Archive for the ‘மீலாதுநபி’ category

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா?

ஒக்ரோபர் 28, 2021

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?: ஸ்டாலின் என்னத்தான் சப்பைக் கட்டினாலும், தன்னுடைய நாத்திகம் இந்துவிரோதம் தான் என்று வெளிப்படுகிறது. திமுக இந்துவிரோத கட்சி இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், ஸ்டாலின் பேசுவது, நடந்து கொள்வது இந்துவிரோதமாகத்தான் இருந்து வருகிறது. பிறகு தொண்டர்களிடம் எப்படி சகிப்புத் தன்மை, நேயம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் எதிர்பார்க்க முடியும். அது தான் லடந்த 70 வருட திரவிடத்துவ ஆட்சியில் நிரூபிக்கப் பட்டு வருகிறது. இதில் பெரியார் என்பதெல்லாம், ஒரு சாக்கு-போக்குதான். செக்யூலரிஸமே, கம்யூனலிஸமாகத்தான் உள்ளதுந்தமிழகத்து முதலமைச்சர் என்ற அடிப்படையே தெரியாத ஆளகத்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். துலுக்கர்-கிருத்துவர்களுடன் உறவாடி, கஞ்சி குடித்து, கேக் தின்று பரஸ்பர நெருக்கங்களுடன் இருந்து, இந்துக்களை சதாய்த்து வருகின்றனர். இடையிடையே திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் (கொளத்தூர் மணி), திராவிடர் கழகம், (கோவை ராமகிருஷ்ணன்) என்று பல பேனர்களில் பூணூல்களை அறுப்பது, தாலிகளை அறுப்பது, பன்றிக்கு பூணூல் போடுவது, அப்பாவி பிராமணர்களை வெட்டுவது, கோவில்களில் புகுந்து அடிப்பது, சிலைகளை உடைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீலாது நபியும், இந்திய அரசியலும்: மொஹம்மதுவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று ஆசார இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், அது உருவ வழிபாட்டிற்கு வழி வகுக்கும் என்று அவர்கள் வாதிடுவர். மொஹம்மதுவின் கல்லறையினை நீக்கி விட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில், முஸ்லிம்கள் அங்கு சென்று வழிபடுவதை ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது. தர்கா வழிபாட்டை, தமிழக முகமதியரே எதிர்த்து ஷிர்க் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மீலாது நபிக்கு துலுக்க நாடுகளில் கூட விடுமுறை கிடையாது. கொண்டாடுவதும் கிடையாது. முன்பு விடுமுறையும் விட்டது கிடையாது. வி.பி.சிங்கின் செக்யூலரிஸ / கம்யூனல் ஆட்சியில், அரசியலில் அது ஆரம்பித்து வைக்கப் பட்டது. அதனால், தமிநாட்டிலும் ஆரம்பம் ஆகியது.

ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து[1]: யாரோ எழுதிக் கொடுத்ததை, வாழ்த்தாக, அறிவிக்கப் பட்டுள்ளது. அது, ஊடகங்களில் அப்படியே வெளி வந்துள்ளன[2].

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[3].   நபிகள் நாயகம் இளம்பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்[4].   ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.   அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமைய பெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்,” என்று இ.டிவி.பாரத், தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[5]. மற்றவை, அப்படியே, பி.டி.ஐ பாணியில் செய்தி வெளியிட்டன[6].

18ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப் படும் நிகழ்ச்சி: மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد) இடமிருந்து பெறப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது. இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்கப் படுகின்றது. 1. பரா வபாத், 2. ஈத் அல்-மவ்லித் அந்-நபவி, 3. ஈத் இ மீலாத்-உந் நபவி மற்றும் 4. ஈத் இ மீலாதுன் நபி. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

ஆசார இஸ்லாம் எதிர்க்கிறதுஸலபிகள் அல்லது வஹாபிகள் கொண்டாட்டத்தை எதிர்க்கின்றனர்: விகிபிடீயா மழுப்பலாக, இவ்வாறு கூறுகிறது, “பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்”. இது இஸ்லாத்தில் நுழைக்கப் பட்ட கெட்ட நூதன அனுஸ்டானம் என்றும் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. திராவிடத்துவவாதிகளுக்கு, சுன்னி-ஷியா பிரிவுகள், இறையியல் வேறுபாடுகள், வழிபாட்டு மாறுபாடுகள் முதலியவற்றை அறிவார்களா இல்லையா என்று அவர்கள் மற்றும் துலுக்கர் வெளிப்படுத்திக் காட்டியதில்லை. இருப்பினும் ஸ்டாலின் வாழ்த்து சொன்னதை எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை.

தமிழக ஓட்டுவங்கி அரசியல், செக்யூலரிஸம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மறைக்கும் போக்கு: ஓட்டுவங்கி உள்ளது, சில தொகுதிகளில் உறுதியாக வெற்றிக் கிடைக்கிறது என்பதால், திமுக-அதிமுக முஸ்லிம்கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வருகின்றன. ஆனால், முஸ்லிம்கட்சிகள் தோற்றாலும், வெற்றிப் பெற்றாலும், ஒன்றாக இருந்து சாதித்துக் கொள்கின்றன. தமிழக அரசியல்வாதிகளுக்கு கடல்கடந்த நலன்கள், ஆதாயங்கள், வியாபார பலன்கள், கிடைப்பதால், துலுக்கருடன் கூட்டு வைத்துக் கொள்கின்றன. ஆப்கானிஸ்தானில் இவ்வளவு நடந்தும், ஒன்றுமே நடக்காதது போல, தெரியாதது போல நட்த்து வருவது, பெரிய நடிகத்தனம், சாமர்த்தியம் எனலாம். அதாவது, இங்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பது போல இருப்பர். பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும், நடந்து கொண்டிருக்கும் குற்றங்கள், கொடுமைகள், வன்முறைகள் பற்றி பேச மாட்டார்கள், ஆனால், காஷ்மீரில் துலுக்க பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டாலும், போராட்டம் நடத்துவர். செக்யூலரிஸம் இவ்விதமாகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] மாலைமலர், மு..ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து, பதிவு: அக்டோபர் 18, 2021 13:42 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/10/18134208/3112279/Tamil-News-Chief-Minister-Greets-Miladi-Nabi.vpf

[3] தினத்தந்தி, மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு..ஸ்டாலின் வாழ்த்து, பதிவு: அக்டோபர் 19,  2021 03:29 AM

[4] https://www.dailythanthi.com/News/State/2021/10/19032910/Milad-Nabi-Festival-Celebrated-Today-Greetings-from.vpf

[5] இ.டிவி.பாரத், இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்: மீலாதுன் நபி வாழ்த்து, Published on: Oct 19, 2021, 7:02 AM IST; Updated on: Oct 19, 2021, 9:14 AM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-greeted-milad-un-nabi-wishes-for-islamic-people/tamil-nadu20211019070231454

மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர் கலவரம் (3)

ஜனவரி 3, 2017

மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர் கலவரம் (3)

dulagarh-14-12-2016-rioters-with-cans-of-petrol-etc

மதகலவரம்அல்ல என்றும், சிறியஉள்ளூர் பிரச்சினைஎன்றும். மறுப்பது:  துலாகரில் மத கலவரம் கொதித்து அடங்கியுள்ளது[1]. இது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள்-கடைகள் எரிந்து, சாம்பலாகி அடங்கியது போலுள்ளது[2]. பிஜேபி தலைவர் சித்தார்த் நாத் சிங், திரிணமூல் காங்கிரஸின், சிறுபான்மை குழுவினர் தாம், இந்த கலவரங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்[3]. தேசிய மனித உரிமைகள் வாரியத்திடம், இப்பிரச்சியை எடுத்துச் செல்வோம் என்றும் பிஜேபியினர் கூறியுள்ளார்கள்[4]. ஆனால், மம்தா பானர்ஜியோ, இது, “மத-கலவரம்” அல்ல என்றும், சிறிய “உள்ளூர் பிரச்சினை” என்றும். மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். அதே போல, திரிணமூல் கட்சியினர் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தவறான விவரங்களை பரப்புகிறார்கள் என்றும், அவற்றிற்கு மதசாயம் பூசப் பார்க்கிறார்கள் என்றும் குறைகூறினார்கள். அதாவது, ஒன்றுமே நடக்கவில்லை போன்று சாதிக்கும் மம்தாவின் போக்கு திகைப்படைவதாக உள்ளது. துலாகர் கலவர விவரங்கள் முழுவதும் வெளிவருமா-வராதா என்ற சந்தேகம் வலுவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

dulagarh-14-12-2016-vehicles-torchedகலவரங்களில் கூட செக்யூலரிஸம் பார்த்து பாரபட்சத்துடன் செயல்படுவது: இந்துக்களின் பாதிப்பு கிள்ளுக்கீறையாக உள்ளது. இந்தியாவில், காஷ்மீரத்து இந்துக்கள் தாம், சொந்த நாட்டிலேயே “அகதிகள்” என்று சொல்லப்பட்டு, வாழ்கின்றனர் என்றால், அந்நிலை, வேற்கு வங்காளத்திலும் வந்து விட்டது. முசபர்நகரில், டிவி-குழுக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, பேட்டி கண்டு, ஏதோ, முஸ்லிம்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டனர் என்பது போல சித்தரித்துக் காட்டினர். ஆனால், துலாகரில், ஒட்டுமொத்தமாக இந்துக்கள் அகதிகளாகிய போது, அதே ஊடகக்கள் மௌனம் காக்கின்றன. 2016 டிசம்பர் 28 முதல் 31 வரை இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் கூட செக்யூலரிஸம் பற்றி கருத்தரங்கம் நடத்தி பேசியபோது, இந்துக்கள் சார்புடைய இயக்கங்கள் குற்றஞ்சாட்டப்பட்டன. அதே தேதிகளில் தான் துலாகர் கலவரங்கள் பற்றிய செய்திகள் கொஞ்சம் வெளிவர ஆரம்பித்தன. “தி இந்து” முன்னதை விளாவரியாக, பிரபலப்படுத்தி செய்திகள் வெளியிட்டது, ஆனால், பின்னதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. இதுதான் அவர்களது உணர்ச்சி, சுரணை மற்ற்றும் சகிப்புத்தன்மைகளின் நிலைபோலும்.

dulagarh-14-12-2016-rioters-in-action-3உணர்ச்சி, சகிப்புத்தன்மை மற்றும் சொரணை பற்றி ஆர்பாட்டம் செய்த கூட்டங்கள் அமைதியாக இருப்பது[5]: ஒரு ஆண்டிற்கு முன்னர், செக்யூலரிஸவாதிகள், பிரபலங்கள் என்று பல்வேறு அறிவுஜீவி கூட்டங்கள் பெரிய அளவில் கலாட்டா செய்து, ஆர்பாட்டம் செய்தனர். அதாவடு சிறுபாப்மையினர் மீது தாக்குதல் நடக்கின்றது. யாருக்கும் சுரணை இல்லை, மரத்து விட்டது, ஆனால், அவர்களுக்கு மட்டும் தான் ஐபுலன்களும் உணர்ச்சியோடு இருப்பதனால், தாங்க முடியாமல், துடிதுடித்து, தாங்கள் வாங்கிய விருதுகளைத் திரும்ப கொடுத்து கலாட்டா செய்தனர். சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் வியாக்யானம் செய்து அட்டகாசம் செய்தனர். ஆனால், இப்பொழுதே அவர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி பேசுவதாக இல்லை. ஏனெனில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதனால், சுரணை வரவில்லை போலும். அங்குதான் அப்பாவி இந்துக்கள், உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தனர் என்றால், இந்த வீர-தீர-சூர உணர்ச்சிப்புலிகள் எங்கு ஓடி ஒளிந்தன என்று தெரியவில்லை. காங்கிரஸைப் பற்றி கவலையே இல்லை. கிருஸ்துமஸ்-புது வருடம் என்று ராகுல் காந்தி இந்தியாவை விட்டு ஜாலியாகக் கிளம்பி விட்டார். குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்கள், இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? என்று ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார்[6].

riots-erupted-after-milad-ul-nabi-yatraதுலாகரின் மதகலவரமும், சென்னையின் வர்தா புயலும்: டிசம்பர் 12-15 தேதிகள் துலாகர் மற்றும் சென்னை இரண்டும், மதகலவரம் மற்றும் வர்தா புயலால் பாதிக்கப்பட்டதால், மக்கள் பெருத்த சேதத்தைக் கண்டுள்ளனர். இயற்கை உண்மையிலேயே, செக்யூலரிஸ ரீதியில் சென்னையைத் தாக்கியுள்ள போது, இந்திய செக்யூலரிஸம், இஸ்லாமிய மதவெறியோடு சேர்ந்து கொண்டு, இந்துக்களை மட்டும் தாக்கியுள்ளது. ஆகையால், செக்யூலரிஸ உணர்ச்சியாளர்கள் சொரிந்து விட்டுக் கொண்டு, அடங்கி கிடக்கின்றனர் போலும். ஆனால், டிசம்பர் 28-31 2016 தேதிகளில், திருவனந்தபுரத்தில், இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் செக்யூகரிஸம் பற்றி அதிகமாகவே பேசப்பட்டது, ஆனால், துலாகர் கலவரங்கள் பற்றிப் பேசப்படாதது, அவர்களது மறைக்கும் போக்கையே காட்டுகிறது. மெத்தப் படித்த ரோமில தாபர் போன்றோருக்கு, அதெல்லாம் தெரியாதா என்ன? சரி, கம்யூனிஸ முதலமைச்சர், இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தங்களது எதிரியான, மம்தா பானெர்ஜியை சாடியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை. அங்கிருப்பவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது “சங்கப் பரிவார்” தான்! மால்டாவில் தீர்மானங்கள் நிறைவேற்றியது போல, மிக்க செக்யூலரிஸத்துடன், துலாகர் கலவரங்களைக் கண்டித்து எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. அதாவது, இந்துக்கள் எனும்போது, கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸ்காரர்களும் ஒன்றாக சேர்ந்து கொள்கின்றனர். அதுதான் திருவனந்தபுரத்தில் வெளிப்பட்டது.

dulagarh-14-12-2016-rioters-in-action-lorry-torchedமால்டாவில் இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாடு நடந்த பிறகு கலவரம் ஏற்பட்டது, அதேபோல கேரளாவில் நடக்குமா?: சென்ற மால்டா இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டிற்கும், மால்டா கலவரங்களுக்கும் இருக்கக் கூடிய சம்பந்தங்களை எனது கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[7]. ஆனால், இப்பொழுது, மாநாட்டிற்கு முன்னமே, இக்கலவரங்கள் நடந்துள்ளன. அப்பொழுது வேண்டுமென்றே, “ராமஜன்ம பூமி” பிரச்சினையை வைத்து, உள்ள சரித்திய கட்டிடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[8]. நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகி பொய் சொல்லி மாட்டிக் கொண்ட விசயங்களை மறைத்து[9], அவ்வாறு செய்தனர். முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கிய, ஏன், நீதிமன்றத்தில் சாட்சிகளாககைருந்தவர்கள் தாம் செக்யூலரிஸம் பேசுகின்றனர்[10]. இம்முறை மாநாடு கேரளாவில் நடந்து முடிந்துள்ளதால், இனி கேரளாவில் ஏதாவது நடக்கும் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-01-2017

dulagarh-14-12-2016-zee-tv

[1] First Post, Dhulagarh riots: West Bengal town on the boil after communal violence, Dec 28, 2016 16:29 IST

[2] http://www.firstpost.com/india/dhulagarh-riots-west-bengal-town-on-the-boil-after-communal-violence-3177608.html

[3] The Hindu, BJP to move NHRC over Dhulagarh riots, NEW DELHI: DECEMBER 21, 2016 03:15 IST; UPDATED: DECEMBER 21, 2016 03:15 IST

[4] http://www.thehindu.com/news/national/other-states/BJP-to-move-NHRC-over-Dhulagarh-riots/article16915243.ece

[5] http://tamil.oneindia.com/news/india/writers-step-up-protest-5-more-return-akademi-award/slider-pf172066-237502.html

[6]http://www.dinamani.com/india/2016/dec/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2624002.html

[7] https://vedaprakash.wordpress.com/2016/01/14/malda-ihc-conference-communal-fire-and-blaspheme-riots-were-they-incidental-coincidental-or-ancillary-1/

[8] https://vedaprakash.wordpress.com/2016/01/14/malda-ihc-conference-communal-fire-and-blaspheme-riots-were-they-incidental-coincidental-or-ancillary-2/

[9] http://www.firstpost.com/india/babri-demolition-how-hc-verdict-discredited-eminent-historians-547549.html

[10] R Vaidyanathan is Professor of Finance and Control, IIM Bangalore, The views are personal and do not reflect that of his organisation.

 http://www.firstpost.com/india/babri-demolition-how-hc-verdict-discredited-eminent-historians-547549.html

தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?

ஜூன் 6, 2010

தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?

முஸ்லீம்கள் ஏதாவது ஒரு விஷயம், பிரச்சினை, பொருள், சின்னம்………….தங்களுக்கு சாதகமாக உள்ளது என்றால், அது எத்தகைய இஸ்லாம்-விரோதமாக இருந்தாலும் அமைதியாக இருந்து விடுவர். அதே விஷயம், பிரச்சினை, பொருள்………….இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறது என்று, இன்னொரு இடத்தில் பயங்கரமாக விளக்கி, இமாந்தாரர்களை மிரட்டுவர். இத்தகைய இருநிலைகள் ஏன் என்று தெரியவில்லை.

மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம்: சென்னை 05-06-2010 – ஞாயிற்றுக் கிழமை: காயிதே மில்லத்தின் 115வது பிறந்தநாளை முன் னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 115வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக் கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று காலை 9:20 மணிக்கு வந்த  கருணாநிதி, மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன்  ஸ்டாலின், அமைச்சர்கள் உடனிருந்தனர். காலை 11 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கட் சிப் பிரமுகர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலர் அன்வர்ராஜா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச் சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

திராவிட நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள்: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஆரூண் எம்.பி., உள் ளிட்ட காங்கிரசாருடன் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தன் கட்சியினருடன், காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், முன் னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயதுல்லா, பொதுச்செயலர் ஜகிருதீன் அகமது உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இஸ்லாமியருக்கு திருமாவின் அறிவுரை:  இந் நிலையில்  தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ம் பிறந்த நாளில் (ஜூன்- 5, 2010) இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த ஜனநாயகச் சிந்தனையாளராவார். அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அதாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர்.

திருமா-முல்லா-2010

திருமா-முல்லா-2010

அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும். கண்ணியத் தமிழரின் ஜனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.

தஸ்லிமா நஸ்.ரீன், “பர்தா ஹை பர்தா”, கலவரம்!

மார்ச் 3, 2010
தஸ்லிமா நஸ்-ரீன் பிரச்சினை என்ன?

கர்நாடகத்தில் பிஜேபி ஆட்சியிலுள்ளது என்ற காரணத்திற்காகவே அவ்வப்போது ஏதாவது பிரச்சினையைக் கிளப்பவேண்டும் என்றமுறையில் காரியங்கள் நடக்கின்றன. செய்திகள் வருகின்றன.

கருணாநிதியோ எடியூரப்பாவைப் புகழ்ந்து தள்ளுகிறார், விழாக்களுக்கெல்லாம் “பன்னி, பன்னி” (கன்னடத்தில் பன்னி / பன்றி என்றால் வாருங்கள் என்று பொருள்) என்று ஆள் விட்டு இல்லை, மந்திரியையே அனுப்பி அழைக்கிறார்! ஆனால் அவர் மாநிலத்தைச் சேர்ந்த தேவ கவுடாவோ கெட்ட வார்த்தயில் (அதை தமிழில் எழுதுவதைவிட அந்த கமல் ஹஸன் ஒரு திரைப்படத்தில் சொன்னதைக் குறிப்பிடலாம்) திட்டுகிறார்! ஆனால் இந்த பாராட்டும், திட்டும் நபர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம்!

மூன்று நாட்களுக்கு முன்பு, பல-அடுக்கு மாடி கட்டிடத்தின் மேலே டீஸல் டேங் இருந்தது, என்று பிரம்மாண்டமாக ஆங்கில டிவி செனல்கள் செய்திகள் வெளியிட்டு அடங்கிவிட்டன.

கர்நாடகா மற்றும் குஜராத்தில் நல்லது நடந்தால் எதுவும் பேச மாட்டார்கள், ஆனால், ஒரு சிறிய அல்லது சம்பந்தமே இல்லாத விஷயம் இருந்தால் அதை தேசிஅ மற்றும் உலகப் பிரச்சினையாக்கிவிடுவார்கள்.

இப்பொழுதும் அத்தகைய தொல்லைதான், ஆனால் பாவம், ஏற்கெனவே இரண்டு மனித உயிர்கள் சென்றுவிட்டன. இப்பிரச்சினையின் பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன

சப்தஹிகா என்ற கன்னட பிரபாவின் வார இணைப்பிலே தஸ்லிமா நஸ்-ரீன் எழுதியதாக “பர்தா ஹை பர்தா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெலிவந்திருந்தது. நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த அந்த பத்திரிக்கையில், அது மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது அல்லது ஆங்கிலத்தில் “சிந்து” என்ற தலைப்பில் எழுதப்பட்டதின் தழுவல், முன்பு விளியான விவரம், தேதி,…… என்றெல்லாம் மூலத்தை…………விவரங்களைக் குறிப்பிடவில்லை.

கேட்கவேண்டுமா, உடனே “சியாசத்”: என்ற உருது பத்திரிக்கைத் திரித்து அதைப் பற்றி மார்ச் 1, 2010 அன்று விமர்சனம் செய்து வெளியிட்டது. அதன் பிரதியும் யாருக்கும் கிடைக்கவில்லையாம்!

உடனே பி. எஸ். எடியூரப்பா சொந்த ஊரான சிமோகாவில் எதிர்ப்புப்போராட்டங்கள், கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன.

முஸ்லீம்கள் ஹஸனில் “அந்த கட்டுரைக்கு” எதிராக நடத்திய பேரணி!

முஸ்லிம்கள் பச்சைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்”……………கடையடைப்பு, …………….கலாட்டா, ………………கல்வீச்சு………………………., அரசிற்கு எதிராக வசவுகள், …..மிரட்டல்கள், …………போலீஸார் நிலைமைக் காட்டுக்கடங்காமல் போன நிலையில் சுட்டதில்  இரண்டுபேர் இறந்துள்ளனர்– அதாவது சுட்டதில் ஒருவர், கல் எறிதாக்குதலில் ஒருவர் என இறந்துள்ளனர். அலர் காயமடைந்துள்ளனர்.

A shop in Kattanakere market gutted in fire during protests in Hassan on Monday.
THE HINDU A shop in Kattanakere market gutted in fire during protests in Hassan on Monday 01-02-2010
படம்- தி இந்து – நன்றி.
unday.
Material from a cushion and cloth store set ablaze by miscreants strewn around on H Siddaiah Road in Shimoga on Tuesday. DH Photo

படம்-டெக்கான் ஹெரால்ட் – நன்றி

செய்திதாள்கள் மன்னிப்புத் தெரிவித்தன. எஃப்.ஐ.ஆர் போட்டு இந்திய குற்றவியல் சட்டத்தின் 153A, 153B and 295A of the IPC (Indian Penal Code) பிரிவுகளில் கக்களைத் தூண்டிவிட்டதற்கும், இரண்டு பிரிவினரிடையில் தப்பெண்ணம் உண்டாக்கியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஸ்லிமா நஸ்-ரீனே தான் அந்த செய்திதாளுக்கு எந்த கட்டுரையும் எழுதவில்லை என்று தமது  அதிரச்சியை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது தான், “முஹமது நபி பர்காவிற்கு எதிராக இருந்தார் என்று எப்பொழுதும் குறிப்பிடவில்லை”, என்ரு தெளிவு படுத்தினார். ஆகாவே, இது ஒரு, “திரித்து எழுதப்பட்ட கட்டுரையே’, என்று முடிவாக எடுத்துக் காட்டினார்.

தஸ்லிமா நஸ்-ரீனின் கட்டுரையை இங்கே படிக்கவும்:  http://taslimanasrin.com/OPINION.pdf

தேடிப்பார்த்ததில் ஏற்கெனவே “அவுட் லுக்” என்ற பத்திரிக்கை 2007ல் தஸ்லிமா நஸ்-ரீனின் கட்டுரையை அவருடைய சம்மதம் இல்லாமலேயே வெளியிட்டுள்ளதாகத் தெரிகின்றது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்:  http://www.outlookindia.com/article.aspx?233670

அந்த  Outlook என்ற பத்திரிக்கை பெரும்பலும், முஸ்லீம்களுக்கு சாதகமாக அல்லது அவர்களைத் தூண்டிவிடும் வகையில் எழுதுவது, செய்திகள், கட்டுரைகள் வெலியிடுவது வழக்கம். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஓரளவிற்கு மூலத்தைப் போல உள்ளதென்றாலும், ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில்தான் இருந்தது. ஏனெனில் சில வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் தூண்டிவிடும் வகையில் இருந்தன என்று படித்தவர்கள் எடுத்துக் காட்டினர். மேலும் இந்த கட்டுரை வெளியிடப்படும் நேரத்தில்தான் தஸ்லிமா நஸ்-ரீன் இந்தியாவில் நிரந்தர குடியிருப்பாக கோரியது ( permanent residency ) மற்றும் மீலாடி நபியும் வந்தது!

ஆகவே ஹசன் மற்றும் சிமோகாவில் முஸ்லீம்கள் வேண்டுமென்றே பிரச்சினை எழுப்பவே அவ்வாறு செய்ததாகத் தெரிகின்றது. அதாவது இது “திரும்ப-திரும்ப செய்வது” என்ற முறையில் வருகிறது. முன்புகூட ஏற்கெனவே வெளிவந்த ஒரு சிறுகதையை “டெக்கான் ஹெரால்ட்” மொழிபெயர்த்து வெளியிட்டபோது, அந்த செய்திதாளின் அலுவலகத்தைதாக்கி, நொறுக்கியடித்து, தீவைத்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுதும் அதே முறைக் காணப்படுவதாக கையாளப்படுவதாக எடுத்துக் காட்டுகின்றனர். அத்தகைய பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கப்படுவதும் திட்டமிட்டதாகவே தெரிகிறது.

http://news.outlookindia.com/item.aspx?675677

மீலாதுநபி: முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து!

பிப்ரவரி 27, 2010

மீலாதுநபி: முதல்வர் வாழ்த்து!

கருணாநிதி வாழ்த்து: நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் பல்வேறு சிறப்புகள்: இது தொடர்பாக அவர் இன்று (பிப்.26) விடுத்துள்ள செய்தியில், நபிகள் நாயகத்தின் பல்வேறு சிறப்புக்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.  மீலாது நபி திருநாளை இஸ்லாமிய சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த நாளை அரசு விடுமுறை நாளாக தாம் அறிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய அறநெறிப்படி வாழ!: தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்துவரும் அரசின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவரும் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய அறநெறிப்படி வாழ்ந்து வளமும்-நலமும் பெற தமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கருணாநிதி அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.