Archive for the ‘மீலாத்’ category

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா?

ஒக்ரோபர் 28, 2021

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?: ஸ்டாலின் என்னத்தான் சப்பைக் கட்டினாலும், தன்னுடைய நாத்திகம் இந்துவிரோதம் தான் என்று வெளிப்படுகிறது. திமுக இந்துவிரோத கட்சி இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், ஸ்டாலின் பேசுவது, நடந்து கொள்வது இந்துவிரோதமாகத்தான் இருந்து வருகிறது. பிறகு தொண்டர்களிடம் எப்படி சகிப்புத் தன்மை, நேயம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் எதிர்பார்க்க முடியும். அது தான் லடந்த 70 வருட திரவிடத்துவ ஆட்சியில் நிரூபிக்கப் பட்டு வருகிறது. இதில் பெரியார் என்பதெல்லாம், ஒரு சாக்கு-போக்குதான். செக்யூலரிஸமே, கம்யூனலிஸமாகத்தான் உள்ளதுந்தமிழகத்து முதலமைச்சர் என்ற அடிப்படையே தெரியாத ஆளகத்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். துலுக்கர்-கிருத்துவர்களுடன் உறவாடி, கஞ்சி குடித்து, கேக் தின்று பரஸ்பர நெருக்கங்களுடன் இருந்து, இந்துக்களை சதாய்த்து வருகின்றனர். இடையிடையே திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் (கொளத்தூர் மணி), திராவிடர் கழகம், (கோவை ராமகிருஷ்ணன்) என்று பல பேனர்களில் பூணூல்களை அறுப்பது, தாலிகளை அறுப்பது, பன்றிக்கு பூணூல் போடுவது, அப்பாவி பிராமணர்களை வெட்டுவது, கோவில்களில் புகுந்து அடிப்பது, சிலைகளை உடைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீலாது நபியும், இந்திய அரசியலும்: மொஹம்மதுவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று ஆசார இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், அது உருவ வழிபாட்டிற்கு வழி வகுக்கும் என்று அவர்கள் வாதிடுவர். மொஹம்மதுவின் கல்லறையினை நீக்கி விட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில், முஸ்லிம்கள் அங்கு சென்று வழிபடுவதை ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது. தர்கா வழிபாட்டை, தமிழக முகமதியரே எதிர்த்து ஷிர்க் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மீலாது நபிக்கு துலுக்க நாடுகளில் கூட விடுமுறை கிடையாது. கொண்டாடுவதும் கிடையாது. முன்பு விடுமுறையும் விட்டது கிடையாது. வி.பி.சிங்கின் செக்யூலரிஸ / கம்யூனல் ஆட்சியில், அரசியலில் அது ஆரம்பித்து வைக்கப் பட்டது. அதனால், தமிநாட்டிலும் ஆரம்பம் ஆகியது.

ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து[1]: யாரோ எழுதிக் கொடுத்ததை, வாழ்த்தாக, அறிவிக்கப் பட்டுள்ளது. அது, ஊடகங்களில் அப்படியே வெளி வந்துள்ளன[2].

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[3].   நபிகள் நாயகம் இளம்பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்[4].   ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.   அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமைய பெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்,” என்று இ.டிவி.பாரத், தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[5]. மற்றவை, அப்படியே, பி.டி.ஐ பாணியில் செய்தி வெளியிட்டன[6].

18ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப் படும் நிகழ்ச்சி: மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد) இடமிருந்து பெறப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது. இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்கப் படுகின்றது. 1. பரா வபாத், 2. ஈத் அல்-மவ்லித் அந்-நபவி, 3. ஈத் இ மீலாத்-உந் நபவி மற்றும் 4. ஈத் இ மீலாதுன் நபி. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

ஆசார இஸ்லாம் எதிர்க்கிறதுஸலபிகள் அல்லது வஹாபிகள் கொண்டாட்டத்தை எதிர்க்கின்றனர்: விகிபிடீயா மழுப்பலாக, இவ்வாறு கூறுகிறது, “பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்”. இது இஸ்லாத்தில் நுழைக்கப் பட்ட கெட்ட நூதன அனுஸ்டானம் என்றும் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. திராவிடத்துவவாதிகளுக்கு, சுன்னி-ஷியா பிரிவுகள், இறையியல் வேறுபாடுகள், வழிபாட்டு மாறுபாடுகள் முதலியவற்றை அறிவார்களா இல்லையா என்று அவர்கள் மற்றும் துலுக்கர் வெளிப்படுத்திக் காட்டியதில்லை. இருப்பினும் ஸ்டாலின் வாழ்த்து சொன்னதை எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை.

தமிழக ஓட்டுவங்கி அரசியல், செக்யூலரிஸம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மறைக்கும் போக்கு: ஓட்டுவங்கி உள்ளது, சில தொகுதிகளில் உறுதியாக வெற்றிக் கிடைக்கிறது என்பதால், திமுக-அதிமுக முஸ்லிம்கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வருகின்றன. ஆனால், முஸ்லிம்கட்சிகள் தோற்றாலும், வெற்றிப் பெற்றாலும், ஒன்றாக இருந்து சாதித்துக் கொள்கின்றன. தமிழக அரசியல்வாதிகளுக்கு கடல்கடந்த நலன்கள், ஆதாயங்கள், வியாபார பலன்கள், கிடைப்பதால், துலுக்கருடன் கூட்டு வைத்துக் கொள்கின்றன. ஆப்கானிஸ்தானில் இவ்வளவு நடந்தும், ஒன்றுமே நடக்காதது போல, தெரியாதது போல நட்த்து வருவது, பெரிய நடிகத்தனம், சாமர்த்தியம் எனலாம். அதாவது, இங்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பது போல இருப்பர். பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும், நடந்து கொண்டிருக்கும் குற்றங்கள், கொடுமைகள், வன்முறைகள் பற்றி பேச மாட்டார்கள், ஆனால், காஷ்மீரில் துலுக்க பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டாலும், போராட்டம் நடத்துவர். செக்யூலரிஸம் இவ்விதமாகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] மாலைமலர், மு..ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து, பதிவு: அக்டோபர் 18, 2021 13:42 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/10/18134208/3112279/Tamil-News-Chief-Minister-Greets-Miladi-Nabi.vpf

[3] தினத்தந்தி, மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு..ஸ்டாலின் வாழ்த்து, பதிவு: அக்டோபர் 19,  2021 03:29 AM

[4] https://www.dailythanthi.com/News/State/2021/10/19032910/Milad-Nabi-Festival-Celebrated-Today-Greetings-from.vpf

[5] இ.டிவி.பாரத், இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்: மீலாதுன் நபி வாழ்த்து, Published on: Oct 19, 2021, 7:02 AM IST; Updated on: Oct 19, 2021, 9:14 AM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-greeted-milad-un-nabi-wishes-for-islamic-people/tamil-nadu20211019070231454

முகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்!

நவம்பர் 11, 2019

முகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்!

Pre-Islamic idols destroyed by Mohammed

முகமதுக்கு முந்தைய மற்றும் பிந்தைய அரேபியா: “முகமதுக்கு முந்தைய அரேபியா” என்று வந்துள்ள ஆயிரக் கணக்கான புத்தகங்களில், அரேபியாவில், இஸ்லாத்திற்கு முன்னர் கிருத்துவம், யூதம், பாரச்சீகம்[1], பௌத்தம், இந்து போன்ற மதங்கள் மக்களிடையே இருந்ததாக எடுத்துக் காட்டுகிறார்கள். முகமது காலத்தில், காபாவில் இருந்த 360 விக்கிரங்கள், சுவர்களில் இருந்த சித்திரங்கள் முதலியவை, அவரால் அழிக்கப் பட்டன என்று அவர்கள் எழுதி வைத்துள்ள சரித்திர புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். கடந்த நூற்றாண்டுகளில் ஓரளவிற்கு அத்தகைய எச்சங்கள் இருதற்கான ஆதாரங்கள், மேனாட்டர்கள் எடுத்த புகைப்படங்கள், ஓவியங்கள் மூலமாகவும் அறியலாம். ஆனால், அடிப்படைவாத மேலோங்க, பழைய ஆதாரங்கள் மற்றும் எச்சங்கள் கூட அழிக்கப் பட ஆரம்பித்து, இப்பொழுது, முழுவதும் துடைக்கும் பணி நடக்கிறது எனலாம். ஐசிஸ் தீவிரவாதிகள், சிரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பழங்கால சின்னங்களை அழித்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால், பழங்கால சரித்திரம் முழுமையாக இழக்க நேரிடும்.

Bara Rabi Awwal how celebrated - Yogyakarta on the Indonesian island of Java, March 9, 2009.2

யோக்கியகர்த்தா, இந்தோனேசியாவில், கோவில் போன்ற உருவத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு, ஊர்வலமாக கொண்டு சென்று மீலாது நபி கொண்டாடுகின்றனர்.

Bara Rabi Awwal how celebrated - Yogyakarta on the Indonesian island of Java, March 9, 2009.3

யோக்கியகர்த்தா, இந்தோனேசியாவில், கோவில் போன்ற உருவத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு, ஊர்வலமாக கொண்டு சென்று மீலாது நபி கொண்டாடுகின்றனர். பழைய புகைப்படம்.

Bara Rabi Awwal how celebrated - Yogyakarta, Java Island, Indonesia.
சகேதன் விழா ஒரு வார்த்திற்கு இந்தோனேசியாவில், மீலாது நபி நிமித்தம் கொண்டாடப் படுகிறது!
Bara Rabi Awwal how celebrated -Sekaten fair in Indonesia, a week-long celebration of Mawlid

மீலாது நபி எப்படி, எப்பொழுது, ஏன் கொண்டாடப் படுகிறது?: இருப்பினும் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய நிலையில், அதன் நம்பிக்கை, உள்ளூர் மாறுதல்களுடன் வெளிப்படுகின்றது. காலம், இடம், முதலியவற்றால் உண்டாகும் மாற்றங்களுடன் அவை நடந்து வருகின்றன. பூமத்திய ரேகைக்கு மேல்-கீழ், கடக-மகர ரேகைகளில், துருவங்களுக்கு அருகில் இருக்கும் மக்களின் வழிபாட்டு முறைகளில், நடைமுறையில், அதனால், மாறுதல்களைக் காணலாம். மேலும், இஸ்லாம் சந்திரன், அதன் மீதான காலக்கணக்கீட்டின் மீது ஆதாரமாக இயங்கிவருவதால், அமாவாசை-பௌர்ணமி மற்றும் அதற்கு முன் மற்றும் பின்வரும் நாட்கள் புண்ணியமாகக் கருதப்பட்டு, அந்நாட்களில் தான், பண்டிகைகள் கொண்டாடப் பட்டு வருகிறது. ஆப்பிரிக்க-ஆசிய  நாடுகளில், அவரவர் கலாச்சார, பாரம்பரிய, பண்பாட்டு விழா கொண்டாட்டங்களுடன், இஸ்லாமிய பண்டிகை கொண்டாட்டங்களும் இணைந்தே நடந்து வருகின்றனர். இதனால், ஆப்பிரிக்காவில் கிருத்துவம்-யூதம் மற்றும் ஆசியாவில் பௌத்தம்-இந்து மத தாக்கஙளைக் காணலாம். இந்நிலையில் மீலாது நபி பற்றி அலசு போது, கிடைத்த விவரங்கள் ஆராய்ச்சியாளர்களைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

Bara Rabi Awwal how celebrated - Banyuwangi

பனுவங்கி நகரில், இந்தோனேசியா மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.

Bara Rabi Awwal how celebrated - Banyuwangi City

பனுவங்கி நகரில், இந்தோனேசியா மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது. மக்கள் ஆடி-பாடிக் கொண்டு செல்வர்.

அமாவாசைபௌர்ணமி, பிறை வைத்து கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகைகள்: ரபி அல்-அவ்வல், பாரா ரபியுல் அவ்வல்  அதாவது மீலாது நபி, எப்படி உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது என்பதைக் காண்போம். ரபி அல்-அவ்வல் [(Arabic: ربيع الأوّل, rabī‘u ’l-awwal) ] என்பது முகமதிய காலண்டரில் மூன்றாவது மாதத்தை / பனிகாலம் ஆரம்பத்தைக் குறிக்கும். இஸ்லாம் தோன்றியதற்கு முன்னர், இக்காலத்தில், பௌர்ணமிக்கு இரண்டு நாள் – முதல் இரவில் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். மேலே, இஸ்லாம் சந்திரன், அதன் மீதான காலக்கணக்கீட்டின் மீது ஆதாரமாக இயங்கிவருவதால், அமாவாசை-பௌர்ணமி மற்றும் அதற்கு முன் மற்றும் பின்வரும் நாட்கள் புண்ணியமாகக் கருதப்பட்டு, அந்நாட்களில் தான், பண்டிகைகள் கொண்டாடப் பட்டு வருகிறது, என குறிப்பிடப் பட்டது, ஆனால், சந்திரனை பகலில், மேகமூட்டமாக இருக்குபோது, மழைகாலத்தில், துருவப் பகுதிகளில் தெளிவாகப் பார்க்க முடியாது. இதனால். இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது. அதனால், தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, பஞ்சாங்கம் கணிக்கப் பட்டு, அதன் படி, விழாக்கள் கொண்டாடப் பட்டன.

பிறந்Morocco, Bara Rabi ul Awwal procession நாள் தெரியாத முகமதுவின் பிறந்த நாள் கொண்டாடுவது: ரபி அல்-அவ்வல் [(Arabic: ربيع الأوّل, rabī‘u ’l-awwal) ] என்பது முகமதிய காலண்டரில் மூன்றாவது மாதத்தை / பனிகாலம் ஆரம்பத்தைக் குறிக்கும். இம்மாதத்தில் மொஹம்மது நபியின் பிறந்த நாளை முகமதியர் கொண்டாடுவர். ஆனல், அவரது பிறந்த தேதி சரியாக தெரியாது. அதாவது, உருவ வழிபாடு சுத்தமாக இருக்கக் கூடாது, என்பதால், புத்தகங்கள், சின்னங்கள் என்று எல்லாவற்றையும் ஆசாரகோட்பாடு மிக்கக் கொண்டவர்கள் அழித்து விட்டனர். மாவ்லித் [Arabic: مَولِد النَّبِي‎ mawlidu n-nabiyyi, Birth of the Prophet] எனப்படுவது, மௌலித், மேவ்லீத், மூவ்லீத், மீலாத் என்றாகி, மீலாது நபி ஆயிற்று. மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தருத்தல், வம்சாவளி, பிறப்பு, குழந்தையின் பிறப்பு, முகமது நபி பிறந்தநாள் என்றாகியது. ஷியாக்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சுன்னிகள் ரபி அல்-அவ்வல்லை 12ம் நாளும், ஷியாக்கள் 17ம் நாளும் கொண்டாடுகின்றனர்.  ஸலபி மற்றும் தேவ்பந்திகள் நிராகரிக்கின்றனர். இத்தகைய கொண்டாட்டங்களினால், இஸ்லாம் முந்தைய பழக்க-வழக்கங்கள் மறுபடியும் தோன்றுகின்றன என்று ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது!

Bara Rabi Awwal how celebrated - a boy lighting

இப்படி விளக்கேற்றியும் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.

முகமதியரின் விளக்கு கொண்டாட்டம்: சந்திரனை ஆதாரமாக வைத்து, மாதம், ஆண்டு கணக்கிடப் படுவதால், முகமதியர் கொண்டாட்டங்கள், ஒரு நாள் வித்தியாசப் படுகிறது[2]. பாகிஸ்தான் 10-11-2019 அன்று மீலாது நபி கொண்டாடியது. வளைகுடா நாடுகளில் 09-11-2019 அன்று கொண்டாடப் பட்டது[3]. விடுமுறை அறிவிக்கப் படுவது, இந்தியாவில் அரசியலாக்கப் பட்டது. முதலில் வி.பி.சிங் பிரதமராக இருக்கும் போது, தேசிய விடுமுறையாக அறிவிக்கப் பட்டது. பிறகு, அது தொடர்ந்தது. மாநிலங்களிலும் அத்தகைய போக்கு, பிறகு உண்டானது. ஆனால், சில இஸ்லாமிய நாடுகளில் ஒரு நாள் மட்டுமல்ல, ஒரு வாரம் கொண்டாடப் படுகிறது. அத்தகைய நிலையை, இந்தோனேசியாவில் காணலாம். யோக்யகர்தா என்ற இதத்தில் அவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது[4]. கோபுரம் போன்ற அமைப்பை ஊர்வலத்தில் தூக்கிச் சென்று கொண்டாடுவர். இது காவடி தூக்கும் விழாவை ஒத்துள்ளது. திருவிழா போன்று ராட்டினம், கடைகள் எல்லாமே இருக்கும். மொரோகோ, கானா போன்ற நாடுகளிலும் அவ்வாறே, கொண்டாடப் படுகின்றன[5]. மொரோகோவில், கோபுர போன்ற உருவங்களை, தலைமீதுவைத்துக் கொண்டு ஊர்வலமாக செல்கின்றனர்.

Bara Rabi Awwal how celebrated - Boulac Avenue in 1904 at Cairo, Egypt.

பொலோக் அவென்யூ, கெய்ரோவில், 1904ல் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் பட்டது.

Bara Rabi Awwal how celebrated - Malaysia

மலேசியாவில் மீலாது நபி இவ்வாறு கொண்டாடப் படுகிறது.

Bara Rabi Awwal how celebrated - Malaysia-full

10-11-2019, Pakistan celebrated Milad ul Nabi

முகமதியரின் விளக்கு கொண்டாட்டமும், கார்த்திகை தீபம் கொண்டாட்டமும்: கார்த்திகை மாதத்தில், பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றி வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர். கார்த்திகை நட்சத்திர கூட்டத்தில், அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.  கார்த்திகை மைந்த முருகன் பிறந்த தினமாகக் கருதப் படுகிறது. இவையெல்லாமும், மேற்குறிப்பிடப் பட்ட கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போவதை காணலாம். உலகில், ஒரு காலத்தில், குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கையாளர்கள் பரவியிருந்ததை இது காட்டுகிறது. அல்லது, பல்வேறு இடங்களில் வாழ்ந்த மக்கள், இயற்கையை ஆதாரமாக வைத்து, நாட்கள், மாதங்கள், வருடங்கள் முதலியவற்றைக் கணக்கிட்ட போது, துல்லியமாக்க, நட்சத்திரங்கள், சந்திரன், பிறைகள் முதலியவற்றை உபயோகப் படுத்தியதையும் கவனிக்கலாம்.

© வேதபிரகாஷ்

11-11-2019

Bara Rabi Awwal how celebrated - Yogyakarta on the Indonesian island of Java, March 9, 2009.3

[1] ஜொராஸ்ட்ரிய மதம் [Zorastrianism, fire worshippers], தீயை வணங்கும் மதம் என்று சொல்லப் படுகிறது. இது இரானில், பாரசீக பேரரசு காலத்தில் இருந்தது.

[2] Schedule, T., Calendar, Muslims Celebrate Mawlid, the Prophet’s birth Muslims Celebrate Mawlid, the Prophet’s birth. C., Show, H. Y. O. L., & is Hiring, C. C. T. V.

[3] All parts of the Arabian Gulf, including the West Asian region of Syria, Iraq and Lebanon, have begun the observance of Rabi ul Awwal. Eid-e-Milad or Mawlid would be celebrated in these nations from the evening of November 8 to the sunset of November 9.

https://www.latestly.com/lifestyle/festivals-events/rabi-ul-awwal-moon-sighting-2019-in-saudi-arabia-uae-other-middle-east-nations-live-news-updates-announcement-on-eid-e-milad-dates-today-1299957.html

[4] Mulyana, Ahmad. “Sekaten tradition: The ritual ceremony in Yogyakarta as acculturation reality of Javanese culture in Indonesia.” International Journal of Humanities and Social Science Studies, IV 2 (2017): 50-61.

[5] Abdul-Hamid, M. U. S. T. A. P. H. A., CAPE COAST, and GHANA WEST AFRICA. “The Influence of Islam on an African People: The Case of the Dagomba of Northern Ghana.” International Conference on Universalism, Relativism & Intercultural Philosophy. University of Cape Coast, Cape Coast. 2010.