Archive for the ‘போலி’ category

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (1)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (1)!

DK banner below Periar statue

50 ஆண்டு திராவிட ஆட்சியும், தமிழக சமுகமும்: தமிழக நாத்திக-பெரியாரிஸ-பகுத்தறிவு சித்தாந்த நிலையில் சமீபத்தில் நடந்து வரும் மதரீதியிலான ஆர்பாட்டங்கள், கருத்து போராட்டங்கள், அசாதாரணமான மந்திர-தந்திர வேலைகள் மற்றும் கொலைகள் முதலியன அதிர்ச்சியாகவும், கவனிக்கப்பட வேண்டியவைகளாகவும் இருக்கின்றன[1]. ஒரு பக்கம் 50 ஆண்டுகள் திராவிட ஆட்சி என்று விவாதம் நடந்தாலும், அது மறுபடியும், அரைகுறை சித்தாந்த சிதறல்களாகவே இருக்கின்றன. ஏனெனில், ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இருவர்களிடமும், நேர்மையான உண்மைகளை வைத்து விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை அல்லது உண்மைகள் தெரியவில்லை அல்லது மறைக்கிறார்கள் என்று தான் தெரிகிறது[2]. தமிழக மக்களின் மீது நாத்திக-பெரியாரிஸ-பகுத்தறிவு சித்தாந்த கருத்துகள் தாக்கம் இருந்திருந்தால், அவற்றின் வெளிப்பாடுகள், சமூக செயல்பாடுகள், நடப்புகள் மற்றும் நிகழ்வுகள் என்று அனைவற்றையும் எடுத்துக் கொண்டு அலச வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் கொலை-கொள்ளை குற்றங்கள் அதிகமாகியுள்ளன; பெண்களின் மீதான குற்றங்களும் அதிகமாகியுள்ளன; திராவிட அரசியல் ஆட்சி ஊழலோடு சேர்ந்து பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த பின்னணியில் கோயம்புத்தூர் பாரூக்கின் கொலை அலச வேண்டியுள்ளது.

DVK poster demanding to arrest the murederers of Farook

கோவையில் இரும்பு ஸ்கிராப் வியாபாரி கொலை: முதலில் கோவையில் இரும்பு ஸ்கிராப் வியாபாரி கொலை, தொழில் போட்டி, முன்விரோதம் என்ற ரிதியில் தான் சிறியதாக செய்திகள் வந்தன. பிறகு, கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் தனது சொந்த மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வந்ததற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்[3] என்று மாறியது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் எனவும், நான்கு பேர் கொண்ட கும்பல் கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சொல்லப்பட்டது[4]. இதனையடுத்து பரூக்கின் கைபேசி மற்றும் பேஸ்புக்கில் பதிவான தகவலின் அடிப்படையில், நான்கு காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்[5].  விசாரணைக்குப் பிறகு தான் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியும் என்று போலீஸார் கூறினர்[6].

Tikkathir - balancing news - 18-03-2017

கம்யூனிஸ்டுகளின் செக்யூலார் அல்லது கம்யூனல் ரீதியிலான செய்தி வெளியீடு: தீக்கதிர் செய்தி வித்தியாசமாக இருந்தது[7], “மத காரணங்களுக்காக கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பாரூக் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரணத்தின் போது நடந்த வன்முறையை தடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி விடுதலை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது,” என்று முடித்தது! அதாவது, அதற்கும்-இதற்கும் சம்பந்தம் உள்ளது போல தொக்கியுள்ளது[8]. கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல கலவரம் மூட்டும் வகையில் செய்தியை வெளியிட்டிருப்பது நோக்கத்தக்கது. சகிப்புத் தன்மை என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்து வரும் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சீதா ராம் யச்சூரி, என். ராஜா போன்றோர் பேசியதை எல்லாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் எல்லோரும், இனி மேலாவது இதைப் பற்றி விவாதிப்பார்களா என்று பார்க்க வேண்டும். அவ்வளவு ஏன், விஜய், தினத்தந்தி மற்ற தொலைக் காட்சிகளாவது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வார்களா என்று பார்க்க வேண்டும்.

Muslim to atheist - Farooq murdered- DK Veeramanis ode

திக வீரமணியின் கண்டிப்பு (விடுதலையில் வெளியானது)[9]: “கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றிய கொள்கை வீரர் தோழர் பாரூக் அவர்களைத் திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான படுகொலை! இதற்குக் காரணமான உண்மையான கொலையாளிகள், திட்ட மிடப்பட்ட இக்கொலையில் பங்கேற்றவர்கள், தூண்டிய சக்திகள் அனைவரையும் கோவை போலீஸ் அதிகாரிகள் உடனடியாகக் கண்டுபிடித்துத் தக்க தண்டனை வழங்கிடும் வகையில் புலன் விசாரணையும் மற்ற நடவடிக்கைகளும் அமைந்திடல் வேண்டும். மதவெறி எந்த ரூபத்தில் வந்தாலும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும்தடுத்திடல் வேண்டும். மறைந்த அந்தத் தோழருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வீர வணக்கம்! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அவர் சார்ந்த அமைப்புக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும், தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று சம்பிரதாய ரீதியில் முடித்துக் கொண்டார் கி. வீரமணி[10]. செய்தியும் நான்காம் பக்கம், வலது புறம், கீழே மூலையில் சிறியதாக வெளியிடப் பட்டிருந்தது. இதுதான், அவர்களது முஸ்லிம் அடிப்படைவாதத்தை எதிர்க்கும், எதிர்கொள்ளும், கண்டிக்கும் லட்சணம் என்று தெரிகிறது. இனி மற்றவர்களும் சம்பிராதயப் படி, அவரவர் இயக்கத்தின் / கட்சியின் சார்பில் இத்தகைய கணடனங்களை வெளியிடுவதை காணலாம்.

Tikkathir - balancing news - 19-03-2017

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டிஎன்றெல்லாம் முஸ்லிம் சொல்லமுடியாது: பெரியாரிஸப் பிஞ்சுகள், பழங்கள், தொண்டர்கள், விசுவாசிகள், பக்தர்கள் முதலியோரும் அடங்கிக் கிடக்கின்றனர். இக்கொலையைக் கண்டிக்கக் கூட பயந்து பேஸ்புக்கில் இருந்து பலர் விலகி விட்டனர். “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்று பெரியார் சொன்னார் என்று, இனி எந்த முஸ்லிமும் பேச முடியாது. இல்லை, அங்கு கடவுள் என்றால், “அல்லா இல்லை” என்று சொல்லிவிட்டு பேச வேண்டும், இல்லை என்றால், பத்வா வரும், இம்மாதிரியான கொலை விழும். உண்மையான முஸ்லிம், திராவிட கட்சியில் கூட இருக்க முடியாது. “ஷிர்க்” பேசும் கொஷ்டிகள் இனி இவற்றையெல்லாம், நன்றாகவே கவனிப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், நாத்திகக் கட்சிகளில் முஸ்லிம்கள் இருப்பதுதான், மிகப்பெரிய “ஷிர்க்” ஆகும். அதற்காகத் தான், மொஹம்மது அலி ஜின்னாவே, “நான் முஸ்லிம் என்பதனால், முஸ்லிம்களின் நலனிற்காகத் தான் பாடுபட முடியும்”, என்று கூறி, அம்பேத்கர், பெரியார் முதலியோரை கழட்டி விட்டார் என்பதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இனி கம்யூனிஸ்டு மற்றும் திராவிட கட்சிகளிலிருந்து, எத்தனை நியாயவான்களான முஸ்லிம்கள் விலகுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-03-2017

Muslim to atheist - Farooq murdered- DKs ode to him

[1] சசிகலாவைக் காப்பாற்ற அகோரி பூஜை செய்தேன் என்று ஒருவன் சொன்னதை கவனிக்கலாம். அவனுக்கு முஸ்லிம் மனைவியாக இருப்பதும் கவனிக்கத் தக்கது. விவரங்களுக்கு என்னுடைய பிளாக்குகளைப் பார்க்கவும்.

[2] சமீபத்தைய திராவிட மற்றும் இந்துத்துவ வாதங்களை விகடன் முதலியவற்றில் காணலாம்.

[3] தினத்தந்தி, திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை வாலிபர் கோர்ட்டில் சரண், மார்ச் 18, 04:30 AM.

[4] http://www.dailythanthi.com/News/Districts/2017/03/18025737/Dravida-Kazhagam-leaders-murder-freedThe-young-men.vpf

[5] நியூஸ்7.டிவி, மதத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்பியதற்காக இளைஞர் கொலை!, March 18, 2017.

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/18/3/2017/youth-murdered-spreading-views-against-religion

[7] தீக்கதிர், கோவை: திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் படுகொலை, மார்ச்.17, 2017

[8] https://theekkathir.in/2017/03/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/

[9] விடுதலை, கோவை தோழர் பாரூக் படுகொலை வன்மையாக கண்டிக்கிறோம்!, சனி, 18 மார்ச் 2017 16:42

[10] http://viduthalai.in/e-paper/139820.html

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (3)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (3)

புத்தகயாவெடிகுண்டுவிசயத்தில்நிதிஷ்குமார்மெத்தனம்காட்டியது: புத்தகயா வெடிகுண்டு இந்திய-முஜாஹித்தினின் கைவரிசைதான், அவர்களுடையை கைவேலைத் திறன் அதில் காணப்படுக்கிறது என்றெல்லாம் பாட்டுப் பாடியவர்கள், திடீரென்று அடங்கிப் போனதை கவனித்திருக்கலாம். ஈ-மெயில் வந்தது, பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டது, வெடிபொருட்கள் சப்ளை செய்தவன் பிடிபட்டான்[1] என்றெல்லாம் செய்திகள் வந்தன[2]. எப்படி மத்திய மற்றும் பிஹார் அரசுகள் இவ்விசயத்தில் தமது நிலையை மாற்றிக் கொண்டன என்பதனையும் காணலாம்[3]. வழக்கம் போல திவிஜய் சிங் சங்கப்பரிவார் தான் குண்டு வைத்தது என்று டுவிட்டரில் உளறினார் என்றும் செய்திகளை போட்டனர். சையது மக்பூல் என்பவன் ஏற்கெனவே புத்தகயா அவர்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளது என்று எச்சரித்தப் பிறகும் பீஹார் அரசு மெத்தனமாக இருந்தது நினைவிருக்கலாம்[4]. மேலும் தொடர்குண்டுகள் வெடித்தாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை, மற்றும் மிரட்டத்தான் அக்குண்டுகள் வைக்கப்பட்டன என்றும் சோதனையில் தெரியவந்தது. முதலில் புத்தபிட்சு தோற்றத்தில் படம் வெளியிடப்பட்டது. பிறகு வேறு விசயத்தில் கைது செய்யப் பட்ட ஒருவரை “இந்து பூஜாரி புத்த கயாவில் கைது” என்றும் செய்திகள் வெளிவந்தன[5]. பிறகு குண்டுவெடிப்பிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கம் அளித்தன.

இவன்இந்தியமுஜாஹித்தீனைசேர்ந்தவனா?: பிடிபட்டவன் யாராக இருந்தாலும் அந்தந்த சட்டமீறல்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய முஜாஹித்தீனின் கைவேலை தான் இது, என்று ஏற்கெனவே கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து செய்திகள் வந்துள்ளன[6]. அவர்களிடமிருந்து, மயன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு பழி வாங்கத்தான் இச்செயல் என்று தகவல் வந்ததாகவும் உள்ளது. ஜார்கண்டில் எவ்வாறு நக்சல்கள் மற்றும் இந்திய முஜாஹித்தீனின் ஜிஹாதிகள் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று புலன்விசாரணை செய்யும் அதிகாரிகளும் எடுத்துக் காட்டியுள்ளனர்[7]. கடந்த மாதம் ஜூலையிலேயே, அன்வர் முல்லிக் என்பவன் ராணிபந்த், சப்ரா கோட்டம், நாடி மாவட்டம், மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய முஜாஹித்தீனுக்கு வெடிமருந்துப் பொருட்கள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்[8]. ஹைதராபாத்-புத்தகயா குண்டுவெடிப்பில் இருக்கும் ஒற்றுமை மற்றும் குண்டு தயாரிக்கப்படுள்ள முறை இந்திய முஜாஹித்தீனைக் காட்டுகிறது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது[9]. ஆனால், திசைத் திருப்ப “சுக்குமி, ளகுதி, ப்பிலி” போன்ற செய்திகளை ஏன் வெளியிட வேண்டும்? ஆகவே, இந்நிலையில் குழப்பத்தை உண்டாக்கவே, இத்தகைய செய்திகளை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

பீஹாருக்கும், இந்தியமுஜாஹித்தீனுக்கும்தொடர்புஉள்ளாதா?: அதாவது இந்திய-முஜாஹித்தின் என்றால், நாளைக்கு பீஹாரின் தொடர்பு வெளிவரும், அப்பொழுது பீஹாரில் யாரோ உதவியுள்ளனர் என்று தெரிந்து விடும் என்று யாரோ கவனமாக இருக்கின்றனர். அப்படியென்றால், இந்திய-முஜாஹித்தின் சௌகரியமாக பீஹாரில் வேலை செய்து வர யாரோ உதவி செய்து வருகிறார்கள். ஒருவேளை, நிதிஷ்குமாரை மிரட்டி பிஜேபி-கூட்டைக் கலைத்து, காங்கிரஸுடன் நெருங்கி வந்ததற்கு இதுதான் காரணாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இப்பொழுது லல்லு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை! யாசினிடம் இது பற்றி கேட்டபோது, “நல்லது, எங்களைப் போலவே யாரோ அதேப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது” என்றானாம்[10]. அதாவது, இவனும் திக்விஜய சிங் போல, பரூக்கியைப் போல பேசுகிறான் என்பதை கவனிக்கலாம். இந்தியாவில் இப்படி, தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் வரை, பிடிபட்ட தீவிரவாதிகள் கூட இப்படி பேசுவது, இந்தியா எத்தகைய துரோகிகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதாவது, இத்தகைய வெட்டிப்பேச்சுகளில், பொய் பிரச்சாரங்களில் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களைக் கூட மறக்கடித்து விடும் வகையில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதனை அறியவேண்டும்.

பட்டகலில்அவனதுசொந்தக்காரர்கள், நண்பர்கள், மற்றவர்கள்அவனைஒதுக்குவதுஏன்?: இதே மாதிரி கர்நாடகா மாநிலத்தில், மங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் கடற்கரைப் பகுதியில் உள்ள பட்டகல் என்ற நகரத்தில், யாசீனைப் பற்றி விசாரித்தால், ஒருவனை வைத்துக் கொண்டு எங்களை எடை போடாதீர்கள் என்று பொரிந்து தள்ளுகிறார்களாம்[11]. இருப்பினும் முன்னர், அந்த ஊரினர் எப்படி பட்டகல் சகோதரர்களுக்கு உதவினர் என்று விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஏனெனில், உள்ளூர் உதவிகள் இல்லாமல், பொருட்களை வாங்க முடியாது, எடுத்துச் செல்லமுடியாது, விநியோகிக்க முடியாது என்று என்ற நிலையில், பலர் உள்ளனர். அதுல் கரீம் துண்டா விசயத்தில், குடும்பத்தார் ஒட்டு மொத்தமாக அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இங்கோ எரிந்து விழுந்துள்ளதாக சொல்கிறார்கள். “சும்மா, கொஞ்சம் அசிங்கத்தை வைத்துக் கொண்டு, எங்களை இப்படி-அப்படி என்று தீர்மானிக்க வேண்டாம்”, என்கிறார்களாம். மேலும் ஊடகக்காரர்கள் என்றால் அடிக்கவும் வருகிறார்களாம்[12]. ஒரு பக்கத்தில் செய்திகள் இப்படி, மறுபக்கமோ கீழ்கண்டவாறு உள்ளது.

யாசின்பட்கல்உயிரோடு இருப்பதால் குடும்பத்தார்நிம்மதி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனன் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதால் அவனது குடும்பத்தார் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் தேசிய புலனாய்வு துறையினரால் இந்திய-நேபாள எல்லையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டான். இந்நிலையில் இது குறித்து அவனது தந்தை ஜரார் சித்திபாபா மற்றும் மாமா யாகூப் பட்கல் கூறுகையில், “அகமது சித்திபாபா (யாசின் பட்கல்) கைது செய்யப்படத்தில் எங்களுக்கு நிம்மதியாக உள்ளது. எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம்[13]. அவன் இறந்துவிட்டான் என்றே இத்தனை நாட்கள் நினைத்தோம்[14]. என் மகன் அப்பாவி. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போராடுவோம். அவன் மீது குற்றம் இருந்தால் தண்டிக்கட்டும். கடந்த 2005ம் ஆண்டு என் மகன் என்னுடன் துபாய் வந்து ஒரு கடை வைக்க உதவினான். அதன் பிறகு 2007ம் ஆண்டு காணாமல் போனான். இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். யாசின் என்ற பெயரை போலீசாரும், ஊடகங்களும் அவனுக்கு வைத்துள்ளன என்றார். அகமதை பற்றி பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அகமது 1983ம் ஆண்டு பிறந்தான். அவன் 1ம் வகுப்பு முதல் பத்தாவது வரை பட்கலில் படித்தான். ஆனால் அவனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் 2005ல் துபாய்க்குச் சென்றான். 2007லிருந்து அவனுடன் எந்த தொடர்பும் இல்லை”.

போலிஎன்கவுண்ட்டரில்சுட்டுக்கொன்றுவிடுவார்களோஎன்றுபயந்தோம்: எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம் என்று கூறுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றால், தங்களது பிள்ளையை ஒழுங்காக வைத்திருக்கலாமே? “இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்”, என்கின்றனர். பிறகு, உள்ளூர் போலீசில் ஏன் புகார் கொடுக்கவில்லை? மும்பை போலீஸார் விட்டிற்கு வந்தபோது, ஓடிவிட்டான் என்றுள்ளதே, அப்பொழுதே விழித்துக் கொண்டிருக்க வேண்டாமோ? அதாவது துபாயிலிருந்தே காணாமல் போய்விட்டான் என்று நிரூபிக்கப் பார்க்கிறார்கள் போலும்! அப்படியென்றால் தெரிந்தே அனுசரித்து கொண்டு இருந்தார்களா அல்லது பையன் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளான் அதனால் அவனுக்கு நிச்சயம் சொர்க்கம் தான் என்று பூரித்து போய் விட்டார்களா?

© வேதபிரகாஷ்

01-09-2013


 


[4] Indian Mujahideen terror suspect Syed Maqbool, who was freed from Charlapally jail in Hyderabad on remission (good conduct), had revealed during his arrest by Delhi Police in October 2012 that the IM was planning to carry out attacks in Bodhgaya. Maqbool told interrogators that the IM wants to take revenge against attacks on Muslims in Myanmar. He was also questioned during the recent twin blasts in Dilsukhnagar. Maqbool alias Zuber, a former convict, was picked up by the Delhi Police with the help of counter intelligence sleuths from Shaheennagar in October 2012. The key allegation against him was that he was planning a suicide bomb attack in Bodhgaya in Bihar to avenge attacks on Muslims in Myanmar, and also imparted training to those responsible for a couple of low-intensity bomb blasts in Pune in 2012. It is alleged that in July 2012, Maqbool aided other IM terror suspects to do a recce of Dilsukhnagar, Begum Bazaar and Abids in Hyderabad. He was said to be acting on the orders of the most wanted terror suspect, Riyaz Bhatkal.

http://www.deccanchronicle.com/130708/news-current-affairs/article/bodhgaya-blasts-indian-mujahideen-man-had-warned

[7] The angle is being looked into by the NIA even in the recent serial blasts in the Mahabodhi temple in Bodh Gaya, Bihar. Sources in NIA said the attack in Gaya seems to be the work of a new module of the IM. “It is clear that an organised group is behind it. Planting 13 bombs requires planning. It is suspected to be IM but a new module set up in the neighbouring state of Jharkhand could be responsible for the attack,” said an NIA officer. Sources in the NIA said Manzar attended a training camp in Kerala and was given the responsibility of recruiting youths from Jharkhand since he belonged to the state. He is alleged to be an important functionary of the banned Students Islamic Movement of India (SIMI) and later joined the IM. A fresh revelation that Amir Raza Khan, one of the founder members of IM, originally hails from Gaya has led the agencies to probe some of his old contacts. So far, it was believed that Khan was from Kolkata. Support from Pakistan-based terror outfits is also not ruled out. Sources said even in the past Pakistan’s Inter Services Intelligence (ISI) had made attempts to support the Naxalites in India. Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2369414/Terror-web-spreads-Jharkhand-State-revealed-prime-recruiting-ground-Indian-Mujahideen.html#ixzz2c2wX8Ibr; Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[8] A resident of Ranibandh in Chapra sub-division of Nadia district of West Bengal, Mullick was arrested with explosives and counterfeit Indian currency with face value of around Rs 1.90 lakh, according to reports.

http://www.indianexpress.com/news/bodhgaya-blasts-im-explosives-supplier-held-in-bengal/1142659/

[10] When he was questioned by top officers of the Bihar Police and the  National Investigating Agency. Sources say that he denied the Mujahideen’s involvement in a series of bomb blasts in the pilgrimage town of Bodh Gaya in July, but said of the attacks, “Good… it seems there are other people like us working for the same purpose.”

http://www.ndtv.com/article/india/bodhgaya-blasts-show-others-share-our-goal-yasin-bhatkal-allegedly-said-412152