன் தீவிரவாதத்தைக்கூட அதிகமாகவே வளர்த்தது. இன்று தேசிய ஜிஹாதி தீவிரவாதம் உள்ளதாக இந்தியா பெருமைப் பட்டுக் கொள்கிறது.

தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு, முஸ்லீம்களை ஓட்டுவங்கிகளாக மாற்றி, அவர்களின் வெறியை இன்னும் வளர்க்கத்தான் செய்தது.

இந்ந்திலையில், காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லீம் அமைப்புகள் மிரட்டி வருவது ஆச்சரியமாக உள்ளது. முன்பு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை “ஜிஹாதி” விஷயத்தில் மிரட்டினர். இப்பொழுது, வெளிப்படையாக, இவ்வாறு மிரட்டியுள்ளது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.

சென்னையில் ஜூலை 4ல் காங்.,க்குஎச்சரிக்கை விடும் முஸ்லிம் மாநாடு:தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பேட்டி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23986

ராமநாதபுரம்:””முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத காங்கிரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜூலை 4ல் சென்னையில் முஸ்லிம்கள் மாநாடு நடைபெறும்,” என, தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2004 தேர்தலில் காங்.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பிய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தர ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தும், அது குறித்து லோக்சபாவில் காங்.,விவாதம் செய்யவில்லை. சட்டம் இயற்றவில்லை. அறிக்கை தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அனால் பிரதமரோ,””அனைத்து கட்சியின் ஒத்த கருத்து வந்த பின்தான் ஒதுக்கீடு செய்யப்படும்,” என , பல்டி அடித்துவிட்டார். இதன்காரணமாக முஸ்லிம்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.

இதன் வெளிப்பாடாகத்தான் ஜூலை 4 ம் தேதி, சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. தமிழகத்திலிருந்து 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர். மாநாடு காங்கிரசுக்கு எச்சரிக்கை மாநாடாக இருப்பதோடு, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு எதிராக செயல்படுவது என முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இடஒதுக்கீடு தர காங்., சம்மதித்தால் ஆதரவு தருவோம், என்றார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
திவு செய்த நாள் : ஜூலை 07,2010,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34630

புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் போடப்பட்டது.இந்த தீர்மானங்களை விளக்கியும் இட ஒதுக்கீட்டை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.