Archive for the ‘மினாரெட்’ category

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்-1

மே 29, 2010

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்

அல்லாவைப் பற்றி பிரமாதமாக பேசுகிறார்கள் விளக்கம் கொடுக்கிறார்கள், ஆனால் அல்லாவை நம்புகிறவர்களையே, முஸ்லீம்கள் எதிர்ப்பது, தாக்குவது, கொன்றுக் குவிப்பதை முஸ்லீம்கள் விளக்குவதில்லை.

சுன்னிகள் ஷியாக்களை, போர்ஹாக்களை, அஹமதியாக்களை அவ்வாறு முஸ்லீம்கள் எதிர்ப்பது, தாக்குவது, கொன்றுக் குவிப்பதை – அந்த சூட்சுமத்தை – முஸ்லீம்கள் விளக்குவதில்லை.

முஸ்லீம்களுக்குள்ளேயே நிகழும் இந்த புனித ஜிஹாதின் மகத்துவம் என்ன என்று மற்றாவர்களுக்குப் புரியவைப்பதில்லை.

இஸ்லாமாபாத் 28-05-2010: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து சுமார் 2 ஆயிரம் பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். துப்பாக்கி சூடும் நடந்தது. பல இடங்களில் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்ததால் பலர் பயங்கரவாதிகளிடம் சிக்கினர். லாகூரில் உள்ள இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியபடி நுழைந்தனர். துப்பாக்கியால் சுட்டப்படி வந்தனர். இந்நேரத்தில் என்னசெய்வதென்று அறியாத மசூதியிலேயே பதறியபடி நின்றனர். இந்நேரத்தில் உள்ளே நுழைந்த சுமார் 2 ஆயிரம் பேர் வரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இது வரை 20 பேர் இறந்து விட்டதாக தெரிகிறது. அதிரடி மற்றும் ராணுவத்தினர் மசூதி முன்பாக குவிந்துள்ளனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என திக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மசூதியில் இருப்பவர்களை மீட்க ராணுவம் போராடி வருகின்றனர். இன்னும் துப்பாக்கி சூடு நீடித்து வருகிறது.

பாகிஸ்தான் மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 80 பேர் பலி
First Published : 29 May 2010 12:00:00 AM IST
Last Updated :
பயங்கரவாதிகள் சுட்டதில் காயமடைந்தவரைக் காப்பாற்ற தூக்கி வரும் பாகிஸ்தானிய கமாண்டோ படை வீரர்.

80 பேர் கொல்லப்பட்டனர், 100 காயம்: லாகூர், மே 28: பாகிஸ்தானிலுள்ள 2 மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 80 பேர் பலியாயினர்; 100 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் லாகூரிலுள்ள மாடல் டவுன் மசூதி மற்றும் கார்ஹி சாஹு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இரு மசூதிகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.

ஜிஹாதிகள் தொழுகை புரியும் முஸ்லீம்களைத் தாக்குதல்: பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் இரு மசூதிகளுக்குள்ளும் பயங்கரவாதிகள் புகுந்தனர். மசூதிகளின் வாயிலில் நின்றுகொண்டிருந்த போலீஸார், பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், தங்களிடமிருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். மேலும் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு மசூதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்த அறைகளுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டனர். ஆனால் சிலரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

முஸ்லீம் போலீஸாரே ஜிஹாதிகளுடம் சண்டையிடுவது: சம்பவம் அறிந்ததும் லாகூர் போலீஸôரும், பாகிஸ்தான் துணை ராணுவப் படையினரும் மசூதிகளை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை பிற்பகல் 4 மணிக்கு முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களையும் போலீஸார் மீட்டனர். சுமார் 8 முதல் 10 பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஜிஹாதிகள் கொல்லப் படுவது, தொழுகை புரிந்த முஸ்லீம்களும் கொல்லப்படுவது: இதில் 3 பயங்கரவாதிகள் கார்ஹி சாஹு மசூதிக்கு வந்தபோது தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஏராளமானோர் பலியாயினர். அந்த பயங்கரவாதிகளின் தலைகள், உடல்கள் சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மசூதிகளுக்குள் நுழைந்த மற்ற பயங்கரவாதிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் போலீஸ் தாக்குதலில் இறந்தார்களா அல்லது தப்பியோடி விட்டார்களா என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 80 பேர் பலியாயினர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் இறந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், லாகூரைச் சேர்ந்த டி.வி. சேனலில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் அடங்குவர்.

தற்கொலைப் படையினர்: மசூதிகளுக்குள் புகுந்த அனைவரும் தெஹ்ரிக்-இ-தலிபான் எனப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவருமே உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு மசூதியில் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இப்படி இறக்கும் முஸ்லீம்களில் யார் அல்லாவை மகிழ்வித்ததால் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறர்கள்

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்-2

மே 28, 2010

இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்

பாகிஸ்தான் மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 80 பேர் பலி

First Published : 29 May 2010 12:00:00 AM IST
பயங்கரவாதிகள் சுட்டதில் காயமடைந்தவரைக் காப்பாற்ற தூக்கி வரும் பாகிஸ்தானிய கமாண்டோ படை வீரர்.

அஹமதியா முஸ்லீம்களை தாக்கும் இந்த ஜிஹாதிகள் யார்? அஹமதியா முஸ்லீம்களை தாக்கும் இந்த ஜிஹாதிகள் யார் என்று அடையாளங்காண முஸ்லீம்களே முயன்று வருகின்றனராம். அஹமத்தியாக்கள் மசூதிகளில் தொழுகையில் இருக்கும் அந்நாளில், யுயைம்-இ-தக்பீர் – பாகிஸ்தானின் தன்னிரைவு நாள் (Youm-i-Takbeer or Pakistan’s Self Reliance Day) கொண்டாடப்பட்டதாம். மே.28,1998ல் பாகிஸ்தான் அணுசோதனை நடத்திய தினமாக அது கொண்டாடப் படுகிறது. ஆனால், அது “இச்லாமியத் தன்னிரைவு” நாள் இல்லை என்று “காஃபிர்கள்” மீது ஜிஹாத் தொடுக்கப் பட்டுள்ளது அறிந்து, “முஸ்லீம்கள்” நடுங்கி சாகிறார்களாம். வெள்ளிக் கிழமை என்றாலே குண்டு வெடிக்குமோ, தொழுகையில் சுடுவார்களோ, மசூதிகளில் பிணங்கள் விழுமோ என்று அஞ்சுகிறார்களாம்.

கராச்சி திட்டத்தின் தொடர்ச்சியா? தெரிக்-இ-தாலிபான் (Tehrek-e-Taliban) மற்றும் அல்-குவைதா அல்-ஜிஹாத் (Al-Qaeda Al-Jihad) என்ற இரண்டு தீவிரவாதக் குழுக்களின் மீது சந்தேகம் இருந்தாலும், தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் பங்கு தெரியவருகின்றது. தாக்குதல் நடத்திவர்கள் எல்லாமே 15 முதல் 18 வரை வயதுடையவர்களாக இருப்பதாகவும், பிடிபட்ட ஒருவன் தான் கராச்சியில் ஒரு மதரஸாவில் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளான். ஆகவே, மறுபடியும் பாகிஸ்தானிய ஆதரவு வெளிப்படுகிறது, அதாவது கராச்சியிலேயே, அவ்வாறு ஒரு மதரஸா நடத்தி, தீவிரவாத பயிற்சி பாகிஸ்தானிய உளவாளி, ராணுவம் மற்ற பிரிவுகளுக்குத் தெரியாமல், அளிக்கமுடியாது. ஏனெனில், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஐ.எஸ்.ஐ ஏற்கெனெவே அந்த வேலையை செய்து வருகிறது. ஆகவே, இது “கராச்சி திட்டத்தின்” ஒரு பகுதியாகவும் இருக்கலாம். சமீபத்தில், “காஃபிர்களைத் தாக்கும் திட்டம்” ஒன்று வடிவமைத்து, செயல்படுத்தப் படுவதாகத் தெரிகிறது.

முஸ்லீம்-அல்லாதவர்களைத் தாக்குவது ஏன்?: இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும், மத ரீதியில் மூளைச்சலவைச் செய்யப் பட்ட ஒரு முஸ்லீம், ஒரு காஃபிரைக் கொல் என்றால், அது அல்லாவின் ஆணை என்றே ஏற்றுக் கொண்டு கொன்றுவிடுவான். சொர்க்கத்தின் வாசல்கள் அவனுக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன என்ற நினைவுகளில்தான் அவன் இருப்பான். அதுபோல, அஹமதியாக்கள் “காஃபிர்கள்” என்று அறிவித்தவுடன், அதாவது, அப்படியொரு ஃபத்வா – மத ரீதியிலான ஆணையிட்டவுடந்தான், இந்த ஜிஹாதிகள்-புனித போராளிகள் புறப்பட்டு காஃபிர்களைக் கொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரைக்கும் முஸ்லீம்-அல்லாதவர்கள் என்றதில் இப்படி முஸ்லீம்களே வரும்போது, இதர அல்-கிதாபியர்களையோ அது இல்லாத காஃபிர்களின் நிலைப்பற்றி சொல்லவே வேண்டாம். அல்-கிதாபியர்கள் என்பவர்கள் “வெளிப்படுத்தப் பட்ட புடததகங்களை” உடையவர்கள், இதில் யூதர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள் தாம் அடங்குவர். இந்த மூன்று கோஷ்டிகள்தாம் உலகத்தில் பல மத கலவரங்களுக்கு, சண்டைகளுக்கு, போர்களுக்கு, உலக யுத்தங்களுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளன.

அஹமதியாக்கள் தொடர்ச்சியாகத் தாக்கப் பட்டு வருகிறர்கள்: மேலும், கைதியான் என்ற இடத்தைச் சேர்ந்த அஹமதியா முஸ்லீம்களை பாகிஸ்தானிய சுன்னி முஸ்லீம்கள், “முஸ்லீம்கள்” என்று கருதுவதில்லை. அவர்கள் 1940களிலிருந்தே தாக்கப் பட்டு வருகிறார்கள். அவர்களது மசூதிகள் இடிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், இப்பொழுது ஜிஹாதி-தாலிபான் வலைக்குள் இந்த முஸ்லீம்கள் உட்பட்டிருப்பது, ஷியாக்களுக்குக் குறிப்பாக கவலையளித்துள்ளது. ஏனெனில், சுன்னிகள், ஷியாக்ககளைத் தாக்குவது என்பது சகஜமாக இருக்கிறது. அஹமதிய முஸ்லீம்கள் “நபிமார்கள்” என்றமுறையில், ராமன், கிருஷ்ணன், சிவன், புத்தன், என்று அனைவரையும் ஏற்றுக் கொள்வர். இந்த விஷயத்தில் சில முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வதுண்டு. அதே மாதிரி, நபிக்குப் பின்னும் சிலரை நபிக்களாகக் கருதுவர். இங்குதான் பிரச்சினை வருகிறது. ஏனெனில், இஸ்லாத்திற்கு முன்பு நபிகள் இருந்தால், அவர்களை அல்லாத்தான் அனுப்பி வைத்திருக்க முடியும், ஆனால், இஸ்லாத்திற்கு பிறகு, அல்லாவிற்கு அந்த வேலையில்லை, அதாவது, முஹம்மதுவோடு அந்த “ஸ்தானம்” பூர்த்தியாகிறது. ஆகையால் தான், முஹமத்துவிற்கு பின் நபி என்ற கோட்பாட்டை உருவாக்கும் அத்தகைய முஸ்லீம்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

அல்லாவைத்தவிர கடவுள் இல்லை, முஹம்மதுதான் நபி: ஒப்புக்கொள்ளவேண்டிய கடவுள் ஒருவனாக / ஒன்றாக இருக்கவேண்டும் என்றாலும், இரண்டு நம்பிக்கைகள் இருக்கவேண்டும். இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளது அல்லது பிரிக்கமுடியாதது.

இதன் ஒரே அர்த்தம் –

  1. அல்லாதான் கடவுள்”,
  2. அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”
  3. அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை”
  4. அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது”,
  5. அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது, இருக்கவும் முடியாது”,

இப்படி விரியும், விளகங்கள், அதற்கேற்ற செயல்கள், செயாபாடுகள், திட்டங்கள் வளறும். அதே மாதிரி, இரண்டாவது சரத்திற்கு / விதிக்கு வரும் போது –

  1. முஹம்மது தான் நபி”,
  2. முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை”,
  3. முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை, இல்லவே இல்லை”,
  4. முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது”,

இப்படி விரியும், விளகங்கள், அதற்கேற்ற செயல்கள், செயாபாடுகள், திட்டங்கள் வளறும்.

இதற்குத் துளிகூட வேறுவிதமாக விளக்கம் அளித்தாலோ, சித்தாந்தத்தை மனத்தில் கொண்டாலோ, மற்ற மதங்களுடன் சமரசம் போன்று “எல்லா மதங்களும் ஒன்று”, “எல்லா கடவுளர்களும் ஒன்று” என்ற ரீதியில் பேசினாலோ அவ்வளவேத்தான். ஆக, இப்படித்தான் பல “இஸ்லாம்கள்” உருவாகி வருகின்றன. “தாலிபான் இஸ்லாம்”, “ஜிஹாதி இஸ்லாம்”, முஜாஹித்தீன் இஸ்லாம்”, “அல்-உம்மா இஸ்லாம்”, “அல்-குவைதா இஸ்லாம்” என பல இஸ்லாம்கள் உருவாகி விட்டன. எல்லாமே அல்லாவைத்தான் நம்புகின்றன; குரானைப் படிக்கின்றன; அல்லது ஏற்றுக்கொள்கின்றன; ஸரீயத்தை பின்பற்றுகின்றோம் என்கின்றன; ஆனால், ஒரு இஸ்லாம் மற்ற இஸ்லாம் நம்பிக்கையாளர்களை, “நம்பிக்கையில்லாதவர்கள்” என்று அறிவித்துவிட்டால், அவ்வளவுதான், ஜிஹாத் தான், இனி அந்த “நம்பிக்கையில்லாத்தனம்” ஒழிக்கப்படும் வரை, அழிக்கப்படும்வரை, துடைத்து மறைக்கப்படும் வரை, முழுவதுமாக துடைத்தொழிக்குப்படும் வரை, ஜிஹாத் தொடரும், தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

இஸ்லாத்திற்குள் உள்ள ஜிஹாத்: இந்த இஸ்லாத்தில் உள்ள ஜிஹாத் அல்லது, இஸ்லாத்தை பல இச்லாம்களக மற்றும்ம் ஜிஹாதை, ஒவ்வொரு முஸ்லீமும் புரிந்து, அறிந்ர்து, தெரிந்து நடந்து கொள்ளவில்லையென்றால், இஸ்லாம் இஸ்லாத்தை மட்டுமல்ல, முளிமை மட்டுமல்ல, அல்லாவை நம்புகின்றவனை மட்டுமல்ல, முஹம்மதுவை நபியாக ஏற்றுக்கொண்டவனை மட்டுமல்ல, “காஃபிர்” என்று அறிவிக்கப்பட்டால், ஜிஹாத் அவர்கள் மீது பாயும். வீரர்கள் அல்லாவின் ஆணையை செய்து முடிப்பார்கள்.

வேதபிரகாஷ்

29-05-2010

முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!

மே 16, 2010

முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!

Maulanareleasedstory216.jpg

தாடி வைத்த ஆணும், அரபு நாட்டிலிருந்து வந்த பெண்ணும்: நூருல் ஹூடா என்ற தியோபந்த் இஸ்லாமிய பண்டிதர் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள விமானத்தில் உட்கார்ந்து கொண்டராம். செல்-தொலைப்பேசியில் யாருடனோ பேசினாராம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவருக்கு, இத்தனைக்கும் அவர் எமிரைட்டிலிருந்து வந்துள்ள ஒரு பயணி,  அதுவும் பெண், அவர் பேசியதிலிருந்து சில வார்த்தைகளும் [ஜிஹாத், முஜாஹித்தீன், மதரஸா…………], அவரது உருவத்தையும் கண்டு பயந்து போய், விமானத்தில் உள்ளவர்களிடம் ரகசியமாக விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்து விட்டாராம்.

மௌலானா பெண்ணின் பக்கத்தில் உட்காரலாமா? பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றுதானே இந்த மௌலானாக்கள் ஃபத்வா விடுகிறார்கள்? பிறகு, எப்படி பெண்கள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டார்? அத்தகைய ஆசாரம் கடைபிடிக்கும் போது, வேறு இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கலாமே? உட்கார்ந்துவிட்டு, ஏன் ஜிஹாதைப் பற்றியெல்லாம் செல் போனில் (suspicious cell phone call) பேச வேண்டும்? அதுவும் அந்த அமீரகப் பெண்ணிற்கே சந்தேகம் வரும் வகையில், அதுவும், இந்த ஆள் நிச்சயமாக ஒரு தீவிரவாதியாக இருக்கக் கூடிய நிலையில் உள்ளார் (potential terrorist) என்ற அளவில், ஏன் நினைக்க வைக்க வேண்டும்?

A fellow passenger on the flight felt Huda, who is bearded and was wearing a skull cap was a potential terrorist after he made, what she felt was a suspicious cell phone call.

போலீஸாரிடம் சரியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? போலீஸார் விசாரித்த போதும் அவர் அவ்வாறே ஏதோ கூறியதால், சந்தேகப் பட்டு, விசாரித்து, வழக்குப் போட்டு திஹார் ஜெயிலில் அடைத்து விட்டார்களாம். ஜாமீனில் வெளியில் விட முடியாதபடி வழக்கு பதிவும் செய்து விட்டார்களாம்.

Maulana-creates-potential-terrorist
Maulana-creates-potential-terrorist

இது ஏதோ செக்யுலார் பிரச்சினை என்று நினைத்தால், இப்பொழுது இதை மதரீதியிலான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிடிபட்ட மௌலானாவே சொல்வது,

தாடி வைத்துக் கொண்டு, முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டாலே சந்தேகம் படுகிறார்கள். நான் மதரஸாவில் பணி புரிகிறேன், மதரஸா வைத்துள்ளேன்……………..என்றால் போச்சு……………….உடனே தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி விடுகிறார்கள்“!

உடனே ஊடகக்காரர்கள் சொல்லிவைத்தால் போல, ஒரு ஓய்வு பெற்ற ஒரு துணைவேந்தரைப் பிடித்துக் கொண்டு வந்து, அவரது கருத்தைக் கேட்கிறர்கள். ரூப்ரேகா வர்மா என்றவர் சொல்கிறார். ஏன் ஸபானா ஆஸ்மியிடமோ, அந்த செதல்வாதிடமோ கேட்வில்லை என்று தெரியவில்லை:

மத-உணர்வுகள் மற்றும் “இப்படித்தான் இருப்பார்கள்” (stereotypes) என்ற எண்ணமும் மனங்களில் பதிந்திருக்கும்போது, அத்தகைய சின்னங்களுடன் வரும் நபரைப் பார்த்தால், அவ்வாறே எண்ணத் தோன்றுவது (தோன்றாதது) அந்த நபருடைய எதிர்கால அதிருஷ்டத்தைப் பொறுத்துதான் உள்ளது. ஒருவேளை நீங்கள் கைது செய்யப் படலாம், அவ்வாறே நடத்தப் படலாம்” என்றெல்லாம் விளக்கமும் அளித்தார்!

கம்யூனிஸ்ட்காரர்களும் சேர்ந்து வக்காலத்து வாங்க வந்து விட்டார்கள். “இந்த கைதானது சட்டங்களை அமூல் படுத்தும் அதிகார வர்க்கத்தினரிடம், சிறுபான்மையினற்கு மீதான தப்பெண்ணம் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது“, இன்று விளக்கம் அளித்துள்ளனர்!

குல்லா போட்டவர்களை எல்லாம் சந்தேகப் பட்டதில்லையே? சரிதான், ஆனால், ஏன் அந்த ‘அல்லா-குல்லா” போட்டவர்களையெல்லாம், தீவிரவாதி என்று கருத வேண்டும்? இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தகைய குல்லா போட்டுக் கொண்டு தான் கஞ்சி குடித்து வருகின்றனர். அப்பொழுது எந்த பெண்ணும் சந்தேகப் பட்டதாகத் தெரியவில்லையே?ஏன் அவர்களது மனைவிமார்களே வேறுவிதமாக நினைத்ததில்லையே? இந்த தடவை அன்பழனுக்காக, அந்த கிருத்துவ பாதிரி, விஷேஷமாக ஒரு குல்லா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாரே, அதைத்தானே “இனமான பேராசிசியர்” போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து, ஆனால் போட்டொ எடுக்கும் போது எடுத்துவிட்டார் [அப்பொழுது பயந்து விட்டார் போலும்]

குல்லா போட்ட கருணாநிதியின் படங்கள் மறையும் ரகசியம் இதுதானோ: சாதாரணமாக, குல்லா போட்ட அரசியல்வாதிகளின் படங்கள், இணைதளங்களினின்று எடுத்துவிடலாம், ஆனால், கருணாநிதி குல்லா போட்ட படங்கள் எல்லாம் மறைந்து விட்டன? இதன் ரகசியம் என்ன என்று புரியவில்லை! உண்மையில் கருணநிதியின் “குல்லா போட்ட” படங்கள்தான் நிறைய இருந்தன. ஆனால் இன்று ஒன்றுகூட கிடைப்பதில்லை.

குல்லா போட்டு கஞ்சி குடித்தால் பிரச்சினை இல்லை, ஜிஹாத் பேசினால் தான் பிரச்சினை:  ஏனெனில், குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்து மதத்தைப் பற்றி அவதூறு பேசி சென்று விடுவதால், முஸ்லீம்களுக்கு பிரச்சினையே இல்லை போலும், ஊடகக் காரர்களுக்கும் செமத்தியான விருந்துதான், ஆகையால், அவர்களும் இதுவரைக் கண்டு கொள்ளவில்லை போலும். அப்பொழுது அந்த “ஸ்ட்ரியோ-டைப்” வசனங்கள் எல்லாம் வரவில்லை, எந்த துணைவேந்தரும் வந்து இத்தகைய விளக்கம் கொடுக்கவில்லை!  ஆகவே, இங்கே அந்த மௌலானா, ஜிஹாத் பேசியதால் தான் அந்த பிரச்சினையே வந்தது. அந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எல்லோரும் சிதம்பரங்கள் அல்ல, ஜிஹாதிற்கு விளங்கங்கள் பெற்று கருத்தை மாற்றிக் கொள்ள: முன்பு முஸ்லீம்கள் மிரட்டியவுடன், உள்துறை அமைச்சு-சிதம்பரம் பயந்து போய், ஓஹோ அப்படியா, ஜிஹாதிற்கு, அப்படியொரு விளாக்கம் உள்ளதா, எனக்க்குத் தெரியவில்லையே, அதையும் தெரிந்து கொள்கிறேன் என்றது, இங்கு நினைவு படுத்துப் பார்க்க வேண்டும். அரபு நாட்டிலிருந்து வரும் பெண்ணிற்கு ஜிஹாத் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது, ஆனால் சிதம்பரத்திற்குத் தெரியவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸம், இங்குதான் அந்த ஜிஹாதி-தீவிரவாதம் வளர்க்கப் படுகிறது.

மசூதியின் மினாரெட் விழுந்து மொரோக்கோவில் 41 பேர் சாவு!

பிப்ரவரி 20, 2010

மசூதியின் மினாரெட் விழுந்து மொரோக்கோவில் 41 பேர் சாவு!

20 February 2010 in News

http://english.aljazeera.net/news/middleeast/2010/02/2010219211348139645.html

morocco.minaret.afp

தொழுகை செய்து கொண்டிருக்கொம்போதே மினாரெட் உடைந்து விழுந்தது: கெய்ரோ ஒரு இஸ்லாமிய நாடு அதன் தலைநகர்  ரபத்: வெள்ளிக்கிழமை  19-02-2010 அன்று   மொரோக்கோவில் உள்ள ஒரு பழைய லல்லா னெனாடா (Lalla Khenata) மசூதியின் மினாரெட் என்ற உச்சிப்பகுதி திடீரென்று உடைந்து விழுந்து நொறுங்கியதில் 41 பேர் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.  தொழுகை செய்து கொண்டிருக்கும்போதே அந்நிகழ்சி நடந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

Mosque-மினெரெட்-collapsed-Morocco

Mosque-மினெரெட்-collapsed-Morocco

பயங்கரமான நிகழ்சி, பார்த்தவர்கள் சத்தம் கேட்டு பீதியோடு ஓடினர்: தலைநகர் ரபத்திலிருந்து 90 மைல் தொலைவிலிருந்து மெகன்ஸ் என்ற நகரித்திலிருந்து வந்த இப்ராஹிம் கூறுவதாவது, “இடிந்துவிழுகின்ற சத்தம் கேட்டது. பயந்து நாங்கள் ஓட ஆரம்பித்தோம். அந்த கோபுரம் கீழே விழ ஆரம்பித்தது. அதைப் பார்க்கும்போது பீதியாக இருந்தது”, என்றான் [“We just heard a cracking sound and I began to run away when the tower began to fall. It was so scary,”]. “எப்படி நடந்தது என்பது எனக்குத் தெரியாது, இருப்பினும் ஏதோ எங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் இழந்துவிட்டோம் என்பது மட்டும் புரிகிறது. நாங்கல் மிகவும் வருத்தமாக உள்ளோம்”.  அரசாங்க செய்தி பிரிவு அறிப்பதாவது, “நூற்றுக்கணக்கானவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வந்திருந்தபோது இந்த நிகழ்சி ஏற்பட்டது. சுமார் 75 பேர் காயமடைந்தார்கள்.  அதில் 17 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  இடிபாடுகள் நகற்றப்படுகின்றன.  அதில் உயிருடன் அகப்பட்டுள்ளவர் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறார்கள்”.

உள்பகுதியிலும்-சேதம்-மொரோக்கோ-மசூதி

உள்பகுதியிலும்-சேதம்-மொரோக்கோ-மசூதி

மினாரெட் உடைந்ததற்கான காரணம்: மக்கள் அதிக அளவில் மழை பெய்தது தான் மிக்னாரெட் உடைந்ததற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.  பொழைத்தவர்களை மக்கள் பாதுகாப்பாக மசூதியிலிருந்து வெளியே எடுத்துச் சென்றனர். அந்நாட்டு அரசன் மொஹம்மது VI அந்த 400 வருடகால மசூதி மறுபடியும் கட்டப்படும் என அறிவித்தான். “இது மிகவும் பயங்கரமான நிகழ்சிதான், ஆகையால் இதை மறக்கமுடியாது. இருப்பினும் இனிமேல் அரசாங்கம் மக்களுடைய பாதுகாப்பு குறித்து கவனம் செல்லுத்தும் என்று நம்புகிறோம்”, என்ரு மக்கள் சொல்கிறார்கள்!

மசூதி-மினாரெட்-இடிபாடுகள்-மொரோக்கோ

மசூதி-மினாரெட்-இடிபாடுகள்-மொரோக்கோ

பழைய கட்டிடங்கள், வழிபாட்டுத் தளங்கள்: எச்சரிக்கை தேவை: இனி உலகமெங்கும் நம்பிக்கையாளர்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய முக்கியமானது -பழைய கட்டிடங்கள், வழிபாட்டுத் தளங்கள் என்றால் எச்சரிக்கை தேவை. முந்நூறு-ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றால், அதிலும், இப்படி மழையில் நன்றாக நனைந்திருக்கும் நிலையில் என்றால் அவை விழக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவே, அங்கு வழிபாடு செய்யப் போகும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இத்தகைய மினாரெட், கூம்பு, முதலிய கட்டிட-அமைப்புகளின் கீழ் மக்கள் கூடுவது தவிர்க்கப் படவேண்டும். தொலைவிலிருந்தே வழிபடுவது நல்லதுதான்.

ஆண்டவனுடைய எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம்: இத்தகைய நிகழ்சிகள் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். நாளுக்கு நாள் நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையின் பெயரிலேயே மற்ற நம்பிக்கையாளர்களை “நம்பிக்கையற்றவர்கள்” என்று குறிப்பிட்டு “நம்பிக்கையோடு” துன்புறுத்துகிறார்கள்; கொல்கிறார்கள்; குண்டு வெடித்து மனித உடல்களை சிதறவைக்கிறார்கள்;  ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்; உடல் உறுப்புகளை கொய்கிறார்கள் அல்லது குண்டால் சிதற அடைக்கிறர்கள்;……………………….இதெல்லாம், இப்படியான இயர்கை நிகழ்சிகள் அல்ல. மனிதன் தெரிந்தே செய்யும் குற்றம் ஆகும்.