Archive for the ‘மஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா’ category

மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!

செப்ரெம்பர் 18, 2010

மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!

மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி[1]: கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸின் ஜாமீன் மனுவை, மதுரை சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்மதானி. பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இக்கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸ். இவர், மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பெறப்பட்டதாக போலி “டிடி’ தயாரித்து, மதுரை வடக்குமாசிவீதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யினர் 1994ல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல்அஜீஸை, பெங்களூருவில் கடந்த செப்.,3ம் தேதி சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஜெகநாதன் உத்தரவுப்படி, அப்துல்அஜீஸ் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். சி.பி.ஐ., வக்கீல் ரோசாரியா சுந்தர்ராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணை நடத்திய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

ரூ. 95 லட்சம் வங்கி மோசடியில் மதானி உறவினர்: மதுரையில் உள்ள மகாராஷ்ட்டிரா பாங்கியில் கடந்த 1994-ம் ஆண்டு ரூ. 94 லட்சத்து 85 ஆயிரம் செக் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக மதானி யின் உறவினரான அப்துல்அஜீஸ், மதுரை விளக்குத்தூண் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மேலும் சச்சின்சிராஜ்கிலானி, பாலசுப்பிரமணி முத்து கிருஷ்ணன், ரானாமகாதேவ் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அப்துல் அஜிஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடப் பட்டனர். இந்த மோசடி சம்பந்தமான வழக்கு மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஜாமீனில் சென்றவர்கள் அப்துல்அஜீசை தவிர மற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக அப்துல்அஜீஸ் இருப்பதால் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப் பட்டது. இதையொட்டி அவரை சி.பி.ஐ. போலீசார் தேடி வந்தனர்.

மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு[2]: இந்த நிலையில் கர்நாடக போலீசார் மதானியை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்தபோது அவருக்கு ஜாமீன் வாங்க அப்துல்அஜீஸ் பெங்களூர் சென்றிருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளி என தெரிந்த கர்நாடக போலீசார் அவரை கைது செய்து தமிழ்நாடு சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை கொண்டு வரப்பட்ட அப்துல்அஜீசை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஜெகநாதன் வீட்டிற்கு நேற்று இரவு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அவரை 16-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மதானியின் உறவினர் அப்துல்அஜீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை 2 மணி அளவில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.


[1] தினமலர், மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி, செப்டம்பர் 18, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87124

[2] மாலைச்சுடர், மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

ரூ. 95 லட்சம் மோசடியில் கைதான மதானி உறவினர், மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு , http://www.maalaimalar.com/2010/09/05173505/95-lakhs-cheating-madhani-caus.html

மதானிக்கு நஸீர் முதலியோரைத் தெரியுமாம், ஆனால் அவர்கள் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டிருப்பது தெரியாதாம்!

ஓகஸ்ட் 31, 2010

மதானிக்கு நஸீர் முதலியோரைத் தெரியுமாம், ஆனால் அவர்கள் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டிருப்பது தெரியாதாம்!

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் இதே மாதிரியான வாதத்தில் தான், இவன் விடுதலை செய்யப்பட்டான். இறந்த மக்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

அப்பொழுது வாதிட்டதாவது, பெங்களூரில் இருந்துதான், வெடிப்பொருட்கள் வாங்கப்பட்டன. அதற்கான ரசீது / ஆவணங்கள் எல்லாம் உள்ளன. ஆனால், அந்த குண்டுகளை கோயம்புத்தூரில் வைத்து, அந்த குண்டுகள் அங்கு வெடித்து, அந்த வெடிப்பில் தான், மக்கள் இறந்தனர் என்பதர்கான ஆதாரங்கள் இல்லையாம்!

‘Madani admits to links with accused, says no idea of plot’

http://www.indianexpress.com/news/madani-admits-to-links-with-accused-says-no-idea-of-plot/674656/0

Kerala politician and leader of the People’s Democratic Party Abdul Naser Madani arrested by the Bangalore police in connection with the July 25, 2008 serial blasts in Bangalore, has reportedly admitted to being in constant touch, both before and after the blasts, with 12 of the 31 men named in the chargesheet. While he accepted, during the course of his interrogation, that he was in touch with them, he denied having any inkling of their involvement in the blasts, sources said. Madani had earlier denied knowing the men involved in the blasts, despite several of them, including prime-accused T Nasir, implicating him in the case.

Madani, who was arrested on August 17 in Kerala, was in police custody till August 26 and was confronted with various sets of evidence gathered by the Bangalore police during the course of investigations. He was also brought face to face with the accused.

Sources said Madani was presented with the telephone call details running to over a dozen sheets for three mobile phones — 9349955085, 9349955082 and 9846838833 — he was using between 2008 and 2009. The call details showed that Madani was in regular touch with T Nasir on several phone numbers , including 9746186452 used by Nasir just prior and after the Bangalore blasts. He was also in touch among others with Abdul Sattar alias E T Zainuddin on 9246547313, with Sarfaraz Nawaz on 9745784882, with E T Sarafuddin, the alleged creator of the timers used in the bombs, on 9961324493, with Abdul Jabbar, who was among five Kerala men who made a futile attempt to go to Pakistan for terror training after the blasts, on 9846286460.

Madani subsequently accepted that he knew all the men except Sarfaraz Nawaz, who was based in Dubai and Muscat and who liaisoned for the group with the Lashkar-e-Toiba, sources said.

Madani was also brought to face to face with T Nasir, a follower of Madani for over 15 years, who had first implicated the Kerala politician in the blasts.

Nasir’s statement says, “When we informed Madani about the blasts he said he would support us in any way we wanted” .

According to sources, Nasir stuck by his statement despite Madani’s efforts to deny it.

Sources said that Madani accepted the occurrence of this meeting and harboring Nasir but claimed that he did not know they were involved in the Bangalore blasts when they were offered shelter.

“Madani now knows that there is a reasonable case against him and that he has not been arrested for nothing by the police,” sources said.

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!

ஓகஸ்ட் 2, 2010

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக  இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா யூனியன் எதிராக  முஸ்லீம் லீக் போராட்டம்!: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்திருக்கிறார்களாம் [அதுசரி, அவர்களை காஃபிர்கள் என்று அறிவிப்பார்களா?]. மக்களிடம் தாங்கள் இழைத்தக் கொடுமைகளை மறைக்க இந்த இயக்கங்கள் முயற்சி செய்கின்றன என்றும் எடுத்துக் காட்டினார்கள் [எந்த மக்களை என்று சொல்லவில்லையே/]. மக்களிடையே அவர்கள் தீவிரவாத சித்தாந்ததைப் பரப்பி வருகிறர்கள், மக்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறார்கள் என்றும் குற்றாஞ்சாட்டினர். இனி இந்த தீவிரவாத இயக்கங்களின் கொடுமைகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும், அவைகளுடன் எந்த கூட்டும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்கள்.

கோட்டக்கல்லில் நடந்த முஸ்லீம் அமைப்புகளின் கூட்டம்: சனிக்கிழமை (31-07-2010) கோட்டக்கல்லில் (மல்லப்புரம் மாவட்டம்) நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுத்து இருக்கிறார்களாம். முஸ்லீம் லீக்கைத்தவிர, சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் உட்பட (EK and AP sections of Sunni), முஜாஹித் இயக்கங்கள், சமஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா, கேரள முஸ்லீம் சேவை சங்கம் (Muslim Service Society -MSS), முஸ்லீம் கல்வி சங்கம் (Muslim Educational Society -MES).

முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள்: குன்ஹாலங்குட்டி, “தீவிரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்கமுடியாது. முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள். நாங்கள் இந்த கொள்கையை கடைப்பிடிப்போம், தீவிரவாதத்திலிருந்து மீண்டு வெற்றிகரமாக வருமோம் என்று நம்புகிறோம்”, என்று பேசினார்[1]. அச்சுதானந்தன் கேரள மக்களை முஸ்லிம்களாக மதம் மற்றுகிறார்கள் என்று சொன்னதிற்காக எதிர்ப்பும் தெரிவித்தனர். கேரளா மற்றும் மேற்கு வங்காளம் முஸ்லீம்களுக்கு எந்த சமூக வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்[2].

கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் சேர்ந்து இருப்பது: 60 வருடங்களுக்கு மேலாக, இந்த இரண்டு மாநிலங்களில் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாகத்தான் அரசியல்-சித்தாந்த ரீதியில் வேலைசெய்து வருகிறர்கள். கடவுள் இல்லை என்கின்ற கூட்டாத்தர்களுடன், குறிப்பாக காஃபிர்களுடன், இந்த மோமின்கள் எப்படி காலந்தள்ளியுள்ளனர் என்பது அவரவர் கடவுளர்களைத்தான் கேட்கவேண்டும். செக்யூலரிஸம் பேசி கத்திக் கொண்டிருக்கும் இந்த கூட்டங்களுக்கு வெட்கமில்லாமல், அவ்வாறு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில், நடு-நடுவே காங்கிரஸும் சேர்ந்து கொள்ளும். இந்தக் கூட்டத்தார்களுக்கு, என்ன நாம் இவ்வாறு நடந்து கொள்கிறோமே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட்டதில்லை. ஆனால், இப்பொழுது அவர்களுக்கு வாழ்க்கை கசந்துவிட்டது போலும்!

ஏன் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் அதிகமாக தீவிரவாதம் வளர்ந்திருக்கக்கூடும்? கம்யூனிஸ்ட்டுகளே பயப்படும் அளவிற்கு எப்படி இஸ்லாமியத் தீவிரவாதம் இந்த மாநிலங்களில் வளர்ந்திருக்கமுடியும்? இதை அலசும்போது கூட இம்மாநிலங்களில் தான், ஒருவருடைய கை வெட்டப்பட்டுள்ளது, இன்னொரு முஸ்லீம் பெண்ணே பாடம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. எந்த சமூக-பொருளாதார குற்றமாகியிலும், அதன் பின்னணியை ஆய்ந்து பார்த்தால், இம்மாநிலங்களில் ஜிஹாதிகளின் பங்குதான் வெளிப்பருகிறது. ஆகையால்தான், இன்று!: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போன்ற முஸ்லீம் அடிப்படைவாதக் கட்சிகளே, ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்திருக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. நாங்கள், “சிறுபான்மையினர், சிறுபான்மையினர்”, என்று சொல்லிக்கொண்டு, பெரும்பான்மையினரை சிறுபான்மையினரைவிட தாழ்த்தி, அவர்களுக்கு உரிமைகள் இல்லாமால் ஆக்கிவிட்டு, இன்று, “முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள்”, என்று சொல்லவேண்டிய நிலையில் வந்துவிட்டது வேடிக்கையகத்தான் உள்ளது. இதுவும் கருணாநிதி-ஜெயலலிதா போன்ற அரசியலா, வாய்ஜால-விளையாட்டுகளா, அறிக்கை-வேடிக்கைகளா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


[1] http://www.hindu.com/2010/08/01/stories/2010080157670100.htm

[2] http://ibnlive.in.com/generalnewsfeed/news/iuml-slams-left-govts-in-kerala-wb-for-neglecting-muslims/192444.html