Archive for the ‘மதானி’ category

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!

செப்ரெம்பர் 18, 2010

மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!

மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி[1]: கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸின் ஜாமீன் மனுவை, மதுரை சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்மதானி. பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இக்கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸ். இவர், மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பெறப்பட்டதாக போலி “டிடி’ தயாரித்து, மதுரை வடக்குமாசிவீதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யினர் 1994ல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல்அஜீஸை, பெங்களூருவில் கடந்த செப்.,3ம் தேதி சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஜெகநாதன் உத்தரவுப்படி, அப்துல்அஜீஸ் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். சி.பி.ஐ., வக்கீல் ரோசாரியா சுந்தர்ராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணை நடத்திய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

ரூ. 95 லட்சம் வங்கி மோசடியில் மதானி உறவினர்: மதுரையில் உள்ள மகாராஷ்ட்டிரா பாங்கியில் கடந்த 1994-ம் ஆண்டு ரூ. 94 லட்சத்து 85 ஆயிரம் செக் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக மதானி யின் உறவினரான அப்துல்அஜீஸ், மதுரை விளக்குத்தூண் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மேலும் சச்சின்சிராஜ்கிலானி, பாலசுப்பிரமணி முத்து கிருஷ்ணன், ரானாமகாதேவ் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அப்துல் அஜிஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடப் பட்டனர். இந்த மோசடி சம்பந்தமான வழக்கு மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஜாமீனில் சென்றவர்கள் அப்துல்அஜீசை தவிர மற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக அப்துல்அஜீஸ் இருப்பதால் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப் பட்டது. இதையொட்டி அவரை சி.பி.ஐ. போலீசார் தேடி வந்தனர்.

மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு[2]: இந்த நிலையில் கர்நாடக போலீசார் மதானியை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்தபோது அவருக்கு ஜாமீன் வாங்க அப்துல்அஜீஸ் பெங்களூர் சென்றிருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளி என தெரிந்த கர்நாடக போலீசார் அவரை கைது செய்து தமிழ்நாடு சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை கொண்டு வரப்பட்ட அப்துல்அஜீசை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஜெகநாதன் வீட்டிற்கு நேற்று இரவு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அவரை 16-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மதானியின் உறவினர் அப்துல்அஜீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை 2 மணி அளவில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.


[1] தினமலர், மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி, செப்டம்பர் 18, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87124

[2] மாலைச்சுடர், மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

ரூ. 95 லட்சம் மோசடியில் கைதான மதானி உறவினர், மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு , http://www.maalaimalar.com/2010/09/05173505/95-lakhs-cheating-madhani-caus.html

மதானிக்கு நஸீர் முதலியோரைத் தெரியுமாம், ஆனால் அவர்கள் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டிருப்பது தெரியாதாம்!

ஓகஸ்ட் 31, 2010

மதானிக்கு நஸீர் முதலியோரைத் தெரியுமாம், ஆனால் அவர்கள் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டிருப்பது தெரியாதாம்!

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் இதே மாதிரியான வாதத்தில் தான், இவன் விடுதலை செய்யப்பட்டான். இறந்த மக்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

அப்பொழுது வாதிட்டதாவது, பெங்களூரில் இருந்துதான், வெடிப்பொருட்கள் வாங்கப்பட்டன. அதற்கான ரசீது / ஆவணங்கள் எல்லாம் உள்ளன. ஆனால், அந்த குண்டுகளை கோயம்புத்தூரில் வைத்து, அந்த குண்டுகள் அங்கு வெடித்து, அந்த வெடிப்பில் தான், மக்கள் இறந்தனர் என்பதர்கான ஆதாரங்கள் இல்லையாம்!

‘Madani admits to links with accused, says no idea of plot’

http://www.indianexpress.com/news/madani-admits-to-links-with-accused-says-no-idea-of-plot/674656/0

Kerala politician and leader of the People’s Democratic Party Abdul Naser Madani arrested by the Bangalore police in connection with the July 25, 2008 serial blasts in Bangalore, has reportedly admitted to being in constant touch, both before and after the blasts, with 12 of the 31 men named in the chargesheet. While he accepted, during the course of his interrogation, that he was in touch with them, he denied having any inkling of their involvement in the blasts, sources said. Madani had earlier denied knowing the men involved in the blasts, despite several of them, including prime-accused T Nasir, implicating him in the case.

Madani, who was arrested on August 17 in Kerala, was in police custody till August 26 and was confronted with various sets of evidence gathered by the Bangalore police during the course of investigations. He was also brought face to face with the accused.

Sources said Madani was presented with the telephone call details running to over a dozen sheets for three mobile phones — 9349955085, 9349955082 and 9846838833 — he was using between 2008 and 2009. The call details showed that Madani was in regular touch with T Nasir on several phone numbers , including 9746186452 used by Nasir just prior and after the Bangalore blasts. He was also in touch among others with Abdul Sattar alias E T Zainuddin on 9246547313, with Sarfaraz Nawaz on 9745784882, with E T Sarafuddin, the alleged creator of the timers used in the bombs, on 9961324493, with Abdul Jabbar, who was among five Kerala men who made a futile attempt to go to Pakistan for terror training after the blasts, on 9846286460.

Madani subsequently accepted that he knew all the men except Sarfaraz Nawaz, who was based in Dubai and Muscat and who liaisoned for the group with the Lashkar-e-Toiba, sources said.

Madani was also brought to face to face with T Nasir, a follower of Madani for over 15 years, who had first implicated the Kerala politician in the blasts.

Nasir’s statement says, “When we informed Madani about the blasts he said he would support us in any way we wanted” .

According to sources, Nasir stuck by his statement despite Madani’s efforts to deny it.

Sources said that Madani accepted the occurrence of this meeting and harboring Nasir but claimed that he did not know they were involved in the Bangalore blasts when they were offered shelter.

“Madani now knows that there is a reasonable case against him and that he has not been arrested for nothing by the police,” sources said.

யார் இந்த அப்துல் நாசர் மதானி?

ஓகஸ்ட் 19, 2010

யார் இந்த அப்துல் நாசர் மதானி?

தேதிகள் வாழ்க்கை நிகழ்வுகள்
ஜனவரி, 18, 1966 சாஸ்தம்கொட்ட, கொல்லம் என்ற இடத்தில் அப்துல் நாசர் பிறந்தது.
1986-88 இஸ்லாமிய கல்வி கற்று, “மதானி” ஆதல். மதனி என்பது இஸ்லாமிய பட்டப்படிப்பு ஆகும்.
1988-92 ஆர்.எஸ்.எஸ் மற்ற இந்து இயக்கங்களுடன் சண்டை, அடிதடி முதலியன.
ஆகஸ்ட். 6, 1992 குண்டுவெடிப்பில் காலை இழந்தது.
டிசம்பர் 11, 1992 இஸ்லாமிக் சேவக் சங் ஆரம்பித்தான்
பிப்ரவரி 14, 1998 கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு. 58 பேர் பலி, 200க்கும் மேல் காயம், அத்வானியைக் கொல்லத்தான் இந்த குண்டுவெடிப்பு என்று கருதப்பட்டது. தாமதமாக வந்ததால் அத்வானி தப்பித்தார்.
ஏப்ரல். 8, 1998 ஈ. கே. நயினார் இவனை கைது செய்து தமிழக போலீஸாருக்கு ஒப்படைத்தல்
செப்டம்பர் 9, 2005 கலமஸரி (கொச்சிக்குத் தொலைவில்) என்ற இடத்தில் தமிழக பேருந்து எரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் சிறையில் மதானி துன்புறுத்தப்பட்டதாக, தமிழகத்தைப் பழிவாங்க இவ்வாறு செய்யப்பட்டது. இதற்கு அவனுடைய மனைவியே காரணம் என்று சொல்லப்பட்டது.
மார்ச். 16, 2006 காங்கிரஸ் கூட்டில் இருந்த UDF மதானி உடல்நல குறைவாக இருப்பதனால் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட். 1, 2007 மதானி தமிழக கோர்ர்ட்டினால், தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டான்.
அக்டோபர். 7-11, 2008 கேரளாவைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் காஷ்மீரத்தில் கொல்லப்பட்டனர். இதில் துப்பறிந்து, விசாரித்தபோதுதான், மதானி மற்றும் சூஃபியா முதலியோரது பங்கு வெளிப்பட்டது
மார்ச். 21, 2009 பினாராய் விஜயன் என்ற CPI(M) கட்சியின் நிர்வாகி, மதனியுடன் மேடையில் சரிசமமாக உட்கார்ந்து பேசினார்கள். இதனால், கேரள அரசியலின் போலித்தனம் வெளிப்பட்டது.
மார்ச். 25, 2009 அச்சுதானந்தன், முதலமைச்சர் மதானி தம்பதியரின் தீவிரவாதத் தொடர்பு பற்றி விசாரிக்கப்படும் என்று அறிவித்தாலும், உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாது என்று சொல்லுதல்.
ஏப்ரல்.1, 2009 கொச்சியில், அலுவா என்ற இடத்தில் உள்ள நீதிமன்றம், பேருந்து எரிப்பு வழக்கில் சூஃபியாவை விசாரிக்கும்படி ஆணையிட்டது.
Madhani-Sufia-Salahudin-Omar

Madhani-Sufia-Salahudin-Omar

அப்துல் நாசர் மதானி 1965ம் ஆண்டு சாஸ்தாம்கோட்டா என்ற இடத்தில் கேரளாவில் பிறந்தான். இளம்வயதிலேயே, இஸ்லாம் அடிப்படைவாத எண்ணங்களுக்குட்பட்டு, சிமி போன்ற இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்தான். ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்-RSS) என்ற இந்து இயக்கத்தின்மீது தீராத வெறுப்புக் கொண்டான். அந்நேரத்தில், இந்துக்களை ஒன்றுசேர்க்க, அது மேற்கொண்ட முயற்சிகளும் இவனுக்குப் பிடிக்கவில்லை. தனது 20வது வயதிலேயே -1985 – தீப்பொரிக்கப் பேசுவதில் வல்லவன் ஆனான். தூய மலையாளத்தில் ஏற்றி-இறக்கி பேசுவதில் திறமையை வளர்த்துக் கொண்டான். அவனுடைய பேச்சுகளில், இளைஞர்கள் மயங்கினர்.

madani and umer mukthaar

madani and umer mukthaar

தனது 25வது வயதில், இஸ்லாமிக் சேவக் சங் (ISS) என்ற இயக்கத்தை, ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்-RSS) என்ற இந்து இயக்கத்திற்கு எதிராக 1990ல், என்று ஆரம்பித்தான். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் ஆதிக்கம் இல்லாத கேரளாவின் தெற்குப்பகுதிகளில், முஸ்லீம் இளைஞர்களிடம், இந்த இயக்கம் தாக்குதலை ஏற்படுத்தியது[1].

Maudany_arrest-drama-2010

Maudany_arrest-drama-2010

1992ல் ராமஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையில் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார்கள் அதனால் ஐ.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டது.

so-many-required-to-arrest-madani

so-many-required-to-arrest-madani

1994ல் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) என்ற கட்சியை ஆரம்பித்தான். முஸ்லீம்கள், தலித்துகள் மற்ற ஒடுக்கப்பட்டவர்களூக்கானக் கட்சி என்ற போர்வையில் இவ்வியக்கம் வேலை செய்ய ஆரம்பித்தது. யுனைடெட் டெமாக்ரெடிக் பார்ட் UDFயுடன் கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்த ஆரம்பித்தாலும், இவனுடைய தீவிரவாத பேச்சுகளைக் கண்டு, அரசியல்வாதிகள் தயங்கவே செய்தனர். ஜிஹாத் போர்வையில், தீவிரவாத எண்ணங்களை இளைஞர்களின் மனங்களில் ஊட்டியதை அவர்களால் கண்டுகொள்ள முடிந்தது.

The-Madani-arrest-drama-2010

The-Madani-arrest-drama-2010

மாராட் என்ற கடற்க்கரைக் குப்பத்தில் மே 2, 2003 அன்று எட்டு மீனவர்கள் கொடுமையான முறையில் கழுத்துகள் வெட்டப்பட்டுக் கிடந்தனர். அத்தகைய கழுத்தறுக்கும் முறை, கைதேர்ந்தவர்களால் தான் முடியும் என்பது விசாரணை மற்றும் ஆய்வில் தெரியவந்தது. அப்பொழுதுதான், அது சாதாரணக் கொலையில்லை, பின்னணியில், ஏதோ விஷயம் இருக்கவேண்டும், என்று ஆய்ந்தபோதுதான் ஜிஹாதி தீவிரவாதம் வெளிப்பட்டது. அதாவது, அந்த எட்டு மீனவர்களும் இந்துக்கள், மேலும் அவர்கள் இந்துக்கள் என்பதினால்தான் அவ்வாறு குரூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்ற விஷயம் வெளிவந்தது[2]. மேலும், இதில் பி. கோயா என்ற தேசிய வளர்ச்சி முன்னணி (NDF) மற்றும் முந்தைய சிமி இயக்க உறுப்பினரின் சம்பந்தமும் வெளிப்பட்டது. ஆனால் என்.டி.எஃப் என்பது தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.எஸ் [ISS or Islamic Volunteer Service] இயக்கத்தினருக்கு ஒரு மறைப்பு இயக்கமாக உள்ளது என்று போலீஸாருக்குத் தெரியும் என்று அவர்களின் அறிக்கைக் குறிப்பிடுகிறது. நவம்பர் 2006ல், மறுபடியும் தடை செய்யப்பட்ட இந்த இயக்கங்கள் – மனித நீதி பாசறை (தமிழ்நாடு), ஃபோரம் ஃபார் டிக்னிடி (Karnataka Forum for Dignity) –எல்லாம், தமது முகமூடியை மாற்றிக்கொண்டு,  பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற பெயரில் தோன்றியது.

Madhani-drama-2010

Madhani-drama-2010

மார்ச் 1988ல், கோழிக்கோட்டில், அத்தகைய பேச்சு எல்லைகளைக் கடந்தபோது, கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்டு, கேரள போலீஸார் வசம் இருக்கும்போதுதான், தமிழக போலீஸார், கோயம்புத்தூர் குண்டு வெடிப்பிற்காக, இவனைத்தேடி வந்தது. கைதுசெய்யப்பட்ட இவன் 2007 வரை சிறையில் இருந்தான். கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளுக்கு, தீவிரவாத முஸ்லீம்களுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்தான் என்பது இவன்மீதானக் குற்றாச்சாட்டு. கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேலான மக்கள் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புகள், எல். கே. அத்வானி அங்கு ஒரு பொதுகூட்டத்திற்கு பேசவருவதார்கு முன்பு நடந்தது. ஆனால், சிறப்பு நீதிமன்றம் இவனை விடுவித்தது. ஆனால், அவன் மற்றும் அவன் மனைவிமீது, எர்ணகுளத்தில், ஒரு தமிழக போக்குவரத்து பேரூந்தை எரித்த வழக்கில் சம்பந்தப்பட்டதால், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

madanee-sufi-bomb

madanee-sufi-bomb

சூஃபியா டிசம்பர் 2009ல் கைது செய்யப்பட்டாள். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தடியந்தவிடே நஸீர் (Tadinyandavaeeda Naseer) கொடுத்த வாக்குமூலத்தில், மதானிக்கு பெங்களுர் குண்டுவெடிப்பிலும் சமந்தம் இருக்கிறது என்று சொன்னதாக உள்ளது[3].  இந்த நஸீர் ஏற்கெனவே ISSன் முக்கியமான உறுப்பினர் மற்றும் மதானியின் நம்பிக்கையானவன். பெங்களூர் குண்டுவெடிப்பிற்கு முன்பு கூடிபேசிய கூட்டத்தில், மதானி, அவன் மனைவி சூஃபியா, முதலியோர் இருந்தனர்[4]. மதனி கேரளா மற்றும் குடகு பகுதிகளில் இருக்கும்போது, பெங்களூர் குண்டுவெடிப்புப்பற்றி திட்டம் திட்டியதாக நஸீர் சொல்லியுள்ளான். ஃபயாஸ் என்பவனின் வீட்டை சோதனையிட்டபோது, தடைசெய்யப்பட்ட சிமியின் கால அட்டவணை ஒன்று கிடைத்தது. அதில் எப்படி ஜிஹாத் அயோத்யாவிலிருந்து ஜெருஸலேம் வரை போராடவேண்டும் என்றுள்ளது. இந்த ஃபயாஸ், காஷ்மீரத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் நடந்த சண்டையில் உயிரிழந்தான். அப்பொழுது, அவந்தமிருந்த ஆவணங்களை பரிசோதித்தபோது, அவன் கேரளாவைச் சேர்ந்தவன் என தெரியவந்தது[5].

நஸீர் 2009ல் பங்களாதேஷத்தில், பங்களா ரைஃபிள் வீரர்களினால் கைது செய்யப்பட்டான். அப்பொழுது, அவன் போலீஸாரிடன் சொன்னதாவது[6], “மதனி தான் கூர்கில் ஹோஸ்ததா என்ற இடத்தில் இருந்தபோது, மதனி அங்கு வந்து சந்தித்ததான். 2008ல் அங்கு இஞ்சி தோட்டம் வைத்துள்ளது மாதிரி, உண்மையில் தீவிரவாத பயிற்சி அளித்துவந்தான். சில ஆட்களை பெங்களூரு வேலைக்கு வைத்து, பிறகு போலீஸாரின் திசைத் திருப்ப, நல்ல வேலைக்குச் சென்றுவிடு. கோயம்புத்தூரில் செய்தது போல செய்யவேண்டாம் (அதாவது எல்.கே.அத்வானியை விட்டுவிட்டது மாதிரி இருக்கக்கூடாது[7])”.

“மதனி சொல்லியபடியே, கேரளவிலிருந்து வந்த ஆட்களிடம், அந்த வேலையை ஒப்படைத்தேன். ஜூலை 26, 2008 கேரளாவில் மந்தன்வாடி என்ற இடத்தில் கே. பி. ஷப்பீர் என்பவனை சந்தித்தேன். பிறகு மதனியுடன் 9349955085 என்ற அவனுடைய எண்மூலம் மற்றும் 9744386493 என்ற தன்னுடைய செல்போனி மூலமும் தொடர்பு கொண்டேன். மதனியின் அந்தரங்க செயலாளி ரஸீப் பேசினான். அவன் மதனியை அன்வராசேரியில் வந்து சந்திக்குமாறு கூறினான். அங்குதான் மதனியின் தலைமையகம் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளது[8].

நஸீர் அன்வராசேரிக்கு போவதற்கு முன்பு மதனிக்கு ஒரு எஸ்.எம்.ஏஸ் கூட அனுப்பினான். ஆனால், அங்கு ஆகஸ்டில் சென்றபோது, மதனியின் சகோதரன் ஜமால் என்பவனைத்தான் சந்திக்க முடிந்தது. குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, மதனியின் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன, மற்றும் கண்காணிக்கப்படுவதால் மதனி அங்கு வரவில்லை. மேலும் நஸீரையும் போலிஸார் தேட ஆரம்பித்துவிட்டதால், தப்பொச்செல்லுமாறு கூறியுள்ளான். அதன்படியே நஸீர் பங்களாதேஷத்திற்கு தப்பியோடிவிட்டான். முன்பு, மதனியின் தாக்கத்தினால்தான், கண்ணூரில், தாயில் என்ற இடத்தில் சில்சிலா நூர்லிஸா தஹ்ரீக் (Silsila Noorlisha Tahreekh) என்ற இயக்கத்தை ஆரம்பித்ததாகவும் கூறினான்[9].

மதனியின் சுயசமர்ப்பண மனுவிற்கு எதிராக போலீஸாரால் கொடுக்கப்பட்டுள்ள 57 பக்கம் கொண்ட எதிர்வாதங்களில், “மக்தனி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 12 நபர்களுடன் 9349955085, 9349955082 மற்றும் 9846838833 என்ற எண்கள் கொண்ட கைப்பேசிகளில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். இவையெல்லாம் அவனுடைய மனைவியின் எண்கள்தாம்”, என்று எடுத்துக்காட்டியுள்ளனர்[10].

இப்பொழுது அவ்வழக்கில் மதானியின் பெயர் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளான். ஆனால், மதானியோ, தனக்கும் அதற்கும் சமந்தம் இல்லை என்றும், புலன் விசாரணை செய்யும் நிறுவனங்கள்தாம், தன்னை இப்பிரச்சினையில், சிக்கவைக்க முயல்கிறார்கள் என்றும், குற்றஞ்சாட்டி வருகிறான்.


[1] http://economictimes.indiatimes.com/News/Madani-stands-isolated/articleshow/6330830.cms

[2] http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Taliban-style-courts-in-Gods-Own-Country/articleshow/6182633.cms

[3] http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Taliban-style-courts-in-Gods-Own-Country/articleshow/6182633.cms

[4] According to sources, Madani’s alleged involvement in the case came to light after the arrest of Naseer, his aide-cum-follower. Naseer was also a member of Islamic Seva Sangh (ISS) of Madani, and later joined PDP. “The interrogation revealed that several meetings regarding the blasts had taken place in the presence of Madani’s wife. Madani was aware of the Bangalore blasts,” sources said. According to Kerala police, Madani was in the know of the blasts masterminded by Naseer.

http://timesofindia.indiatimes.com/india/Blore-blasts-Non-bailable-warrant-against-Madani/articleshow/6057024.cms

[5] Madani hatched his plans while in Kerala and Kodagu, the CCB charged. It said several books and a Simi calendar that called for Jihad ‘Ayodhya to Jerusalem’ had been recovered from the house of another accused in the case, Fayaz, who was later killed in an encounter with security forces in Kashmir. These showed that the blasts accused were members of the banned Simi. http://www.deccanchronicle.com/bengaluru/madani-war-state-ccb-335

[6] Naseer, who was arrested in 2009 in Bangladesh by the Bangladesh Rifles allegedly told the police that Madani had visited him in Hosthata in Coorg district, where he had set up a terrorist training camp in early 2008 under the guise of ginger cultivation and instructed him to assign a few men for the Bengaluru blasts to escape ‘police attention’ and asked him to do a proper job, ‘unlike the Coimbatore blasts,’ (which missed the main target—the BJP leader L.K. Advani.)

[7] http://www.deccanchronicle.com/bengaluru/blasts-%E2%80%98pupil%E2%80%99-gave-madani-away-016

[8] Naseer alleged that on the instructions of Madani he put together a small team of men from Kerala for the job. According to his statement, the day after the blast, on July 26, 2008 Naseer went to Manandwadi in Kerala; met co-accused K.P. Shabeer and called Madani on his cell phone (number 9349955085) from his mobile phone (number 9744386493). Madani’s personal assistant Razeeb answered the call and asked Naseer to meet Madani on July 27 at Anwaraserry, the PDP leader’s headquarters cum orphanage.

[9] Naseer also sent an SMS to Madani before setting off to Anwaraserry where Madani’s brother Jamal met them and told them that Madani couldn’t come because his phones were tapped and he was under police surveillance following the serial blasts. Naseer finally managed to meet Madani in the last week of August at Anwaraserry where he asked Naseer to escape as the police was hunting for him. Naseer fled to Bangladesh and took refuge there till his arrest. Naseer also alleged that it was under Madani’s influence that he started a radical outfit — ‘Silsila Noorlisha Tahreekh’ in Thayil, Kannur.

[10] The police, in their 57-page statement of objections, said that Madani maintained telephonic contact with 12 of the accused in the case. He had used mobile numbers 9349955085, 9349955082 and 9846838833, which stand in the name of Sufiya Abdul Nasser Madani (wife) and Rejeeb, respectively.  Read more: Court reserves verdict on Madani’s plea – Bangalore – City – The Times of India http://timesofindia.indiatimes.com/city/bangalore/Court-reserves-verdict-on-Madanis-plea/articleshow/6333286.cms#ixzz0x3jxDEIn