Archive for the ‘பௌத்தம்’ category

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க [கிருத்துவரைத் தாக்குவது மற்றும் இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்துவது] முயலும் ஜிஹாதி தீவிரவாதிகள்! [1]

மே 31, 2019

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க [கிருத்துவரைத் தாக்குவது மற்றும் இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்துவது] முயலும் ஜிஹாதி தீவிரவாதிகள்! [1]

Sri Lankan blast, the church

நியூசிலாந்து குண்டுவெடிப்பிற்கு பதில் இது இல்லை: இலங்கையில் கடந்த மாதம் ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் / நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 258 பேர் பலியானார்கள். சுமார் 500 பேர் காயமடைந்தனர். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் பௌத்தம் 70.3%; இந்து 12.6%; இஸ்லாம் 9.7%; கிருத்துவம் 6.1% என்றுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்தில், முகமதியர் தாக்கப் பட்டதால், பழி வாங்க, இக்குண்டுவெடிப்பு நடத்தப் பட்டதாக தெரிகிறது என்று ருவான் விஜயரத்னே குறிப்பிட்டதை, நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர், வின்ஸ்டன் பீட்டர்ஸ் மறுத்து, சாடியிருக்கிறார்[1]. 2010லிருந்தே, இலங்கையில் சிறுபான்மையினர் தாக்கப் பட்டு வருகின்றனர். எல்.டி.டி.ஈ காலத்தில் இந்துக்கள் அதிகமாகவே பதிக்கப் பட்டனர். ஆனால், அப்பொழுதெல்லாம் “தமிழர்” என்று குறிப்பிடப் பட்டு, உண்மை அமுக்கப் பட்டது. “தமிழர்களுக்கும்,” “முஸ்லிம்களுக்கும்” சண்டை…………என்றெல்லாம் கூட செய்திகள் வெளியிடப் பட்டன. இப்பொழுது, கிருத்துவர் என்றதும், அவ்வாறே குறிப்பிடப் பட்டன.

Sri Lankan blast, how world reacted

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகள்: ஈஸ்டர் பண்டிகை 21-04-2019 அன்று நடத்தப் பட்ட ஜிஹாதி குண்டுவெடிப்புகள்:

நேரம் குண்டுவெடிப்பு நடந்த இடங்கள்
8:25 AM

 

Negombo: St.Sebastian’s Church

 

நெகும்போ – செயின்ட் செபாஸ்டியன் சர்ச்
8:45 AM Colombo: Shrine of St. Anthony Church

 

கொழும்பு – செயின்ட் ஆந்தனி சர்ச்
9:05 AM Batticaloa: Zion Church

 

பட்டிகொலா – ஜியோன் சர்ச்
9.15 – 9.20 AM

 

Colombo: Cinnamon Grand Hotel, Kingsbury Hotel, Shangri-La Hotel

 

கொழும்பு – சின்னமான் கிரான்ட் ஹோடல், ஷங்கரிலா ஹோடல்
2:00 PM Dehiwala: Tropical Inn

 

டில்லிவாலா, டிராபிகல் இன்
2:15 PM Dematagoda: Housing complex

 

டெமாடாகோடா குடியிருப்பு.

குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை, தொடர் விசாரணை என நூற்றுக்கணக்கானோரை பிடித்து இலங்கை புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இண்டர்போல் உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணையில் குதித்துள்ளன. இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக இந்தியாவிலும் உளவுத்துறை, ரா, என்.ஐ.ஏ அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இலங்கைக்கு அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.ஐ.ஏ முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு தலைவனாக செயல்பட்டது ஜக்ரான் பின் ஹாசிம் என்ற தீவிரவாதி என்பது தெரியவந்தது. ஜக்ரான் பின் ஹாசிமும் இந்த தாக்குதலில் பலியானான். சில தீவிரவாதிகள் தப்பிவிட்டதாக இலங்கை அரசின் விசாரணையில் தெரியவந்தது.

Lankan bombers photo released 03-05-2019

அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு தேடிவருகின்றனர். இந்நிலையில் எங்கெல்லாம் குண்டு வெடித்தது, யார், யார் அங்கு குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தனர் என்கிற பட்டியலை புகைப்படத்துடன் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது[2]. இதுகுறித்த விபரம் வருமாறு[3]:

  1. சங்ரில்லா ஹோட்டல் – மொஹம்மத் காஸீம் மொஹம்மத் ஸஹ்ரான்
  2. சங்ரில்லா ஹோட்டல் – மொஹம்மத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்
  3. சினமன் கிரேன்ட் ஹோட்டல் – மொஹம்மத் இப்ராஹிம் இன்ஸாப் அஹமத்
  4. கிங்ஸ் பெரி ஹோட்டல் ;- மொஹம்மத் அஸாம் மொஹம்மத் முபாரக்
  5. புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு – ஹச்சி மொஹம்மத் மொஹம்மத ஹஸ்துன்
  6. புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை – அலாவுதீன் அஹமத் முவாத்
  7. சீயோன் தேவலயம் மட்டக்களப்பு ;- மொஹம்மத் நஸார் மொஹம்மத் அஸாத்
  8. தெஹிவளை – அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மத்
  9. தெமட்டகொடை – பாத்திமா இன்ஹாம்

மேற்கண்ட ஒன்பது இடங்களின் பட்டியலை புகைப்படத்துடன் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. தற்போது குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் உள்ள சிலருடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், கேரளா, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர்[4]. அங்குள்ளவர்களுக்கு, இவர்கள் பயிற்சி அளிக்க சென்றிருக்கலாம் அல்லது மற்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சென்றிருக்கலாம். இவர்கள், சர்வதேச பயங்கரவாதிகளுடன், தொடர்பில் உள்ளனர்[5].

Emergency extended in Lanka for one more month-

அவசரநிலை பிரகடனம் மற்ற நடவடிக்கைகள்: 22-04-2019 அன்றிரவே, அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டது. 26-04-2019 அன்று இலங்கை ராணுவம் மற்றும்  STF தேடுதல் வீட்டையில், சைந்தமருது என்ற இடத்தில், அதிரடி சோதனை நடத்திய போது, மூன்று பேர் தற்கொலை குண்டுவெடிப்பில் குடும்பத்தாரோடு இறந்தனர். அதில் ஆறு குழந்தைகளும் பலியாகின. இன்னொரு சோதனையில் 150 ஜிலேட்டின் குச்சிகள், ஐ.எஸ் சீருடை, 100,000 உலோக குண்டுகள், டுரோன், லேப்டாப், வேன் முதலியவை சிக்கின.  அடிமை தீவில், பள்ளீயவிதிய என்ற இடத்தில் உள்ள மசுதியிலிருந்து 40 கத்திகள் சீருடை மற்ற ஆயுதல் பறிமுதல் செய்யப் பட்டன. 24-04-2019 அன்று பர்கா, நிகாப் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளுக்கும் தடை விதிக்கப் பட்டது. ஏனெனில், ஆண்கள் அவ்வேடத்தில் தப்ப முயல்வது தெரிந்தது. 27-04-2019 கல்முனையில் நடத்தப்பட்ட சோதனையில், மூவர் கைது செய்யப்பட்டனர்.  12-05-2019 மற்றும் 13-05-2019  நாட்களில் கலவரம் உண்டாக்க முயற்சிகள் நடந்தாலும் அடக்கப்ப்பட்டன.

Lankan blasts all arrested or finished 08-05-2019

இலங்கையில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரின் கதையும் முடிந்து விட்டது: இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருப்பதாக இலங்கை அரசு நடத்திய விசாரணையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் சிஐடி மற்றும் தீவிரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். நாடு முழுவதும் முப்படைகளும், போலீசாரும் மேற்கொண்ட கடும் சோதனையின் மூலம் வெடிகுண்டு கிடங்குகள், தீவிரவாத பயிற்சி முகாம்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை குறித்து முப்படை தளபதிகளும், பொறுப்பு காவல்துறை தலைவரான சந்தனா விக்ரமரத்னேவும் கூட்டாக பேட்டி அளித்தனர்[6].  அதில் விக்ரமரத்னே கூறியதாவது: ‘‘ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைதாகி உள்ளனர். இதனால் நாட்டில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது’’ என பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்[7].

Woman made suicide bomber in Colombo blast

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை: ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து கடலோர நகரமான சிலாபம் நகரில் 12-05-2019 அன்று இருதரப்பினருக்கு இடையில் வெடித்த கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது[8]. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்டுள்ளார்[9]. இதனை தொடர்ந்து அந்த நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Sri Lankan blast, how world reacted-2

அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன: ஜிஹாதி தீவிரவாதிகள், மூளை செய்யப் பட்ட நிலையில், மடவெறியில் இவ்வாறு குண்டுவெடிப்புகள் நடத்தி வருகிறார்கள். இதனால், சம்பந்தப்படாத, அப்பாவி மக்கள் இதனால், எந்த அளவுக்கு பாதிக்கப் படுகிறார்கள் என்பதனை, அவர்கள் உணர்வதில்லை. தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துவிட்டன[10]. அவர்களுக்கு போதிய சேமிப்பும் இல்லாததால், அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிலர் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டனர்[11]. குடும்ப உறுப்பினர்கள் காயம் அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

31-05-2019

Sri Lankan blast, how world reacted-3

[1] New Zealand Foreign Minister Winston Peters hit back at Sri Lanka’s junior defense minister’s claim that the Easter Sunday attacks on hotels and churches in Sri Lanka were carried out in retaliation for the shooting at a New Zealand mosque last month. Ruwan Wijewardene said last Tuesday that “preliminary investigations” indicated that the bombings in Sri Lanka were a response to the attack by a white supremacist on two New Zealand mosques in mid-March that left 50 people dead. There may have been thematic similarities between the attacks, both of which targeted national religious minorities in their houses of worship, but that may have been all: Wijewardene declined to provide evidence that the one was in response to the other. And the Islamic State’s claim of responsibility, also issued last Tuesday, made no mention of New Zealand.

https://www.washingtonpost.com/world/2019/04/30/linking-christchurch-attack-sri-lanka-bombing-cheap-shot-says-new-zealand-foreign-minister/?utm_term=.08c52d46efb4

[2] தி.இந்து, இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் புகைப்படம் வெளியீடு, Published : 02 May 2019 15:06 IST; Updated : 02 May 2019 15:06 IST.

[3] https://tamil.thehindu.com/world/article27010853.ece

[4] தினமலர், இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் கேரளா, பெங்களூர், சென்று வந்தது அம்பலம், Updated : மே 04, 2019 21:20 | Added : மே 04, 2019 19:50.

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2269347

[6] தினகரன், இலங்கையில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரின் கதையும் முடிந்து விட்டது, 2019-05-08@ 00:06:36.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=493538

[8] மாலைமலர், தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு, பதிவு: மே 14, 2019 15:05

[9] https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/14150530/1241666/Sri-Lanka-President-bans-National-Thowheed-Jamaath.vpf

[10] மாலைமலர், இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள், பதிவு: மே 09, 2019 06:01.

[11] https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/09060141/1240749/About-200-Children-Lose-Family-Members-In-Sri-Lankas.vpf

திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

திசெம்பர் 9, 2017

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

Tiruma wanted Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமாவிற்கு எதிராக எழுந்த கண்டனங்கள்: இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தப் பேச்சு வருத்தமளிக்கும் விதத்தில் இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாலர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்[1]. அந்த அறிக்கையில், கோவில்களை இடிக்க வேண்டும் திருமாவளவனின் பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது. புத்த மதத்தை சார்ந்தவர்களே இப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியையும், மதத்தையும், வழிபாட்டையும் அரசியல் லாபத்திற்காக எந்தவொரு தலைவரும் கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். சிவனையும், பெருமாளையும் வழிபடுபவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இல்லாமல் இல்லை. வழிபாடு என்பது எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். எந்தவொரு உணர்ச்சி வேகத்திலும் சாதி, மதம் பற்றியோ, கடவுள் வழிபாடுகளை பற்றியோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை இவ்வளவு விழிப்புணர்வு அடைந்தப் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள்”.

Tiruma wanted all Hindu temples demolished-Polimer video

மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல: ஈஸ்வரன் தொடர்ந்தது: “ஒருவர் தன்னுடைய வழிபாட்டு முறைகளை பற்றி உயர்த்தி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் என்ற நிலை இருக்கும் போது மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. வாதத்திற்காக கூட இதுபோன்று மக்கள் அமைதியை குலைக்கின்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதைபோன்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேசுவதும், அதை எதிர்த்து வேறுசில தலைவர்கள் எதிர்கருத்து தெரிவிப்பதும் மக்களிடையே அமைதியின்மை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவது தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பயன் தராது. இன்றைய சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் இறங்குமுகமாக இருக்கின்ற தமிழகத்தை முன்னேற்றுகின்ற முயற்சிகளில் அனைத்து தலைவர்களும் இறங்க வேண்டும். முன்னேற்றம் தடைப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் மக்களின் கவனத்தை மதம், சாதி போன்ற விஷயங்களில் திசை திருப்புவது நாம் அமர்ந்திருக்கின்ற மரத்தின் கிளையை நாமே வெட்டி சாய்ப்பதற்கு சமமாகி விடும்”.

 Thiruma, frwnzied speech

ஆக்ரோஷமாக துல்லுகர் முன்ம்பு பேசி, பிறகு அமைதியாக பேட்டி கொடுத்த நிலை: இந்து சமூகத்தினரின் மனதை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் பேசவில்லை. குறிப்பாக இந்துகோவில்களை இடிப்போம் என்கிற வார்த்தையை, அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை. சமணர்களுக்கு, பௌத்தர்களுக்கும் எதிராக நடந்த யுத்தத்தில் சமணர்களின் கோவில்களும், பௌத்த விஹாரங்கள் இடிக்கப்பட்டன வரலாற்று உண்மை. அந்த வரலாற்று உண்மையை இதனுடன் பொருத்தி பேசினேன். ஆகவே பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று நியாயப்படுத்துவது உங்கள் தர்க்கம் எனில் அதற்கு ஈடாக, பௌத்த விஹாரங்கள் இருந்த இடங்களில் மீண்டும் பௌத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று சொல்லுவதும் சரியாக இருக்கும், நியாயமாக இருக்கும் என்று பொருள்படும் படி நான் பேசினேன்,” என்று விளக்கம் கொடுத்து பேசியபோது, முகம் சாதாரணமாக இருந்தது. மைக்கின் முன்பாக, நிறுத்தி நிதானமாக, பேசியது நன்றாகவே தெரிகிறது. இதனால், நிச்சயமாக இந்துக்கள் ஏமாற மட்டார்கள். முதலில், 1980களில் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இவர், 2000களிலிருந்து முஸ்லிம்கள் சார்பாக மாறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாமகவுடன் இருந்த கூட்டு முறிந்த பிறகு, அரசியலில் இவர் மற்றும் இவரது கட்சி முக்கியத்துவத்தை இழந்தது. ஆகவே, எவ்வாறு வைகோ உளறிக் கொண்டிருக்கிறாரோ,, அதே பாணியில், இவரும் இறங்கி விட்டார் போலும்!

 Tiruma wanted all Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமா ஏன் இவ்வாறு ஒன்றும் தெரியாத அப்பாவியாகி விட்டார்?: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன:

  1. இந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.
  2. துலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்கட படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.
  3. துலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.
  4. இன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.
  5. ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.
  6. ஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.
  7. இவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
  8. இன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.
  9. அளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
  10. சங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.

 

© வேதபிரகாஷ்

09-12–2017

Tiruma accusing MODI

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதா?- கொந்தளிக்கும் கொ..தே. ஈஸ்வரன், Posted By: Mohan Prabhaharan, Published: Friday, December 8, 2017, 18:47 [IST].

https://tamil.oneindia.com/news/tamilnadu/kmdk-leader-eswaran-says-vck-thirumavalan-speech-on-hindu-temples-304398.html

 

திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு (1)

திசெம்பர் 9, 2017

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு (1)

Tiruma wants all Hindu temples demolished
இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும்திருமாவளவன் திடீா் ஆவேசம் (07-12-2017)[1]: பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[2], “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தனபௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”.  இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும். இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு!

Tiruma, temples should be demolished-Samayam-07-06-2017

களப்பிரர்கள் காலத்தில் தான் தமிழக சின்னங்கள் அழிக்கப்பட்டன[4]: இதனால், நிச்சயமாக சாதாரண இந்துக்களும் திகைப்படைய, அவர்கள், திருமாவைக் கண்ண்டித்தனர். “தமிழன்” என்ற முறையில், ஒரு எதிர்ப்பு இவ்வாறு இருந்தது. திருமாவளவன் அவர்களே! உடனடியாக உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவும். நேற்று (07/12/2017) ஸ்ரீரங்கப் பெருமாள் கோவிலையும், காஞ்சி அன்னை காமாட்சி கோவிலையும் இடித்து விட்டு பௌத்த விஹாரங்கள் கட்ட வேண்டும் என்று பேசிய  அந்தப் பேச்சிற்குப் பிறகு, “திருமாவளவன்” என்ற பெயரை வைத்துக் கொள்ள உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. காஞ்சி காமாட்சி கோவிலை இடித்து விட்டு பௌத்த கோவில் கட்டச் சொன்ன ஒரு நபரை தமிழனாக, தமிழக வரலாறு தெரிந்த எந்தவொரு தமிழனும் அங்கீகரிக்க மாட்டான்/கூடாது. காரணம், இதுவரை தமிழக வரலாற்றில் மிகமிக மோசமான காலமாக, தமிழனின் அடையாளங்கள் பெருமளவில் நசுக்கப்பட்ட காலமாக எல்லா வரலாற்று அறிஞர்களும் குறிப்பிடும் காலம் களப்பிரர்கள் காலம். இவர்கள் தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துகளில் கூட பெருமளவில் சிதைவினைக்  கொண்டு வந்தவர்கள் என்பதையும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இப்படியான களப்பிரர்கள் பின்பற்றிய மதம் தான் பௌத்தம் மற்றும் ஜைனம். இவர்கள் தான் தமிழகத்தினுள் பௌத்தம் நுழைய மூல காரணம்[5].

Tiruma, temples should be demolished-Newstm-07-06-2017

கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொள்ள அருகதை இல்லை[6]: அந்த இணைதளம் தொடர்ந்தது, “ஆக, திருமாவளவன், தமிழனின் அடையாளத்தைப் பெருமளவில் அழித்த களப்பிரர்களைப் போல மீண்டும் தமிழனின் அடையாளங்களை அழிக்க மக்களைத் தூண்டி விடும் உங்களை எப்படி தமிழனாக ஏற்றுக் கொள்வது? எது தமிழனின் அடையாளம் என்று யோசிக்கிறீர்களா?

“கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்

 மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன்  கைச்செண்டு

கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்

செம்பொற் கிரிதரித்த செண்டு”

மேலேயிருக்கும் பாடலில் பொருட்சுருக்கம், கச்சி என்ற காஞ்சியிலிருக்கும் வளையல் அணிந்த காமாட்சியை, கரிகால் பெருவளத்தான் என்ற சோழன் வந்து வணங்கினான் என்பதாம். கரிகாலச் சோழனின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு முற்பட்டது. களப்பிரர்களுக்கு முன்பேவா சித்தார்த்தர் வந்து இங்கே கோவில் கட்டி விட்டுச் சென்றார்? அதுவும் மஹாயானம் தோன்றுவதற்கு முன்பே? கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொண்டே அவன் வணங்கிய அன்னை காமாட்சியின் கோவிலை இடித்து, தமிழனின் அடையாளங்களை அழித்த களப்பிரர்களின் அடையாளத்தை மீண்டும் நிறுவத் தூண்டுகிறீர்களே…? நீங்கள் தமிழன்தானா? இல்லை தமிழன் பெயர் தாங்கிய சிங்களவனா? உங்களைத் தமிழினத் துரோகி என்று யாரேனும் அழைக்கும் முன், குறைந்தபட்சம் தமிழகத்தின் பெருமைமிகு கரிகாற் பெருவளத்தானின் இன்னொரு பெயரான திருமாவளவன் என்றப் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்[7]. இல்லையெனில், பிற்காலத்தில் கரிகால் வளவன் ஒரு தமிழ்த்துரோகி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டாலும் கொள்வர்!” என்று முடித்தது.

Thiruma, frenzied speech- Eswaran responded

08-12-2017 அன்று விடுத்த திருமாவின் அறிக்கை[8]: இதற்குள் நிலைமை மோசமாகிறது என்று உணர்ந்த, திருமா, “டேமேஜ் கன்ட்ரோல்” போல ஒரு அறிக்கையை விடுத்ததும் வேடிக்கையாக இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]: “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ஜமாலியாவில் கடந்த 6–ந்தேதி தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், நான் பேசியதில் முன்னே இருந்த பகுதியையும் பின்னால் இருந்த பகுதியையும் வெட்டிவிட்டு இந்து கோவில்களை இடிக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பி உள்ளனர். இது என் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். என்னையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அவதூறு செய்யும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருகின்றன. அவர்களுடைய கூட்டுச்சதியின் காரணமாகத்தான் எனது பேச்சு வெட்டி சிதைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் ராமர் கோவிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர்”.

Tiruma wants Hindu temples demolished

இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன[10]: திருமா தொடர்ந்து கூறியது, “இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பவுத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா? இந்த கேள்வியை தான் நான் எழுப்பினேன். இப்போது கோவில்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் பவுத்த விகார்களை கட்டவேண்டும் என்று சொல்வது எப்படி பொருத்தமற்ற வாதமோ, அப்படித்தான் அங்கே ராமர் கோவில் கட்டவேண்டும் என்று சொல்வதும் ஆகும். இதை தான் நான் சுட்டிக்காட்டினேன். அதை தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். எனது பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவது தமிழ்நாட்டை எப்படியாவது ஒரு வன்முறை களமாக மாற்றிவிட வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தை தான் வெளிப்படுத்துகிறது. பொய்களின் மூலமாகவும், அவதூறுகள் வாயிலாகவும் அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகள் இனியாவது தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்,” என்று முடிந்தது.

 Tiruma wants all Hindu temples demolished-clarification issued

சொதப்பலான அறிக்கையும், மேன்மேலும் இந்துவிரோதம் வெளிப்பட்ட விதமும்: மாலைமலர் பேட்டியில், “நான் வரலாற்று உண்மையைத்தான் பேசி இருக்கிறேன்”, என்றும் உள்ளது[11]. அதே போல தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவது இல்லை[12]. புத்த விஹாரங்கள் இருந்த இடத்தில் கோவில்கள் கட்ட்டப்பட்டிருப்பட்து குறித்து பல வரலாற்று சுவடுகளும் ஆய்வறிக்கைகளும் இருப்ப்பதாகவும் கூறினார்[13]. இச்செய்தியை முதலில் பாலிமர் டிவி தான் வீடியோவுடன் வெளியிட்டது[14].. இப்பொழுது அந்த வீடியோவை நீக்கி விட்டு, தினத்தந்திக்கு பேட்டி கொடுத்த வீடீயோவை சேர்த்து, செய்தி வெளியிட்டுள்ளது[15]. அதாவது, இங்கும் அகங்காரத் தொணி தான் உள்ளது. ஆனால், இவரது முகமதியர் சார்ந்த நிலைப்பாடு, ஏற்கெனவே, எஸ்.சிக்களிடம் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “தலித்-முஸ்லிம்” போர்வையில், இப்பொழுதெல்லாம், இவர் பேசி வருவது, அரசியல் ரீதியிலும், விரும்பப்படாமல் இருக்கின்றது.

© வேதபிரகாஷ்

09-12–2017

Tiruma donning Muslim

[1] இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும்திருமாவளவன் திடீா் ஆவேசம், TOI Contributor | Updated: Dec 7, 2017, 04:28PM IST

[2] https://www.youtube.com/watch?v=oyY3E5lC9tM

[3] https://tamil.samayam.com/latest-news/state-news/thirumavalavan-speech-against-hindu-temples/articleshow/61963414.cms

[4] newstm, தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?, Posted Date : 11:04 (07/12/2017)

[5] http://www.newstm.in/Tamilnadu/1512665079313?Is-Thirumavalavan-a-traitor-of-tamilians-

[6] newstm, தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?, Posted Date : 11:04 (07/12/2017)

[7] http://www.newstm.in/Tamilnadu/1512665079313?Is-Thirumavalavan-a-traitor-of-tamilians-

[8] தினத்தந்தி, இந்து கோவில்கள் பற்றி பேசியது என்ன? திருமாவளவன் அறிக்கை, டிசம்பர் 09, 2017, 01:45 AM

[9] http://www.dailythanthi.com/News/TopNews/2017/12/08230606/Thirumavalavan-report.vpf

[10] மாலைமலர், இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை: திருமாவளவன் விளக்கம், பதிவு: டிசம்பர் 08, 2017 15:38; மாற்றம்: டிசம்பர் 08, 2017 15:39.

[11]http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/08153859/1133456/Thirumavalavan-says-he-did-not-tell-that-he-will-destroy.vpf

[12] புதியதலைமுறை, இந்துக்கள்ளின் மனதை புண்படுத்தும்படி பேசவில்லை: திருமாவளவன் விளக்கம், December 08, 2017, 01:08 pm.

[13] http://www.puthiyathalaimurai.com/news/politics/36786-the-hindu-temple-affair-was-misunderstood-thirumavalavan.html

[14] பாலிமர்.டிவி.செய்தி, இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்பது தனது கருத்தல்லதிருமாவளவன் விளக்கம், 08-டிசம்பர்-2017 19:06

[15] https://www.polimernews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5-2/