Archive for the ‘மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல்’ category
ஜூலை 12, 2010
காஷ்மீரில் அமைதி குலைத்து ஜிஹாதி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=36728
என்ன தான் நடக்கிறது காஷ்மீரில்? அமைதிக்கு வேட்டு வைப்பது யார்? மீண்டும் ஒரு முறை கலவர பூமியாக மாறி இருக்கிறது காஷ்மீர். கலவரத்தை கட்டுப்படுத்த, பத்தாண்டுகளுக்கு பின், முதல் முறையாக ராணுவம் வரவழைக்கப்படும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமாக மாறிப் போயிருக்கிறது. போராட்டம், கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என, காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் கலவரக் காடாக காட்சி அளிக்கின்றன. இந்த கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக மத்திய அரசே வெளிப்படையாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் அப்படி என்னதான் நடக்கிறது.
பிரிவினையில் துவங்கிய விபரீதம் : நாட்டு பிரிவினையின் போது துவங்கிய பிரச்னை, காஷ்மீரில் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பகுதி இந்தியாவில் உள்ளது. இந்த எஞ்சிய பகுதியையும் தன் பக்கம் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, தங்களது நாட்டில் பயங்கரவாத முகாம்களை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ வைத்து, வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். சில நேரங்களில் காஷ்மீரைத் தாண்டியும் டில்லி, மும்பை என, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளின் கரங்கள் நீண்டு விடுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் பிரச்னை இருந்து வந்தாலும், கடந்த 1987ல் இருந்து தான், வன்முறை அதிகம் பரவியது. அன்று துவங்கி கடந்தாண்டு ஜூன் வரை காஷ்மீர் கலவரத்தில் 47 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்ப்பலி அதிகரித்தாலும், கலவரம் நின்றபாடு இல்லை.
பிரிவினைவாதிகளின் கைவரிசை : இந்தியா-பாக்., நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக சில காலமாக அடங்கிப் போயிருந்த வன்முறை, தற்போது மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பாமல் பார்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், இங்கு செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பினர் தான். இவற்றிலேயே மிதவாத அமைப்பு, தீவிர அமைப்பு என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களில் ஒரு தரப்பினர், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர், இந்தியாவிலேயே தொடர்ந்து தன்னாட்சி பெற்ற மாகாணமாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அவ்வப் போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பதே இவர்களின் பிரதான வேலை.
தற்போதைய கலவரத்துக்கு காரணம் என்ன?கடந்த 20 நாட்களுக்கு முன், காஷ்மீரின் சோபூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு இளைஞர் பலியானார். இந்த பிரச்னை தான், தற்போது காஷ்மீர் கலவரக் காடாக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை கலவரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்ரீநகர், குப்வாரா, புலவாமா, பாரமுல்லா, புட்கம் ஆகிய மாவட்டங்கள், 20 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதுவரை 15 பேர் பலி : ஊரடங்கு உத்தரவை மீறி, ஏராளமான இளைஞர்கள் வீதிக்கு வந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் என்றால், சாதாரண போராட்டம் அல்ல. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் மீது, சரமாரியாக கற்களை வீசி தாக்குவது, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது போன்ற போராட்டங்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கல் வீச்சில் காயமடைந்த பாதுகாப்பு படையினர், திருப்பி தாக்கத் துவங்கி விடுகின்றனர். தடியடி, கண்ணீர் புகை ஆகியவற்றை தாண்டி, சில நேரங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். சில நேரங்களில், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, வீட்டிற்குள் இருந்து, ஜன்னல் வழியாக கலவரத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி பெண் ஒருவர் மீதும் பாதுகாப்பு படையினரின் குண்டுகள் பாய்ந்தது தான் பரிதாபம்.
குடிசைத் தொழிலான கல்வீச்சு : பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவதை, ஸ்ரீநகர் இளைஞர்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆக்கி விட்டனர். கல்வீச்சில் பங்கேற்காத இளைஞர்களே இல்லை என்ற அளவுக்கு, இது ஒரு குடிசைத் தொழில் போலவே இது மாறி விட்டது. ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் வீதிகளுக்கு வந்து, பாதுகாப்பு படையினர் மீது ஆவேசத்துடன் கற்களை வீசுகின்றனர். சில நேரங்களில் தனியாக சிக்கிக் கொள்ளும் பாதுகாப்பு படையினரை, துவைத்து எடுக்கின்றனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்துகின்றனர். ஆறு வயது சிறுவர்களில் துவங்கி, 30 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவது என்பது ஒரு சாகச செயலாகவே மாறி விட்டது. இந்த விபரீதம் தான், உயிர் பலி வரை கொண்டு போய் விட்டு விட்டது. அப்பாவி இளைஞர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடச் சொல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத சதி : வன்முறையும், உயிர்ப்பலியும் அதிகரித்துக் கொண்டே போனதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு கூடி, இந்த பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தியது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார். காஷ்மீரில் சமீபகாலமாக நடந்த வரும் வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்து மத்திய அரசு தெளிவாகவே அறிவித்தது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:காஷமீரில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் பின்னணியில் தேச விரோத சக்திகளின் சதி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும், இந்த கலவரத்துக்கும் தொடர்பு உள்ளது. இருந்தாலும், அமைதியான சூழ்நிலையை உருவாக்க, காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
ராணுவம் விரைந்தது : இதையடுத்து தான், தற்போது காஷ்மீருக்கு ராணுவம் விரைந்துள்ளது. 1,700 ராணுவ வீரர்கள் தற்போது ஸ்ரீநகர் உள்ளிட்ட கலவர பகுதியில் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், “காஷ்மீருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டாலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட மாட்டர். கூட்டத்தை கலைப்பது போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுவர்’ என, தெரிவித்துள்ளது.
இதிலும் அரசியல்:காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ள சூழ்நிலையிலும், அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் நடத்த துவங்கி விட்டன. குறிப்பாக, ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே, இந்த விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,”இந்த கலவரத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு உள்ளது. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாய கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் மகன்கள் நேரடியாக இதில் சம்பந்தப் பட்டுள்ளனர்’ என்றார்.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில்,”முக்கிய அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், தற்போதை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கியமான அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 20 நாட்களாக மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒமர் அப்துல்லா சில மணி நேரங்களை வீதியில் கழித்து பார்க்கட்டும். அப்போது தான் தற்போதைய பிரச்னையில் தீவிரம் அவருக்கு தெரியும்’என்றார்.
மத்திய அரசு முடிவு என்ன?தற்போது ராணுவத்தை அனுப்பி, பிரச்னையை ஓரளவுக்கு மத்திய அரசு சரி செய்தாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் இதுபோன்ற கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்புடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உறுதியான நடவடிக்கையாக இருப்பதோடு, இறுதியான நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும். காலம், காலமாக தொடர்ந்து வரும் பிரச்னையை ஒரே நாள் இரவில் தீர்த்து விட முடியாது. பிரிவினைவாத அமைப்பில் உள்ள மிதவாதிகளையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்கலாம். குறிப்பாக, அப்பாவி இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல், காஷ்மீரில் கலவரம் ஏற்படுவதற்கு பாகிஸ்தானும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது. பாகிஸ்தான் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விஷயத்தை கண்டிப்புடன் மத்திய அரசின் பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதற்கான அவசியத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது. மொத்தத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம் தான் இது. மத்திய அரசு சாதுர்யமாக செயல்பட வேண்டிய நேரம் இது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் தொடர்ந்து செயல்படுகின்றன. அவற்றில் சில அமைப்புகளின் பெயர்கள்:
1. அல் முஜாகிதீன் போர்ஸ்
2. அல் உமர் முஜாகிதீன்
3. ஹர்கத்-உல்-அன்சார்
4. ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி
5. ஹிஸ்புல் முஜாகிதீன்
6. இக்வான் -உல்-முசல்மின்
7. ஜெய்ஸ்-இ-முகமது
8. லஷ்கர்-இ-தொய்பா
9. லஷ்கர்-இ-முகமதி
10. ஜமாத்-உல்-முஜாகிதீன்
காஷ்மீர் கலவரம் ஒரு புள்ளி விவரம் :காஷ்மீரில் கடந்த 1988ல் இருந்து நடந்து வரும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்த ஒரு புள்ளி விவரத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*பயங்கரவாத சம்பவங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை, 65 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை.
*வன்முறை மற்றும் கலவரம் காரணமாக இதுவரை 3,429 இளைஞர்கள் மாயமாகியுள்ளனர்.
*பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் 49 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*பாகிஸ்தானில் 37 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*இந்திய சிறைகளில் 125 காஷ்மீர் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
*பயங்கரவாத சம்பவங்களால் 75 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்கள், அங்கிருந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
*பயங்கரவாதிகளிடம் இருந்து 60 டன் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (2009 வரை).
சுற்றுலாவை சீர்குலைக்க சதி?காஷ்மீர், சுற்றுலாவுக்கு பிரபலமான இடம். கோடை காலத்தில் இங்குள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் சில ஆண்டுகள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நிலைமை சற்று சீரடைந்ததை தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரத் துவங்கினர். இதை சீர்குலைக்கும் வகையில் தான், தற்போது திட்டமிட்டு இங்கு கலவரம் நடப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் தொடர்ந்து இங்கு கலவரம் நடப்பதை இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுகின்றனர்.கடந்த 2008 கோடை காலத்தில், அமர்நாத் குகை கோவில் வாரியத்துக்கு, நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்னையில் கலவரம் வெடித்தது. இதனால், சுற்றுலாத் துறை அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு, இரண்டு இளம் பெண்கள் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறி, பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதனால் கடந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே, இந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் கலவரம் வெடித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கான சதியா? கடந்த இரண்டு ஆண்டாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. மிகப் பெரிய வல்லரசு நாடுகள் கூட, இந்த பொருளாதார மந்த நிலைக்கு தப்பவில்லை. பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா, இந்த பொருளாதார மந்த நிலையிலும் வெற்றிகரமாக தாக்கு பிடித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தாலும், பெரிய அளவிலான நிதி பிரச்னை ஏற்படவில்லை. ஆசிய பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா வல்லரசாக உருவாகி விடுமோ என்ற அச்சம், மற்ற வல்லரசு நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் மூலமாக அந்த நாடுகள் ஏற்படுத்தி வருகின்றனவோ என்ற சந்தேகத்தை பொருளாதார நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். காஷ்மீரில் தற்போது ஏற்பட்டு வரும் கலவரம் இதன் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதும் அந்த நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
– நமது சிறப்பு நிருபர் -நன்றி-தினமலர்.
பிரிவுகள்: உயிர் பலி, கற்களை வீசி தாக்குவது, கல்வீச்சு, குடிசைத் தொழிலான கல்வீச்சு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது, ஜவாஹிருல்லா, ஜஹல்லியா, ஜாகிர் நாயக், ஜின்னா, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், தடியடி, தன்னாட்சி, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதிகளுக்கு பணம், துப்பாக்கிச் சூடு, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நம்பிக்கையில்லாதோர் மீதான போர், பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம், பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு, பழமைவாதம், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மத-போலீஸார், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், வந்தே மாதரம் எதிர்ப்பது
Tags: ஃபத்வா, அமைதிக்கு வேட்டு, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உயிர் பலி, கண்ணீர் புகை, கற்களை வீசி தாக்குவது, கல்வீச்சு, காஷ்மீரம், குடிசைத் தொழிலான கல்வீச்சு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், தடியடி, தன்னாட்சி, துப்பாக்கிச் சூடு, பயங்கரவாத முகாம்கள், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: 3 பின்னூட்டங்கள்
ஜூலை 10, 2010
ஜிஹாதிகள் ஊக்குவிக்கும் தெருக் கலவரங்கள், சாவுகள்
திவிரவாதிகளின் திட்டமிட்ட சதி அவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது: குலாம் அஹமது தார் (Ghulam Ahmad Dar) மற்றும் ஷபீர் அஹமது வானி (Shabir Ahmed Wani) என்ற ஹுரியத் என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பட்காம் என்ற இடத்தில் போட்ட கூட்டத்தில் இப்படி பேசிக்கொள்கிறார்கள்[1]:
ஷபீர் அஹமது வானி: உங்க ஆளுங்க காசை வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார்கள்.
குலம் அஹமது தார்: இல்லை, இந்த கும்பலை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக போய்விட்டது………………அதற்கு பிறகும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஷபீர் அஹமது வானி: என்னடா பேசுரே, அவர்கள் மகம் என்ற இடத்திலிருந்து இருந்து பட்கம் நோக்கி வருவதற்குள் கலவரம் வெடிக்க வேண்டும், என்று சொல்லியாகி விட்டதே.
குலம் அஹமது தார்: நான் சொன்னேனே………………
ஷபீர் அஹமது வானி: ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…… (அதாவது அப்பாவி மக்கள் சாகவேண்டும்).
குலம் அஹமது தார்: ஐயா………………
ஷபீர் அஹமது வானி: இன்று 15 பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…………..
குலம் அஹமது தார்: ம்ம்ம்ம்ம்ம்………………
செய்யது அலி ஷா கிலானி என்ற ஹுரியத் தலைவரின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வதாக ஒலிஅலைகளை இடையில் குறுக்கிட்டு பதிவு செய்தபோது தெரிகின்றது[2]. இதைத்தவிர, இன்னுமொரு பதிவு செய்யப்பட்ட உரையாடலும் கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் விவரங்கள், இதோ:
Abu Inquilabi: Stone-throwing has started. |
அபு இன்குவிலாபி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டதா?. |
Suspect: Stone-throwing has started. |
தீவிரவாதி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டது. |
Abu: Allah be praised.
|
அபு இன்குவிலாபி: அல்லாவைப் போற்றுவோமாக! |
Suspect: Allah be praised. Today, curfew was imposed at night.
|
தீவிரவாதி: அல்லாவைப் போற்றுவோமாக! இன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. |
Abu: Yes, I’ve also heard the army has been called.
|
அபு இன்குவிலாபி: ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது என்று கேள்விப் படுகிறேன்? |
Suspect: Yes, some troops have arrived.
|
தீவிரவாதி: ஆமாம், சில ராணுவ வீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள். |
Abu: There was no Army earlier…
|
அபு இன்குவிலாபி: ஆனால், முன்னால் ராணுவம் இல்லை, இல்லையா………….? |
Suspect: There are some troops in Srinagar, but here in Shopian and Pulwama, there is CRPF and police. |
தீவிரவாதி: ஸ்ரீநகரில் சில ராணுவ வீரர்கள் இருந்தார்கள், ஆனால், சோஃபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் மற்றும் போலீஸ்தான் இருந்ததன. |
Read more at: http://www.ndtv.com/article/india/kashmir-more-phone-conversations-prove-instigated-violence-36612?cp |
கலவரம் செய்ய ஆட்கள் பணம் கொடுத்து கூட்டிவந்தது: ஹுரியத் மாநாடு என்ற இந்து விரோத, பாகிஸ்தான் ஆதரவு கூட்டத்திற்கு[3] எந்த மனித உணர்வுகளும் இல்லாத வெறிபிடித்தக் கூட்டம் என்பதை தானே வெளிப்படுத்திக் கொண்டு விட்டது. ஹுரியத் மற்றும் இந்திய விரோத தீவிரவாத இயக்கங்கள், கல் எறிவதற்கு ஒருநளைக்கு ரூ.300/- என்று பணம் கொடுத்து[4] கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளனர்[5]. அதனால் அந்த கல்லெறி வெறிக்கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை[6] (என்னுடைய முந்தைய பதிவில் புகைப்படங்களைப் பார்க்கவும்). இப்படி அடியாட்கள் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் தீவிரவாதிகளுடந்தான் “பேச்சு” நடத்துகிறார் சிதம்பரம்! இதற்காக பணம் துபாயிலிருந்து காஷ்மீரத்திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது[7]. சந்தேகம் வராத அளவிற்கு ரூ.10 லட்சங்கள் என்று வங்கிகள் மூலம் மாற்றப் பட்டு, பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. ஏற்கெனவே 40 ஆண்டுகளாக அழகான காஷ்மீரத்தை நரகமாக்கி விட்ட இந்த தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தான் காஷ்மீர் மக்களுக்கு சொர்க்கத்தைக் கொடுக்கப் போவதாக நம்பியிருக்கும் மக்களை என்ன சொல்லுவது?
மக்களை இப்படி நரபலியிடுவது தியாகம் . ஷஹீத் ஆகுமா? ஹுரியத் என்ற இந்திய விரோத இயக்கத்தின் தலைவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான்[8]. மதத்தால் மூளைசலவை செய்து, இப்படி 10-15 பேர்களை நரபலி கொடுக்கப் படவேண்டும் என்று ஒரு வெறிபிடித்தவன் கத்திக் கொண்டிருக்கிறான், ஆனால், அது தெரிந்த பிறகும், இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள், முஸ்லீம்கள் அமைதியாக இருக்கிறார்கள். எந்த பொறுப்புள்ள முகமதியனோ / முஸல்மானோ, முஸ்லீமோ இதைக் கண்டிக்கவும் இல்லை. சென்னைக் குலுங்கியது, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது என்று பெருமை பேசி, தம்பட்டம் அடித்துக் கொண்ட கூட்டங்களும் பொத்திக் கொண்டுதான் உள்ளன[9]. செக்யூலரிஸ ஜீவிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற இந்தியர்களுக்கோ, கால்பந்து பார்ப்பதற்கக நேரமில்லை, இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.
மெஹ்பூபா முஃப்டியின் அடாவடித்தனம்[10]: நிருபர்கள் அந்த மெஹ்பூபா முஃப்டி என்ற பெண்மணியிடம் கேட்கிறார்கள், “என்ன அம்மையாரே, இப்படி தாங்கள் ஆதரிக்கும் தீவிரவாத ஆட்கள் பேசிக் கொள்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள்?”
மெஹ்பூபா முஃப்டி: அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. அங்கு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளது உண்மை.
நிருபர்: ஆனால், கலவரத்தை உண்டாக்கியது, தாங்கள் ஆதரிக்கும் ஹுரியத் ஆட்கள் தாம். அதை பற்றி என்ன சொல்கிறிர்கள்?
மெஹ்பூபா முஃப்டி: சிலர் அவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அரசு சக்திகள்தாம் அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்.
நிருபர்: ஆனால், கலவரம் ஏற்படுத்தியதே ஹுரியத் ஆட்கள் என்றாகிறது. அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.
மெஹ்பூபா முஃப்டி: (அதே பாட்டைத் திரும்ப-திரும்ப பாடிக்கொண்டிருந்தது, உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை என்று நன்றாகவே தெரிகிறது)
ஷபீர் அஹமது வானி கைது: வெள்ளிக்கிழமையன்று, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டு, மக்கள் வெளியே வரவேண்டிய நிலையுள்ளதால், ஏற்கெனெவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஷபீர் அஹமது வானி என்பவன் வியாழக்கிழமை அன்றே, அடையாளங்காணப்பட்டான். மேலே குறிப்பிடப்பட்ட ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த, ஷபீர் அஹமது வானி என்பவன் தான் அது, என்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, கலவரத்தைத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்[11].
பாகிஸ்தான், பாகிஸ்தான் அபகரித்துள்ள காஷ்மீர், இந்திய காஷ்மீர் என்று ஜிஹாதிகள் இந்தியர்களைக் கொன்றுவருகின்றனர்: ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் காஷ்மீரத்தில் இப்பொழுதைய கலவரங்களை ஊக்குவித்து, அப்பாவி மக்களைப் பகடைக் காய்களாக உபயோகித்து, பிரச்சினையை வளர்க்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது:
Transcripts show Hizb activist seeking details from PoK
Press Trust Of India
New Delhi, July 09, 2010; First Published: 18:16 IST(9/7/2010)
Last Updated: 21:21 IST(9/7/2010)
http://www.hindustantimes.com/Transcripts-show-Hizb-activist-seeking-details-from-PoK/Article1-569818.aspx
In clear signs of cross-LoC linkages to the latest trouble in Kashmir, talks intercepted by security agencies reveal how a Hizbul Mujahideen activist based in Pakistan-occupied Kashmir enquires from a local contact about the status of protests and government response. The undated transcripts of the conversation describe a person in Shopian in South Kashmir informing Abdul Inquilabi about protests, curfew and troop movement into Srinagar.
“Kya baat hui hai yaar (what has happened, friend?),” asks Inquilabi, who according to security agencies is a Hizbul Mujahideen activist based in PoK.
“Pata nahi, halat kharab huyi hai (I do not know, the situation has deteriorated),” responds the unidentified person from Shopian, according to the transcripts.
“Yeh Hindustani fauj panga le rahi hai Kashmiriyon ke saath. Yeh kahan Chhodegi inko (The Indian Army is troubling Kashmiris. It will not spare them),” remarks Inquilabi.
“Chhodte nahi yeh (They don’t spare),” is the response.
Then Inquilabi asks whether stone-pelting has begun and the answer is in affirmative.
Inquilabi asks whether a procession is to be taken out on that day and the response is that it is to start at 9 am.
The Shopian-based person says that an announcement had been made in the morning that all should participate in the protest. He then informs that security forces have clamped curfew at night.
Inquilabi says that he has heard about more Army being requisitioned. The response is, “yes, some has reached.”
Inquilabi then asks, “was Army not there earlier?”
His contact replies that it is in some strength in Srinagar, but in Shopian and Pulwama it is CRPF and police. |
ஆனால், காஷ்மீரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்தே, அத்தகைய பயங்கரவாதத்திற்கு, இஸ்லாம் என்ற பார்வையில் துணை போகின்றனர்.
ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கின்றனவா? இந்திய முஸ்லீம்கள் இதை முக்கியமாக கவனித்து யோசிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஜிஹாதி பயங்கரவாத்தால் நாட்டையேக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். பெண்கள் அங்கு வெளியே வரமுடியாது, பள்ளிக்கூடங்களுக்குச் செல்லமுடியாது. ஏன் பென்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களையெல்லாம் இடித்துவிட்டார்கள்.
பாகிஸ்தானில் தினம் வெடிகுண்டு வெடித்து மக்கள் சாகிறார்கள். அதாவது, முஸ்லீம்களே முஸ்லீம்கள் இஸ்லாம் பெயரில் கொன்றுக் குவிக்கிறார்கள். இத்தகைய நுனுக்கங்களை முஸ்லீம்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆக, இந்த நவீன காலத்தில், தங்களது மதத்தைத் தாராளமாகப் பின்பற்றிக் கொண்டு, ஏன் அமைதியாக, ஆனந்தமாக வாழக்கூடாது? எதற்கு யாதாவது, ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு இப்படி கலவரங்கள், கலாட்டாக்கள் செய்து கொண்டு அமைதியைக் குலைத்து வாழவேண்டும்?
இந்துக்களை விரட்டிவிட்டார்கள், பிறகு ஏன் அங்கு அமைதி வரவில்லை?
இந்திய முஸ்லீம்கள், இதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேண்டும். மக்களை பலிகொடுத்து, …………..நரபலி கொடுத்து, ……………தீவிரவாதத்தை வளர்த்து, ………………பயங்கரவாதத்தால் மனிதகுண்டுகளை வெடித்து மனிதர்களைக் கொன்று……………….இப்படியே வாழ்நாளைக் கழிப்பது என்ன அர்த்தம்? இதற்காக நம்பிக்கைகளை வளர்க்கவேண்டுமா?
[1] http://www.ndtv.com/article/india/kashmir-intercept-10-15-people-more-must-be-martyred-36362?cp
[2] http://timesofindia.indiatimes.com/India/Did-separatists-plan-instigate-Kashmir-violence/articleshow/6143623.cms
[3] http://sify.com/news/home-ministry-says-kashmir-valley-violence-being-planned-instigated-news-national-khis4dedbdd.html
[4] With reports of anti-national elements owing allegiance to the separatists creating unrest in Kashmir, the Centre has already asked the state government to take stern measures. It was claimed by government agencies that the stone-pelters were being paid Rs 300 per day by separatists and militant outfits.
http://www.deccanchronicle.com/hyderabad/kashmir-rebels-wanted-15-killed-fan-trouble-647
[5] திராவிட கட்சிகள் எப்படி காசு கொடுத்து லாரி-லாரியாக, பஸ்-பஸ்ஸாக குட்டத்தைக் கூட்டி வருவார்களோ, கலவரம் செய்ய இப்படி கான்டிராக்ட் எடுத்து மக்களைக் கொல்லும் கூட்டம் இப்பொழுதுதான் வெளிப்படுகிறது போலும்.
[6] உள்ளுர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள் முகமூடி இல்லாமல் இருப்பார்கள், இறக்குமதி செய்யப் பட்ட அதாவது காசு கொடுத்து கூட்டி வரப்பட அடியாட்கள் கூட்டம் முகங்களைத் துணியால் மறைத்து இருப்பதைப் பார்க்கலாம்.
[7] http://thehindu.com/news/article506279.ece
[8] http://www.tribuneindia.com/2010/20100709/main3.htm
[9] இணைத்தள வீரர்கள் காஷ்மீரத்தின் அராஜகம், கொலைகள், கற்பழிப்புகள் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். மற்ற ஏதாவது ஒரு பிரச்சினையை 50-100 பேர்கள் மாற்றி-மாற்றி பிளாக் போட்டு, திசைத் திருப்பி விடுவார்கள்.
[10] http://ibnlive.in.com/news/separatist-leaders-behind-kashmir-violence/126253-3.html?from=tn
[11] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Hurriyat-leader-Wani-held/articleshow/6149661.cms
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அசிங்கப்படுத்திய முகமதியர், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, இணைதள ஜிஹாத், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கலவரங்கள், கல்லெறி வெறிக்கூட்டம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குண்டு வெடிப்பது, சரீயத், சரீயத் சட்டம், செக்யூலரிஸ ஜீவி, ஜமாத்-உத்-தாவா, ஜமைத்-உக்-ஃபர்கன், ஜம்மு-காஷ்மீர், ஜஹல்லியா, தக்காண முஜாஹித்தீன், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவுத் இப்ராஹிம், தாவூத் ஜிலானி, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நம்பிக்கையில்லாதோர் மீதான போர், நாத்திக காஃபிர், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மத்ரஸா, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஃப்டி முஹம்மது சையத், முஜாஹித்தீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், லஷ்கர்-இ-தொய்பா, வெள்ளிக் கிழமை
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கல்லெறி வெறிக்கூட்டம், காஷ்மீரம், குலாம் அஹமது தார், சிறுபான்மையினர், செக்யூலரிஸ ஜீவி, செக்யூலரிஸம், பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், புனிதப்போர், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியன், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸல்மான், முஸ்லீம், முஸ்லீம்கள், ஷபீர் அஹமது வானி, ஹுரியத்
Comments: Be the first to comment
ஜூலை 2, 2010
இளைஞர்களை கவசமாக உபயோகப்படுத்தும் இந்திய விரோதி ஜிஹாதிகள்!
காஷ்மீரத்தில் வழக்காம் போல தெருக்களில் ரகளை, கலாட்டா, கற்கள் எறிவது என்று ஆரம்பித்து விட்டன. எப்பொழுதெல்லாம், இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ, அப்பொழுதெல்லாம், இம்மாதிரியான கலாட்டா ஆரம்பிக்கப்படும். போலீஸ், பாதுகாப்புப் படை முதலியோர், அத்தகைய விஷமிகளை, கருங்காலிகளை, ஜாக்கிரதையாக கையாளவும் என்று அறிவுரை வேறு – அதாவது, அவர்கள் அடித்தால் கூட, திருப்பி அடிக்கக் கூடாது.

Paramilitary-with-restrain
வீரமூள்ள ஜிஹாதிகள், கோழையான வீரர்கள் என்றா எடுத்துக் கொள்ள முடியும்? அரசு சொல்கிறது, அவர்கள் அப்படி கல் எரிந்து தாக்கினாலும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இரு!

kashmiri_protestors_rampage
அவ்வளவே தான், கேட்க வேண்டுமா, கிளம்பி விட்டார்கள்!

Youth-employed-for-stonepelting
கல்லடித்தால் காசு! ஆமாம், இங்கு எப்படி லாரிகளில் கூட்டத்தை ஏற்றிவருகின்றனரோ, அங்கே அப்படி, ஒரு கலாட்டா, கலவரம் ஆரம்பிக்க வேண்டும் என்றால், உடனே தயாராக ஆட்கள் அனுப்பி வைக்கப்படும். எல்லாவற்றிற்கும் தனித்தனி ரேட்.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை
ஒரு போலீஸ் அதிகாரி தனியாக மாட்டிக் கொண்டு விட்டார். அவ்வளவு தான், நமது சூரப்புலிகளின் வீரம் எல்லைகளைத் தாண்டி விட்டது! உடனே அந்த ஜிஹாதி பொறுக்கிகள் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

restrained-police-attacked-mercilessly
முதலில், அந்த போலீஸ் அதிகாரி கர்களால் அடித்துத் துரத்தித் தனிமைப் படுத்தப் படுகிறார்.

Police-officer-attacked-cruelly
அடித்துத் தள்ளப்படுகிறார். ஆயுதமே இல்லாத அந்த வீரர் கீழே விழுகிறார். ஒரு வீரனுக்கு இவ்வளவு கேவலமான நிலை வர வேண்டாம், ஆனால், துப்புக் கெட்ட அரசாங்கம் அவ்\அர்களைப் பொறுமையாக இரு, அடி வாங்கு என்று சொல்லி அனுப்புகிறது!

Police-beated-brutally
வீரரின் கையில் இருக்கும் பிளாஸ்டிக்-கொம்பும் கீழே விழுகிறது. அதையே எடுத்து, ஒரு இளைஞன் அந்த வீரனை அடித்து நொறுக்குகிறான்.

a-boy-attacks-the-police-wagon
இதோ, இன்னொரு மாபெரும் வீரர், ஒரு கட்டையெடுத்துக் கொண்டு, ஒரு போலீஸ் வேனையே அடிக்க வருகிறான்!

Street-riots-police-to-watch
சின்ன பையன்களுக்கு எப்படி இந்த தைரியம் வரும்? இது உண்மையான தைரியமா? சும்மா பார்த்துக் கொண்டு இரு, அவர்கள் அடித்தாலும், அடிக்காதே – என்றால், கேவலமாகி விட்டது. ஜிஹாதி பையன்களுக்கு வெஏறு விதமாக அர்த்தம் சென்றடைந்து விட்டதே. ஆஹா, தங்களைக் கண்டால், “இந்தியர்களுக்கு” பயம், அதனால் தான், பதில்குக்கு அடிக்காமல் இருக்கிறார்கள். ஆஹா, அல்லாவின் மகிமையே மகிமை என்று தனறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

Protecting-the-protest-or-protecting-from-protesters
பாவம், இப்படியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொந்து இருக்க வேண்டும் போலிருக்கிறது!

blind-Jihadi-attacking
டேய், முட்டாள்! அறிவில்லை உனக்கு? நான் உங்காள்டா! என்னையே அடிக்க வருகிறாய்?

police-vehicle-attacked
இந்த தடவையே தீவிரவாதிகளுக்கு பத்மஸ்ரீ விருதுகள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.
இனி அடுத்த வருடம், இந்த காலிகளுக்கு பரமவீர சக்கர விருதுகள் கொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை!
பிரிவுகள்: அசிங்கப்படுத்திய முகமதியர், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல்லா, அஹமதியா, இணைதள ஜிஹாத், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், ஒஸாமா பின் லேடன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, செக்யூலார் அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர், ஜஹல்லியா, மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மத்ரஸா, முஜாஹித்தீன், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம்
Tags: ஃபத்வா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காசு வாங்கி கல் அடிப்பது, காஷ்மீரம், காஷ்மீர், காஷ்மீர் தெரு கலாட்டா, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: Be the first to comment
ஜூன் 22, 2010
காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.
சுதந்திரத்தின் முன்னும், பின்னும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை அளவிற்கு அதிகமாக கொஞ்சி, கெஞ்சி, செல்லம் கொடுத்து, சீரழந்துதான் மிச்சம். அதுமட்டுமல்லாது, நாட்டையே இரண்டாகப் பிளந்து, பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தது. “சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்”, என்று முகமது அலி ஜின்னா எகத்தாளத்துடன் கூறிக்கொண்டார். ஆனால், காந்திஜியோ லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை.
முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் உள்ள இந்துக்களையும் அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. அதனை கேட்க எந்த இந்திய அரசியக் கட்சிக்கும் யோக்கியதை இல்லை, உணர்வுல் இல்லை. மதத்தால் ஒன்றாக இருக்கமுடியாத பாகிஸ்தான் இரண்டாகியது. ஆனால், விடுதலைக்காக உதவிய இந்தியாவிற்கே எதிராகத்தான் பங்களாதேசம் செயல்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது.
செக்யூலரிஸம் வந்து முஸ்லீம்களின் வெறித்தனத்தை, அடிப்படைவாதத்தை, ஏன் தீவிரவாதத்தைக்கூட அதிகமாகவே வளர்த்தது. இன்று தேசிய ஜிஹாதி தீவிரவாதம் உள்ளதாக இந்தியா பெருமைப் பட்டுக் கொள்கிறது.
தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு, முஸ்லீம்களை ஓட்டுவங்கிகளாக மாற்றி, அவர்களின் வெறியை இன்னும் வளர்க்கத்தான் செய்தது.
இந்ந்திலையில், காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லீம் அமைப்புகள் மிரட்டி வருவது ஆச்சரியமாக உள்ளது. முன்பு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை “ஜிஹாதி” விஷயத்தில் மிரட்டினர். இப்பொழுது, வெளிப்படையாக, இவ்வாறு மிரட்டியுள்ளது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.
சென்னையில் ஜூலை 4ல் காங்.,க்குஎச்சரிக்கை விடும் முஸ்லிம் மாநாடு:தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பேட்டி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23986
ராமநாதபுரம்:””முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத காங்கிரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜூலை 4ல் சென்னையில் முஸ்லிம்கள் மாநாடு நடைபெறும்,” என, தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2004 தேர்தலில் காங்.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பிய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தர ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தும், அது குறித்து லோக்சபாவில் காங்.,விவாதம் செய்யவில்லை. சட்டம் இயற்றவில்லை. அறிக்கை தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அனால் பிரதமரோ,””அனைத்து கட்சியின் ஒத்த கருத்து வந்த பின்தான் ஒதுக்கீடு செய்யப்படும்,” என , பல்டி அடித்துவிட்டார். இதன்காரணமாக முஸ்லிம்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.
இதன் வெளிப்பாடாகத்தான் ஜூலை 4 ம் தேதி, சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. தமிழகத்திலிருந்து 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர். மாநாடு காங்கிரசுக்கு எச்சரிக்கை மாநாடாக இருப்பதோடு, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு எதிராக செயல்படுவது என முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இடஒதுக்கீடு தர காங்., சம்மதித்தால் ஆதரவு தருவோம், என்றார்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
திவு செய்த நாள் : ஜூலை 07,2010,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34630
புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் போடப்பட்டது.இந்த தீர்மானங்களை விளக்கியும் இட ஒதுக்கீட்டை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரிவுகள்: அரசாங்கத்தை மிரட்டல், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள் ஒதுக்கீடு, உள்துறை சூழ்ச்சிகள், கராச்சி திட்டம், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காங்கிரசுக்கு எச்சரிக்கை, சிதம்பர ரகசியங்கள், சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், ஜமாத், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மேற்கு பாகிஸ்தான், ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன், வங்காள தேசம், ஷேக் முஜிபுர் ரஹ்மான்
Tags: அரசாங்கத்தை மிரட்டல், காங்கிரசுக்கு எச்சரிக்கை, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பங்களாதேசம், முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன்
Comments: 2 பின்னூட்டங்கள்
மே 29, 2010
இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்
அல்லாவைப் பற்றி பிரமாதமாக பேசுகிறார்கள் விளக்கம் கொடுக்கிறார்கள், ஆனால் அல்லாவை நம்புகிறவர்களையே, முஸ்லீம்கள் எதிர்ப்பது, தாக்குவது, கொன்றுக் குவிப்பதை முஸ்லீம்கள் விளக்குவதில்லை.
சுன்னிகள் ஷியாக்களை, போர்ஹாக்களை, அஹமதியாக்களை அவ்வாறு முஸ்லீம்கள் எதிர்ப்பது, தாக்குவது, கொன்றுக் குவிப்பதை – அந்த சூட்சுமத்தை – முஸ்லீம்கள் விளக்குவதில்லை.
முஸ்லீம்களுக்குள்ளேயே நிகழும் இந்த புனித ஜிஹாதின் மகத்துவம் என்ன என்று மற்றாவர்களுக்குப் புரியவைப்பதில்லை.
இஸ்லாமாபாத் 28-05-2010: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து சுமார் 2 ஆயிரம் பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். துப்பாக்கி சூடும் நடந்தது. பல இடங்களில் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்ததால் பலர் பயங்கரவாதிகளிடம் சிக்கினர். லாகூரில் உள்ள இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியபடி நுழைந்தனர். துப்பாக்கியால் சுட்டப்படி வந்தனர். இந்நேரத்தில் என்னசெய்வதென்று அறியாத மசூதியிலேயே பதறியபடி நின்றனர். இந்நேரத்தில் உள்ளே நுழைந்த சுமார் 2 ஆயிரம் பேர் வரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இது வரை 20 பேர் இறந்து விட்டதாக தெரிகிறது. அதிரடி மற்றும் ராணுவத்தினர் மசூதி முன்பாக குவிந்துள்ளனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என திக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மசூதியில் இருப்பவர்களை மீட்க ராணுவம் போராடி வருகின்றனர். இன்னும் துப்பாக்கி சூடு நீடித்து வருகிறது.
பாகிஸ்தான் மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 80 பேர் பலி
First Published : 29 May 2010 12:00:00 AM IST
Last Updated :
பயங்கரவாதிகள் சுட்டதில் காயமடைந்தவரைக் காப்பாற்ற தூக்கி வரும் பாகிஸ்தானிய கமாண்டோ படை வீரர்.
80 பேர் கொல்லப்பட்டனர், 100 காயம்: லாகூர், மே 28: பாகிஸ்தானிலுள்ள 2 மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 80 பேர் பலியாயினர்; 100 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் லாகூரிலுள்ள மாடல் டவுன் மசூதி மற்றும் கார்ஹி சாஹு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இரு மசூதிகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.
ஜிஹாதிகள் தொழுகை புரியும் முஸ்லீம்களைத் தாக்குதல்: பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் இரு மசூதிகளுக்குள்ளும் பயங்கரவாதிகள் புகுந்தனர். மசூதிகளின் வாயிலில் நின்றுகொண்டிருந்த போலீஸார், பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், தங்களிடமிருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். மேலும் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு மசூதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்த அறைகளுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டனர். ஆனால் சிலரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
முஸ்லீம் போலீஸாரே ஜிஹாதிகளுடம் சண்டையிடுவது: சம்பவம் அறிந்ததும் லாகூர் போலீஸôரும், பாகிஸ்தான் துணை ராணுவப் படையினரும் மசூதிகளை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை பிற்பகல் 4 மணிக்கு முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களையும் போலீஸார் மீட்டனர். சுமார் 8 முதல் 10 பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஜிஹாதிகள் கொல்லப் படுவது, தொழுகை புரிந்த முஸ்லீம்களும் கொல்லப்படுவது: இதில் 3 பயங்கரவாதிகள் கார்ஹி சாஹு மசூதிக்கு வந்தபோது தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஏராளமானோர் பலியாயினர். அந்த பயங்கரவாதிகளின் தலைகள், உடல்கள் சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மசூதிகளுக்குள் நுழைந்த மற்ற பயங்கரவாதிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் போலீஸ் தாக்குதலில் இறந்தார்களா அல்லது தப்பியோடி விட்டார்களா என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 80 பேர் பலியாயினர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் இறந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், லாகூரைச் சேர்ந்த டி.வி. சேனலில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் அடங்குவர்.
தற்கொலைப் படையினர்: மசூதிகளுக்குள் புகுந்த அனைவரும் தெஹ்ரிக்-இ-தலிபான் எனப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவருமே உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு மசூதியில் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இப்படி இறக்கும் முஸ்லீம்களில் யார் அல்லாவை மகிழ்வித்ததால் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறர்கள்
பிரிவுகள்: அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஃபிர், காஃபிர்கள், காபா, குரான், சரீயத், சரீயத் சட்டம், சுன்னி, ஜிஹாத், புனிதப் போர், போர்ஹா, மசூதி, மசூதி சாவு, மத-அடிப்படைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மினாரெட், மினாரெட் விழுதல், ஷியா
Tags: சுன்னி, ஷியா
Comments: 3 பின்னூட்டங்கள்
மே 28, 2010
இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள் என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்
பாகிஸ்தான் மசூதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 80 பேர் பலி
First Published : 29 May 2010 12:00:00 AM IST
பயங்கரவாதிகள் சுட்டதில் காயமடைந்தவரைக் காப்பாற்ற தூக்கி வரும் பாகிஸ்தானிய கமாண்டோ படை வீரர்.
அஹமதியா முஸ்லீம்களை தாக்கும் இந்த ஜிஹாதிகள் யார்? அஹமதியா முஸ்லீம்களை தாக்கும் இந்த ஜிஹாதிகள் யார் என்று அடையாளங்காண முஸ்லீம்களே முயன்று வருகின்றனராம். அஹமத்தியாக்கள் மசூதிகளில் தொழுகையில் இருக்கும் அந்நாளில், யுயைம்-இ-தக்பீர் – பாகிஸ்தானின் தன்னிரைவு நாள் (Youm-i-Takbeer or Pakistan’s Self Reliance Day) கொண்டாடப்பட்டதாம். மே.28,1998ல் பாகிஸ்தான் அணுசோதனை நடத்திய தினமாக அது கொண்டாடப் படுகிறது. ஆனால், அது “இச்லாமியத் தன்னிரைவு” நாள் இல்லை என்று “காஃபிர்கள்” மீது ஜிஹாத் தொடுக்கப் பட்டுள்ளது அறிந்து, “முஸ்லீம்கள்” நடுங்கி சாகிறார்களாம். வெள்ளிக் கிழமை என்றாலே குண்டு வெடிக்குமோ, தொழுகையில் சுடுவார்களோ, மசூதிகளில் பிணங்கள் விழுமோ என்று அஞ்சுகிறார்களாம்.
கராச்சி திட்டத்தின் தொடர்ச்சியா? தெரிக்-இ-தாலிபான் (Tehrek-e-Taliban) மற்றும் அல்-குவைதா அல்-ஜிஹாத் (Al-Qaeda Al-Jihad) என்ற இரண்டு தீவிரவாதக் குழுக்களின் மீது சந்தேகம் இருந்தாலும், தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் பங்கு தெரியவருகின்றது. தாக்குதல் நடத்திவர்கள் எல்லாமே 15 முதல் 18 வரை வயதுடையவர்களாக இருப்பதாகவும், பிடிபட்ட ஒருவன் தான் கராச்சியில் ஒரு மதரஸாவில் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளான். ஆகவே, மறுபடியும் பாகிஸ்தானிய ஆதரவு வெளிப்படுகிறது, அதாவது கராச்சியிலேயே, அவ்வாறு ஒரு மதரஸா நடத்தி, தீவிரவாத பயிற்சி பாகிஸ்தானிய உளவாளி, ராணுவம் மற்ற பிரிவுகளுக்குத் தெரியாமல், அளிக்கமுடியாது. ஏனெனில், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஐ.எஸ்.ஐ ஏற்கெனெவே அந்த வேலையை செய்து வருகிறது. ஆகவே, இது “கராச்சி திட்டத்தின்” ஒரு பகுதியாகவும் இருக்கலாம். சமீபத்தில், “காஃபிர்களைத் தாக்கும் திட்டம்” ஒன்று வடிவமைத்து, செயல்படுத்தப் படுவதாகத் தெரிகிறது.
முஸ்லீம்-அல்லாதவர்களைத் தாக்குவது ஏன்?: இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும், மத ரீதியில் மூளைச்சலவைச் செய்யப் பட்ட ஒரு முஸ்லீம், ஒரு காஃபிரைக் கொல் என்றால், அது அல்லாவின் ஆணை என்றே ஏற்றுக் கொண்டு கொன்றுவிடுவான். சொர்க்கத்தின் வாசல்கள் அவனுக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன என்ற நினைவுகளில்தான் அவன் இருப்பான். அதுபோல, அஹமதியாக்கள் “காஃபிர்கள்” என்று அறிவித்தவுடன், அதாவது, அப்படியொரு ஃபத்வா – மத ரீதியிலான ஆணையிட்டவுடந்தான், இந்த ஜிஹாதிகள்-புனித போராளிகள் புறப்பட்டு காஃபிர்களைக் கொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரைக்கும் முஸ்லீம்-அல்லாதவர்கள் என்றதில் இப்படி முஸ்லீம்களே வரும்போது, இதர அல்-கிதாபியர்களையோ அது இல்லாத காஃபிர்களின் நிலைப்பற்றி சொல்லவே வேண்டாம். அல்-கிதாபியர்கள் என்பவர்கள் “வெளிப்படுத்தப் பட்ட புடததகங்களை” உடையவர்கள், இதில் யூதர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள் தாம் அடங்குவர். இந்த மூன்று கோஷ்டிகள்தாம் உலகத்தில் பல மத கலவரங்களுக்கு, சண்டைகளுக்கு, போர்களுக்கு, உலக யுத்தங்களுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளன.
அஹமதியாக்கள் தொடர்ச்சியாகத் தாக்கப் பட்டு வருகிறர்கள்: மேலும், கைதியான் என்ற இடத்தைச் சேர்ந்த அஹமதியா முஸ்லீம்களை பாகிஸ்தானிய சுன்னி முஸ்லீம்கள், “முஸ்லீம்கள்” என்று கருதுவதில்லை. அவர்கள் 1940களிலிருந்தே தாக்கப் பட்டு வருகிறார்கள். அவர்களது மசூதிகள் இடிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், இப்பொழுது ஜிஹாதி-தாலிபான் வலைக்குள் இந்த முஸ்லீம்கள் உட்பட்டிருப்பது, ஷியாக்களுக்குக் குறிப்பாக கவலையளித்துள்ளது. ஏனெனில், சுன்னிகள், ஷியாக்ககளைத் தாக்குவது என்பது சகஜமாக இருக்கிறது. அஹமதிய முஸ்லீம்கள் “நபிமார்கள்” என்றமுறையில், ராமன், கிருஷ்ணன், சிவன், புத்தன், என்று அனைவரையும் ஏற்றுக் கொள்வர். இந்த விஷயத்தில் சில முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வதுண்டு. அதே மாதிரி, நபிக்குப் பின்னும் சிலரை நபிக்களாகக் கருதுவர். இங்குதான் பிரச்சினை வருகிறது. ஏனெனில், இஸ்லாத்திற்கு முன்பு நபிகள் இருந்தால், அவர்களை அல்லாத்தான் அனுப்பி வைத்திருக்க முடியும், ஆனால், இஸ்லாத்திற்கு பிறகு, அல்லாவிற்கு அந்த வேலையில்லை, அதாவது, முஹம்மதுவோடு அந்த “ஸ்தானம்” பூர்த்தியாகிறது. ஆகையால் தான், முஹமத்துவிற்கு பின் நபி என்ற கோட்பாட்டை உருவாக்கும் அத்தகைய முஸ்லீம்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
அல்லாவைத்தவிர கடவுள் இல்லை, முஹம்மதுதான் நபி: ஒப்புக்கொள்ளவேண்டிய கடவுள் ஒருவனாக / ஒன்றாக இருக்கவேண்டும் என்றாலும், இரண்டு நம்பிக்கைகள் இருக்கவேண்டும். இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளது அல்லது பிரிக்கமுடியாதது.
இதன் ஒரே அர்த்தம் –
- “அல்லாதான் கடவுள்”,
- “அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”
- “அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை”
- “அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது”,
- “அல்லாதான் கடவுள் வேறு கடவுள் இல்லை”, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது, இருக்கவும் முடியாது”,
இப்படி விரியும், விளகங்கள், அதற்கேற்ற செயல்கள், செயாபாடுகள், திட்டங்கள் வளறும். அதே மாதிரி, இரண்டாவது சரத்திற்கு / விதிக்கு வரும் போது –
- “முஹம்மது தான் நபி”,
- “முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை”,
- “முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை, இல்லவே இல்லை”,
- “முஹம்மது தான் நபி, அவர்க்குப் பிறகு வேறு நபி இல்லை, இல்லவே இல்லை, இருக்கவும் கூடாது”,
இப்படி விரியும், விளகங்கள், அதற்கேற்ற செயல்கள், செயாபாடுகள், திட்டங்கள் வளறும்.
இதற்குத் துளிகூட வேறுவிதமாக விளக்கம் அளித்தாலோ, சித்தாந்தத்தை மனத்தில் கொண்டாலோ, மற்ற மதங்களுடன் சமரசம் போன்று “எல்லா மதங்களும் ஒன்று”, “எல்லா கடவுளர்களும் ஒன்று” என்ற ரீதியில் பேசினாலோ அவ்வளவேத்தான். ஆக, இப்படித்தான் பல “இஸ்லாம்கள்” உருவாகி வருகின்றன. “தாலிபான் இஸ்லாம்”, “ஜிஹாதி இஸ்லாம்”, முஜாஹித்தீன் இஸ்லாம்”, “அல்-உம்மா இஸ்லாம்”, “அல்-குவைதா இஸ்லாம்” என பல இஸ்லாம்கள் உருவாகி விட்டன. எல்லாமே அல்லாவைத்தான் நம்புகின்றன; குரானைப் படிக்கின்றன; அல்லது ஏற்றுக்கொள்கின்றன; ஸரீயத்தை பின்பற்றுகின்றோம் என்கின்றன; ஆனால், ஒரு இஸ்லாம் மற்ற இஸ்லாம் நம்பிக்கையாளர்களை, “நம்பிக்கையில்லாதவர்கள்” என்று அறிவித்துவிட்டால், அவ்வளவுதான், ஜிஹாத் தான், இனி அந்த “நம்பிக்கையில்லாத்தனம்” ஒழிக்கப்படும் வரை, அழிக்கப்படும்வரை, துடைத்து மறைக்கப்படும் வரை, முழுவதுமாக துடைத்தொழிக்குப்படும் வரை, ஜிஹாத் தொடரும், தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இஸ்லாத்திற்குள் உள்ள ஜிஹாத்: இந்த இஸ்லாத்தில் உள்ள ஜிஹாத் அல்லது, இஸ்லாத்தை பல இச்லாம்களக மற்றும்ம் ஜிஹாதை, ஒவ்வொரு முஸ்லீமும் புரிந்து, அறிந்ர்து, தெரிந்து நடந்து கொள்ளவில்லையென்றால், இஸ்லாம் இஸ்லாத்தை மட்டுமல்ல, முளிமை மட்டுமல்ல, அல்லாவை நம்புகின்றவனை மட்டுமல்ல, முஹம்மதுவை நபியாக ஏற்றுக்கொண்டவனை மட்டுமல்ல, “காஃபிர்” என்று அறிவிக்கப்பட்டால், ஜிஹாத் அவர்கள் மீது பாயும். வீரர்கள் அல்லாவின் ஆணையை செய்து முடிப்பார்கள்.
வேதபிரகாஷ்
29-05-2010
பிரிவுகள்: அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஃபிர், காஃபிர்கள், காபா, குரான், சரீயத், சரீயத் சட்டம், சுன்னி, ஜிஹாத், புனிதப் போர், போர்ஹா, மசூதி, மசூதி சாவு, மத-அடிப்படைவாதம், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மினாரெட், மினாரெட் விழுதல், ஷியா
Tags: அஹமதியா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், சுன்னி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பரவும் தீவிரவாதம், போர்ஹா, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், ஷியா
Comments: 7 பின்னூட்டங்கள்
மே 16, 2010
இந்திய துரோகி ஜிஹாதிகளுக்கு சம்பள உயர்வு!
முஸ்லீம்கள் “முஸ்லீம்களகவே” செயல்பட்டு ஜிஹாதி-தீவிரவாதத்தை வளர்த்து, இந்தியாவிற்கு எதிராக மாபெரும் துரோகச் செயல்களை, குற்றங்களை செய்யும்போது கவலைப்படுவதில்லை. இப்பொழுது பாகிஸ்தானிய தீவிரவாத-ஆதரவு ஏஜென்சிகள் ஜிஹாதிகளுக்கு மாத சம்பளத்தை உயர்த்தியுள்ளதாம். அதாவது ரூ.5000/- உயர்வாம். அதனால் இப்பொழுது மாதம் ரூ.8,000 முதல் 10,000 வரைக் கொடுக்கப்படுகிறது. இது மற்ற “வசதிகளை”த் தவிரக் கொடுக்கப் படுகிறது. அதாவது அவர்களுக்கு என்ன வேண்டுமே, அவை இந்தியாவிலிருந்து, இந்தியாவில் நுழைந்தவுடன், தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம், அடையலாம் அல்லது எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறுதான், அந்த ஜிஹாதிகள் அனுபவித்து வந்துள்ளனர். இதைவிட அயோக்கியத்தனம் என்னவென்றால், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தீவிரவாதிகளே, அரசாங்க ஊழியர்களாக இருந்து சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, சதி வேலைகளில் ஈடுபட்டு, துரோகிகளக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உடந்தை – அதாவது, எங்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு என்று வாய்சவடால் விட்டுக் கொண்டு அலையும் அப்துல்ல்கா மற்றும் முஃப்டி முஹமது கோஷ்டியினர். மற்றவர்களைப் பற்றி சொல்லவேண்டாம், ஏனெனில் அவர்கள் வெளிப்படையாகவே இந்தியாவின் மீது போர் தொடுத்துள்ளனர்.
பிரிவுகள்: இந்தியா, இரட்டை வேடம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, கையெறி குண்டுகள், ஜிஹாதிகளுக்கு சம்பளம், தக்காண முஜாஹித்தீன், பழமைவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மத-போலீஸார், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல்
Tags: இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாத், பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், முஸ்லீம்கள்
Comments: 1 பின்னூட்டம்
மே 4, 2010
அல் – காய்தாவினர் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவல்
புதுடெல்லி , செவ்வாய், 4 மே 2010( 13:07 IST )
அல் – காய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்தே இந்த உளவுத் தகவல் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்தே நாட்டின் மேற்கு பகுதிகளில் உள்ள எல்லைப் பகுதிகளில் உஷாராக இருக்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவகள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் களத்தில் உள்ள மத்திய உளவுத் துறையினரிடமிருந்து கிடைத்த இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி எழுந்தபோதிலும், இந்தியாவில் தாக்குதல் நடத்த அல் – காய்தாவும், லஷ்கர் இயக்கமும் தீவிரமாக உள்ள தற்போதைய நிலையில் எந்த விதமான மெத்தனத்திற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது. இதனையடுத்தே அல் – காய்தாவினர் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதரபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது
ஹைதராபாத், செவ்வாய், 4 மே 2010( 10:49 IST )
ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முகமது ஜியாஉல்ஹக் என்பவன் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்த காவல்துறை ஆணையர் வி.கே.கான், கைது செய்யப்பட்ட தீவிரவாதி முகமது ஜியாஉல்ஹக், ஹைதராபாத், செகந்திராபாத் உள்பட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டு இருந்ததாக கூறினார். அவனிடம் இருந்து சீன தயாரிப்பு கையெறி குண்டுகளும், கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தீவிரவாதி முகமது ஜியாஉல்ஹக்கின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் என்று கூறிய காவல்துறை ஆணையர் ஏ.கே.கான், வேலைக்கான சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றிருந்தபோது லஸ்கர் இ தொய்பா தளபதி அப்துல் அஜித்துடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள லஸ்கர் இ தொய்பா தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்ற முகமது ஜியாஉல்ஹக், அங்கிருந்து ஹைதராபாத்திற்கு வந்து குண்டுவெடிப்புகளை நடத்துவதற்காக காத்திருந்த நேரத்தில் காவல்துறையினர் கைது செய்து விட்டதாகவும் அவர் கூறினார்.முகமது ஜியாஉல்ஹக்வுடன் தீவிரவாதிகள் மேலும் சிலர் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் ஹைதராபாத் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார்.
பிரிவுகள்: ஃபிதாயீன், அப்துல் அஜித், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, இந்தியர்களை ஏமாற்றுதல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏ. கே. கான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், கையெறி குண்டுகள், சவூதி அரேபியா, தக்காண முஜாஹித்தீன், தீவிரவாதிகளுக்கு பணம், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான் தீவிரவாதம், மத-அடிப்படைவாதம், மத-போலீஸார், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், முகமது ஜியாஉல்ஹக், லஷ்கர்-இ-தொய்பா
Tags: அப்துல் அஜித், அல் - காய்தா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், சவூதி அரேபியா, செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தோட்டாக்கள், பாகிஸ்தான், புனிதப்போர், முகமது ஜியாஉல்ஹக், முஸ்லீம்கள், லஷ்கர்-இ-தொய்பா
Comments: Be the first to comment
ஏப்ரல் 25, 2010
நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?
ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.
அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.
முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.
இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.
நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.
எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.
அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.
உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.
பிரிவுகள்: அப்துல்லா, அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அம்பேத்கர், அல்லா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமும் இந்தியாவும், ஈ. வே. ரா, கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிலை வழிபாடு, சுயமரியாதை, ஜின்னா, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தலாக், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், திராவிட நாத்திகர்கள், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், பெரியார்தாசன், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மீலாதுநபி, முகமது நபி, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், உண்மையான நாத்திகர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், நாத்திக காஃபிர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், மோமின்-காஃபிர், மோமின்-காஃபிர் உறவு
Comments: 3 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 24, 2010
குறைந்த பட்சம் மாதத்திற்கு 25 இந்து பெண்கள் பாகிஸ்தானில் அபகரிக்கப் படுகிறார்கள்!
இஸ்லாம் பாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொள்வது என்ன விதத்தில் சரி?
இதுதான் அமைதி, சமாதனம் என்றெல்லாம் “இஸ்லாத்திற்கு” பொருள் கொடுக்கும் லட்சணமா?
வாய் கிழிய பேசி வரும் இஸ்லாமிய பிரசாரகர்களுக்கு அழகா?
ஆமாம், இந்திய முஸ்லீம்கள் இதைப் பற்றியெல்லாம் பேசமாட்டார்கள், எழுத மட்டார்கள், “அமைதி” காப்பார்கள்!
மேலும், கீழே அப்துல்லா என்பவருடைய பதிலும் முஸ்லீம் மனப்பாங்கைக் காட்டுவதாக உள்ளது:
“அதான், ஏற்கெனவே சொல்லிட்டோமில்ல? கேட்டா கொடுக்கனும்னா? இல்லைன்னா எடுத்துக்குவோம்”.
அப்துல்லா இந்தியாவிலிருந்துதான் சொல்லியிருப்பது தெரிகிறது.
பிறகு, பாகிஸ்தானின் முஸ்லீமின் மனப்பாங்கு இவ்விஷயத்தில் எப்படி இருக்கும் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
At least 25 Hindu Girls Abducted Every Month in the Islamic State of Pakistan
By Antony Thomas
http://www.chakranews.com/at-least-25-hindu-girls-abducted-every-month-in-pakistan/655

- Members of the Hindu Bheel community in Pakistan show pictures of girls who have been kidnapped and converted to Islam – ஹிந்து பீல் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர்களின் புகைப்படங்களைக் காட்டுகின்றனர்.
Karachi, Pakistan (CHAKRA) – An activist and council member of the Human Rights Commission of Pakistan, Amarnath Motumal, stated that at least 20 to 25 girls are abducted and converted to Islam against their will every single month. Hindus are targetted due to many local muslims seeing them as kafirs(non muslims) and therefore of lower class as well as evil.
Motumal further stated that this number is lower than the actual numbers because many cases go unreported due to fear of families and loved ones being killed. “A large number of Hindu girls in Karachi alone are being kidnapped on a routine basis.” Threats are commonly given by the dangerous kidnappers that if they are reported, the families will hear of their daughter’s death.
Motumal said that the word “Hindu” has become an insult and almost a shame for all Hindus in the Islamic state of Pakistan because of impoverished state 90% of Hindu families live in. He addressed that the government and others in power are to blame for the lack of rights available to the Hindu community. Only a few families come to Motumal for help while the majority keep their losses to themselves hoping that not speaking up will devoid them of future misfortunes.
A former MPA, Bherulal Balani said that Hindu girls in specific scheduled classes are the ones mostly being abducted from the Lyari area. “Once the girls are converted, they are then sold to other people or are forced to do illegal and immoral activities,” Balani said. He also added that the hostage takers are very powerful and that is primarily why reports are going awry if they are even made to begin with.
The interior South of Pakistan is where the number of kidnappings has increased within the last three months including nine reports which have been made ranging from kidnappings, to forced conversions, rapes and murders.
In the Nagarparker area, a 17 year old girl was raped and in another incident a 15 year old girl was abducted from Aaklee village, Tharparker followed with a forced conversion. Almost 71 families travelled from the village to protest against the abuse against the girl.
Even on the festival of Holi during celebrations, two Hindu girls, Kishni and Anita were kidnapped from Kotri. On the same day, Ajay and Sagar, two other boys were also kidnapped from an area close by.
Amir Gul, was murdered by her landlord at the beginning of March in Tando Haider. Later in March, Kishan Kumar was kidnapped from Kandhkot, Jacobabab.
MPA Pitamber Sewani said that one of the reasons these acts against Hindu minorities are taking place is because the culprits believe that the minority will support the government in “local body” elections so they want to harass these Hindus to alleviate the support level in upcoming elections.
President of the Pakistan Hindu Council, Ramesh Kumar criticized the minority Hindu community representatives for not standing up and letting their voices be heard at important forums. He said that these leaders were simply representing their parties and not the poor people and their real issues. He also added that the dire economic conditions, especially in Kandhkot and Jacobab have led to kidnappings and other abuse of the minority Hindus.
Coordinator HRCP Task Force Sindh Dr. Ashothama Lohano said that according to a report, the most pinpointed and harassed communities in the area are of Hindu and Christian communities. He stated that “The recent wave of extremism is one reason, which has destroyed the harmony of the land of Sufis. Another reason is the destruction of the agriculture sector and small markets that has led to frustration and lawlessness. Yet another reason is that the elected representatives are working only for the party and not for the community.”
He further stated that the minority Hindu community was an easy target because they did not stand up or speak up against the violations due to fear. At the same time though, if they chose to speak up and take action they were accused of having Indian connections or killed by local Islamic groups.
பிரிவுகள்: காஃபிர்கள், புனிதப் போர், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லீமின் மனப்பாங்கு, ரத்தக் காட்டேரிகள், ரத்தத்தினால் ஹோலி, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது, Uncategorized
Tags: ஃபத்வா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கற்பழிப்பு, காஷ்மீரம், புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம்கள்
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்