Archive for the ‘மனிதநேய விற்பன்னர்கள்’ category

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? (1)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?  (1)

19-04-2022 கவர்னருக்கு கருப்புக் கொடி, கொம்புகள் எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?

மார்ச் 2022 – தமிழக முஸ்லிம் கர்நாடக நீதிபதிகளை மிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.  மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.

  1. மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
  2. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
  3. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
  4. காரைக்கால் முகமது இர்பான், 22;
  5. சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3].  அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிக் காட்டி போலீஸாரை மிரட்ட தைரியம் எப்படி வந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம்  என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.

முகமது ஆசிக் கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] மாலைமலர், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்தமிழகத்தை சேர்ந்தவர் கைது, பதிவு: மார்ச் 23, 2022 06:07 IST; மாற்றம்: மார்ச் 24, 2022 01:27 IST.

[2] https://www.maalaimalar.com/news/national/2022/03/23060702/3604832/A-man-from-Tamil-Nadu-who-had-allegedly-issued-death.vpf

[3] தினமலர், .எஸ்., ஆதரவாளர்களுக்கு நிதியுதவி: பின்னணியை விசாரிக்கிறது என்..., Updated : மே 11, 2022  09:01 |  Added : மே 11, 2022  09:00

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3027224

[5] டாப்.தமிழ்.நியூஸ், மயிலாடுதுறை அருகே .எஸ்..எஸ் வழக்கில் தொடர்புடைய இளைஞர் கைதுஎன்.. அதிகாரிகள் நடவடிக்கை!,  By NEWSDESK Fri, 28 May 2021 2:22:36 PM.

[6]https://www.toptamilnews.com/districts/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/youth-arrested-in-connection-with-isis-case-near/cid4926959.htm

தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[7] தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[8] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/2021/may/28/the-youth-who-came-out-on-bail-in-connection-with-the-organization-was-arrested-near-mayiladuthurai-3631508.html

[9] இ.டிவி.பாரத், தலைமறைவு குற்றவாளி கைதுதேசிய புலனாய்வு முகமை அதிரடி, Published on: May 28, 2021, 3:31 PM IST

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/the-culprit-involved-in-the-isis-case-has-been-arrested/tamil-nadu20210528153155208

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)

 

 டிஎன்ஏ சோதனை: யாசின் பட்கலின் அடையாளத்தை உறுதி செய்ய உடனடியாக ஒரு சிறப்பு குழுவை அனுப்பிவைக்கும்படி கர்நாடக போலீசாரை பீகார் போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் யாசின் பட்கலுக்கு டிஎன்ஏ சோதனை செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கும் கர்நாடக போலீசாரிடம் உதவி கோரியுள்ளனர். இதில் பீகார் போலீசார் எந்த அளவிற்கு ஒத்துழைப்பார்கள் என்று பார்க்க வேண்டும். “நான் அவனில்லை” என்ற வாதங்கள் வருவதால், புலன்விசாரணைக் குழு இதனை உறுதி செய்ய தீர்மானித்துள்ளது. இதனை அறிந்து தான், ஒருவேளை தந்தை, மாமா மற்ற உறவினர்கள் வேறு மாதிரி நடந்து கொள்கிறார்கள் போலும்.

விசாரிக்க கர்நாடகம்,  குஜராத் போலீஸ் தீவிரம்[1]: கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கலுக்கு தொடர்பு இருப்பதால், அவரை விசாரணைக்கு தங்களிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் கோருவதற்கு இரு மாநில காவல் துறையும் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக கர்நாடக காவல் துறை இயக்குநர் லால் ரொகுமா பசாவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: “பெங்களூரில் இந்தியன் முஜாஹிதீன் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்படும்”, என்றார். குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரக் காவல்துறை இணை ஆணையர் ஏ.கே. சர்மா கூறியது: “யாசின் பட்கலை எங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் கோருவோம்”, என்றார்.

முல்லாயம் சிங் கட்சி முஸ்லிம் தலைவர் தீவிரவாதிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது,  பேசுவது ஏன்?: இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், மனித உரிமைப் போராளிகள், செக்யூலரிஸ வித்வான்கள், சமத்துவ ஞானிகள், மனிதநேய விற்பன்னர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய தீவிராவாதிகள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றே, சில முரண்பட்ட செய்திகளை போட்டு வைக்கிறார்கள். தீவிரவாதிகளின் பெயர்களைக் கூட வேண்டுமென்றே மாற்றி-மாற்றி குறிப்பிடுவார்கள். அவற்றை தீவிரவாதிகள் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, யாசீன் போன்ற படித்த தீவிரவாதிகள் “நான் அவனில்லை” போன்ற வாதங்களை வைத்து, “அலிபி”, அதாவது “அந்நேரத்தில் நான் அங்கில்லை” என்றும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

யாசின் பட்டகல் மற்றும் அவனது வக்கீல் எம். எஸ். கான் வாதிப்பது ஏன்?: யாசின் பட்டகல் சொல்கிறான், “இந்திய முஜாஹித்தீனை தோற்றுவித்தவர்களுள் ஒருவன் நான் என்பதனை நான் மறுக்கிறேன்”, என்கிறான். பிறகு, “தில்லி மற்றும் 7 தொடர்குண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவனும் நானும் வேறு”, என்கிறான். ஆனால், யாசின் பட்டகல், அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா என்ற எல்லோரும் ஓரே நபர் தான் என்று என்.ஐ.ஏ எடுத்துக் காட்டியது[2]. இப்பொழுது கூட, எம். எஸ். கான் என்ற யாசினின் வக்கீல் அத்தகைய வாதங்களை வைத்துள்ளது கவனிக்கத்தக்கது[3].

ஊடகங்களின்  தேவையற்ற செய்திகள், பிரச்சாரங்கள்: யாசின் பட்டகல் பாகிஸ்தானில் இருந்தான், ஐ.எஸ்.ஐ.யினால் பயிற்சி கொடுக்கப்  பட்டான் என்ற உண்மை அவனை விசாரிக்கும் போது தெரிய வந்துள்ளது. இதுவரை அவன் லச்கர்-இ-தொய்பா தான் பயிற்சி கொடுத்தது என்று நம்பி வந்தார்களாம்[4]. இப்படிபட்ட செய்திகள் வெளியிடும் போக்கும் என்னவென்று தெரியவில்லை. இந்திய துப்பறிவாளர்கள் என்ற நினைத்தார்கள், நம்பிக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம், இந்தியர்களுக்கு வேண்டிய செய்திகளா? முன்பு கூட மும்பை வெடிகுண்டுவெடிப்பிற்கு பிறகு, யாசின் தில்லிக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றதில் மும்பை மற்றும் தில்லி போலீஸார் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றன[5]. யாசின் தப்பிச் செல்ல தில்லி போலீஸார் தான் காரணம் என்ரு மும்பை போலீஸார் கூறினர்[6]. வழக்கம் போல, சி.என்.எநை.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை பாகிஸ்தான் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் முதலிவவர்களை வைத்துக் கொண்டு “பட்டி மன்றம்” நடத்தி, தாங்கள் ஏதோ மிகப்பெரிய உண்மைகளை தருவது போல “டமாரம்” அடித்துக் கொள்வார்கள். இதுதான் இந்தியாவின் லட்சணம் என்று விசயம் தெரிந்தவர்கள் பரிகாசம் செய்வார்கள். முதலில், இனிமேல் இந்தியாவில் இவர்களது கொட்டம் அடக்கப்படும், அவர்களது கூட்டாளிகளின் வால்கள் அறுக்கப்படும், இந்தியாவில் இருந்து கொண்டு ஆதரவு காட்டி வரும் சதிகாரர்கள் அடக்கப்படுவார்கள். அதனால், இனி குண்டுவெடிப்புகளே நிகழாது என்றுதானே தைரியமாக சொல்ல வேண்டும். மாறாக, இத்தகைய பிரச்சாரங்களால், சாதாரண மக்களுக்கு என்ன லாபம்.

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] However, District Judge I S Mehta, who remanded Bhatkal and his close associate and alleged top IM operative Asadullah Akhtar for custodial interrogation for 12 days, did not accept his claims saying NIA has said that he was the IM co-founder. ‘Both the accused have been produced before the court on the issuance of NBWs (non-bailable warrants) on July 18, 2013 wherein the accused Yasin Bhatkal and accused Asadullah Akhtar alias Haddi alias Danial. In the present application it is stated that Mohd. Ahmed Siddibappa is Yasin Bhatkal and he is the same person against whom the NBWs were issued.

http://www.business-standard.com/article/pti-stories/bhatkal-s-attempt-to-falsify-nia-s-claim-fails-113083000906_1.html

[3] Yasin Bhatkal today failed in his attempt in a Delhi court to falsify the claim of investigators that he was the same person whom the NIAhas dubbed as the co-founder of Indian Mujahideen (IM) involved in a string of terror strikes in the country in the last seven years. His lawyer M S Khan opposed National Investigation Agency (NIA’s) plea seeking 14-day custody saying ‘the accused person before the court is Mohmmad Ahmed and not Yasin Bhatkal.’

http://www.business-standard.com/article/pti-stories/bhatkal-s-attempt-to-falsify-nia-s-claim-fails-113083000906_1.html

[6] A series of reports on an alleged botched operation to catch Indian Mujahideen operative and purported 13/7 mastermind Yasin Bhatkal has left the Maharashtra Anti-Terrorism Squad and the State government fuming. A top official told The Hindu on Thursday that the government was upset with the leaks from the Delhi police and is sure to take up the matter with the Ministry of Home Affairs “at the right time.” The ATS, which is investigating the 13/7 blasts, has already flagged off its grievance to Delhi.

http://www.thehindu.com/news/national/other-states/maharashtra-flays-delhi-police-on-137-leaks/article2814646.ece?ref=relatedNews