Archive for the ‘மீனாக்ஷி’ category

திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)

திசெம்பர் 9, 2017

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)

Tiruma wants tirumala temple demolished

“கோவில் இடிப்பு” பற்றி திருமா பேசிய முழு விவரங்கள்: இனி திருமா பேசியதை அலச வேண்டியுள்ளது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் ஆதாரமாக பேசியதை இடது பக்கத்திலும், என்னுடைய “கமென்டுகளை” வலது பக்கத்திலும் காணலாம்: இன்னொரு இடத்தில் உள்ள வீடியோ பேச்சு இவ்வாறு இருக்கிறது[1],

இனிமேல் மசூதி கட்டினால் பாபர் பெயர் வைத்து கட்டுங்கள் இது தான் முஸ்லிம் சமூகத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள்….

துலுக்கருக்கு, இவர் இவ்வாறு பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் என்ன? துலுக்கர் அந்த அளவுக்கு முட்டாள்களா, காபிர் சொன்னதை கேட்டு நடந்து கொள்வதற்கு!

அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ற சான்றுகளும் இல்லை. சான்று ஆவணங்களைக் காட்டுங்கள் என்று நாம் கேட்பது பொருத்தமானது தான் ஏன் ராமர் பிறந்திருந்தால் தானே காட்ட முடியும் (கைதட்டல்) ஒருகற்பனை பாத்திரம் (கைதட்டல்) அதற்கு வாய்ப்பே இல்லை (ஏளனமான சிரிப்பு)

இப்படி ஆவணத்துடன் பேசியது, திருமாவின் உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளது. கருவின் கருவியத் தன்மையும்ம், இந்த விஷத்தமான வெளிப்பாடும் ஒன்றுதான். துலுக்கருக்கு ஆதரவான, விஷத்தைக் கக்கிய பேச்சு இது. ஏனெனில், இத்தகைய கேள்விகளை இஸ்லாம் பற்றி கேட்க திருமாவுக்கு தைரியம் கிடையாது.

அப்படியே இருந்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகள் தான் வரலாறு[2] (ஏளனமான சிரிப்பு) அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்ததாக சொல்கிறார்கள் (அஹ்ஹா. ஹஹ்ஹா….ஏளனமான சிரிப்பு, கைதட்டல்)

2,000 ஆண்டு வரலாறு என்பதை இவரிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், குரான் கூறும், தீர்க்கதரிசிகள், நபிகள் எல்லோரும் கட்டுக்கதை, கற்பனை பாதிரங்களே! துலுக்கர் ஒப்புக் கொள்வார்களா?
அப்படி பார்த்தால்,  இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன……..பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள்.

இவ்வாறு இப்படி கூறியிருப்பதிலிருந்தே, இவரது சரித்திர ஞானமும், பிருகஸ்பதித்தனமும் வெளிப்பட்டுள்ளது. ஜைன-பௌத்த மோதல்கள் பற்றி இவருக்குத் தெரியாதது வேடிக்கை தான். இதற்கான ஆதாரங்களயும் கொடுக்கவில்லை.

எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும்…...[3]

முதலில், இவருக்கு இந்து கோவில், சமண கோவில் மற்றும் பௌத்த விஹாரம் அமைப்பு எப்படி இருக்கும் என்பதே தெரியாது என்பது தான், இவர் பேச்சிலிருந்து வெளிப்படுகிறது.

உங்க வாதத்திற்காக சொல்லுகிறேன்….. (கைதட்டல்) ராமர் கோவிலலிருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்றால் 450 ஆண்டு கால பழமையான இந்த வரலாற்றுச் இச்சின்னமான இந்த பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலலைக் கட்டுவோம் என்பது சரியான வாதம் என்றால் …….

இப்படி துலுக்கருக்கு தொடந்து ஜால்ரா போடுவதிலிருந்து, வரும் சந்தேகமாவது, ஒன்று இந்த ஆள் துலுக்கரின் அடிமை, கைகூலி அல்லது விலைக்கு வாங்கப்பட்டவர் அல்லது துலுக்கனாகவே மதம் மாறி இருக்க வேண்டிய நிலை…..

திருப்பதி ஏழுமலையான் இருக்கின்ற இடத்திலே பௌத்த விகாரை கட்ட வேண்டும். திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரை கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரை கட்டப்படவேண்டும் ….

திருமலை கோவில் பற்றி இதுவரை ஊடகங்களில் சொல்லப்படவில்லை ஆனால், அதைப்பற்றி பேசியதிலிருந்து, இவரது வன்மம், குரூரம் மற்றும் கொடிய எண்னங்களின் வெளிப்பாடு அறியப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பதும் நோக்க வேண்டியுள்ளது.

சொல்லிக் கொண்டே போகலாம்…… இந்தியா முழுவதும் இருக்கின்ற சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் ஒரு காலத்தில் பௌத்த விஹாரங்களாகவும் சமண கோவில்களாகவும், இருந்தனயாரும் மறுக்க முடியுமா? அதற்கான சான்றுகள் உண்டா? முடியாது. ஏனென்றால் வரலாற்றை அப்படி பார்க்க முடியாது.

தமிழகம் என்று ஆரம்பித்து, ஆந்திர கோவிலைக் குறிப்பிட்டு, பிறகு இந்தியா முழுவதும் அப்படித்தான் என்றது, ஏதோ ஒரு திட்டத்தைக் காட்டுகிறது. துலுக்கர் ஒருவேளை ஏதாவது திட்டத்தை வைத்திருக்கின்றனரா என்று கவனிக்கப்பட வேண்டும்.

அண்ணன் ஹவாஹிருல்லா அவர்கள் ஒரு அருமையான கருத்து சொன்னார்கள் இந்த ஆர்பாட்டத்திலே, இஸ்லாம் என்பது மிக முக்கியமான ஒரு வாழ்வியல் நெறி, அது மசூதியைக் கட்டுவதற்காக என்ற வழிபாட்டு முறை வேறு, மசூதியைக் கட்டுகிறபோது, அது ஒரு ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடமாக இருக்கக் கூடாது, இன்னொருவரின் வழிபாட்டு கூடமாக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டுகிறது[4],

இப்படி பெயிலில் வெளிவந்த ஆளைப் பாராட்டி, போற்றியிருப்பது, துல்லர் ஆதரவை மெய்ப்பிக்கிறது. இதையெல்லாம் உண்மை என்பது நம்பியுள்ளதும், திருமாவின் முகத்திரையைக் கிழிக்கிறது. ஏற்கெனவே கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பது நிரூபனம் ஆகிவிட்டது. அதனை வைத்து தான், நிலத்தையும் உச்சநீதி மன்ற கொடுத்து விட்டது. பிறகு நான் துலுக்கன் சொல்வதைத் தான் நம்புவேன் என்றால், அந்நிலையை என்னவென்பது?
அப்படிபட்ட இடத்தில் நாங்கள் மசூதியை கட்ட மாட்டோம், அதற்கு வாய்ப்பே இல்லை, அதுதான் எங்கள் மரபுஎங்கள் இஸ்லாம் காட்டுகிற வழி என்று சொன்னார்.”

தமிழகத்திலேயே நூற்றுக்கணக்கான மசூதிகளின் உட்புறம் கோவில்களாகத் தான் உள்ளது. இது கூட திருமாவுக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு,ம் துலுக்கர் இவரை மூளைச்சலவை செய்து விட்டார்களா அல்லது அடிமையாக்கி விட்டார்களா?

 

 Tiruma opposes Ram temple

தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும்! திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம்! சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது! பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும்? சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது!

© வேதபிரகாஷ்

09-12–2017

VCK can be considered as Islamic movement

[1] https://www.youtube.com/watch?v=zRtvN7mFiJk

[2] 2000 வருடங்களுக்கு முன்னர் வரலாறே இல்லை என்று சொல்லும் இந்த அறிவு ஜீவியை என்ன்னவென்று சொல்வது?

[3] பாவம் இங்கு சமண கோவில்களை ஏன் விட்டு விட்டார் என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு பௌத்தவெறி வந்து விட்டது போலும்!

[4] அப்படி வழிகாட்டித்தான், பாபர் அந்த ராமர் கோவிலை இடித்துள்ளான். மசூதி, கோவிலை இடுத்துக் கட்டப்பட்டது என்பதை நீதி மன்றமே ஒப்புக்கொண்யடாகி விட்டது.

திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

திசெம்பர் 9, 2017

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

Tiruma wanted Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமாவிற்கு எதிராக எழுந்த கண்டனங்கள்: இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தப் பேச்சு வருத்தமளிக்கும் விதத்தில் இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாலர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்[1]. அந்த அறிக்கையில், கோவில்களை இடிக்க வேண்டும் திருமாவளவனின் பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது. புத்த மதத்தை சார்ந்தவர்களே இப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியையும், மதத்தையும், வழிபாட்டையும் அரசியல் லாபத்திற்காக எந்தவொரு தலைவரும் கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். சிவனையும், பெருமாளையும் வழிபடுபவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இல்லாமல் இல்லை. வழிபாடு என்பது எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். எந்தவொரு உணர்ச்சி வேகத்திலும் சாதி, மதம் பற்றியோ, கடவுள் வழிபாடுகளை பற்றியோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை இவ்வளவு விழிப்புணர்வு அடைந்தப் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள்”.

Tiruma wanted all Hindu temples demolished-Polimer video

மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல: ஈஸ்வரன் தொடர்ந்தது: “ஒருவர் தன்னுடைய வழிபாட்டு முறைகளை பற்றி உயர்த்தி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் என்ற நிலை இருக்கும் போது மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. வாதத்திற்காக கூட இதுபோன்று மக்கள் அமைதியை குலைக்கின்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதைபோன்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேசுவதும், அதை எதிர்த்து வேறுசில தலைவர்கள் எதிர்கருத்து தெரிவிப்பதும் மக்களிடையே அமைதியின்மை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவது தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பயன் தராது. இன்றைய சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் இறங்குமுகமாக இருக்கின்ற தமிழகத்தை முன்னேற்றுகின்ற முயற்சிகளில் அனைத்து தலைவர்களும் இறங்க வேண்டும். முன்னேற்றம் தடைப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் மக்களின் கவனத்தை மதம், சாதி போன்ற விஷயங்களில் திசை திருப்புவது நாம் அமர்ந்திருக்கின்ற மரத்தின் கிளையை நாமே வெட்டி சாய்ப்பதற்கு சமமாகி விடும்”.

 Thiruma, frwnzied speech

ஆக்ரோஷமாக துல்லுகர் முன்ம்பு பேசி, பிறகு அமைதியாக பேட்டி கொடுத்த நிலை: இந்து சமூகத்தினரின் மனதை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் பேசவில்லை. குறிப்பாக இந்துகோவில்களை இடிப்போம் என்கிற வார்த்தையை, அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை. சமணர்களுக்கு, பௌத்தர்களுக்கும் எதிராக நடந்த யுத்தத்தில் சமணர்களின் கோவில்களும், பௌத்த விஹாரங்கள் இடிக்கப்பட்டன வரலாற்று உண்மை. அந்த வரலாற்று உண்மையை இதனுடன் பொருத்தி பேசினேன். ஆகவே பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று நியாயப்படுத்துவது உங்கள் தர்க்கம் எனில் அதற்கு ஈடாக, பௌத்த விஹாரங்கள் இருந்த இடங்களில் மீண்டும் பௌத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று சொல்லுவதும் சரியாக இருக்கும், நியாயமாக இருக்கும் என்று பொருள்படும் படி நான் பேசினேன்,” என்று விளக்கம் கொடுத்து பேசியபோது, முகம் சாதாரணமாக இருந்தது. மைக்கின் முன்பாக, நிறுத்தி நிதானமாக, பேசியது நன்றாகவே தெரிகிறது. இதனால், நிச்சயமாக இந்துக்கள் ஏமாற மட்டார்கள். முதலில், 1980களில் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இவர், 2000களிலிருந்து முஸ்லிம்கள் சார்பாக மாறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாமகவுடன் இருந்த கூட்டு முறிந்த பிறகு, அரசியலில் இவர் மற்றும் இவரது கட்சி முக்கியத்துவத்தை இழந்தது. ஆகவே, எவ்வாறு வைகோ உளறிக் கொண்டிருக்கிறாரோ,, அதே பாணியில், இவரும் இறங்கி விட்டார் போலும்!

 Tiruma wanted all Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமா ஏன் இவ்வாறு ஒன்றும் தெரியாத அப்பாவியாகி விட்டார்?: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன:

  1. இந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.
  2. துலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்கட படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.
  3. துலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.
  4. இன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.
  5. ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.
  6. ஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.
  7. இவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
  8. இன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.
  9. அளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
  10. சங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.

 

© வேதபிரகாஷ்

09-12–2017

Tiruma accusing MODI

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதா?- கொந்தளிக்கும் கொ..தே. ஈஸ்வரன், Posted By: Mohan Prabhaharan, Published: Friday, December 8, 2017, 18:47 [IST].

https://tamil.oneindia.com/news/tamilnadu/kmdk-leader-eswaran-says-vck-thirumavalan-speech-on-hindu-temples-304398.html

 

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

திசெம்பர் 6, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

Malikafur attack

பாண்டியர் துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இடம் கொடுத்தமுறையில் செயல்பட்டது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I [1268] கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் கூறுவதும், துலுக்கரின் அவைப்புலவர்கள் மற்றும் சுற்றிப்பார்க்க வந்தவர்ககளின் தென்னிந்திய படையெடுப்புக் கொள்ளை விவரங்களும் எதிரும்-புதிருமாக இருக்கின்றன. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசப் ஹொய்சள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான். ஆனால், கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். இதனால், சோழர்காலத்து பாதுகாப்பு கொண்ட கட்டுபாடு, கடற்படை, மற்ற அரசர்களின் நட்புறவு முதலியை பாதிக்கப் பட்டது என்று தெரிகிறது. பௌத்தர்களும் விரோதியானார்கள் எனும் போது, பாண்டியர் பெருமளவில் தென்னிந்தியாவின் கூட்டமைப்பை, கட்டுக்கோப்பை பாதித்தனர் என்றாகிறது. மேலும், துலுக்கரை தென்னிந்தியாவில் வர முடியாமல், ஹோய்சளர் யுக்திகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், அவர்களையும் வென்றது, அவர்களைச் செயலிழக்கச்செய்தது. அதாவது, துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வர எளிதாகியது.

Tamilnadu ports

கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது இந்து விரோதமானது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I ற்கு இரண்டு மகன்கள் சுந்தர பாண்டியன் [வேறொரு பெண்ணிற்கு / காமக்கிழத்திற்குப் பிறந்தவன்] மற்றும் வீர பாண்டியன் [அரசியின் மூலம் பிறந்தவன்] கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை ஆட்சி புரிந்தான். குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவன் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரேபியன் குறிப்பிட்டுள்ளதாக, ஜே.பி. ப்ரஷாந்த் மோரே குறிப்பிடுகிறார்[1].  வியாபாரம் நிமித்தமாக ஏஜென்ட் போல தந்ததை, அவ்விடங்களே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன போல எழுதி வைத்திருப்பது தெரிகிறது. எப்படியாகிலும், சோழர்கள் காலத்தில் முக்கியமாக இருந்த கடற்கரை பகுதிகளில் துலுக்கர் ஆதிக்கம் செல்லுதினார்கள், அதனால், அங்குள்ள கோவில்கள் இடிக்கப்பட்டன என்று தெரிகிறது. இப்பொழுதுள்ள மசூதி-தர்காக்களின் உட்புற சிற்பத் தூண்கள், கருவற்றை, மண்டபங்கள், குளங்கள் முதலியவை அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. வியாபாரத்திற்கு, முக்கியமாக குதிரை இறக்குமதி போன்றவற்றிற்கு ஏஜென்டுகள், தரகர்கள், துபாஷியாக இருந்தவர்கள், அவ்வாறு நெருக்கமாகினர் என்று தெரிகிறது. மேலும் படைகளிலும், துலுக்கர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

Vira-Sundara Pandyan - imaginary

சுந்தர பாண்டியன் அலாவுத்தீன் கில்ஜியிடம் உதவி கேட்டானா?: சகோதர போட்டி துவேசத்தில், துலுக்கரைப் போன்றே சதியில், துரோகத்தில், கொலைகளில் ஈடுபட்டது, அம்மண்ணில் இருந்த பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றிற்கே ஒவ்வாததாகும். இருப்பினும் சுந்தர பாண்டியன் தனது தந்தையை – மாற வர்மன் குலசேகர பாண்டியன் – 1310 / 1311ல் கொலை செய்தது திகைப்படையச் செய்தது. இக்கொலைக்குப் பின்னரும், தகியுத்தீன் தனது பதவியைத் தொடர்ந்தான் என்பதும் ஆச்சரியமாக உள்ளது. 1311ல் மாலிகாபூர் மதுரையை நோக்கி படையெடுத்து வந்து, துலுக்கப்படைகள் தாக்கியபோது, இந்த இரு பாண்டியர்களும் புறமுதுக்கிட்டு ஓடி ஒளிந்தனர். சுந்தர பாண்டியன், அலாவுத்தின் கில்ஜியிடம் தில்லிக்கே சென்று சரணடைந்தான், என்று சரித்திராசிரியர்கள் எழுதுகின்றனர். அப்படியென்றால், சகோதரனைக் காட்டிக் கொடுத்தவனே அவன் தான் என்றாகிறது. ஆனால், வீர பாண்டியன் உள்ளூர் ஆதரவினால் தப்பித்தான். மாலிக்காபூர் கோவிலை கொள்ளையெடித்து, இடித்து, எரித்தான். அதாவது அந்த காலகட்டத்தில் தான், துலுக்கர்களின் அழிப்பிற்குண்டான கோவில்களை அசுத்தமாக, மிலேச்சர்களினால் தாக்கப்பட்டது என்ற முறையில் பூஜை-புனஸ்காரம் விடுத்து, ஒதுக்கி வைத்தனர் என்று தெரிகிறது. பிறகு, பரிகாரம் போன்ற முறைகளினால், அவை மீட்டெடுக்கப் பட்டன. விஜய நகர காலத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் புதிப்பிக்கப் பட்டன.

Malikafur attack -tent

பாண்டியனின் துரோகத்தால், துலுக்கர் ஆதிக்கம் பெற்றது: சுந்தர பாண்டியனுக்கு ஆதரவாக துலுக்கப்படை ஒன்று ஆதரவாக நிறுத்தப் பட்டது. ஏனெனில், 1313ல் கேரளத்து ராஜா ரவி வர்மன், தென் பெண்ணாரைத் தாண்டி, பூந்தமல்லி மற்றும் நெல்லூரை பிடித்துக் கொண்டான் என்றுள்ளது. அதாவது பாண்டியரை வென்றான் என்றாகிறது. அதனால், குர்ஷூ கானை [இவனும் இந்துவாக இருந்து துலுக்கனாக மதமாற்றப்பட்டவன்] 1318ல் மலபாருக்கு அனுப்பியது, மறுபடியும், அதனை, துலுக்கர்களின் கட்டுக்குள் கொண்டு வர அனுப்பியிருக்க வேண்டும். அமீர் குர்ஷூ எழுதியவற்றை வைத்து தான், சரித்திராசிரியர்கள் இத்தகைய விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். வெறும் கலிமா சொல்ல வைத்தே, துலுக்கராக்கினர், அவர்கள் “பாதி துலுக்கர்” அதாவது “பாதி இந்துக்கள்” என்று அமீர் குர்ஷூ எழுதி வைத்தான். 1335ல் முகமது துக்ளக்கின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு துலுக்க ஆட்சி மதுரையில் ஏற்படுத்தப் பட்டது. துலுக்க ஆவணங்கள் பிரகடனப்படுத்திக் கொள்வது போல, அவர்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்ததா என்பது சந்தேகமே.

Malikafur attack and kill people

கொடியகுரூரதுலுக்க அரக்கர்களின் முடிவு அவ்வாறே அமைந்தது: 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், தங்கம், வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் தில்லிக்குச் சென்ற மாலிக் கபூருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அலாவுதீன் கில்ஜி பரிசாகக் கொண்டுவந்த பொருட்களை அனைவரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தி, ‘மாலிக் நைப்’ என்ற பட்டத்தை அனனுக்குக் கொடுத்தான். 1316-ல் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தான், அந்நிலையில், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டான். மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த சிறுவனை கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்தி, தானே டெல்லியை ஆளத் தொடங்கினான். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர், மாலிக் கபூர் பாதுகாவலர்களைக் வைத்தே, அவனை நள்ளிரவில் சுற்றி வளைத்து, கை வேறு கால் வேறாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறு கில்ஜி மற்றும் மாலிகாபூர் கொடிய-குரூர-துலுக்க அரக்கர்களின் முடிவு அமைந்தது. இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.

Kampanna saw the broken linga by Malikafur

மாலிக்காபூருக்குப் பிறகு தங்கி விட்ட துலுக்கரின் நிலை, திட்டம் முதலியன: மாலிகாபூர் 1311லேயே தில்லிக்குத் திரும்பி சென்று விட்டான். இருப்பினும், அவனுடன் வந்தவர்களில் சிலர் தங்கி விட்டனர்.  அவர்கள் தான் பகீர், சாமியார் போல திரிந்து தகவல்களை அறிந்து தில்லிக்கு அனுப்பி வைத்தவர்கள் எனலாம். ஜெசுவைட் என்கின்ற கத்தோலிக்க கிருத்துவ சாமியார்களும் இதே முறையைக் கையாண்டனர்[2]. முகமது துக்ளக் கி.பி.1324ல், அதே ஆசையுடன் மதுரைக்கு படைகளை அனுப்பி வைத்தான். பாண்டியர்களை தெற்காகத் துரத்திவிட்டதால், 1334 முதல் 1378 வரை மதுரையை சுல்தான்கள் பெயரால் பட்டாணியர்கள் எட்டுப்பேர்கள் மதுரையை ஆண்டு வந்து இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் உடெளசி சலாதீன், குப்தீன், கியாஸ் உத்தீன், நாசீர் உத்தின், அடிலபெருதீன், முபராக்சா, அல்லாவுதீன், சிக்கந்தர். இவர்களடைய கொடுங்கோல் ஆட்சி என்றும் வரலாற்று ஆசிரியர் – 60,000 பட்டாணியர்கள் மதுரை நகர்க்குள் ஆயுதம் கையில் வைத்துக் கொண்டு தங்கி இருந்து தமிழ்நாட்டில் கொள்கையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் மதுரை மற்றும் சுற்றியுள்ள நகரங்கள், பகுதிகளில், அதிகமான அளவில், சேதங்கள் விளைந்தன.

© வேதபிரகாஷ்

06-12-2017

Malikafur attack -atrocities- imaginary

[1] J. B. Prashant More, Muslim Identity, Print Culture, and the Dravidian Factor in Tamil Nadu, Orient Longman, New Delhi, 2004, pp.9-12.

[2] ஜெசுவைட் பாதிரிகள் தங்களது கடிதங்கள், குறிப்புகள் முதலியவற்றில் இதைப் பற்றி எழுதியுள்ளனர். மதம் தவிர, பொருளாதாரம், பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றைப் பற்றி விவரமாக எழுதி அனுப்ப்பியுள்ளனர்.